"கோத்தாவின் யுத்தம்" ஒரு நல்வரவு - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் : 07
(தமிழ்) பிரிவினைவாதத்துக்கு எதிரான (பேரினவாத) அரசு எதிர்ப்பிரச்சாரத்தை முறியடிப்பது எப்படி? சிங்கள மக்களும், சிங்களப் பாட்டாளி வர்க்கமும் பதிலளிக்க வேண்டிய முக்கிய புள்ளி இதுதான். அரசின் பிரச்சாரத்துடன் சேர்ந்து பயணிப்பதா, அல்லது எதிர்த்துப் பயணிப்பதா? எதிர்த்து என்றால் எப்படி? சேர்ந்து என்றால் எப்படி? "பிரிவினைவாதம்" பிரிவினை வாதிகளின் கோசம் மட்டுமல்ல, பிரிவினைவாதத்துக்கு எதிரான அரசின் கோசமாகவும் இருக்கின்றது.
இந்தப் பின்னணியில் தான் பிரிவினைவாதத்துக்கு எதிரான பேரினவாதக் கோசத்துடன் "கோத்தாவின் யுத்தம்" ஒரு நல்வரவாக வெளிவந்திருக்கின்றது. சிங்கள மக்கள் இதற்கு எதிராகப் பதிலளிக்க வேண்டும். சிங்கள மக்களை இனவாதியாகக் காட்ட முனைகின்றது. இனவாதியாக்கவும் முனைகின்றது. "கோத்தாவின் யுத்தம்" என்ற நூலும், யுத்த "வெற்றி கொண்டாட்டங்களை" எதிர்த்து வெற்றி கொள்வதே, சிங்கள மக்கள் முன்னுள்ள அரசியல் பணி. சிங்களப் பாட்டாளி வர்க்கத்தின் முன் உள்ள அரசியல் சவால்.