"இனி ஒருவரையும் சாகவிட மாட்டோம்" வெளியுறவு துறை செயலாளர் நிருபமா ராவ்
கொல்லப்பட்ட தமிழக மீனவர்களை முன்னிறுத்தி அரசியல் பித்தலாட்டங்கள், இலங்கையில் வடக்கு தமிழ் மீனவர்களின் உரிமைப் பறிப்பாக மாறிச்செலுகின்றது. இந்திய மீன்வளம் அழிந்துபோன நிலையில் தமிழக மீனவர்களின் வாழ்வுக்கு வழிகாட்ட வக்கற்ற இந்திய அரசு, மீன்வளத்தை அழிக்கும் பெருமூலதனத்தைக் கொண்ட மீன்பிடியை இலங்கையின் கடல் எல்லைக்குள் திணிக்கின்றது. தமிழினவாதிகள் இதையே மறைமுக அரசியலாகக் கொண்டு, இலங்கை மக்களுக்கு (வடக்கு தமிழ்மக்களுக்கு) எதிரான குறுகிய தங்கள் சுயநல அரசியலை முன்தள்ளுகின்றனர். இந்திய மார்க்சிய லெனினிய குழுக்கள் தமிழினவாதிகளை கடந்து, இதை வழிகாட்ட முடியாது திக்குத் தடுமாறி அங்குமிங்குமாக தடுமாறுகின்றனர்.