Language Selection

புதிய ஜனநாயகம் 2007
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

june_2007.jpg

தாழ்த்தப்பட்டபழங்குடி இன மக்களுக்கு இழைக்கப்படும் 15 வகையான சாதியசமூகக் கொடுமைகளையும் அக்கிரமங்களையும் நுட்பமாகவும் அனுபவப்பூர்வமாகவும் உணர்ந்து தொகுத்து, வன்கொடுமைகள் என்று வரையறுத்து அவற்றுக்குரிய தண்டனைகளையும் பட்டியலிட்டிருக்கிறது வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம்.

 

அதுமட்டுமல்ல, வேறு எந்த குற்றத் தண்டனைச் சட்டத்திலும் இல்லாதவாறு பின்வரும் பிரிவுகளை வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உள்ளடக்கியுள்ளது.

 

1. தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடி இனத்தவர் ஒருவருக்கு மரணதண்டனை கிடைக்குமாறு, அந்த நோக்கத்தோடு பொய்ச்சாட்சியம் சொல்வதும் அல்லது புனைவதும் ஆயுள் சிறைத் தண்டனையோடு அபராதமும் விதிக்கப்படக்கூடிய குற்றமாகும். அப்படிப்பட்ட பொய்ச் சாட்சியத்தாலோ, புனைவாலோ தாழ்த்தப்பட்ட பழங்குடியினத்தவர் ஒருவர் மரண தண்டனைக்குப் பலியாக நேருமானால் அதைச் செய்தவருக்கும் அதே தண்டனை வழங்கப்படும்.

 

2. தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடியைச் சேர்ந்த ஒருவர் ஏழாண்டோ அதற்கு மேலோ தண்டிக்கப்படுமாறு குற்றம் புரிந்ததாய், அவ்வாறான தண்டனை பெற்றுத்தரும் நோக்கத்தோடு பொய்ச் சாட்சியம் சொல்வதும் அல்லது புனைவதும் அதே அளவு தண்டிக்கப்படும் குற்றமாகும்.

 

3. தீயினாலோ அல்லது ஏதேனும் வெடிபொருளினாளோ தாழ்த்தப்பட்ட சாதி அல்லது பழங்குடியினத்தவர் ஒருவரின் சொத்துடமைக்குச் சேதம் விளைவிப்பது ஆறு மாதத்துக்கும் குறையாத ஏழாண்டு வரையிலான சிறைத்தண்டனையோடு அபராதத்துக்குரியதாகும்.

 

4. தீயினாலோ அல்லது ஏதேனும் வெடிபொருளினாலோ தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடியினத்தவரின் வழிப்பாட்டிடத்தையோ, வசிப்பிடத்தையோ, உடமைக் காப்பிடத்தையோ, அல்லது அவர் வழக்கமாகப் பயன்படுத்துமிடத்தையோ அழிப்பதும் அல்லது அந்த நோக்கத்துடன் செயல்படுவதும் ஆயுள் தண்டனை மற்றும் அத்துடன் அபராதம் விதிக்கக்கூடிய குற்றமாகும்.

 

5. தாழ்த்தப்பட்ட சாதி அல்லது பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் என்பதற்காகவே ஒருவருக்கோ அவருக்குச் சொந்தமான உடமைக்கோ எதிராக பத்தாண்டு அல்லது அதற்கு மேல் சிறைத்தண்டனை விதிக்கத்தக்க குற்றம் புரிபவருக்கு ஆயுள் சிறைத்தண்டனையும் அத்துடன் அபராதமும் விதிக்கப்படும்.

 

6. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் புரிந்துள்ளவரைக் காப்பாற்றும் நோக்குடன் அக்குற்றச் செயலுக்கான சான்று ஆதாரத்தை அழிப்பதும் மற்றும் தெரிந்தே பொய்த் தகவல் தருவதும் அந்தக் குற்றத்துக்கு வகை செய்யப்பட்டுள்ள தண்டனைக்குரிய குற்றமாகும்.

 

7. அரசு ஊழியராய் இருந்து இந்த வன்கொடுமைச் சட்டப்பிரிவின் கீழ் குற்றமாகிய ஒன்றைப் புரிவாரானால், அவருக்கு ஓராண்டுக்குக் குறையாத, அக்குற்றத்துக்கென வகை செய்யப்பட்டுள்ள தண்டனைக் காலம் வரையிலான சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

 

இவ்வாறு தாழ்த்தப்பட்ட பழங்குடியினத்தவருக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுக் கூறி தண்டிப்பதற்கு காரணமாக இருப்பதும் குற்றமாகிறது; அவருக்கு எதிரான குற்றங்களை மறைப்பதும், அக்குற்றம் புரிந்தவரைக் காப்பதும், அதற்கான சான்றாதாரத்தை அழிப்பதும் கூட தண்டனைக்குரிய குற்றமாகிறது.

 

மேலும், இச்சட்டத்தின்படி அரசு ஊழியர் ஆற்ற வேண்டிய கடமைகளைப் புறக்கணிப்பதும், ஆறுமாதத்துக்குக் குறையாத, ஓராண்டு வரையிலான சிறைத் தண்டனைக்குரிய குற்றமாகிறது.

 

அதுமட்டுமல்ல; இச்சட்டத்தின் கீழ்வரும் குற்றத்தை மறுமுறையோ அதன் பிறகோ, மீண்டும் புரிவது மேலும் கூடுதலாக ஓராண்டிற்குக் குறையாத, அக்குற்றத்துக்கென வகை செய்யப்பட்டுள்ள தண்டனை காலம் வரையிலான சிறைத் தண்டனைக்குரியதாகும்.

 

இதோடு இந்தியத் தண்டனைச் சட்ட விதிகளின் கீழ்வரும் பிரிவு 34, அத்தியாயங்கள் 3,4,5,6 மற்றும் பிரிவு 149 அத்தியாயம் 7இன் கீழ்வரும் விதிகள், இ.த.ச.வின் நோக்கங்களுக்குப் பொருந்துமாறு தண்டிக்கப்படும்.


வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைக் கடுமையாகவும், கறாராகவும், சீரிய முறையிலும் அமல்படுத்துவதற்காக மேலும் பல சிறப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதன்படி,

 

இச்சட்டத்தின் கீழான வழக்குகளைத் துரிதமாக விசாரணை நடத்தி முடிக்கும் பொருட்டு மாநில அரசானது உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதியின் ஒப்புதலைப் பெற்று ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஓர் அமர்வு நீதிமன்றத்தைத் தனிச்சிறப்பு நீதிமன்றமாக அமைத்து அதிகாரபூர்வ அரசிதழில் அறிவிப்பு செய்யவேண்டும்.

 

ஒவ்வொரு தனிநீதி மன்றத்துக்கும், மாநில அரசானது வன்கொடுமைத் தடுப்பு வழக்குகளை நடத்தும் பொருட்டு தனி அரசு வழக்குரைஞராக ஓர் அரசு வழக்குரைஞரைக் குறிப்பிடலாம் அல்லது ஏழாண்டுக்குக் குறையாமல் வழக்கறிஞராக பணிபுரிபவரை நியமிக்கலாம்.

 

இச்சட்டத்தின்படி கூட்டு அபராதம் விதிக்கவும் வசூலிக்கவும் 1955ஆம் ஆண்டின் குடிமை உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழான வழிவகைகள் பொருந்தும்.

 

தனிநீதிமன்றம் பிறப்பித்த ஆணையை எவராவது மீறினால் அவருக்கு ஓராண்டு வரையிலான சிறைத்தண்டனையும் அத்துடன் அபராதமும் விதிக்கப்படும்.

 

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படியான தண்டனையை மேலும் கறாராக்கும் பொருட்டு குற்றம் புரிவோரின் உடமைகளைப் பறிமுதல் செய்வதற்கான வழிவகையும் உள்ளது.

 

இச்சட்டத்தின்படி குற்றம் புரிந்த ஒருவரைத் தண்டிக்கும்போது, அக்குற்றத்தைச் செய்வதற்கு உதவிய அவரது உடைமை, அசையுஞ் சொத்து, அசையாச் சொத்து போன்றவற்றைப் பறிமுதல் செய்யும்படி ஆணையிடலாம்.

 

இச்சட்டத்தின்படியான குற்ற வழக்கை விசாரிக்கும் போதே குற்றஞ்சாட்டப்பட்டவரின் அசையுஞ்சொத்து மற்றும் அசையாச் சொத்துக்களைக் கைப்பற்றி வைக்கும்படி ஆணையிடலாம். குற்றஞ்சாட்டப்பட்டவர் தண்டிக்கப்படும்போது விதிக்கப்படும் அபராதத்தை வசூலிக்கத் தேவையானவாறு ஏற்கெனவே கைப்பற்றப்பட்ட சொத்து பறிமுதலுக்குரியதாகும்.

 

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படி, குற்றம் புரிபவருக்கு நிதியுதவி அளிப்பதும் குற்றத்துக்கு உடந்தையாக இருந்ததாகவே கருதப்படும். வன்கொடுமைக் குற்றம், எதன் தொடர்பாகவும், தொடர்ச்சியாகவும் நிகழ்த்தப்படுகிறதோ, அந்த நோக்கத்துக்காகவே, குறிக்கோளுக்காகவே குற்றமிழைத்ததாகக் கருதப்படும்.

 

வன்கொடுமைக் குற்றம் நிகழாமல் இருப்பதற்கான முன்நடவடிக்கையாக, குற்றம் புரியக் கூடும் என்று கருதப்படும் ஒருவரை, தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடியினர் பகுதிகளின் இருந்து வெளியேற்றவும், இரண்டாண்டு காலம்வரை அவர் அப்பகுதிக்குள் நுழைவதைத் தடை செய்யவும் ஆணையிட முடியும். இவ்வாறான வெளியேற்ற உத்தரவை ஏற்று வெளியேறத் தவறினாலோ, வெளியேற்ற உத்தரவில் குறிப்பிடப்படும் காலத்திற்குள் அப்பகுதியில் நுழைந்தாலோ தனிநீதிமன்றம் அவரைக் கைது செய்யும் ஆணை பிறப்பிக்கலாம்.

 

மேற்கண்ட விதிகளின்படி ஒரு பகுதியை விட்டு வெளியேற்றப்படும் ஒருவரை அளவெடுக்கவும், படமெடுக்கவும் போலீசுக்கு அதிகாரமளிக்கப்படுகிறது; அதற்கு அவர் எதிர்ப்போ, மறுப்போ காட்டினால் எல்லா வழிமுறைகளையும் பயன்படுத்த சட்டபூர்வ அதிகாரம் உள்ளது; மேலும், அவ்வாறு எதிர்ப்பதும் மறுப்பதும் குற்றமாகும்.

 

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தனிநீதிமன்றம் பிறப்பிக்கும் ஆணையை எவராவது மீறினால் ஓராண்டு வரையிலான சிறையும் அபராதமும் விதிக்கப்படும். மேலும், இச்சட்டத்தின்படி குற்றமிழைப்பவர்களுக்கு எதிராகக் கூட்டு அபராதம் விதிக்கவும், வசூலிக்கவும் 1955ஆம் ஆண்டின் குடிமை உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உள்ள வழிவகைகள் இதற்கும் பொருந்தும்.

 

இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவருக்கு வழக்கமான குற்றவியல் விசாரணை முறைச் சட்டத்தின் பிரிவு 438இல் கூறியுள்ள உரிமைகள் பற்றிய எதுவும் பொருந்தாது. அதோடு இச்சட்டத்தின்படி குற்றவாளியெனத் தீர்ப்பளிக்கப் பெறுகிற ஒருவருக்கு, குற்றவியல் விசாரணை முறைச் சட்டம் பிரிவு 360இன் வழிவகைகளும் 1958ஆம் ஆண்டின் குற்றவாளிகள் நன்னடத்தைச் சட்டத்தின் வழிவகைகளும் பொருந்தாது.

 

இவைதவிர, வன்கொ டுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வரும் குற்றங்களில் இருந்து தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களைப் பாதுகாப்பதற்கான பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள போலீசு அதிகாரிகளுக்கும், பல சிறப்பு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் செயல்படவேண்டிய முறைகளும் விசாரணை, கண்காணிப்பு மற்றும் அறிக்கை சமர்ப்பித்தல், மேலதிகாரிகள் மேற்பார்வையிடுதல், வன்கொடுமைகள் நிகழாவண்ணம் பாதுகாப்பதில் அரசு மற்றும் அதிகாரிகளின் கடமைகள், பொறுப்புகள் அதற்கான சிறப்பு அதிகாரங்கள் பற்றியும் இச்சட்டம் வரையறுத்துள்ளது.


தொடரும்

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது