Language Selection

பி.இரயாகரன் -2012

புலியெதிர்ப்பு புலியழிப்பைக் கோரியது போல், இனவெதிர்ப்பு இனவழிப்பைக் கோருகின்றது. புலியெதிரிப்பு அரசியல், புலியில்லாத வெற்றிடத்தில் இன்று இனவெதிர்ப்பு அரசியலாக மாறியிருக்கின்றது. இதை மூடிமறைக்க, குறித்த இனத்தின் உள்ளார்ந்த சமூக முரண்பாடுகளை முன்னிலைப்படுத்தி நிற்கின்றது. இதன் மூலம் தன்னை முற்போக்காகவும், மக்கள் சார்பாகவும் காட்டிக் கொள்ள முனைகின்றது. இனத்தின் இருப்பும், இன அடையாளமும் தான், சமூகத்துக்குள்ளான சமூக ஒடுக்குமுறைக்கு எல்லாம் காரணம் என்று கூறி, தாம் போராடத் தடையாக இதுதான் இருப்பதாகக் கூறியும், இனவழிப்பைக் கோருகின்றது. அந்த வகையில் இனவொடுக்குமுறைக்கு உதவுகின்றது.

இதுவே தான் இந்தியாவில் ஏழ்மையை உருவாக்குகின்றது. இது இப்படி இருக்க, இந்த ஏழ்மையை இந்தியாவின் தேசிய "அவமானம்" என்கின்றார் இந்திய பிரதமர். உழைக்கும் மக்களின் உழைப்பைச் சூறையாடி கொழுக்க வைக்கும் உன் கொழுப்புத்தான், தேசிய அவமானமாகும். ஊட்டச்சத்து இன்றி, வருடம் தோறும் இலட்சக்கணக்கில் மரணிக்கின்ற நிலைக்கு யார் காரணம்? அவர்களின் உழைப்பை உறிஞ்சி வாழும் ஒட்டுண்ணி யார்? இன்று 42 சதவீதமான இந்தியக் குழந்தைகள் ஊட்டச்சத்து இன்றி மரணத்துக்கும் வாழ்வுக்கும் இடையில் போராட யார் தான் காரணம்? அவமானம்" என்று கூறுகின்றனரோ, அவரும் அவரின் வர்க்கமும் தான் இதற்கு காரணமாகும். மனித உழைப்பை சுரண்டிக் கொழுக்கும் அட்டைகளாக உள்ள இந்த சமூக அமைப்பும், அந்த அட்டைகளைப் பாதுகாக்கும் அரசமைப்பும் தான் இந்த "தேசிய அவமானத்தை" உருவாக்குகின்றது. உன் நடத்தைக்கு வெளியில், எங்கிருந்துதான், "தேசிய அவமானம்" வருகின்றது.

 

இந்திய மீனவர்கள் இந்திய "எல்லை தாண்டுவது தான்", அவர்கள் மேலான வன்முறைக்கு காரணம் என்று இந்திய மத்திய அரசு மதுரை நீதிமன்றத்தில் கூறியுள்ளது. இப்படி இலங்கைக் கடற்படையின் தொடர்ச்சியான குற்றங்களுக்கு, நீதிமன்றத்தில் விளக்கம் கொடுத்து இருக்கின்றது இந்திய மத்திய அரசு. இந்த வகையில் இந்தக் குற்றத்தை செய்வதற்கான தனது பக்கத் தர்க்கத்தை முன்வைத்ததன் மூலம், இதற்கான தனது ஓத்துழைப்பை நியாயப்படுத்தி இருக்கின்றது. இலங்கைக்கடற்படை எல்லை கடந்து இனப்படுகொலைக் குற்றத்தில் ஈடுபடவில்லை என்றும், எல்லை தாண்டிய குற்றத்தில் ஈடுபடவில்லை என்றும், சுயவிளக்கம் ஒன்றை இந்திய அரசு வழங்கி இருக்கின்றது. மறுதளத்தில் எல்லை தாண்டியதால் தான் இந்த நிலையென்று எடுத்துக் கொண்டால்;, அவர்கள் கொல்வதும் தாக்குவதும் சரியென்ற தர்க்கத்தையும், நியாயப்படுத்தலையும் வழங்கி இருக்கின்றது. எல்லை தாண்டினால் இதுதான் தீர்வா? சர்வதேச சட்டங்கள், மனிதவுரிமை கோட்பாடுகள் அனைத்தையும், மத்திய அரசு தன் காலில் போட்டு மிதித்திருக்கின்றது. அனைத்துக்கும் "எல்லை கடத்தல்" மற்றும் "தடைசெய்யபட்ட வலை"யைத்தான் காரணமாக காட்டியிருக்கின்றது.

"போர்" அறைகூவலும், எச்சரிக்கையும். இப்படி "போர்" க்கான ஒரு புள்ளியில் இரண்டும் சந்திக்கின்றன. இப்படி ஒரே விடையத்தை பேசுகின்றனர். ஒருதரப்பு அறைகூவலாக விட, மறுதரப்பு எச்சரிக்கையை விடுக்கின்றது. இது உண்மை என்றால், தனிநபர் பயங்கரவாதத்தை நடத்தத் தயராகும் இனியொருவின் அறைகூவல் அல்லவா இது!? இதைத்தானா "புலிகள் இரண்டாவது ஆயுதப் போருக்குத் தயாராவதாக" அரச புலானாய்வுத்துறையை மேற்கோள் காட்டி கொழும்பு ஊடகங்கள் எழுதுகின்றன!?

"தமிழ் சமூகத்திற்கும் அதனுடைய சிவில், அரசியல் பிரதிநிதிகளுக்கும் ஒரு வேண்டுகோள்" என்ற தலைப்பில், புலம்பெயர்ந்தவர்கள் உள்ளடங்கிய ஒரு அறிக்கை வெளியாகியிருக்கின்றது. பிபிசி தமிழ் சேவை கூட அதை முன்னிறுத்தி பேட்டி கண்டது. குறிப்பாக இந்த அறிக்கை 1990 களில் புலிகள் வடக்கில் வாழ்ந்த முஸ்லீம் மக்களிடம் இருந்த அனைத்தையும் புடுங்கிவிட்டு துரத்திய முஸ்லீம் மக்களைப் பற்றிய கருசனையின் பெயரில் வெளியாகி இருக்கின்றது. முதலில் இதன் அரசியல் பின்னணியையும், அரசியல் அடிப்படையையும் என்ன என்பதைப் பார்ப்போம்.

 

புத்தாண்டு முதற்திகதி முதல், பிரஞ்சு மக்கள் மீதான புதிய வரிகள். மக்களின் கூலி உழைப்பில் இருந்து, உற்பத்தியில் ஈடுபடாத மூலதனம் 180 கோடி ஈரோவை மேலதிகமாக பிடுங்கும் புதிய அறிவித்தலுடன், மூலதனத்தின் நுகர்வுப் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் பிறக்கின்றது. உணவகங்கள், குளிர்பானங்கள், கட்டிட வேலைகள், புத்தகங்கள், களியாட்ட நிகழ்வுகள், தொலைக்காட்சி, போக்குவரத்து ரிக்கற், தங்குவிடுதிகள் ….. என்ற பல சேவைத்துறை மற்றும் பொருட்கள் மீதான வரி 1.5 சதவீதத்தால் அதிகரிக்கின்றது. இதன் மூலம் வட்டிக்காரர்களுக்கு வட்டியைக் கொடுக்க புதிய வரிகள். பொருளாதார நெருக்கடியின் அரசியல்சாரமே இதுதான்.

குறிப்பு : 01.05.1987 இரவு மீண்டும் கண் கட்டப்பட்டது. மாத்தையா வந்தார். உண்மையை நீர் கூறவில்லை எனவே முகாம் மாற்றப்படும் என கூறினார்.

விளக்கம் : எதையும் நான் கூறாத நிலையில், தொடர்ச்சியாக அடிக்கடி சித்திரவதை செய்யக்கூடிய பாதுகாப்பான இடத்துக்கு மாற்ற முடிவு எடுத்தனர். அத்துடன் தமது சித்திரவதையின் கோர அலறல்கள் மக்களுக்கு கேட்காத அமைதியான பிரதேசத்துக்கு கொண்டு சென்றனர். இந்த வதைமுகாமில் தான், முதன்முதலாக மாத்தையா சித்திரவதைகளில் நேரடியாக ஈடுபட்டான்.

குறிப்பு : 3ம், 4ம் நாளே உன்னுடைய காதலி இன்னார் என வந்து சொல்லப்பட்டது.

மார்க்சியம் முன்னேறிய பிரிவைக் கடந்து நடைமுறை இயக்கமாக மாறாத இலங்கைச் சூழலை பயன்படுத்திக் கொண்டு, பலர் மார்க்சியத்தின் பெயரில் பலவிதமாக பிழைக்கின்றனர். தங்கள் அறிவுசார்ந்த மேலாண்மையைக் கொண்டு, இந்த அரசியல் பொதுவில் அரங்கேறுகின்றது. புலிக்கு பிந்தைய திடீர் இடதுசாரிகளின் ஒரு பிரிவினர் மார்க்சிய சொற்றொடர் மூலமான மூடிமறைத்த சந்தர்ப்பவாதத்தைக் கொண்டு, சர்வதேச புரட்சியாளர்களை ஏமாற்றி மோசடி செய்கின்றனர்.

இப்படி மூடிமறைத்த அபாயகரமான எதிர்ப்புரட்சி பற்றி லெனின் கூறும் போது "உழைக்கும் மக்களுக்கு உடனடியாக வெறுப்பூட்டும், அப்பட்டமான சந்தர்ப்பவாதம் மூடிமறைக்கப்பட்ட சந்தர்ப்பவாதத்தைப் போன்று அபாயகரமானதும் ஊறு விளைவிக்கக் கூடியதும் அல்ல. மூடிமறைக்கப்பட்ட சந்தர்ப்பவாதம் தனது சந்தர்ப்பவாத நடைமுறைக்கு உரிய தருணம் வரவில்லை என்றும் இன்ன பிறவாகும் நிரூபிக்க அடுக்கடுக்காக மார்க்சிய சொற்றொடர்களைப் பயன்படுத்துகிறது" என்றார்.