பி.இரயாகரன் - சமர்

முறிந்த பனை நூலின் சட்ட ரீதியான உரிமை, எனது தகவல் (எனக்கு ஆங்கில மொழி பேசவோ - எழுதோவோ தெரியாத குறைபாட்டால் இது ஏற்பட்டது. இந்தத் தவறு தெரிந்து கொள்ளாது மூலப்பிரதியை பிரசுரித்ததும் நானே) தவறானது. இந்த நூல் அமெரிக்க காங்கிரஸ் நூலகத்தில் பதிவு செய்யப்பட்டது என்பதே சரியானது.

எனது இந்தத் தவறு எந்த விதத்திலும், அமெரிக்க அதிகார வர்க்க நலனுக்காகவே, நூல் வெளிவந்தது என்ற உண்மையை மறுதளித்துவிடவில்லை. வர்க்க அடிப்படையில், மத அடிப்படையில், ஏகாதிபத்திய நலன்கள் அடிப்படையில், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அரசியல் அடிப்படையில் ரஜனியை முன்னிறுத்திக் கொண்டாடும் விசுவாசிகளின் புலம்பலுக்கு எதிரானதே, கட்டுரையின் சாரம். சட்டரீதியான தவறுக்கு இலங்கை அமெரிக்கன் மிசனரியின் வழிபாட்டின் அங்கமான பாவமன்னிப்புககுரியதாக இருந்தாலும், இதன்பின் இருக்கின்ற ஏகாதிபத்திய கடவுள் பொய்யாகிவிடுவதில்லை.


மேலும் படிக்க: விசுவாசிகளின் புலம்பல்கள் : முறிந்தபனை நூல் யாருக்காக எழுதப்பட்டது? 

1970 களில் தேர்தல் அரசியலில் எதிர்த்துப் போட்டியிட்டவர்களைச் சுட்டு கொன்றவர்களே, குண்டு வீசி கர்த்தால்களையும் நடத்தினர். இந்த தனிநபர் பயங்கரவாதத்துக்கு அஞ்சி ஒடுங்கிய மக்களை முன்னிறுத்தி ஹர்த்தால்களே, புலிக்கு பின்பாக தொடருகின்றது. தொடரும் அச்சமே, இன்றைய  ஹர்த்தால்கள். ஹர்த்தாலை அறிவிப்பவர்கள், முந்தைய பயங்கரவாதத்தை சார்ந்து முன்னிறுத்துகின்றனர்.

புலியை துதிபாடும் இந்த அரசியல் லும்பன்களின் கோமாளித்தனங்களுக்கு, மக்கள் உணர்ச்சியற்ற ஜடங்களாகி அடங்கிப் போகின்றனார். ஏன் எதற்கு சோலி என்று, ஒடுங்கி ஒதுங்கி விடுகின்றனர். பகுத்தறியும் சமூக நோக்கோ - அரசியல் உணர்வோ இன்றி, ஹர்த்தால்கள் வெற்றுச்சடங்காக, சம்பிரதாயமாகிவிடுகின்றது.

இதுதான் தமிழ்மக்களின் இன்றைய அவலநிலை. அரசியல் ஒரு பிழைப்பாக, மக்களை ஏமாற்றி விடுவதே, அரசியல் வியாபாரமாகி விடுகின்றது. புலம்பெயர் நாடுகளில் இருந்து பணத்தை பெற்று சொகுசாக வாழ, நிகழ்ச்சிநிரல் தேவைப்படுகின்றது. 

மேலும் படிக்க: அரசியல் லும்பன்கள் நடத்தும் ஹர்த்தால்

1970 களில் தேர்தல் அரசியலில் எதிர்த்துப் போட்டியிட்டவர்களைச் சுட்டு கொன்றவர்களே, குண்டு வீசி கர்த்தால்களையும் நடத்தினர். இந்த தனிநபர் பயங்கரவாதத்துக்கு அஞ்சி ஒடுங்கிய மக்களை முன்னிறுத்தி ஹர்த்தால்களே, புலிக்கு பின்பாக தொடருகின்றது. தொடரும் அச்சமே, இன்றைய  ஹர்த்தால்கள். ஹர்த்தாலை அறிவிப்பவர்கள், முந்தைய பயங்கரவாதத்தை சார்ந்து முன்னிறுத்துகின்றனர்.

புலியை துதிபாடும் இந்த அரசியல் லும்பன்களின் கோமாளித்தனங்களுக்கு, மக்கள் உணர்ச்சியற்ற ஜடங்களாகி அடங்கிப் போகின்றனார். ஏன் எதற்கு சோலி என்று, ஒடுங்கி ஒதுங்கி விடுகின்றனர். பகுத்தறியும் சமூக நோக்கோ - அரசியல் உணர்வோ இன்றி, ஹர்த்தால்கள் வெற்றுச்சடங்காக, சம்பிரதாயமாகிவிடுகின்றது.

இதுதான் தமிழ்மக்களின் இன்றைய அவலநிலை. அரசியல் ஒரு பிழைப்பாக, மக்களை ஏமாற்றி விடுவதே, அரசியல் வியாபாரமாகி விடுகின்றது. புலம்பெயர் நாடுகளில் இருந்து பணத்தை பெற்று சொகுசாக வாழ, நிகழ்ச்சிநிரல் தேவைப்படுகின்றது. 

மேலும் படிக்க: உலக மேலாதிக்கத்துக்கு தலைமை தாங்கும் அமெரிக்காவின் மூக்கை உடைத்திருக்கின்றது ஹமாஸ்

ரஜனி திரணகமவை முன்னிறுத்தி, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராகத் தொடரும் அரசியல்

புலிப் பாசிட்டுக்களால் கொல்லப்பட்ட ரஜனி திரணகமவை முன்னிறுத்தி செய்யப்படும் போலி முற்போக்கு அரசியல், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரானது. ஒடுக்கும் அரசியலை முன்னிறுத்தி, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கடந்தகால போராட்டங்களையும் தியாகங்களையும் தொடர்ந்து மறுதளிக்கின்றனர். 

தேசியத்துக்காக தாமே போராடியதாக புலிகள்  எப்படிக் கட்டமைத்தனரோ, அதேபோலவே இந்த ஜனநாயகம் -  மனிதவுரிமை குறித்த இவர்களது பித்தலாட்டங்களும். இதை ரஜனி திரணகம மூலம் மேடையேற்றுவதன் மூலம், மக்களுக்காக போராடிய அரசியலும், வரலாறுகளும், தியாகங்களும் காணாமலாக்கப்படுகின்றது.

மேலும் படிக்க: ரஜனி திரணகமவை முன்னிறுத்தி, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராகத் தொடரும் அரசியல்

மேற்கு ஏகாதிபத்தியங்களின் சட்டவிரோதமானதும், மாபியாத்தனமானதுமான பொருளாதாரத் தடைகளைச் சந்திக்கும் சின்னச் சிறிய நாடுகளான கியூபா, வடகொரியா, வெனிசுலா, ஈரான், சிரியா .. போன்ற நாடுகள், இன்னமும் உலகில் நீடித்து நிலைத்து இருக்க முடிகின்றது. இன்னும் இது போன்று பல நாடுகளும், பல உதாரணங்களும் உண்டு. இந்த வரிசையில் முள்ளாள் கம்யூனிச சோவியத்தும், சீனாவும் அடங்கும்.

மேலும் படிக்க: தனக்குத் தானே சூனியம் வைத்த ஏகாதிபத்திய பொருளாதாரத் தடை

யுக்ரேன் யுத்தம் ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான கெடுபிடி யுத்தமாக மாறிவிட்டது. நேட்டோவுக்குள் பிளவுடன் கூடிய ஜரோப்பிய ஏகாதிபத்திய மேலாதிக்கம் தவிர்க்க முடியாதாகியிருக்கின்றது. இதுவரை காலம் அமெரிக்காவிடம் இருந்த உலக மேலாதிக்க முடிவுகளை அறிவிக்கும், ஒன்றிணைந்த ஐரோப்பிய ஏகாதிபத்திய முகாம் யுத்தத்தை நவீனமாக்கி - வீரியமாக்கி தன்னை முன்னிலைப்படுத்தி வருகின்றது. இரண்டாம் உலக யுத்தத்தின் பின் nஐர்மனியானது, யுத்தத்தில் ஏற்படுத்திய தீவிர மாற்றத்தை அடுத்து, ருசிய ஆக்கிரமிப்பு படைகளின் பாரிய யுத்தப் பின்னடைவுக்கு காரணமாகி இருக்கின்றது.

மேலும் படிக்க: மூன்றாம் உலக யுத்தத்துக்கு தயார் செய்யும் ஏகாதிபத்தியங்கள்

இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னான மூலதனங்களுக்கு இடையிலான மறைமுகமான ஏகாதிபத்திய யுத்தங்கள், இன்று நேரடி யுத்தமாக மாறுகின்ற புதிய கட்டத்துக்குள் உலகம் சுருங்கி வருகின்றது.

யுக்ரேனில் தொடங்கி இருக்கும் யுத்தம் விரைவில் சீனக் கடலிலும் எதிர்பார்க்கலாம். தாய்வான் மீதான சீனா யுத்தத்தை தூண்டும் வண்ணம், அமெரிக்க தலைமையிலான நேட்டோ, யுத்தத்தைத் தூண்டி, பொது அமைதியைக் குலைத்து வருகின்றது.

இதுவரை நிலவிய அமைதியான நவகாலனிய மூலதனச் சுரண்டலுக்குப் பதில், கெடுபிடியான யுத்தங்கள் மூலம் - காலனிகளை உருவாக்கும் யுத்தத்தை நோக்கி ஏகாதிபத்தியங்கள் பயணிக்கின்றது.

யுக்ரேன் யுத்தத்தை தவிர்த்திருக்க முடியாதா!?

 

மேலும் படிக்க: யுக்ரேன் ஆக்கிரமிப்பு-ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான யுத்தம்

வர்க்கமற்ற பொதுவுடமைச் சமுதாயத்தை தன் இலக்காக்கிக் கொண்டு சிந்தித்தவன். உணர்ச்சியின் பிளம்பாக எப்போதும் கேள்விகளுடன் வாழ்ந்தவனே எங்கள் விஜயன், சாதியம், இனவாதம், மதவாதம், பிரதேசவாதம், நிறவாதம் .. என்று எல்லா மனித விரோத குறுகிய சமூக மனப்பாங்குகளுடனும், எப்போதும் முரண்பட்டு நின்றவன். அதற்காக நடைமுறையிலும் போராட முற்பட்டவன். போராடுவதற்காக அமைப்பைக் கட்ட வேண்டும் - ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும் என்பதில், தோளோடு தோள் நின்றவன் - இன்று அவன் எம்மோடில்லை.

மேலும் படிக்க: ஒடுக்கப்பட்டவர்களுக்காக வாழத் துடித்தவன் எங்கள் விஜயன்

தூக்குமேடையில் தூக்கு போடும் அலுக்கோசுகள் போன்றே, பிழைப்புவாத ஈழ ஆதரவு தமிழக கும்பல்களின் செயற்பாடுகளும், சிந்தனைகளும் குறுகிய வழிபாட்டை ஊக்குவிக்கின்றனர். இதன் மூலம் புலிப் பாசிசத்தின் கீழ் உருவான ஈழத்து தற்குறிகளிடம் இருந்து பணத்தைக் கறக்கவும், அதேநேரம் சொந்த மக்களை ஏமாற்றிப் பிழைக்கவும் – தமிழகத்தில் புலி ஆதரவு கும்பல்கள் இயங்குகின்றது. "மேதகு" என்ற புரட்டு, இப்படித்தான் புளுத்து வெளிவந்திருக்கின்றது.

"திருப்பி அடித்தால்" அது விடுதலைப் போராட்டமாகிவிடும், "துரோகி"யாக்கி கொன்றால் மானிட விடுதலை கிடைத்துவிடுமா? இப்படி நம்புகின்ற, நம்பக் கோருகின்ற பகுத்தறிவற்ற அலுக்கோசுகளே, "மேதகு" மூலம், தம்மைத் தாம் முன்னிறுத்திக் கொள்கின்றனர்.

கடத்தல்காரர்கள், குற்றவாளிகளுடன் சேர்ந்து செய்த தனிநபர் பயங்கரவாதம் மூலம், ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்தை நடத்த முடியும் என்று, அலுக்கோசுகளால் மட்டுமே சொல்ல முடியும். அப்படி சொல்லப்பட்டது தான் "மேதகு". தோற்றுப் போன அரசியல் வழிமுறையை சரியென்று புனைய, சம்பவங்களையும் – வரலாறுகளையும் திரிக்கின்றனர்.

மேலும் படிக்க: அலுக்கோசுகளின் சினிமா தான் "மேதகு"

 தமிழினவாத அரசியல் வரலாறே புரட்டலானது. 1948 களில் மலையக மக்களின் பிரஜாவுரிமை பறிப்பானது வர்க்க ரீதியானதல்ல, இனரீதியானதே என்று தமிழினவாதம் மூலம் திரித்து உருவாக்கிய கட்சியே தமிழரசுகட்சி. தேர்தல் மூலம் இடதுசாரிகளின் ஆட்சியதிகாரம் இலங்கையில் ஏற்பட்டு விடும் என்ற சுரண்டும் வர்க்கத்தின் அச்சமே, மலையக மக்களின் பிரஜாவுரிமையைப் பறிக்க காரணமாகியது. இந்த வர்க்க அரசியலை மூடிமறைத்து வர்க்க அரசைப் பாதுகாக்கவே, தமிழ் சுரண்டும் வர்க்கம் தமிழினவாதத்தை முன்வைத்தது. இதன் மூலம் தமிழினவாதத்தை வடகிழக்கில் விதைத்தனர்.

இப்படி தமிழினவாதத்தை உருவாக்கியவர்கள், தமிழ் மக்களை எப்போதும் சிங்கள மக்களுக்கு எதிரானவராக வைத்திருப்பதையே கொள்கையாகவும், நடைமுறையாகவும் கொண்ட அரசியலையே முன்வைத்தனர். தேர்தல் அரசியலில் வெற்றி பெற, இனவாதம் தவிர்ந்த வேறு கொள்கை எதுவும் இவர்களிடம் இருக்கவில்லை.

மேலும் படிக்க: வெள்ளாளியக் கல்வியைப் பாதுகாக்க முனைந்த தமிழினவாதம் - யாழ் பல்கலைக்கழகப் போராட்டங்கள் - 14

கடந்த காலத்தில் போட்டுத் தள்ளியவர்கள் முன்வைத்த அரசியல் அவதூறுகளான பிரச்சார அரசியல். அன்று அவதூறுகள் மூலம் யாரை, ஏன், எதற்காக போட்டுத் தள்ளினர் என்பதை ஆராய்ந்தால், இன்றைய அவதூறு அரசியலை இனம் கண்டு கொள்ளமுடியும்.

முன்வைக்கும் அவதூறுகளுக்கு ஆதாரம் கோட்டால், ஒருநாளும் பதில் இருக்காது. கிட்லரின் பிரச்சார மந்திரி கோயபல்ஸ் கூறியது போல், ஒரு பொய்யை மீள மீளக் கூறுவதன் மூலம் பொய்யை உண்மையாக்குவது. இரண்டாம் உலக யுத்தத்திற்கு இப்படித்தான் மக்களை தயார்ப்படுத்தினார்கள். ஜெர்மனிய பாராளுமன்றத்தை எரித்த நாசிகள், அதை பிறர் மீது குற்றம் சாட்டி ஒடுக்கினர்;. இது வரலாறு.

ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை ஒடுக்கியபடி அன்னிய சக்திகளின் கைப்பொம்மையாக இயங்கிய இயக்கங்கள், தாம் அல்லாத மற்றைய இயக்கங்கள் பற்றியும், தம் இயக்கத்திற்குள் கேள்வியை எழுப்புபவர்களுக்கு எதிராக, பிரச்சார அரசியலாக செய்தது அவதூறுகளே. அதில் ஊறித் திளைத்தவர்கள், இன்றும் அதையே அரசியலாக கட்டமைக்கின்றனர்.

தமிழ் தேர்தல் அரசியலில் "துரோகி" என்று, தாம் அல்லாத மாற்று அரசியலை அவதூறு மூலம் முத்திரை குத்திய அரசியலே, இன்று வரை காணப்படுகின்றது. இது எமது சமூகத்தில் ஜனநாயக மறுப்பிற்கான அரசியல் சிந்தனைமுறையாக காணப்படுகின்றது. அன்று தமிழ் தேசிய தேர்தல் அரசியலில் தமது போட்டியாளரை ஒழித்துக்கட்ட கையாண்ட அரசியல் "துரோகி" என்ற, அவதூறு அடையாளம். இதுதான் பின்னால் இயக்க அரசியலிலும் கையாளப்பட்டது. இன்றுவரை தமிழ் அரசியலை வழிநடத்துவதும், இந்த அரசியல் தான். தமிழ் ஊடகவியல் கூட இப்படித்தான் புளுத்துக் கிடக்கின்றது.

மேலும் படிக்க: அவதூறுவாதிகளின் அரசியலும் - அவதூறும், ஒரு நாணயத்தின் இரு பக்கங்களே

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

Load More