குறுந்தேசிய (புலி - கூட்டமைப்பு) அரசியலிலிருந்து மக்களை விடுவிக்க, எதிரியுடன் சேர முடியுமா!?
புலிகள் மட்டும் மக்களின் எதிரியல்ல. அரசும் மக்களின் எதிரி. அரசுடன் சேர்ந்து இயங்கிய முன்னாள் இன்னாள் குழுக்களும் கூட மக்களின் எதிரி. இடதுசாரிய வர்க்க அரசியலை மறுக்கும் வலதுசாரிகள் கூட மக்களின் எதிரி. இந்த உண்மையைக் கடந்து, ஒரு எதிரிக்கு எதிராக மற்றைய எதிரியுடன் கூட்டுச்சேர முடியாது. மக்களின் எதிரிகளின் பின் இருப்பதோ மக்கள் விரோத அரசியல்.
இடதுசாரியத்தின் பெயரில் அரசு அல்லது புலி அரசியலும், இடதுசாரியத்தின் பெயரில் அரசு அல்லது புலி எதிர்ப்பு அரசியலும், வலதுசாரியத்தின் பெயரில் அரசு அல்லது புலி அரசியலும்;, வலதுசாரியத்தின் பெயரில் அரசு அல்லது புலி எதிர்ப்பு அரசியலும் பொதுவில் காணப்படுகின்றது. இந்தத் தரப்புடன் அங்குமிங்குமான கூட்டு அரசியலும், கூட்டுச்செயல்பாடுகள், சுய தணிக்கையுடன் கூடிய அரசியல் முன்னெடுப்புகளும், ஒன்றை மட்டும் குறிப்பாக முன்னிறுத்திய செயல்பாடுகளும், மக்களுக்கு எதிராக வர்க்க அரசியலுக்கு முழுக்கு போடுவதுதான்.