Language Selection

சமர் - 15 : 05 -1995

கடந்த மாசி மாதம் 21ம் நாள் இரவு மாசெயில் என்ற இடத்தில் கறுப்பின மாணவன் ஒருவன் நாசிகளால் படுகொலை செய்யப்பட்டான்.


17வயதுடைய இந்தக் கறுப்பின மாணவன் மீது கண்மூடித்தனமாக துப்பாகிப் பிரயோகம் செய்துவிட்டு தப்பியோடிய கொலையாளி பொலீசாரிடம் வகையாக மாட்டிக் கொண்டான்.


F.N என்றழைக்கப்படும் தேசிய முன்னணியின் உறுப்பினரான இக்கொலையாளி லுபென் என்பவரைத் தலைவராக வரிந்த கொண்டவன், சட்டப+ர்வமாக இயங்கிவரும் இத்தேசிய முன்னணிக் கடசி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலிலும் போட்டியிடுகின்றது. சராசரியாக 10 வீத ஆதரவைத் தொடர்ச்சியாகப் பெற்றுவரும் இக் கட்சி வெளிநாட்டவர்களுக்கு எதிராக பகிரங்கமாகவே இயங்கி வருகின்றது.


பிரான்சில் வாழும் வெளிநாட்டவர்களில் போத்துக்கல் நாட்டைச் சேர்ந்தோரே அதிகமாகக் காணப்படினும், தேசியமுன்னணியின் பிரச்சாரம் இவர்கள் மீதல்லாது அரபு, மற்றும் கறுப்பினத்தோர் மீதே குறிவைத்து நடாத்தப்படுகின்றத. கறுப்பு – வெள்ளை என்ற ஒரேயொரு எல்லைக்கோடு மட்டுமே இவர்களின் அடிப்படையம்சமாகும்.


தேசிய முன்னணியின் பேச்சாளர்கள் இப்படுகொலையை தற்செயலாக விபத்து எனக் கூறிவருவதுடன், எந்தவித அனுதாபத்தையும் வெளியிட மறுத்தனர். இந்நிலையில் கூட்டுக் கொள்ளப்ப்ட அடுத்த நாள் அவ்விடத்தில் 500 பேர் ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கினர். தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட இப்போராடட நடவடிக்கையானது, ஒவ்வொரு நாளும் எண்ணிக்கையால் பெருகிக் கொண்டே இருந்தது. இறுதி நாளன்று மாசெய்யில் மட்டும் 20 ஆயிரம் பேர் அப்போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.


தேசிய முன்னணியைத் தடைசெய்யக் கோரி நடந்த இந்த போராட்டம் பிரான்சின் பல பாகங்களிலும் உணர்வூப+ர்மாக நடத்தப்பட்டது. வளர்ந்து வரும் இந்த நாசிகள் இன்றைய உலகப் பொருளாதார நெருக்கடிகளுடாகவே ஆட்சிக்கு வரவும், மூன்றாம் உலக யுத்தத்தை நடத்தவும் தீவிரமாக முனநை;தவாறே உள்ளனர். இவற்றைத் தடுத்து நிறுத்த மாற்று அரசிசயல் சக்திகள் புரட்சிகர வழிமுறைகளை முன்னெடுக்க வேண்டும், இன்று புரட்சிகர சக்திகளைத் தேடியும் கண்டுபிடிக்க முடியாத சீரழிந்த நிலையில், மூன்றாம் உலகப் போரின் அழிவின் விளிம்புக்கு உலகம் உருட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

பாக்கிஸ்தானைச் சேர்ந்த சாலாமத் மாசிக் என்ற 14வயது சிறுவனுக்கு “இஸ்லாம் மதத்தையும் நபிகள் நாயகத்தையும் இழிவுப்படுத்தி விட்டான்” என்ற குற்றச்சாட்டின் பேரில் “ஷரியத்” சட்டப்படி மரண தண்டணை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று வருடங்களின் முன்பு இச்சிறுவன் மசூதியொன்றின் சுவற்றில் மதத்தை இழிவுப்படுத்தும் வாசகங்களை எழுதியதாக மதகுருமார் இச் சிறுவன் மீது குற்றஞ் சுமத்தியதை அடுத்து இவ் வழக்குத் தொடரப்பட்டது. “அச் சிறுவன் எழுதப் படிக்கத் தெரியாதவன்” என்ற எதிர்க்கடசி வக்கீலின் வாதத்தை தீர்ப்பு வழங்கிய நீதிபதி கண்டு கொள்ளவேயில்லை.
நன்றி – புதிய ஜநாயகம்.

செயற்கைக் கோள் உதவியினை மட்டுமே கொண்டுகுறி தப்பாது தாக்கக் கூடிய நவீன வகை குண்டுகளையும், போர்க்களத்தில் எதிரிப்படை வீரர்களைக் காயப்படுத்தாது கண்களை மட்டுமே குருடாக்கக் கூடிய “லேசர்” து;பாக்கிகளையும் அமெரிக்கா தயாரிக்கிறது. மேலும் ஈராக்கைத் தாக்கி அழித்ததைப் போன்ற நவீன மின்னணுவியல் போர்ச் சாதனங்களை வரும் பத்தாண்டுகளில் இன்னும் அதிக அளிவல் தயாரித்துக் குவிப்பதற்கான திட்டம் ஒன்றையும் அமெரிக்க காங்கிரஸ் அங்கீகரித்திருக்கிறது. “பனிப்போர் சகாப்தம் முடிந்துவிட்டது: இனி அமைதி” எனக் கூத்தாடியவர்கள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

ஆடு மாடுகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதைபோல பிஞ்சுக் குழந்தைகளை ஏற்றுமதி செய்யும் வியாபாரம்  இப்போது கொடிக்கட்டிப்பறக்கிறது. கடந்த பத்து வருடத்தில் ;11,862 குழந்தைகள் இவ்வாறு வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செயள்யப்பட்டுள்ளனர். மேலைநாடடுத் தம்பதிகளால் தத்தெடுத்துக் கொள்ளப்படும் இக்குழந்தைகள் ஏறத்தாள 5000 டொலர்களுக்கு இலங்கைத் தாய்மார்களால் விற்கப்பட்டுள்ளனர். பத்துமாதம் சுமந்து பெற்ற குழந்தையை விற்குமளவுக்கு இலங்கைத் தாய்மார்களைப் பிடித்துள்ள வறுமையின் அவலத்தையும், மேலைநாடுகளில் பெருகிவரும் இனவெறியின் காரணமாக இக் குழந்தைகளின் எதிர் காலத்தையும் எண்ணும்போது மிகவும் வேதனைக்குரியதாக இருக்கிறது.
(நன்றி – புதிய ஜனநாயகம்)

இலங்கை மொத்த சனத்தொகையான ஒரு கோடியே 75 லட்சத்தில், ஒரு கோடியே 19 லட்சம் பேர் அதாவது மொத்த சனத்தொகையில் 68 சதவிகிதம் போரின் நிமித்தம் வறுமையில் வாடுகின்றனர்.


தேசிய இனப் போருக்கு ஒரு நிமிடத்தில் 41 லட்சம் ரூபாய்களைச் செலவு செய்யும் இலங்கை இனவெறி அரசு, விரல் விட்டு எஎண்ணக்கூடிய கொழுத்த தரகர்கள் இசைவாக நாட்டைக் கொள்ளையிடுவதற்கு வழிவிட்டுள்ளத. யுத்தத்திற்கு பெரும் பணத்தைத் தாரைவார்த்து வரும் இவ்வரசு மக்களை மேலும் பிழிந்தெடுத்து இருக்கும் கந்தலைக் கூட இழுத்துப் பறித்துவிட முயன்று வருகிறது. பேச்சுவார்த்தைகள், சமாதானம் என்கின்ற கவர்ச்சியான வார்த்கைளினூடாக மக்களின் கொதிப்புக்களை அடக்கி தமது முகமூடிக் கொள்ளைகளை இலகுவாக நடாத்தியும் வருகின்றது.

டென்மார்க் தலைநகர் ஹோபன் ஹாகனில் மார்ச் 6 முதல் 12 வரை நடந்த சர்வதேச மாநாட்டில் மூன்று முக்கிய கருத்துக்கள் விவாதிக்கப்பட்டன. வறுமை, வேலையின்மை, சமுதாயச் சிதைவு என்பவைகளை ஐக்கிய நாட்டு சபை இன்றைய காலத்தின் மையப்பிரச்சினை எனக் கூறி விவாதித்தன. இவ் விவாத நடவடிக்கையில் அதில் கலந்து கொண்ட சில பெண் பிரதிநிதிகள் வறுமைபற்றி அர்த்தமற்ற போலித்தனத்தைக் கண்டித்து போராடினர். இந்நிலையில் ஐ.நா சபை தயாரித்த அறிக்கையின் சில பகுதிகளை புதிய ஜனநாயகம் இதழ் வெளியிட்டது. அதிலிருந்து சில பகுதிகளைத் தருகின்றோம்.
(சமர் ஆர்.கு)

சோவியத் ய+னியன் கடைசி அதிபர் கொப்பசேவ் தற்போதைய ஜனாதிபதி ஜெல்சினைப பற்றிக் கூறும்போது தனது பதவிக் காலத்தில் “ஜெல்சினை பாலைவன ஆராய்ச்சி பற்றி படிக்க அனுப்பியிருக்க வேண்டும். அதனைச் செய்யாதது தான் செய்த பிழை” எனக் கூறியுள்ளார்.

பலகோடி பெறுமதியான ஊழல்களும், லஞ்சங்களும் அம்பலப்பட்டுப் போனதால் இந்திய ஜனநாயகம் நாற்றமெடுக்கின்றது. காஸ்மீரில் போராடும் பாக்கிஸ்தான் சார்பு ஹிஸ்புல் முஜாகிதீன் என்ற அமைப்புக்கு வெளிநாடுகளிலிருந்து பணத்தைப் பெற்றுக் கொடுத்த இருவரை சிபிஐ கைதுசெய்தது. இதைத் தொடர்ந்து மேலும் இருவரை சிபிஐ கைது செய்து ‘தடாவின்’ கீழ் சிறையில் தள்ளியது.

சுவீஸ்சில் இருந்து ஆர்ப்பாட்டமாக வெளி வந்து கொண்டிருந்த மனிதம் பத்திரிகை தனது 30ஆவது இதழ்களுடன் வெளிவராது என்ற அறிவித்தலுடன் நின்று போனது. இதற்கு முன்னரே மனிதத்தின் முரண்பாடுகள் தொடர்பான சில செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தபோதிலும், மனிதம் தனது 30ஆவது இதழில் இதற்கான சில காரணங்களை முன் வைத்திருந்தது.

அமெரிக்கா தனது கொள்ளைகளையும், அடக்கு முறைகளையும், அடாவடித் தனங்களையும் நியாயப்படுத்த ஆசியாவுக்கென்றே உருவாக்கி வரும் “வொய்ஸ் ஒவ் அமெரிக்கா” என்ற ஒலிபரப்பு நிலையத்தை, சிலாபம் - இரணவலையில் அமைத்து விஸ்தரித்தும் வருவது உலகறிந்த விடயமே.

அண்மையில் 8ஆவது தமிழாராய்ச்சி மாநாடு என்று அறிவித்து, தமிழ் மொழியின் பெயரால் கோடி கோடியாக கூத்தாடிகள் ஆடி மகிந்தனர். தமிழைப் பரப்புகின்றோம் என்று சில சீரழிவு எழுத்தாளர்களும், சினிமா கவர்ச்சி நடிகர்களும், சூதாடிகளும் கூடித்திரண்டு கூத்தாடி தமிழை இழிவு செய்ததுடன், தமிழ் மொழியின் வளர்ச்சிப் பாதையின் குரல்வளையை கடித்துக் குதறியும் வருகின்றனர்.

உலகின் ஜனநாயகக் காவலர்களாக வேடமிட்டு அலைந்து திரியும் ஏகாதிபத்தியங்கள் பயங்கரவாம் பற்றிய நிறையவே கூச்சல்போட்டு வருகின்றது. உண்மையில் இவ் வன்முறைகளின் ஊற்று மூலம் இவ் ஏகாதிபத்தியங்களின் இருப்பின் மீதே உள்ளதை மறைத்து, அதை ஊக்கப்படுத்துவதில் மிகவும் தீரமாக உள்ளனர்.

லெனினின் பிறந்த நாள்

லெனின் 126ஆவது பிறந்;த நாளை நாம் நினைவு  கூர்கின்றோமெனின், ஏன்? 1917ஆம் உலகில் பட்டாளி வர்க்கத்தை ஆளும் வர்க்கமாக உயர்த்திக் காட்டியவர் லெனின் என்பதனாலேயே அவரின் பிறந்த தினத்தை ஒரு புரட்சிகர நாளாக நினைவு கூர்கின்றோம். சோவியத்தில் லெனின் தலைமையைத் தொடர்ந்து ஸ்டாலின் பாட்டாளி வர்க்கப் புரட்சியைத் தொடர்ந்ததுடன், அதைப் பாதுகாப்பதிலும் உறுதிபட்டு நின்றார். அதைத் தொடர்ந்த குரு சேவ்-பிரசேனேவ் கும்பல் அனைத்து போலி மார்க்சிய அலங்காரங்களிலும் இருந்து தன்னை முற்றாக அவிழ்த்துக் கொண்டு வெளிப்படையாகவே ஏகாதிபத்தியத்தின் ஒரு நவ காலனியாக சோவியத்தை மாற்றுவதில் வீறுநடை போடுகின்றார்கள்.

இனவெறி அரசின் கோர முகங்களுக்குள் சிக்கித் தவிக்கும் தமிழ் மக்கள், எந்தவித அற்ப சலுகைகளைக் கூட கேட்டுப் பெறமுடியாது என்பதை நாம் கடந்த சமர் இதழ்களில் மீண்டும் மீண்டும் சுட்டிக் காட்டினோம். இனவெறி அரசு பலாத்கார வழிகளின் மூலம் தமிழ் மக்களை கொன்று தேசிய இன அடையாளத்தை இல்லாது ஒழிக்க முனையும் வரை, அதைத் தமிழ்த் தேசிய இனம் தவிர்க்கமுடியாது ஆயுதம் ஏந்துவதன் மூலம் போராட நிற்பந்தித்து வருவதும் கண்கூடு, இவ்வாறான நிலைமைகளில் கடந்துபோன பேச்சு வார்த்தைகளை ஒட்டி நாம் இவ்வாறான பேச்சுக்கள் சாத்தியமில்லை, தமிழ் மக்களை ஏமாற்றும் மோசடி நிகழ்ச்சி - இது என்பதையும் சுட்டி காட்டினோம். தம்மை முற்போக்கு என அழைத்த பலரும் தமிழ்பேசும் மக்கள் மத்தியில் பேச்சு வார்த்தையின் போலித்தனத்தை அம்பலப்படுத்தத் தவறி, சமாதானம் பற்றிய சிறிலங்கா அரசின் இனவெறியின் பொய் முகங்களின் பின் தம்மை மறந்து இழுப்பட்டுச்சென்றவாறே இருந்தனர்.

அண்மைக் காலமாக புலிகளுக்கும் அரசுக்கும் இடையில் நடந்துவரும் பேச்சுவார்த்தைகள் முறிந்து, தொங்கிக் கொண்டிருக்கின்றன. பேச்சுவார்த்தைக் காலங்களில் புலிகள் செய்வதாகக் கூறிய இரண்டு முக்கிய விடயங்களான முஸ்லிம் மக்களை மீளக் குடியமர்த்துவது, மற்றும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வது போன்றவற்றை இதுவரை செய்யாது, காலத்தை இழுத்தடித்தும் வருகின்றது புலிகள்.

இலங்கையில் இனங்களுக்கு இடையிலான சமாதான நல்லுறவு முன்முயற்சியின் 10ஆவது முன்னெடுப்பும், 83 இனக்கலவரத்தின் பின்னாலான சுமார் 12 வருடகால யுத்தத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் 7ஆவது முன்முயற்சியுமான பிரபாகரன் - சந்திரிக்கா பேச்சுவார்த்தையானது இன்று முறுகல் நிலையை எட்டியுள்ளது. இனச்சிக்கல்களுக்கு இம்முறை எப்படியும் தீர்வைக் கொண்டுவந்து விடுவோமென சூழுரைத்த அரசியல் தீர்வாளர்களதும், சமாதானவாதிகளினதும் முகங்கள் சுண்டிக் கறுத்துவிட்டன.