தங்கள் குறுந்தேசிய அரசியலைக் காப்பாற்ற, புலி அரசியலுக்கு அரசியல் விளக்கங்கள
பிரிவினையை முன்னிறுத்தும் குறுந் தமிழ்தேசியத்தை நிராகரிக்காத, சுயநிர்ணய அடிப்படையில் ஜக்கியத்துக்கான தேசியத்தை முன்வைக்காத, அரசியல் பார்வைகள் அனைத்தும், ரகுமான் ஜானின் கூற்றுப்படி அயோக்கியத்தனமானது தான். "தம்மை முற்போக்காளர்களாகவும், அறிவுஜீவிகளாகவும் பிரகடனப்படுத்திக்கொண்டு இதே தவறை செய்யும் போது அது அவர்களது அறியாமையைக் காட்டவில்லை. மாறாக அவர்களது அயோக்கியத்தனத்தை மாத்திரமே கோடிட்டுக் காட்டுகிறது." இதைக் கூறிய மே18 ரகுமான் கூற்று, அவருக்கே விதிவிலக்கின்றி பொருந்துகின்றது. பிரிவினையை முன்னிறுத்தும் குறுந்தேசியத்தை நிராகரிக்காத, அதன் பின் நின்று செய்யும் ஆய்வுகள், விளக்கங்கள், தர்க்கங்கள்;, விமர்சனங்கள், சுயவிமர்சனங்கள் அனைத்தும் போலியானது புரட்டுத்தனமானது. இங்கு குறுந்தேசிய "பிரிவினை" கூட இதே சமூகத்தின் பின்னணியில் வால்பிடித்து முன்வைத்தவைதான்;. ஏன் ரகுமான் ஜான் குறுக்கி முன்வைக்கும் "தன்னியல்புவாத" போக்கையும், அரசியல் விளக்கத்தையும் தாண்டியதல்ல "பிரிவினை". ஆக இங்கு அரசியல் அயோக்கியர்கள், தங்களைத் தாங்களே இங்கு அம்பலப்படுத்திக் கொள்கின்றனர்.