Language Selection

பி.இரயாகரன் -2007

புலியொழிப்பை வைக்கும் புலியெதிர்ப்பு புளுக்க வைக்கும் கட்டுரை ஒன்றை தேனீ வெளியிட்டுள்ளது. 'புலம் பெயர் நாடுகளில் மதில்மேல் குந்தியிருக்கும் ஆசாடபூதி பூனைகள்.

புலியொழிப்பையே அரசியலாக செய்யும் புலியெதிர்ப்புவாதிகளின் அரசியல் துரோகத்தை நாம் தோலுரிக்கும் போது, அதை மொழி வக்கிரம் என்று முதுக்கு பின்னால் அவதூறு செய்யமுனைகின்றனர். புலியெதிர்ப்பை தவிர வேறு எதையும் பேசத்தெரியாத

அற்பவாதிகளோ கோட்பாடின்றி, அரசியல் சதிகளுக்கு பின்னால், சதா ஓடி ஒழித்து விலாங்குகளாக வாழ்பவர்கள். இதையே அரசியலாக, நடைமுறையாக காவடி எடுப்பவர்கள். இந்த அற்பவாதக் கும்பலோ, புலியெதிர்ப்பின் பின் புலியொழிப்பை முன்வைத்தபடி,

இது பிரதான முரண்பாட்டில் மட்டும் தனித்து இயங்குவதில்லை. மாறாக சமூகத்தில் நிலவும் அனைத்து முரண்பாடும், பிரதான முரண்பாட்டுடன் முழுமை தழுவியதாகவே இயங்குகின்றது. உதாரணமாக இனம், சாதி, வர்க்கம் என எந்த முரண்பாட்டிலும்

இந்த விடையில் எமது நிலை என்பது தெளிவானதும், வெளிப்படையானதுமாகும். தமிழ் மக்களுக்கு வெளியில், எமக்கு என்று தனியான சொந்த நிலைப்பாடு எதுவும் கிடையாது. ஆனால் இதை புரியாத மாதிரி குழப்புவதில் தான், பிற்போக்கு சக்திகளின் சொந்த வர்க்க அரசியலே அடங்கிக் கிடக்கின்றது.

அரசியல் ஈடுபடுபவர்கள் அனைவருமே, மக்கள் என்ற பதத்தை பொதுவாக பயன்படுத்துகின்றனர். இதே போல் சமூகம் சார்ந்து தன்னார்வமாக செயல்படுபவர்களும் கூட, தாமும் மக்களுக்காக செயல்படுவதாக கூறுகின்றனர்.

புலிகளின் தனிமனித பயங்கரவாதம் உருவாக்கிய இராணுவ வாதங்கள் சொந்த நெருக்கடியில் சிக்கி திணறுகின்றது. இப்படி மக்களின் வாழ்வியலில் இருந்து அன்னியமாகிய புலியிசம், தொடர்ச்சியாகவே தோற்கின்றது. இதன் விளைவு பேரினவாதத்தின் வெற்றியாகின்றது.

ஆதிக்கம் பெற்று நிற்கும் எதிர்புரட்சிகர சக்திகள் அனைத்தும், இதற்குள் தமிழ் மக்களுக்கு தீர்வைக் காட்டமுனைகின்றனர். இப்படி கடந்தகால வரலாறு முழுக்க, இதற்குள்ளாகவே ஆயிரம் ஆயிரம் மக்களை கொன்று போட்டனர்.

இரண்டு பத்து வருடமாக தோற்றுக் கொண்டே இருக்கும் இரண்டு பிரதான வழிகள், இலங்கையில் பல பத்தாயிரம் மக்களை கொன்று போட்டுள்ளது. இன்னமும் கொன்று போடுகின்றது. இப்படி மனித அவலங்களோ எல்லையற்ற துயரமாகி, அவை பரிணாமித்து நிற்கின்றது.

கிழக்கை பேரினவாதம் கைப்பற்றியது பற்றிய, புலி எதிர்ப்பு (ஓழிப்புக்) கும்பலின் அரசியல் நிலைப்பாடு இதுவாகவேயுள்ளது. குடும்பிமலை யத்தமும் பேரினவாதக் கூச்சலும் ஒன்றாகி, அதுவே கிழக்கு மக்களின் வெற்றிப் பிரகடனமாக, பேரினவாத பாசிசப் பேய்கள் அறிவிக்க, புலியெதிர்ப்புக் கும்பலோ புலிப் பாசிசத்தை ஒழித்ததாக கூறிக் கொண்டாடுகின்றது.

குடும்ப அதிகாரம் என்பது அவசியமான எல்லைக்குள் மட்டுமானது. இது பரஸ்பரம் இணங்கியதாக, ஜனநாயகப் பண்பு கொண்டதாக அமைய வேண்டும். அதிகாரம் என்பது சமூகப்பொருளாதார உறவை குறைந்தபட்சம் உள்ளார்ந்த சமூக அடிப்படையில் புரிந்த எல்லைக்குள் தான், அது வெற்றிகரமாக குடும்ப உறுப்புகளால் இணக்கமாக ஏற்றுக்கொள்ளப்படும்.

மனைவியும் கணவனும் தனித்தனியான உலகில் தமக்கிடையான முரண்பாட்டுடன் சஞ்சரிக்கும் போது குடும்பத்தில் என்ன நடக்கும். குழந்தையும் அப்படியே தனித்தனியாகவே வாழத் தொடங்குவதை பல பெற்றோர் உணருவதில்லை.

மக்களுக்கு துரோகம் செய்து, கொள்கை ரீதியாக சோரம் போனவர்கள் தான். மக்களுக்காக, அவர்களின் நலன்களை முன்வைக்க அரசியல் ரீதியாக வக்கற்று போனவர்கள். மக்களை பிறப்பில் வைத்தே பிளக்கும் நயவஞ்சகத்தைத் தவிர வேறு அரசியல் அற்றவர்கள், இவர்கள் தான்.

சர்வதேசியம் உலகளவிலானது. உலகில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும். அவர்களின் விடுதலைப் போராட்டங்களை மட்டும் ஆதரிக்கும். பிற்போக்கானதும், மக்களுக்கு எதிரான எதையும் ஆதரிக்காது. இரண்டு முரண்பட்ட பிரிவில் ஒன்றைச் சார்ந்து நிற்க வேண்டிய அவசியம், கட்டாயம் அந்த வர்க்கத்துக்கு கிடையாது.

அறிவுபூர்வமாகவே இணங்கி வாழத் தயாரான குழந்தைகளை, அறிவற்றதாக்குவது யார்? மாடு மாதிரி தின்னப் போடுவதா, புண்ணாக்கு மாதிரி கல்வியைத் திணிப்பதா, பெற்றோரின் கடமை? இதை பூர்த்திசெய்வதே பெற்றோரின் பணி என்று நம்புவது, பெற்றோரின் அறிவிலித்தனமாகும்.

பெற்றோருடனான குழந்தையின் முரண்பாடு என்பது, பெற்றோரின் முரண்பாட்டில் இருந்து உருவாகின்றது. குழந்தை தான் விரும்பியதை சாதிக்க நினைப்பது, முரண்பட்ட பெற்றோரின் முரண்பட்ட முடிவுகளை அடிப்படையாக கொண்டது. கணவன் அல்லது மனைவியின் ஒன்றுபட்ட ஒரே முடிவை எடுக்க முடியாமையே,

இருவர் இணக்கத்தை அடைவதற்கான ஜனநாயக மனப்பாங்கின்றிய இணக்கமற்ற முரண்பாடுகள் என்பது, இன்று பல குடும்பங்களில் அடிப்படையான பிரச்சனையாகி உள்ளது. இணக்கத்தையொட்டி வாழ்வியல் மொழியைக் கூட சமூகம் இழந்து நிற்கின்றது.

கருத்தை கருத்தாக எதிர்கொள்ளும் புலியிசமும் கிடையாது. புலியெதிர்ப்பிசமும் கிடையாது. கருத்தைச் சொல்பவனைக் கொல்வது, விலைக்கு வாங்குவது, செயலற்ற வகையில் முடக்குவது, முடிந்தவரை மிரட்டுவது, இல்லாதுபோனால் பல குறுக்கு வழிகளில் அச்செயல்பாட்டை இல்லாததாக்குவது.

வாழ்வில் இருந்து அன்னியமாகி நுகர்வு உலகில் சிக்கிவிடும் குடும்பப் பெண்ணால், நடைமுறை வாழ்வில் திருப்தியை காணமுடிவதில்லை. அழகும், கவர்ச்சியும், ஆடம்பரமுமே அனைத்துமாகி விட, பொருட்களுடனான வாழ்வில் வாழ்வை திருப்திப்படுத்த அவளாலேயே முடியாது. இதன் விளைவு என்ன?

ஆணாதிக்க அமைப்பு உருவாக்கிய வட்டத்துக்குள் இயங்க முனையும் பெண், அதில் இருந்து விடுபடுவதற்கு பதில், அதை தீவிரமான தனது கடமையாகவே வலிந்து தேர்ந்தெடுக்கின்றாள். சமூக மாற்றங்களை உட்கிரகிக்க மறுக்கும் போது ஏற்படும் வலி, சொந்த வாழ்வியலையே துன்பமாக்குகின்றது.

சமுதாய நலன்களையும் அதற்கான போராட்டங்களையும் தம்மால் செய்து காட்ட முடியாவிட்டால், உடனடியாக எடுபிடி லும்பன் அரசியல் வள்ளென்று குலைக்கத் தொடங்குகின்றது. இப்படி மக்களையும், அவர்களின் வாழ்க்கையும், கூட்டிக்கொடுப்பவன் விபசாரத் தரகன் தானே. மக்களின் வாழ்வியலைத் திட்டமிட்டு சிதைத்துக் கொண்டுடிருக்கும் கும்பலுடன், கூடிப்படுப்பவன் மாமா தானே!

பெண்ணைச் சுற்றி உருவாகும் குடும்ப நெருக்கடிகள் பல, மொழி சாhந்த வன்முறை மூலம் கட்டமைக்கப்படுகின்றது. தம்மைச் சுற்றி ஒரு போலியான கற்பனை உலகை கட்டிவிட்டு, அதில் தத்தளிக்கும் ராணிகளும் ராஜாக்களும். இவர்களால் ஒரு சமூக உணர்வுடன் இணங்கி வாழ முடியாது, அலங்கோலமாகவே எதிரெதிரான முனைகளில் வாழ்கின்றனர். வாழ்வில் கிடைப்பதைக் கொண்டு மகிழ்சியாக வாழ முடியாது புலம்பும் இவர்கள், என்றுமே மகிழ்சியாக வாழமுடியாதவராகின்றனர். சதா அர்த்தமற்ற பூசல்களும் முரண்பாடுகளும். பொருள் சார்ந்த தனிமனித உலகில், கிடையாத வாழ்க்கை என்பது எல்லையற்றது. அது வரைவிலக்கணத்துக்கு உட்பட்டதல்ல.

போலியான வாழ்வு உருவாக்கும் உணர்வும் உணர்ச்சியும் எங்கும் எதிலும் இரட்டை வாழ்க்கை முறையை உருவாக்குகின்றது. உலகச் சந்தை தனது பொருளை விற்க எப்படி பகட்டாக நடிக்கின்றதோ, அப்படி மனித வாழ்வே நடிப்பாகிவிடுகின்றது. நம்ப முடியாத வகையில், இதுவே மனித வாழ்வியல் உறவுகளின் அங்கமாகிவிட்டது.

அதில் ஒன்று தான் புலியிசம். அது தன்னைத் தவிர அனைத்தையும் அவதூறாய் வைகின்றது., கொன்று போடுகின்றது. இதை நியாயப்படுத்தும் அறிவோ, நேர்மையோ கிடையாது. மாறாக சிந்தித்தால், மாற்றாக செயல்பட்டால், ஏன் கேள்வி கேட்டால், நியாயம் கேட்டால், அதை அவதூறு செய்து கொன்று போடுவதே புலியிசம்.

படுகொலை, கொள்கை கோட்பாடற்ற மாபியாத்தனம். தாம் ஏன், எதற்காக, எந்த இலட்சியத்துக்காக, எப்படி போராடுகின்றோம் என்பதை சொல்ல முடியாத கும்பல். இவர்களுக்கும் மனித குலத்துக்குமான உறவு என்பது, கடைந்தெடுத்த பாசிசம்.

அரசியலில் உள்ள பலருக்கு இது புரிவதில்லை. உண்மையில் இனச்சுத்திகரிப்பு என்பது பேரினவாதத்தின் கொள்கையாகும். கொழும்பில் புலிகளின் இருப்புக்கு காரணம் இந்த அரசு. இனப்பிரச்சனையை தீர்த்தால், புலிகளின் இருப்பு என்பது சாத்தியமில்லை. இதற்கு தடையான இந்த அரசை அல்லவா, நாம் விரட்டி அடிக்க வேண்டும்.

இனத் தன்மை வாய்ந்த பாசிசம் என்பது, இனத்தூய்மையையும் இனவழிப்பையும் முன்வைக்கின்றது. இலங்கையில் இது பலதரம் நன்கு நிறுவப்பட்டுள்ளது. பலர் கொழும்புச் சம்பவத்தை நாசிக்கால வரலாற்றுடன் ஒப்பிட, அவசரமாக கொடுக்கைக் கட்டிக்கொண்டு ஓடுகின்றனர்.

இலங்கையில் ஒரு சிங்கள பேரினவாத இராணுவ சர்வாதிகாரம் நிறுவப்பட்டுள்ளது. தமிழ்மக்கள் மத்தியில் கூட, இந்த விடையம் உணரப்படவில்லை. அந்தளவுக்கு புலிப் பாசிசம் எதிர்முகம் காட்டி நிற்கின்றது. இந்த சிங்கள பேரினவாத பாசிச சர்வாதிகாரத்தை தடுத்து நிறுத்த, புலிப்பாசிசமே தடையாகி நிற்கின்றது. தமிழ்பேசும் மக்களின் அரசியல் ஒற்றுமையை உருவாக்குவதற்கு, புலிப்பாசிசம் தடையாக நிற்கின்றது.

ஒரு பேப்பருக்காக எழுதியதாக குறிப்பிட்டு ஒரு செய்தியை, புலி வைரஸ் புலம்பியுள்ளது. http://sathirir.blogspot.com/2007/05/blog-post_31.html பிளக்கரிலும் இது வெளிவந்ததுள்ளது.

 

அதில் எனக்கு 'புலிக்காச்ச"லாம் அத்துடன் வேறு

அரசியல் ரீதியான தோல்வியை இராணுவ வெற்றியாக்கிவிட முடியாது. புலிகள் மீள யாழ்ப்பாணத்தை கைப்பற்றப் போவதாக வெளிவரும் செய்திகள் முதல் ஊதிப்பெருக்கும் செய்திகளுமே அண்மைய செய்திகளாகின்றன. அதற்கான தயாரிப்புகள் பற்றிய செய்திகளும், மிக பெரிய மனித அழிவுகள் ஏற்பட்டாலும் பரவாயில்லை என்ற புலியிஸ்சமும் சார்ந்த செய்திகளும் வெளிவருகின்றது.

இந்தியாவின் உளவு அமைப்பான றோவினதும், அதன் கூலிக் குழுவாகவுள்ள ஈ.என்.டி.எல்.எவ் இன் வானொலி தான் ரீ.பீ.சீ. இதை வெளிப்படையாக அறிவித்து இயங்குவது தான் குறைந்தபட்ச நேர்மை. அதைவிடுத்து, அதை மக்களுக்கு மூடிமறைத்து நடத்தும் அரசியல் சதி நீண்டகாலத்துக்கு நீடிக்காது. சதிக் கும்பல் தான் ரீ.பீ.சீ.

மற்றவனை ஒடுக்கவேண்டும், துன்புறுத்த வேண்டும் என்று விரும்பியோரின் வெற்றி தான், பிரான்சின் புதிய ஜனாதிபதியாகியுள்ள நிக்கோல சார்க்கோசியின் வெற்றியாகும். பிரான்சின் இந்த தேர்தல் முடிவுகள், இன்றைய உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலில் பல சமூக அதிர்வுகளை உருவாக்கக் கூடியவை.

கூட்டமாக கூடி அம்பலமாகின்றனர். மயக்கம், தயக்கம் அனைத்தும் வெகுளித்தனமாக அம்பலமாகியது. புலிப் பாசிட்டுகளைப் பொறுத்த வரையில், மக்கள் என்பது அவர்களின் தேவைக்கு ஏற்ப பலியிடப்படும் மந்தைகள் என்பதே, அவர்களின் அரசியல் நிலைப்பாடு. இவர்களுக்கு ஏற்பவே மக்களை கோமாளியாக கருதும் இந்திய கோயபல்ஸ்சுகள்.

அரசியலில் வித்தை காட்டுவதும், சமூக அறியாமையை உட்செரிப்பதன் மூலமும், ஒரு சமூகத்தின் புதைகுழிகள் தொடர்ச்சியாக தோண்டப்படுகின்றது. வெளிப்படையானதும், நேர்மையற்றதுமான, அணுகுமுறையுடனான அரசியல் பித்தலாட்டங்கள் அரங்கேற்றப்படும் விதம் சூழ்ச்சிகரமானது.

புலியெதிர்ப்பு கும்பல் நடத்தும் கோமாளிக் கூத்தில் அரசியல் விட்டுக்கொடுப்பு சாத்தியமா? இல்லை. இவை அல்லாத தளத்தில், அரசியல் விட்டுக்கொடுப்புகள் சாத்தியமா எனின், ஆம். அது மக்கள் நலனில் மட்டும் சாத்தியமானது. இதை மூடிமறைக்கவே, பலர் அரசியல் இல்லாதவர்களாக காட்டி நடிக்கின்றனர்.


21-04- 2007 புரசைவாக்கத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் தோழர் மருதையன் உரை

 

மயூரனுடன் இது தொடர்பாய் நடந்த விவாதத்தின் பகுதி கீழிணைக்கப்பட்டுள்ளது

 


உங்கள் கட்டுரை சொல்லவரும் அரசியல் நிலைப்பாடு முற்றிலும் தவறானது.



பன்னாட்டு நிறுவனங்களுக்கு பதில், கூட்டுறவு நிறுவனைங்களை அமைப்பதா ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டம்? இல்லையே!

7.5.2007 அன்று அதிகாலை இரண்டு மணியளவில் இந்த முயற்சி நடந்தேறியுள்ளது. எனது வீட்டின் அருகில் வீட்டை அண்டி நின்ற ஒரு பெரிய லொறிக்கு தீ வைக்கப்பட்டதன் மூலம், இந்த நிகழ்வு அரங்கேறியது. இந்த தீயில் இருந்து நாம் உயிர் தப்பியது அதிஸ்ட்டம் தான்.

கலாச்சாரங்கள் எங்கிருந்து எப்படி உருவாகின்றது? இவை மனிதக் கற்பனைகளில் இருந்தல்ல. மாறாக மனித வாழ்வியல் முறைகளில் இருந்து உருவாகின்றது. இந்த மனித வாழ்வியல் முறைகள், பொதுவாக பிளவுபட்ட இரு சமூகப் போக்கில் உருவாகின்றது. உழைப்பில் ஈடுபடும் மக்கள் ஒருபுறம், உழைப்பில் ஈடுபடாது உழைப்பவனின் உழைப்பைத் திருடி வாழும் கூட்டம் மறுபுறமாக, இரண்டு கலாச்சாரத்தின் ஊற்று மூலமாகவுள்ளது.

முகம் தெரியாத தோழர் ஒருவர் எம்மை நோக்கி எழுப்பிய கேள்விகளும் பதில்களும், அரசியல் முக்கியத்துவம் கருதி பிரசுரிக்கின்றோம்.

 

1. புலிகளும் ஆயுதத்தை கீழே போட்டால் என்னாகும்? புலிகளுக்கு பதிலாக தங்களது தீர்வு என்ன?

மற்றவன் உழைப்பைச் சுரண்டி தின்று கொழுக்கும் வர்க்கம் (கூட்டம்) இருக்கும் வரை, மே தினம் என்பது புரட்சிகர தினமாகவே இருக்கும். இதை யாராலும் வரலாற்றால் திரிக்கவும், கொச்சைப்படுத்தவும் முடியாது.

ஒரு தீவிரமான வன்முறை கொண்ட பொலிஸ் ஆட்சி தான், பிரான்சின் சமுதாய முரண்களை ஒழிக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் வாக்களிப்படுகின்றது. அந்த வகையில் முதல் சுற்றில் முன்னணியில் வெற்றி பெற்ற வேட்பாளரே,

"இணையப் போலிப் புரட்சியாளரும் ஈழ விடுதலைப் போரும்" என்ற தலைப்பில், தமிழ் மணத்தில் அற்புதன் என்ற, 'அற்புத"மான புலிப் பாசிட் எம்மீது தனது புலிப் பாய்ச்சலை நடத்தியுள்ளது. அந்த புலிப் பாசிச பாய்ச்சலின் உள்ளடகத்தைப் பார்ப்போம்.

உலகமயமாதல் நலன்களும், இந்திய நலன்களும் ஒன்றோடொன்று முரணானவையா? சரி முரணானவை என்றால் எப்படி? எந்த வகையில்? எந்த வர்க்க நலன்களின் அடிப்படையில்? இந்தியாவில் போராடும் ஒடுக்கப்பட்ட மக்களினதும், தேசிய முதலாளினதும் நலன்கள்,

புலிகளின் கைதுக்கான காரணமும், இதை எதிர்த்து போராடுவதற்கான முரண்பாடு, ஜனநாயக விரோதத் தன்மை கொண்டவை. இதை புலிப் பசை கொண்டு யாராலும் ஒட்ட வைக்கமுடியாது.

அவர்கள் கூறுவது போல் பின்வாங்குகின்றார்கள் என்றால், ஏன் எதற்காக? இதன் பின் எந்த காரணத்தையும் அவர்கள் முன்வைக்க முடியாது. எப்போதும் காரணத்தை முன்வைக்க முடியாத ஒரு பாசிச வழிப் போராட்டத்தை நடத்துபவர்கள். எந்த விளக்கத்தையும் முன்வைக்கவோ,

அரவிந்தன் நீலகண்டன் போன்ற பார்ப்பனிய அறிவிலிகள், பூணூலிட்டு மனித வரலாற்றை பார்ப்பனியமாக்கிவிட முடியாது. அதுபோல் மனித வரலாறு ஏகாதிபத்தியமயமாகி விடாது.

இல்லை. மாறாக தமிழ் மக்களை ஒழித்துக்கட்டுகின்றனர். தமிழ் மக்களின் ஒவ்வொரு உணர்வையும், புலிப் பாசிசத்தை மூலதனமானக் கொண்டு பேரினவாதம் வேட்டையாடுகின்றது. தமிழ் மக்களின் இருப்பே இன்று கேள்விக்குள்ளாகி நிற்கின்றது.

இந்தக் கைதுகளைத் தொடர்ந்து தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக கூறிக்கொண்டு கும்மியடித்த பலர், நாய் உண்ணிபோல் கழன்று ஒடுகின்றனர். பலர் தமது தலையை மண்ணுக்குள் குத்திக் கொண்டு, சம்பந்தமில்லாதவர்களாகி விட்டனர். இனம் தெரியாத ஒரு அச்சம் பீதி கலந்த மௌனம். எதுவும் நடவாத மாதிரி இருக்க முற்படுதல். எதுவும் தெரியாதவர் போன்று பிரமை. பலர் மௌனவிரதம். வசனம் பேசிய வீரர்கள், நடைப்பிணமாக நடமாட முனைகின்றனர்.

அரசியல் ரீதியாக மலடாகிப் போனவர்கள், ஹீரோயிச நடவடிக்கைகள் மூலம் தாக்குப்பிடிக்க முனைகின்றனர். ஆண்மையை இழந்தவர்கள் ஆண்மை மருந்துகளைக் குடிப்பதன் மூலம், தமது ஆண்மையை மெயப்பிக்க படாத பாடுபடுவார்கள். புலிகளின் எஞ்சிய காலம் இந்த நிலைக்கு பரிதாபகரமாக தரம் தாழ்ந்துவிட்டது.

 

புலியல்லாத கொலைகளுக்கு உடந்தையாக இருத்தலே புலியெதிர்ப்பின் ஜனநாயகமாகும். இதை ஒரு தலையங்கமாக இட்டு, அதைக் குறித்து எழுத வேண்டிய அளவுக்கு அரசியல் விபச்சாரம் எங்கும் அரங்கேறுகின்றது. புலிகள் செய்யாத கொலைகள், புலியெதிர்ப்புப் பாசிசக் கும்பலால் ஆதரிக்கப்படுகின்றது.

இன்றைய சமுதாய அமைப்புமுறை வன்முறைக்குரிய ஒன்றாகவே உள்ளது. இன்று காணப்படும் ஜனநாயகம் கூட, வன்முறையை நியாயப்படுத்தும் ஒரு வர்க்கத்தின் கருவியாகும். வன்முறைக்குரிய ஜனநாயக அமைப்பில், சமூகங்களை ஒழுங்குபடுத்தி அடக்கிவைத்துள்ள சமூக அமைப்புமுறையும் கூட வர்க்கத்தின் சர்வாதிகாரமாகவேவுள்ளது.

உழைக்கும் மக்கள் காறி உமிழும் பார்ப்பனிய சுரண்டல் அமைப்புத்தான், மனித பிரக்ஞை முதல் மானுட ஒழுக்கம் வரையிலான அனைத்து சமூக இழிவையும் புகுத்துகின்றது.

 

மனித உழைப்பு சார்ந்த இந்த உண்மையை மறுப்பது கருத்து முதல்வாதம்.

சந்திப்புக்கு தன்னைத்தவிர ஊரில் உள்ளவன் எல்லாம் கேனயன் என்ற நினைப்பு. நந்திக்கிராம மக்களின் போராட்டத்தை இழிவுபடுத்தி சொச்சைப்படுத்த, சி.பி.ஐ.(எம்) இது போன்ற நிகழ்சிகளை செய்வதில்லை என்று கதை சொல்ல முனைகின்றார். மூலதனத்தின் அரசியல் குண்டர்களான சி.பி.ஐ.(எம்) இன் வக்கிரத்தை, அறிவும் நேர்மையும் தர்க்கம் எதுவுமின்றி போராடும் மக்கள் மீது காறித் துப்புகின்றனர்.

மார்க்சியம் என்பது தெளிவாகவும் துல்லியமாகவும் அனைத்து துறையிலும் வர்க்க அடிப்படையில் பகுத்தாய்வு செய்கின்றது. வர்க்கப் போராட்டம் என்பது இடைவிடாத தொடர்ச்சியான ஒரு நீடித்த இயக்கமாகும். வர்க்கங்கள் நீடிக்கும் வரை வர்க்கப் போராட்டம் என்பது புரட்சிக்கு முன்பும் பின்புமாக தொடரும் ஒரு வர்க்க அடிப்படையாகும். இந்த வர்க்கப் போராட்டம் அமைதியாகவும் வன்முறை சார்ந்தும் நீடித்த ஒரு தொடர் நிகழ்ச்சியாகும்.

இவை அனைத்தும் மக்கள் விரோதக் கோட்பாடுகள். மனித குலத்துக்கு எதிரான ஒரு வர்க்கம் என்ற வகையில், பார்ப்பனியம் முதல் டாடாயிஸ்ம் வரை இணையத்தில், அறிவு நேர்மையின்றியும் தர்க்க அடிப்படையின்றியும் தெரு நாய்கள் போல் குலைப்பது இயல்பாகிப்போயுள்ளது. அது ஜனநாயகம், தனிமனித சுதந்திரம், மனிதாபிமானம், தனிமனித ஒழுக்கம் என்ற பல வண்ணத்தில்,

கிழக்குவாழ் மக்களின் பிரச்சனைகளை அடிப்படையாக கொண்ட விமர்சனம், காலத்தின் முக்கியத்துவம் கருதி முன்வைக்கப்படுகின்றது. புலிக்கு பதிலாக கருணா என்ற ஒரு பாசிட், பேரினவாதத்தின் கூலிப்படையாக வெளிப்பட்டது முதல் அந்த அரசியல் இழிநிலையை அம்பலப்படுத்துவதை காலம் கோருகின்றது. புலியெதிர்ப்பு மற்றும் புலிக்கு மாற்றாக கருணா என்ற மற்றொரு பாசிட்டை

தங்களைப் போல் எப்படி அரசியல் விபச்சாரத்தை செய்வது என்பதை, எமக்கு விளக்க முனைகின்றனர். தேனீ தனது ஏழாவது வருட நிறைவை ஓட்டிய இணையச் செய்தியில், எமக்கு பதில் சொல்ல முனைவதன் மூலம், தமது சொந்த விபச்சார அரசியல் என்ன என்பதையும் எடுத்துக்காட்ட முனைகின்றனர். மக்களின் முதுகில் எப்படி தாங்களும், தங்கள் வழி வந்தவர்களும் சவாரி செய்கின்றனர் என்பதை சொல்லி,

book _10.jpgசமகாலத்தில் நடைபெற்ற தொடர்ச்சியான பல்வேறு மனிதவிரோதசெயல்கள் மீதான ஒரு தொகுப்பு நூல் இது. மனிதத்தை நோக்கியும், மனிதத்தை நேசித்தலை நோக்கி முன்னேறுதல் என்பது அன்றாடம் அடிசறுக்குகின்றது. அதுவென்னவென்று கேட்கின்ற அளவுக்கு, அது அர்த்தமிழந்த ஒன்றாக பல்லிளித்து நிற்கின்றது. நாள்தோறும் மனிதனுக்கு எதிரான புதிய சதிகள், திட்டங்கள். பாவம் தமிழ்பேசும் மக்கள். மனிதனுக்கு எதிரான நிலைகளில், நிலைமைகளில் அன்றாடம் நடக்கும் அதிரடி மாற்றங்கள், அதிர்வுகள். அவற்றில் சிலவற்றை இந்த நூல் மூலம் உங்களுடன் பேச முனைகின்றேன்.

(இந்த விமர்சனத்தை தீர்வை முன்வைக்கும் அனைத்து தரப்புக்கும், இதன் மீது அக்கறை உள்ள அனைத்து சமூகப் பிரிவுக்கும் முடிந்தளவுக்கு அனுப்பிவைக்கவும்)

 

கொடூரமான புலிப்பாசிசம் ஒருபுறம், பேரினவாத அரசு நடத்தும் சதிகள் சூழ்ச்சிகள் கூடிய பாசிசம் மறுபுறம். இரண்டும் ஒன்றையொன்று சார்ந்து நிற்பதால், அனைத்தையும் மோசடி செய்தல், ஏய்த்து ஏமாற்றுதல், சமூகங்ளை இங்குமங்குமாக நம்பிக்கையூட்டி அலைக்கழித்தல்,

இந்த உண்மை புலியெதிர்ப்பு கும்பலுக்கு கசப்பான ஒன்று. இதனால் மக்கள் புலிகளை தோற்கடிக்கவில்லை என்று காட்டுவதே, புலியெதிர்ப்பு எடுபிடி பேர்வழிகளின் சுத்துமாத்து அரசியலாகும். இந்த மோசடியை உண்மையானதாக காட்ட, மக்களையும் கருணா கும்பலையும் ஒன்றாக காட்டுவதே இவர்களின் அரசியலாகும். அதை அவர்கள் "கருணாவின் அரசியலை நேசிக்கும் கிழக்கின் மக்களும், அந்த மக்களை நேசிக்கும் கருணாவின் அரசியலும்.." என்றவாறாக தமது புலியெதிர்ப்பு அரசியல் நிலைக்கு ஏற்ப, கயிறு திரிப்பதே இவர்களின் அரசியல் சாரமாகும் புலிகள் வேறு மக்கள் வேறு அல்ல என்பதை எப்படி புலிகளும் அதன் பினாமி எழுத்தாளர்களும் மறுக்க முனைகின்றனரோ, அதையே புலியெதிர்ப்புக் கும்பலும் செய்ய முனைகின்றது.

இந்தக் கேள்விகளும், குழப்பங்களும், திரிபுகளும் மலிந்த ஒரு சமூக அமைப்பில் நாங்கள் வாழ்வதால், இதை தெளிவுற வைப்பது அவசியமாகிவிடுகின்றது. இந்த வகையில்

கொலைகள், ஒரு நாளில் எத்தனை கொலைகள். இவை பட்டியலிட முடியாதளவில் நடக்கின்றது. கொல்பவனும் தமிழன், கொல்லப்படுபவனும் தமிழன். ஏன் ஏதற்கு கொல்லப்படுகின்றோம் என்று தெரியாத, ஒரு நிலையில் கொல்லப்படுகின்றோம். இன்று நீ நாளை நான், இப்படி கொல்லப்படுகின்றோம். மரணத்தின் தேசமாக, தேசியமாக பாடை கட்டிச் செல்லுகின்றது எமது தேசம்.

மனிதன் கற்றுக் கொள்வதற்கு வரலாறு தந்துள்ள படிப்பினைகள், மனித அவலங்கள் ஊடாகவே எம்முன் பரந்து விரிந்து வீழ்ந்து கிடக்கின்றது. ஆனால் நாங்கள் அந்த யாழ்ப்பாணிய மேலாதிக்க வழியில் தான், அதுவும் அந்த குண்டுச் சட்டியில் தான் குதிரை ஓட்டுவோம் என்றே கங்கணம் கட்டி ஆடுகின்றனர். இதை அம்பலப்படுத்தும் வரலாற்றுத் தேவை எம் முன் மீண்டும் மீண்டும் எழுகின்றது. கருணாவின் பிளவும், அதன் பின் அண்மையில் கிழக்கில் இராணுவத்தின் மீள் ஆக்கிரமிப்புகளும் வெற்றி பெற்று வருகின்ற இன்றைய நிலையில், புலியெதிர்ப்புக் கும்பல் போடுகின்ற அரசியல் வேஷங்களும், அவர்களின் கூத்துகளும், யாழ் மேலாதிக்கத்தின் ஒரு நாற்றமடிக்கும் கோவணமாகவே, கிழக்கு மேலாதிக்கம் மாறுகின்றது.

பாசிசம் சமூகத்தை அறிவால் வெல்வதில்லை. மனித மனங்களை வெல்வதில்லை. மாறாக அடக்குமுறையால், மோசடித்தனத்தால் வெல்ல முனைகின்றது. அது தனது ஈனத்தனமான கொலைப் பண்பாட்டால், உறையவைக்கும் அச்சத்தை விதைத்து, தன்னைத்தான் பலமானதாக காட்டிக்கொள்ளுகின்றது.

'கிழக்கில் மாற்று தமிழ் ஜனநாயக இயக்கங்கள் இணைந்து" ள்ளது என்ற செய்தி, பல உறுதி செய்யப்படாத சந்தேகங்களை எல்லாம் தெளிவுபடுத்தி விடுகின்றது. கிழக்கில் பிரபாகரனுக்கு ஈடாக ஏகப்பிரதிநிதியாக மாறும் கருணா கும்பல் நடத்தும் பாசிசக் கொலை வெறியாட்டம் தான், கிழக்கில் மட்டும் அந்த இணைவு என்ற அரசியலை அரங்கேற்றுகின்றது. அன்று ஈரோஸ்

மக்களுக்கு எதிரான துரோகத்தை நியாயப்படுத்துவதே மாற்று அரசியல் என்று, புலியெதிர்ப்புக் கும்பல் நிறுவ முனைகின்றது. புலிகளிள் ஒவ்வொரு பல்லும் விழும்போது, துரோகமே மாற்று என்று நிறுவப்படுகின்ற அரசியல் வக்கிரம் ஒருங்கே அரங்கேறுகின்றது. வரலாற்றின் முரண்நிலை, இதுவாக இருப்பதாக காட்டப்படுகின்றது. தமிழ் மக்களின் அரசியல் என்பது, இதுதான் என்று அறைந்து ஒட்டப்படுகின்றது. இது மீறப்பட முடியாத வகையில் ஊடகவியல் மாற்றுகள் அனைத்தையும் முடக்கி மலடாக்குகின்றது. இந்த வகையில் தமிழ் மக்களை கண்னை பிரித்து, சிந்திக்க நிர்ப்பந்திக்கின்றது.

ஜனநாயகத்துக்கும் பேச்சாளர்கள். கேடுகெட்ட ஒரு அரசியல் விபச்சாரம். புலிக்கு மட்டுமா பேச்சாளர்கள், இல்லை, கருணா தரப்புக்கும் தான் பேச்சாளர்கள். ஒரே பாணி அதே குட்டை. இதைச் சுற்றி இரண்டுக்கும் ஒரேவிதமான கோமாளித் தொண்டர்கள். எதையும் எப்படியும் நியாயப்படுத்தும் அரசியல் எடுபிடித்தனம். இவர்களின் திடீர் ஜனநாயகமோ எதையும் எப்படியும் கொத்திக் கிளறும், அமெரிக்க வகைப்பட்ட ஜனநாயகம்.

தமிழ் தேசிய யாழ் மையவாதம் மட்டுமல்ல, கிழக்கு மையவாதமும் பேரினவாதத்தினால் அழிக்கப்படும். பேரினவாதம் மட்டும் தான், மீண்டும் வெற்றி பெறும் எதார்த்தம். இதை நோக்கிய அரசியல் எல்லைக்குள் தான், அனைத்தும் மையப்பட்டு செயல்படுகின்றது. தமிழ் மக்களின் அழிவும் சீரழிவும், புலிகளால் மட்டுமல்ல கருணா தரப்பாலும், அதற்கு அப்பால் புலியெதிர்ப்பு கும்பலாலும், கிழக்கு மையவாதிகளாலும் கூட நடக்கின்றது. கிழக்கு வாழ் தமிழ் மொழி பேசும் மக்களின் தனித்துவமே திட்டமிட்ட வகையில் ஒழித்துக்கட்டப்படும். இதை நோக்கி ஒரு நிழல் யுத்தம் நடக்கின்றது. இதில் தமிழ், முஸ்லீம் என்று வேறுபாடுகள் எதுவும் இருக்கப் போவதில்லை. இந்த நிலைமையை குறைந்தபட்சம் புரிந்துகொள்ளக் கூடிய அரசியல் கூட, எந்த தரப்பிடமும் இன்று கிடையாது.

மனித இனம் மற்றொரு புதிய வருடத்தில் கால் பதிக்கின்றது. சமூக மாற்றங்களை கோருகின்ற வருடம். இது ஒரு புரட்சிகர வருடமாக இருக்க, நாம் உழைக்க வேண்டும். அந்த வகையில் புதிய வருடத்தில் வாழும் உங்களுக்கு, எமது கரம் கொடுக்கும் தோழமையுடன் கூடிய வாழ்த்துகள்.