Language Selection

புதிய ஜனநாயகம் 2009

ஈரான் அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் முகமது அகமதிநிஜாத் மீண்டும் வெற்றி பெற்றதையடுத்து அங்கு நடந்து வரும் போராட்டங்கள், ஈரான் உள்நாட்டுப் போரில் விழுந்துவிடுமோ என்ற ஐயத்தை உலகெங்கும் தோற்றுவித்திருக்கிறது. அதிபர் தேர்தலில் அகமதிநிஜாத் தோற்றுப் போய் விடுவார் என மேற்குலக நாடுகள் எதிர்பார்த்து இருந்ததற்கு மாறாக, அவர் ஒரு கோடியே பத்து இலட்சம் வாக்குகள் அதிகம் பெற்று மிகப்பெரும் வெற்றியை ஈட்டியுள்ளார்.

‘‘கடன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்” என்ற கம்பனின் கூற்றுப்படி பார்த்தால், வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தவிக்கும் துயரம்தான் கொடிய துயரம். அத்தகைய துயரத்திற்கு, வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தவிக்கின்ற நிலைக்கு ஆளாகிப் போனாராம்,

காங்கிரசின் தேர்தல் வெற்றிக்குப் பின், “இளவரசர்” ராகுல் காந்திக்கு மகுடாபிஷேகம் பண்ணி வைக்கும் வேலையில் முதலாளித்துவப் பத்திரிகைகள் இறங்கியுள்ளன. ” அவர்தான் இந்தியாவின் ஒபாமா” என ராகுலைப் புகழ்ந்து தள்ளுகிறது, தெகல்கா வார இதழ்.

முள்ளிவாய்க்காலில் இலங்கை இராணுவம் நடத்திய இறுதித் தாக்குதலில் மட்டும் சுமார் 25,000க்கும் மேற்பட்ட ஈழத்தமிழ் மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். பலநூறு பேர் படுகாயமுற்றும், உடல் ஊனமுற்றும் மருத்துவ வசதிகள் இல்லாமல் அல்லலுறுகின்றனர். மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அரசு கண்காணிப்பு முகாமில் எந்த அடிப்படை வசதிகளுமின்றி அவதிப்படுகின்றனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீதும் பிரபாகரன் மீதும் உண்மையான விசுவாசம் கொண்ட அணிகளும், ஆதரவாளர்களும், அனுதாபிகளும் தாம் நெஞ்சிலே சுமந்த அந்தத் தேசியத் தலைவன் பிரபாகரன் வீரச்சாவை எய்தினார் என்றெண்ணி வீர அஞ்சலி  வீர வணக்கம் செலுத்துவதா அல்லது அவர் பாதுகாப்பானதொரு இடத்தில் நலமாக இருக்கிறார் என்ற செய்தியை இன்னமும் நம்பி ஆறுதல் அடைவதா என்று முடிவு செய்ய முடியாமல் திகைத்துப் போயுள்ளனர்.

லால்காரில் அமைதி திரும்பிக் கொண்டிருக்கிறது; பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு விட்டது” என்று எக்காளமிடுகின்றன டெல்லி மைய அரசும், மே.வங்க மாநில அரசும். மாவோயிஸ்டுகளைப்பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி, அவ்வமைப்புக்கு மைய அரசு சட்டபூர்வமாகத் தடை விதித்துள்ளது.

வரம் கொடுத்த சிவன் தலையிலேயே கைவைக்க முயன்ற பத்மாசுரன் பற்றிய இந்து மதப் புராணக் கதையை அறியாதவர்கள் இருக்க முடியாது. பாகிஸ்தானின் இன்றைய நிலை அப்புராணக் கதையைத்தான் நினைவுபடுத்துகிறது.

குஜராத்தில் 2002ஆம் ஆண்டு நடந்த முசுலீம் இனப் படுகொலை தொடர்பாக உச்சநீதி மன்றத்தாலும் குஜராத் உயர்நீதி மன்றத்தாலும் சமீபத்தில் அளிக்கப்பட்டுள்ள மூன்று தீர்ப்புகள் இந்து மதவெறி கும்பலுக்கு, குறிப்பாக அப்படுகொலையை நடத்திய நாயகன் மோடிக்கு எதிராக அமைந்திருப்பதோடு, இந்த இனப்படுகொலை தொடர்பாக இந்து மதவெறிக் கும்பல் நடத்திவரும் பொய்ப் பிரச்சாரங்களையும் அம்பலப்படுத்தியுள்ளன.

ஏப்ரல் 11 ஆம் தேதி தாய்லாந்தின் பாட்டயா எனும் சுற்றுலா விடுதி நகரில் “ஏசியான்” எனும் தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பிற்கும் இந்தியாவிற்கும் நடக்க இருந்த சந்திப்பு, போராட்டக்காரர்களின் கலவரத்தால் ஒத்திப் போடப்பட்டது.

நாமக்கல் நகருக்கு அருகே இயங்கி வரும் வைகை எம்.பி.ஆர். அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் (பி) லிமிடெட் என்ற ஆலையில் கடந்த 06.05.2009 அன்று இரவு நடந்த தீ விபத்து 17 தொழிலாளர்களின் உயிரைக் காவுவாங்கிவிட்டது.

அண்டை நாடான நேபாளத்தில் இடைக்கால அரசின் பிரதமரான தோழர் பிரசண்டா கடந்த மே 4ஆம் தேதியன்று பதவி விலகியதையடுத்து, அந்நாட்டில் கொந்தளிப்பான அரசியல் போராட்டங்கள் தொடர்கின்றன.

சென்ற ஆண்டில் அமெரிக்காவில் தொடங்கிய முதலாளித்துவத்தின் நெருக்கடி என்று மறைக்கப்படும் முதலாளித்துவத்தின் அழிவுப் பாதை, தனது தடத்தை எல்லா நாடுகளிலும், குறிப்பாக உழைக்கும் மக்கள் மீது ஏற்றி வருகிறது.

ஜூலை 11, 1997 இந்த நாளை மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்களால் மறக்கவே முடியாது. இந்து மதவெறி பா.ஜ.க.சிவசேனா கூட்டணி மகாராஷ்டிர மாநிலத்தை ஆண்டு கொண்டிருந்த காலமது.

உலகத்தின் அனைத்து நாடுகளையும் பிடித்தாட்டும் பொருளாதாரத் தேக்கத்தினை உடைக்க ஏகாதிபத்திய நாடுகளும் இந்தியா, சீனா, பிரேசில் உள்ளிட்ட சில “வளர்ந்து’’வரும் நாடுகளும் இணைந்து கடந்த ஏப்ரல் மாதம் இங்கிலாந்து தலைநகர் இலண்டனில் மாநாடு ஒன்றினை நடத்தின.

கடந்த நூற்றாண்டில், உலகை ஆட்டிப்படைத்த பெரியம்மை, பிளேக், போன்ற கொள்ளை நோய்கள், அறிவியல் முன்னேற்றத்தின் காரணமாக முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டன. இருப்பினும் அவ்வப்போது தோன்றும் புதுப்புது கொள்ளை நோய்கள், உலகையே அச்சுறுத்தி வருகின்றன.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இதுவரை கண்டிராத மிகப் பெரிய தோல்வியை சி.பி.எம். கட்சி சந்தித்துள்ளது. நாடு தழுவிய அளவில் மொத்தம் 16 தொகுதிகளில் மட்டுமே அக்கட்சி வெற்றி பெற்றுள்ளது. 1967இல் சி.பி.எம் கட்சி முதன்முறையாக நாடாளுமன்றத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதிகளைவிட இது குறைவு.

பதினைந்தாவது நாடாளுமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட எந்தவொரு கூட்டணியும் தங்களுக்கு இப்படியொரு வெற்றி கிடைக்குமென்றோ அல்லது தோல்வி கிடைக்குமென்றோ கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.

ஈழ விடுதலைப் போர் மிகக் கொடிய பேரழிவைச் சந்தித்துக் கசப்பானதொரு முடிவை எட்டியிருக்கிறது. இது, புலிகள் இயக்கத்தின் தோல்வி மட்டுமல்ல; ஈழ விடுதலைப் போராட்டம் சந்தித்திருக்கும் ஒரு பாரிய பின்னடைவு. இத்தகையதொரு நிலைமை நெருங்குகிறது என்பதைக் கடந்த சில மாதங்களில் களநிலைமைகளிலிருந்து அனைவருமே புரிந்து கொள்ள முடிந்தது என்றாலும், இம்முடிவு நம்மை மாளாத் துயரத்தில் ஆழ்த்துகின்றது.

மருத்துவரும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தன் வாழ்வை அர்ப்பணித்திருப்பவருமான பினாயக் சென் 27.05.09 அன்று இரண்டாடண்டு சிறைவாசத்திற்குப் பிறகு விடுதலையாகியிருக்கிறார். சட்டீஸ்கர் மாநிலத்தில் பழங்குடி மக்களுக்காகப் போராடும்  மாவோயிஸ்ட்டு கட்சியினருக்கு உதவி செய்தார் என்ற பொய்குற்றச்சாட்டிற்காக இந்த இரண்டாண்டு சிறைவாசம்.

ஈழத்தின் மீதான போரை வழிகாட்டி நடத்தி வருவது இந்திய அரசுதான் என்பது இன்று தெளிவாகவே அம்பலமாகிவிட்டது. இந்தியா இந்தப் போரை ஏன் வழிநடத்த வேண்டும்? அதனால் இந்தியாவிற்கு என்ன இலாபம்? என்ற கேள்விகளுக்கான உண்மையான பதிலைத் தமிழக மக்கள் தெரிந்துகொண்டால் தான், இந்தப் போரை எதிர்த்துப் போராடும் நடவடிக்கைகளை மிகச் சரியான முறையில் வகுத்துக் கொள்ள முடியும்.