Language Selection

புதிய ஜனநாயகம் 2009

ஐதராபாத்தைச் சேர்ந்த இப்ராஹிம் அலி ஜுனாயத், 26 வயதான யுனானி மருத்துவர். கடந்த 2007ஆம் ஆண்டு மே மற்றும் ஆகஸ்டு மாதங்களில் ஐதராபாத்தின் மெக்கா மசூதியிலும், லும்பினி பூங்காவிலும் நடந்த குண்டுவெடிப்புகளில் இவரைத் தொடர்புபடுத்தி, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு ஐந்து மாதங்கள் சிறையிலடைக்கப்பட்டார். 

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, ஐந்தாண்டுகளுக்கு முன் தனியார் துறையில் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என்றும், இதற்காக இட ஒதுக்கீட்டுச் சட்டம் திருத்தப்படும் என்றும் தனது பொது வேலைத்திட்டத்தில் சொல்லியிருந்தது.  இப்போது அடுத்த தேர்தலும் நெருங்கி விட்டது.   தனியார் துறை இடஒதுக்கீட்டுக்காக  ஐ.மு.கூட்டணி அரசு சிறு துரும்பைக்கூட அசைக்காதது மட்டுமன்றி, ஏற்கெனவே சட்டப்பூர்வமாக இருந்துவந்த இட ஒதுக்கீட்டையும் ஒழித்துக்கட்டும் அயோக்கியத்தனத்தில் இறங்கி உள்ளது.

நடராஜர் ஆலயத்தின் நிர்வாகத்தை தமிழக அரசு எடுத்துக் கொண்டுள்ள இடைக்கால வெற்றியைக் கொண்டாடுவோம்.பிப்ரவரி 2, 2009  தமிழகத்தின் வரலாற்றில் இதுவொரு முக்கியமான நாள் என்றால், அது மிகையானதல்ல.  அன்றுதான் சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயிலின் நிர்வாகத்தைத் தமிழக அரசின் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் தீர்ப்பு வெளியானது. 

முதலாளித்துவ ஓட்டுக்கட்சிகளைப் போல சி.பி.எம் கட்சியும் ஊழலில் சிக்கிச் சீரழிந்து நிற்கிறது. கொள்கை  சித்தாந்தம் அனைத்தையும் கை கழுவிவிட்டு, தனியார்மயம்  தாராளமயத்துக்குக் காவடி தூக்கி, சிங்கூர்  நந்திகிராமத்தில் போராடும் மக்களை மிருகத்தனமாக ஒடுக்கிய சி.பி.எம். கட்சி, இப்போது லாவலின் ஊழல் விவகாரத்தால் எஞ்சியிருந்த ஒட்டுக் கோவணத்தையும் இழந்து அம்மணமாகி நிற்கிறது.

தேர்தலைக் குறிவைத்து நிறைவேற்றப்பட்ட சமூகப் பாதுகாப்புச் சட்டத்தால் எந்தப் பயனும் இல்லை. அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்காக ஏழைகூலித் தொழிலாளர்கள் வேலை தேடி பெருநகரங்களை நோக்கி நகர்கின்றனர். மொழி, மாநில எல்லைகளை எல்லாம் கடந்து வாழ்க்கை அவர்களைப் பெயர்த்து எறிகின்றது.

கொல்லைப்புற வழியாக சோமாலியாவை ஆக்கிரமிக்க அமெரிக்கா நடத்திய போர் படுதோல்வியில் முடிந்துவிட்டது. சோமாலியா என்றவுடனேயே நமது நினைவுக்கு வருவது, அந்நாட்டைப் பிடித்தாட்டும் பஞ்சமும், பட்டினியால் எலும்பும் தோலுமாகிப் போன அந்நாட்டு மக்களும்தான்.  இப்படிபட்ட பஞ்சப் பரதேசியான நாடும் அதன் மக்களும், தீவிரவாதத்துக்கு எதிரான போர் என்ற பெயரில் அமெரிக்கா நடத்திவரும் ஆக்கிரமிப்புப் போருக்கு ஒரு மரண அடி கொடுத்திருப்பது உங்களுக்குத் தெரியுமா?

அயோத்தியை ஆண்ட ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி, மதியம் வரை மத ஆச்சாரங்களில் மூழ்கி விட்டு, அந்தி சாய்ந்த பிறகு அழகிகளுடன் கூத்தடித்து மதுவில் மூழ்குவான் என்றும், தான் குடிப்பதுடன் இல்லாமல் சீதைக்கும் ஊற்றிக் கொடுத்து களியாட்டம் போடுவான் என்றும் குறிப்பிடுகிறது வால்மீகி  இராமாயணம்.

ஆளரவமற்ற காடு; பகலிலும் கூட இருள் சூழ்ந்த சட்டிஸ்கர் மாநிலத்தின் பஸ்தார் பிராந்தியத்திலுள்ள அடர்ந்த காடு; பாறைகளில் தெறித்தோடும் நீரோடை, கிரீச்சிடும் பறவைகள், காற்றில் சருகுகள் எழுப்பும் சலசலப்பு; இவை தவிர வேறெந்த ஒலியுமற்ற அமைதியில் உறைந்த காடு. கடந்த ஜனவரி 8ஆம் நாளன்று பட்டப் பகலில் அக்காட்டில் அப்பாவி பழங்குடியினர் 18 பேர் சல்வாஜூடும் என்ற போலீசு குண்டர் படையால் கொடூரமாகச் சுட்டுக் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச் சூட்டின் பேரொலியால் பறவைகள் வானில் பறந்து கிரீச்சிட, அக்காடே அதிர்ந்து குலுங்கியது.

காஷ்மீர் மக்கள் சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க முன்வந்ததை தேசிய ஒருமைப்பாட்டின் வெற்றியாகக் காட்டுவது அரைவேக்காட்டுத்தனமானது. காஷ்மீரில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தல் இந்திய தேசியவாதிகளை ஆனந்தக் கூத்தாட வைத்துவிட்டது.  அமர்நாத் பனிலிங்கக் கோவிலுக்கு நிலம்

இந்தியத் தரகு முதலாளிகளின் தளபதிகளாகக் கருதப்படும் ரத்தன் டாடா, அனில் அம்பானி, சுனில் மித்தல் (ஏர்டெல் நிறுவனத் தலைவர்) ஆகி யோரின் மனம் கவர்ந்த நாயகனாகிவிட்டார், திருவாளர் நரேந்திர மோடி. குஜராத்தில் சமீபத்தில் நடந்த சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலாளிகளின் கூட்டம் மோடியைப் புகழ்ந்து தள்ளியதைக் கேட்டால், தமிழ்நாட்டில் அம்மாவையும், தளபதிகளையும் புகழ்ந்து "கட்அவுட்'' வைக்கும் தொண்டன்கூடக் கூசிப் போயிருப்பான்.

பிப்ரவரி 19 காக்கி உடை ரவுடிகளின் லத்திக் கம்புகள் சென்னை உயர்நீதிமன்றத்தை இரத்தத்தில் முக்கி எடுத்தன. ஜனநாயகத்தின் மற்ற தூண்களெல்லாம் உளுத்து உதிர்ந்துவிட்ட நிலையில், நீதிமன்றம் என்ற ஒற்றைத்

ஈழத்தமிழ் மக்கள் மீது மிகக்கொடிய இன அழிப்புப்போர் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தை எச்சரித்து வெளியேற்றிவிட்டு, ஊடகங்களுக்கும் சர்வதேச தொண்டு நிறுவனங்களுக்கும்

 முன்பணமாக ஓரிரு ஆயிரம் ரூபாய்களை வாங்கிவிட்டு, அதற்கு வட்டியோடு சேர்த்து அசலை அடைக்க முடியாமல் பலகாலமாக ஆயிரக்கணக்கான தொழிலாளிகள் ஈரோடு  நாமக்கல் மாவட்டங்களின் தறிக்கூடங்களில் கொத்தடிமைகளாக உழன்று வருகின்றனர்.

 இந்தியத் தரகு முதலாளிகளுக்கு பொன்முட்டையிடும் வாத்து, தகவல் தொடர்புத் துறையாகும். கடந்த பத்தாண்டுகளில் இந்தத் துறையில் முதலாளிகள் அடித்த கொள்ளை பல ஆயிரம் கோடிகளைத் தாண்டும். அதே அளவு கோடிகளை அரசும்,

"அரியலூர்  பெரம்பலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் முதல்முறையாக... தமிழர் திருநாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான மாபெரும் நடனப் போட்டி...'' என சன் டி.வி ரேஞ்சுக்கு நம்மைச் சுண்டியிழுத்தது அந்த விளம்பரம்.

 நாகை மாவட்டம் அருகேயுள்ள திருமருகல் அரசு மேநிலைப்பள்ளியின் தலைமையாசிரியராக இருப்பவர் பா.திருமாவளவன். காலை 11 மணிக்குமேல்தான் பள்ளிக்கு வருவது; பள்ளியிலே தண்ணியடித்து விட்டுத் தனியறையில் தூங்குவது

 தர்மபுரி  கிருஷ்ணகிரி மாவட்டங்களின் பல கிராமங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான அடக்குமுறைகள் கேள்விமுறையின்றித் தொடர்கின்றன. அஞ்செட்டி அருகே தேவன்தொட்டி கிராமத்தில் டீக்கடைகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கென

பாலஸ்தீன மக்களின் மீது நடத்தி வரும் ஆக்கிரமிப்புப் போரையும், முற்றுகையையும் கிறிஸ்துமஸுக்குப் பிறகு இசுரேல் மீண்டும் தீவிரப்படுத்தியிருக்கிறது. இசுரேலுக்கும் பாலஸ்தீன விடுதலை இயக்கத்திற்கும் இடையே கையெழுத்தான "ஆஸ்லோ'' சமாதான ஒப்பந்தத்தின்படி பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட காசா முனையைத்தான் இப்பொழுது இசுரேல் குறிவைத்துத் தாக்கி வருகிறது.

உறை பனியை நெருங்கிவிட்ட நடுநடுங்க வைக்கும் கடுங்குளிர்; நூறு அடிக்கு முன்னே இருப்பது கூடத் தெரியாத அளவுக்கு எங்கும் பனி மூட்டம்; வாகனங்கள், ரயில்கள், விமானங்களின் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டன; குடிநீர்க்

 இந்திய அரசு பின்பற்றி வரும் மறுகாலனியாதிக்கப் பொருளாதாரக் கொள்கையால் விவசாயம் திட்டமிட்டே அழிக்கப்பட்டு வருவதால், விவசாயிகள் பிழைக்க வழிதேடி நகரங்களை நோக்கி ஓடி வருகின்றனர்.  நகரங்களில்