என்னைக் கடத்துவதற்கு முன் (வதைமுகாமில் நான் : பாகம் - 18)
என்னைக் கடத்துவதற்கு முன், வேறு சில விடையங்கள் நடந்தன. ஐவரைக் கைது செய்திருந்தனர். அவர்கள் மீதான சித்திரவதையின் தொடர்ச்சியாகவே, ஆறாவது நபராக நான் கடத்தப்பட்டேன். மற்றவர்களைக் கைது செய்தவர்கள், என்னை உரிமை கோராது கடத்திச் சென்றனர். இந்த ஐவரும் என்னுடைய இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. அவர்கள் வெவ்வேறு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். நான் அவர்களின் ஐந்தாவது நபருடன் மட்டுமே நேரடியாக தொடர்பு கொண்டிருந்தவன். அவர் வேறு யாருமல்ல, சரிநிகர் பத்திரிகை மூலம் அனைவருக்கும் தெரிந்த சிவகுமார் தான். இதற்கு முதல் நபரோ (நாலாவது நபர்) இன்று "உலக தமிழ் நியூஸ்" இணையம் நடாத்தும் குருபரன் தான். புலிகள் இது போன்ற கைது, கடத்தல் படுகொலைகளை, தமிழ் மக்களுக்கு எதிராக தொடர்ச்சியாக செய்தனர். இதன் மூலம் தான், தமிழ் மக்களின் சரியான போராட்டத்தை ஒடுக்கி அதை நசுக்கினர். அதுதான் என் கதையும்.