தோழர் ஏசு சிலுவையில் அறையபடுவதற்க்காக இழுத்துச் செல்லப்படுகிறார். அந்த காட்சியை பார்த்த ஜெருசலேமின் பெண்கள் கண்ணீர் சிந்தி அழுகின்றனர். அப்பொழுது தோழர் ஏசு அவர்களை பார்த்து " நீங்கள் எனக்காக அழவேண்டாம், மாறாக உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்" என்றார்.
கிறிஸ்தவ மதத்தில் இதற்கு பல அர்த்தங்கள் சொல்லப்பட்டாலும் என்னை பொறுத்தவரை ஒரே அர்த்தம்தான். ஏசு பெண்களை நம்பினார். சமூகநீதிக்கு பெண்களால் மட்டுமே எந்த வித பாரபட்சமில்லாமல் தைரியமாகவும், தெளிவாகவும் போராட முடியும் என்பதுதான் அவரின் கூற்று.