Language Selection

சமர் - 10 : 03/04 -1994

தொண்டமானுக்கும் ஜ.தே.க கும்பலுக்கும் பல வருடங்களாகத் தொடர்ந்து வந்த காதல் இன்று கேள்விக்குறியாகி உள்ளது. இதைத் தொடர்ந்து தொண்டமான் எதிர்கட்சிகளுடன் கூடிக்குலாவத் தொடங்கியுள்ளார். தொண்டைமானின் இன்றைய நிலையை சுட்டிக்காட்டி பலர் தொண்டமான் மக்களின் நண்பன் என்று கருத்துப்பட கட்டுரைகள் வரைகின்றனர்.

அண்மைக் காலமாக கருணாநிதிக்கும் கோபாலசாமிக்கும் இடையிலான அதிரடிப்(அதிகார ?);போட்டி முன்னிலைக்கு வந்துள்ளது. இதை தொடர்ந்து கோபாலசாமியை தமிழ்ப்பற்று உள்ளவராக காட்டமுனையும் செய்திகள் பலதரப்பாலும் பரப்பப்படுகிறது.

அம்மா

நண்பர்கள் என்னைத்தேடி வந்து

கதவிலே தட்டும் போதெல்லாம்

தாயே நீ வெம்பிக் கண்ணீர் மல்குவதை

எண்ணி நான் வேதனைப்படுகின்றேன்.

தேயிலை செடிகள் மீது

தென்றல் இல்லை

இலைகளும், பூக்களும்

இறந்து விழுந்தன.

இன்னும் என்ன?

இன்னும் மலராத் தேசமொன்றில்

இருந்து வந்தவன் நான்

இங்கு பிறந்தது

நான் மட்டுமல்ல

நீ மட்டுமல்ல

நாம். சகோரதரர்கள்...

வயது வந்த ஆண், பெண் இரு பாலாரில் 9 கோடி பேர் சுமார் 50 சதவீதத்தினர் தாய்மொழியை ஆங்கிலத்தில் தெளிவாக உச்சரிப்புப் பிழையின்றி தொடர்ச்சியாக படிக்க இயலாது.

சமீபத்தில் நடந்த வர்த்தக மற்றும் வரி விதிப்பு பொது ஒப்பந்த ஸ்தாபனத்தின் ( காட்) பேச்சுவார்த்தையின் பொழுது அமெரிக்காவும் ஜரோப்பாவும் பெண்கள் அணியும் உள்ளாடைகள் ஸ்காட்ச் மதுபானத்தையும் இறக்குமதி செய்து கொள்ள இந்தியாவை நிர்ப்பந்தித்துள்ளன. இந்தியா ஸ்காட்ச் மதுபானத்தை இறக்குமதி செய்து கொள்ளாவிடில் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களை நாங்கள் மறுத்துவிடுவோம் என ஜரோப்பிய நாடுகள் மிரட்டியுள்ளனர்.

பாலஸ்தீன விடுதலை இயக்கத்தில் முக்கிய பதவியில் இருந்த அபுல்கனி இஸ்ரேலிய உளவாளியாக செயற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர் அரபாத்தின் நிழல் அமைச்சரவை உறுப்பினர்களில் பதில் உள்நாட்டு அமைச்சராக இருந்துள்ளார். இவரிடமே தற்போது உருவாகும் அரபாத்தின் கைக் கூலித்தனமான பொலிஸ்படையை அமைக்கும் பணியும் ஒப்படைக்கப்பட்டு இருந்தது.

விடுதலைப்புலிகட்கும் பிரேமதாசா அரசிற்கும் 89-90 களில் ஏற்பட்ட தேன் நிலவு முறிவடைந்து 90 ஆனியில் மீண்டும் ஒரு மோதல் நிலை ஏற்பட்டது. இராணுவம் தமிழர்களின் பாரம்பரிய பிரதேசத்துக்குள், பெரிய அளவில் முகாம்களை ஏற்படுத்தி புலிகளை அழிக்கவும் மொத்தத்தில் தமிழ்த் தேசிய இனத்தின் மேல் குரூரமான அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டது.

1. சுவடுகள் 51இல் ஜெயபாலன்:

 

கொடுங்கோலன் ஸ்டாலினுடைய----

 

ஏகாதிபத்தியம்: சபாஸ் ஜெயபாலன்

 

புரட்சிக்காரன்: ஸ்டாலின் சரி பிழைகளை ஆராய குறைந்த பட்சம் மக்களை நேசிக்கத்தெரிய வேண்டும்.

உயிர்ப்பு இதழ் மூன்று தனது அரசியல் வழியை தெளிவாக இனம் காட்டி வெளிவந்துள்ளது. அந்த வகையில் ஆசிரியர் தலையங்கம் உட்பட மற்றைய மூன்று கட்டுரையும் மார்க்சியத்தை குழிதோண்டி புதைத்துவிடும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது.

தமிழீழப்போரடடத்தில் தேக்கமும் புதிய தேடலும் எம்மை ஒரு சஞ்சிகையாக பரிணமிக்க வைத்தது. நாம் ஒரு சஞ்சிகையாக வெளிக்காட்டிய ஆரம்ப நாட்களில் ஜரோப்பிய முற்போக்குகளை மையமாக வைத்தே வெளிவந்தோம். சஞ்சிகையின் தொடர்ச்சியில் முற்போக்கு போலிகளை ஆரம்பத்தில் இனம் கண்ட நாம் இன்று மார்க்சியத்தின் மீதான தாக்குதலையும் இனம் காண்கின்றோம்.

மீண்டும் கரிகாலன் புதிய தலைப்பான கட்சி-அரசு சிவில் சமூக நிறுவனங்களுக்கு இடையேயான உறவு ஊடாக மார்க்சிய விரோதக் கட்டுரையை முன்வைத்துள்ளார். நாம் இவரின் கருத்தை விமர்சிக்கும் அதேநேரம் சரிநிகர் 13-14 ராஜன் என்பவர் எழுதிய இதே கருத்தை ஒட்டிய கட்டுரைக்கும் இது விமர்சனமாகும்.

 

மேற்கு நாடுகளில் ஜெகோவா என்ற சமய பித்தலாட்டவாதிகள் மக்களை திசை திருப்ப முயன்று வருகின்றனர். சர்வதேசரீதியில் சுரண்டும் வர்க்கம் மக்கள் மீது நடத்தும் காட்டுமிராண்டித் தனமான அடக்குமுறைக்கு உள்ளாகிய பலர் அந்நியநாடுகளில் அரசியல் புகலிடத்தை தேடுகின்றனர்.

31-12--1993 இரவு பரிஸில் லாச்சப்பல் எனும் இடத்தில் எம்மவர்களுக்கிடையில் துப்பாக்கிப் பிரயோகம் நடைபெற்றது. இதில் ஒருவரின் கழுத்தில் குண்டு பாய்ந்தது. தமிழ் மக்களின் கூடிய கடைகளைக் கொண்ட லாச்சப்பலில் லுண் கடைக்கு முன்பே இத் துப்பாக்கி சண்டை நடைபெற்றது.

பிரான்ஸ், டென்மார்க், புலிகள் அவ்வவ் நாடுகளில் இரண்டமைப்பாக உடைந்துள்ளனர். புலிகளின் வெளிநாட்டுப் பொறுப்பாளர்களின் கண்மூடித்தனமான அடக்குமுறையுடன் கூடிய ஜனநாய மறுப்பு சிலரை வெளியேற்ற வைத்துள்ளது.

புதிய ஜனநாயகப் புரட்சி மூலம் சோசலிச தமிழீழத்தையே உருவாக்க வேண்டும் என்பது எனது கருத்து. நாம் சிங்கள மக்களுடன் இணைந்து வாழமுடியாது என்று தான் தமிழீழம் என்று முடிவெடுத்தோம். ஆனால் சூழ்நிலைக்கு ஏற்றவாறு சில மாற்றங்கள் செய்வதில் தவறில்லை.

ரஸ்சியத் தேர்தல் சமீபத்தில் (12-12-1993) நடைபெற்றது. கம்யூனிஸ்டுக்கள் அடியோடு ஒழிந்துபோவார்கள். மக்கள் ஜெல்சினைத் தான் தெரிவு செய்வார்கள். மீண்டும் ஜெல்சீன்னே பெரும்பான்மை வாக்குகள் பெற்று வெற்றி பெறுவார் என்று கனவு கண்ட மேற்குலக அரசியல்வாதிகள் மாத்திரமல்ல பாசிச ஆதரவாளர்கள் தவிர யாவரும் அதிர்ச்சிக்குள்ளாகிப் போனார்கள்.

இந்தியாவின் ஒரு மாநிலமாக காஷ்மீரை கட்டாயப்படுத்தி இணைத்த இந்திய அரசு இன்று இராணுவ அடக்குமுறையை தீவிரப்படுத்தியுள்ளனர். 1947 இல் பாக்கிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானிலும் செல்வாக்குப் பெற்ற பதான்ஸ் என்ற இனக்குழு காஸ்மீர் மீது படையெடுத்தனர். அத்துடன் உள்நாட்டுக்கிளர்ச்சியிலும் மக்கள் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து சேக் அப்துல்லாவும் மகாராஜா ஒரிசிங்கும் நேருவுடன் ஒப்பந்தம் செய்து நிபந்தனையுடன் இந்தியாவுடன் இணைத்தனர்.

ஒரு பெண்ணை மானபங்கப்படுத்துவதோ அல்லது கற்பழிப்பதோ அல்லது இம்சிப்பதோ இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அவமதிப்பதாகாது, அதனுடன் இப்படிச் செய்தவர்களை தண்டிக்க மட்டுமே சட்டத்தில் இடம் உள்ளது. இவ்வாறு நீதி மன்றத்தில் திருவாய் மலர்ந்துள்ளார்.

உலகப்புகழ் பெற்ற மைக்கல் ஜாக்சன் ஒரு தன்னினச் சேர்க்கையாளன். மக்களின் போராட்ட உணர்வுகளை திசைதிருப்பும் வகையில் சீரழிந்த இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தும் இவன் பல சிறுவர்களின் வாழ்க்கையையும் நாசப்படுத்தியுள்ளான். அமெரிக்காவில் தன்னினச்சேர்க்கையையும் கருக்கொலையையும் சட்டபூர்வமாக அங்கீகரித்த கிளிங்டனுடன் கைகுலுக்கிக் கொள்ளும் மைக்கல் ஜாக்சன் ஒரு பணக்கார குற்றவாளியே.

நாம் சமர் 7 இல் ஆசிரியர் தலையங்கத்திலும் அரபாத்தின் துரோகத்தனத்தை சுட்டிக்காட்டியிருந்தோம். இரண்டு தலைமுறையாக பலஸ்தீன மக்கள் பல தியாகங்களுக்கு மத்தியில் தமது மண்ணுக்காக நடத்திய போராட்டத்தை அரபாத் போன்ற சுயநலவாதிகள் காட்டிக் கொடுத்துள்ளனர்.

சரிநிகர் 109 இல் ( நவம்பர் 07 நவ 20 ) புதியஜனநாயகக்கட்சியைச் சேர்ந்த சிவசேகரம் மூன்றாம் உலகில் சோவியத் தலையீட்டையொட்டி கூறுவதைப் பார்ப்போம்.