Language Selection

புதிய ஜனநாயகம் 2009

ஆப்கானில் அமெரிக்கா நடத்தி வரும் தீவிரவாதத்துக்கு எதிரான போர் பலமுனைகளிலும் தோல்வியைத் தழுவி வருகிறது. அப்போர் தொடங்கி ஏழு ஆண்டுகளுக்கு மேலான பிறகும், அல் காய்தா தலைவர் ஓசாமா பின்லேடனை அமெரிக்காவால் பிடிக்க முடியவில்லை. அல் காய்தா, தாலிபான் ஆகிய இசுலாமிய தீவிரவாத அமைப்புகளை அமெரிக்காவால் முற்றிலுமாக அழித்தொழிக்க முடியவில்லை என்பது ஒருபுறமிருக்க, ஆப்கானின் அண்டை நாடான பாகிஸ்தானையும் ஆட்டங்காணச் செய்துவிடும் அளவிற்கு அவ்வமைப்புகளின் செயல்பாடுகள் வளர்ந்து வருகின்றன.

 

ஆறுகளும் பசுமையான வயல்களும், மலைகளும் நீர்வீழ்ச்சியும், காடுகளும் விலங்குகளும் கொண்ட இயற்கை அழகு நிறைந்த ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கர், கடந்த பிப்ரவரி மார்ச் மாதங்களில் விவசாயிகளின் போராட்டங்களால் குலுங்கியது. "ஒருபிடி மண்ணைக்கூட அந்நியனுக்குத் தரமாட்டோம்!; தென்கொரிய டேவூ நிறுவனமே, நாட்டை விட்டு வெளியேறு!; நாட்டைத் தாரைவார்க்கும் சர்வாதிகார அதிபர் ஒழிக!'' என்ற முழக்கங்களுடன் அந்நாட்டு விவசாயிகள் அணிதிரண்டு போராட்டங்களைத் தொடர்ந்தனர்.

ஈழத்தில் தொடரும் மிகக் கொடிய இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்த வக்கற்ற காங்கிரசு தி.மு.க. கூட்டணி அரசின் மீது தமிழக மக்களின் வெறுப்பு அதிகரித்து வருகிறது. தேர்தல் நெருங்க நெருங்க, கருணாநிதிக்கு அச்சமும் அதிகரித்துக் கொண்டே போகிறது. சவடால் அடித்தும், பிரதமருக்கும் சோனியாவுக்கும் தந்தி அடித்தும், சிவசங்கர் மேனன் எம்.கே.நாராயணன் ஆகியோர் ராஜபக்சேவைச் சந்தித்து

உயர்ந்தோங்கி நிற்கும் மரங்கள் நிறைந்த அடர்ந்த காடு; அக்காட்டின் நடுவே திடீரென ''டும், டும்'' என முரசொலிக்க, எங்கும் எதிரொலிக்கிறது. அடுத்த சில நிமிடங்களில் வில்அம்பு, கோடரி, அரிவாள், தடிகளுடன் பழங்குடியின மக்கள் பெருங்கூச்சலிட்டுக் கொண்டு அணிதிரள்கிறார்கள். ''கொலைகாரர்கள் வந்துவிட்டார்களா?

மதுரை நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் மு.க. அழகிரி, "தி.மு.க. கூட்டணி வேட்பாளர் அழகிரி வந்திருக்கேன், எனக்கு ஓட்டுப் போடுவீங்களா?'' என்று அழகம்மா என்ற வாக்காளரிடம் @கட்க, அவரோ "நாங்க ஓட்டுப் போடுவோம் நீங்க எப்ப நோட்டைப் போடுவீங்க?'' என்று எதிர்கேள்வி கேட்டிருக்கிறார். இந்தியத் தேர்தலில் பணநாயகம் பல்லிளிப்பதைக் காட்டும் ஒரு சோற்றுப் பதம் இது. 

சி.பி.எம். என்பது ஒரு கட்சியல்ல; அதுவொரு முதலாளித்துவக் கம்பெனி. கம்பெனி என்றால் அதற்கு ஏராளமான சொத்துக்கள் இருக்கும். ஆண்டுதோறும் சொத்து விவரங்களைத் தணிக்கை செய்து, வருமான வரி அலுவலகத்துக்குச் சட்டப்படி தாக்கல் செய்யும். சி.பி.எம். கம்பெனியும் இப்படி ஆண்டுதோறும் சொத்துக் கணக்கைத் தாக்கல் செய்து வருகிறது. கடந்த 2006 மார்ச் 31ஆம் தேதி முடிய உள்ள நிதியாண்டில் சி.பி.எம். கம்பெனியின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 77.27 கோடிகளாகும்.

தாழ்த்தப்பட்டோரை ஆட்சி அதிகாரத்துக்குக் கொண்டு வருவதன் மூலம் சாதி ஒடுக்குமுறையை முடிவுக்குக் கொண்டுவந்து விடலாம் எனும் அரசியலை முன்வைத்து, "பார்ப்பனர்கள், வைசியர்கள், ராஜபுத்திரர்களை செருப்பால் அடிப்போம்'' என்ற புகழ்பெற்ற முழக்கத்தின் மூலம் தனது அடித்தளத்தை உ.பி.யில் உருவாக்கி இருந்தது பகுஜன் சமாஜ் கட்சி. தற்பொழுது இம்மூன்று சக்திகளுடன் சமரசமாகியதன்

''ஈழத் தமிழர்களின் இன அழிப்புப் போருக்கு சோனியா தலைமையிலான காங்கிரசு ஆட்சி அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி அனைத்து உதவிகளையும் இலங்கை அரசுக்கு வழங்கி வருகிறது. இந்நிலையில் காங்கிரசுக்கும் காங்கிரசுக்குத் துணை போகும் தி.மு.க.வுக்கும் தமிழர்கள் பாடம் புகட்ட வேண்டும். காங்கிரசு ஆட்சி அகற்றப்படுவதன் மூலமே ஈழத்தில் இனப்படுகொலைகளைத் தடுத்து நிறுத்த முடியும்.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், கொள்கைக்கான கூட்டணி என்பதெல்லாம் காலாவதியாகி, இத்தனை தொகுதிகள் கொடுத்தால் இந்தக் கூட்டணி; இல்லையேல் அந்தக் கூட்டணி என்பதாக ஓட்டுக் கட்சிகளின் பிழைப்புவாதம் நாடெங்கும் நாறுகிறது.

பிப்ரவரி 19 உயர்நீதி மன்றத் தாக்குலுக்கு எதிராக தமிழக வழக்குரைஞர்கள் ஒரு மாத காலமாக நடத்தி வந்த நீதிமன்றப் புறக்கணிப்பு இடை நிறுத்தம் செய்யப்பட்டிருக்கிறது.

"யாருடைய உத்தரவின் பேரில் போலீசு படைகள் உயர்நீதி மன்றத்திற்குள் நுழைந்தன? எந்த அதிகாரியினுடைய உத்தரவின் பேரில் அன்று தடியடி நடத்தப்பட்டது?'' என்ற அடிப்படையான இரு கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் தவிர்த்து விட்டு, போலீசு நடவடிக்கையை நியாயப்படுத்தும் ஒரு "திரைக்கதை'யை இடைக்கால அறிக்கையாக வெளியிட்டிருக்கிறார் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா.

அனைத்துலக மகளிர் தினமான மார்ச் 8ஆம் நாளன்று திருச்சியில் செயல்பட்டு வரும் பெண்கள் விடுதலை முன்னணி, ""ஈழத்தில் தமிழ் இன அழிப்புப் போர் மற்றும் பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைகளை எதிர்ப்போம்! இந்திய அரசின் இராணுவ ஆயுத உதவிகள், வர்த்தக, தூதரக உறவுகளைத் துண்டிக்கப் போராடுவோம்'' எனும் முழக்கத்துடன் உழைக்கும் பெண்களை அணிதிரட்டி ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.

திருநெல்வெலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள செந்தட்டி கிராமத்தில், பெரும்பான்மையாக யாதவர்களும், கணிசமான அளவில் செட்டியார்களும், தாழ்த்தப்பட்டோரும் உள்ளனர். பெரும்பான்மையாக இருப்பதாலேயே யாதவ சாதி வெறியர்கள் சாதித் தினவெடுத்து திமிருடன் நடந்து வந்துள்ளனர்.

பா.ஜ.க. ராமன் கோவில் பிரச்சினையில் பின்வாங்கவில்லை; கோவில் கட்டுவதில் உறுதியாக உள்ளது என எல்.கே. அத்வானி கூறியுள்ளாரே?

அவர் புளுகுகிறார். ராமன் கோவில் விவகாரத்தை பா.ஜ.க. அரசியல் ஆதாயத்திற்காக மட்டுமே பயன்படுத்தியுள்ளது. ராமனுக்காகவோ அல்லது கோவில் கட்டுவதற்காகவோ அவர்கள் துரும்பைக் கூட அசைக்கவில்லை. இந்த விவகாரத்தில் பா.ஜ.க.வும், விஷ்வ ஹிந்து பரிசத்தும் சம்பந்தப்பட்டுள்ளவரை, ஒருபோதும் பிரச்சனை தீராது.

"நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தாலும்.....'' என்றொரு பழமொழி சொல்வார்களே, அதற்கு முற்றிலும் பொருத்தமானது பாரதீய ஜனதா கட்சி. அந்தக் கட்சி எவ்வளவுதான் தன்னை நவீனமாகக் காட்டிக் கொண்டாலும், அந்தக் கட்சியின் தலைவர்கள் எவ்வளவுதான் மேன்மக்களாக இருந்தாலும், அக்கட்சியாலும் அதன் தலைவர்களாலும் முஸ்லீம்களுக்கு எதிரான விஷத்தைக் கக்காமல் அரசியல் வாழ்வில் ஒரு நொடிப்பொழுதைக்கூடக் கழிக்க முடியாது.

மக்களின் கவனம் நாடாளுமன்றத் தேர்தல் கூத்துக்களை நோக்கித் திசை திருப்பிவிடப்பட்டிருக்கும் நேரமாகப் பார்த்து, அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையில் முக்கியமான மாற்றத்தை மிகவும் கமுக்கமாக முடிவு செய்து அறிவித்திருக்கிறது, காங்கிரசு கூட்டணி அரசு. இம்மாற்றம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதித்திருந்தால்கூட, அதற்கு எந்தவொரு ஓட்டுக்கட்சியும் முட்டுக்கட்டை போட்டிருக்கமாட்டார்கள்.

இலங்கையில் சிங்கள இனவெறி அரசின் அடக்குமுறைக்கும், கொலைவெறித் தாக்குதலுக்கும் பத்திரிகையாளர்கள் கூடத் தப்பவில்லை. அரசின் இனவெறியையும், பாசிச நடவடிக்கைகளையும் எதிர்த்து எழுதும் பத்திரிகையாளர்கள் தாக்கப்படுவதும், கடத்திக் கொல்லப்படுவதும் அங்கு தொடர்கதையாகியுள்ளது.

அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்த பிப்ரவரி 25ஆம் நாளன்று துணை இராணுவப் படையினர் நடத்திய கலகமும், இராணுவ உயரதிகாரிகள் - அவர்களது குடும்பத்தாரோடு சேர்த்து கொல்லப்பட்டிருப்பதும் இந்திய துணைக் கண்டத்து நாடுகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கொளுத்தியெடுக்கும் கடுமையான வெய்யிலில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கூடி நிற்கின்றனர். சாப்பாட்டுக்குக் கூடப் போதாத தங்களது சம்பளத்தை உயர்த்தக் கோரியும், தாங்கள் அடிமைகளை விடக் கேவலமாக நடத்தப்படுவதை எதிர்த்தும் அவர்களது போராட்டம் தொடங்குகிறது.

இந்துவெறி பாசிச பயங்கரவாத மோடிக்கு புதிய ஆதரவாளர் கிடைத்திருக்கிறார். தொழில் வளர்ச்சியைச் சாதிக்க, மோடியை முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும் என்றும் அவர் உபதேசித்திருக்கிறார். இவர் இந்துவெறி பா.ஜ.க.வைச் சேர்ந்தவரல்ல; மோடியின் தாராள சலுகைகளால் ஆதாயமடைந்த தரகுப் பெருமுதலாளியுமல்ல.