முன்பக்கம்

உலாவுவோர்

We have 113 guests online

உலாவியோர்

Content View Hits : 5108979
Visits [+/-]
Today:
Yesterday:
Day before yesterday:
326
1673
3114

-1441
This week:
Last week:
Week before last week:
11678
22142
22244

-102

அண்மைய பின்னூட்டங்கள்

வெள்ளி, 03 புரட்டாதி 2010

இன்றைய பக்கங்கள்

 

பி.இரயாகரன் :- புதியவை

இந்தியப் பொலிஸ்சுடன் கூட்டுச் சேர்ந்து கட்டைப் பஞ்சாயத்து நடத்திய சபா நாவலன், குகநாதனிடம் 30 இலட்சம் கோரினார்! PDF Print E-mail
பி.இரயாகரன் - சமர் - 2010
பதிவேற்றியது பி.இரயாகரன்   
Thursday, 02 September 2010 20:53

இது ஒன்றும் கற்பனையல்ல. நிஜம். அண்மையில் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக இந்திய பொலிசார் பிடித்த குகநாதனை விடுவிக்க, சபா நாவலன் அவரிடம் இந்திய ரூபா 30 இலட்சத்தைக் கோரினார். நடந்த சம்பவம் உண்மை. கைது, பேரம், ஊழல், இலஞ்சம் … இதில் சபா நாவலன் சம்மந்தப்பட்டது எல்லாம் உண்மை. இதன் பின்னணியில் உலவும் தகவல்கள் பல. பொய், புரட்டு, உண்மை, மூடிமறைப்பு என்று அனைத்தும் கலந்த தகவல்கள் வெளிவருகின்றது. அதைத்தான் இங்கு நாம் தொகுத்துத் தர முனைகின்றோம்.

Last Updated on Thursday, 02 September 2010 20:56
 
வாய்க்குள் துப்பாக்கியை வைத்து மிரட்ட, சுடடா நாயே என்று கத்தினேன் (வதைமுகாமில் நான் : பாகம் - 35) PDF Print E-mail
பி.இரயாகரன் - சமர் - 2010
பதிவேற்றியது பி.இரயாகரன்   
Thursday, 02 September 2010 06:15

என் மீதான தொடர்ச்சியான விசாரணையில், எனது தயக்கமற்ற பதில், முன் கூட்டியே அவர்களுக்கு விடைதெரிந்த கேள்விகள் முடிவுக்கு வந்தது. விடைதெரிய வேண்டிய கேள்விகள் பல. ஆனால் அதை மீள மீளக் கேட்டனர். கேட்கும் போது கண்மூடித்தனமாகத் தாக்கி அடித்தனர். ஏற்பட்டிந்த காயங்களை மீளவும் இரத்தம் வரும் வண்ணம் மீளமீள சிதைத்தனர். 

Last Updated on Thursday, 02 September 2010 06:19
 
தங்கள் கொலைகார தனத்தை மூடிமறைக்க, புளட் நடத்திய திருகுதாளம் PDF Print E-mail
அரசியல்_சமூகம் - சிறி
பதிவேற்றியது தமிழரங்கம்   
Monday, 30 August 2010 20:29

சீலன் எழுதும் தொடருடன்  " நம்பிக்கைக்குரிய ஆளாக நடிக்க, சுந்தரத்தினதும் உமாமகேஸ்வரனினதும் படத்தை கழுத்தில் தொங்கவிட்டேன் (புளட்டில் நான் பகுதி 18) " தொடர்புடையது இந்த விவாதம். ரெசோ மாணவர் அமைப்பு புளட்டின் அரசியல் பாதையை மறுதலித்து வந்தது. புளட்டின் உட்படுகொலைகளையும்,  மக்கள் விரோத அரசியலையும், அணிகளிடையே அம்பலப்படுத்தியது. இப்படிப் போராடிய ஒரு கட்டத்தில், பின்தளத்துக்கு சென்று முகாம்களிலுள்ள பயிற்சி பெறும் போராளிகளின் நிலவரங்களையும் அறிய வேண்டும் என முடிவெடுத்தது. அதன் பலனாய் சில மாணவரமைப்பு பிரதிநிதிகள் இந்தியா சென்று வருவதாக எடுத்த முடிபின் அடிப்படையிலேயே, அந்தக் குழுவில் நான் என்னை வலிந்து இணைத்துக் கொண்டேன். இது எனது கடமையுமாக எனக்குப்பட்டது.

Last Updated on Monday, 30 August 2010 20:35
 
தோழர் ஸ்டாலின் எவ்வாறு விமர்சிக்கப்பட வேண்டும்?, ஸ்டாலின் பிரச்சனை பற்றி எவ்வாறு அணுக வேண்டும்? PDF Print E-mail
அரசியல்_சமூகம் - விருந்தினர்
பதிவேற்றியது தமிழரங்கம்   
Monday, 30 August 2010 06:14

மாபெரும் தோழர் ஸ்டாலின் அவர்களை மறுதலித்து சவக்கிடங்கில் இருந்த டிரட்ஸ்கியவாதிகளுக்கு குருசேவ் உயிரூட்டினார். அன்று குருசேவ் கும்பல்களும் டிராட்ஸ்கியவாதிகளும் ஸ்டாலின் மீது எவ்வளவுதான் அவதூறுகளை அள்ளி வீசியபோதும் உலகெங்குமுள்ள உண்மையான மார்க்சிய-லெனினியவாதிகளின் மனங்களில் இருந்து தோழர் ஸ்டாலின் அவர்களை அகற்ற முடியவில்லை.

Last Updated on Monday, 30 August 2010 06:25
 
மகிந்தாவின் குடும்ப சர்வாதிகார பாசிச ஆட்சியை தொடர, முஸ்லீம் காங்கிரஸ் தூக்குக்காவடி எடுக்கின்றது PDF Print E-mail
பி.இரயாகரன் - சமர் - 2010
பதிவேற்றியது பி.இரயாகரன்   
Saturday, 28 August 2010 08:43

தேர்தல் "ஜனநாயகம்" எவ்வளவு கேலிக்குரியது என்பதை, இலங்கை சர்வாதிகார ஆட்சியாளர்கள் நிறுவி வருகின்றனர். மக்கள் வாக்களிப்பது என்பது, எவ்வளவு முட்டாள் தனம் என்பதையும், அரசியல்வாதிகளின் நடத்தைகள் எடுத்துக் காட்டுகின்றது. மகிந்த தொடர்ந்து தான்தான் அடுத்த ஆட்சியாளன் என்பதை முன்கூட்டியே முடிவெடுத்துக் கொண்டு, அரசியல் அமைப்புச் சட்டத்தையே மாற்றுகின்றான். இங்கு மக்கள், மக்களின் வாக்கு என்பதெல்லாம் வெறும் தூசு. பாராளுமன்ற ஜனநாயகத்தில், இது விபச்சாரம் செய்யத்தான் லாயக்கு.

Last Updated on Saturday, 28 August 2010 08:46
 
'தேவன் இல்லை - ஆன்மா இல்லை -இயேசுவே .... நீரும் இல்லை" PDF Print E-mail
புதிய கலாச்சாரம் - 2007
பதிவேற்றியது தமிழரங்கம்   
Saturday, 27 October 2007 07:48

"பதில் கிடைக்காத கேள்விகள் பல எனக்குள் வாழ்கின்றன தேவதூஷணமாகிவிடும் என்பதால் அவற்றை வெளியிட அஞ்சுகிறேன் ஒருவேளை கடவுள் இருந்தால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என் சிந்னைகளை சொர்க்கத்தை நோக்கி எழுப்ப முயல்கிறேன் அங்கோ தண்டிக்கும் வெறுமை அந்தச் சிந்தனைகள் கூரிய கத்திகளாய்த் திரும்ப வந்து என் இதயத்தைக் கிழிக்கின்றன தேவன் என்னை நேசிப்பதாகச் சொல்கிறார்கள் இருப்பினும் எதார்த்தத்தில் இருளும் உணர்ச்சியின்மையும் வெறுமையும் என்னுள் நிறைந்து மேலோங்கியிருப்பதால்

Last Updated on Friday, 27 August 2010 06:18
 
கற்றன் நாசனல் வங்கி நடவடிக்கையில் நீ பங்கு பற்றினாயா? யார் இதைச் செய்தனர்? பணம் எங்கே? (வதைமுகாமில் நான் : பாகம் - 33) PDF Print E-mail
பி.இரயாகரன் - சமர் - 2010
பதிவேற்றியது பி.இரயாகரன்   
Thursday, 26 August 2010 06:21

மாத்தையா உறுமியபடி தொடர்ந்து தாக்கினான். புலிகள் விடை தேடிய பல தொடர் கேள்விகள் கேட்டனர். கற்றன் நாசனல் வங்கி நடவடிக்கையில் நீ பங்கு பற்றினாயா? யார் இதைச் செய்தனர்? பணம் எங்கே? என்றான். நானோ இதுபற்றிய விபரங்கள் எனக்கு எதுவும் தெரியாது என்றேன்.

Last Updated on Thursday, 26 August 2010 06:25
 
ரெலோ இயக்கத்தில் இணையும் பிரபாகரன் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம் 24) PDF Print E-mail
அரசியல்_சமூகம் - ஐயர்
பதிவேற்றியது தமிழரங்கம்   
Tuesday, 24 August 2010 18:41

பிரபாகரன் குழுவில் அவரோடிருந்த அனைத்து உறுப்பினர்களும் மத்திய குழு ஒன்றை அமைப்பதற்கான முடிவிற்கு வருமாறு அவரை வற்புறுத்துகின்றனர். மத்திய குழு அமைப்பது என்பது இயக்கத்தின் இராணுவ அரசியலுக்கு எதிரானது என்ற கருத்தில் பிரபாகரன் மிகவும் உறுதியாயிருக்கின்றார். இதே வேளை குட்டிமணி தங்கத்துரை போன்றோர் தமது தொழிலை மட்டுப்படுத்திக்கொண்டு அரச எதிர்ப்பு இராணுவ நடவடிக்கைகளில் தமது கவனத்தைக் குவிக்கின்றனர். அப்போது அவர்கள் தமிழீழ விடுதலை இயக்கம் (TELO) என்ற அமைப்பாக உருவாகியிருந்தனர் என அறிந்திருந்தோம்.

Last Updated on Tuesday, 24 August 2010 18:47
 
லால்கர் போராட்டமும் அதன் படிப்பினைகளும் – பாஸ்கர் PDF Print E-mail
அரசியல்_சமூகம் - விருந்தினர்
பதிவேற்றியது தமிழரங்கம்   
Monday, 23 August 2010 18:51

மக்கள்திரள் பங்கேற்பை மறுக்கும் எந்தவொரு போராட்டமும் ஒழிக்கப்பட்டுவிடும் என்பதற்கு அண்மைய எடுத்துக்காட்டுகள் கண்ணெதிரே இருக்கின்றன. ஒன்று ஈழம், மற்றொன்று லால்கர்.

Last Updated on Monday, 23 August 2010 21:01
 
மனிதர்களால் மனிதர்களுக்குத் தரப்படும் கொடுமை - செய்தியும் செய்திக்கண்ணோட்டமும் 28-08-2010 PDF Print E-mail
அரசியல்_சமூகம் - அகிலன்
பதிவேற்றியது தமிழரங்கம்   
Tuesday, 31 August 2010 07:14

மனிதர்களால் மனிதர்களுக்குத் தரப்படும் கொடுமைதான்  ……

இன்றைய காலம் வரை நீடித்து வருகிறது

உலக மனிதநேய தினம்    World Humanitarian Day-

உலக மனிதநேய தினம் World (Humanitarian Day WHD). ஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதம் 19ம் திகதி அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. உலகளாவிய ரீதியில் யுத்தம்இ இயற்கை அனர்த்தங்கள், நோய், போஷாக்கின்மை போன்றவற்றால் பாதிக்கப்பட்ட பல இலட்சம் மக்களை நினைவுகூரும் வகையிலும்இ, துன்பத்திலிருந்து விடுவிக்கப் படுவோருக்காகப் பணியாற்றுவோர் மற்றும் இப் பணிகளின் போது கொல்லப்பட்டோர்இ காயமடைந்தோர் ஆகியோரையும் நினைகூரும் வகையிலும் இத்தினத்தைஅனுஷ்டிக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

Last Updated on Tuesday, 31 August 2010 07:20
 
தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கு PDF Print E-mail
அரசியல்_சமூகம் - கலகம்
பதிவேற்றியது தமிழரங்கம்   
Monday, 30 August 2010 18:51

2000ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ம் தேதி இரவு டிவியைப் பார்த்த எனக்கு பேரதிர்ச்சி. தர்மபுரி இலக்கியம்பட்டியில் சுற்றுலாவுக்கு வந்த கோவை வேளாண் பல்கலைகழக மாணவ, மாணவிகள் வந்த பேருந்து அதிமுக குண்டர்களால் எரிக்கப்பட்டது. அப்போது பேருந்தில் இருந்த 3 மாணவிகளையும் வேண்டுமென்றே திட்டமிட்டு கொளுத்தி கொன்று போட்டார்கள் அந்த அதிமுக பாசிஸ்டுகள்.

Last Updated on Monday, 30 August 2010 18:57
 
நான் மத்தியகுழு உறுப்பினர் என்பதை தெரிந்து கொண்டு, தகவல்களை கோரித் தாக்கினர் (வதைமுகாமில் நான் : பாகம் - 34) PDF Print E-mail
பி.இரயாகரன் - சமர் - 2010
பதிவேற்றியது பி.இரயாகரன்   
Sunday, 29 August 2010 07:04

புலிகள் தாம் தெரிந்து கொண்ட மார்க்சியத்தை, தங்கள் எதிர்ப்புரட்சிக்கு ஏற்ப பயன்படுத்தத் தொடங்கினர். மாத்தையா தொடர்ச்சியான கேள்விகளை, ஜனநாயக மத்தியத்துவத்தை அரசியல் ரீதியாக எடுத்துக்காட்டி தரவுகளைக் கோரினான். நான் அதீத ஜனநாயகத்தை அடிப்படையாக வைத்து, அவர்களின் கேள்விகளை எதிர்கொண்டு வேகமாக சந்தேகப்படாத வகையில் பதிலளித்தேன். கற்பனைப் பெயர்களைக் கொண்டும், அவர்கள் நன்கு அறிந்த அவர்கள் தேடுகின்ற நபர்களைக் கொண்டும் பதிலளித்தேன். இதன் மூலம் எனக்குத் தெரியாது என அனைத்தையும் மறுத்தேன்;. நான் பகிரங்கமாக, மக்கள் மத்தியில் வேலை செய்யும் உறுப்பினர் என்றேன். அப்படித்தான் அன்று மக்கள் மத்தியில் மிகப் பகிரங்கமாக வேலைசெய்தேன். புலிகள் அறிய விரும்பிய, கைப்பற்ற விரும்பிய பணம், இராணுவ உபகரணங்கள் என் பொறுப்பில், என் கண்காணிப்;பில் தான் இருந்தது. நான் இராணுவக் குழு உள்ளிட்ட தளத்தின் நிதி மற்றும் இராணுவ உபகரணங்களுக்கு கூட பொறுப்பாக இருந்தேன். 

Last Updated on Sunday, 29 August 2010 07:09
 
மிருகபலி மூட நம்பிக்கையாம், சரி உனது வழிபாடு என்ன? அறிவு பூர்வமானதா!? சரி எப்படி!? PDF Print E-mail
பி.இரயாகரன் - சமர் - 2010
பதிவேற்றியது பி.இரயாகரன்   
Friday, 27 August 2010 08:09

மிருகபலி "மூடநம்பிக்கை" என்று சொன்னது ஆறுமுகநாவலர் வழிவந்த, யாழ் பார்ப்பனிய வெள்ளாள இந்துக்கள். மாட்டு இறைச்சியை தின்னாத, மூடநம்பிக்கையை கொண்ட இந்துக் கூட்டம். இன்று யாழ் மக்களில் பெரும்பான்மையானவர்கள், மாட்டு இறைச்சியை உண்ணுகின்றனர். இதற்கு வெளியில் சாதியம் பேசி, மத கலாச்சாரம் பேசிய ஆறுமுகநாவலரின் வாரிசுகள் தான், மிருக வழிபாட்டு உரிமையை தடுக்க முனைகின்றது. சிலாபம் முன்னேஸ்வர கோயியில் நடந்த மிருக பலியிலான வழிபாட்டு உரிமையை தடுக்க முனைந்த கூட்டம், இதை மூட நம்பிக்கை என்றனர். மிருக வதை சட்டத்தையும் கையில் எடுக்க முனைந்தனர்.

Last Updated on Friday, 27 August 2010 08:12
 
‘புனிதமும்’ வக்கிரமும்: திருச்சபையின் இருமுகங்கள் ! PDF Print E-mail
புதிய கலாச்சாரம் - 2009
பதிவேற்றியது தமிழரங்கம்   
Monday, 29 June 2009 05:26

இந்தியாவின் கிறித்தவப் பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் எண்ணிக்கையில் அறுபது சதவீதத்தை அளிக்கும் கேரளாவில் அண்மையில் வெளிவந்த ஒரு புத்தகம் கிறித்தவ உலகில் ஒரு பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கின்றது. ஆமென் ஒரு கன்னியாஸ்திரியின் தன் வரலாறு என்ற அந்த நூல், 33 ஆண்டுகள் கன்னியாஸ்திரியாக இருந்து பின்னர் சபையிலிருந்து விலகிய ஜெஸ்மி என்ற 53 வயது சகோதரியால் எழுதப்பட்டது.

Last Updated on Friday, 27 August 2010 06:17
 
ஜெர்மனிய இலங்கை தூதரகத்தின் மூடிமறைத்த சதியில், நெடுந்தீவு மக்களுக்கு உதவும் அமைப்பு அம்பலமானது PDF Print E-mail
அரசியல்_சமூகம் - புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
பதிவேற்றியது தமிழரங்கம்   
Wednesday, 25 August 2010 06:44

பேரினவாத பாசிச அரசு,  புலத்து தமிழ் மக்கள் மத்தியில் ஊடூருவும்  சதியொன்று,  அண்மையில் அம்பலமாகியுள்ளது. நெடுந்தீவு மக்கள் தங்கள் பிரதேசத்தை அபிவிருத்தி செய்யவென, பல்வேறு புலம்பெயர் நாடுகளில் தங்களை ஒருங்கிணைத்து சுயாதீனமாக தனித்தனியாக செயல்பட்டு வந்தனர். இந்த சங்கங்களை குறிவைத்து, இலங்கைத் தூதரகத்தினூடாக சிலர் செயல்பட்டது பாரிசில் வைத்து அம்பலமானது.

Last Updated on Wednesday, 25 August 2010 06:46
 
நம்பிக்கைக்குரிய ஆளாக நடிக்க, சுந்தரத்தினதும் உமாமகேஸ்வரனினதும் படத்தை கழுத்தில் தொங்கவிட்டேன் (புளட்டில் நான் பகுதி 18) PDF Print E-mail
அரசியல்_சமூகம் - சீலன்
பதிவேற்றியது தமிழரங்கம்   
Monday, 23 August 2010 21:29

கமாண்டோ பயிற்சியை முடிந்ததும் நாம் வேறு முகாம் ஒன்றிற்கு மாற்றப்பட்டோம். அது பீ காம்பிற்கு அருகாமையில் ஒரத்தநாடு என்ற இடத்தில் இருந்தது. இங்கு பயிற்சி என்பது எமக்கு இருக்கவில்லை. சுயமாக பயிற்சிகளைச் செய்வதுடன் சில விசேட பயிற்சிகளும் வழங்கப்பட்டன. அங்கு கராட்டி, லொக்ஸ், சிலம்படி போன்றவை பயிற்றுவிக்கப்பட்டன. இக்காலத்தில் நான் உமாமகேஸ்வரனின் நம்பிக்கைக்கு பத்திரமானவர் என்ற நடிப்பை மிகவும் கவனமாக செய்து வந்தேன். நானும் விஜியும் ஒரு முகாமில் இருந்தாலும் இருவரும் அதிகம் கதைப்பது கிடையாது. மறைமுகமாக எமக்குள் சம்பாசணைகள் நடைபெற்றும். வெளிப்படையாக கதைப்பது இல்லை. ஒரு சில காலங்களில் விஜி பயிற்றுனராக வேறு ஒரு முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். நான் மாத்திரம் அங்கிருந்ததால் என்னால் எளிதாக இவர்களுக்கு நம்பிக்கைக்கு உரியவனாக நடிக்க முடிந்தது. அழகனுடன் (அனைத்து முகாம்களின் மருத்துவப் பொறுப்பாளர்) எனக்கு தொடர்புகள் ஏற்பட்டது. இவர் மூலம் நானும் இம்முகாமில் இருந்து மாறி வேறு முகாமிற்கு செல்ல முயற்சிகளை மேற்கொண்டேன். எமது முகாமில் ஒரு வழக்கம் காணப்பட்டது. அது சுந்தரத்தின் படத்தையும் உமாமகேஸ்வரனின் படத்தையும் கழுத்தில் தொங்கவிடுவது. இதை நானும் செய்தால் எனக்கு பாதுகாப்பு என்பதாலும், இவர்களின் நம்பிக்கைக்குரிய ஆளாக மாற முடியும். இதனால் கழுத்தில் தொங்கவிடும் படங்களை கொண்ட சங்கிலியினை, அழகனின் உதவியுடன் நான் பெற்றுக் கொண்டேன். என்னை அவர்கள் நம்பவும் தொடங்கினர்.

Last Updated on Monday, 23 August 2010 21:35
 
More Articles...
«StartPrev1234NextEnd»

Page 1 of 4

ஆங்கிலம் தமிழ்மொழி மூலமாக

Tamil 10 top blogs
TamilNotes
Top Tamil Blogs by Tamilers

Tamil Top Blogs

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

Copyright © 2010 தமிழரங்கம். All Rights Reserved.
Joomla! is Free Software released under the GNU/GPL License.
 

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி- செய்திகளின் தொகுப்பு

< September 2010 >
Mo Tu We Th Fr Sa Su
    1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30      
Banner