Language Selection

அசுரன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஜூலை 3ஆம் தேதி அகில இந்திய பந்த் அறிவித்துள்ளது பாஜக பார்ப்பனிய பயங்கரவாத கட்சி. நானும் கூட ஏதோ பெட் ரோல் விலை உயர்வை எதிர்த்து இவர்கள் பந்த் நடத்தப் போகிறார்கள் போல இருக்கு என்று பார்த்தால், ஜம்மு காஷ்மீரில் நில பிரச்சினையை ஒட்டி தமது பார்ப்பன பயங்கரவாத மத வெறி அரசியலுக்கு தோதாக பந்த் செய்யப் போகிறார்கள் இந்த மாமாக்கள்.


ஜம்மு காஷ்மீர் பிரச்சினை உண்மையிலேயே பாஜகவின் மதவெறி அரசியல் உத்தியின் ஒரு பகுதிதான் என்பது இருக்க. நாடே பெட் ரோல் ஊற்றிக் கொண்டு எரியும் போது இந்த நாதாரி இந்த பிரச்சினையை அகில இந்திய லெவலுக்கு ஊதுவது ஏன்? இவன் இது மாதிரி செய்வது இதுதான் முதல் முறையா? கிடையாது.

ஏற்கனவே அணு ஆயுத ஒப்பந்தப் பிரச்சினையை ஒட்டி நாடே அல்லேலோஹல்லேலோ பட்டுக் கொண்டிருந்த பொழுது மிகச் சரியாக ஆதாம் பால பிரச்சினையை முன்னுக்கு கொண்டு வந்தான். அணு ஆயுத பிரச்சினை ஓடி ஒளிந்து கொண்டது.

1990-ல் நரசிம்மாராவும், மண்ணுமோகன் சீ மாமாவும் பாரத மாதாவை கொப்போடும், கொழையோடும் கூட்டிக் கொடுத்துக் கொண்டிருந்த பொழுது பாபார் மசூதி பிரச்சினையை நாடு முழுவதும் கொழுந்துவிட்டு எரியச் செய்து காட் ஒப்பந்தத்தை அமைதியாக அரங்கேற்ற உதவினார்கள்.

அதே போலத்தான் தற்போது எண்ணைய் விலை உயர்வு, விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பி ஜம்மு காஷ்மீரை முக்கிய விவாதமாக்குவதன் மூலம் தனது எஜமானர்களை காப்பதுடன் அல்லாமல், அடுத்த முறை ஆட்சிக்கு வருவதற்க்கு வசதியாக மதவெறியையும் தூண்டி விடுவதற்க்காகவே இந்த போராட்டத்தை நடத்துகின்றனர்.

இந்த தேச பக்தர்கள்தான் போபாலில் விசவாயு கசிய விட்ட யூனியன் கார்பைடு கம்பேனியிடமிருந்து கட்சி நிதி பெற்ற உத்தமர்கள். இது ஒன்று போதும் இவர்கள் பாரத் மாதாகி ஜெய் என்று போடும் கோஷத்தின் பின்னால் உள்ளது அப்பட்டமான கூட்டிக் கொடுக்கும் தந்திரம்தான் என்பதை புரிந்து கொள்ள.

அசுரன்

http://poar-parai.blogspot.com/2008/07/blog-post.html