ஆல மரமாம் ஆலமரம்
அருமையான ஆலமரம்
காலம் காலமாய் நிழல்தந்து
காத்து வந்திடும் ஆலமரம்!
கூடு கட்ட பறவைகள்
கூடி அங்கே சென்றிடுமாம்
நாடி நாமும் செல்லலாம்
நல்ல காற்று பெற்றிடலாம்!
சிறிய விதையிலிருந்து
சிறப்பாய் பெரிதாய் வளர்ந்துமே
பெரிய படையும் தங்கிட
படர்ந்த நிழலைத் தந்திடுமே!
தளர்ச்சி மரத்தில் தோன்றினால்
தாமாய் விழுதுகள் இறங்கியே
வளர்ச்சி காக்கும் ஆலமரம்
வீழ்ச்சி காணா ஆலமரம்!
ஆல விழுதைப் போலவே
அன்னை தந்தை தளர்ச்சி கண்டு
நாளும் நாமும் காத்திடுவோம்
நல்ல பாடம் கற்றிடுவோம்!
நன்றி - புலவர்,ப.தேவகுரு தேவதானப்பட்டி
ஆலமரம்
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode