Language Selection

புதிய ஜனநாயகம் 2005

10_2005.jpg'நான் 2001இல் நைஜீரியா நாட்டில் வேலை செய்து வந்தபொழுது, குழாயில் வரும் தண்ணீரை எடுத்து வாய் கொப்பளித்தேன். என்னுடன் வேலை செய்து வந்த அந்நாட்டைச் சேர்ந்த தொழிலாளி, இதைக் கண்டு பதறிப் போய், இந்தத் தண்ணீரெல்லாம் வாயிலேயே படக்கூடாது என எனக்கு அறிவுரை செய்தார். ஒரு ஏழை நாட்டைச் சேர்ந்த சாதாரண தொழிலாளி இப்படிச் சொல்லியது என்னை அதிர்ச்சியடைய வைத்தது. இப்படிப்பட்ட மாற்றங்கள் நம்மைச் சுற்றி நடந்து வருவதைப் பற்றி நாம் விழிப்புணர்வு கொள்ளாமல் இருக்கிறோம்" எனப் புதிய தாராளவாதக் கொள்கை நமது கலாச்சாரத்தில் ஏற்படுத்தி வரும் மாற்றங்களைத் தனது உரையெங்கும் ஆழமாக விவரித்தார், தோழர் ஆனந்த் தெல்தும்ப்டெ.

10_2005.jpg'தண்ணீர் தனியார்மயத்துக்கு எதிரான ஒரிசாவின் போராட்ட அனுபவத்தை, நான், தமிழகத்திலும், இந்தியாவெங்கிலுமே காண்கிறேன்" எனக் குறிப்பிட்ட ராஜேந்திர சாரங்கி, உலக வங்கியின் கட்டளைப்படி நீர் ஆதாரங்களைத் தனியார்மயமாக்கும் முதல் கட்டமாக, ஒரிசாவில் 'பாணி (தண்ணீர்) பஞ்சாயத்துக்கள்" கட்டப்பட்ட வரலாற்றையும், தண்ணீரைத் தனியார்மயமாக்க தமிழக அரசு எடுத்திருக்கும் நடவடிக்கைகளையும் ஒப்பிட்டு விவரித்தார்.

10_2005.jpgமானூர் ஊராட்சி ஒன்றியத்தில் கோக் நிறுவனத்திற்கு அனுமதி தரக் கூடாது எனத் தீர்மானம் கொண்டு வந்த சி.எஸ்.மணி, 'கோக், கங்கைகொண்டானுக்கு வருவது வெளியே தெரிந்தவுடனேயே, பல்வேறு அமைப்பினரும், அறிஞர்களும் எங்கள் பகுதிக்கு வந்து, இதனால் ஏற்படும் கேடுகளைச் சொன்னபோது, அதை நாங்கள் நம்பவில்லை. அதேசமயம், எங்கள் பகுதியைச் சேர்ந்த மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், விவசாய சங்கத் தலைவர்கள் என 40 பேர் சேர்ந்து

10_2005.jpg'குடிப்பதற்கு குடிநீர் இல்லை; பாசனத்திற்கு நீர் இல்லை; காவிரி நீர் இல்லை; முல்லைப் பெரியாறு தண்ணீர் நமக்கு இல்லை இப்படி, தமிழகம் இருக்கும் நிலையில், ஆற்றுநீரை அந்நியர்கள் பயன்படுத்த அனுமதிக்கலாமா?" என்று கேள்வி எழுப்பிய த.வெள்ளையன்,

 

'தமிழகமெங்கும் ம.க.இ.க.வின் சுவரெழுத்துக்களைப் பார்த்தேன். எந்தவொரு அரசியல் கட்சியாவது மக்கள் பிரச்சினைகளுக்காகச் சுவரெழுத்து எழுதியதுண்டா? மாறாக, தலைவர்களின் பிறந்தநாளுக்குத் தான் எழுதுகிறார்கள்" என ஓட்டுக்கட்சிகள் மக்கள் பிரச்சினைகளைப் புறக்கணிப்பதை விவரித்தார்.

10_2005.jpg 'ஆந்திர மாநிலத்தில் கோக்கையும், பெப்சியையும் பயிருக்குப் பூச்சி மருந்தாக அடிக்கிறார்கள். பூச்சியைக் கொல்லும் பெப்சியை ஃ கோக்கை நம்மைக் குடிக்க கட்டாயப்படுத்துகிறார்கள்" என இந்திய கோக் பானங்களின் தரத்தை அம்பலப்படுத்திய வழக்குரைஞர் திருமலைராசன், 'இந்தியச் சட்டங்களை மிக மென்மையாக மாற்ற வேண்டும் எனப் பன்னாட்டு நிறுவனங்கள் கோருகின்றன. இதற்கு ஏற்ப உரிமையியல் சட்டத் திருத்தம் கொண்டு வந்தார்கள். இதற்கு அடுத்து, இலவச சட்டப் பணிக் குழுவை, பேரம் பேசித் தீர்த்து வைக்கும் அமைப்பாக மாற்ற முயற்சி செய்தார்கள். இதற்கு எதிராக, அகில இந்திய வழக்குரைஞர் சங்கம் வழக்கு தொடுத்தது."

10_2005.jpg'மக்கள் கண்காணிப்பகம்: அமெரிக்க சாத்தானின் கள்ளக் குழந்தை" என்ற தலைப்பில் ஜூலை 2005 புதிய ஜனநாயகம் இதழில் அம்பலப்படுத்தும் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தோம். அதற்கு மறுப்புரை எழுதி அனுப்பியிருக்கும் மக்கள் கண்காணிப்பகம் அதைச் சுற்றுக்கு விட்டிருப்பதாக அறிகிறோம்.

 

மிகவும் புத்திசாலித்தனமாக எழுதுவதாகக் கருதிக் கொண்டு மக்கள் கண்காணிப்பகம் அளித்துள்ள மறுப்புரை, உண்மையில், அதன் ஏவலர்களால் இடப்பட்டிருக்கும் பணியாகிய அடுத்துக் கெடுக்கும் நயவஞ்சக நரித்தனத்தையே வெளிப்படுத்தியிருக்கிறது.

10_2005.jpg'கங்கை கொண்டானில் கோக் ஆலையை அனுமதிக்கக் கூடாது என்று கோரி, 1,000 வழக்குரைஞர்கள் கையெழுத்துப் போட்ட மனு ஒன்றை மாவட்ட ஆட்சியாளரிடம் கொடுத்திருக்கிறோம். ஆனால், மனு கொடுப்பதால் மக்கள் பிரச்சினை தீர்ந்துவிடாது; சட்டத்தின் மூலமும் மக்கள் பிரச்சினையைத் தீர்க்க முடியாது. மக்கள் பிரச்சினைகளை மக்களின் போராட்டங்கள் மூலமே தீர்க்க முடியும்" எனக் குறிப்பிட்ட அவர், இதனைத் தனது பொது வாழ்க்கை அனுபவத்தில் இருந்தும், வழக்குரைஞர் தொழில் அனுபவத்தில் இருந்தும் உணர்ந்து கொண்டதாகக் கூறினார்.

10_2005.jpg'இந்திய நீதிமன்றங்களின் வர்க்கச் சார்பு" குறித்து உரையாற்றிய வழக்குரைஞர் லஜபதிராய், இதற்கு ஆதாரமாக, 1970இல் சி.பி.எம். கட்சியைச் சேர்ந்த மறைந்த தலைவர் ஈ.எம்.எஸ்., ஒரு நீதிமன்றத் தீர்ப்பை, வர்க்கச் சார்பு கொண்டது என விமர்சித்ததற்காகத் தண்டிக்கப்பட்டது தொடங்கி, இன்றுவரை உள்ள பல்வேறு நீதிமன்றத் தீர்ப்புகளைச் சுட்டிக் காட்டினார்.

 

'நர்மதை நதியின் குறுக்கே சர்தார் சரோவர் அணை கட்டப்படுவதற்குத் தடை விதிக்கக் கோரி நர்மதை பாதுகாப்பு இயக்கம் தொடுத்த வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம், நர்மதை நதி பழங்குடி

10_2005.jpg 'தாமிரவருணியை உறிஞ்ச வரும் அமெரிக்க கோக்கை அடித்து விரட்டுவோம்!" என்ற முழக்கத்தின் அடிப்படையில், கடந்த மூன்று மாதங்களாக தமிழகமெங்கும் ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள் நடத்திவரும் இயக்கத்தை, கோக்கிற்கு எதிரான இயக்கமாக மட்டும் சுருக்கிப் பார்க்கக் கூடாது; தண்ணீரை இலாபம் தரும் பண்டமாக மாற்றும், நீர் ஆதாரங்களைத் தனியார் ஃ பன்னாட்டு முதலாளிகளின் தனிச்சொத்தாக ஒப்படைக்கும் மறுகாலனியாதிக்கத்துக்கு எதிரான போராட்டங்களின் ஓர் அங்கமாக இதனைக் காண வேண்டும்'' எனத் தனது தலைமை உரையின் தொடக்கத்திலேயே குறிப்பிட்ட தோழர் மருதையன், 'போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்டு, தாமிரவருணி கோக்கிற்கு விற்கப்படுவதை எதிர்த்துப் போராடும் பல்வேறு அமைப்புகளுக்கும், நமக்கும் உள்ள வேறுபாடு இதில்தான் அடங்கியிருக்கிறது. அவர்கள் இதனைத் தவறான பொருளாதாரக் கொள்கையாகப் பார்க்கிறார்கள். நாம் இதனை மறுகாலனியாதிக்கத்தின் அங்கம் எனக் குறிப்பிட்டு எதிர்த்துப் போராடுகிறோம்" என விளக்கினார்.

10_2005.jpgமறுகாலனியாதிக்கத்தின் கொடிய வெளிப்பாடான தண்ணீர் தனியார்மயத்திற்கு எதிராகவும், அதன் துலக்கமான வெளிப்பாடான 'கோக்"கிற்கு எதிராகவும் மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகள் இணைந்து தமிழகமெங்கும் கடந்த மூன்று மாதங்களாக நடத்திவந்த பிரச்சார இயக்கத்தின் ஒரு பகுதியாக,

10_2005.jpg'இது நாலுவழிச்சாலை மட்டுமல்ல. பொருளாதார முன்னேற்றத்துக்கான நல்வழிச்சாலை" என்று கடந்த செப்டம்பர் 18ஆம் தேதியன்று நாங்குநேரி கிருஷ்ணன் புதூரில் நடந்த நான்கு வழிச்சாலைக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார், தி.மு.க. தலைவர் கருணாநிதி. காசியையும் கன்னியாகுமரியையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் (எண்:7) கோவில்பட்டியிலிருந்து நெல்லை வழியாக பணகுடி வரையிலான 123 கி.மீ. நீள இருவழிச் சாலையானது ரூ. 630 கோடியே 42 லட்சம் செலவில் நான்கு வழிச்சாலையாக மாற்றியமைக்கப்படுகிறது. இதற்கான விழாவில் கலந்து கொண்டு அடிக்கல்லைத் திறந்து வைத்த கருணாநிதி, இது நல்வழிச்சாலைக்கான கால்கோள் விழா என்றும் குறிப்பிட்டார்.

10_2005.jpg'நாங்கள் எங்கள் கொள்கையைத் தலைகீழாக 180 டிகிரிக்கு மாற்றிக் கொண்டு விட்டோம்" என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்த மே.வங்க போலி கம்யூனிஸ்டு முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா, இப்போது இன்னும் ஒருபடி முன்னேறி உலகமயத்துக்கு வெளிப்படையாகவே பக்கமேளம் வாசிக்கக் கிளம்பிவிட்டார்.

 

தமிழகத்தைத் தொழில்மயமாக்க ஹ_ண்டாய் கார் தொழிற்சாலையைக் கொண்டு வந்தேன்; நோக்கியா செல்போன் ஆலையைக் கொண்டு வந்தேன் என்றெல்லாம் கருணாநிதியும் ஜெயலலிதாவும்

10_2005.jpgபொதுச் சொத்தைக் கொள்ளையடிப்பதைத் தங்களது பிறப்புரிமையாக கருதிக் கொண்டு கொட்டமடிக்கும் அ.தி.மு.க. பொறுக்கி கும்பல், கழிப்பறையைக்கூட விட்டு வைப்பதில்லை. சிவகிரி ஊராட்சியில் பெண்களுக்கென புதிதாக ஒரு கழிப்பறை கட்டப்பட்டது. இது அ.தி.மு.க. சார்பான மகளிர் சுய உதவிக் குழுவுக்கு குத்தகைக்கு விடப்பட்டது. குத்தகை எடுத்த அக்குழு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத் தொகையைவிட கூடுதலாக வசூலித்தது. இதனை எதிர்த்துக் கேட்ட பெண்களைக் கேவலமாகத் திட்டுவது, கழிப்பறையை இழுத்துப் பூட்டி விடுவது என அராஜக ஆட்டம் போட்டது.

10_2005.jpgசிவகங்கை மாவட்டம், மானாமதுரை நகரில் "டெலிபோன் கேபிள்' புதைப்பதற்கு அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். அந்நகரின் மேல்கரை பிரதான சாலையை பொக்லைன் இயந்திரம் கொண்டு இரண்டாகப் பிளந்தது. மீண்டும் தார்ச்சாலை அமைக்காமல், அதில் அவசரமாக மண்ணை மூடிவிட்டு ஓடிவிட்டது.

10_2005.jpgகடந்த ஆகஸ்டு 29 அன்று கடுமையான ஐந்தாம் ரக, தீவிரச் சூறாவளி புயல் கத்ரீனா தென்கிழக்கு லூசியானா நியூ ஆர்லீன்ஸ், தெற்கு மிஸிஸிபி ஆகிய இரண்டு அமெரிக்க மாகாணப் பகுதிகளை மோதித் தாக்கியது. கடந்த ஏழாண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் இந்த அளவு இயற்கைச் சீற்றம் கடுமையாக இருந்திருக்கிறது.

 

புயலின்போது கடலின் அலைகள் இருபது அடி உயரம் எழும்பி ஆர்ப்பரித்தது; கரையோரம் பழமையில் எழுப்பப்பட்ட அரண்கள் தவிடு பொடியாக்கப்பட்டன் நியூ ஆர்லீன்சின் எண்ணெய்க் கிணறுகள் ஸ்தம்பித்தன் இரண்டு அணு உலைகள் முடங்கின. ஊருக்குள் பாய்ந்த கடலலை வீடுகளை மூழ்கடித்தது; நகரத்தை நாலாபுறமும் சூறையாடியது.

10_2005.jpgமன்மோகன் சிங் இந்தியப் பிரதமராகப் பதவியேற்ற பிறகு முதன்முறையாக அமெரிக்காவுக்குப் போயிருந்தபோது அறிவித்தார்: 'இந்தியாவை விற்பதற்காக வந்திருக்கிறேன்!" அப்போது யாரும் அந்தச் சொற்களை நேரடிப் பொருளில் எடுத்துக் கொள்ளவில்லை. பன்னாட்டுத் தொழிற்கழகங்களின் முதலீடுகளை ஈர்ப்பதற்கான முயற்சியைத்தான் அப்படிச் சொல்கிறார் என்றே பலரும் நம்பினார்கள். ஈரானுடனான இந்தியாவின் இயற்கை எரிவாயு இறக்குமதி ஒப்பந்தத்தை அமெரிக்கா எதிர்த்தபோது, அதே மன்மோகன் சிங் தனது போலி கம்யூனிஸ்டு கூட்டாளிகளுக்கு வாக்குறுதி கொடுத்துச் சொன்னார், 'இந்தியா விற்பனைக்கு

10_2005.jpgஅரியானா மாநிலத்தில் ஜாட் சாதிவெறிக் கும்பல் தாழ்த்தப்பட்டோரின் குடியிருப்பு பகுதியில் புகுந்து பகற் கொள்ளையில் ஈடுபட்டதோடு, அப்பகுதியையே கொளுத்திச் சாம்பல் மேடாக்கியது.

 

அரியானா மாநிலத்தின் பாணிபட் மாவட்டத்தில் உள்ள நகரம், கோஹனா. அந்நகரத்தின் நெரிசல் மிகுந்த வர்த்தகப் பகுதியில் உள்ளது தாழ்த்தப்பட்டவர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வால்மீகி மற்றும் ஆர்யா என்ற இரு குடியிருப்புப் பகுதிகள். கடந்த ஆகஸ்ட் மாதம் 31ந் தேதி மதியம் பட்டப்பகலில் 1500க்கும் மேற்பட்ட ஜாட் சாதிவெறிக் கும்பல் ஒவ்வொரு வீடாகச் சென்று கொள்ளையடித்தது. முடிவில், குடியிருப்புகளின் மீது பெட்ரோல் டின்களை வீசி மொத்தமாகக் கொளுத்தியது.

09_2005.jpgகுர்கானில் ஹோண்டா தொழிலாளர்கள் மீது அரியானா போலீசார் நடத்தியுள்ள கொலைவெறியாட்டத்தைக் கண்டித்தும், தொழிலாளர்களின் வீரம் செறிந்த போராட்டத்தை ஆதரித்தும் மறுகாலனியாதிக்கத்துக்கு எதிராகப் போராட தொழிலாளி வர்க்கத்துக்கு அறைகூவல் விடுத்தும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.

09_2005.jpg கோவை மாவட்டத்திலுள்ள உடுமலைப்பேட்டை, பஞ்சாலைத் தொழிலுக்கு பெயர் பெற்ற நகரம். இந்நகராட்சியின் ஆணையாளரான திரு.கே.ஆர். செல்வராசு அவர்கள் இலஞ்ச, ஊழல், அதிகார முறைகேடுகளுக்கும் பெயர் பெற்ற நகராட்சியாக, இதை மாற்றிய "பெருமை'க்குரியவர் என்றால் மிகையல்ல.

 

நகராட்சி ஊழியர்கள், தனது வீட்டின் எல்லா வேலைகளையும் செய்வதற்காகவே நியமிக்கப்பட்டவர்கள்! நகராட்சி வாகனங்கள், தனது குழந்தைகள் பள்ளி சென்று வரவும் தனது மனைவிஉறவினர்கள் கோயில் குளங்களுக்குச் சென்று வருவதற்காக மட்டுமே வாங்கப்பட்டவை! வீட்டு வரியா?

09_2005.jpg"நக்சல்பாரி'' என்ற வார்த்தையைக் கூட தருமபுரி கிருஷ்ணகிரி மாவட்ட எல்லைக்குள் உச்சரிக்கக் கூடாது என்று உத்தரவு போட்டு வரும் போலீசுத்துறைக்குப் பெரும் சவாலாக அமைந்தது, புரட்சிகர அமைப்புகளின் சுவரெழுத்துக்கள். ""தண்ணீரைத் தனியார்மயமாக்காதே! தண்ணீரை வியாபாரமாக்காதே! தாமிரவருணியை உறிஞ்சவரும் அமெரிக்க "கோக்'கை அடித்து விரட்டுவோம்! நக்சல்பாரி பாதையில் அணிதிரள்வோம்!'' என்று