Language Selection

விலங்கியல்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பாம்பின் உண்வுப் பழக்கம் பொதுவாக, விழுங்குவதற்கு ஏற்றதான இரையை பாம்புக் கவ்வி, விழுங்கிவிடும் என்று நாம் அறிந்திருக்கிறோம். இப்போது, ஒரு வகைப் பாம்பு, புதுமாதிரியாக இரையை உட்கொள்வதை ஆய்வாளர் கண்டறிந்துள்ளனர். வளைத்து இழுத்தல் என, அதற்குப் பெயரிட்டுள்ளனர். பெரிய அளவில் நண்டினை, இந்த வளைத்து இழுக்கும் முறை மூலம் அந்தப் பாம்பு உட்கொள்கிறதாம். சிங்கப்பூர் காடுகளில், இத்தகைய பாம்புகளையும் நண்டுகளையும் சேகரித்து, பரிசோதனைக்கு உட்படுத்தினர். இந்தப் புது மாதிரியான உணவு உண்ணும் பழக்கத்தை இரவு நேரத்தில், இருட்டறையில் INFRARED வீடியோ, கேமரா மூலம் பதிவு செய்தனர். வளைத்து இழுத்து உண்ணும் முறையை 85 விழுக்காடு பாம்பு பயன்படுத்தியது தெரியவந்தது. இந்தச் சாதாரண பாம்பு, விதிமுறைகளைத் தகர்த்தெறிகிறது என்கிறார் ஹெரால்ட் வோரிஸ். நண்டின் உடம்பைத் தன் உடம்பால் ஒரு முனையில் வளைத்துப் பிடித்து, மறு முனையில், நண்டின் கால்களை வாயால் இழுத்து உண்கிறது இந்தப் பாம்பு. ஒருவேளை, புதுமை விரும்பியோ இந்தப் பாம்பு!