Language Selection

கலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

யார் சொன்னது போலிகள்

புரட்சி பண்ணவில்லையென்று

“பன்னினார்கள்” எத்தனையோ

சொல்ல சொல்ல வாய் வலிக்கும்

வருதுவின் கருணையிருந்தால் கை கூடும்….

சிபிஎம் சிபிஐ பேரை

sl_q-copy

கேட்டதால் தான் என்னவோ

புடலங்காய்க்கும் புரட்சி வந்து

முறுக்கிகொண்டதுவோ…..

ஆரம்பித்தது வரலாறு நாப்பத்தேழிலிருந்து

கூடவே துரோகத்தனத்துக்கும்

தெலுங்கானாவை காட்டிக்கொடுத்து

நக்சல்பாரியை அடக்கி ஒடுக்கி

இன்னமும் அடங்க மறுக்கிறது

குறுதியின் வெப்பம்……

கண்காட்டும் தலைவருக்கு தாசனாகி

உழைக்கும் மக்களுக்கு நீசனாகி

மாமா வேலை செய்து செய்து

பாசிஸ்டாக பல்லிளித்து

செயாவின் காலுக்கு பாத பூசை

ஆண்டுக்கு ஒருமுறை ஆயுதபூசை

தேர்தல் தொடங்கியவுடன் சாமிக்கு பூசை….

ஆயிரம் தரகு வேலை

ஆயிரம் பூசைகள் செய்து

களைத்து போயிருக்கும்

நல்லோரே வல்லோரே உங்களுக்கு

மொத்தமாய் பூசை செய்கிறோம்

கூடவே நிரந்தர ஓய்வையும்

இங்கு நக்சல்பாரிகள் தான் பூசாரிகள்

நாங்கள் ஓட்டுகிற ஓட்டில்

ஓட்டுப்பெட்டியும் உங்களின்

புர்ர்ட்சிதலைவர்களும் காணாமல் போவார்கள் ……