Language Selection

மருத்துவம்

 

- கவிதா சேகர், காரைக்குடி.

1)  வகுப்புப் பாடங்கள் கவனிக்கும் போது தலைவலி அல்லது களைப்பாக இருப்பது.

 

2)  கண்கள் அடிக்கடி கலங்கிக் காணப்படுவது.

 

3) இரண்டு கண்களிலும் பார்வை சீராக இல்லாமலிருப்பது.

 

4)  கடைக்கண் இமைகள் சிவந்து அல்லது வீங்கி இருப்பது.

 

5) கண் கட்டி அடிக்கடி வருவது.

 

6) சாதாரணமாக இருக்கும்போதோ அல்லது படிக்கும் போதோ கண்களில் நீர் வடிவது போன்ற பிரச்னைகள் ஏற்பட்டால் உடனே டாக்டரைப் பார்க்க வேண்டும். 

 

மாறுகண்ணை சரி செய்ய முடியுமா? எனது சித்தி பெண்ணுக்கு மாறுகண் உள்ளது? அவள் வயது 22.

 

- .வேதவல்லி, பெங்களூரு.

 

கண்கள் இரண்டும் ஒரே நோக்குடன் இல்லாமல் ஒன்றுக்கொன்று முரண்பட்டு வெவ்வேறு திசைகளை  நோக்கி இருந்தால் அது மாறுகண் (Squint) எனப்படும். சிலர் இதை அதிர்ஷ்டத்தின் சின்னமாகக் கருதுகிறார்கள். சிலர் நாளடைவில் தானாகவே சரியாகிவிடும் என்று விட்டுவிடுகிறார்கள். இவை தவறான கருத்துக்களாகும். மாறுகண் நோய் உடனடியாகக் கவனிக்கப்படவேண்டிய ஒன்று. அதைத் தக்க சமயத்தில் சரி செய்யாவிட்டால் அந்தக் கண் பார்வையை இழந்துவிடும் அபாயம் உள்ளது. 10 வயதிற்குள் இந்தப் பிரச்னையை சரி செய்ய வேண்டும்.. வயதாகியும் சிலர் மாறுகண்ணோடு நன்றாக இருப்பதுபோல்தான் தெரியும். ஆனால் அவரின் கண் நரம்புகள் பாதிப்படைந்திருக்கும். ஆகவே இதை உடனே கவனிப்பதே நல்லது.

 

கண்களில் பூ விழுவது என்றால் என்ன?

 

- லில்லி, அம்பத்தூர்.

 

கண்களில் கருவிழியில் வெள்ளையாகத் தெரிவதைத்தான் பூ விழுந்து விட்டது என்கிறோம். இது வந்தால்  உடனடியாக கண் மருத்துவரிடம் காட்ட வேண்டும். அது புரையாக இருக்கலாம். அல்லது கண்ணில் தோன்றும் புற்றுநோயாகவும்கூட இருக்கலாம்.

 

கண்களுக்கு வைட்டமின் `சிறந்தது என்கிறார்கள். எந்தெந்த உணவுகளில் வைட்டமின் `அதிகமாக உள்ளது?

 

- காயத்ரி கோபாலகிருஷ்ணன், டால்மியாபுரம்.

 

முருங்கைக்கீரை, முளைக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை, அரைக்கீரை, முருங்கைக்காய் போன்ற பச்சைக் காய்கறிகள், எளிதாகக் கிடைக்கக் கூடிய பப்பாளிப் பழம் போன்றவற்றில் வைட்டமின் `போதிய அளவு உள்ளது. மேலும் மாம்பழம் கேரட், பால், வெண்ணெய், முட்டை, மீன், மீன் எண்ணெய் ஆகியவற்றிலும் இச்சத்து உள்ளது.

 

மூக்குக் கண்ணாடியை எப்படி செலக்ட் செய்ய வேண்டும்?

 

சங்கர், போரூர்.

 

கண்ணாடி பிரேம்கள் வலுவுடையவையாகவும், லென்சுகளை எல்லாப் பக்கங்களிலும் நன்றாகப் பிடித்திருப்பவையாகவும், மூக்கில் படியும் பகுதிபிரேமுடன் நன்கு பொருந்தியவையாகவும் இருக்க வேண்டும். காண்டாக்ட் லென்ஸ் அணிபவர்கள், மூக்குக் கண்ணாடியும் ஒன்று வைத்திருப்பது நல்லது.

 

கண்களைப் பாதுகாக்க என்னென்ன வழிமுறைகளைப் பின்பற்றலாம்?

 

- லதா, மந்தைவெளி.

 

இரவில் படுக்கைக்குப் போவதற்கு முன்பு கண்களையும், முகத்தையும் சுத்தமான தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும்.

 

எக்காரணத்திற்காகவும் அழுக்குத்துணி அல்லது பிறருடைய கண்களைத் துடைக்கப் பயன்படுத்திய துணி ஆகியவற்றைக் கொண்டு நம்முடைய கண்களைத் துடைக்கவே கூடாது.

 

கண்நோய் அல்லது கண் வலி, தூசு, பிசிறு போன்றவை இருந்தால் பச்சிலைச்சாறு, தாய்ப்பால் அல்லது மற்றவர் சொல்லும் கண்ட கண்ட மருந்துகள் போன்றவற்றைக் கண்களில் போடவே கூடாது. இவை அனைத்தும் கண்களைக் கெடுத்துவிடும். காலதாமதம் செய்யாமல் கண் மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

கண் மருத்துவம்-டாக்டர் பதில்கள்

Dr சித்தார்த்தன்.

 

தொகுப்பு : தி.

http://rammalar.wordpress.com/2008/08/29/கண்-மருத்துவம்/

என் வயது 26. பற்கள் நிஜமாகவே வெள்ளை நிறமாகத்தான் இருக்குமா? ஏனென்றால் என் பற்கள் சிறிது பழுப்பு நிறமாக உள்ளன?

 

- பரிமளா, கொரட்டூர்.

 

ஆரோக்கியமான மற்றும் முழுமையாக உருவாகிய பற்கள் வெள்ளை நிறமாக இருக்காது. இருக்கவும் கூடாது. சிறிது பழுப்பு  நிறமாகத்தான் இருக்கும். உங்களுக்கு இன்னொன்று தெரியுமா? பலமான பற்கள் சிறிது பழுப்பு நிறமாகவே இருக்கும். அதனால் கவலைப்படாதீர்கள்.

 

பால் பற்கள் எந்தப் பருவத்தில் முளைக்கும்? நிரந்தரப் பற்கள் எந்தப் பருவத்தில் முளைக்கும்? தெரிந்து கொள்ள சற்று ஆர்வமாக உள்ளது?

 

- தினேஷ், மவுண்ட்ரோடு.

 

கீழ் முன்வெட்டுப் பற்கள் - 6 மாதம் முதல் 15 மாதம் வரை

 

பக்கவாட்டு வெட்டுப்பற்கள் - 9 மாதம் முதல் 15 மாதம் வரை

 

கீழ்த்தாடை முதல் அரைக்கும் பற்கள் - 12 மாத அளவில்

 

கீழ்த்தாடை இரண்டாம் அரைக்கும் பற்கள் -20 மாத அளவில்

 

கீழ்த்தாடை அரைக்கும் பற்கள் - 16 மாத அளவில்

 

நிரந்தரப் பற்கள்

 

மைய வெட்டுப்பல் - 6-7 வயதில்

 

பக்க வெட்டுப்பல் - 7-8 வயதில்

 

கோரைப் பற்கள் - 9-10 வயதில்

 

முதல் முன் கடைவாய்ப் பற்கள் - 10-12 வயதில்

 

இரண்டாம் கடைவாய்ப் பற்கள் - 11-12 வயதில்

 

முதல் கடைவாய்ப் பற்கள் - 6-7 வயதில்

 

இரண்டாம் கடைவாய்ப் பற்கள் - 11-13 வயதில்

 

மூன்றாம் கடைவாய்ப் பற்கள் - 17-18 வயதில் இந்தப் பற்கள் சுமார் ஓரிரு ஆண்டுகள் தாமதமாக முளைக்கலாம்.

 

என் பற்களின் மேல் காரை காரையாகப் படிந்திருக்கிறது. ஏன்?

 

லிவிங்ஸ்டன், அண்ணாநகர்.

 

உமிழ் நீரில் உள்ள ஜீலீ 7 ன் அளவு குறையுமானால் அதிலுள்ள கால்சிய உப்புச்சத்து பற்கள், மேல் படிந்து காரையாக மாறிவிடும். இது ஆரம்பத்தில் படிமமாக்கப்பட்டு, கடினமாகும். ஈறு உள்ள இடத்தில் தங்குவதால் ஈறினை உறுத்தி வலியை ஏற்படுத்தும். இந்தக் காரை மஞ்சளாகவும் கருப்பாகவும் இளநீலமாகவும் இருக்கும். இது பற்களின் மேல் படிவதால் பயோரியா வியாதி ஆரம்பிக்கிறது. அதுமட்டுமல்ல, பற்களை சரியாகச்  சுத்தம் செய்யாதவர்களின் பற்களிலும் கரை படியும்!

 

பற்கள் எடுத்த பிறகு உடனே எதை எதையெல்லாம் பின்பற்ற வேண்டும்?

 

- ஆனந்தி பாபு, அண்ணாமலைபுரம்.

 

பற்கள் எடுத்த இடத்தில் வைக்கப்பட்ட பஞ்சினை சுமார் ஒரு மணி நேரம் கழித்து நீக்கிவிட வேண்டும்.

 

நாக்கையோ, விரலையோ பயன்படுத்தி பல் எடுத்த இடத்தை நோண்டக் கூடாது. டாக்டரின் ஆலோசனையில்லாமல் ஐஸ்கட்டி வைப்பதை தடுக்க வேண்டும்.

 

பற்கள் எடுத்த ஆறு மணி நேரத்திற்குப் பின், வெந்நீரில் சிறிது சமையல் உப்புக் கலந்து வாய் கொப்பளிக்கலாம். தொடர்ந்து இரத்தக் கசிவு இருக்குமேயானால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

 

 

பல் மருத்துவம்- டாக்டர் பதில்கள்

  Dr தாயப்பன்

 http://rammalar.wordpress.com/2008/08/29/பல்-மருத்துவம்/

என் அருமை இனிப்புப் பிரியர்களே,

இனிப்யை விரும்பிச் சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்? காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காப்பியிருந்து இரவு படுக்கச் செல்லும் முன் குடிக்கும் பாலில் வரை சர்க்கரை ஒரு ஊடுபொருளாக நமக்குள் செல்கிறது. பதார்த்தத்தில்தான் என்றில்லை. சர்க்கரையை அப்படியே அள்ளியும் சாப்பிடுகிறோம்.

இந்த வெள்ளைச் சர்க்கரையை எப்படித் தயார் செய்கிறார்கள் என்கிற விபரத்தை நீங்கள் தெரிந்து கொண்டீர்கள் என்றால் இனி அதைத் தொடக்கூட மாட்டீர்கள். குறிப்பாக, வெள்ளைச் சர்க்கரைத் தயார் செய்ய என்னென்ன ரசயாணப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று பாருங்கள்.

1. கரும்பிலிருந்து சாறு பிழியப்படும் நிலையில் பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் கெமிக்கலை புளுயுடு பாக்டீரியா கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள்.


2. பிழிந்த சாறு 60 செண்டி கிரேட் முதல் 70 செண்டி கிரெட் பாஸ்போரிக் ஆசிட் லிட்டருக்கு 200 மில்லி வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது. இந்த இடத்தில் இந்த ஆசிட் அழுக்கு நீக்கியாக பயன்படுத்தப்படுகிறது.


3. இதன் பிறகு சுண்ணாம்பை 0.2 சதவிகிதம் என்கிற அளவில் சேர்த்து சல்பர்-டை-ஆக்சைடு வாயு செலுத்துகிறார்கள்.


4. 102 செண்ட் கிரேட் கொதிகலனில் சூடுபடுத்தி நல்ல விட்டமின்களை இழந்து, செயற்கை சுண்ணாம்பு சத்து அளவுக்கு அதிகமாக சேர்ந்துவிடுகிறது.


5. அடுத்து, பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து தெளிகலனில் மண், சக்கை போன்ற பொருள்களாக பிரித்து எடுக்கப்பட்டு தெளிந்த சாறு கிடைக்கிறது.


6. சுடுகலனில் காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா சேர்த்து அடர்த்தி மிகுந்த ஜுஸ் தயாரிக்கப்படுகிறது.


7. மறுபடியும் சல்பர் டை ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்க படிகநிலைக்கு வருகிறது சர்க்கர. சல்பர் டை ஆக்சைடு நஞ்சு சர்க்கரையில் கலந்துவிடுகிறது.


8. இப்படித் தயாரான சர்க்கரையில் விஞ்சி நிற்பது வெறும் கார்பன் என்னும் கரியே.

தயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கும் அதிகமான சர்க்கரையை சாப்பிடக்கூடாது. காரணம், அதில் உள்ள சல்பர்டை ஆக்சைடு என்னும் ரசயானம் மஞ்சல் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது.

உங்கள் சட்டை காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா? கவலைப்படாமல் கொஞ்சம் சர்க்கரையை எடுத்து தேய்த்துப் பாருங்க. நிச்சயமாகப் போகும். ஆக, சட்டை அழுக்கைப் போக்கும் ஒரு சமாச்சாரத்தைத் தான் நாம் அள்ளி அள்ளித் தின்று கொண்டிருக்கிறோம். இந்த சர்க்கரையை சாப்பிட்டால் நம் குடல் என்ன பாடு படும்?

குடல் மட்டுமல்ல, பல் வலி, பல் சொத்தை, குடல்புண், சளித்தொல்லை, உடல்பருமன், இதய நோய் மற்றும் சர்க்கரை வியாதி (ரத்த அழுத்தம், இதயநோய் போன்ற பெரிய வியாதிகள் அனைத்துக்கும் இதுதான் பிரதான நுழைவுவாயில்) நிச்சயம் வரும்.

சரி, இன்று முதல் வெள்ளைச் சர்க்கரை சாப்பிட வேண்டாம். இனி இனிப்புக்கு என்ன வழி?

வழியில்லாமல் இல்லை. ஆலைகளில் தயாரான வெள்ளைச் சர்க்கரையை சாப்பிடுவதை ஒழித்துக் கட்டிவிட்டு, வெல்லம், நாட்டுச் சர்க்கரைகளை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதனால் உங்களுக்கு ரத்த அழுத்தமோ, இதய நோயோ, சர்க்கரை வியாதியோ வராது.

 

http://samsari.blogspot.com/2008/08/blog-post_28.html

சீனாவில் உள்ள மக்கள் 400 வகையான காய்கறிகளை சமைத்து உண்கிறார்கள். மேலும், இயற்கையோடு இயைந்த விளைச்சலில் காய்கறிகளை அறுவடை செய்து உண்கிறார்கள். இதனால் அவர்களது ஆயுள் காலம் அதிகரிக்கிறது.

நாமோ 50 வகைககளுக்கும் குறைவான காய்கறிகளையே சமைத்து உண்கிறோம். அதிலும் பல காய்கறிகள் ஆங்கிலக் காய்கறிகள்... நமது ஆயுள்காலம் பற்றி சொல்லவா வேண்டும்...

சரி, நாம் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகளின் பயன்களும் , பக்க விளைவுகளும் பற்றி இங்கே காணலாம்..!

கத்தரிக்காய்

இதில் பல வண்ணங்கள் உண்டு என்றாலும் அனைத்திலும் உள்ள சத்து ஒன்றேதான். பிஞ்சு கத்தரிக்காய் சமைப்பதற்கு நல்லது. முற்றின கத்தரிக்காய் அதிகம் சாப்பிட்டால் சொறி சிரங்கைக் கொண்டு வரும்.

இதில் தசைக்கும், இரத்தத்திற்கும் உரம் தருகிற வைட்டமின்கள் சிறிதளவு உள்ளன. இதனால் வாய்வு, பித்தம், கபம் போகும். அதனால் தான் பத்தியத்துக்கும் இக்காயைப் பயன்படுத்தச் சொல்கிறார்கள். அம்மை நோயால் பாதிக்கப்படுபவர்கள் இதை உண்டு நல்ல பயன் பெறலாம்.

அவரைக்காய்

இதிலும் பல வகைகள் உண்டு. வெள்ளை அவரைப் பிஞ்சை நோயாளிகள் உண்ணும் காலத்தில் பத்திய உணவாக உண்ணலாம். இதை சமைத்து உண்டால் உடலை உரமாக்கும், காம உணர்ச்சியைப் பெருக்கும். சூட்டுடம்புக்கு இது மிகவும் நல்லது. இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது மிகவும் ஏற்றது.

வெண்டைக்காய்

இதன் சுபாவம் குளிர்ச்சி. இதனுடன் சீரகம் சேர்த்து சமைப்பது நல்லது. இது வறண்ட குடலைப் பதப்படுத்தும் இதில் வைட்டமின் 'சி' , 'பி' உயிர்ச்சத்துக்கள் உள்ளன. இதை உண்டுவந்தால் சிறுநீர் பெருகும். நாள்பட்ட கழிச்சல் நீங்கும். சூட்டைத் தணிக்கும். உஷ்ண இருமலைக் குணமாக்கும்.

வெண்டைக்காய் உணவு விந்துவை கட்டி, போகத்தின் உற்சாகத்தை உண்டாக்கும். நல்ல வெண்டைப் பிஞ்சுகள் இரண்டொன்றை பச்சையாகவே தினந்தோறும் வெறும் வயிற்றில் உண்டு வந்தால், மருந்து இல்லாமலேயே இந்திரிய நஷ்டம் சரிப்பட்டு விடும். உடம்பில் வாயுமிக்கவர்கள் இதை அதிகமாக உண்டால் வயிற்று வலியை ஏற்படுத்தி விடும்.

புடலங்காய்

இது சற்று நீரோட்டமுள்ள காய். சூட்டுடம்புக்கு ஏற்றது. உடம்பின் அழலையைப் போக்கும், தேகம் தழைக்கும். இது எளிதில் ஜீரணமாகி நல்ல பசியை உண்டாக்கும். வாத, பித்த கபங்களால் ஏற்படும் திரிதோஷத்தைப் போக்கும். வயிற்றுப் பொருமல், வயிற்றுப் பூச்சி இவற்றை போக்கும். இதை உண்டால் காமத்தன்மை பெருகும்.

கொத்தவரங்காய்

இது சிறுநீரைப் பெருக்கும். இதன் சுபாவம் சூடு. அதனால், இதைத் தொடர்ந்தாற்போல் உண்டால் சீதம் போகத் தொடங்கிவிடும். இது பித்தவாதக் கடுப்பு, கபம் இவற்றை உண்டாக்கும். அதனால் இது பத்தியத்திற்கு உதவாது.

இதன் கெட்ட குணங்களைப் போக்க இத்துடன் தேங்காய், பருப்பு, இஞ்சி, சீரகம் இவற்றைச் சேர்த்து சமைக்க வேண்டும்

வாழைத்தண்டு

இது பித்தத்தைத் தணிக்கக் கூடியது. இதன் சுபாவம் சூடு என்றாலும் சிறு நீரைப் பெருக்கும். வாழைத்தண்டுப் பச்சடி உடம்பின் உஷ்ணத்தைப் போக்கும். வாத பித்தம், உஷ்ணம் முதலியவற்றைத் தணிக்கும், கபத்தை நீக்கும்.

இதை உண்டால், குடலில் சிக்கிய மயிர், தோல், நஞ்சு இவற்றை நீக்கும்.
வாரத்திற்கு ஒரு முறையேனும் இதை உண்ணுவது நலம்.

தேங்காய்

இது சமையலுக்கு மிகவும் பயன்படுகிறது. இதில் 'ஏ', 'பி' வைட்டமின்கள் சிறிதளவு உண்டு. இது குடல் புண்ணையும் ஆற்றும். இதனால் தாது விளையும்.

தேங்காய் வழுக்கையில் கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் மூலச் சூட்டை மாற்றும்.

சுரைக்காய்

இது உடல் சூட்டைத் ததிக்கும். இதன் சுபாவம் குளிர்ச்சி. இது சிறுநீரைப் பெருக்கும். உடலை உரமாக்கும். மலச் சுத்தியாகும். தாகத்தை அடக்க வல்லது.

ஆனால் இது பித்த வாயுவை உண்டு பண்ணும். கடுஞ்சுரைக்காய்என்று ஒரு வகை உண்டு. இது குளுமை செய்வது. தாகத்தை அடக்கும். சீதளத்தையும், பித்தத்தையும் போக்கும். ஆனால் அஜீரணத்தை உண்டாக்கும். இதன் விதைகள் மேகத்தைப் போக்கும். வீரிய விருத்தியை ஏற்படுத்தும். இவ்விதைகளை சர்க்கரையுடன் சேர்த்து சில நாட்கள் உண்டு வந்தால் ஆண்மையைப் ( இழந்தவர்கள் ) பெறுவார்கள்.

(நன்றி: நஸீம்)

 

http://moganan.blogspot.com/2008/08/blog-post_26.html

 காசநோயற்ற எதிர்கால இலங்கையை நோக்கி...' என்ற கருப்பொருளில் காசநோய் தொடர்பான தேசிய வைபவம் நேற்று சனிக்கிழமை பண்டாரநாயக்க ஞபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உலக சுகாதார நிறுவனப் பிரதிநிதி உள்ளிட்ட மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இங்கு காசநோய் கட்டுப்பாடு மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய வேலைத்திட்டப் பணிப்பாளர் டாக்டர் சந்திரா சருக்காலி கருத்துத் தெரிவிக்கையில்,

2010 ஆம் ஆண்டில் இலங்கையில் ஒரு இலட்சம் பேருக்கு 42 பேர் என்ற அடிப்படையில் காசநோயாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும்.

2015 இல் இந்த இலக்கு சனத்தொகையில் 30/100000 ஆகவும், 2050 இல் காசநோயை முற்றாக ஒழித்து விட வேண்டுமென்பதும் எமது தேசிய வேலைத்திட்டத்தின் இலக்காகும்.

அண்மைய காலங்களில் காசநோய் கட்டுப்பாட்டு விடயத்தில் ஊடகங்கள் பெரும் பங்காற்றி வருகின்றன. இதன் காரணமாக நோயாளர்களுக்குப் பயன்கள் ஏற்பட்டுள்ளன.

இதனால் ஒப்பீட்டளவில் 2005 ஆம் ஆண்டில் இனம்காணப்பட்ட காசநோயாளர்களின் எண்ணிக்கையைவிட 2006 ஆம் ஆண்டில் மிகக் குறைவான காசநோயாளர்களே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

2005 இல் சிகிச்சையைக் கைவிட்ட நோயாளர்களின் எண்ணிக்கை 8.2 சதவீதமாகும். இது 2006 இல் 6.5 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதேவேளை, 1982 இலிருந்து உலக காசநோய் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. காசநோயை உருவாக்கும் பெஸிவி வைரஸால் உலக சனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கு பாதிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் வருடாந்தம் 100 மில்லியன் மக்கள் இந்நோயால் தாக்கப்படுகின்றனர். இவர்களுக்குள் சுமார் 8 மில்லியன் பேர் தீவிரமான காசநோய்த் தாக்கத்திற்கு ஆளாகி 20 இலட்சம் பேர் மரணமடைகின்றனர்.

காசநோய் உலகிலும் இலங்கையிலும் தொடர்ந்தும் ஒரு பொதுவான சுகாதாரப் பிரச்சினையாக இருந்து வருகிறது. காசநோய்க்கு எதிரான போராட்டத்திற்கு மொத்தச் சமூகத்தினதும் ஆதரவு அவசியமாகும் என்றார்.
http://www.lankasritechnology.com/index.php?subaction=showfull&id=1174823378&archive=&start_from=&ucat=2&

உலக அளவில் முதல் முறையாக பிரிட்டனிலுள்ள ஆராய்ச்சியாளர்கள் தண்டுகலங்கள் எனப்படும் ஸ்டெம் செல்களிலிருந்து மனித இதயத்தின் ஒரு பகுதியை வளர்த்து உருவாக்கியுள்ளார்கள்.

இந்த முன்னேற்றத்தின் காரணமாக மாற்று அறுவை சிகிச்சை மூலம் செயற்கை உறுப்புகள் பொருத்தப்படுவது குறித்த சிக்கல்கள் குறையக்கூடும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

இந்தச் சோதனை விலங்குகளில் பரிசோதிக்கப்பட்டு, வெற்றி பெறுமேயாயின், இன்னமும் மூன்று வருடங்களில் செயற்கையாக வளர்க்கபட்ட மனித இதயத்தின் திசுக்கள், செயற்கை உறுப்புகள் அறுவை சிகிச்சையில் உபயோகப்படுத்தபடக் கூடும் என இந்த ஆராய்ச்சியின் தலைவர் மக்டி யாகூப் பிரிட்டனின் பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

அடுத்த 10 ஆண்டுகளில் முழுமையாக செயற்கையாக ஒரு மனித இதயத்தை உருவாக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

பழுதடைந்த ஒரு திசுவை தண்டுக்கலங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட திசுக்களின் மூலம், மரபு ரீதியாக சேர்க்கப்படும் போது அதை உடல் நிராகரிப்பதற்கான வாய்ப்புகள் இல்லை.

எனவே இனி வரும் காலங்களில் தானங்கள் மூலம் செயற்கை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு காத்திருக்க வேண்டிய நிலையால் ஏற்படும் பிரச்சினைகள் தடுக்கப்படக் கூடும்.
http://www.lankasritechnology.com/index.php?subaction=showfull&id=1175538420&archive=&start_from=&ucat=2&

lankasri.com இந்த அரிய கண்டுபிடிப்பின் மூலம், யானைக்கால் நோய்க்கான மருந்துகள் அல்லது நோய் தடுப்பு மருந்துகளை உருவாக்க வழிபிறக்கும் என்றும் விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

உலக அளவில் இந்த நோயின் காரணமாக, 13 கோடி மக்கள் பீடிக்கப்பட்டுள்ளார்கள். பார்வை இழப்புக்கு அடுத்தபடியாக உலக அளவில் வலது குறைவுக்கான, இரண்டாவது காரணமாக இந்த நோய் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் உலகில் 80 நாடுகளில் இந்த நோய் பரவியுள்ளது. கொசுக்கடி காரணமாகவே இந்த நோய் பரவுகிறது.

இது தொடர்பான ஆராய்ச்சிகள் லண்டனிலுள்ள இம்பீரியல் கல்லூரியிலும், மேலும் மூன்று அமெரிக்க நிறுவனங்களிலும் நடைபெற்றபோதே இந்த நோயை ஏற்படுத்தும் உயிரினத்தின் மரபணுக்கள் எவ்வாறு அமைந்துள்ளன என்று தெரியவந்துள்ளது.

இந்த கண்டுபிடிப்பின் மூலம், அந்த மரபணுவில் எவ்வகையான புரதங்கள் உள்ளன என்று தெரியவந்திருப்பதாகவும், அவற்றை மேலும் ஆராய்ச்சி செய்வதன் மூலம், இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிகிச்சை வழங்கவும், தடுப்பு முறைகளை முன்னெடுக்கவும் பெரும் வாய்ப்பு ஏற்படும் என இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் டேவிட் குய்லியானோ கூறியுள்ளார்.

இந்த முடிவுகள் மேலும் பல நாடுகளில் தொடர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் பலருக்கு தங்களது ஆய்வுகளை வேகமாக முன்னெடுத்துச் செல்ல உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.
http://www.lankasritechnology.com/index.php?subaction=showfull&id=1190754829&archive=&start_from=&ucat=2&

உலகிலேயே முதன் முறையாக செயற்கை இதயம் பொருத்தப்பட்டவர் மரணமடைந்துவிட்டார். ஆனால் அவரது இதயம் மட்டும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது.

கடந்த 2000 ஆம் ஆண்டில் பிரிட்டனில் பர்மிங்ஹாமிலுள்ள ஹவ்டன் என்பவருக்கு வைரஸ் காய்ச்சல் காரணமாக கடுமையான மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் ஒக்ஸ்போட்டிலுள்ள ஜோன் ரட்கிளிப் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு டொக்டர் ராபர்ட் ஜார்விக் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட செயற்கை இதயம் இவருக்கு முதன்முறையாக வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது.

அச்செயற்கை இதயத்துடன் சாதாரண மனிதர்களைப் போன்று வாழ்க்கையைத் தொடர்ந்தார் ஹவ்டன்.

மேலும், அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் ஹவ்டனால் தொடர்ந்து ஒரு மைல் தூரத்திற்கு அதிகமாக நடக்க முடிந்ததுடன் தனது அறக்கட்டளை நிறுவனத்தில் சுறுசுறுப்பாகப் பணியாற்றவும் முடிந்தது.

அறக்கட்டளை சார்பில் 90 மைல் நடைப் பயணத்தில் பங்கேற்றதுடன் ஆல்ப்ஸ் மலையிலும் ஏறினார். இதய ஆராய்ச்சியை ஊக்குவிக்க பல்வேறு இடங்களுக்குச் சென்றதுடன் இரு புத்தகங்களையும் எழுதியதுடன் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நிதியும் திரட்டினார்.

செயற்கை இதயத்துக்கான மின்கலம் அதன் சேமிப்பு சக்தி குறையும் போதெல்லாம் மாற்றவேண்டி நேரிடும் அதன்போது மருத்துவமனையில் அவரிற்கு மாற்று மின்கலம் பொருத்தப்படும்.

கடந்த ஆண்டில் ஹவ்டனின் இதயம் 30 வீதம் நல்ல நிலைக்கு திரும்பிவிட்டதால் மின்கலம் மாற்றும் போதெல்லாம் அவர் இயல்பாகவே தனது வழமையான இதயத்துடிப்புடன் இருந்துள்ளார்.

செயற்கை இதயத்துடன் ஏழு ஆண்டுகள் வாழ்ந்த ஹவ்டனின் 68 ஆவது வயதில் அவரது உடல் உறுப்புகள் பல செயலிழக்கவே மரணமடைந்துவிட்டார். ஆனாலும் அவரது செயற்கை இதயம் இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றபடியால் மின்கலத்தை மருத்துவர்கள் நிறுத்தினால்தான் அவர் இறந்ததாக அறிவிக்க முடியும்.

ஹவ்டனின் மனைவி டியானோ, இவர்களுக்கு குழந்தை இல்லை. ஆனால் 11 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகின்றார்.

http://www.lankasritechnology.com/index.php?subaction=showfull&id=1197640050&archive=&start_from=&ucat=2&

lankasri.com"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்ற கூற்றை நாம் பலமுறை நினைவுக்கூர்ந்தாலும், அந்த குறைவற்ற செல்வத்தை பெறுவதில் நம்மில் பலர் போதிய விழிப்புணர்வின்றியே இருக்கிறோம். நாள்தோறும் நிகழ்ந்து வரும் விஞ்ஞான-அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு ஏற்ப, நோய்களும் பல்வேறு நிலைகளில், வெவ்வேறு தன்மைகளில் மாற்றமடைந்து வருகின்றன.

மனிதகுலத்தில் எண்ணற்ற நோய்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டாலும், அதில் தலையாயதும், மனிதனின் உடலை சிறிதுசிறிதாக அழிவுக்கு இட்டுச்செல்வதும் நீரிழிவு நோய்தான்.

அதனையொட்டி, பல ஆய்வுகள் உலக அளவில் நடத்தப்பட்டு, அன்றாடம் புதுபுது தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்தவகையில், லண்டன் நகரில் நீரிழிவு குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், பிளாக் டீ அருந்தினால் நீரிழிவு ஒரளவு கட்டுப்படும் என்ற புதிய தகவல் வெளியாகிவுள்ளது. "பிளாக் டீ' யில் இருக்கும் வேதியியல் பொருளுக்கு நீரிழிவைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இதனையும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு உள்பட்டே அருந்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். அதற்கு மேல் சென்றால் அதுவும் ஆபத்தில் முடியும் என அவர்கள் எச்சரித்துள்ளனர். ஆகவே, நீரிழிவு நோயை கட்டுப்படுத்த இதனை ஓர் வழிமுறையாக எடுத்துக் கொண்டாலும், அதனை வராமல் தடுப்பதே நாம் கவனம் செலுத்த வேண்டிய முக்கிய அம்சமாகும்.

http://www.lankasritechnology.com/index.php?subaction=showfull&id=1204789206&archive=&start_from=&ucat=2&

lankasri.comகுருட்டுத் தன்மை ஏற்படக் காரணமான இரு பிரச்சினைகளை சீர் செய்யும் மருந்தொன்றை கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். மேற்படி மருந்தானது, பார்வை இழப்புக்கு வழிவகுக்கும் கண்ணிலான இரத்தக் குழாய் சிதைவைத் தடுக்கக் கூடிய புரதத்தை செயலூக்கம் பெறச்செய்வதாக உதாஹ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

ஆரம்ப கட்டமாக இம்மருந்தை எலிகளில் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை வெற்றியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கண்களிலுள்ள இரத்தக் குழாய்களிலுள்ள தசைகள் பலவீனமடைதல் மற்றும் நீரிழிவின் தாக்கம் என்பனவற்றால் குருதிக் குழாய்கள் சிதைவடைவது வயதானவர்களில் காணப்படும் பொதுவான பிரச்சினையாகவுள்ளது என கூறும் இவ்விஞ்ஞானிகள், இதன் காரணமாக கண்ணுக்குள் இரத்தம் கசிவடையவும் வழமைக்கு மாறான புதிய இரத்தக் குழாய்கள் உருவாகவும் வழியேற்படுவதாக தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் மேற்படி விஞ்ஞானிகளால் அடையாளங் காணப்பட்டுள்ள "ரொபோ 4' புரதமானது இரத்தக் குழாய்களை உறுதியடையச் செய்வதிலும் அதன் செயற்பாட்டை சீர்ப்படுத்துவதிலும் முக்கிய வகிபாகம் வகிப்பதாக கூறப்படுகிறது.

 

http://www.lankasritechnology.com/index.php?subaction=showfull&id=1205777589&archive=&start_from=&ucat=2&

lankasri.comபொதுவாக மக்களிடத்தில் கொலஸ்ரோல் என்றால் இதயப் பாதிப்பை வர வைக்கும் ஒரு கெட்டது என்ற கண்ணோட்டம் இருக்கிறது.ஆனால் கொலஸ்ரோலில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று நல்ல கொலஸ்ரோல் (HDL) மற்றது கெட்ட கொலஸ்ரோல்.

இந்த நல்ல கொலஸ்ரோலின் அளவைக் குருதியில் அதிகரிப்பதில் பங்கெடுக்கக் கூடியது என்று கருதப்படும் சில வகை CETP மரபணுக்கள் உலக சனத்தொகையில் கிட்டத்தட்ட 33% பேரிடம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த மரபணுக்களைக் காவுபவர்களில் நல்ல கொலஸ்ரோலின் அளவு குருதியில் அதிகரிக்க செய்யப்படுவதால் அவர்களில் இதயப் பாதிப்பு மற்றவர்களை விட ஏறக்குறைய 5% தால் குறைய வாய்ப்பிருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

குருதியில் உள்ள கெட்ட கொலஸ்ரோலின் அளவை குறைத்துக் அதன் அளவைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இதயப் பாதிப்பை கட்டுப்படுத்தலாம் என்பதை விஞ்ஞானிகள் ஏலவே நன்கு அறிந்திருந்த போதும் இந்த புதிய கண்டுபிடிப்பானது அவர்களிடத்தில் கெட்ட கொலஸ்ரோல் சார்ந்து ஏற்படும் இதய நோய்க்கு எதிராகப் போராடுவதில் CETP மரபணுக்கள் மீது செய்யப்படும் கட்டுப்பாடுகளை அதிகரிக்கலாமா என்பதில் புதிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

வழமையாக நல்ல கொலஸ்ரோலின் அளவை அதிகரிக்க CETP மரபணுவின் செயற்பாட்டைத் தடுக்கக் கூடிய மருந்துகளை பரீட்சார்த்தமாக வழங்குவது நடைமுறையில் இருக்கும் நிலையில், சில வகை CETP மரபணுக்கள் நல்ல கொலஸ்ரோலின் அளவை அதிகரிக்க உதவக் கூடியது என்ற இப்புதிய கண்டுபிடிப்பு விஞ்ஞானிகள் மத்தியில் குறித்த மரபணு மீது செல்வாக்குச் செய்யும் மருந்துகளின் தன்மையை மாற்றி அமைக்க வேண்டிய நிலை குறித்து சிந்திக்கத் தூண்டியுள்ளது.

எனினும் இறுதி முடிவுகள் எட்ட முதல் இந்த மரபணுக்களின் செயற்பாட்டில் செய்யப்படும் மாற்றங்கள் மற்றும் நல்ல கொலஸ்ரோலின் செயற்பாடுகளுக்கும் இதயப் பாதிப்புக்களைக் அவை குறைக்கும் செயற்பாடுகளுக்கும் இடையில் உள்ள தொடர்புகள் இன்னும் விரிவாக ஆராயப்பட வேண்டிய நிலையில் இருப்பதாக மனித உயிரியல் விஞ்ஞானிகள் கூற்கின்றனர்.

"குருவிகள்"


20 Jun 2008
http://www.lankasritechnology.com/index.php?subaction=showfull&id=1213947102&archive=&start_from=&ucat=2&

lankasri.comகொழுப்பு நீக்கப்பட்ட பால் குடித்தால் மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் தாக்கும் ஆபத்து குறைவு என்று அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தினமும் பால் குடிப்பவர்கள் மற்றும் பால் குடிக்காதவர்கள் என ஐந்தாயிரம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

45 வயது முதல் 85 வயதுக்குள்பட்டவர்களிடம் குறிப்பிட்ட காலம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. தினமும் ஒரு டம்ளர் அளவு கொழுப்பு நீக்கப்பட்ட பால் அருந்தி வந்தவர்களின் இதய செயல்பாடு மற்றும் சிறுநீரக செயல்பாடு சீராக இருந்ததாம். இதே போல் தானிய வகைகள், காய்கனிகள், பழங்கள் ஆகியவையும் ஆரோக்கியமான இதயத்துக்கு 20 சதவீதம் உதவுவதாக அமெரிக்க ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். தினமும் பாலும், பழமும் சாப்பிட்டு வந்தால் இதய நோய் அண்டாது என்று அடித்து கூறுகின்றனர் ஆய்வாளர்கள்.
http://www.lankasritechnology.com/index.php?subaction=showfull&id=1214633316&archive=&start_from=&ucat=2&

lankasri.comசமையலுக்கு ஒலிவ் எண்ணெய்யைப் பாவிப்பதால் சுமார் 9% புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்தைக் குறைக்கலாம் என்று கிறீஸ் மற்றும் ஸ்பெயின் வாழ் மக்களிடம் நடத்திய ஆய்வில் இருந்து தெரியவந்துள்ளது.

ஸ்பெயின் மற்றும் கிறீஸ் மக்களிடம் புற்றுநோய் மற்றும் இதய நோய் தாக்கம் ஒப்பீட்டளவில் குறைந்திருப்பதற்கு அவர்களின் உணவுப்பழக்கமே முக்கிய காரணம் என்று அறியப்பட்டுள்ளது.

அதிகம் பழங்கள் மற்றும் மரக்கறி வகைகளையும், ஒலிவ் எண்ணொய், மீன் உணவுகளையும், சிவப்பற்ற இறைச்சிகளையும், சீரியல் வகைகளையும் மற்றைய உணவுகளை விட உண்பது புற்றுநோய் மற்றும் இதய நோய்களைக் குறைக்க உதவும் என்றும் குறித்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

ஒலிவ் எண்ணொய் அதிக அளவு நிரம்பாத கொழுப்பு அமிலங்களைக் கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.


பிறிதொரு ஆய்வில் புறோக்கோலி (Broccoli) மற்றும் cruciferous வகை மரக்கறிகளை நாளாந்த உணவில் சேர்த்துக் கொள்வது ஆண்களில் புறஸ்ரேற் (prostate) புற்றுநோய் ஏற்படுவதைக் கட்டுப்படுத்துவதாக கண்டறிந்துள்ளனர். புறோக்கோலியில் உள்ள இயற்கையான இரசாயனங்கள் ஆண்களில் புறஸ்ரேற் சுரப்பியில் உள்ள மரபணுக்களில் குறிப்பாக GSTM1 எனும் மரபணு மீது செல்வாக்குச் செய்து இந்த நோய் ஏற்படுவதைக் கட்டுப்படுத்த உதவுவதாக ஆதாரபூர்வமாகக் கண்டறியப்பட்டுள்ளது.

03 Jul 2008
http://www.lankasritechnology.com/index.php?subaction=showfull&id=1215113246&archive=&start_from=&ucat=2&

lankasri.comமீன் உள்ளிட்ட கடல் வகை உணவுகளைச் சாப்பிட்டால் இதய நோய் வராது என்பது அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. மீன் உள்ளிட்ட கடல் உணவு வகைகளை தொடர்ந்து நாம் சாப்பிட்டு வந்தால் இதய ரத்த நாளங்களில் கொழுப்பு படியாது என்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க காலேஜ் ஆப் கார்டியோலோஜி பத்திரிகையில் இந்த ஆய்வு குறித்து விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடல் வாழ் மீன் வகைகளில் உள்ள ஒமேகா - 3 எண்ணெய் இதயத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது.

ஜப்பானில் இதய நோய் மற்றும் மாரடைப்பு மிக மிகக் குறைவாக இருப்பதற்கு அவர்களது அன்றாட உணவில் மீன் இடம் பெறுவதே காரணம்.

40 வயதிலிருந்து 49 வயதுக்குள்பட்ட 868 பேர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் 281 பேர் ஜப்பானைச் சேர்ந்தவர்கள். 306 பேர் வெள்ளையர்கள். 281 பேர் அமெரிக்காவில் வசிக்கும் ஜப்பானியர்கள். இவர்களுக்கு ரத்த பரிசோதனை உள்பட அனைத்து சோதனைகளும் செய்யப்பட்டன. இதய ரத்த நாளங்களின் அடர்த்தி, கொழுப்புச் சத்து ஆகியவை கணக்கிடப்பட்டன. அதுபோல் ரத்தத்தில் கால்சியத்தின் படிவு எவ்வளவு என்பதெல்லாம் சோதனை மூலம் பதிவு செய்யப்பட்டது. இதில் மீன்களை அதிகம் சாப்பிடும் ஜப்பானியர்கள் உடலில் இதய நோய்களைத் தடுக்கும் ஒமேகா 3 எண்ணெய் மற்றவர்களை விட இரண்டு மடங்கு அதிகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

வெள்ளையர்களுக்கும் அமெரிக்காவில் வாழும் ஜப்பானியர்களுக்கும் ஒமேகா - 3 எண்ணெய் ஒரே அளவில்தான் இருந்தது.

எனவே மீன்களை அதிகம் சாப்பிடும் ஜப்பானியர்களுக்கு ரத்தத்தில் ஒமேகா - 3 எண்ணெய் அதிக அளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

29 Jul 2008
http://www.lankasritechnology.com/index.php?subaction=showfull&id=1217393341&archive=&start_from=&ucat=2&

lankasri.comஉயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுவத்துவதில் நவீன மருந்துகளை விட வெள்ளைப் பூண்டு ஆற்றலுடன் செயல்படுவதாக அடிலெய்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். தினமும் உணவில் வெள்ளைப் பூண்டை சேர்த்துக் கொண்டாலே, உயர் ரத்த அழுத்தத்தின் பாதிப்பில் இருந்து காத்துக் கொள்ள முடியும் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

உலகில் ஏராளமானோர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் பலர் தங்களுக்கு ரத்த அழுத்த நோய் இருப்பதே தெரியாமல் உள்ளனர். இதற்கு உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிட்டால் மாரடைப்பு, வலிப்பு போன்றவை ஏற்படும் அபாயம் உள்ளது.

இந்த நோயுடன் மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு, மருந்து வழங்குவதுடன் உணவில் உப்பின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும், எடையைக் குறைக்க வேண்டும், ரத்த அழுத்தத்தை 140/90 என்ற அளவில் பராமரிக்க வேண்டுமென டாக்டர்கள் ஆலோசனை வழங்குவார்கள்.

இந்நிலையில் உயர் ரத்த அழுத்தம் தொடர்பாக அடிலெய்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தினமும் உணவுடன் வெள்ளைப் பூண்டும் வழங்கப்பட்டது. 5 மாதங்களுக்குப் பின் அவர்களை பரிசோதித்த போது வியக்கத்தக்க அளவில் அவர்களுக்கு ரத்த அழுத்தம் குறைந்திருந்தது கண்டறியப்பட்டது.

சில நோயாளிகளுக்கு ரத்த அழுத்தத்திற்கான மருந்துகளை விட வெள்ளைப் பூண்டு மூலம் விரைவில் நிவாரணம் கிடைத்தது என்று ஆய்வாளர் கரீன் ரைட் தெரிவித்துள்ளார்.

http://www.lankasritechnology.com/index.php?subaction=showfull&id=1217666723&archive=&start_from=&ucat=2&

lankasri.comநீங்கள் சர்க்கரை நோயாளியா? இனி கவலை வேண்டாம். தினமும் "பிஞ்சு' முட்டைக்கோஸ் (ஆரஞ்சு பழ அளவிலிருந்து சற்று சிறியதாக இருக்கும்) தினமும் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயினால் ஏற்படும் உடல் உறுப்பு பாதிப்புகளை தவிர்க்கலாம்.

சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தின் சர்க்கரை அளவு அதிகமானால் இதயத்துக்கு செல்லும் ரத்த குழாய்கள் பாதிப்படையும். அதனால் மாரடைப்பு ஏற்படும். அதேபோல் மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்கள் பாதிக்கப்பட்டால் வலிப்பு ஏற்படும்.

இவற்றுக்கு காரணம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்கடங்காமல் உயர்ந்து கொண்டே செல்வதால் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுகிறது. அதன் மூலம் மேற்கண்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன.

"பிஞ்சு' முட்டைக்கோûஸ தொடர்ந்து சாப்பிடுவதால் மாரடைப்பு மற்றும் வலிப்பு வருவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருந்ததை இதற்கு முன்னர் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

இந்நிலையில் பிரிட்டனைச் சேர்ந்த பேராசிரியர் பால் தோர்நல்லே தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவினர் பிஞ்சு முட்டைக்கோஸினால் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் மாற்றங்கள் குறித்து தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.

பிஞ்சு முட்டைக்கோஸில் உள்ள ‘நன்ப்ச்ர்ழ்ஹல்ட்ஹய்ங்’ எனும் புரதச் சத்து, உடலில் செரிமானம் செய்யும் உறுப்புகளை மேலும் தூண்டச் செய்கிறது. இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்பட்டு, ரத்தக் குழாய்கள் பாதுகாக்கப்படுவதுடன், உயிரணுக்கள் பாதிப்படைவதையும் தடுக்க செய்கிறது.

ரத்த நாளங்களில் ஏற்படும் நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடம் மேற்கொண்ட பரிசோதனை மூலம் இது தெரியவந்தது.

06 Aug 2008
http://www.lankasritechnology.com/index.php?subaction=showfull&id=1218084050&archive=&start_from=&ucat=2&

தலைவலி! இதனால் அவதிப்படாதவர்களே இல்லை என்றே சொல்லலாம். சிலருக்கு எப்போதாவது ஏற்படுவதுண்டு. ஆனால் சிலருக்கு அதுவே அன்றாட இம்சையாக இருக்கும். இதில், அதிகமாக சிக்கி அல்லல்படுபவர்கள். உலகின் பணக்கார நாடான அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள்தான்.

இதுபற்றி அமெரிக்காவில் உள்ள தேசிய தலைவலி அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:
அமெரிக்காவில் தினமும் தலைவலியால் 4.5 கோடிப் பேர் அவதிப்படுகிறார்கள். இதில் ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் 2 கோடியே 80 லட்சம் பேர்.

தலைவலிக்கு பொதுவான காரணம் பதற்றம்தான். பிரச்னைகளை வெளியில் சொல்லாமல் மனதிலேயே வைத்திருப்பவர்களுக்கு தலைவலியால் பாதிப்பு ஏற்படும். இப்படிப்பட்டவர்களுக்கு தலையின் இரண்டு பக்கமும் கழுத்தின் அடிப்பகுதியிலும் வலி இருக்கும்.

இதைவிட ஒற்றை தலைவலியின் பாதிப்பு மிகவும் அதிகம். இவர்களுக்கு குமட்டல், வாந்தி மற்றும் தலை சுற்றல் போன்றவை அதிகம் இருக்கும், வலியும் அதிகமாக இருக்கும். மன அழுத்தம், பதற்றம், தூக்கமின்மை அல்லது அளவுக்கு அதிகமான தூக்கம், ஏமாற்றம், பசி, உணவுக் கோளாறுகளால் இந்த ஒற்றைத் தலைவலி ஏற்படும்.
எளிய முறையில்...

பொதுவாக இப்படிப்பட்ட தலைவலியால் தவிப்பவர்கள், சில எளிய முறைகளை கையாண்டால் இதுபோன்ற பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம்.

தலைவலி ஏற்படுவதற்கு முன் அவர்களின் உடலில் ஏற்படும் அறிகுறிகளை குறித்து வைத்துக் கொள்ளலாம். தலைவலியின்போது அதிகமாக தண்ணீர் குடிக்க தோன்றுகிறதா என்பதை கவனிக்க வேண்டும். ஏனெனில் உடலில் நீர்சத்து குறைவு ஏற்பட்டாலும் தலைவலி வருவதுண்டு. சில உடற்பயிற்சி செய்வது நல்லது. இரவு நன்கு தூங்க வேண்டும். அதிக தூக்கமும் ஆபத்தைத் தரும். தலைவலி வரும்போது இருட்டு அறைக்குள் தனியாக அமர்ந்து இருக்கலாம்.


இப்படி ஏதாவது ஒரு முறையை கையாண்டால் ஒற்றை தலைவலியை தவிர்க்க முடியும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

http://www.tamilnadutalk.com/portal/index.php?showtopic=6921

"ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி" ஆலங்குச்சி, வேலங்குச்சி, பேப்பங்குச்சி என பற்பசையும், பல்துலக்கும் தூரிகையும் இணைந்த இயற்கை நமக்களித்த அன்பளிப்புகளை புறக்கணித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்றைக்கு கிராமப்புறங்களில் கூட நவநாகரீக பாணியில் பற்பசைகளும் பல் துலக்கும் தூரிகைகளும் பரவலான பயன்பாட்டுக்கு வந்துவிட்டன.



மாநகரத்து மகாதேவன் பயன்படுத்துவதையே மாந்தோப்பு கிராமத்து மாடசாமியும் பயன்படுத்துகிறார் என்ற சமநிலை, சமத்துவத்தை பற்றி கொஞ்சம் மகிழ்ச்சியடையலாம். ஆனால், மகாதேவதுக்குத்தான் நவநாகரீக வாழ்க்கை மோகம், தகுநிலை நிர்ப்பந்தம், நம்ம மாடசாமிக்கு அதெல்லாம் இல்லையே, இயற்கை அளித்த அருங்கொடைகளை அவர் ஏன் ஒதுக்குகிறார் என்ற கரிசனையே அதிகம் மேலிடுகிறது.

அப்படியென்றால், மாநகரத்துவாசிகள் பளீரிடும் பற்கள் தெரிய சிரிப்பதும், கிராமத்து மக்கள் கரையேறிய பற்களுடன் தெரிவதும்தான் எனக்கு பிடிக்குமா? என்ற கேள்வி எழும்.

நியாயமான கேள்விதான். இன்றைக்குள்ள பன்னாட்டு நிறுவனங்களின், பல விதமான நுகர்வுப்பொருட்கள், இயற்கையில் இருந்து நாம் நேரடியாக பயன்படுத்திய, பதப்படுத்து பயன்படுத்திய பொருட்களைவிட சில அம்சங்களில் மேம்பாடு கொண்டவை என்பதும் உண்மைதான். அதனால்தான் ஆலங்குச்சி, வேலங்குச்சி, வேப்பங்குச்சி, கரித்தூள் என பல்துலக்க் பயன்படுத்தப்பட்ட பொருட்களும், தலைக்கு குளிக்க சீயக்காய்த்தூளும் இன்றைக்கு பயன்படுத்தப்படாத நிலை.

எல்லாமே வேகமாகிப்போன உலகில் , அவசரமாகிப்போன நமது வாழ்க்கையில் யார் இயற்கையோடு மெனக்கெடுவது. எல்லாமே ரெடிமேட், நேரடியாக பயன்படுத்த ஆயத்த நிலையில் கிடைக்கும்போது, எதற்கு குச்சியை வைத்து பற்களை துலக்கவேண்டும். மேலும் பற்பசைகளும் இன்னபிற பற்களை மினுமினுக்கச்செய்யும் பொருட்களும்தான் சந்தையில் கிடைக்கின்றனவே, அவற்றை வாங்கி பயன்படுத்தி பளீரிடும் புன்னகைக்கு சொந்தக்காரர்களாகலாமே.

அப்படி போடு அருவாள என்று நினைப்பவர்களுக்கு, ஐயா சாமி, ஆபத்து சாமி என்கின்றனர் வல்லுனர்கள். இன்றைக்கு சந்தையில் உள்ள, பற்களை தூய்மைப்படுத்தும், வெண்மைப்படுத்தும் பொருட்களில் 90 விழுக்காட்டு பொருட்களில் அளவுக்கு மீறிய ப்ளீச் எனப்படும் தூய்மை செய்யும் வேதியல் பொருள் இருப்பதாக வல்லுனர்கள் கண்டறிந்துள்ளனர். அளவுக்கு அதிகமாக இருந்தால் சீக்கிரம் நம் பற்கள் வெண்மையாகிவிடுமே என்றெல்லாம் இங்கே பக்கவாத்தியம் வாசிக்க முடியாது.



இந்த வேதியல் பொருள் தலைமுடியை தங்க நிற்மாக மாற்றப் பயன்படுத்தப்படும் ஒரு பொருளாகும். ஆனால் இது நமது பற்களில் பயன்படுத்தப்படும்போது, வாயில் புண்கள் ஏற்படுத்தக்கூடும் என்பதுதான் உண்மை. சிகையலங்காரத்துறையில் பயன்படுத்தப்படும் ஹைட்ரஜன் பெராக்சைடு என்ற வேதியல் பொருள், பற்களை வெண்மையாக்கும் திரவங்கள் என்று விளம்மபர்ப்படுத்தப்பட்டு சந்தையில் விற்பனையாகும் பொருட்களிலும் உள்ளதாம்.

இன்றைக்கு திரைப்படங்களில், தொலைக்காட்சியில் நம் உள்ளம் கவர்ந்த நட்சத்திரங்கள் பளீரிடும் வெண்மையான பற்கள் தெரிய சிரிப்பதை பார்த்து நாமும், அதேபோல் வெண்மையான பற்கள் வேண்டும் என்று விரும்புகிறோம். அந்த நட்சத்திரங்கள் பணம் அதிகம் செலவழித்து, பல மருத்துவரிடம் சென்று முறைப்படி பற்களை வெண்மையாக்கக்கியிருக்க, நமக்கு சந்தையில் நாமே பயன்படுத்தி வெண்மையாக்கக்கூடிய பொருட்கள் கிடைத்தால் நாம் வேண்டாம் என்று ஒதுக்கிவிடவா போகிறோம்.

அண்மையில் வர்த்தகத்தர நிறுவனம் என்ற நிறுவனத்தின் ஆண்டு மாநாட்டில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், நாம் இதுவரை கேட்ட தகவல்கள் தவிர, ஒரு சில பொருட்களில் பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட 230 மடங்கு அதிகமான ஹைட்ரஜன் பெராக்சைடு இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த வல்லுனர்கள் சொல்வது என்னவென்றால், பற்களை வெண்மையாக்கி, பளீரென வைத்துக்கொள்ள விரும்புவது தவறல்ல, ஆனால், அதை ஒரு நல்ல பல் மருத்துவரின் ஆலோசனையின் படியும், அவரது வழிநடத்தலின் படியும் செய்யுங்கள் என்பதுதான். கடந்த சில ஆண்டுகளில் முக அழகு தொடர்பான துறையில், பற்களை வெண்மையாக வைத்துக்கொள்ள பல் மருத்துவரை நாடுவது அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.



இந்த வேதியல் பொருட்கள் பற்களை வெண்மையாக்கும் அதேவேளை வாயில் புண் ஏற்படுத்துவது மட்டுமல்லாது, ஈருகளை பாதிக்கும், பற் கூசுதலை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு பற்களை வெண்மைபடுத்தும் பொருட்களை சோதித்ததே த்வைர, இன்னும் பற்பசைகலை ஆய்வு செய்யவில்லை. அதையும் பரிச்சொதித்தால் அதில் என்னென்ன தீங்கேற்படுத்தும் வேதியல் பொருட்கள் இருக்குமோ.

இப்படி பற்களை வெண்மையாக்கும் முயற்சியில் பல் மருத்துவரை நாடாமல் நாமே சொந்தமாக இறங்கிவிட்டால் முதலில் நாம் பயன்படுத்தும் வெண்மையாக்கும் பொருட்களில் ஹைட்ரஜன் பெராக்சைடு என்ற வேதியல் பொருளின் இருப்பு 0.1 விழுக்காடு மட்டுமே இருக்கவேண்டும் என்கின்றனர் வல்லுனர்கள்.

சுகாதாரக் கட்டுபாடுகள் மிகக்கடுமையானதாக இல்லாத நாடுகளின் சந்தைக்கென இப்படியான பொருட்கள் தயாரிக்கப்படுவதாக கூறப்படுகிறது. பற்களை வெண்மையாக்க கிளம்பி, அந்த பற்களையே இழக்க கூடாதல்லவா.

தங்கப்பல்லைக் கட்டினாலும், தந்த்தாதல் ஆன பற்களை பொருத்தினாலும், சொந்தப்பல் போல வருமா.

பல்லு போனா சொல்லு போச்சி.

http://www.tamilnadutalk.com/portal/index.php?showtopic=7845



உலகில் பரவலாக எல்லோருக்குமே ஏற்படக்கூடியது, முகத்தை சுளிக்க வைத்து, நம்மிடமிருந்து மற்றவர் சற்று ஒடுங்கி நிற்கும் அளவுக்கு தொற்று அச்சுறுத்தலைக் கொண்டது. உயிர்குடிக்கும் தீவிரம் இல்லாது போனாலும், நம்மை வாட்டி நோகடிப்பது. ஆங்கிலத்தில் கோல்ட் என்றும் வடமொழியில் ஜலதோஷம் என்றும் அறியப்படும் சளி.

இதன் தன்மை அறிந்துதான், உணர்ந்துதான் பொதுவாக தொல்லை என்பதை உடன் சேர்த்தே "சளித்தொல்லை என்று மக்கள் குறிப்பிடுகின்றனர்".

மருந்து சாப்பிட்டால் ஏழு நாட்களில் தீரும், மருந்து இல்லாவிட்டால் ஒரு வாரம் நீடிக்கும் என்று உண்மையை கிண்டலாக சொல்லி நாம் நமது ஆதங்கத்தைத் தீர்த்துக்கொள்கிறோம். பொதுவாக சளித்தில்லை ஏற்பட்டால் நாம் குளிர்ச்சியாக எதையும் சாப்பிடுவதில்லை.

வைட்டமின் என்று நாம் அழைக்கும், விட்டமின், உயிர்ச்சத்துகளில் சி வகை சளிக்கு நல்லது என்பது பரவலான ஒரு நமிக்கை. ஆரன்ச்ஜுபழத்தில் இந்த உயிர்சத்து சி அதாவது விட்டமின் சி நிறைந்துள்ளது. ஆரஞு வழம் சாப்பிட்டால் சளி அதிகரிக்கும் என்று ஒரு சாரார் கருதுகின்றனர். ஆனால் ஆரஞ்சில் உள்ள விட்டமின் சி சளிக்கு நல்லது என்று மறுசாரார் நம்புகின்றனர். சளித்தொல்லையை சமாளிக்க விட்டமின் "சி"யை மாத்திரைகளாக உட்கொள்ளுபவர்கள் உலகில் அதிகம். ஊட்டச்சத்து மாத்திரைகளாக கருதப்படும் மல்ட்டிவிட்டமின்கள் அதாவது பல விட்டமின்களின் கலவை மாத்திரைகள் குட இன்றைக்கு பரவலாக பயன்படுத்தப்படுகின்றன.

ஆனால் வேடிக்கை என்ன்வென்றால், சளித்தொல்லைக்கு விட்டமின் சியை மாத்திரையாக் ஔட்கொண்டாலும் சரி, ஆரஞ்சு பழத்தை சாப்பிடுவதம் மூலம் விட்டமின் சியை பெற்றாலும் சரி, எல்லாம் வீண், கால விரயெமே என்று அண்மையில் அறிவியலர்கள் கண்டறிந்துள்ளனர்.

மழைக்காலத்திலும், குளிர்காலத்திலும் இந்த விட்டமின் சியை மாத்திரைகளை நாம் பயன்படுத்துகிறோம். ஒன்றேல் சளியை வராமல் தடுக்க அல்லது சளி வந்தாலும், அதன் அறிகுறிகளின் தீவிரத்தை தணிவுபடுத்த.



ஆனால் இத்தகைய மாத்திரைகள், சளியைக் கட்டுப்படுத்துவதுமில்லை, அதன் தீவிரத்தை தணிவுபடுத்துவதுமில்லை என்று அறிவியலர்கள் கண்டறிந்துள்ளனர்.

மாரத்தான் எனப்படும் நெடுந்தூர ஓட்டத்தில் பங்கேற்போர், ஸ்கீயிங் என்பபடும் பனிச்சறுக்கு விளையாட்டில் பங்கேற்போர், மிகத்தீவிரமான சளியால் துன்புறுவோர், மன அழுத்தத்தால் அவதியுறுவோர், இவர்களுக்கு மட்டும்தான் இந்த விட்டமின் சி மாத்திரைகள் கொஞ்சம் பயன் தருகின்றன. மற்றவர்கள் சளி வந்தால், இந்த விட்டமின் சி மாத்திரைகளை சாப்பிட மெனக்கெட வேண்டாம் என்று கூறுகின்றனர்.

ஈந்த ஆய்வாளர்கள் கடந்த 60 ஆண்டுகளில் 11 ஆயிரம் நோயாளிகளிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் இந்த முடிவுகளை வெளியிட்டுள்ளனர். இவர்கள் கூறுவது என்னவென்றால், 365 நாட்களும் விட்டமின் சியை சாப்பிடுவதில் கொஞ்சமும் அர்த்தமில்லை என்பதுதான்.

கோக்ரேன் லெபாரட்டரி என்ற மருத்துவ ஏட்டில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு பொதுவாக விட்டமின் சியை வழமையாக அன்றாடம் உட்கொள்பவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் சளி ஏற்பட குறைவான வாய்ப்புள்ளதா என்று ஆராய்ந்தது. மேலும் அன்றாடம் விட்டமின் சியை உட்கொள்பவர்களுக்கு சளி பிடித்தால் அதன் தீவிரம் எவ்வளவு நாள் நீடிக்கிறது என்பதும் ஆராயப்பட்டது. பொதுவாக கடைகளில் கிடைக்கும் விட்டமின் சி மாத்திரைகளில் இருப்பதைப்போல் 4 மடங்கு அதாவது 2 கிராம் விட்டமின் சியை ஆய்வுக்குட்படுத்தப்பட்டோர் உட்கொண்டனர்.

ஆய்வின் முடிவில், உலகின் பல்வேறு பகுதியிலிருந்தான தரவுகளின்படி, விட்டமின் சி மாத்திரைகள் மிகக் குறைவான பயனையே தந்தனவாம். அன்றாடம் விட்டமின் சியை உட்கொண்டவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் 2 விழுக்காடு மட்டுமே குறைவாக சளிபிடிக்கும் ஆபத்தில்லாதிருந்தனர். சளியின் தீவிரமும் மிகச் சிறிய அளவே குறைந்தது. பின்லாந்து நாட்டின் ஹெல்சின்கி பல்கலைக்கழகம் ஆஸ்திரேலியாவின் தேசிய பல்கலைக்கழகம் இவற்றைச் சேர்ந்த இந்த ஆய்வாளர்களின் கருத்தில், இந்த் ஆய்வை சுருங்கச் சொன்னால், மற்றவர்கள் ஆண்டில் 12 நாட்கள் சளியால் அவதியுற்றால், அன்ராடம் விட்டமின் சி சாப்பிடுபோர் ஆண்டில் 11 நாட்கள் அவதியுறுவர்.

ஆண்டுக்கு 3 அலது 4 முறை நமக்கு சளி பிடிக்கிறது. சளி பிடித்தால், தலைவலி, மூக்கடைப்பு, தொண்டை வலி, காய்ச்சல், இருமல், முக்கொழுகுதல் என அதன் சகாக்களும் சேர்ந்து நம்மை உண்டு இல்லையென ஆக்கிவிடுகின்றன.

கிண்டலாக இதையும் சொல்லக் கேட்டிருப்போம், நமக்கெல்லாம் சளிபிடித்தால் எப்படி அவதியுறுகிறோம், பத்து தலை ராவணன் எப்படி சமாளித்திருப்பார் என்று. கேலியும், கிண்டலும் ஒருபுறம் இருக்கட்டும். நம்மில் அனைவருமே அறிந்தது, அனுபவத்தால் உணர்ந்தது, இந்த சளித்தொல்லை. நாம் பலரும் நம்பிய விட்டமின் சியும் இபோது பயனற்றதாக அறிவியலர்கள் கூறியதால் கவலை ஏற்படுகிறது அல்லவா. கவலையை விடுங்கள், கொஞ்சம் ஆறுதலான தகவலும் உண்டு.



விட்டமின் சி பொதுவாக அனைவருக்குமே பலன் தராது என்றாலும், இச்சத்து குறைவாக உள்ளவர்களுக்கு அது பலன் தரும் என்பதை பிரித்தானிய வல்லுனர்கள், கண்டறிந்துள்ளனர்.

அபெர்தீன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மூத்த நுண் உயிரியலாளர் ஹியூக் பென்னிங்க்டன் என்பவர், சளிக்கு விட்டமின் சி மாத்திரைகளும், ஆரன்ச்ஜு வழச்சாறும் பெரிதாக ஒன்றும் பயன் தரவில்லை என்று ஆய்வுகள் கூறுகின்றன ஆனால் அவற்றை உட்கொள்வதால் கேடொன்றுமில்லை, தீங்கொன்றுமில்லை என்கிறார். மட்டுமல்ல, இவற்றை சாப்பிடுவதால் குணமாகும், சளி குறையும் என்ற நம்பிக்கையே சளியால் அவதியுறுபவர்களுக்கு ஆறுதலாக இருக்கும், அவர்கள் ஓரளவு தெம்பைப் பெறுவார்கள் என்கிறார் பென்னிங்க்டன்.

மறுபுறத்தில் எக்கினாசியா என்ற ஒரு தாவரத்தின் மூலமான மருந்து சளிக்கு நல்ல பயனுள்ள நிவாரணமளிப்பதாக அண்மையில் அறிவியலர்கள் கண்டறிந்துள்ளனர். சூரியகாந்தி பூவைப்போல காட்சியளிக்கும் இந்த எக்கினாசியா பூக்களின் செடிகளிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து, கிட்டத்தட்ட சலிபிடிக்கும் வாய்ப்பை பாதியளவு குறைக்கிறதாம்.

என்ன் எக்கினாசியா எங்கே கிடைக்கும் என்பதுதானே உங்கள் கேள்வி....??

http://www.tamilnadutalk.com/portal/index.php?showtopic=8131

நாம் நகைகளை வெறுமனே அழகுக்காகத்தான் அணிகிறோம் என்று நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

நகை அணிவது வெறும் அழகுக்காக மட்டும் இல்லை... அதில் மருத்துவ ரீதியான பலன்களும் நமக்குக் கிடைக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.

‘‘குறிப்பாக, இது நம் உடம்பில் உள்ள வர்மப் புள்ளிகளைத் தூண்டி நம் உடம்பின் ஒவ்வொரு உறுப்பின் நலனையும் பராமரிக்க உதவுகிறது...!’’ என்கிறார் கோவை கே.ஜி. மருத்துவ மனையின் அக்குபஞ்சர் துறை டாக்டர் சி.வி. அருணா சுபாஷினி.. அவர் சொன்னார்...

‘‘நம் உடலின் இரத்த ஓட்டத்தை ஏந்திச் செல்ல குழாய்களும், அதற்கான பாதைகளும் இருப்பது போல, நம் உயிர் ஓடும் சக்திக்கு என்று தனிப்பாதைகள் உண்டு. ‘நாடி ஓட்டப் பாதை’ என்று இதற்குப் பெயர். உயிர்ச்சக்தி ஓட்டப் பாதைகள் என்றும் சொல்வோம்.

நாடிகளும், நரம்புகளும் முக்கிய இடங்களில் ஒன்று சேர்வதை வர்மப் புள்ளிகள் என்கிறோம். இந்த மாதிரி புள்ளிகள் இந்தப் பாதைகளில் ஏராளமாக உள்ளன. குறிப்பிட்ட அளவு தூண்டுதலை இந்தப் புள்ளிகளில் ஏற்படுத்துவதன் மூலம் அரிய மருத்துவ சிகிச்சையே நம் உடம்பில் நடைபெறும். இதுதான் அக்குபஞ்சர் என்னும் சீனப் பாரம்பரிய மருத்துவம்!

பெயர்தான் இது சீன மருத்துவமே தவிர, உண்மையில் இது தோன்றியது இந்தியாவில்தான். இராமதேவர் என்ற சித்தர்தான் இதை சீனா வரை கொண்டு சேர்த்தவர். அங்கு இன்று இந்த மருத்துவத்துக்கு என்று தனி யூனிவர்சிட்டியே உள்ளது. உலகின் பல இடங்களுக்கும் இதை பரவச் செய்து வருகிறார்கள்.

இந்த வர்ம புள்ளிகள், கை, கால், மற்றும் உள்ளங்கை, உள்ளங்காலில் தான் அதிகப்படியாக உள்ளதால் இவற்றைத் தூண்டும் விதமாகவே நாம் வெறும் காலால் நடந்து மலைக் கோயிலுக்கு செல்வது, கல்லும் முள்ளும் குத்துவதை காலுக்கு மெத்தை என விருப்பமாக பக்தியுடன் ஏற்றுக் கொள்வது, காது குத்தி தோடு அணிவிப்பதை ஒரு திருவிழாவாகவே கொண்டாடி மகிழ்வது என்று நமது முன்னோர்கள் இந்த அருமையான அக்குபஞ்சர் வைத்தியத்தை நமது வாழ்க்கையுடனே இணைத்து விட்டார்கள்.

இது போன்ற ஆபரணங்களில் நாம் பெரும்பாலும் தங்கத்தை உபயோகிப்பதற்கும் கூட காரணம் இருக்கிறது. தங்கம் உடம்பைத் தொட்டபடி இருந்தால் நம் உடலின் தேஜஸ் அதிகரித்து அழகு மிளிரும்!

லேட்டஸ்டாக வெள்ளி, ஒயிட் மெட்டல், கோல்டு பிளேட்டட் நகைகள் என்று ஃபேஷனாகவும் மார்க்கெட்டுக்கு நிறைய வந்து விட்டன.

இவை ஃபேஷனுக்கும் ஃபேஷன்... தங்கம் விற்கும் யானை விலை, குதிரை விலையில், இவை நம் தேவைகளையும் நிறைவு செய்யும்...

நாம் போடுவது தங்கமோ, வெள்ளியோ அல்லது சாதாரண மெட்டலோ எதுவாக இருந்தாலும், அந்த ஆபரணம் என்பது நம் உடலின் அக்குபஞ்சர் புள்ளிகளைத் தூண்டித்தான் விடுகிறது. அதற்காகவாவது, இனி நாம் நகைகளைப் போடுவோம். இதனால் பல வியாதிகள் கட்டுப்படட்டும்!

நம் உடலின் அந்தந்த ஏரியாவில் சற்றே அழுத்தத்தைக் கொடுப்பது போல், நாம் போட்டிருக்கும் ஆபரணத்தை லேசாகச் திருகிவிட வேண்டும். தினசரி இதுவே ஒரு சிகிச்சையாக உங்களுக்கு அமையும்!...

மற்றபடி உடல்நிலை சரியில்லை என்ற சீரியஸான ஒரு நிலையில், இந்த வைத்தியத்தை நாமே செய்தாலே போதும் என்று நின்று விடக்கூடாது! அவசர நேரத்தில் மருத்துவரிடம் சென்று தகுந்த ஆலோசனைப்படி சிகிச்சை செய்து கொள்வதே முறையானது!...

சரி.... நாம் அணியும் எந்த ஆபரணம், என்னவிதமான மருத்துவப் பலனை தருகிறது என்று இனி பார்ப்போம்!





http://maruththuvam.blogspot.com