'மனித சிந்தனையை நஞ்சாக்கும் 'கோக்" கலாச்சாரம்!" - தோழர் ஆனந்த் தெல்தும்ப்டெ, ஜனநாயக உரிமைகள் பாதுகாப்புக் குழு, மும்பை.
'நான் 2001இல் நைஜீரியா நாட்டில் வேலை செய்து வந்தபொழுது, குழாயில் வரும் தண்ணீரை எடுத்து வாய் கொப்பளித்தேன். என்னுடன் வேலை செய்து வந்த அந்நாட்டைச் சேர்ந்த தொழிலாளி, இதைக் கண்டு பதறிப் போய், இந்தத் தண்ணீரெல்லாம் வாயிலேயே படக்கூடாது என எனக்கு அறிவுரை செய்தார். ஒரு ஏழை நாட்டைச் சேர்ந்த சாதாரண தொழிலாளி இப்படிச் சொல்லியது என்னை அதிர்ச்சியடைய வைத்தது. இப்படிப்பட்ட மாற்றங்கள் நம்மைச் சுற்றி நடந்து வருவதைப் பற்றி நாம் விழிப்புணர்வு கொள்ளாமல் இருக்கிறோம்" எனப் புதிய தாராளவாதக் கொள்கை நமது கலாச்சாரத்தில் ஏற்படுத்தி வரும் மாற்றங்களைத் தனது உரையெங்கும் ஆழமாக விவரித்தார், தோழர் ஆனந்த் தெல்தும்ப்டெ.