Language Selection

பி.இரயாகரன் -2008

இது எம்மை நோக்கி எழுப்பப்பட்டுள்ள ஒரு கேள்வியும் கூட. வடக்கு – கிழக்கை உள்ளடக்கிய தமிழ் தேசியம், தனது சுயநிர்ணயத்துக்கான தேசிய விடுதலைப் போராட்டத்தை நடத்த தவறியதால், அது சிதைந்து சீரழிந்து விட்டது. இதை வெறும் புலிகள் மட்டுமல்ல, ஆயுதம் ஏந்திய அனைத்துப் பெரிய குழுக்களும், தமிழ் மக்களின் சுயநிர்ணயத்தை முன்னிறுத்தி போராடவில்லை. பின்னால் இதை முன்னிறுத்தி புலிக்கு எதிராக அவாகள் போராடவில்லை. நான் நாம் மட்டும் இதை தொடர்ச்சியாக முன்னிறுத்தினோம்.

உலகில் புலிகள் மட்டும் தான் இதை செய்யும் அளவுக்கு, மனவக்கிரத்தைக் கொண்டவர்கள். சொந்த மக்களையே யுத்த முனையில் நிறுத்தி, அவர்களை தமக்காக சண்டை செய் என்று நிர்ப்பந்திக்கின்ற புலி அரசியல் தான், புலிகள் சொல்லும் மக்கள் யுத்தம். மறுபக்கத்தில் பேரினவாதத்தின் பொதுவான அழித்தொழிப்பில் மக்களைக் குறிப்பான இலக்காக்கி, அதை வைத்துப் பிரச்சாரம் செய்ய முனையும் பிரச்சார யுத்தம்.

அனைத்து சுயாதீனத்தையும் இழந்துவிட்ட தமிழ் இனம், புலியினதும் அரசினதும் கோரப்பற்களுக்கு இடையில் சிக்கி அழிகின்றது. அகதியானலும் சரி, அமைதியின் பெயரில் அரசு புலி என்று யார் ஆண்டாலும் சரி, தமிழ் மக்கள் மலடாக்கப்பட்டு ஊமையாக்கப்பட்டுள்ளனர். எங்கும் எல்லையற்ற மனித அவலம்.

 

மனிதம் சந்திக்கின்ற சொந்த துயரத்தை யாரும் பேச முடியாது. தேசியத்தின் பெயரில், பயங்கரவாதத்தின் பெயரில், எல்லாம் அடக்கி ஒடுக்கப்படுகின்றது.

மக்கள் தான் புலிகளை தோற்கடிக்கின்றனர் என்ற உண்மையை, இதுவரை அரசியலில் ஈடுபடுகின்ற எவரும் ஏற்றுக் கொண்டது கிடையாது. அரசியலை மக்கள் ஊடாக பார்க்கும் எமது நிலைக்கும், மற்றவர்களின் மக்கள் விரோத நிலைக்கும் இடையிலான அரசியல் வேறுபாடு, அரசியல் சாரமாக உள்ளது. நாங்கள் மட்டும், மக்கள் தான் புலிகளைத் தோற்கடிக்கின்றனர் என்பதை தனித்துச் சொல்லுகின்றோம். புலிகளும் சரி, புலியெதிர்ப்பும் சரி, மக்கள் புலிகளை தோற்கடிக்கின்றனர் என்பதை நம்ப முடிவதில்லை. உண்மையில் இங்கு புலிகள் மட்டும் தோற்கடிக்கப்படுவதில்லை, புலியெதிர்ப்பும் தோற்கடிக்கப்படுகின்றது.

ஏகாதிபத்திய யுத்தங்கள் வெளிப்படையாகவே வெடித்துக் கிளம்புகின்றது. அன்று யூக்கோசிலோவோக்கியாவை அமெரிக்க-ஐரோப்பிய ஏகாதிபத்தியம் உடைத்து அதைச் சிதைத்த போது, அது வெளிப்படையற்ற ஏகாதிபத்திய பனிப்போராகத் தான் அம்பலமாகாது அரங்கேறியது.

சரவணன் தாக்கப்பட்ட செய்தி மறைக்கப்பட்டு, அவை ஊமையாக்கப்பட்ட பின்னணியில் தான் அம்பலமானது. இது அம்பலமான போது, இதை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துகின்ற கூட்டம், உடனடியாக கண்டனம் தெரிவித்து புலம்புகின்றது. தமது மக்கள் விரோத வன்முறை அரசியல் இருப்பையும், அடையாளத்தையும் காட்ட, அரசியலற்ற வெற்றுக் கண்டனங்களால் புலம்புகின்றனர். இவை எல்லாம் சரவணனை தாக்கியவனின் அதே அரசியல் எல்லைக்குள், புளுத்துத் தான் வெளிப்படுகின்றது. இவை கூட சடங்கு, சம்பிரதாயமாக, இது இவர்களின் அரசியல் நடைமுறையாகி விடுகின்றது. இப்படி கண்டனங்கள் கூட, அரசியலற்று வெற்று வேட்டுத்தனமாகின்றது.

 

உழைத்து வாழும் மக்களுக்கு எதிராக இயங்கிய ஒரு துரோகியன் மரணமும், எகாதிபத்திய அஞ்சலிகளும்.

வெளிவரவுள்ள நூலில் இருந்து


ருசிய எழுத்தாளர் அலெக்சாண்டர் சோல்ஜெனித்சின். அவரின் நூலான ~~தி குலாக் ஆர்சிபிலாகோ|| மூலம் 1960 களின் இறுதியில் ஸ்டாலின் எதிர்ப்பு கட்டமைக்கப்பட்டது.  இவர் கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரம் செய்து பாட்டாளி வர்க்க ஆட்சியை கவிழ்க்க முனைந்தமையால் 1946 முதல் எட்டு வருடம் சிறையில் இருந்தவர். ஸ்டாலின் மரணத்துடன் நடந்த முதலாளித்துவ மீட்சியில் தப்பி ~~ஜனநாயகவாதி||யானவர். இவர் இராண்டம் உலக யுத்தத்தில் சோவியத் நாசிகளுடன் சமரசம் செய்து சரணடைந்து இருக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்தார். அத்துடன் நாசி ஆதாரவு அனுதபத்தை பகிரங்கமாக வெளிப்படுத்தியதால், துரோகி என்று கண்டிக்கப்பட்டு தண்டிக்ப்பட்டவர்.

எங்கும் ஒரு புதிர். ஆச்சரியம் கலந்த அங்கலாய்ப்பு. இருப்புக் கொள்ளாத புலம்பல். வரட்சியுடன் கூடிய எதிர்பார்ப்பு. நம்பிக்கை வெளிப்படுத்தும் ஆரூடங்கள். இதுவே அன்றாட செய்திகள், கட்டுரைகள். எல்லாம் இதற்குள் சுத்தி சுத்தி ஒப்பாரி வைக்கின்றன. புலி செய்தி மீடியாக்கள் கூட, எதிரியின் கூற்றுகளையும் எதிர்பார்ப்புகளையும் சொல்லியே, தமது சொந்தப் பிரமையை தக்க வைக்கின்ற அரசியல் அவலம்.

புலம்பெயர் இலக்கியமும், புலம்பெயர் ஜனநாயகமும், படிப்படியாக இன்று அரசு சார்பான ஒரு  நிகழ்ச்சிகளாகிவிட்டது. இனி அரசுக்குத் சார்பாகத்தான், புலியெதிர்ப்புக் கூட்டங்கள் நடக்கும். பேரினவாத அரசுக்கு எதிராக, இவர்கள் எதையும் முன்னெடுக்க முடியாது. அரசுக்கு சார்பு எடுபிடிகளாக, அரச கூலிக்கும்பலாக புலம்பெயர் புலியெதிர்ப்பு கும்பல் சீரழிந்து விட்டது. இதற்கு வெளியில் வேறு எந்த அரசியலும் யாரிடமும் கிடையாது. ஜனநாயகம் என்பது, பேரினவாத அரசைத் தொழுவது தான்.

தமிழ் மக்களுக்கு விடிவு கிடையாது. எந்த சுபீட்சமும் கிடையாது. எந்த நம்பிக்கையும் கிடையாது. இருண்டு போன பாசிச சூழலுக்குள், மக்கள் மீள மீள அழுத்தப்படுகின்றனர்.   

 

புலிபாசிசத்துக்கு எதிரான வரலாறு, மிக வேகமாக மக்களால் எழுதப்படுகின்றது. மக்களின் உணர்வுகளையும் உணர்ச்சியையும் சாகடித்து விட்டு, அவர்களை நடைப்பிணமாக்கியவர்கள், அதன் சொந்த விளைவையே தான் அனுபவிக்கின்றனர். முடிவின் (புலிப்பாசிசத்தின்) நாட்கள் எண்ணப்படுகின்றது.

எந்தப் பேரினவாத அரசு அன்று யூலை இனக்கலவரத்தை நடத்தியதோ, அந்த அரச ஆதரவாளர்களின் துணையின்றி புலம்பெயர் ஜனநாயகம் சற்றேனும் புலம்ப முடிவதில்லை. இன்று 25ம் ஆண்டு யூலைப் படுகொலையைப் பற்றி, அதே பேரினவாத அரச ஆதரவாளர்களுடன் கூடிப் புலம்புவது என்பது, இன்றைய அரச பாசிசத்தை நியாயப்படுத்துவது தான். 25 வருடங்களின் இவர்கள் உருவாக்கிய மனித அவலங்கள் அனைத்தையும் மூடிமறைத்தபடி, அதை புலியின் பெயரில் வாந்தியெடுக்கின்ற கும்பல்கள் எல்லாம் கூடி யூலை நினைவின் பெயரில் மாரடிக்கவுள்ளது.

இலங்கையில் நடப்பது இதுதான். 'பயங்கரவாத ஒழிப்பின்" பெயரில் பணம் சம்பாதிப்பது ஒருபுறமாயும் நாட்டின் தேசியவளத்தையும் மக்களின் அடிப்படை வாழ்வையும் விற்பது மறுபுறமாயும் அரங்கேறுகின்றது. 'புலிப்பயங்கரவாத ஒழிப்பின்" பெயரில், பாதுகாப்பு வலயமாக பிரகடனம் செய்து சம்பூர் பிரதேசம் இந்திய வல்லாதிக்கத்திடம் தாரை வார்க்கப்பட்டுள்ளது. இதே போல் கொம்பனித் தெருவில் வசித்த 600 குடும்பங்களின் வீடுகள் தரை மட்டமாக்கப்பட்டு, அவர்கள் 'பயங்கரவாத ஒழிப்பு" இராணுவத்தால் நிர்க்கதியாக அடித்துத் துரத்தப்படுகின்றனர். இவை எல்லாம் யாருக்காக? யாருடைய நலனுக்காக? மக்களின் நலனுக்காகவா எனின், நிச்சயமாக அதுவல்ல. மாறாக பணம் கொழுத்தவன் மேலும் கொழுப்பதற்காகத் தான்.

 உலகில் அரசியல் அதிசயங்கள் நடக்கின்றன. இலங்கை தொழிலாளி வர்க்கத்தின் காலை உடைத்து விட்டுத்தான், இவர்கள் எல்லாம் கூட அரசியல் நாடகமாடுகின்றனர். ஜே.வி.பி திடீரென தொழிலாளர் என்று கோசம் போட, யூ.என்.பி.யும், புலிப்பினாமியான கூட்டமைப்பும் அதற்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். தொழிலாளி வர்க்கம் தனது சொந்த வர்க்க அரசியலுடன் எழுந்திடா வண்ணம், இவர்கள் செய்கின்ற அரசியல் திருகுதாளங்கள் இவை. தொழிலாளியின் முதுகில் குத்தித் தான், இவர்கள் தமது சொந்த அரசியல் செய்கின்றனர்.

 

இந்த வேலைநிறுத்தத்தின் வெற்றி பற்றி அரசும் ஜே.வி.பியும் கூச்சல் போடுகின்றனவே, அப்படியாயின் தோற்றவர்கள் யார்? ஆம் தொழிலாளி வர்க்கம் தான், மீண்டும் தோற்றுப் போனது. அவர்கள் தோற்றுப்போகும் வகையில், தொழிலாளியின் பெயரால் ஒரு பொருளாதார வேலை நிறுத்தம்;. தொழிலாளியின் பொருளாதார அவலத்துக்கு காரணமான அரசியல் போராட்டத்தை தவிர்த்து, பொருளாதார போராட்டத்துக்குள் முடக்கி தொழிலாளியை தோற்கடித்தனர். இது தான் ஜே.வி.பி அரசியல்;. இதனால் தான் இனவாத முதலாளித்துவ யூ.என்.பி.யும், புலிப்பினாமியான முதலாளித்துவ கூட்டமைப்பும் ஆதரித்தனர்.

''வதந்திகளை நம்பவேண்டாம் : விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை வேண்டுகோள்" 12 யூலை 2008 வெளியிட்டுள்ள புலி அறிக்கை, மீண்டும் 10 வருடங்கள் கடந்த பின் வந்துள்ளது. யாழ்குடாவை எதிரி கைப்பற்றிய காலத்திலும், இது போன்ற அறிக்கை ஒன்றை புலிகள் விட்டு இருந்தனர். புலி சந்திக்கின்ற பொதுநெருக்கடி, மக்கள் புலியை தோற்கடிக்கின்ற உண்மையை பளிச்சென்று இந்த அறிக்கை போட்டு உடைக்கின்றது.

 

புலிகள் தம்மையும், தமது கடந்தகாலத்தையும் திரும்பி பார்க்க மறுப்பது, மறுபடியும்  புலனாகின்றது. மக்கள் புலிகளை தோற்கடிக்கின்றனர் என்ற உண்மையின் பின்னுள்ள, பாசிச அரசியல் தாற்பாரியத்தை நாம் புரிந்து கொள்வது அவசியம்.

இதை செய்தது, சொந்த தமிழ் தேசிய இனத்தில் இருந்த எதிர்புரட்சி அரசியல் தான். அது கையாண்ட வழி, சூழ்ச்சிகரமானது. முதலில் அது செய்தது என்ன? ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் கோரிக்கைகளை தான் ஏற்றுக் கொள்வதாக காட்டிக்கொண்டது. இப்படி அந்த மக்கள் தமது சொந்தக் கோரிக்கையுடன் ஒரு தேசியத்துக்காக அணிதிரளா வண்ணம் தடுத்தது. இதன் மூலம் ஒடுக்கும் தமிழ் தேசியத்தின் தேவைக்கு ஏற்ப, அவர்களை ஒடுக்கியது தான் எமது தேசிய வரலாறாகும்.

 

இப்படி இரண்டு வழிகளில், இதை அக்கம் பக்கமாவே இந்த எதிர்புரட்சி அரசியலைச் செய்தது.

தமிழ் தேசியத்தையே தமிழ் மக்களுக்கு எதிராக திரித்த வரலாறு தான், எமது தேசிய வரலாறு. ஏன் ஜனநாயக வரலாறும் கூட. வெறும் புலிகளல்ல, அனைத்து பெரிய இயக்கங்களும் இதைத்தான் செய்தன. மக்களை தமது எதிரியாகவே நிறுத்தின.

 

அனைத்து பெரிய இயக்கங்களும், அன்னிய சக்திகளின் அரசியல் ஏஜண்டுகளாக இருந்தனர், இருக்க முனைந்தனர். அவர்களையே தமது நண்பனாக, தோழனாக கருதினர். மக்களைச் சார்ந்து இருப்பதற்கு பதில், மக்கள் இடையே இருந்த முரண்பாடுளை களைந்த ஒரு ஐக்கியப்படுத்தப்பட்ட போராட்டத்துக்கு பதில், அதற்கு வேட்டுவைத்தனர். இதில் தியாகியானோர் வரலாறு போற்றப்படுவதில்லை. அவர்களை தூற்றியபடி, மக்களிடையேயான முரண்பாடுகளை பாதுகாத்து, அதை மேலும் ஆழ அகலமாகிப் பிளந்தனர். 

தமிழ் மக்கள் தமக்கிடையிலான சமூக முரண்பாடுகளை களைவதற்கும், தமக்கிடையில்  ஐக்கியப்படுவதற்கும் எதிராகத்தான், இயக்கங்கள் ஆயுதமேந்தின. இதுவே உட்படுகொலைகளில் தொடங்கி இயக்க அழிப்புவரை முன்னேறி, அதுவே துரோகமாகவும், ஒற்றைச் சர்வாதிகாரமுமாகியது. புலிச் சர்வாதிகாரத்தை எதிர்த்தோர், அரச கூலிப் படைகளாகியுள்ளனர். மக்களுக்கு எதிரான இந்த எதிர்ப்புரட்சியை நியாயப்படுத்தத் தான், தேசியம் ஜனநாயகம் என்ற வார்த்தைகளை; இவர்கள் பயன்படுத்துகின்றனர்.

 

இவர்கள் ஆயுதத்தை வைத்திருப்பதை தமிழ் மக்கள் விரும்பவில்லை. இந்த ஆயுதம் ஏந்திய குண்டர்கள் தமிழ் மக்கள் மத்தியில் பிளவையும், சிதைவையும், அழிப்பையும் தான் மக்களுக்கு பரிசளிக்கின்றனர். இப்படிப் பேரினவாதத்துக்கு துணையாகவே, தமிழ் மக்களுக்கு எதிராக ஆயுதமேந்தி நிற்கின்றனர்.   

புலியின் பாசிசத்தை எதிர்க்கின்ற வலதுசாரியத்தின் பின்னால் தான், இடதுசாரி மக்கள் போராட்டம் மறுபடியும் மறுப்புக்குள்ளானது. இதை நான், நாங்கள் இனம் கண்டு போராட முற்பட்ட காலகட்டத்தில், இதை அம்பலப்படுத்துவது இலகுவானதாக இருக்கவில்லை. இடதுசாரிய வேஷம் கலைந்து போகாத சூழல்.

 

ஆனால் அவர்கள் மார்க்கியசத்தை எதிர்த்தும், திரித்தும் வந்தனர். இந்தத் தளத்தில் தான், நான் நாங்கள் முதல் எதிர்தாக்குதலை தொடங்கினோம். கிட்டத்தட்ட தனித்து, நான் மட்டும் இதை எதிர்கொண்டேன்.

ஏதோ இதை புலியிடம் மட்டும் கோரியதாக கூட சிலர் (திடீர் ஜனநாயகவாதிகள்) திரிக்கின்றனர். யாரெல்லாம் சமூகத்தில் நிலவிய முரண்பாடுகளை தீர்க்க முனையவில்லையோ, அதாவது இதை யார் பாதுகாத்து நின்றனரோ, அவர்களுக்கு எதிராகவே இந்தப் போராட்டமும் நடந்தது.

 

பலரும் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்கின்ற, பல நூற்றுக்கணக்கானவர்களின் தியாகம் செய்த போராட்டம் இதற்காக நடந்துள்ளது. முதல் பலி இவர்கள் தான். யாரும் அஞ்சலி செலுத்தாத தியாகமாகவே எம்முன் உள்ளது. இதை மக்களுக்கான ஒரு தியாகமாக இன்று வரை மதிக்காத தேசியம் பாசிசமாகவும் மறுபக்கத்தில் ஜனநாயகம் கூலிக்கு மாரடிக்கும் அரச எடுபிடியாகவும் உள்ளது. இதையே தமது போராட்டம் என்கின்றனர்.

யாரை இப்படி அழைக்கின்றோம்? ஏன் இப்படி அழைக்கின்றோம்? இதை ஒரு புதிராக எடு;த்தால் இதற்குள் மனிதம் இருப்பதில்லை. மனிதப் பண்பு இருப்பதில்லை. அறிவு, நேர்மை, உண்மை, சமூகப் பண்பு என எதுவும் இதனிடம் இருப்பதில்லை. இது எதுவாக இருக்கும்? சொல்லுங்கள்.

ஆளுக்காள் கோள் மூட்டி தான் பிழைப்பதே தேசத்தின் ஊடகவியல் தத்துவமாக, அதை 'தொழில் நேர்மை" என்று அது தனக்குள் பீற்றிக்கொள்கின்றது. இதற்குள் ஜனநாயகம் பேசும் விற்பன்னர் கூட்டமோ தமது குறுகிய வக்கிர அற்ப தேவைக்கு ஏற்ப அதற்குள் குத்தி முறிகின்றனர்.

இலங்கை அரசின் விருப்பத்துக்கு மாறாகவே, இந்தியா மீண்டும் நிர்ப்பந்தத்தை அடிப்படையாக கொண்ட ஒரு தலையீட்டைத் தொடங்கியுள்ளது. யூன் 16ம் திகதி இலங்கை வெளிவிவகார  அமைச்சர் ரோஹித போகொல்லாகம இந்திய ஆளும் வர்க்கத்தைச் சந்தித்த பின் அவர் வெளியிட்ட அறிக்கையில் 'இலங்கையின் உள்விவகாரங்களில் இந்திய அரசாங்கம் அநாவசியமாக தலையிடாது" என்ற நம்பிக்கையை பகிரங்கமாக வெளியிட்டார். இதன் மூலம் இலங்கை விரும்பாத ஒரு இந்தியத் தலையீடு இருப்பது, இப்படி வெளிப்பட்டது.

இந்த 'ஜனநாயகம்" தனது சொந்த மனவிகாரங்களையும், முரண்பாட்டையும், தனிமனித காழ்ப்புகளையும்;, அரசியல் முலாம் ப+சி கொட்டித் தீர்ப்பதைத் தான் மாற்றுக் கருத்து என்கின்றனர். மக்களின் விடுதலைக்கான கருத்துகளுக்கு புலியெதிர்ப்பு தளத்தில் இடமில்லை. அவை இவர்களால் மறுக்கப்படுகின்றது, மறுபக்கத்தில் அவை அனுமதிக்கப்படுவதில்லை. இது புலியெதிர்ப்பாக வேஷம் போட்டுவிடுகின்றது. மக்களின் விடுதலைக்கான கருத்துகள் இந்த 'ஜனநாயகத்தில்" வைக்கப்படுவது கிடையாது.

இதில் ஒருவர் தான் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம். இவர் மகிந்தவை சந்தித்து ஆசி பெற்றது முதல், இருண்டதெல்லாம் புலியாகத் தெரிய உருவாடுகின்றார். ஏதேதோ புலம்புகின்றார். கொலையையே அரசியலாக கொண்ட புலிப் பிள்ளையான், பேரினவாத மகிந்த அரசினால் ஒரு கூலிக் கும்பல் தலைவனாக திடீரென உயர்த்தப்பட்டவுடன், கிழக்கின் விடிவெள்ளி என்று உச்சிமோந்தவர் தான் இந்த இராஜேஸ் பாலா.  

மக்கள் விடுதலையை மறுக்கின்றவர்களை பெரும்பான்மையாக கொண்ட, சமூக விரோதிகளாலானது. சொந்த நடத்தைகளாலும், கருத்தாலும் மனித இனத்தையே வேரோடு அழிக்கின்றவர்கள் தான் இவர்கள்.

தேசம் தனக்கு எந்த அரசியலும் கிடையாது என்கின்றது. அரசியல் கிடையாது என்றால், அதன் அர்த்தம் நிலவுகின்ற பாசிசத்தை நடுநிலையுடன் ஆதரிப்பது தான். இதைத் தான் ஊடகவியல் என்று கூறுவதுடன், இதை நியாயப்படுத்தவே 'தொழில் நேர்மை" என்கின்றனர். இதுவல்லாத சமுதாய நலனா தேசத்திடம் உண்டு? சொல்லுங்கள்?

மக்களின் விடுதலைக்கான கருத்து சுதந்திரத்தையல்ல. அதை அது பேசுவதும் கிடையாது. சமூக நோக்கமற்ற கருத்துச் சுதந்திரம் என்பது, அரட்டையும், கொசிப்புமாக, அது காழ்ப்பாக தூற்றுவதுமாக மாறுகின்றது. இப்படித்தான் தேசம் நெற் புழுத்துக் கிடக்கின்றது. இப்படிச் செய்வதையே தேசம் தனது 'தொழில் நேர்மை" என்கின்றது.

சமூக நோக்கமற்ற புலித் தேசியம். சமூக நோக்கமற்ற புலியெதிர்ப்பு ஜனநாயகம். சமூக நோக்கமற்ற 'தொழில் நேர்மை". இவைக்கு பின்னால், தெளிவான மக்கள் விரோத நோக்கங்கள் தெளிவாக உண்டு.

 

இங்கு சொந்த சுயநலம் உண்டு. அதுதான் சொந்த 'தொழில் நேர்மை" பற்றி பேச வைக்கின்றது. மக்களுக்கு எப்படி நேர்மையாக செயல்படுகின்றீர்கள்? அதை முதலில் சொல்லுங்கள்;. மக்களுக்கு எதிரான இரண்டு பாசிசத்தையும், எப்படி நேர்மையாக எதிர்த்துப் போராடுகின்றீர்கள்? அதைச் சொல்லுங்கள். இதுவல்லாத ஊடகவியல் நேர்மை என்பது, பாசிசத்தை ஆதரித்து பூசிப்பது தான். இரண்டு பாசிசத்தை எதிர்த்து, அந்த வகையில் கருத்தாளரைக் கொண்டிராத தேச 'தொழில் நேர்மை"யைக், கொண்டு போய் குப்பையில் போடுங்கள். அது யாருக்குத் தான் தேவை. இது சொந்த சுயநலத்துக்கு வேஷம் போட்டுக் காட்ட உதவும் என்று, கனவு காணாதீர்கள்.

மனித அவலத்தையே சமூகமாக்கிவிட்ட பாசிசத்தை, எதிர்க்காத ஒரு ஊடகவியலை 'தொழில் நேர்மை" என்ற பெயரில் நடத்துவதே பாசிசம் தான். பாசிசத்தை இப்படியும் அரங்கேற்ற முடியும் என்பது, பொறுக்கிகளினதும் கிரிமினல்களினதும் வக்கிரமாகும். புலி - புலியெதிர்ப்பு பாசிட்டுகளுடன் கூடி, நடத்துகின்ற அரசியல் விபச்சாரம் தான், அவரின் 'தொழில் நேர்மை" யாகின்றது. 

புலி – அரச ஆதரவு பாசிட்டுகளும், புலியெதிர்ப்பு கோஸ்டிகளும், தங்கள் முரண்பாடுகளை தீர்த்துக் கொண்டு கொசிக்கும் இடம் தான் தேசம் நெற். இதைத் தவிர இதனிடம் வேறு எந்த சமுதாய நோக்கமோ, சமூக விழுமியங்களுமோ கிடையாது. இதை வைத்து தேசம் நெற் ஆசிரியர், தொழில் என்ற பெயரில் வியபா(பச்சா)ரம் செய்கின்றார். 'தொழில் நேர்மை" என்ற பெயரில், சமூக அவலத்தை தொழில் மூலதனமாக்கும் ஒரு பொறுக்கியாக தேசம்நெற் ஊடாக உலா வருகின்றார். 

மத்தளத்தின் இரண்டு பக்கத்தில் இருந்தும் நாம் அடிக்கப்படுகின்றோம். தேசத் துரோகி என்றும், புலிப் பயங்கரவாதி என்று ஒரேதளத்தில் இரு முத்திரை குத்தப்;படுகிறது. எமது அரசியல் கருத்துக்களை, இருதரப்பும் எதிர்கொள்ள முடிவதில்லை என்பது உண்மையாகின்றது. இதனால் எம்மை தமது எதிர்தரப்பாக காட்டி தூற்றுகின்றோம். இது தான் அவர்களது எமக்கு எதிரான அரசியல்.

"நடைமுறைச் சாத்தியமான" ஒன்றைக் கோருகின்ற அரசியல் நியாயவாதங்கள் அடிக்கடி பலராலும் முன்வைக்கப்படுகின்றது. தமது எதிர்வாதங்களின் போதும், புலி மற்றும் புலியெதிர்ப்புத் தளத்தில் இருந்து, இவை வைக்கப்படுகின்றது.

 

'நடைமுறைச் சாத்தியமான" தீர்வு என்று புலிகள், புலியை ஆதரிக்கக் கோருகின்றனர். தமிழீழத்தை அடைதலே சாத்தியமான ஒரே தீர்வு என்கின்றனர். புலியெதிர்ப்போ அரசை ஆதரிப்பது தான் 'நடைமுறைச் சாத்தியமான" 'ஜனநாயக" தீர்வு என்கின்றனர். அதாவது புலியை ஒழித்தல் தான் சாத்தியமான தீர்வு என்கின்றனர். இவர்கள் இப்படிக் கோருவது இதுவல்ல என்று, மாற்றை யாரும் இதற்கு எதிராக வைக்க முடியாது. 

எதுவெல்லாம் இந்துத்துவமோ, அதுவெல்லாம் சாதியாக இருக்கின்றது. எதுவெல்லாம் சாதியோ, அதுவெல்லாம் இந்துத்துவமாக இருக்கின்றது. எதுவெல்லாம் மனிதர்களுக்கு இடையில் ஏற்றத்தாழ்வைக் கற்பிக்கின்றதோ, அதுவெல்லாம் இந்துத்துவ சாதிய வடிவில் இருக்கின்றது. எவையெல்லாம் மனித விரோதத் தன்மை கொண்டதோ, அதுவெல்லாம் இந்துத்துவ சாதிய வடிவில் இயங்குகின்றது. 

 

இப்படி ஒரு இந்துத்துவ சமூக அமைப்பு என்பது, சாதிய சமூக அமைப்பாகவே உள்ளது. இது தனது சமூக அமைப்பின் அனைத்து மனித விரோதத் தன்மையையும், தனக்குள் உள்வாங்கி பிரதிபலிக்கின்றது. எதுவெல்லாம் சமூகத்துக்கு எதிரான கொடூரங்களாகவும், கொடுமைகளாகவும், சமூக விரோத செயலாகவும் உள்ளதோ, அவையெல்லாம் இந்துத்துவ சாதி வடிவில் நீடிக்கின்றது.

யூன் 15-16 திகதி நடைபெறவுள்ள இந்த இலக்கியச் சந்திப்பில், தேசிய இனப்பிரச்சனை தீர்வு  தொடர்பாக உரையாடும்படி இலக்கிய குழுவைச் சார்ந்த ஒருவர் கோரினார். இதை நாம் திட்டவட்டமாக நிராகரித்தோம். நாம் இதில் கலந்து கொள்வதாக இருந்தால், மக்கள் நலன்சார்ந்த ஒரு அறிவித்தலையும், கூட்டத்தில் கருத்து ஜனநாயகம் பேணப்படும் வகையிலான ஒரு ஜனநாயக வடிவத்தையும் கோரினோம்.

மக்கள் தான் புரட்சி செய்ய வேண்டும் என்பதை ஏற்காத அனைவரும், அதற்காக போராடாத அனைவரும், இந்த பாசிசத்தின் ஏக பிரதிநிதிகள் தான். இது புலி மற்றும் புலியெதிர்ப்பு அரசியலுக்குள் புழுத்துக் காணப்படுகின்றது.

 

இன்று தமிழர் மத்தியில் புரையோடியுள்ள பாசிசத்தை, வெறுமனே புலிகள் மட்டும் பிரதிபலிக்கவில்லை. இலங்கை - இந்திய அரச ஆதரவு குழுக்களும் கூட, பாசிசத்தை பிரதிபலிக்கின்றது.

தமிழ்மக்கள் தாம் போராடாமல், தமக்கான விடுதலையை ஒருநாளும் அடையமுடியாது. இதுவல்லாத அனைத்துமே மக்களுக்கு எதிரானது. மக்களின் விடுதலையில் அக்கறையுள்ள அனைவரும் மக்கள் போராட வேண்டும் என்பதை அங்கீகரிக்காத வரை, மாற்றுப்பாதை என்பது அவர்களைப் பொறுத்தவரை தமது மக்கள் விரோத அரசியலை நியாயப்படுத்த உதவும் வாதத்துக்கு உரிய வெற்றுச் சொல்லாடல்கள் தான்.

'ஜனநாயகம்" என்பது மக்களின் அடிப்படை உரிமையல்ல, என்று மறுப்பவன், எப்படி கிழக்கில் நடைபெறும் பாலியல் குற்றங்களுக்கு எதிராக நேர்மையாக போராடுவான்? கிழக்கில் நடைபெறும் எந்த பாலியல் குற்றம், நீதி விசாரணைக்கு வந்தது? யாரும் தண்டிக்கப் பெறுவதில்லை. குற்றவாளிகளும், சமூக விரோதிகளும் 'ஜனநாயகத்தின்" காவலராக இருக்கும் வரை, மக்களின் அவலத்தை யாரும் பேசம் பொருளாகக் கூட எடுப்பதில்லை.

கிழக்கில் திட்டமிட்ட வகையில் நடைபெறும் கற்பழிப்புகளோ அரசியல் ரீதியானவை. இதை மூடி மறைப்பது கூட, அரசியல் உள்நோக்கம் கொண்டவை. இலங்கையில் நடைபெறும் பொதுவான கற்பழிப்புக்களை விட, இது வேறுபட்டவை. இந்தக் குற்றம் நிகழ்கின்ற ஒரு பொதுச் சூழலில் தான், ஆசிய மனித உரிமை அமைப்பின் செய்தி வருகின்றது. குறித்த ஒரு சம்பவம் மீது, கவனத்துக்குரிய ஒரு செய்தியை வெளியிட்டது. இந்த செய்தியின் உண்மைத் தன்மை பற்றி எதிர்வாதங்கள், இது போன்ற உண்மைகளை குழிதோண்டி புதைக்கும் மிக இழிவான அரசியல் செயலாகும். 

பேரினவாதத்தை ஆதரிக்கும், பேரினவாத கூலிக் கும்பலை 'ஜனநாயக”வாதிகளாக காட்டும், பேரினவாத நடத்தைகளை புலி ஒழிப்பாக போற்றும், கிழக்கு பாசிட்டுகள் தான் இப்படிக் கூறுகின்றனர். அரசு மற்றும் கிழக்கு கூலிக்கும்பல் நடவடிக்கைகளை பாதுகாக்க முனைபவர்களிடம், நாம் எப்படி தான் நேர்மையை எதிர்பார்க்க முடியும். கிழக்கு மக்களுக்காக போராட மறுப்பவர்கள் தான் இவர்கள். 'கிழக்கில் உதித்த ஜனநாயக சூரியன்” என்று இவர்களால் அழைக்கப்பட்டவர்களின், கிழக்கு மக்களுக்கு எதிரான மனித விரோதத்தை எப்போதாவது எதிர்த்துள்ளனரா? சொல்லுங்கள். இவர்களிடம் நாம் எப்படி நேர்மையை எதிர்பார்க்க முடியும். 

கிழக்கு சம்பவத்துக்கு கண்டனம் கொலைக்கு கண்டணம் வாக்குறுதிகள் அறிக்கைகள் சமாதான மாநாடுகள் என்று கிழக்கு பாசிட்டுகள் 'ஜனநாயக" வித்தை காட்டிக்கொண்டு அடுத்தடுத்து நாலு முஸ்லீம்களை கடத்தி சென்றுள்ளனர். இப்படி 'அனைத்து இன மக்களுக்கும் பொறுப்புக்கூறும் விதத்தில்" முஸ்லீம் மக்களின் அடிப்படை உரிமைகளை மறுத்து கிழக்கு பாசிட்டுகள் பேரம் பேசுகின்றனர்.

இதுவோ எம்மை எதிர்கொள்ள முடியாதவனின் எதிர்வாதம். இது நாம் சந்திக்கும் அரசியல் சவால். எம்மால் அம்பலமாகும் புலிகளும் புலியெதிர்ப்பும் தான் தொடர்ச்சியாக இந்த வாதத்தை எம்மை நோக்கி எழுப்புகின்றனர். இவர்கள் தமிழ் மக்களின் நலனில் இருந்து இதைக் கேட்கவில்லை. இந்த அடிப்படையில் சுயமாக சிந்திப்பது கிடையாது.

பாசிசப் புலியில் கருணா என்ற தனிநபருக்கு ஏற்பட்ட முரண்பாடு கிழக்கு பிரிவினையாகியது. அதுவோ இன்று பேரினவாதத்தின் கிழக்கு கூலிக் கும்பலாகி நிற்கின்றது. இது கிழக்கு மக்களின் 'ஜனநாயகம்" கிழக்கு தமிழ் மக்கள் 'நலன்" என்று பல்வேறு கோசங்களுக்கு ஊடாக, தனது மக்கள் விரோத பாசிசத்தை விதைத்தனர், விதைக்கின்றனர்.

பிட்டும் தேங்காப் பூவுமாக வாழ்ந்த கிழக்கு மக்களின் இன ஒற்றுமையை, தமிழ்தேசியம் தான் பிளந்தது என்று கூறிக்கொண்டு புலியெதிர்ப்பு என்ன அரசியல் நடத்தியது? தமிழ்தேசியத்தின் பெயரில் புலிகள் நடத்தியதை விட, மிகமோசமாக இன ஒற்றுமையை கிழக்கிசம் சிதைத்தது.

 

கொலைக் கலாச்சாரம் தான் எமது தேசியம். நாங்கள் நேபாள மாவோயிஸ்ட்டுகள் போல், ஜனநாயகம் பேச முடியாது. யார் இதற்கு எதிராக எதைச் சொன்னாலும், எப்படி விமர்சித்தாலும் நாம் சுயவிமர்சனம் செய்ய முடியாது. நாங்கள் இதற்கும் மரணதண்டனையைத் தான் வழங்குவோம். இதையே தான் வலதுசாரிய மக்கள் விரோத புலிகள், மீண்டும் சொல்ல முனைகின்றனர்.

பாசிசப் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட மகேஸ்வரியை வைத்து, தமது துரோகத்தையும் நியாயப்படுத்த முனைகின்றது புலியெதிர்ப்பு "ஜனநாயகம்". புலியெதிர்ப்பையே தனது அரசியலாக செய்பவர்களில் ஒருவரான ராகவன், 'சொல்லுங்கள் மகேஸ்வரி துரோகியென்று!" என்று கேட்டு, எழுதுகின்றார். இதன் மூலம் தமது துரோகத்துக்கு, நியாயம் கற்பிக்க முனைகின்றனர்.

பொறுக்கிகளுக்கேயுரிய வகையில் எல்லா புலியெதிர்ப்பு கோஸ்ட்டிகளும் மக்களின் முதுகில் குத்துகின்றனர். மக்களை நம்பி, அவர்களைச் சார்ந்து எந்த அரசியலும் இவர்கள் செய்வது கிடையாது. மாறாக ஆயுதம் ஏந்திய குண்டர்களையும், ரவுடிகளையும், கூலிப்படைகளையும் சார்ந்து நின்று தான், இவர்கள் தமக்கேற்ற ஒரு 'ஜனநாயகத்தைப்" பேசுகின்றனர்.

பிள்ளையான் வாரான்! ரவுடி பின்ளையான் வாரான்! எல்லோரும் எழுந்து நில்லுங்கள்!

 

மக்கள் தாமாக தெரிவு செய்த தேர்தலாம்! இதில் வென்ற பிள்னையான் கதை பிள்ளையார் கதை போன்றது. அதிகப்படியான விருப்பு வாக்கால் மக்கள் கிழக்கு 'விடிவெள்ளி"யை தெரிவு செய்துள்ளனராம்! வடக்கு கிழக்கு இணைப்புக்கு எதிரான, ஏன் வடக்குக்கு எதிரான கிழக்கு மக்களின் வாக்குகளாம்! இதுதானாம் தேர்தல் சொல்லும் செய்தியாம்!

பாரிசில் 04.05.2008 'ஜனநாயகத்தின்" பெயரில் தேர்ந்தெடுத்த சில சமூகவிரோதிகள் கூடினர். இந்த கூட்டத்துக்கான அழைப்பு முதல் அவர்கள் பேசிக்கொண்ட விடையங்கள், இந்த 'ஜனநாயகத்தை" தெளிவாக அம்பலப்படுத்துகின்றது. யாரெல்லாம் இலங்கை - இந்திய அரசை 'ஜனநாயகத்தின்" பெயரில் நக்குகின்றனரோ, யாரெல்லாம் 'ஜனநாயகத்தின்" பெயரில் ஏகாதிபத்தியத்துக்கு வாலை ஆட்டுகின்றனரோ, அவர்கள் தான் 'ஜனநாயகத்தின்" பெயரில் கூடினர். இப்படி அப்பட்டமாக இலங்கை - இந்திய கைக்கூலிகள் எல்லாம் ஒன்றாக கூடினர்.

புலித்தேசியமோ தனது சொந்த புதைகுழியை தானே வெட்டிவைத்துக் கொண்டு, தானே வலிந்து தேர்ந்தெடுத்த ஒரு பாதையில் மடிகின்றது. இந்த புலியை உறிஞ்சிக் கொண்டு வாழ்ந்த பிழைப்புவாத உண்ணிக் கூட்டமோ, புலி பிணமாக முன்னமே மெதுவாக களன்று தப்பித்தோடுகின்றது. மறுபக்கத்திலோ புதியரக உண்ணிகள், பழைய உண்ணிகள் விட்டுச்செல்லும் வெற்றிடத்தில் மொய்க்கத் தொடங்கியுள்ளது.

மக்கள் எதிரிக்கு எதிராக தனக்குள்ளேயுள்ள முரண்பாடுகளைக் களைந்து ஐக்கியப்படுதலாகும். மக்கள் தமக்குள் ஒன்றுபட்டு, தமது சொந்த விடுதலைக்காக தாம் போராடுவது தான் மக்கள் போராட்டம்.

தமிழ் பேசும் மக்களின் மீட்பாளர்கள் எல்லாம் தொடர்ச்சியாக அம்பலமாகின்றனர். 'விடுதலை" பேசிய புலிகள் முதல் 'ஜனநாயகம்" பேசிய புலியெதிர்ப்பு ஒநாய்கள் வரை, தொடர்ச்சியாக அம்பலமாகின்றனர். தமிழ் மக்களின் தேசிய விடுதலை என்றும், தமிழ் மக்களின் ஜனநாயகம் என்று கூறிக்கொண்டவர்கள் எல்லாம், கேடுகெட்ட மனித விரோதிகள் என்பதை, அவர்களின் அரசியலையும் நடத்தையையும் அடிப்படையாக கொண்டு கடந்த காலத்தில் கூறிவந்தோம்.

 

புரியாத புதிருடன் புலம்பும் பிழைப்புவாத வழிபாடு. இது பகுத்தறிவற்றது. நேபாள மாவோயிஸ்ட்டுக்களின் இன்றைய சர்வதேச நிலையை வைத்து, பாசிசப் புலிகள் தம்மை நியாயப்படுத்த முனையும் வாதங்கள் ஒருபுறம். மறுபக்கத்தில் இதையே இந்திய போலி கம்யூனிஸ்ட்டுக்கள், தம்மை தாம் நியாயப்படுத்த வைக்கும் வாதங்கள். அனைத்தும் யாருக்கு எதிராக என்றால், உண்மையான புரட்சியாளர்களுக்கு எதிராகத்தான். மக்களின் அடிப்படைப் பிரச்சனையை பேசாதே என்கின்ற உள்ளடக்கத்துடன், இவ்வாறு அவதூறு பொழிகின்றனர்.

மயான அமைதி. யுத்தம் நடப்பதே தெரியாத ஒரு அரசியல் சூனியம். ஆனால் இலங்கையில் என்றுமில்லாத அளவில், மிகக் கடுமையான, கோரமான அழித்தொழிப்பு யுத்தம் ஒன்று நாள் தோறும் நடைபெறுகின்றது. ஆனால் அவை அமைதியாக, சலசலப்பின்றி அரங்கேறுகின்றது. மனித உயிhகள் அன்றாடம் பலியிடப்படுகின்றது.

அமைதி சமாதான வழிகளில், எதிரியின் சொந்தக் கோட்டைக்குள்ளேயே ஒரு புரட்சி நடந்துள்ளது. எதிரி வர்க்கமோ, தனது அதிகாரம் சொத்துடமை பண்பாட்டு மூலம் புரட்சியைச் சுற்றி வளைத்து நிற்கின்றது. ஏகாதிபத்தியமும், இந்திய விஸ்தரிப்பு வாதிகளும், பார்ப்பனிய சாதிய இந்துத்துவமும் இந்தப் புரட்சிக்கு எதிராக, தமது சதிகளையும், எதிர்த்தாக்குதலையும் தொடங்கியுள்ளது

மார்க்சியம், புரட்சி பற்றிப் பேசிய ஒரு இனவாதக் கட்சியில் ஒரு பிளவு. இந்தப் பிளவுக்கான அரசியல் பின்னணி என்ன?

 

இந்த பிளவோ புரட்சி, மார்க்சியம், ஜனநாயக் கோரிக்கையை முன்னெடுப்பது

இதை சொல்ல முனையும் ஒரு நூலுக்கூடாக, அவர்களின் சொந்தக் கலந்துரையாடல். பெற்றோர் முதல் நூல் ஆசிரியர் வரை, வாழ்வின் வெற்றி தோல்விகளாக எதைத்தான் கருதுகின்றனர்? இதை நுணுகி உடைத்துப் பார்த்தால், பெற்றோரின் குறுகிய சுயநலத்தைத் தான் பெற்றோரியம் என்கின்றனர்.

சொல்வதும், சொல்லத் தவறுவதும் என்ற இரு அடிப்படையான சமூகப் பரிணாமங்களில், ஒன்றை முன்னிறுத்தியே கனகசபாபதியின் இரண்டு நூல்கள் வெளிவந்துள்ளது. அது நோய்க்கு மருந்தைக் கொடுக்கின்றது. நோயின் மூலத்தை கண்டறிந்து, அதற்கு மருந்து கொடுப்பதைத் தவிர்க்கின்றது.

சுதந்திரமாக இலங்கையில் இயங்குவது என்பது, கைதுக்கும் சித்திரவதைக்கும், ஏன் மரணத்துக்கும் கூட ஒப்பானது.

 

அண்மையில் யசிகரன் கைதும், அவரின் துணைவியாரான வளர்மதியின் கைதும், இதை மறுபடியும் நிறுவியுள்ளது.

பேரினவாத பேயோ யுத்தத்தை வெல்லும், உச்சக் கொப்பளிப்பில் கொக்கரிக்கின்றது. தமிழ் மக்களை நாயிலும் கீழாக தாழ்த்தி முடிந்தளவுக்கு சிறுமைப்படுத்துகின்றனர். பேரினவாதத்தை ஊர்ந்து நக்கும் கூட்டம், தமிழ் மக்களுக்கு ஜனநாயகம் கிடைத்து வருவதாக ஊளையிட்டுக் கூறுகின்றனர்.

தமிழச்சியின் முன்வைக்கும் அரசியல் கோட்பாட்டை ஆராய்வதன் மூலம், அந்தக் கருத்தினை விமர்சிப்பது அவசியமாகின்றது. தமிழச்சிக்கு எதிராக நடத்திய படுபிற்போக்கான வலதுசாரிய செயற்தளம் மீது, நாம் கடந்த காலத்தில் எதிர்வினையாற்றி இருக்கின்றோம்.

கொசோவோவின் பிரகடனத்தை பொதுவாக புலிகள் தரப்பு ஆதரிப்பவர்களாகவும், பேரினவாதிகள் எதிர்ப்பவர்களாகவும் உள்ளனர். நாம் இதை எப்படி பார்ப்பது?, புரிந்து கொள்வது?

தலித்துகளின் எதிரி யார்? என்பதை அடையாளப்படுத்தாது, தலித்தியம் பற்றி பேசும் நுட்பம் தான் இவர்கள் அரசியல். கடந்தகால இயக்கங்கள் முதல் இன்றுவரை அரசியல் பேசுவோர் வரலாறு இது.

தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்கு தான் நாம் போராடுகின்றோம் என்று கூறிக்கொண்டு, அவர்களுக்கு எதிராக அரசியலில் சித்துவிளையாட்டு காட்டுகின்றவர்கள் முதன்மையான உடனடியான எதிரிகள்.

ஆபாசமும்! கவர்ச்சியுமா! மனித கலாச்சாரம்? இதுவல்ல என்று பலமாக நம்பும் நாம், இப்படித் தான், இதற்குள் தான், நாம் எம்மையறிமால் இதை நியாயப்படுத்தியும் வாழ்கின்றோம். இந்த உண்மையை நாம் தெரிந்து கொள்வது அவசியம். எம்மிடம் எஞ்சியிருந்த மனித கலாச்சாரங்களை எல்லாம் நாம் இழந்து வருகின்றோம்.

இதற்குள் தான் இந்த மாநாடு, சுற்றிச்சுற்றி வலம்வருகின்றது. இப்படி இது, தலித் மக்கள் பற்றிய மாநாடு அல்ல. தலித்தின் எதிரிகள் யார் என்று பட்டியலிடவும், அதைப் பிரகடனம் செய்வதற்காகவுமல்ல, இந்த மாநாடு. மாநாட்டு ஏற்பட்டாளர்களில் பெரும்பான்மையானோர் தீவிர வலதுசாரிகள்.

மனித இழிவுகளையே அது அடிப்படையாக கொண்டது. மனிதன் மேல் கொடூரமான, இழிவான, வக்கிரமான ஒடுக்குமுறைகளைச் செய்யும் கோட்பாட்டாலானது. இந்த சமூக அமைப்பில், இப்படிப்பட்ட ஒன்று தான் பார்ப்பனியமும். இதன் பிரதிநிதிகள் தான், இந்த பார்ப்பனமணிகள்.

அரசும் சரி, புலியும் சரி, யார் அதிக மக்களைக் கொல்வது என்பதிலும் கூட போட்டிபோடுகின்றனர். மனித அறங்களை எல்லாம் கடந்து, நிர்வாணமாகவே நிற்கின்றனர். பழிக்குபழி, இரத்தத்துக்கு இரத்தம், கொலைக்கு கொலை என்று, அரச பயங்கரவாதமும் புலிப் பயங்கரவாதமும் போட்டி போடுகின்றது.

பார்ப்பனியம் என்பது அறிவால் நிலைநாட்டப்பட்டதல்ல. சூழ்ச்சியால், சதியால், வன்முறை கொண்ட அதிகாரத்தால் தான், சமூகத்தை அடிமைப்படுத்தினர். இப்படிப்பட்ட பார்ப்பனியம் தான், தமிழ்மணத்தில் பல வேடங்களில், பல பார்ப்பனிய இடுகைகளைப் போட்டனர்.

இதையெல்லாம் யார் கூறுகின்றனர். இந்திய இலங்கை கூலிக் குழுக்களாக உள்ளவர்கள் இதைக் கூறுகின்றனர். இதுதானாம் மக்களின் விடுதலைக்கான ஒரு பாதை என்கின்றனர். மக்களுக்கு எதிரான தமது துரோகத்தை பறைசாற்றும் இவர்கள், 'யதார்த்தமாக சிந்திப்பவன் என்ற வகையில் தமிழ் மக்களின் விடியலுக்கு" இந்த 'எலும்புத்துண்டுகளைத்தனிலும் கொடுக்கமுடியு"ம் என்கின்றனர்,

என்னை யார் என்று தெரிந்து கொண்டு, அதன் ஊடாக என் மீது தனிநபர் தாக்குதலை நடத்துகின்றனர். இதை மூடிமறைக்கவே, நான் தனிமனித தாக்குதல் நடத்துவதாக கோயபல்ஸ் பாணியல் கூறுவதே, புலியல்லாதவர்களின் அரசியல் எதிர்வினையாகின்றது.

கிரிமினல் ஊடகவியல் என்பது, நிலவும் அரசியல் சூழலையும், அதன் எதார்த்தத்தையும் மறுப்பதாகும். தன்னை நியாயப்படுத்திக் கொள்ளவே 'ஒரு ஊடகவியலாளன் ஒரு தகவலை சேகரிக்கும் போது, யார்? யாரால்? ஏன்? எதற்கு? எப்படி? எப்போது?

சமூகத்தை முற்றுமுழுதாக அரசியல் கிரிமினல்கள் கட்டுப்படுத்தும் போது, ஊடகவியல் இதற்குள் சரணடைகின்றது. தன்னையும் தனது கருத்தையும் சுதந்திரமானதாக கூறிக்கொண்டு அதுவாகவே மாறுகின்றனர். இந்த அரசியல் கிரிமினல்கள் கீறிய கோட்டைத் தாண்டுவதில்லை. மற்றவர்களை அனுமதிப்பதுமில்லை.

இப்படி ஏதோ தமிழ் மக்களுக்கு பிச்சை போடுவதாக நினைப்பு. இதை பொறுக்கித்தின்னும் ஒரு கூட்டம் வாலாட்டிக் கொண்டு நக்க அலைகின்றது. பேரினவாதமோ கொழுப்பெடுத்து நிற்கின்றது. பயங்கரவாதம் வேறு, தமிழ் மக்கள் வேறு என்று கூறி, நெட்டிமுறித்து திமிரெடுக்கின்றது.

தனக்கென்று ஒரு மக்கள் அரசியல் நிலையை எடுக்காத அனைவரும், நிலவும் கிரிமினல் அரசியலை ஏதோ ஒரு வகையில் பிரதிபலிப்பவர்கள் தான். புலிகளின் அரசியல், புலியெதிர்ப்புக் கூலிக் குழுக்களின் அரசியலும் இதே வகைப்பட்டவை தான். இவற்றைத் தாண்டி "தேசத்"திடமும் அவற்றை விட எந்த மாற்று அரசியலும் கிடையாது. இதை கொண்டு பரஸ்பரம் தூற்றுகின்ற,

இப்படி தமது அரசியல் என்னவென்று சொல்லாது வித்தை காட்டுபவர்கள் தேசம். புலி, புலியெதிர்ப்பு அரசியலில் மிதப்பவர்கள். அரசியல் ரீதியாக எதையும் தெளிவாக முன் வைக்காதவர்கள். மற்றவன் தனிநபர் தாக்குதல் செய்வதாக கூறியபடி, எந்த அரசியலுமின்றி தனிநபர் தாக்குதலை நடாத்துபவர்கள்.

மக்களின் விடுதலையா? தமிழ் மக்களின் விடுதலைக்கான ஒரு மாற்று அரசியல் வழியையா? இல்லை. மாறாக அவற்றின் கருக்களைக் கூட அழிப்பதை கடமையாக ஏற்று, அதைக் கட்டமைக்க விரும்புகின்றனர். இலங்கை அரசியலின் ஆதிக்கம் வகிக்கும் அரசியல் இதுதான். இதை படுகொலைகள் மூலம் தொடருகின்ற அரசியலின் தான்,

சமகால அரசியல் தளத்தில் என்ன செய்யவேண்டும் என்பது, சமூக அக்கறையுள்ள அனைவரின் முன்பும் தெளிவானது. மக்களின் சொந்த செயலுக்குரிய அரசியலை உயர்த்துவதும், அதையொட்டிய செயற்பாடுகளை பாதுகாப்பதும் தான், எம்முன்னுள்ள உடனடி அரசியல் பணி. இதை மறுத்து ஒரு காலில் புலியையும், மறு காலில் புலியெதிர்ப்பையும் மாட்டிக்கொண்டு, லாவணி அரசியல் செய்கின்றது தேசம்.

எங்கே ஓடுகின்றோம் என்று தெரியாது, ஓடுகின்றது தேசம். சுற்றிச் சுற்றி தமிழ் மக்களை இதற்குள், இந்த அரசியலுக்குள் வாழ் என்கின்றது தேசம். தமிழ் மக்கள், தமது சொந்த அரசியலுக்குள் இட்டுச் செல்லும் எதையும், கருவறுப்பதே தேசத்தின் மைய அரசியல்.

அது எங்கும் எதிலும் ஊடுருவி நஞ்சிடுவதன் மூலம், சமூகத்தை சொந்த செயலுக்குரிய அனைத்தையும் அழிக்கின்றது. இப்படிப்பட்ட அரசியல் சதிகளுக்கு, எந்த சொந்த முகமும் கிடையாது. தன்னைத் தான் மூடிமறைக்கப்பட்ட ஒரு நிலையில், எந்த கோட்பாட்டு உருவத்தையும் தான் கொண்டிருப்பதில்லை. கலவைக் கோட்பாட்டில்,

பரா தனக்கு சரியென்றுபட்ட கருத்தை தனது வாழ்வின் இறுதிவரை முன் வைத்தவர். போராடுவதில் தனது முதுமையை எட்டி உதைத்தவர். பொது அரசியல் சூழல் அவரை அங்குமிங்குமாக அரசியலில் ஆட வைத்தது. ஆனால் பொதுவான அரசியல் சீரழிவுக்குள் மூழ்காது, தன்னையும் தனது கருத்தையும் காப்பாற்றியவர்.

அமெரிக்கா கூறுவது போல், நிச்சயமாக அது புலிகள் அல்ல. அது அமெரிக்காவே தான். ஆனால் அமெரிக்காவோ புலிகள் என்கின்றான். புலியெதிர்ப்புக் கும்பலோ, மகிழ்ச்சியுடன் அதற்கு அரோகரா போடுகின்றது. புலியொழிப்பதையே அரசியல் வேலைத்திட்டமாக கொண்ட இந்த புலியொழிப்புக் கூத்தாடிகள், பிசாசுடன் சேர்ந்து இப்படித்தான் தமது மலட்டு அரசியலைச் செய்கின்றனர்.

இதை சொல்வதற்கு, கேட்பதற்கு உங்களுக்கு வெட்கமாகவில்லை. இப்படி மோடிக்கு கருத்துச் சுதந்திரம் வேண்டும் என்று கூறுவதே நகைப்புக்குரியது. ஒரு பார்ப்பனிய இந்துத்துவ பாசிட்டுக்கு எதிரான போராட்டம் என்பது, அவர்கள் முற்றாக அடக்கி ஒடுக்கப்படும் வரை நடத்தப்பட வேண்டும்.

அரசியலில் இழிந்து போனவர்களும், மக்கள் விரோத அரசியலையே செய்பவர்களும், ஒன்றாக கூடி மரணங்களைக் கூட வியாபாரம் செய்கின்றனர். மரணித்தவரை விமர்சனமற்ற புனிதராக காட்டுவதன் மூலம், தமக்குத்தாமே புனித பட்டங்களைக் கட்டிக்கொள்ள முனைகின்றனர்.

சந்ததியாரின் கண்ணையே தோண்டி பின் அவரைக் கொன்றவர்கள், அவரின் உடலை சாக்கில் கட்டி கூவம் நதியில் போட்ட கொலைகாரர்கள் ஜெர்மனியில் கூடுகின்றனர். இப்படி புளாட் என்ற கொலைகார சதிக் கும்பல், தமது கொலைகளை தொடர்வதற்கு பெயர் சர்வதேச மாநாடு. இந்த மாதம் நடுப்பகுதியில்,

எப்போதும் ஒப்பந்தங்களை கிழித்தலே, பேரினவாதிகளின் அரசியல். பேரினவாதமோ மீண்டும் மீண்டும் இப்படித்தான் கோலோச்சுகின்றது. தமிழ் மக்களின் அடிப்படை மனித உரிமைகளை மறுத்தலே, பேரினவாத அரசியல். அதற்குள் வாழ்தலே சிறுபான்மையினரின் அரசியல். ஆயுதம் ஏந்தியவர்கள்

அப்படித்தான் நிலைமை காணப்படுகின்றது. அதைத்தான் மகேஸ்வரன் படுகொலை சொல்லுகின்றது. இந்த ஆண்டு இலங்கையில் என்றுமில்லாத மனித அவலங்கள் ஏற்படவுள்ளது. கடந்து வந்த தொடர்ச்சியான மனித துயரங்களை எல்லாம், இது மிஞ்சும்.