Language Selection

சமர் - 2 - 1991

(சமர் 1 இல் ‘தேச விடுதலைப் போராட்டமும் தேசிய சக்திகளும்’ என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை விவாதத்திற்கு முன் வைத்திருந்தோம். இது தொடர்பாக ஆரோக்கியமான கருத்து விவாதங்கள் எதுவும் நேரடியாக எமக்கு முன்வைக்கப்படவில்லை! ஆனால் ‘தூண்டில்’ ‘மனிதம்’ ஆகியவற்றில் வௌ;வேறு நோக்கு நிலைகளிலிருந்து கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன. சமரன் வெளியீடான கட்டுரை ஒன்றை அடுத்த காலடி என்ற பெயரில் லண்டனிலிருந்து வெளியிட்டிருந்தனர். இவற்றைத் தொட்டு நாம் எமது கருத்துக்களை முன் வைக்கிறோம்)

எங்கள் குழந்தைகளை
வளர்ந்தவர்களாக்கிவிடும்.


ஒரு சிறிய குருவியினுடையதைப் போன்ற
அவர்களின் அழகிய காலையின்
பாதைகளின் குறுக்காய்
வீசப்படும் ஒவ்வொரு குருதிதோய்ந்த
முகமற்ற மனித உடலும்

ரஷ்யாவின் அரண்மனைப் புரட்சி தோற்றதும் கம்ய+னிசத்திற்கு எதிரான பிரச்சாரங்கள் உலகெங்கும் தலைதூக்கியுள்ளன. முதலாளித்துவ அறிஞர்களும் - அறிவு ஜீவிகளும் - பத்திரிகையாளர்களும் முதுலாளித்துவ ஜனநாயகத்தையும், சுதந்திரத்தையும், சுதந்திர சந்தைப் பொருளாதாரத்தையும் தூக்கிப் பிடித்து ‘சர்வரோக நிவாரணி’ என்கிறார்கள்@ “அணையா  ஜோதி” என்கிறார்கள். “சோசலிச பொருளாதார கட்டுமானம் தோற்றுவிட்டது@ காலாவதியாகி விட்டது” என ரஷ்யாவையும் “முதலாளித்துவ சுதந்திர சந்தைப் பொருளாதாரம்தான் நிலையானது@ பிரச்சினையில்லாமல் முன்னேறக் கூடியது” பிரச்சினையில்லாமல் முன்னேறக் கூடியது” என மேலை நாடுகளையும் குறிப்பாக அமெரிக்காவையும் கை காட்டி உரத்துக் கூச்சலிடுகிறார்கள்.


ரஷ்யாவில் கடந்த 35 ஆண்டுகளாக இருந்தது சோசலிச பொருளாதாரமும்  அல்ல@ சோசலிச விஞ்ஞானம் தோல்வியடையாது என்பதும் ஒருபுறம் இருக்கட்டும். இன்று அவர்கள் தூக்கிப் பிடிக்கும் முதலாளித்துவ சுதந்திர சந்தைப் பொருளாதாரம் எப்படிப்பட்டது? நிலையானதா? நீடித்ததா? அமெரிக்காவின் பொரளாதார நிலையைப் பார்த்தாலே இதற்குரிய பதில் கிடைத்து விடுகிறது.

அமெரிக்காவின் பொருளாதாரம் வீழ்ச்சியுற்றிருப்பதற்கு அதன் வங்கித்துறையே ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. 2200 கோடி டாலர் சொத்துடைய 28 அமெரிக்க வங்கிகள் லாபமின்றி இயங்குகின்றன. 4300 கோடி ‘டாலர்’ சொத்துடைய 45 வங்கிகள் மூலதன விகிதாசாரப்படி 39மூ நட்டத்தில் இயங்குகின்றன. 92,600 கோடி டாலர் சொத்துடைய 150 வங்கிகள் 5மூ வரைநட்டமடைந்து செயல்படுகின்றன. 70,000 கோடி ‘டாலர்’ சொத்துடைய 15 பெரிய வங்கிகளில், 13 வங்கிகள் நடத்திலிருப்பதோடு அதன் சொத்து மதிப்பு குறைந்து கடன் அதிகரித்துள்ளது.

அமெரிக்க ஐக்கிய குடியரசின் இன்சூரன்ஸ் முதலீட்டு கம்பெனி ((FDIC) மோசமான நிதி நிலையிலேயே இயங்கி வருகிறது. இன்று FDIC 700 கோடி டாலரை செலவு செய்து 221 வங்கிகளை இழுத்து மூடிக் கொண்டுள்ளது.

உலகப் போலீசுக்காரனாக விளங்கும் அமெரிக்காவின் ராணுவச் செலவு, மேலும் மேலும் ப+தாரகராமாகிக் கொண்டிருக்கிறது. ‘நேட்டோ’ ராணுவ ஒப்பந்த நாடுகளில் ஒன்றான அமெரிக்கா பிற 15 நாடுகளின் மொத்த ராணுவச் செலவைக் காட்டிலும் 40 சதவிகிதம் அதிகம் செலவழிக்கிறது. இதை பிறநாடுகள் தமக்கு சாதகமாக்கிக் கொண்டு ராணுவத்தைப் பலப்படுத்;துவது – பாதுகாப்புப் பற்றி அதிகம் கவலைப்படாமல் உற்பத்தியில் கவனம் செலுத்தி வளர்ந்து வருகின்றன. அமெரிக்காவின் உற்பத்தித் துறையோ மேலும் மேலும் சுருங்கிக் கொண்டிருக்கிறது.

அறிவியல் - தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளில் முன்னணியில் இருந்த அமெரிக்கா இன்று பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டது. அதிநவீன தொழில் நுட்ப பொருள் உற்பத்தியே – புதிய கண்டுபிடிப்புகளே இன்றைய அனைத்தையும் தீர்மானிக்கும் காரணியாக மாறி வருகிறது. இதில் ஜப்பான் இன்று ஆதிக்கம் பெற்றுள்ளது. அதி நவீன தொழில்நுட்ப பொருள் உற்பத்திக்கு அடிப்படை தேவையான சிலிகான் துண்டை ஜப்பான்தான் பெருமளவு தயாரிக்கிறது. உலக சந்தையில் சிலிகான் துண்டு வர்த்தகத்தை 48.6 சதவிகிதத்தை ஜப்பான் கட்டுப்படுத்துகிறது. அமெரிக்காவோ 38.8 சதவிகிதத்தையே கட்டுப்படுத்துகிறது. இத்துறையில் ஜப்பான் தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் இருப்பதால் இன்று அமெரிக்கா புதிய வகை விஞ்ஞான முன்னேற்றத்திற்காக ஜப்பானிடம் கையேந்தி நிற்கிற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அமெரிக்காவின் உற்பத்தி பெருமளவிற்கு அந்நிய நாடுகளையே குறிப்பாக ஜப்பான், ஜெர்மனை சார்ந்திருக்கிறது.

உலகளவில் மூலதனத்தைக் கொட்டி அந்நிய நாடுகளைச் சுரண்டி மேலாதிக்கம் செலுத்தி வரும் அமெரிக்காவின் பொருளாதாரம் படுகுழியில் விழுந்துள்ளதற்கு இன்னொரு காரணம் அமெரிக்காவை அந்நியநாடுகள் குறிப்பாக ஜப்பான், ஜெர்மன் சுரண்டி விடுகின்றன. அமெரிக்காவின் உற்பத்தித் துறை, கட்டுமானத் துறை (ரியல் எஸ்டேட்) கருவ+ல கடனீட்டுப் பத்திரங்கள் ஆகியவற்றை அந்நிய மூலதனம் பெருமளவிற்கு தன்வசப்படுத்திக் கொண்டுள்ளன. அந்நிய மூலதனத்தால் அமெரிக்காவின் கடன், வட்டி, பற்றாக்குறை அதிகரிப்பதுடன் லாபம் பெருமளவிற்கு வெளியேறுகின்றது. 1987-ல் அமெரிக்கா அந்நிய நாடுகளில் வைத்திருந்த மூலதனம் 117 கோடி டாலர் 1 ஆனால், அதே ஆண்டில் அமெரிக்காவில் 154 கோடி டாலர் மூலதனம் அந்நிய கம்பெனிகளின் கட்டுப்பாட்டிலிருந்தன. இந்நிலை வருடந்தோறும் வளர்ந்து கொண்டுதான் உள்ளது.

அமெரிக்கா பட்ஜெட்டில் பற்றாக்குறை ஆண்டுதோறும் கட்டுங்கடங்காமல் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதை ஈடுகட்ட கருவ+ல கடனீட்டுப் பத்திரங்களை அமெரிக்கா வெளியிடுகிறது. 1980-ன் தொடக்கத்தில் நடப்பு கணக்கில் ஏற்பட்ட பற்றாக்குறையை ஈடுகட்ட இதுபோன்று கருவ+ல கடனீட்டுப் பத்திரங்களை வெளியிட்ட அமெரிக்கா, நாளடைவில் அதாவது 1980-ன் மத்தியில் மூலதனத்திலேயே பற்றாக்குறை ஏற்பட்டு கடனீட்டுப் பத்திரங்களை வெளியிட்டது. 1988-ன் கணக்குப்படி 17மூ கடனீட்டுப் பத்திரங்களையும் 12மூ உற்பத்திக்குரிய சொத்தையும் அந்நிய மூலதனம் கைவசப்படுத்தியிருந்தது. இந்த விகிதாசாரம் மேலும் மேலும் வளர்ந்தன் விளைவாக இன்று அமெரிக்காவின் பொருளாதாரத்தையும் மூலதன சந்தையையும், அந்நிய மூலதனம் கட்டுப்படுத்துகிறது. “அந்நிய மூலதனத்தின் விருப்பப்படி ஆடும் பிணைக் கைதியாகிவிட்டது. அமெரிக்கப் பொளாதாரம்! இந்நிலை தொடரந்தால் பங்கு சந்தையில் கடுமையான மோதலை தூண்டிவிடும் “என்கிறார், அமெரிக்காவின் பிரபல பொருளாதார நிபுணர் இ.பிரட் பெர்ஸ்டன்.

அமெரிக்காவின் வர்த்தகத்திலும் அந்நிய கம்பெனிகளே செல்வாக்கு செலுத்துகின்றன. அமெரிக்க கம்பெனிகளைக் காட்டிலும் அமெரிக்காவில் உள்ள அந்நிய கம்பனிகள் கச்சாப் பொருட்களை அதிகம் இறக்குமதி செய்கின்றன. அந்நிய கம்பெனிகள் கச்சாப் பொருட்கள் அதிகம் இறக்குமதி செய்கின்றன. அந்நிய கம்பெனிகள் தமது லாபத்தில் 80 சதவிகிதத்தை அமெரிக்காவிலிருந்து தமது தாய்க் கம்பெனிகளுக்கு கடத்துகின்றன. அமெரிக்காவின் வியாபார – வர்த்தக பற்றாக்குறைக்கு பாதியளவு காரணம், இந்த அந்நியக் கம்பெனிகளின் இறக்குமதியே ஆகும். இதேபோல் அமெரிக்காவின் ஏற்மதியும் படுவீழ்ச்சியை சந்தித்துள்ளது. அந்நிய நாடுகளைச் சுரண்டுவதன் மூலமே தனது பொருளாதாரத்தின் நாடியை பிடித்து வைத்திருக்கிறது.  1985-ன் கணக்குப்படியே அந்நிய நாடுகளிலுள்ள அமெரிக்க பன்னாட்டு தொழிற் கழகங்களின் எற்றுமதி அளவு 70,400 கோடி டாலர் அதே பொழுதில் அமெரிக்கா, 21,600 கோடி டாலர் அளவே தன் நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்தது!

அமெரிக்காவின் கச்சாப் பொருள் உற்பத்தியும் சுருங்கிப் போய் அந்நிய நாடுகளை சார்ந்திருக்கிற நிலையை எய்திவிட்டது. இன்று அமெரிக்கா வியாபார சாதனங்கள், மின் மற்றும் மின்னணு சாதனங்கள், அறிவியல் உபகரணங்கள், விவசாயக் கருவிகள் முதலியவற்றை ஏற்றுமதி செய்வதைவிட அதிக அளவு இறக்குமதி செய்கிறது. நாட்டின் தேவை ஒருபுறம் விரிந்து கொண்டே போவதும், மறுபுறம் பொருள் உற்பத்தியளவு சுருங்கிக் கொண்டே போதும் நீண்டு கொண்டே போவதைக் கண்டு செய்வதறியாது விழிபிதுங்கி நிற்கிறது அமெரிக்கா. 1979-ல் 600 கோடி டாலர் அளவிற்கு வீட்டு உபயோகப் பொருட்களைத் தயாரித்த அமெரிக்கா. 1987-ல் 200 கோடி டாலர் அளவே தயாரித்தது. அதே சமயம் தேவை எதிர்மறையாக இருந்தது.

இவையின்றி அமெரிக்காவின் சமூக மேம்பாட்டுத் திட்டங்களுக்குரிய அரசு ஒதுக்கீட்டையும் குறைத்துக் கொண்டே வருகிறார்கள் ஆட்சியாளர்கள். 1980-லிருந்து 88-க்குள் கல்விக்கென ஒதுக்கிய நிதியை 63மூ குறைத்துவிட்டது.அமெரிக்க அரசு 1981-88-க்குள் வீட்டு வசதி துறைக்கு உரிய தொகையில் 81மூ வெட்டிவிட்டது. சுற்றுப்புறச் சூழலுக்கு செலவழித்த தொகையை பத்தாண்டுகளில் (1978-88) பாதியாக்கிவிட்டது. இதேபோல் தொடர்ந்து உற்பத்தியை குறைப்பதாலும், ஆலைகள் இழுத்து மூடுவதாலும் தொழிலாளர்களின் எண்ணிக்கையையும் குறைத்து வருகிறது. மேலும் அமெரிக்காவின் சமூக உறவு, குடும்ப உறவு, தனிமனித ஒழுக்கம் மூதலான அனைத்தும் சீரழிந்து கிடப்பதை உலகமே அறியும்!.

அமெரிக்காவில் முன்னேற்ற பாதையில் இருப்பது ஆயுத உற்பத்தியும் போதைப் பொருள் விற்பனையும்தான்@ அமெரிக்காவில் பொருள் உற்பத்தி – வர்த்தகத்தின் மூலதனத்தைக் காட்டிலும் ஆயுத உற்பத்தியும் மற்றும் போதைப் பொருள் விற்பனையில் புரளும் மூலதனம் அதிகரித்து விடுமோ என அவர்களே (?) அஞ்சுகிறார்கள். அமெரிக்காவிலுள்ள வங்கிகள் பல போதைப் பொருள் கடத்தல், ஆயுதக் கடத்தல், கள்ளப் பணக்கடத்தல் முதலானவற்றிற்கே ரகசியமாக முன்னுரிமை கொடுது;து சேவை புரிகின்றன.

சுருக்கமாகச் சொன்னால், அமெரிக்காவின் பொருளாதாரம் இராணுவ – ஆயதப் பொருளாதாரமாகவும், ய+கப் பொருளாதாரமாகவும் - சூதாட்டப் பொருளாதாரமாகவும் மாறிவிட்டது. முதலாளித்துவ கட்டமைப்புக்கே உட்படாமல் - முதலாளித்துவப் பொருளாதாரவாதிகளின் கற்பனைக்கே எட்டாமல் தன்னை அன்னியப்படுத்தி நிற்கின்றது. முதலாளித்துவ சுதந்திர சந்தைப் பொருளாதாரம் இப்படி 1960 வாக்கில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டபோது அமெரிக்கா ஆட்சியாளர்கள் எற்கனவே வகுத்தஅமைப்பை மறு ஒழுங்கு செய்ய வேண்டி நேர்ந்தது. அதாவது ‘ய+கப் பொருளாதாரம்’ திட்டமிடப்பட்ட பொருள் உற்பத்திக்கு நேரெதிரான அராஜகமான சூடாட்ட முறையாகும். அன்று பொருள் உற்பத்தியை பெருமளவில் முடக்கி எண்ணற்ற தொழிலாளர்களை வீதியில் வீசினார்கள். ‘ய+க மூலதனத்திற்கு அகலக் கதவு திறந்துவிட்டார்கள். பங்குச்சந்தை சூதாட்டமும், போதைப் பொருள் வியாபாரமும் ஆயுதக் கடத்தலும் பெருகியது. இன்று இவை அமெரிக்கப் பொருளாதாரத்தை ஆட்டுவிக்கும்போய்களாக மாறிவிட்டன.

இப்படி மரணப் படுக்கையில் வீழ்ந்து மூச்சு வாங்கிக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா! அமெரிக்காவின் ஆதிக்க வெறி பிடித்து அலைந்தது. பிற நாட்டின் உள்நாட்டுப் விவகாரங்களிலும் அத்துமீறி தலையிட்டது. தலையாட்டாத ஆட்சியாளர்களின் தலைகளையெல்லாம் பல சதிகளை செய்து வெட்டி வீழ்த்தியது. பல நாடுகளில் ராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு நடத்தியது. இதற்காக யாரையும் பயன்படுத்த தயங்கவில்லை. அனைத்து ஒழுங்கு முறைகளையும் மீறியது. பல நாடுகளின் கிரிமினல் கும்பலுக்கும் பிரிவினை சக்திகளுக்கும் தனது அடிவருடி குழுக்களுக்கும் ரகசியமாக ஆயுதங்களைக் கொடுத்து தூண்டிவிட்டது. தமது ஆதிக்கத்திற்கு எதிராக போராடுபவர்களிடையே போதைப் பொருள் - ஆபாசக் கலாசாரத்தைப் பரப்பி அடிமைகளாக்கியது. உலகையே தனது விரல் நுனியில் நிறுத்தி பார்ப்பதற்காக “புதிய உலக ஒழுங்கமைப்பு” திட்டத்தைப் போட்டுக் கொண்டு ராணுவத்திற்கும், விண்வெளிப் போருக்குமென ரசகியமான பணத்தைக் கொட்டியது.

இன்று இவையெல்லாம் சேர்ந்து அமெரிக்காவையே திருப்பித் தாக்குகின்றன@ அமெரிக்கப் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணிகளாகி விட்டன. இது முதலாளித்துவத்தின் தவிர்க்க முடியாத விதி! தானே தனக்கு படுகுழுp தோன்றிக் கொள்வதை முதுலாளித்துவ பிரச்சாரகர்கள் என்னதான் கூச்சல் போட்டாலும் தடுக்க முடியாது. ராசு

ரசிய கம்ய+னிஸ்ட் கட்சியின் 20-வது காங்கிரசில் ஸ்டாலின் மீது வைக்கப்பட்ட விமர்சனம்,கொள்கை மற்றும் முறை ஆகிய இரண்டிலும் தவறானது.

“ரசியப் பொருளாதாரம் பற்றிய ஒரு விமர்சனம்” என்ற இந்நூல் ரசிய புரட்சி பற்றியும் அதில் ஸ்டாலின் பங்கு பற்றியும் மறு மதிப்பீடு செய்வதற்கான தூண்டுகோலாக உள்ளது. இக் கண்ணோட்டத்திலிருந்து இந்தக் குறிப்புரைகளைப் பயனுள்ள வகையில் படிக்கலாம். ஆனால், இக்குறிப்புரைகளை ஒரு வரலாற்று ரீதியான ஆய்வு என்ற முறையிலோ அல்லது ஸ்டாலினுடைய வரலாற்று ரீதியான பாத்திரத்தைப் பற்றிய விமர்சன ரீதியான மதிப்பீடு என்ற முறையிலோ மாவோ எழுதவில்லை. மாவோவின் உண்மையான நோக்கம் ரசிய அனுபவங்களின் பல்வேறு அம்சங்களை ஆய்வுசெய்வதன் வாயிலாகப் பெறப்படும் படிப்பனைகளினூடே சீனப்புரட்சி எதிர் கொண்டுள்ள பிரச்சினைகளை ஆய்வு செய்வதேயாகும்.

சிறீலங்கா இனவாத அரசு தமிழ்தேசிய இனத்தின் மீது தனது இறுகிய கொலைக்கரங்களை நீட்டியது மட்டுமின்றி சிங்கள மக்களைக் கென்று குவித்தையும் 19.02.1991இல் கொழும்பில் கூடிய அன்னையர் முன்னணியினர் அம்பலப்படுத்தினர். இது ஒரு புறமிருக்க,


தென்கிழக்காசியப் பகுதியிலேயே ஆரோக்கியமான வெடிகுண்டு அரசியல் நடாத்தும் பாசிச விடுதலைப் புலிகள் 1991 மாசி – பங்குனி “விடுதலைப் புலிகள்” பத்திரிகையில் கொழும்பி; நடைபெற்ற அன்னையர் முன்னணியினரின் போராட்டத்திற்கு ஆரவு கொடுப்பது என்று வெளியிட்ட செய்தி எவ்வளவு அப்பட்டமானது.

சொந்த மண்ணிலேயே நூற்றுக்கணக்கான அப்பாவி இளைஞர்களைக் கொன்றவர்கள் இவர்கள். இது மட்டுமா? எத்தனை பல்கலைக்கழக மாணவர்கள் விரிவுரையாளர்கள் ஜனனாயகம் வேண்டி நின்ற முற்போக்குவாதிகள், கம்ய+னிஸ்ட் கட்சி அங்கத்தவர்கள் என்று எத்தனை பேரைக் கொன்றார்கள். பட்டியலை நீட்டிக்கொண்டே போகலாம்.

பிறந்து வளர்ந்த மண்ணை விட்டே குறிப்பிட்ட நேரத்தில் முஸ்லீம் மக்களை விரட்டியதை மறக்க முடியுமா?

தங்களால் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் இளைஞர்களின் அன்னையரின் கண்ணீர் கோரிக்கை இவர்களின் கண்ணுக்குத் தெரியவில்லையா?
சிங்கள மக்கள் மேலான கொக்கிளாய், நாயாற்று படுகொலை 15 மே 1985இல் அநுராதபுரத்தில் குழந்தையிலிருந்து முதியோர்வரை 150க்கு மேற்பட்டோரை கொன்ற புலிகள்-

1987 ஆவணியில் திருகோணமலை பகுதியில் அப்பாவிச் சிங்கள மக்களை கொன்ற புலிகள்-

காத்தான்குடி பள்ளிவாசலில் முஸ்லீம்களைப் படுகொலை செய்த புலிகள்-

எத்தனையோ சிங்களக் கிராமங்களில் புகுந்து மக்களை இரவோடிரவாக சுட்டும், வெட்டியும் கொன்ற புலிகள்-

அன்னையர் முன்னணியின் போராட்டத்திற்கு ஆதரவு கொடுப்பது என்பது அவர்களின் ஏமாற்றுவித்தையின் பிறிதொரு பாணியே!

இவர்களிடம் யார் கேட்பது நியாயம்? தங்களின் இருப்பை நிலைநிறுத்த நீலிக் கண்ணீர் வடிக்கிறார்கள் புலிகள்!

எனது மயிர் பொசுங்கி விட்டது
எனது தோல் கருகிவிட்டது
எனது காதுச்சோணைகள் எரிந்துவிட்டன
இந்த ரணங்களோடுதான்
மீண்டும் எழுந்திருக்கிறேன்

எங்கு எமது தேசத்தின் அரசுக்கெதிரான போராட்டமானது ஆயுதம் தாங்கிய வன்முறைப் போராட்டமாக மாற்றமடைந்த காலத்திலிருந்தே பெண்களின் சுதந்திரம் தொடர்பாகவும் பெண்விடுதலை தொடர்பாகவும் பல்வேறுபட்ட கருத்துக்கள் குறிப்பான ஒரே நோக்கு நிலைமையிலிருந்து பலராலும் பல அமைப்புக்களாலும் பெண்விடுதலை தொடர்பாக LTTE தலைவர் வே.பிரபாகரன் கூட அறிக்கை விடுகின்ற அளவிற்கு இது முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

இலங்கையில் தீர்வு காண முடியாத பிரச்சினையாகத் தொடரும் தமிழ் தேசிய இனப்பிரிச்சினையை அதிகாரத்திலுள்ள பாசிச U.N.P பேரினவாத அரசு தமது ஆட்சியினைத் தொடர முழு மக்களையுமே மரணத்தின் விளிம்புக்குத் தள்ளியுள்ளது. இன்று தென்கிழக்காசிய நாடுகளின் நிலையும் இதுதான்.

நான்
அழுவதற்கு வரவில்லை – அவர்கள்
விழுந்த இடத்தில்
இன்னும்
உயிரோடு இருப்பவர்களே!
உங்களிடம் பேசத்தான்…
உங்களை நோக்கியும்
என்னை நோக்கியும்

1990 ஜுன் பிரச்சினைகளுக்குப் பிறகு முல்லைத்தீவில் வந்து குவிந்த அகதிகளுக்காக வழமைபோல பல்கலைக்கழக மாணவர்கள் பொதுமக்களிடம் பொருட்களைச் சேகரிக்கத் தொடங்கினர். இந்த நிவாரண பொருட்களை LTTE தன்னுடைய பெயரில் மட்டுமே வழங்க வேண்டும் என்று கேட்டது. எரி பொருள் வாகனப் போக்குவரத்து போன்ற விடயங்கள் LTTE இல் மட்டுமே தங்கியிருக்க வேண்டியிருந்ததால் மாணவர்கள் இதற்கு விருப்பமின்றிச் சம்மதிக்க வேண்டியிருந்தது. இந்தக் காலகட்டத்தில் தங்களால் தலைமை தாங்கி நடத்தப்படுகின்ற இந்தப் போராட்டத்திற்கு எல்லோரும் ஆதரவு தர வேண்டும் என்று LTTE பொது அழைப்பு விட்டது. இது தொடர்பாக நடு நிலையான விமர்சன அறிக்கையொன்றை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பத்திரிகைகளுக்குக் கொடுத்தது. ROOTE என்ற LTTE கட்டுப்பாட்டிலுள்ள அமைப்பு ஒன்றிலிருந்த சிலர் இந்த அறிக்கை தொடர்பாக மாணவர்களுடன் பேசினர். இந்தப் பேச்சுக்களின் முடிவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் பத்திரிகைக்குக் கொடுக்கப்பட்டது.

இதழ் ஒன்றில் தூண்டிலின் 3வது நிலை பற்றி நாம்… என் பகுதியில் 3வது நிலைக்கான கோரிக்கைகள் சிலவற்றை முன் வைத்திருந்தோம். அத்துடன் இம்மூன்றாவது நிலையானது எமது மண்ணில் உருவாக முடியாதென்பதால் வெளிநாடுகளில் உள்ள நாம் இம் மூன்றாவது நிலையினை உருவாக்குவதற்கு ஒன்றிணைவது பற்றிக் கேட்டிருந்தோம்.

சமர் இதழ் ஒன்றிற்கும் இதழ் இரண்டிற்குமிடையே நீண்ட இடைவெளி. இடையே கொக்கட்டிச்சோலையில் குருதிவெள்ளம் நூற்றுக்கணக்கில் மனித உயிர்களைப் பலிகொடுத்தபோது இதயம் இரும்பால் அறையப்படடது. ரஞ்சன் விஜேரத்தினா இறந்துபோனான். “நேர்மையான அரசியல்வாதி”, “ஜனநாயகத்தின் பாதுகாவலன்” என்று வாழ்த்துப் பாடிய கொழும்பு தமிழ் துரோகக் கும்பல்கள் ஒவ்வொரு தமிழனையும் வெட்கித் தலைகுனிய வைத்தன. ராஜீவ்காந்தி கொலை! இதே புகழுரைகள். ஈழம் மறுபடியும் சிரித்துக்கொண்டே அழுதது. தென்னிந்தியாவில் நிறையத் தமிழர்களைக் காணவில்லை. தேடப்பட்டார்கள்! சாகவில்லை@ கொல்லப்பட்டார்கள்! கொழும்பில் குண்டு வெடித்தது இதே நிலை! ஆனையிறவில் ஆயிரக்கணக்கில் பிணக்குவியல்கள் ஒருகாலத்தில் உப்பு விளைந்த நிலம் இன்றைக்கு பிணங்களை விளைவித்துக் கொண்டது. நல்ல இயற்கை உரம் இனிமேல் புற்களும் விளையும்! எமது தாய்நிலம் சுடுகாடு. எமது கலாச்சாரம் கொலைக்கலாச்சாரம், எமது தேசிய தொழில் கடத்தல் மிரட்டல், கொலை, கொள்ளை!