Language Selection

'சு'னா 'பா'னா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சேலத்தில் 27-09- 2008 அன்று ராஜ்நாத்சிங் வருகையை எதிர்த்து பெரியார் திராவிட கழகத்தினர் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் சங் பரிவார் அமைப்பைச் சேர்ந்த பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் இங்கு வரக்கூடாது என்று கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இதைப் பார்த்த பாஜகவினர் திரண்டு வந்து ரவுடித்தனத்தில் இறங்கினர். பெரியார் திக தொண்டர்களை பாஜகவினர் சரமாரியாக தாக்கினர். அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் தீவைத்துக் கொளுத்தப்பட்டது. இதனை வேடிக்கை பார்த்த காவல் துறையினர் பெரியார் திக தொண்டர்கள் சுமார் 125 பேர்களை கைது செய்தது. 
தமிழகத்தை மதவெறி களமாக மாற்ற காவி அமைப்புகளான இந்து முன்னனி, ஆர்.எஸ்.எஸ், பாஜக ஆங்காங்கே சர்ச்களை சேதப்படுத்தி வருகிறது. அம்பேத்கர், பெரியார் சிலைகளை சேதப்படுத்துவது, சிறுபான்மையினரை தாக்குவது, என்று திட்டமிட்டு கொலைவெறியாட்டம் போடுகிறது.
இந்த நாய்களுக்கு நாளுக்கு நாள் வெறி முற்றி வருகிறது. இதை கண்டித்து ஜனநாயக அமைப்புகள் ஆர்ப்பாட்டம் செய்தால் கொலை தாக்குதல் நடத்துகிறது. இது "அமைதி பூங்கா" தமிழக மக்களுக்கு விடப்பட்ட சவாலாகும். இனியும் அமைதியாக இருந்தால், நேற்று குஜராத், இன்று ஒரிசா, நாளை தமிழகம் பிணக்காடாக மாறும்.
பெரியாரின் போர்குணமிக்க பார்ப்பனீய எதிர்ப்பு மரபை கொண்ட தமிழகம், காவிப்படையினரை (இந்து முன்னனி, ஆர்.எஸ்.எஸ், பாஜக) அம்பலப்படுத்தி, தமிழ்நாட்டை விட்டே துரத்துவோம்.