Language Selection

பி.இரயாகரன் -2010

"விடுதலைப் புலிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு போக வேண்டும்" உங்களைப்போன்ற  அனைத்துத் தரப்பும் வீதியில் இறங்கி கோரிய போது, நாங்கள் மட்டும் விதிவிலக்காக மாறுபட்ட கோசத்தை முன்வைத்து அதைக் கோரினோம். இதன் மூலம் தான் இதில் இருந்து மீள வழி பிறக்கும் என்று கூறினோம்;. இதுவல்லாத உங்கள் கோசம் மக்கள் மற்றும் புலியின் அழிவைத் தவிர, வேறு எதையும் பெற்றுத்தராது என்ற உண்மையினை நாம் மட்டும் சொன்னோம்.   

400 வருடமாக இருந்த பாபர் மசூதியை இடித்து, மூஸ்லீம் மக்களைக் கொன்று குவித்த செயலை சரி என்கின்றது இந்திய நீதிமன்றம். சட்டம் அதைத்தான் சொல்லுகின்றதாம். அதாவது 400 வருடத்துக்கு முன் இதில் மசூதி இருக்கவில்லை, எனவே இடித்தது சரி. நீதிமன்றம் ஒரு தீர்ப்பு மூலம் இடிக்க வேண்டியதை, இந்து வானரக் கூட்டம் சட்டத்தை கையில் எடுத்து செய்தது சரியானது என்பதுதான் தீர்ப்பின் உள்ளடக்கம். 400 வருடத்துக்கு முன் சென்ற வரலாற்றை இந்து பாசிச கும்பலின் ரவுடிக் கும்பலாக மாறி புரட்டியுள்ளது. 

அனைத்துவித உண்மைகளையும் புதைத்து விடும் போது, பொய்கள் அரசியலாகிவிடுகின்றது. சரியான நேர்மையான தரவுகள் தான், உண்மையை பகுத்தாய உதவுகின்றது. இதை யார்தான் செய்தனர், செய்கின்றனர். நடந்து முடிந்ததைக் பற்றி முழுமையான பகுத்தாய்வு  இன்றி புதிய அரசியல் வழிமுறையை படைக்க முடியாது. மே 16ம் திகதி புலிகள் சரணடைந்ததன் பின்னான அரசியல், எந்தவிதத்திலும் எங்கும் நடந்ததை பற்றிய சுய விமர்சனமுமின்றி தான் அரசியலில் தாளம் போடுகின்றனர்.

"எங்களுக்கு அப்பொழுது வேறு வழிதெரியவில்லை", அதனால் "எப்படியாவது" என்று கூறி, அனைத்தையும் சொந்த மக்கள் மேல் திணித்தவர்கள் தான் இந்தச் தீபச்செல்வன்கள். அதைத்தான் இங்கு தீபச்செல்வன் மறுபடியும் நியாயப்படுத்துகின்றார். இப்படி இவர்கள் வேறு "வழிதெரியவில்லை" "எப்படியாவது" என்று கூறி ஏற்படுத்திய சமூக விளைவை, கவிதை இலக்கியம் என்று எந்தக் கூச்சமுமின்றி அதை அரசியலாக்குகின்றனர். இதைத்தான்  காலாகாலமாக புலிகள் செய்து வந்தனர்.

நடந்ததை மூடிமறைக்கும் வரை, சமூகம் இருட்டில் தத்தளிக்கும். பொய்யர்களும், புரட்டுப் பேர் வழிகளும், மக்கள் மேல் சவாரி செய்வார்கள். சமூகம் தனக்காக போராடும் என்பதை, கனவிலும்; நினைத்து பார்க்க முடியாது. இந்த பாதையில் தான் தமிழ்த்தேசிய அரசியல் தொடர்ந்து புளுத்து சமூகத்துக்கு நஞ்சிடுகின்றது. இதை மாற்ற வேண்டும் என்றால் புலிகள் விமர்சிக்கப்படவேண்டும். இதை அரசியல் ரீதியாக செய்வதை விரும்பததால், எம்மை எங்கும் இருட்டடிப்பு செய்கின்றனர்.    

தேர்ந்தெடுத்த அரசுக்கு எதிரான மனிதவுரிமைச் சட்டங்கள் அனைத்தும், குப்பையில் போட வேண்டும். நீதி, சட்டம், ஒழுங்கு எவையும், மக்கள் தேர்ந்தெடுத்த அரசுக்கு கிடையாது. இதை கடைப்பிடிக்கும்படி  யாரும் கோர முடியாது. அதை அரசுக்கு எதிராக பயன்படுத்தக் கூடாது. அதை நாம் அனுமதிப்பதில்லை. அதை மீறினால் கொல்லப்படுவார்கள். இலங்கையில் மக்கள் தேர்ந்தெடுத்த ஆட்சியாளர்களாகிய நாங்கள் நடைமுறைப்படுத்தும், ஜனநாயகம் இதுதான். தேர்ந்தெடுத்த அரசுக்கு எதிராக மனிதவுரிமை சட்டத்தை எம் நாட்டில் அமுல்படுத்திட முடியாது என்று ஆட்டம் போடும் பாசிட்டுகள், அதை உலக அரங்கில் எழுப்பியதுடன் அதை உலகம் தளுவியதாக அமுல்படுத்தக் கோருகின்றனர். மகிந்த ஐ.நாவில் ஆற்றிய உரையில் "போர்கள் நடத்தப்பட வேண்டிய முறை குறித்த சர்வதேசச் சட்டங்களில் பெரும் பிரச்சினைகள் இருப்பதாக" கூறுகின்றார். சர்வதேச சட்டத்தில் இருக்கக் கூடிய மனிதவுரிமைகளை கூட, இல்லாதாக்க கோருகின்றார். மக்களைக் கொன்று குவித்து ஆட்டம் போட்ட எங்களைப் போன்ற  பாசிட்டுகளை, மனிதவுரிமைச் சட்டத்தின் முன் நிறுத்தக் கூடாது என்று சொல்லுகின்றனர். ஏனென்றால் நாங்கள் "பயங்கரவாதத்தை" ஒழித்துக் கட்டியவர்கள். அதற்காக "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்."  

எதையும் மறுபரிசீலனை செய்யும் அறிவு,  முடக்கப்பட்டு இருக்கின்றது. நடந்த போராட்டம் மீதான விமர்சனம், சுயவிமர்சனத்தை செய்வது, அரசியல் ரீதியாக தொடர்ந்து மறுக்கப்பட்டு இருக்கின்றது. இதுவே இடதுசாரியம் வரையான பொது அரசியலாக உள்ளது. புலியை விமர்சனம் செய்யாத அரசியல் மூலம், இலங்கை தமிழர்கள் மற்றொரு மாற்று அரசியலை ஒருநாளும் முன்னெடுக்க முடியாது. இந்த வகையில் இலங்கை, தமிழகம் புலம் என்று எங்கும் புலித்தேசிய அரசியல் முதல் அதன் தோல்விகள் வரை, விமர்சனம் செய்வது என்பது அரசியல் ரீதியாக தவறாக காட்டப்பட்டு அவை இருட்டடிப்பு செய்யப்பட்டு இருக்கின்றது. இதை நாம் மட்டும் கோருவதால், எமது விமர்சனங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் புலித்தேசிய அரசியல் பார்வையே, தொடர்ந்தும் எங்கு ஆதிக்கம் பெற்ற ஒன்றாக நீடிக்கின்றது. இந்த அனைத்து தளுவிய உண்மை, அரசியல் ரீதியாக தொடர்ந்து புதைக்கப்படுகின்றது.        

இதற்கான காரணத்தை எப்படி, அதை எந்த நோக்கில் இருந்து பார்க்கின்றார்கள் என்பது, அரசியல் ரீதியான அவர்களின் நேர்மைக்கு மற்றொரு எடுத்துக் காட்டாக மாறிவிடுகின்றது. நாங்கள் ஒவ்வொருவரும் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் தோற்றது ஏன் என்றும், புலிகள் அழிக்கப்பட்டது ஏன் என்ற சுய விசாரணையை செய்ய முடிந்திருக்கின்றதா? சொல்லுங்கள். முதலில் நாங்கள் தான் தோற்கடிக்க காரணமாக இருந்திருக்கின்றோம், மற்றவர்கள் அல்ல. மற்றவர்கள் இதை தமக்கு சாதகமாக கொண்டு வென்றவர்கள்.

எமது சமூகம், ஏன் இந்த அவலமான அரசியல் நிலையை அடைந்தது? அதை வெறும் பேரினவாதமாக மட்டும் கூறுவது, இந்தநிலை ஏற்பட காரணமாக இருந்த தமது தரப்பு தவறுகளை மூடிமறைப்பதாகும். இதைத்தான் இங்கு தீபச்செல்வன் செய்கின்றார். தனது இனம் சார்ந்தும், தனது வர்க்கம் சார்ந்தும், எதார்த்தத்தின் ஒருபக்கத்தைச் சார்ந்து நின்று எதார்த்தத்தின் முழுமையை மறுக்கின்றார். இதைத்தான் புலிகள் கடந்தகாலத்தில் செய்து வந்தனர்.

மற்றொரு புலி சரணடைவு பற்றிய உண்மையையும், அவர்கள் எங்கே என்ற கேள்வியையும் மகிந்த பேரினவாத அரசின் முன் எழுப்பியுள்ளது. "இங்கு ஒரு சின்ன ஈ அசைந்தால் கூட அது அவருக்குத் (ஜனாதிபதிக்கு) தெரிந்திருக்கும்" என்று, தன் கணவன் எங்கே என்று கொலைகார மாண்பு மிகு ஜனாதிபதியிடம் ஆனந்தி சசிகரன் கேட்டிருக்கின்றார்.

மகிந்த அரசு தங்கள் போர்க்குற்றங்களை மூடிமறைக்கவும் சர்வதேசத்தை ஏய்க்கவும், ஒரு விசாரணைக் குழுவை அமைத்தது. தாங்கள் சரணடைந்தவர்களைக் கொல்லவில்லை என்பதும், அவர்கள் யாரும் இந்த நாட்டில் காணாமல் போய் விடவில்லை என்று சொல்கின்ற புரட்டை நிலைநிறுத்தும் நாடகங்கள் தான் விசாரணைகள் முதல் ஆணையங்கள் வரையான கூத்துக்கள்.

அரசியல் ரீதியாக நீர்த்து போகச் செய்ய பல தில்லுமுல்லுகள். திசை திருப்பல்கள். மக்களின் அவலத்தை பார் என்கின்றனர். குகநாதன் பற்றிக் கதை சொல்லுகின்றனர். முதலில் இதில் இரயாகரன் பற்றி சொன்னவர்கள் தான், இப்போது இப்படிக் கூறுகின்றனர். 

இதன் மூலம் புதிதாகச் சொல்லும் அரசியல் உள்ளடக்கம் என்ன? அருள் சகோதரர்கள் செய்தது சரி என்பதே. இதனால் நாவலன்-அசோக் ஈடுபட்டதும் சரியாகிவிடுகின்றது. இதை மூடிமறைக்க, முடிவற்ற திசைதிருப்பல்கள். இதில் சம்பந்தப்பட்டவர்கள் முதல் அரசியல் பச்சோந்திகள் வரை இந்த விடையத்தை அமுக்கிவிட முனைகின்றனர்.

தீபச்செல்வனுக்கு முற்போக்கு அரசியல் அடையாளத்தை கொடுத்தது எது?

1.அவரின் பின் வெளிப்படாது இருந்த புலிசார்பு அரசியல் நிலைப்பாடா!? அல்லது

2.அவர் பொதுமக்களின் அவலங்கள் சார்ந்த, அவரின் கவிதை மொழியா!? அல்லது

3.புலிகள் பற்றிய அவரின் கவிதையில் மறைமுகமாக வெளிபட்ட எதிர்மiறான மெல்லிய ஒரு சில விமர்சனங்களா!?

இரயாகரன் அனைவருக்கும் எதிராக "அவதூறு" எழுதுகின்றார், இரயாகரன் "தனிநபர்" தாக்குதல் நடத்துகின்றார், இரயாகரன் - நாவலன் "இடையேயான" விவகாரம் இது, இரயாகரன் என்.எல்.எவ்.ரியின் கற்றன் நாசனல் வங்கிப் பணத்தை "மோசடி" செய்தவர், இரயாகரன் ஒரு "மனநோயாளி", இரயாகரன் எழுத்தை நாம் "படிப்பதில்லை" என்று எத்தனையோ திசை திருப்பும் அரசியல் தகிடுதத்தங்கள், அரசியல் வக்கிரங்கள். முதலில் இதுவே ஒரு அரசியல். உண்மைகளை குழி தோண்டிப் புதைக்கும், சந்தர்ப்பவாதத்துடன் கூடிய பிழைப்புவாத அரசியல். இதன் மூலம் என்னதான் இவர்கள் சொல்ல வருகின்றனர். தங்கள் அரசியல் நடத்தைகள் சரியானவை என்பது தான். இதன் மூலம் உண்மைகளை மூடிமறைத்து, மக்களை ஏய்க்கும் அரசியலை தொடர்ந்து நடத்த முனைகின்றனர்.

இனியொரு நாவலன் வழக்கு போடப் போவதாக சலசலப்புக் காட்டி மிரட்டுகின்றார். நாமே குறுக்கு விசாரணையை நடத்தி, வழக்கை நடத்திவிட வேண்டியதுதான். அந்தக் குறுக்கு விசாரணையை எழுதிக்கொண்டிருந்த போது இனியொரு ஆசிரியரும், அருள் செழியனின்  தம்பியுமான அருள் எழிலன் "நடந்தது என்ன" என்ற ஒன்றை எழுதியுள்ளார். இந்தக் கட்டுரை எழுதி முடிந்த நிலையில் குகநாதன் பேட்டி தேசம் நெற்றில் வெளியாகியது. இதையடுத்து நாவலன் "ஜெயபாலன் – ரயா – குகநாதன்"  கூட்டுபற்றி வேறு பேசியிருக்கின்றார். குகநாதன் சமன் மகிந்த ராஜபக்சா என்று சொல்லி, இதுதான் ரயா என்று சொல்லும் எல்லையில் நாவலன் அரசியல் விரைவில் தஞ்சமடையும். நாம் முதலில் அருள் செழியன் - அருள் எழிலன் விடையத்தை சுருக்கமாக பார்த்துவிட்டு குறுக்கு விசாரணைக்கு செல்வோம்.

இனவொடுக்குமுறையினால் தொடரும் பொது அவலம், சுயநிர்ணயம் என்ற அரசியலற்ற பொதுக் கோசம், அரசுக்கு எதிராக முன்னிறுத்திய அடையாளங்கள் மூலம், அரசியல் இன்று தொடர்ந்து சாக்கடையாகின்றது. இதற்குள் வேறுபாடியில்லை என்று காட்டுவது தான், குறுந்தேசிய அரசியல் உள்ளடக்கமாகும்;. இங்கு வலது இடது வேறுபாடு இன்றி, அனைத்தும் சூக்குமமாக மக்களுக்கு எதிராகவே பயணிக்கின்றது. இதுதான் வலதுசாரிகளின் மைய அரசியல் அடிப்படையாகும். புலிகள் இருந்தவரை அனைத்தும் இதுவாக இருந்தது. இன்று அனைத்தும் பொது அவலம் மேல் ஏறி, மிக சூக்குமாக பயணிக்கின்றது. மக்களிடையேயான முரண்பாடுகளை இன முரண்பாட்டின் மூலம் பாதுகாத்தபடி, மக்கள் விரோத அரசியலை முன்தள்ளுகின்றனர். கடந்தகாலத்தில் இதைப் பாதுகாக்கவே, புலிகள் மக்கள் மேல் வன்முறையை எவி பாசிசத்தை நிறுவினர்.  

ஆம் வர்க்கம் கடந்தது என்கின்றது வலதுசாரியம். இடதுசாரியமோ இதில் நீந்த முற்படுகின்றது. இது தான் இன்று தமிழ் தேசியம் தொடர்பான பொது அரசியல் உள்ளடக்கமாகும். தமிழ் இனத்தைச் சேர்ந்த பாட்டாளி வர்க்க சக்திகள், இன்று சந்திக்கின்ற இடதுசாரிய அரசியல் திரிபுகள், அழுத்தங்கள் இது சார்ந்து தான் உருவாகின்றது. இன்று இலங்கையில் ஒரு வர்க்கக் கட்சி கிடையாது. கட்சி கருத்தைக் கூட பாதுகாக்கும் போராட்டம் என்பது, கடுமையான அரசியல் அழுத்தத்துக்கு உள்ளாகின்றது. இந்த நிலையில் மக்களின் வாழ்வு சார்ந்த எழுகின்ற அவலம் தொடர்ந்து முன்தள்ளும் கருத்துகள், அரசியலைக் கைவிடக் கோருகின்றது. குறுக்கு அரசியல் வழியை நடக் கோருகின்றது. 

ஆயுதத்தை எடுக்க செல்ல முன், ஒரு சாரத்தை தந்தனர். சிறிது நேரத்தில் எனது கண் கட்டப்பட்டது. கை கட்டப்பட்ட நிலையில் வானில் ஏற்றினர். பின் காலைக் கட்டி, வாயைக் கட்டினர். என்னை வானின் பின்புறத் தரையில் படுக்கவிட்டனர். நான் படுத்த இடத்தில் பொலீத்தின் காணப்பட்டது. எனக்கு புதிய கேள்வியாக, ஏன் இந்த பொலீத்தின் என்ற சந்தேகம் எழுந்தது. நான் காட்டும் பொருளை எடுத்த பின்பு, என்னைச் சுட்டு உடலைக் கொண்டுவந்து புதைக்க இந்த பொலீத்தின் தேவைப்படுகின்றதோ என்று எண்ணினேன். எனது அசைவின் தொடு உணர்ச்சி மூலம், வானில் மண்வெட்டி மற்றும் பிக்கான் கூட இருப்பதை தெரிந்து கொண்டேன்.

தமிழ் மக்களின் பிணம் தான் புலி அரசியலாகியது. தமழ்மக்களின் அவலம் தான் தீபச் செல்வனின் கவிதையாகியது. இது தான் இவர்களின் அரசியல் சமன்பாடு. இதற்கு வெளியில் மக்கள் அரசியல் என எதுவும் கிடையாது. புலிகள் இருந்தவரை தீபச்செல்வன் புலியிசத்தைக் கவிதையாக்கியவர், அந்த  தவறான போராட்டத்தில் ஏற்பட்ட பொது மனித அவலத்தை, மீளவும் தன் கவிதையாக்கினார். இந்த பொது மனித அவலம் எல்லாம் பேரினவாதத்தின் செயலாக காட்டும் அதேநேரம் அதை விதி என்கின்றார். இது தங்களால் ஏற்பட்டதல்ல என்ற, புலியிசத்தை முன்தள்ளுகின்றார். பேரினவாதம் சார்ந்த பொது மனித அவலம் சார்ந்த உண்மையை ஆதாரமாகக் கொண்டு, தங்கள் வலதுசாரிய மனிதவிரோத அரசியல் நடத்தைகளை மூடிமறைக்கின்றார். இதை மிக நுட்பமாக தீபச்செல்வன், தன் கவிதைகள் மூலம் செய்கின்றார். நாம் உட்பட இந்த மூடிமறைத்த அரசியல் பித்தலாட்டத்தை, இனம் காண முடியாது போனது என்னவோ உண்மைதான். புலிகள் பிணத்தை உற்பத்தி செய்து அரசியல் நடத்திய போது, அந்த பிணத்தை வைத்து  நடத்திய அரசியலில் யார் போலிகள் யார் போலியல்ல என்பது தெரியாத ஒரு மயக்கத்தை எங்கும் உருவாக்கியது. இது போல் மனித அவலம் மீது இன்று கேபி, தீபச்செல்வன் முதல் யார் யாரோ எல்லாம் அரசியல் செய்கின்றனர்.

இலங்கையின் இன்றைய பிரச்சனைகள் தான் என்ன? அவை பற்றி நாட்டை ஆளும் கும்பல் அக்கறைப்படுகின்றதா? இல்லை. தேசிய இனப்பிரச்சனைக்கு அற்ப சலுகையைக் கூட அது கொடுக்க மறுக்கின்றது. இப்படி இனப்பிரச்சனையை தீர்க்க மறுக்கின்ற பேரினவாதிகள், தொடர்ந்து இலங்கையில் இன முரண்பாட்டை பிரதான முரண்பாடாக முன்தள்ளிய வண்ணம் உள்ளனர்.  

இது ஒன்றும் கற்பனையல்ல. நிஜம். அண்மையில் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக இந்திய பொலிசார் பிடித்த குகநாதனை விடுவிக்க, சபா நாவலன் அவரிடம் இந்திய ரூபா 30 இலட்சத்தைக் கோரினார். நடந்த சம்பவம் உண்மை. கைது, பேரம், ஊழல், இலஞ்சம் … இதில் சபா நாவலன் சம்மந்தப்பட்டது எல்லாம் உண்மை. இதன் பின்னணியில் உலவும் தகவல்கள் பல. பொய், புரட்டு, உண்மை, மூடிமறைப்பு என்று அனைத்தும் கலந்த தகவல்கள் வெளிவருகின்றது. அதைத்தான் இங்கு நாம் தொகுத்துத் தர முனைகின்றோம்.

என் மீதான தொடர்ச்சியான விசாரணையில், எனது தயக்கமற்ற பதில், முன் கூட்டியே அவர்களுக்கு விடைதெரிந்த கேள்விகள் முடிவுக்கு வந்தது. விடைதெரிய வேண்டிய கேள்விகள் பல. ஆனால் அதை மீள மீளக் கேட்டனர். கேட்கும் போது கண்மூடித்தனமாகத் தாக்கி அடித்தனர். ஏற்பட்டிந்த காயங்களை மீளவும் இரத்தம் வரும் வண்ணம் மீளமீள சிதைத்தனர். 

புலிகள் தாம் தெரிந்து கொண்ட மார்க்சியத்தை, தங்கள் எதிர்ப்புரட்சிக்கு ஏற்ப பயன்படுத்தத் தொடங்கினர். மாத்தையா தொடர்ச்சியான கேள்விகளை, ஜனநாயக மத்தியத்துவத்தை அரசியல் ரீதியாக எடுத்துக்காட்டி தரவுகளைக் கோரினான். நான் அதீத ஜனநாயகத்தை அடிப்படையாக வைத்து, அவர்களின் கேள்விகளை எதிர்கொண்டு வேகமாக சந்தேகப்படாத வகையில் பதிலளித்தேன். கற்பனைப் பெயர்களைக் கொண்டும், அவர்கள் நன்கு அறிந்த அவர்கள் தேடுகின்ற நபர்களைக் கொண்டும் பதிலளித்தேன். இதன் மூலம் எனக்குத் தெரியாது என அனைத்தையும் மறுத்தேன்;. நான் பகிரங்கமாக, மக்கள் மத்தியில் வேலை செய்யும் உறுப்பினர் என்றேன். அப்படித்தான் அன்று மக்கள் மத்தியில் மிகப் பகிரங்கமாக வேலைசெய்தேன். புலிகள் அறிய விரும்பிய, கைப்பற்ற விரும்பிய பணம், இராணுவ உபகரணங்கள் என் பொறுப்பில், என் கண்காணிப்;பில் தான் இருந்தது. நான் இராணுவக் குழு உள்ளிட்ட தளத்தின் நிதி மற்றும் இராணுவ உபகரணங்களுக்கு கூட பொறுப்பாக இருந்தேன். 

தேர்தல் "ஜனநாயகம்" எவ்வளவு கேலிக்குரியது என்பதை, இலங்கை சர்வாதிகார ஆட்சியாளர்கள் நிறுவி வருகின்றனர். மக்கள் வாக்களிப்பது என்பது, எவ்வளவு முட்டாள் தனம் என்பதையும், அரசியல்வாதிகளின் நடத்தைகள் எடுத்துக் காட்டுகின்றது. மகிந்த தொடர்ந்து தான்தான் அடுத்த ஆட்சியாளன் என்பதை முன்கூட்டியே முடிவெடுத்துக் கொண்டு, அரசியல் அமைப்புச் சட்டத்தையே மாற்றுகின்றான். இங்கு மக்கள், மக்களின் வாக்கு என்பதெல்லாம் வெறும் தூசு. பாராளுமன்ற ஜனநாயகத்தில், இது விபச்சாரம் செய்யத்தான் லாயக்கு.

மிருகபலி "மூடநம்பிக்கை" என்று சொன்னது ஆறுமுகநாவலர் வழிவந்த, யாழ் பார்ப்பனிய வெள்ளாள இந்துக்கள். மாட்டு இறைச்சியை தின்னாத, மூடநம்பிக்கையை கொண்ட இந்துக் கூட்டம். இன்று யாழ் மக்களில் பெரும்பான்மையானவர்கள், மாட்டு இறைச்சியை உண்ணுகின்றனர். இதற்கு வெளியில் சாதியம் பேசி, மத கலாச்சாரம் பேசிய ஆறுமுகநாவலரின் வாரிசுகள் தான், மிருக வழிபாட்டு உரிமையை தடுக்க முனைகின்றது. சிலாபம் முன்னேஸ்வர கோயியில் நடந்த மிருக பலியிலான வழிபாட்டு உரிமையை தடுக்க முனைந்த கூட்டம், இதை மூட நம்பிக்கை என்றனர். மிருக வதை சட்டத்தையும் கையில் எடுக்க முனைந்தனர்.

மாத்தையா உறுமியபடி தொடர்ந்து தாக்கினான். புலிகள் விடை தேடிய பல தொடர் கேள்விகள் கேட்டனர். கற்றன் நாசனல் வங்கி நடவடிக்கையில் நீ பங்கு பற்றினாயா? யார் இதைச் செய்தனர்? பணம் எங்கே? என்றான். நானோ இதுபற்றிய விபரங்கள் எனக்கு எதுவும் தெரியாது என்றேன்.

புலித் தலைவர்கள் எப்படி, எந்த நிலையில் வைத்து கொல்லப்படுகின்றனர்!?

அனைத்தும், சர்வதேச சதியுடன் கூடிய ஒரு மோசடியின் பின்னணியில் அரங்கேறுகின்றது. துரோகம் மூலம் இவை மூடிமறைக்கப்படுகின்றது. பலருக்கு பல கேள்விகள், பல சந்தேகங்கள். இதை சுயவிசாரணை செய்ய யாரும் தயாராகவில்லை. என்னசெய்வது, ஏது செய்வது என்று தெரியாத, திரிசங்கு நிலை.என்று ஆயுதத்தை கீழே வைத்து, புலிகள் சரணடைந்ததை இது தெளிவாக்குகின்றது. அவரின் மற்றைய பேட்டிகள் இதை உறுதி செய்கின்றது.

7ம் திகதி முதல் 10 திகதி வரை பல்வேறு தளத்தில் பல விடையங்களை பொதுவாக கேட்டார்கள். இடையில் விஐpதரன் தொடர்பாகவும், அப் போராட்டம் தொடர்பாகவும் கேட்டனர். அப்போது பல்கலைக்கழகம் எடுத்த படங்களை கொண்டு வந்து, அதை வைத்து விசாரித்தார்கள். இதை அவர்கள் பல்கலைகழக மாணவர் அமைப்புத் தலைவர் சோதிலிங்கத்தின் வீட்டில் இருந்து கைப்பற்றி இருந்தனர்.

யுத்தத்தின் பின்னான பேரினவாதம், மக்களை பிளக்கும் இனவரசியலை தொடர்ந்து முன்தள்ளுகின்றது. தமிழ்  குறுந்தேசியமோ, தொடர்ந்து தங்கள் இனவாதம் மூலம் இந்த இனப்பிளவை மேலும் ஆழமாக்குகின்றது. இதற்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்களின் ஐக்கியத்தை முன்வைத்து, இடதுசாரியம் செயற்படவில்லை. மாறாக சந்தர்ப்பவாதமாகவே வலதுசாரியத்துடன் கூட்டமைத்து, தானும் இனவாதத்தை முன்தள்ளுகின்றது.

மக்கள் குரல், தீக்கதிர், S.M.G வாங்கியது, 80000 ரூபா இரண்டு ஏகே-47 (AK-47) வாங்கக் கொடுத்தது. ஆயுதப் புத்தகங்கள் சில, றோனியோ 2, மாணவர் அமைப்பு நோட்டிஸ், பயணம், இவைகள் ஏதோ ஒரு விதத்தில் என்னுடன் சம்பந்தப்பட்டதாக இருந்தது. இதை விட 1970 முதல் வெளி வந்த பல தேசிய இயக்கங்களின் துண்டுப்பிரசுரமும் அது சார்ந்த ஆவணங்கள், நூல்கள், யாழ் குடாவில் நடந்த பல்வேறு சம்பவங்கள் சார்ந்த போட்டோக்கள் என்று ஒரு ஆவணத் தொகுப்பையும் கொடுத்த இருந்தேன். இதுவே நான் வசந்தனுடன் பொருட்கள் தொடர்புடைய விடையமாக இருந்தது.

புலிகளின் வதைமுகாமில் 80 நாட்கள் நான் இருக்க நேர்ந்தது. ஒருபுறம் அவர்களின் வதை, மறுபுறம் அவர்களுடன் போராட்டமும் தொடங்கியது. அவை எனது அடிப்படைத் தேவைகள் சார்ந்த போராட்டமாக தொடங்கியது. இவை விவாதம், கருத்துப் பரிமாற்றம் … என்று பல வடிவத்தில் தொடர்ந்தது. 

இரண்டாவது வதைமுகாமுக்கு, வைகாசி மாதம் இரண்டாம் திகதி மதியமளவில் கொண்டு செல்லப்பட்டேன். மதிய உணவு தரப்படவில்லை. அநேகமாக அவர்களைப் பொறுத்தவரையில் நான் புதிய கைதி என்பதால், எனக்கு பார்சல் உணவு அங்கு இருந்திருக்காது. அன்றைய மாலை, மிகமிக மெதுவாக நகர்கின்றது. தண்ணீர் விடாய் மண்டையை வெடிக்க வைக்குமாற் போல் இருந்தது. முதல்நாள் இரவு ஒரு குவளை தண்ணீர் கிடைத்தது. எழு மணியளவில் மூன்று குழல் பிட்டு ஒரு பார்சலில் தரப்பட்டது. அத்துடன் ஒரு குவளை தண்ணீர் தரப்பட்டது. அன்று மலசலகூடம் செல்ல அனுமதிக்கவில்லை. உணவு உண்ட பின், வெறும் நிலத்தில் நிர்வாணமாக அயர்ந்து உறங்கினேன்.

வலதுசாரியம் மக்களைச் சுரண்டவும், மக்கள் மேலான சமூக ஒடுக்குமுறைகளை  பாதுகாக்கவும், இனங்களை ஒடுக்கி அவர்களுக்கு இடையில் முரண்பாட்டை முன்தள்ளுகின்றது. எழும் போராட்டத்தை திசைதிருப்ப, சுயநிர்ணயத்தை தமக்கு ஏற்ப திரித்துப் பயன்படுத்துகின்றனர். இது

கடுமையாக யுத்தம் நடந்த சூனியப் பிரதேசத்தில் தான், எனது முதலாவது சித்திரவதை முகாம் இருந்தது. இதன் மூலம் தங்கள் அநியாயங்களை, வெளி உலகின் கண்ணுக்கு இலகுவாக மறைக்க முடிந்தது. இரண்டாவது வதைமுகாமோ, வெட்ட வெளியை ஒட்டிய ஒரு பிரதேசத்தில் இருந்தது.

இந்த வதைமுகாம் யாழ் கோட்டைக்கு மிக அருகில் இருந்தது. முஸ்லிம் மக்கள் செறிந்து வாழ்ந்த பிரதேசத்துக்கும் அருகில் இருந்தது. 1990 இல் புலிகள் வெளியேற்றியது இந்த மக்களைத்தான். இது என் அனுமானம். கடந்த நான்கு நாட்களாக பிரித்தோதும் சத்தம் அடிக்கடி ஒலித்துக் கொண்டிருப்பதை கேட்க முடிந்தது. அத்துடன் இது கோட்டை முகாமுக்கு மிக நெருக்கமாக இருந்த, ஒரு மாடிக் கட்டிடமாகும். செல் வெளிக்கிடும் சத்தம் முதல் அது விழுந்து வெடிக்கும் சத்தமும், அருகில் துப்பாக்கி சன்னங்கள் வெடிப்பது போன்ற ஒலிகள் எனது வதைமுகாமை அடிக்கடி உலுப்பியது.

அறிவுசார் "மார்க்சிய" விமர்சனங்கள் சமூகத்தை மாற்றுவது கிடையாது. அது மாற்றத்தைக் தன்னளவில் கூட கோருவதில்லை. சமூகமாற்றத்தை முன்வைத்து முன்னெடுக்கும் மார்க்சிய விமர்சனங்கள்; தான், நடைமுறையில் வர்க்கப் போராட்டமாக மாறி கம்யூனிஸமாக மாறுகின்றது. இந்த இடைவெளியை புரிந்து கொள்ளாத நிலையில், புரிந்துகொள்ள முடியாத வண்ணம், அதை அறிவுசார் புலமை மூலம் இலங்கையிலும் புலத்திலும் புரட்டுகின்றனர். இந்த புரட்டுக்கு எதிராக நாங்கள் பாரிய தடையாக இருக்கின்றோம் என்பதை, அவர்களின் எதிர்வினை காட்டுகின்றது.

என்னைக் கடத்திய புலிக்கு, என்.எல்.எப்.ரி. பற்றிய தகவல்கள் எதுவும் தெரிந்திருக்கவில்;லை. அதேநேரம் என்.எல்.எப்.ரி. தலைமையே என்னை விசாரிக்கக் கோரியது என்ற தகவல், அவர்களின் முட்டாள்தனத்தையும் பலவீனத்தையும் நிர்வாணப்படுத்தியது.

என் மீதான சித்திரவதை தொடர்ச்சியாக புலிகளால் நிகழ்ந்தபோது, வெளியில் இரண்டு வெவ்வேறு சம்பவங்கள் நிகழ்ந்தன.

1.என்.எல்.எப்.ரி.யில் இருந்து பிரிந்து சென்ற பில்.எல்.எப்.ரி. அமைப்பில் இருந்த ஒருவர் புலிகளிடம் தானாகவே சென்று, அமைப்பினை முழுமையும் தெரியப்படுத்திய சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.

2. இரண்டாவது சம்பவம் என்.எல்.எப்.ரியில் இருந்து பிரிந்த பில்.எல்.எப்.ரி.யின் வடமராச்சி பகுதியை புலிகள் கைது செய்து, வதைமுகாமில் வைத்து சித்திரவதை செய்துவந்தனர்.

என்னை தமது வதை முகாமுக்குள் இட்டுச் சென்றவர்கள், நிர்வாணமாக்கினர். எனது கண் கட்டப்பட்ட நிலை என்பது, தொடர்ந்து அடுத்து நான்கு நாட்களாக நீடித்தது. எந்த உடுப்புகளுமற்ற நிர்வாணமான நிலை என்பது பல நாட்களாக நீடித்த நிலையில், இறுதிக் காலத்தில் ஒரு கிழிந்து போன ரன்னிங் சோட்சைப் போராடிப் பெற்றேன். நான் அவர்களின் வதைமுகாமில் இருந்து தப்பிச் சென்றபோது, அரை நிர்வாணமாகவே பல மைல் தூரம் கடந்து சென்றேன்.   

நான் இனம்தெரியாத நபர்களால் கடத்தப்பட்ட நிலையில், என்னை ஏற்றிய வாகனமோ ஒரு மணி நேரமாக ஒடியது. இறுதியில் வாகனம் நிறுத்தப்பட்டதும், என்னை இறக்கியவர்கள் நாயைப் போல் இழுத்துச் சென்றனர். எனது கண் கட்டப்பட்ட நிலையில், கை இரண்டும் பின்புறமாக கட்டப்பட்ட நிலையில், எனது வாயில் இருந்த கட்டு அவிழ்க்கப்பட்டது. அதேநேரம் நான் கட்டியிருந்த சாறத்தைக் (லுங்கி) கழற்றி, என்னை முற்றாக நிர்வாணப்படுத்தினர்.

28.04.1987 என் சுதந்திரத்தை இழந்த, மறக்கமுடியாத ஒரு மாலைப் பொழுதாகிவிட்டது. அன்று கொலைகார புலிக் கும்பலின் கண்காணிப்பில் நான் இருந்ததை அறிந்திருக்கவில்லை. அன்று மாலை  எனது ஊரான வறுத்தலைவிளானில் இருந்து தெல்லிப்பழையை நோக்கி இராணுவம் முன்னேற முயன்றதால், புதிய மோதல் புலியுடன் தொடங்கியிருந்தது. துப்பாக்கி வேட்டுகளும், இடை இடையேயான செல்லுமாக சத்தம் இரைந்து கொண்டிருந்தது. நான் நிலைகொண்டிருந்த இடத்துக்கும் (மகாஜனாக் கல்லூரிக்கு அருகில்)  மோதல் நடைபெற்ற இடத்துக்கும் இடையில் ஒரு மைல் தூரமே இருந்தது.

என் மீது மிகத் தீவிரமான கண்காணிப்பு உடைய நாளாக 28.4.1987 அன்று இருந்தது. அன்று அமைப்பு சார்ந்த பல வேலைகளை செய்யவேண்டியிருந்தது. அமைப்பைச் சேர்ந்த பெண் தோழர் ஒருவரின் சில தன்னிச்சையான முடிவு ஒன்றைப் பற்றி அவருடன் கதைக்க வேண்டியிருந்தது. அதனால் காலை ஆறு மணிக்கே, நான் பாதுகாப்புக்காக இரவு தங்கியிருந்த ஒரு ஆதரவாளர் வீட்டில் இருந்து வெளியேறினேன். சைக்கிளில் ஏழு மைல்கள் கடந்து சென்று இருந்தேன். அதிஸ்டவசமாக அது கண்காணிக்கப்பட்டு இருக்கவில்லை. அதிகாலையாக இருந்தமையால், அவர்கள் கண்காணிப்பில் இருந்து தப்பி இருந்தேன். இதை நான் பின்பு அவர்களின் வதைமுகாமில் வைத்து உணரமுடிந்தது. ஏனெனில் என்னை பின் தொடர்ந்து இருந்தால், அந்த சம்பவம் பற்றி எனது விசாரணையில் வந்திருக்கும். அவரும் கைது செய்யப்பட்டு இருப்பார். இந்த தன்னிச்சையான அப் பெண்ணின் முடிவு பற்றியும் சற்று பார்ப்பது நல்லது.

புலி அல்லாத அனைவரும் துரோகிகள், சமூக விரோதிகள். இதைத் தான் மாத்தையா சொன்னான் என்றால், புலிகள் தங்கள் பாசிச வரலாற்றை இப்படித்தான் தேசியமாக்கினர். தாம் அல்லாத மற்றவர்கள் மாற்றுக் கருத்தை வைத்திருப்பது முதல் ஆயுதம் வைத்திருக்கும் உரிமை அனைத்தையும், சமூக விரோத செயலாகவும், சட்டவிரோத செயலாகவும் கூறிய புலிகள், சில ஆயிரம் பேரைக் கொன்று ஒழித்தனர். இப்படி மக்கள் விரோத அரசியலை பாதுகாக்கவும், இதற்கு தலைமை தாங்கிய "மேதகு"வின் சர்வாதிகாரத்தை பாதுகாக்கும் அடிப்படையில், ஆயிரம் ஆயிரம் படுகொலைகளை புலிகள் செய்தனர்.

கொலைகார புலிப் பாசிசம் நிலவிய அன்று, எனது உரையை பத்திரிகைகள் இருட்டடிப்பு செய்து இருந்தன. இந்திய ஆக்கிரமிப்பு நிலவிய அன்று, எந்த மாற்றமும் நிகழவில்லை. மற்றொரு பாசிசம் வந்து குடியேறிய ஆரம்ப காலம். மிக விரைவிலேயே இந்த பத்திரிகைகளை தனக்கு சார்பாக இயங்கக் கோரி,  அச்சிடும் இயந்திரங்களையே இந்திய ஆக்கிரமிப்பாளன் குண்டு வைத்து தகர்த்தான். இப்படி பத்திரிகைகள் உண்மைகளை வெளியிடும் "சுதந்திர" அமைப்பாக இருக்கவில்லை.

எனது மறுப்பு உரையை, புலிப் பாசிசம் விதைத்த அச்சத்தின் கெடுபிடியால் பத்திரிகைகள் வெளியிடவில்லை. ஆனால் அன்று மாத்தையா மற்றும் எனது உரை ஒலிநாடாவில் (கசெட்டில்) பதிவாகியது. அந்த ஒலிநாடா (கசெட்) தற்போது என்னிடம் உள்ளது. இந்த ஒலிநாடாவில் (கசெட்டில்) இருந்து....

பேராசிரியர் வாரார் புரட்சி செய்ய,
வரிசையில் நில்லுங்கள் புரட்சி செய்ய
மார்க்சிய பிரமுகர் வாரார் புரட்சி செய்ய
இனியொருவிலும் வாரார் புரட்சி செய்ய

என்னைக் கடத்துவதற்கு முன், வேறு சில விடையங்கள் நடந்தன. ஐவரைக் கைது செய்திருந்தனர். அவர்கள் மீதான சித்திரவதையின் தொடர்ச்சியாகவே, ஆறாவது நபராக நான் கடத்தப்பட்டேன். மற்றவர்களைக் கைது செய்தவர்கள், என்னை உரிமை கோராது கடத்திச் சென்றனர். இந்த ஐவரும் என்னுடைய இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. அவர்கள் வெவ்வேறு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். நான் அவர்களின் ஐந்தாவது நபருடன் மட்டுமே நேரடியாக தொடர்பு கொண்டிருந்தவன். அவர் வேறு யாருமல்ல, சரிநிகர் பத்திரிகை மூலம் அனைவருக்கும் தெரிந்த சிவகுமார் தான். இதற்கு முதல் நபரோ (நாலாவது நபர்) இன்று "உலக தமிழ் நியூஸ்" இணையம் நடாத்தும் குருபரன் தான். புலிகள் இது போன்ற கைது, கடத்தல் படுகொலைகளை, தமிழ் மக்களுக்கு எதிராக தொடர்ச்சியாக செய்தனர். இதன் மூலம் தான், தமிழ் மக்களின் சரியான போராட்டத்தை ஒடுக்கி அதை நசுக்கினர். அதுதான் என் கதையும்.

வழமையான நாட்கள் போன்றே 28.4.1987 அன்றும். மக்கள் தத்தம் வாழ்வு சார்ந்த இயற்கையான கடமை உணர்வுடன் விரைவாக நகர்கின்றனர். இப்படி அவர் அவர் தேவைக்கு அமைய விரைவாக நகருவோரும், மெதுவாக நகருவோரும் என்று, தெல்லிப்பளை வீதி எங்கும் துவிச்சக்கர வண்டிகள் நிறைந்து காணப்பட்டது. இடைக்கிடையே மோட்டார் வாகனங்கள் செல்லுகின்றன. பாதசாரிகள் அவரவர் இயக்கத்துக்கும், தேவைக்கும் ஏற்ப விரைகின்றனர். இயக்கங்களின் மோட்டார் சைக்கிள்கள் பெரும் சத்தத்துடன், வீதியையே அலற வைத்தபடி சீறிச் செல்லுகின்றன. பெரிய நீளமான சேட்டு அணிந்தவர்கள் தமது துப்பாக்கி சகிதம் புது ஏசியா சைக்கிளில், கோயில் தேர் போல் வீதியில் போகும் பெண்களை நோட்டமிட்டபடி, தமது துப்பாக்கி மூலம் பாசிச அதிகாரத்தை தொடர்ந்தும் பாதுகாக்கும் வேட்டையை நோட்டமிட்டபடி, வீதிகளில் பவனி வருகின்றனர்.

போராட்டம் என்பது தங்கள் நலன் சார்ந்த ஒன்றாக குறுகிப் போன காலகட்டம். இந்த மக்கள் விரோத ஜனநாயக படுகொலை வரலாற்றுப் போக்கில் இவற்றை எதிர்த்தே, நான் என் சொந்த மண்ணில் மக்களின் நலன் சார்ந்து போராடினேன். இந்த போராட்டம் என்பது பல தளத்தில், பல மட்டத்தில் நடத்த வேண்டியிருந்தது. ஆரம்பத்தில் 1980 இல் தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணியில் சாதாரண உறுப்பினராக இணைந்த நான், மிக தீவிரமாக மக்கள் மத்தியில் செயற்பட்டேன். 1983 இல் நான் வாழ்ந்த சுற்று வட்டாரம் மற்றும் மன்னார், வவுனியா, கிளிநொச்சி போன்ற பிரதேசங்களில் ஐம்பதுக்கு மேற்பட்ட அமைப்பு செயல் வீரர்களை அணிதிரட்டியிருந்தேன். மக்கள் மத்தியில் வேலை செய்வது முதல், வீடு வீடாக விருப்பார்ந்த சிறு தொகை நிதி சேகரிப்பு என்று பல்வேறு துறை சார்ந்து, அரசியல் பணியில் ஈடுபடத் தொடங்கினேன்.

தன்னுடன் இல்லாத எவருக்கும் ஜனநாயகம் கிடையாது. இதுதான் இலங்கையின் சட்ட ஆட்சி சொல்லும் மிகத் தெளிவான செய்தி. யார் மகிந்தவை தொழ மறுக்கின்றனரோ, அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்;. இதுதான் மகிந்தவின் சிந்தனை. இப்படித்தான் புத்தனின் சிந்தனைக்கு, மகிந்த சிந்தனை இன்று புது விளக்கம் கொடுக்கின்றது.

தமிழர் பிரச்சனை முதல் ஊடகவியல் சுதந்திரம் வரை, கொடுமையும் கொடூரமும் நிறைந்த தங்கள் சிந்தனைகள் மூலம் தொடர்ந்து ஒடுக்கப்படுகின்றனர்.     

புலிகளின் தேசியத்தின் முன், நான் செய்த குற்றம் என்ன? தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளைக் கோரி போராடியது தான். இதனால் இந்த மக்களைக் கண்டு அஞ்சிய புலிக் கோழைகள், இனம் தெரியாத நபர்களாக மாறினர். இந்த கோழைகள் வேஷத்தில் தான், புலிகள் என்னைக் கடத்தினர். இரகசியமாக செய்த இந்த கடத்தலை உரிமை கோரததுடன், தாம் அதைச் செய்யவில்லை என்று உலகின் முன் சத்தியம் செய்தனர். தமக்கு இது பற்றி எதுவும் தெரியாது என்றனர். தாம் இது போன்ற நடவடிக்கைகளில், ஒரு நாளும் ஈடுபடுவதில்லை என்றனர்.

இயற்கையில் இருந்து நாம் நுகரும் பொருட்களை, மனிதனின் உழைப்பே உருவாக்கின்றது. உழைப்பு இயற்கை மீது நிகழ்கின்றது. இப்படி உழைத்து உருவாக்கிய பொருட்கள் மீது, மனிதன் ஆளுமை செலுத்த தவறிய ஒரு உலகில் நாம் வாழ்கின்றோம்;. மாறாக பொருட்கள் மனிதன் மேல் ஆளுமை செலுத்துகின்றது. தன் கையால் உருவாக்கிய பொருட்களின் அடிமையாகிய பரிதாபம், மனித சமுதாயத்தை மீள முடியாத அடிமைத்தனத்தில் தள்ளியுள்ளது.

அரசியல் ரீதியாக மக்களுக்கு எதிரான அரசியல் நிலையை இயக்கங்கள் உருவாக்கியதற்கு, இலங்கை இனவாத பாசிச அரசை நாம் நேரடியாக குற்றம் சாட்டமுடியாது. மாறாக போராடும் அமைப்புகளின் வர்க்கம் சார்ந்த, மக்கள் விரோதத் தன்மையே இதன் பிரதான அடிப்படையாகவும், மூல வேராகவும் இருந்துள்ளது. இன ஒடுக்குமுறையை பேரினவாத பாசிச அரசு தமிழ் மக்கள் மீது திணித்து அவர்களை அடக்கிய போது, அதற்கு எதிரான போராட்டம் இயல்பாகவும் இயற்கையாகவும் மனித உரிமைக்கானதாக எழுந்தது.

புலி ஒரு பாசிச இயக்கமாக, அதுவே ஒரு அரசியல் சக்தியாக இருந்ததை பலர் புரிந்து கொள்ள மறுக்கும் போதே, தொடர்ச்சியான தவறுகள் இழைக்கப்பட்டது. புலிகளை வெறும் குட்டிப+ர்சுவா வர்க்க இயக்கமாகவும், தேசிய பூர்சுவா வர்க்க நலனை பிரதிநிதித்துவப் படுத்துவதாகவும் கருதினர். புலிப் பாசிசத்தின் அடிப்படையை காணத் தவறியதன் மூலம், சரியான அரசியல் வழி தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டது. இதன் மூலம் சித்தாந்த ரீதியாகவும், நடைமுறை ரீதியாகவும் பாசிசத்துக்கு துணைபோனார்கள். உண்மையில் புலிகளின் பாசிசத்துக்கு எதிரான அணியை துல்லியமாக தனித் தனியாக ஆராய்ந்தால், பாசிசத்தை நிலை நாட்டுவதில் தோல்வி பெற்ற மற்றொரு பாசிச பண்பியலை அடிப்படையைக் கொண்ட உதிரி நபர்களும், குழுக்களும் காணப்படுகின்றனர். புலிப் பாசிசத்தை சரியாக அரசியல் ரீதியாக புரிந்து கொள்ள தவறியதன் விளைவு, எதிர் தரப்பையும் புரிந்து கொள்வதை நிராகரிப்பதன் மூலம் போராட்டமே அழிந்தது. அரசியல் ரீதியான தவறான மதிப்பீடு, அரசியல் ரீதியான பாசிச கண்ணோட்டத்தையே நட்பு சக்தியாக அனுசரிக்க கோரியது.

புலிகள் எப்படி ஒரு பாசிச இயக்கமாக உருவனார்கள் எனப் பார்ப்போம். முதலில் இதை நாம் வரலாற்று கூறில் இருந்து குறிப்பாக பார்ப்போம்;. சண் தலைமையிலான இடதுசாரி இயக்கம் முன்னிறுத்திய வர்க்கப் போராட்டமும், வடக்கில் நடத்திய சாதிப் போராட்டங்களும், தமிழ் வலது பிரிவின் பொது அரசியலை நெருக்கடியாகியது. தமிழ் தேசியத்தை முன்வைத்து வந்த வலது பிரிவுகளான நிலப்பிரபுத்துவ மற்றும் தரகு வர்க்க நலன்களுக்கு, இது பலத்த அரசியல் நெருக்கடியைத் தோற்றுவித்தது. இதே போன்று இலங்கை அளவில் தொடர்ச்சியாக பல குழுக்கள் சார்ந்த இடதுசாரி போராட்டங்கள், சுரண்டும் வர்க்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கியது. இதை முறியடிக்கவே வலது பிரிவுகள் இனம் கடந்து, இன மோதலை உருவாக்கினர். இலங்கையில் 1960க்கு பிந்திய பத்தாண்டின் இறுதியில் நடந்த வர்க்கப் போராட்டங்கள், வலது பிரிவை ஒற்றுமைப்படுத்தியது. அமைதியான வழியில் இனப்பிரச்சனையை தீர்க்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டன.

புலிகள் தமது தேசியமாக, பாசிசத்தையே ஆணையில் வைத்தனர். பேரினவாதத்துடன் சண்டை செய்வதாக கூறிக்கொண்டு, மக்களை ஓடுக்கினர். மக்களையும், உலகத்தையும் எமாற்ற பொய்யும் புரட்டும் மூலதனமாகியது. எதிரியைப் பற்றி வாய் கிழிய கூறிக் கொள்வதன் மூலம், ஜனநாயகத்தை பறித்தெடுத்தனர். மாற்றுச் சிந்தனையை முன் வைத்து, தேசத்தின் அடிப்படையான தேசிய பொருளாதார நலன்களைப் பற்றி பேசும் போது, அவர்களை நாட்டுபற்றயற்ற துரோகி என முத்திரை குத்தினர். ஜெர்மனிய நாசிகளைப் போல், தாம் அல்லாத அனைவரையும் கொன்று அழித்தனர். புலித் தலைவர்கள் தாம் விரும்பியதை எல்லாம் செய்தார்கள் என்றால், கிட்டலர் போல் பாசிச கட்டமைப்பை தமிழ் மக்கள் மேல் நிறுவிய ஒரு சர்வாதிகார நிலையில் தான் அது சாத்தியமானது.

எனது மரணத்தை முத்தமிட்ட என் நினைவுகள் அழிவதில்லை என்ற இந்தக் குறிப்பை 2001 இல் எழுதிய போது பின்வரும் குறிப்பை நான் எழுதியிருந்தேன். புலிகளின் பாசிசம் பற்றி எழுதியுள்ளது தொடர்பாக பலர் ஆச்சரியமடையாலாம். ஆரம்ப சமர் இதழ்களை படிக்காதவர்கள், மற்றும் என்னை மண்ணில் தெரியாதவர்களுக்கு இது புதிய விடையமாக இருப்பது தவிர்க்க முடியாது என்று குறிபிட்டு எழுதியிருந்தேன். ஆனால் பின்னால் மாறிய சூழலை கையில் எடுத்து, புலிப் பாசித்தை பற்றி விரிவாக எழுதினோம். இந்த நினைவுகள் எழுதிய காலத்தில், பாசிசம் பற்றி பெரிதாக எழுதுவது தவிர்க்கப்பட்டது. இந்த குறிப்பு, அன்றைய சூழலை எடுத்துக் காட்ட இன்று உதவுகின்றது.

1983 இனக்கலவரம் தான், இந்தியாவின் திட்டமிட்ட இனவழிப்பாக மாறியது. உடனடியாக பேரினவாதத்தால் இனம் சூறையாடப்பட்டது ஒருபுறம், நீண்டகால அடிப்படையில் இந்தியாவால் திட்டமிட்டு சூறையாடப்பட்டது மற்றது.

1983 யூலை இனப்படுகொலை என்பது, 1983ம் ஆண்டு மீண்டும் நடந்த ஒரு இனக்கலவரம். 1977, 1981 க்கு பின், பேரினவாதம் அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவிக்கும் இனக்கலவரத்தை, மீண்டும் தமிழ் மக்கள் மேல் அரசு ஏவியது. சிறைக்கைதிகள் முதல் சிங்கள மக்களுடன் இணைந்து வாழ்ந்த தமிழ் மக்களை, தமிழன் என்ற ஓரே காரணத்தினால் பல தளத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டனர். ஆம் ஒரு படுகொலை. எந்த நீதி விசாரணைக்கும் உள்ளாகாத படுகொலை.

புலிகளின் பாசிசமோ ஜனநாயக விரோதமான சமூகத்தை நிலைநாட்டியதால், துரோகம் சார்ந்த ஒரு சமூகப் பிரிவை அது இடைவிடாது உற்பத்தி செய்தது. ஒப்பிட்டு அளவில் அரசுக்கும் புலிக்கும் இடையில், பாசிசத்தை கையாளும் அளவிலும், பண்பிலும், புலிகள் மிகவும் வக்கிரமாக இருந்தனர். இறுதி யுத்தத்தின் போதும், அதன் பின்னும் அரசு புலியை மிஞ்சியது.  புலிபாசிசம் ஆட்டம் போட்ட காலத்தில், மக்களிள் பிரதான எதிரி அரசாக தொடர்ந்து நீடித்தது, இங்கு உள்ள ஒரு முரண்நிலையாக இருந்தது. புலிகளின் மேலான அழித்தொழிப்பு அரசியலுக்கு எற்ப, அரசுக்கு பின்னால் ஒரு பெரும் பிரிவு மக்களை புலிப்பாசிசம் அணிதிரட்டி கொடுத்தது. குறிப்பாக புலிப் பாசிசத்தின் நிலையால் ஆயுதம் எந்திய மற்றும் எந்தாத நிறுவனமயப்படுத்தப்பட்ட துரோகக் குழுக்கள் கூட, ஒரு சமூகப் பிரிவாக வளர்ச்சியுற்றது.

07.08.1986ம் ஆண்டு புலிகள் ராக்கிங் செய்ததாக கூறி, மூன்று மாணவர்கள் மேல் தாக்குதலை நடத்தினர். இதையடுத்து விடுதலைப் புலிகளுக்கு எதிரான ஒரு தன்னெழுச்சியான போராட்டம் தொடங்கியது. இது முன் வைத்த கோரிக்கை சமூகம் சார்ந்து நின்று போராடுவதற்கு பதில், உணர்ச்சிவசப்பட்டதாக எழுந்தது.

பேரினவாத பாசிச அரசும், மறுபுறம் எஞ்சிய புலிப் பாசிசத்தின் எச்சங்களும் ஆதிக்கம் பெற்ற அரசியல் கூறாக இன்னமும் உள்ளது. ஒரு பகுதி மக்கள் தாம் உருவாக்கி வைத்திருந்த அரசியல் மாயையைக் களைந்தாலும், மற்றொரு அரசியல் போக்கை முன்னெடுக்கவில்லை. வீங்கி வெம்பிக் கிடந்த பிரமைகளையே இழந்தனர்.

சென்ற தொடரில் புளட்டில் இருந்து விலகிய மாணவர்கள் தான், போராட்டத்தின் முன்னோடிகள் என்பதை கூறியிருந்தேன். அவர்கள் அரசியல் ரீதியாக முன்னேறிய பிரிவினராக இருந்ததுடன், அரசியல் முன்முயற்சி கொண்டவராக இருந்தனர். விமலேஸ் அதில் குறிப்பிடத்தக்க ஒருவன். போராட்டத்தின் அரசியல் திசை வழியையும், மாணவர்களின் இயல்பான தன்னெழுச்சியான போராட்டத்துக்கு பதில், அதை அரசியல்ரீதியாக முன்னெடுக்கும் வண்ணம் முன்னேறிய பிரிவு பல்கலைக்கழத்தில் தொடர்ச்சியாக 1986 - 1987 இல் தீவிரமாக இயங்கியது. இயக்கங்களின் அராஜகங்களுக்கு எதிரான மக்கள் அரசியல், மிக உச்சக் கட்டத்தை எட்டிய காலம்.

வெளிப்படையற்ற தீர்வைக்காணல் என்பது ஒரு சதி. வடக்கு கிழக்கு இணைப்பாகட்டும் அல்லது எதுவாக இருக்கட்டும், அவை வெளிப்படையாகவே முன்வைக்கப்பட்டு அணுகப்பட வேண்டும். தமிழ் மக்களையும், தமிழ் இனப் பிரிவுகளையும் இணைக்கும் வண்ணம், நேர்மையான வெளிப்படையான அரசில் அணுகுமுறை அவசியமானது. இதை மறுப்பதுதான் கூட்டமைப்பின் இன்றைய அசிங்கமான சதி அரசியல். இதைத் தான் கடந்தகாலத்தில் புலிகள் செய்து, அரசியல் ரீதியாகவே மடிந்து போனார்கள்.

தனிமனிதன் விரும்பியவாறு வழிபடும் உரிமையை மறுத்து, இப்படித்தான் நீ வழிபட வேண்டும் என்பது பாசிசம். அதன் போது இப்படித்தான் உடை அணிய வேண்டும் என்பதும் கூட பாசிசம். இப்படி பாசிசத்துக்கு பல முகமுண்டு. பாசிசம் தன்னை மூடிமறைக்க இந்து தமிழ் கலாச்சாரம், அதன் ஒழுக்கம் என்று வேசம் போட்டுத்தான், தன்னை மக்கள் முன் இட்டுச்செல்லும். மகிந்த பாசிசமோ இன்று தன்னை தமிழ்மக்கள் மத்தியிலும் அரசியல் நிறுவனமாக்க, இந்துப் பாசிட்டுகளுடன் கூட்டுச் சேர்ந்துள்ளது.

மகிந்தவும் – ஈ.பி.டி.பி கும்பலும் தங்கள் அதிகாரம் மூலம் வென்ற யாழ் மாநகர சபையின் துணையுடன், யாழ் இந்து பாசிட்டுகளும் கூட்டாக இணைந்து மக்களுக்கு விதிகள் போடுகின்றனர். இப்படி ஆண்கள் மற்றும் பெண்கள் அணியும் உடை பற்றிய, புதிய நிலப்பிரபுத்துவ கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். புலிகள் முதல் கூட்டமைப்பு வரை உடன்பாடு கொண்ட, இந்து பாசிச தமிழ் ஒழுக்கவாதிகளின் வக்கிரத்தை, மகிந்தா தன் கையில் ஒரு ஆயுதமாக  எடுத்துள்ளார். சமூகத்தை மகிந்த சிந்தனை, இப்படியும் தன் பின்னால் பாசிசமயமாக்குகின்றது.  

மக்களை நேசித்தான் என்ற ஒரு காரணத்துக்காக, 22 ஆண்டுகளுக்கு முன் இதே நாள் புலிகள் மற்றொரு படுகொலையை நடத்தியிருந்தனர். எதற்காக? தங்களை “அரசியல் அனாதையாக்கும்” போராட்டம் என்று எதைப் புலிகள் கூறினரோ, அந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்திய விமலேஸ்வரனை உரிமை கோராது, அரசியல் கோழைகளான புலிகள் படுகொலை செய்தனர்.

வேத-ஆரிய சடங்குகளை பின்பற்றிய ஒரு பிரிவினர், (ஆரிய) பூசாரிகள் வடிவில் தான் சிதைந்த சமூகத்தில் நீடிக்க முடிந்தது. ஆனால் அவர்கள் ஆரியராகவோ, ஆரிய வேத மொழியை பேசுபவராகவோ இருக்கமுடியவில்லை. அதன் பெயரால், அவர்கள் தம்மைத் தாம் அடையாளப்படுத்திக் காட்டவும் கூட முடியவில்லை.

தமிழ் மக்கள் பிச்சை கேட்பதாகவும், பிச்சை போடுவதுதான் தமிழ் மக்களின் அரசியல் என்கின்றனர். மகிந்த குடும்ப சர்வாதிகாரம் உருவாக்கியுள்ள பாசிசம், இன்று இதைத்தான் அரசியலாக வழிகாட்டுகின்றது. இதை உதவி, மனிதாபிமானம், தமிழரின் கடமை என்று எல்லாம் இதற்கு விதவிதமாக பெயர் சூட்டிக் கொள்கின்றனர்.

நீண்ட ஒரு அரசியல் வேலையூடாக தான், யாழ்பல்கலைக்கழக மாணவர் போராட்டம் அரசியல் மயமானது. இதற்கு மாறாக திடீரென்று அரசியல் அற்புதங்கள் நடப்பதில்லை. அன்று போராட்டத்தை முன்னெடுத்த அமைப்புக் குழுவின் பெரும்பான்மை, அரசியலற்ற சாதாரண மாணவர்களைக் கொண்டதாகவே இருந்தது. இதைச் சுற்றி இயங்கியவர்கள், அரசியலில் முன்னேறிய பிரிவாகும். இவர்களின்றி, இந்த அரசியல் போராட்டத்தை முன்னெடுத்து இருக்க முடியாது. 

1930 களில் கிட்லரின் தலைமையிலான நாசிய ஜெர்மனி, யூதர்களுக்கு எதிரான பல இன, நிறத் தடைகளைக் கொண்டு வந்தது. அதுபோல்தான் இந்தத் தடையும். அன்று போல் இன்றும், சொந்த மக்களை ஏமாற்றும் தடைச் சட்டங்கள்.

சர்வதேச ஒழுங்கை உலகில் பேணிக் கொள்ளும் மேற்குநாடுகளோ, இஸ்லாமிய மத வன்முறையைக் காட்டித்தான் தன்னை நிலைநிறுத்துகின்றது. இதன் மூலம் ஈராக்கிய எண்ணை வயல், ஆப்கானிஸ்தானில் எரிவாயு முதல் கனிம வளங்கள் அனைத்தையும் மேற்கு கொள்ளையிடுகின்றது. தங்கள் ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டத்தை, வெறும் மத வன்முறையாக மட்டும் காட்டுகின்றது. தங்கள் ஆக்கிரமிப்புக்கு எதிரானதாக, அது காட்டுவது கிடையாது.

வர்க்க அரசியலை மூடிமறைக்க கடந்தகால போராட்டத்தினை "தன்னியல்பானது" என்று திரித்து காட்டுகின்ற "மே18" அரசியல். கடந்தகால போராட்டங்களை மறுப்பதுடன், நடந்தவைகளை தன்னியல்பானதாகவும் காட்ட முனைகின்றது. இந்த அரசியலின் எடுபிடியாக தன்னை மூடிமறைத்து இயங்கும் தேசம்நெற், தன்னை முனைப்பாக்கி காட்ட வரலாற்றை திரிக்கும் நாவலனின் துணையுடன், யாழ் பல்கலைக்கழகப் போராட்டத்தை "யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மாபெரும் தன்னெழுச்சியான போராட்டம் என்பது குறிப்பிடத்தக்கது." என்கின்றது.

சமூக மாற்றத்தை கோராமல், சமூகத்தை திரிப்பது ஏன்? சமூகத்தில் நடந்த மாற்றங்களை, இல்லையென்று மறுப்பது ஏன்? சமூக மாற்றத்துக்கான போராட்டத்தை மறுப்பது ஏன்? இதுவோ இன்று முன்நகர்த்தும் ஒரு மக்கள் விரோத அரசியல். இன்று திடீர் அரசியல், திடீர் மார்க்சியம், திடீர் புரட்சி பேசும் அனைவரும், கடந்த போராட்டத்தை மறுக்கின்றனர். கடந்த கால போராட்டத்தை மறுப்பது, திரிப்பது, அத்தியாகத்தைக் கொச்சைப்படுத்துவது என்பது, இன்றைய எதிர்ப்புரட்சி அரசியலில் மையமான வெளிப்படையான அரசியல் கூறாகும். யாரொல்லாம் கடந்தகால போராட்டத்தை அங்கீகரித்து செல்லவில்லையோ, அவர்கள் தொடர்ந்தும் மக்கள் விரோதிகள்தான்.  

நீதி, சட்டம் முதல் ஜனநாயகம் வரையான அனைத்தும், ஆளும் வர்க்கத்துக்கு விபச்சாரம் செய்வது தான் அதன் தார்மீக ஒழுக்கமாகும். உண்மைக்கும், மக்களின் உரிமைக்கும், மக்களின் வாழ்வுக்கும் இடமில்லை என்பதைத்தான், ஆளும் வர்க்கங்கள் தங்கள் வரலாறாக மனிதகுலத்தின் முன் சொல்லி வந்துள்ளனர். மக்கள் போராடினால் தான் அவர்களுக்கு விடிவும், ஏதாவது கிடைக்கும் என்பதையும் மக்களின் வரலாறு புகட்டி வந்துள்ளது.

புதிய ஜனநாயகக் கட்சி தனது 5 வது மாநாட்டில் தனது கட்சியின் பெயரை "புதிய ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சி" என்று பெயரை மாற்றியுள்ளது. இப்படி தன் பெயரை மாற்றியுள்ள அக்கட்சி, இலங்கையில் வர்க்கப் போராட்டத்தை தன் அரசியல் நிகழ்ச்சி நிரலாக முன்னெடுக்குமா என்பதே எம்முன்னுள்ள அரசியல் கேள்வி. புரட்சிகர அரசியல் வெற்றிடத்தை, அக்கட்சி தன் வர்க்கப்போராட்டத்தின் மூலம் முன்னெடுக்குமா?

பெயர் மாற்றங்கள் மட்டும், புரட்சிகர கட்சியாக்கிவிடாது. மாறாக 70 க்கு பிந்தைய தனது 40 வருட இக்கட்சியின் புரட்சிகரமான நடைமுறையற்ற, பிரமுகர் கட்சி என்ற தனது இருப்பை மாற்றியமைக்க வேண்டும். இதை அரசியல் ரீதியாக, குறைந்தபட்சம் விமர்சனத்துக்குள்ளாக்கி இருக்க வேண்டும். ஆனால் வெளியாகிய அறிக்கையோ, இதை எந்தவகையிலும் பிரதிபலிக்கவில்லை.  

தேசம்நெற் தனது வலதுசாரிய அரசியல் பின்னணியுடன், போராட்டத்தை இழிவாகக் காட்டி அதைக் கொச்சைப்படுத்தியிருக்கின்றது. திரிபுகளையும் புரட்டுகளையும், தமது வலதுசாரிய அரசியல் காழ்ப்புடனும் தனிநபர் வெறுப்புடனும் புனைந்து, இதுதான் பல்கலைக்கழகப் போராட்டம் என்று வரலாற்றை திரித்துக் காட்டியது. இதற்கு நாவலனின் திடீர் அரசியல் வருகைக்கு ஏற்ப, அவர் தன்னை நிலைநிறுத்த முன்வைத்த கூற்றுகளின் துணையுடன், தேசம்நெற் தன் அரசியல் அவியலைச் செய்துள்ளது. இப்படி தேசம்நெற் கொச்சைப்படுத்திய இந்தப் போராட்டத்தில் பங்கு பற்றிய பலர், பின்னால் புலிகளால் உதிரிகளாகவே கொல்லப்பட்டனர். இந்தப் போராட்டம் எந்தக் கட்டத்தில், எந்தச் சூழலில், எப்படி யாரால் முன்னெடுக்கப்பட்டது என்பதைப் பார்ப்போம்.    

எந்தவொரு விடையத்தையும் அறிவியல் பூர்வமான விளங்கி, அதை உணர்வுபூர்வமாக முன்னெடுத்தல் மூலம் தான் மாற்றங்கள் நிகழ்கின்றது. சமூக புரட்சிகள், சமூக மாற்றங்கள் கூட அப்படித்தான் நிகழ்கின்றது. அன்று நான் என்.எல்.எவ்.ரி. அமைப்பின் உறுப்பினராக, அதன் மத்திய குழு உறுப்பினராக இருந்தபடி இப்படித்தான் கருதி செயல்பட்டேன். பிரச்சாரம் கிளர்ச்சி என்று முனைப்பாக முன்னெடுக்கும் எனது தீவிர செயல்பாட்டில், தனிநபர்களின் குறிப்பான பாத்திரம் கூட யாழ்பல்கலைக்கழகப் போராட்டத்தில் வெளிப்பட்டது. அன்று ராக்கிங்கை எதிர்த்து போராடுவது என்ற எனது முடிவு, அமைப்பின் பொது அரசியலுடன் இணைந்ததுதான். அதை முன்னெடுப்பதை, நான் எனது பல்கலைக்கழக படிப்புடன் தேர்ந்தெடுத்தேன்.

என்.எல்.எவ்.ரி.யின் துணையுடன், பல்கலைக்கழக முற்போக்கு மாணவர்களின் பங்களிப்புடன் நான் நடத்திய போராட்டம், ராக்கிங் இன்றிய ஆண்டாக மாறியது. புலிகள் தண்டனை மூலம் ஓழிக்கும் ஆர்ப்பாட்டமான துண்டுப்பிரசுர மிரட்டல் பிசுபிசுத்துப் போனது. இப்படி புலிகளின் அரசியலுக்கு அங்கு இடமிருக்கவில்லை. ராக்கிங்கை புலிகளின் வன்முறை மூலம் ஒழிக்க முடியாது என்பது, மாணவர்களின் பொதுக் கருத்தாகியது.   

இப்படி அன்று அன்ரி ராக்கிங் நிலைப்பாடு, பெரும்பான்மையின் கருத்தாகியது. ராக்கிங் செய்ய விரும்பிய சிறிய அணி, தனிமைப்பட்டு அதைக் கைவிட்டது. புலிகள் அரசியல் ரீதியாக ஓரம் கட்டப்பட்டனர். 1986ம் ஆண்டு பல்கலைக்கழகத்தில் புதிய கல்வி ஆண்டு இப்படித்தான் தொடங்கியது. 

இதை முறியடிக்க புலிகள் குறுக்கு வழியில் இறங்கினர். ராக்கிங் செய்ததாக கூறி, மூவரை யாழ் நகர வீதிகளில் வைத்து தாக்கினர். இப்படித்தான் புலிகள் திட்டமிட்டு, வலிந்து ஒரு தாக்குதலை நடத்தினர். உண்மையில் அவர்கள் ராக்கிங் செய்திருக்கவில்லை. அப்படி செய்தாலும் கூட, தாக்கும் உரிமை அவர்களுக்கு கிடையாது. பல்கலைக்கழகம் உட்பட நிர்வாகம் வரை, அன்று அதை தண்டித்திருக்கும். துப்பாக்கி முனையில் நாலு குண்டர்கள் சேர்ந்து தாக்குவது போல், புலிக் குண்டர்கள் தாக்கினர்.  

அன்று ராக்கிங் ஒரு பண்பாட்டு அம்சமா என்று கேட்டு வெளியிட்ட துண்டுப்பிரசுரத்தை அடுத்து, நடந்த பொதுக் கூட்ட மேடையில் பேச முற்பட்டேன். ஒரு வரி பேசிய போதே கூச்சல்கள் எழுந்தது. என்னைத் தாக்க சிலர் முற்பட்டனர். என்னைப் பாதுகாக்க ஒரு மாணவர் கூட்டம் அணிதிரண்டது.

இப்படி ராக்கிங், அன்ரி ராக்கிங் என இரண்டுபட்ட அணிகள், பல்கலைக்கழகத்தில் தோன்றியது. பெரும்பான்மை எனது துண்டுப்பிரசுரத்தின் அடிப்படையில் முதன் முறையாக சிந்திக்கத் தொடங்கியது. தொடர்ச்சியான அடுத்தடுத்த நிகழ்வுகள், பெரும்பான்மையை அன்ரி ராக்கிங் பக்கத்துக்கு கொண்டுவந்தது.

1. யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் எனது துண்டுப்பிரசுரத்தை ஆதரித்து, பகிரங்க அறிக்கை ஒன்றை பத்திரிகையில் வெளியிட்டது.

2. யாழ் ஊழியர் சங்கமும் இதே நிலையை எடுத்தது.

3. நான் அன்ரி ராக்கிங்கை தலைமை தாங்கி அதை முன்னெடுக்கும் வண்ணம் ஒரு குழுவை உருவாக்கினேன்.  

வரலாற்றைப் புரட்டுபவர்கள், அதைத் திரித்து விடுகின்றனர். இதன் மூலம் அந்த அரசியலை மறுத்து, நிகழ்காலத்தில் தங்கள் எதிர்புரட்சி அரசியலை முன்தள்ளுகின்றனர். இந்த வகையில் கடந்த காலத்தில் இயங்கங்களுக்கு எதிராக மக்களுக்காக நடந்த புரட்சிகரமான போராட்டத்தை மறுப்பதும், அதை இருட்டடிப்பு செய்வதும், அதை எதுவுமற்றதாக காட்டுவதே, இன்று திடீர் புரட்சி பேசுவோரின் எதிர்ப்புரட்சி அரசியல் உள்ளடக்கமாகும். இந்த வகையில் தான் எந்த சமூக நோக்கமுமற்ற, தன் மூடிமறைத்த அரசியல் பின்னணியுடன் தேசம்நெற் இயங்குகின்றது. இந்த வகையில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தை திரித்துப் புரட்டிவிடுகின்றனர். அன்று இயக்கங்களின் மக்கள்விரோத போக்குக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தை, கொச்சைப்படுத்தி திரித்து விடுகின்றனர்.

ரஜனி திரணகம "முறிந்தபனை" என்ற தன் நூலில்

"தமது அயலவர் ஒருவர் திடீரெனக் கடத்திச் செல்லப்பட்டுக் காணாமல் போனால் மக்கள் அது பற்றிப் பாராமுகமாயிருந்தனர். இவ்வாறு இருக்கத் தயாராயில்லாத சிலர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களாவர். விஜிதரன், றயாகரன் எனும் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் விவகாரத்தின்போது, இத்தகைய சூழ்நிலைகளிலே, அவர்கள் துணிகரமாகச் செயற்பட்டார்கள். .... அது பெருமளவில் உற்சாகத்தைக் காட்டுகின்ற முற்போக்கு இயக்கமாயிருந்தது. ... அதன் எதிர்ப்பு முடிவுற்றதும், அதன் தலைவர்கள் தலைமறைவாகவோ அல்லது வெளிநாட்டுக்குச் செல்லவோ வேண்டியிருந்தது. தலைவர்கள் பலரும் சமூகத்தின் கீழ்மட்டத்திலுள்ள நூற்றுக்கணக்கான சாதாரண பெண்களும், அவசியமானதும் மூத்தவர்கள் செய்வதற்குப் பின்வாங்கியதுமான ஒன்றைச் செய்வதில், அரியதொரு துணிவைக் காட்டினார்கள்."

இப்படிப்பட்ட ஒரு போராட்டத்தையே, தேசம்நெற் தன் பிற்போக்கு அரசியல் நோக்குடன் புரட்டித் திரித்து கொச்சைப்படுத்துகின்றது.

புலிகளின் அழிவின் பின், சமூகத்தில் புரட்சிகரமான அரசியல் தலையெடுத்துவிடக் கூடாது என்பதில்,  இலங்கை, இந்தியா முதல் ஏகாதிபத்தியங்கள் வரை குறிப்பாக கவனம் செலுத்துகின்றது. இதுதான் இன்றைய எதிர்ப்புரட்சி அரசியல். இந்த வகையில் தான் கடந்தகாலத்தில் மக்களுக்கான போராட்டங்களை அரசியல் ரீதியாக மறுத்தல் முதல், தன்னார்வ செயல்பாடுகளை முன்னிறுத்துவது வரையான, ஒரு விரிந்த அரசியல் தளத்தில் இந்த எதிர்ப்புரட்சி கூறுகள் இன்று செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

அரசியல் கருத்துத் தளத்திலும், செயல்தளத்திலும் இது முனைப்பாக வெளிப்படுகின்றது. இதன் பின்னணி என்பது  வெளிப்படையற்றதும், சமூக நோக்கமுமற்றதுமாகும். இது தன்னை  மூடிமறைத்த ஒரு அரசியல் சதித்தளத்தில் தான் செயல்படுகின்றது. இலங்கை, இந்தியா, ஏகாதிபத்திய நலன்களையே தங்கள் அரசியலாகக் கொண்டு, இவை பெருமளவில் வெளிப்படுகின்றது. இது எந்த சமூக மாற்றத்தையும், அதன் அரசியலையும் முன்னிறுத்தி, மக்களைச் சார்ந்து நின்று செயல்படுவது கிடையாது.

இந்த வகையில் "சமூகமாற்றத்தை ஏற்படுத்தாமல் சமூகத்தைப் பிரதிபலித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பல்கலைக்கழகமல்ல பெரிய பள்ளிக்கூடமே!" என்று தேசம்நெற்றைச் சேர்ந்த ஜெயபாலன், எந்த சமூக மாற்றத்தையும் கோராத மூடிமறைத்த தன் அரசியல் பின்னணியில், சமூகத்துக்கான அன்றைய அரசியல் போராட்டத்தை திரித்துப் புரட்டிக் காட்டுகின்றார். 

அவர்களின் வாழ்வியல் முறைதான் இதற்கு காரணம். கொள்ளையடித்தபடி ஒரு யுத்த நாடோடிகளாக, அரைக் காட்டுமிராண்டிகளாகத் தான், ஆரிய சமூகம் இந்தியாவினுள் வந்தனர். இங்கு இவர்கள் தனித்துவமாகவும், ஆரிய சமூகமாகவும் தொடர்ந்து நீடிக்க முடியவில்லை.

தமிழ் மக்களின் மீதான தொடர்ச்சியான இனவாத ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் போராடிய மக்கள், போராடும் உரிமையை சொந்த வலதுசாரி குறுந் தேசியவாதிகளான பாசிச புலிகளிடம் இழந்த பரிதாபம், போராட்டத்தினையே அர்த்தமற்றதாக்கி விட்டது. அண்ணளவாக 25000 பேர், அதாவது நேரடியாக இராணுவத்துக்கு எதிரான போராட்டத்திலும் உள் இயக்க ஜனநாயக போராட்டத்திலும் மாற்றியக்கப் படுகொலைகள் (துரோகத்துக்கு முன்பாக) என்று, நேரடியான போராட்ட நடவடிக்கையில் தமது உயிர்களைத் தியாகம் செய்துள்ளனர். 150000 முதல் 250000 மக்கள் இராணுவ அழித்தொழிப்பு, மற்றும் இயக்கப் படுகொலைகள், இனப் படுகொலைகள் என்ற எல்லைக்குள் தம் உயிரை இழந்துள்ளனர்.

அரச நிகழ்ச்சிநிரலுக்கு உட்பட்ட பல புலம்பெயர் நிகழ்வுகள் ஏற்கனவே உள்ளது. அதனுடன் கே.பி ஊடான புதிய நிகழ்வு இன்று அரங்கேறியுள்ளது. தேசம்நெற்றின் லிட்டில் எய்ட் எப்படியோ, அப்படித்தான் இதுவும். தலித், கிழக்கு என்று எத்தனை வேசம் போட்டாலும், அரசின் நிகழ்ச்சிநிரலுக்குள் தான் அனைத்தும் அரங்கேறுகின்றது. இதுதான் கே.பி ஊடானதும் கூட. வேறுபாடு கிடையாது.     

இலங்கையில் இனவாதம் என்பது காலனித்துவ வரலாற்றுடன், வரலாற்று தொடர்ச்சியுடையது. பிரிட்டிஸ் காலனித்துவவாதிகள் இலங்கையை தமது ஆக்கிரமிப்பின் ஊடாக அடிமைப்படுத்தியிருந்தனர். செல்வத்தையும் உழைப்பையும் சூறையாடிய வரலாற்று வளர்ச்சியிலேயே, இந்த இனவாத நாற்று பிரித்தாளும் தந்திரம் மூலம் ஊன்றப்பட்டது. தேசிய வளங்களைச் சார்ந்து வாழ்ந்த மக்களின் வாழ்வை பறித்தவர்கள், மக்களின் கோபத்துக்கு முகம் கொடுக்க நேர்ந்தது. கோபம் போராட்டமாக வளர்ச்சி பெற்றபோது, அதற்கு தலைமை தாங்கிய பிரிவுகள் பிரிட்டிஸ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து மக்களுடன் நின்று போராடுவதற்கு தயாராகவிருக்கவில்லை. அவர்கள் போராட்டத்தை நடத்துவதாக காட்டியபடி, பிரிட்டிஸ் அரசுடன் கூடிக்குலாவியபடி நக்கித் திரிந்தனர்.

வேத ஆரிய மக்களின் இருப்பு, மற்றைய சமுதாயத்தை கொள்ளையிட்டு வாழ்தல்தான். இதற்கு மாறாக அவர்கள் கால்நடைகளை வளர்த்த நாடோடிச் சமூகம் என்பது, முற்றிலும் தவறான ஒரு எடுகோள்.

வேத-ஆரியச் சடங்குப் பாடல்கள் எதைக் கோருகின்றது? அது உழைத்து வாழும் மக்களின் உழைப்பு பாடல்களல்ல. அதுபோல் உழைப்புப் பற்றிய சடங்குகளுமல்ல. உழைப்பை வளப்படுத்தக் கோரிய சடங்குகளுமல்ல. மாறாக கொள்ளையடிக்கும் யுத்தவளத்தையும், அந்த ஆற்றலையும் கோரிய சடங்குகளையே, ஆரிய-வேத பாடல்கள் வெளிப்படுத்;தி நிற்கின்றது.

சமஸ்கிருதம் வேதகால ஆரிய சடங்குகளை செய்யக் கூடியவர்களின் மொழியாகியது. ஆரிய வழிவந்த பூசாரிப் பிரிவுகள் சமூகத்தில் சிதைந்த போதும், சமுதாயத்தில் சுரண்டும் சமூக அமைப்பின் தேவையுடன் உருவான மதங்கள் ஆரிய பூசாரிகளுக்கு புத்துயிர் அளித்தது. தம் பூசாரித் தன்மையூடாக, தனிச்சலுகை பெற்றவராக மாறினர். இந்தியச் சமூக அமைப்பில் அவர்கள் ஒரு சலுகைக்குரிய சுரண்டும் வர்க்கமாக, தனிச் சலுகையுடன் நீடிக்கத் தொடங்கினர். தனிச்சொத்துரிமை அமைப்பில் தனது வர்க்க தனித்துவத்தை பேணவும், இதற்கு மூலமாக இருந்த மந்திரத்தை இரகசியமாக பேணவும் முனைந்தனர். தமது பழைய மொழியின் சிதைவில் இருந்தும், அவர்கள் சிதைந்து வாழ்ந்த புதிய மொழியில் இருந்தும் உருவாக்கிய ஒரு மந்திர மொழியான சமஸ்கிருதத்தை, பார்ப்பனர் சுரண்டி வாழ உதவியதால் அதை இரகசியமாக்கினர். அதை தமக்குள், தம் சாதிக்குள் தக்கவைத்தனர். இந்த மொழி தான் சமஸ்கிருதம்.

யாழ் தெல்லிப்பழையில் வைத்து 28.4.1987 மாலை 6.30 மணியளவில் உரிமை கோரப்படாத ஒரு நிலையில் கடத்தப்பட்டேன். வெளி உலகின் முன்போ, நான் காணாமல் போனேன். இப்படி இனந்தெரியாத நபர்களால், இரகசியமாக, மம்மல் இருட்டில் வைத்து கடத்தப்பட்டேன். பின்புறம் கை கட்டப்பட்டு, கண்கட்டப்பட்ட நிலையில், நிர்வாணமாக்கப்பட்டேன். இதன் பின் இருண்ட அழுக்கடைந்த புலிகளின் வதைமுகாமில் இருந்து, 16.7.1987 மாலை 6.30 மணியளவில் நான் தப்பிச் சென்றேன். இதன் பின்பாக 14 ஆண்டுகள் கடந்த ஒரு நிலையில் தான், 1.5.2001 இல் இதை எழுதத் தொடங்கினேன். இதை விரைவாகத் தொகுக்க பல்வேறு தொடர் எழுத்து வேலைகள் ஊடாக இரண்டு வருடம் சென்றது.

இலங்கையில் அன்னிய நாடுகளின் யுத்தம் மெதுவாக, ஆனால் மிக நுட்பமாகவே தீவிரமடைகின்றது. உலக நாடுகளின் முரண்பட்ட நலன்கள், இந்த மோதலின் அரசியல் அடைப்படையாகும். இலங்கை ஆளும் குடும்பத்தின் குறுகிய நலனும், மேற்கின் நலனும் முரண்பட்டு அவை எதிராக பயணிக்கின்றது. இந்த இடத்தில் மகிந்த குடும்பமல்லாத எந்த ஆட்சி அமையினும், இந்த தீவிரமான முரண்பாடு பொதுத்தளத்தில் அற்றுவிடும். மகிந்த குடும்ப ஆட்சி நீடித்து நிலைக்கும் ஒரு பாசிச சர்வாதிகார ஆட்சியாக இருக்கும் என்பதை, மேற்குநலன் மிகத்தெளிவாக இனம் கண்டுள்ளது. தனது போட்டி நாடுகளை சார்ந்து, ஜனநாயகத்தை பாசிசமாக்கி நீடித்து நிற்க முடியும் என்பதையும் இனம் கண்டுள்ளது. இதை முறியடிக்கும் காய் நகர்த்தல் தான், இன்றைய சர்வதேச அழுத்தங்கள். மேற்கின் நலன் இலங்கையில் நிறுவப்படும் வரை, முரண்பாடு தீவிரமடையும். இதற்கு சார்பான ஒரு அரசியல் நிகழ்ச்சிக் போக்கும் வளர்ச்சியுறும்.     

அறிவு, நாணயம், உண்மை என அனைத்தையும் அடகுவைத்த பின், இருவர் பேசிக்கொண்டது தான் தேசம்நெற்றில் வெளிவந்துள்ளது. என்னவோ தெரியவில்லை, தேசம்நெற்  எமக்குள் பரிமாறிய ஈமெயிலை எப்படி பெற்று வெளியிட்டதோ, அதே வழியில் இப் பேட்டியும் வெளிவந்துள்ளது ஆச்சரியமானதல்ல. அரசியல் ரீதியில் எதிர்கொள்ள முடியாது தேசம்நெற் என் பெயரில் கூட ஈமெயில் தயாரித்து, அதை வெளியிட்டு அம்பலமானது பழைய கதை.

இந்த வகையில் பேராசிரியர், "ஊடகவியலாளர்" என இருவர் சேர்ந்து, எம்மை எதிர் கொள்ளுகின்றனர். சம்பவத்தை திரித்து புரட்டுவதன் மூலம், கதை சொல்லுகின்றனர். கணிதத்தில் இரண்டு எதிர்மறைகள் இணைந்து நேராவது போல், இங்கு கேள்விகள்  பதில்கள் மூலம் தங்களை நேராக்கிக் காட்ட முனைகின்றனர்.    

ஆரியர் முற்றாக தமது முந்தைய சமுதாயத் தொடர்ச்சியையும் வாழ்வையும் இழந்தே சிதைந்தனர். இதனால் அந்த சடங்குமுறை கொண்டிருந்த வாழ்வுமுறையை இழந்ததால், உயிரற்றதாகியது. அது உயிர் உள்ள சமூகத்தில், வெறும் சடங்கு மந்திரமாக மாறியது. சிலரின் பிழைப்புக்கான சடங்காகியது.

ஒருபுறம் மக்களை அணிதிரட்டும் அரசியல் மறுக்கப்படுகின்றது. மறுபுறம் மக்கள் அரசியலுக்கான அனைத்தையும் மறுக்கின்ற பாசிசம். இரண்டும் ஒன்றுடன் ஒன்று கைகோர்த்துக் கொண்டு இலங்கையிலும், புலத்திலும் இயங்குகின்றது.

புலிகள் இருந்த காலத்தில் புலிப் பாசிசம், தானல்லாத எதையும் அனுமதிக்கவில்லை. மறுபக்கத்தில் புலியல்லாத அரசியல் தளத்தில் மக்கள் அரசியலை துறந்ததுடன், மக்களை அணிதிரட்ட தாம் அணிதிரள்வதை மறுத்து மக்களின் முதுகில் குத்தினர்.

நடந்த போராட்டம் என்ன என்று கூறாது, "மார்க்சியம்;" மூலம் அதை "தமிழ் மக்களின் போராட்டம்" என்கின்றார். "மார்க்சியம்" பேசிய பேராசிரியர் சண்முகரத்தினம். புலியிசம் பேசுகின்ற அரசியல்தளத்தில் நின்று தான் இதை இன்று உரைக்கின்றார். புலியையும், இதன் வலதுசாரிய அரசியல் அடித்தளத்தையும், அதன் ஏகாதிபத்திய ஓட்டுண்ணித்தனத்தையும் காப்பாற்ற, சண்முகரத்தினம் என்ற "மார்க்சிய" சந்தர்ப்பவாதி தன் முற்போக்கு வேட்டியை கோமணமாக்கிக் கொண்டு புதிதாக களத்தில் இறங்கியுள்ளார்.

சாதிய ஒழிப்புப் போராட்டத்தில் இந்த கேள்வி மிக முக்கியமானதாகின்றது. வரலாற்று ரீதியாக இந்த கேள்விக்கு பதிலளிப்பது என்பது மிகவும் அவசியமானதாகின்றது. ஆனால் இது மிகவும் சிக்கலுக்குரிய ஒன்றாகவுமுள்ளது. வரலாற்று ஆய்வுகளில் உள்ள குளறுபடிகள், அதை மேலும் மேலும் கடினமாக்கி, அதை ஆழ்ந்த சிக்கலுக்கு உள்ளாக்குகின்றது.

மேற்கத்தைய நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக இன்று காய் நகர்தல் தான், தமிழ்மக்களின் உரிமைக்கான போராட்டம் என்கின்றனர். இப்படி வலது இடது அரசியல் பொறுக்கிகள், ஒரு புள்ளியில் சந்திக்கத் தொடங்கியுள்ளனர். இனவாதம் பேசும் வலதுசாரி தமிழ்நெற்றில், இடதுசாரிய சண்முகரத்தினம் கூறுவதைப் பார்ப்போம்.

"When sections of articulating Tamils fail at such a time as this in justifying the need for Tamil independence and in independently demanding the powers to recognize Tamil liberation, some world leftist circles currently misinterpret it as pro-imperialist tendency inherent to the Tamil struggle. Colombo is now capitalizing on it for justifying its genocide as its struggle against an imperialist plot and thus painting a sympathetic picture to the naive third world that it is a state standing up to the powers. The Tamil struggle is doubly penalized by the internal failure of its elite, Tamil circles pointed out, adding that some of the best Tamil minds should come forward in arguing for the due status of the struggle in the international arena, leading to Eezham Tamil independence."

தமிழ்மக்களும், அதன் அரசியல் பிரதிநிதிகளும் ஒன்றாக பயணிக்கவில்லை. பிளவுபட்ட தளத்தில், மக்களின் எதிரிகளுடன் தான் அரசியல் பிரதிநிதிகள் கூடிநிற்கின்றனர்.    ஏகாதிபத்தியங்களும், அன்னிய சக்திகளும் நடத்துகின்ற தங்கள் நலன் சார்ந்த தலையீடுகளினூடு தான், அரசியல் பிரதிநிதிகள் கூடி மக்களை காட்டிக்கொடுக்கின்றனர். அன்று இந்தியா வழங்கிய பயிற்சி முதல் இன்று சர்வதேச நாடுகள் மனிதவுரிமை பற்றி வடிக்கும் முதலைக் கண்ணீர் வரை, இவை அனைத்தும் அவர்களின் சொந்த நலன் சார்ந்ததுதான். மக்கள் நலன் சார்ந்ததல்ல. தமிழ் அரசியல் பிரிதிநிதிகள் இதன் மூலம் தமிழ் மக்களின் விடிவைக் காட்டுவதன் பின்னணியில், தங்கள் சொந்த நலனை அடைய முனைகின்றனர்.

மக்களை அணிதிரட்ட மறுப்பது பம்மாத்து அரசியலாகும். அடையாள அரசியலும், பிரமுகர்தனமும் கொண்ட புலியல்லாத அரசியலோ, மக்கள் விரோதத் தன்மை கொண்டது. மக்களின் அரசியல் விழிப்புணர்வற்ற அரசியல் நிலைதான், அடையாள அரசியலுக்கும் பிரமுகர்த்தன அரசியலுக்குமான மூலதனமாகும். மக்களை அரசியல் ரீதியாக அணிதிரட்டுவதை எதிர்ப்பதில், இவர்களின் எதிர்ப்புரட்சி அரசியல் பாத்திரம் இப்படி முதன்மை பெறுகின்றது. 

நோர்வே ஈழத் தமிழர் பேரவையும், அதன் தலைவர் பஞ்சகுலசிங்கமும் சொல்வது இதைத்தான். புலிப் பினாமி என்பதை மூடிமறைக்க நாங்கள் புலிகள் அல்ல என்பதும், புலியை பாதுகாக்க அவர்கள் போர்க்குற்றத்தில் ஈடுபடவில்லை என்று கூறுவதும், இவர்கள் தங்களை மூடிமறைத்து சொல்லும் அரசியல் மந்திரமாகும். புலியைப் பற்றி பேசாமல், அரசைப் பற்றி மட்டும் பேசும் புலி மந்திரமும் இதில் ஒரு வகை. இப்படி வலதுசாரியம் தன்னை அரசியல் ரீதியாக நிலைநிறுத்த, தன்னை மூடிமறைத்துக் கொண்டு பிரச்சாரம் செய்கின்றது.  இடதுசாரித்தனத்தைப் பயன்படுத்தி தன்னை மிதப்பாக்கவும், அது எல்லா விதமான நரி வேசமும் போடுகின்றது. தன்னை தீவிர அரசு எதிர்ப்பாளனாக காட்டிக் கொள்ளவும், மக்களின் அவலத்தை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்யவும் கூட, அது தயங்குவதில்லை. தான் மட்டும்தான் அதை பேசுவதாகவும், செயல்படுவதாகவும் காட்டி அதை நிறுவ முனைகின்றது. அதே தளத்தில் புலி வலதுசாரியத்தை மூடிமறைப்பதன் மூலமும், அதைப் பேசாது தவிர்ப்பதன் மூலமும், தன்னை அரசியல் ரீதியாக முன்னிறுத்துகின்றது. பினாமிப் பெயர்கள், இடதுசாரி வேசம், தனிமனித பாதிப்பு … என்று அனைத்தையும் அணிந்து கொண்டு மிதக்க முனைகின்றது.

இனம் சார்ந்த வலதுசாரிய உணர்வும், உணர்ச்சியும், மக்களை அரசியல் ரீதியாக அணிதிரட்டுவதிலும் பார்க்க வெடிகுண்டில் தான் அதிக நம்பிக்கை கொள்ள வைக்கின்றது. அதுவும் பிழைப்புவாதிகளின் உணர்ச்சிப் பேச்சை நம்பி பலியானவர்கள், தனிமைப்பட்டுப் போன விரக்தி நிலையில் தனிநபர் பயங்கரவாதத்தை நாடுகின்றனர். ஏன் அரசியல் தற்கொலையைக் கூட நாடுகின்றனர். இப்படிபட்டவர்கள் எந்த மக்களையும் அணிதிரட்ட முடியாது என்று கருதி, தன்னளவில் குண்டு வெடிப்பை முன்வைக்கின்றனர். இந்தக் குண்டு வெடிப்பு, மக்களை மேலும் இவர்களில் இருந்து தனிமைப்படுத்துகின்றது. மக்களை மேலும் மேலும் இவை செயலற்றதாக்குகின்றது.

சாதிய தோற்றம் மீதான திரிபுகளும், அதன் அடிப்படைகளுமே, எங்கும் சாதி பற்றி அறிவாக உள்ளது.  சாதியம் எப்படி தோன்றியது? இதன் மீதான தர்க்கங்கள், வாதங்கள், முடிவுகள் பற்பல திரிபுகளாகவுள்ளது. இது பார்ப்பனியத்தின் அடிக்கட்டுமானத்தையே பாதுகாக்கின்றது. சாதிய மேல்கட்டுமானத்தை அசைப்பதன் மூலம், பார்ப்பனியத்தை தக்கவைக்கின்ற போக்கு ஆதிக்கம் பெற்று காணப்படுகின்றது. இப்படி சாதியம் தோற்றம் பற்றிய திரிபுகளின், மையமான அடிப்படையான எடுகோள்கள் எவை. 

தனிமனிதனிடம் "காதலை", "திருமண பந்தங்களையும்" வடிகட்ட கோருகின்றது. நிபந்தனை போடுகின்றது. நீ நிபந்தனை பூர்த்தி செய்யாவிட்டால் சேர்ந்து வாழமுடியாது என்கின்றது. இப்படியொரு கொடுமையான பிரிட்டிஸ் சட்டம். தனிமனித உரிமைகளை மறுக்கும் சட்டம். நீயே அதை செய், இல்லையென்றால் சட்டப்படி சேர்ந்து வாழ இடமில்லை என்கின்றது. 

அது என்னடா சட்டம் என்றால், ஆங்கிலம் தெரியாதவர்களை நீங்கள் திருமணம் செய்யக் கூடாது என்கின்றது. அப்படிச் செய்தால் அவர்கள் சேர்ந்து வாழ நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று சட்டம் போட்டு சொல்லுகின்றார்கள். அன்று செவ்விந்தியர்களைக் கொன்றால் தலைக்கு இவ்வளவு பணம் என்று சட்டம் போட்ட ஆண்ட பரம்பரை இது. அன்று ஆண், பெண், குழந்தை, செவ்விந்திய பிரிவுகளை வகைப்படுத்தி, ஒவ்வொரு தலைக்கும்  இவ்வளவு என்று கூறி, கொன்று குவித்ததற்கு பணம்கொடுத்து இதில் கொழுத்த பரம்பரைதான், இந்த சட்டத்தைப் போடுகின்றது.

பேரினவாதம் மக்களை பிரித்து பிளந்து அதில் குளிர்காய்கின்றது. இதைத்தான் தமிழ் தேசியமும் செய்தது, செய்கின்றது. தமிழ்தேசியம் இன்று செய்ய வேண்டியது, இதை மறுத்து போராடுவதுதான். சிங்கள மக்கள் எங்கள் எதிரிகள் அல்ல, இனவாதமும் அதை முன்வைக்கும் அரசும் தான் எமது எதிரி. இதைக் கூறி,  தமிழ் மக்களை அணிதிரட்ட வேண்டும். இதைச்செய்யாத அனைத்தும், தமிழ் இனவாதம் தான்.

புலிகள் உள்ளிட்ட இயக்கங்கள் தங்கள் வலதுசாரி அரசியலுடன், போராட்டத்தை அழித்து நாசமாக்கிய கதை ஒருபுறம். மறுபக்கத்தில் இதை எதிர்கொள்ள வேண்டிய இடதுசாரிகள், மக்களின் முதுகில் குத்திய துரோகம் மறுபுறம். இதுதான் மாபெரும் துரோகம். இது இன்றும் தன்னை தொடர்ந்து மூடிமறைக்கின்றது. இதைத்தான் ரகுமான் ஜான் "ஈழவிடுதலைப் போராட்டம் : ஒரு மீளாய்வை நோக்கி…" என்று கூறிக்கொண்டு, அதை மூடிமறைக்கும் முதன்மையான சந்தர்ப்பவாதியாக புலிப் பாசிட்டாகவே கொள்கை விளக்கம் கொடுத்து செயல்படுகின்றார். அவரின் அரசியல் நேர்மை என்ன என்பதை, அவரைச் சுற்றி நடந்த துரோகத்தை மூடிமறைப்பதில் இருந்துதான், நாம் அதைத் தெரிந்து கொள்ள முடியும்.

வினவு எதிர்ப்பு ஆணாதிக்க அரசியல், சந்தனமுல்லையையும், லீனாவையும் ஒன்றாகக் காட்ட முனைந்தது. சந்தனமுல்லை விவகாரத்துக்குள், லீனாவைக் கூசுவினர். இப்படி அனைவரும் ஆணாதிக்க பரிவட்டத்தைக் கட்டிக்கொண்டு, வினவு எதிர்ப்பு சின்டிகேட்டை போட்டுக்கொண்டு, எல்லா சமூக ஒடுக்கும் பிரிவுகளும் களத்தில் குய்யோ முறையோவென கும்மியடித்தன.

கொன்றவனை மறுபடியும் கொல்லும் குரூரம், மகிந்த சிந்தனையில் தான் எழுகின்றது. பாரிய மனிதப் படுகொலைகள் மூலம் போர்க்குற்றத்தைச் செய்த கூட்டம், செய்யாத கொலையைச் செய்ததாக மற்றவன் மேல் பழி சுமத்துகின்றது. முறைகேடான சமூக விரோத பேரினவாத அரசியல், இப்படித்தான் புலத்தில் அரங்கேறுகின்றது. பேரினவாத பாசிசம் உண்மைகளை புதைப்பதும், பொய் புரட்டுகளில் அரசியல் செய்வதைத் தவிர, அதற்கு வேறு எந்த அரசியல்  வழியுமிருப்பதில்லை. தமிழ்மக்களின் உரிமைகளை வழங்கி, புலியை எதிர்கொள்ள அரசியல்  அதற்கில்லை.

வினவுவை எதிர்ப்பவர்கள் வினவுதளத்தை மட்டும் எதிர்க்கவில்லை, வினவுவின் மொத்த அரசியலையும் எதிர்க்கின்றனர். வினவு அரசியல் கொண்டுள்ள, ஆணாதிக்கத்துக்கு எதிரான அரசியல் நிலைப்பாட்டையே எதிர்க்கின்றனர். இந்த எதிர்ப்பு என்பது பொதுவானது. குறிப்பாக இந்த விடையத்தில் ஆணாதிக்கம் அம்பலமாவதைத் தடுத்து, ஆணாதிக்கத்துக்குள்ளேயே தீர்வைக் காட்ட முனைகின்றனர். சம்பந்தப்பட்ட பெண்ணை, தமது வலைக்குள் கட்டி வைக்க முனைகின்றனர். இந்த வகையில் வினவுவை நோண்டி, இந்தா இதைப் பார் என்று தங்கள் ஆணாதிக்க வக்கிரத்தை மூடி மறைத்துக்கொண்டு காட்ட முனைகின்றனர். வினவு தளத்தைக் கடந்து, அதன் அரசியல் என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் குரல். இந்த வகையில் வினவு தளம் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளை கையில் எடுப்பதால், ஆளும் வர்க்கத்தின் எதிர்ப்பு பலமானதாக உள்ளது. இதனால் வினவுக்கான எதிர்ப்பு, பலமாக பல முனையில் வெளிப்படுகின்றது.
 

சில நாட்களாக பதிவுலகம், இரண்டாகப் பிளவுண்டு கிடக்கின்றது. நண்பர்கள் எதிரிகளாகின்றனர். எதிரிகள் நண்பர்களாகின்றனர். எதிரிக்கு எதிராக புதிய கூட்டுகள். ஆம் ஆணாதிக்கம், பார்ப்பனியம், சாதியம் முதல் வர்க்கப் போராட்டத்தை எதிர்க்கும் கூட்டமெல்லாம் ஒன்றாக பதிவுலகில் காட்சியளிக்கின்றது.

இலங்கையில் சீன ஆதிக்கம் பற்றி, சதா தமிழ் இனவாதிகள் புலம்புகின்றனர். இதன் மூலம் இந்திய நலன்களும், இந்திய ஆதிக்கமும் இந்து சமுத்திரத்தில் பறிபோவதாக கூறி,  தமிழ் இனவாத புலி அரசியல் செய்கின்றனர்.

தமிழீழம் என்ற கோசம் பிரிவினையை முன்னிறுத்தி, சிங்கள மக்களுடனான ஐக்கியத்தை நிராகரித்து எழுந்தது. தமிழினவாத வலதுசாரியம், என்றும் ஐக்கியத்தைக் கோரும் சுயநிர்ணயத்தைக் குழிதோண்டிப் புதைத்து வந்தது. சிங்களமக்களை ஐக்கியப்படுத்தும், சுயநிர்ணயத்தை மறுத்தே அது தமிழீழம் என்றது. சுயநிர்ணயமறுப்பே, தமிழீழத்தின் சித்தாந்தமாகவும் நடைமுறையாகவும் மாறியது. இதுவே தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமைகளைக் கூட மறுக்கும், வலதுசாரிய தமிழ் பாசிசமாக மாறியது.

டிராட்ஸ்கிகள் தமது சொந்த அரசியலையே, ஸ்ராலின் அவதூறுகளில் கட்டமைக்கின்றனர். அவர்களுக்கு இதைவிட்டால் வேறு வழியிருப்பதில்லை. இதை மூடிமறைக்க சொற்களில் "ஸ்டாலினை வரலாற்றுப் போக்குகள், அதிகார அமைப்பின் இயக்கத்துக்குள் வைத்து புரிந்து கொள்ள வேண்டுமே தவிர, தனித்தனித் சம்பவங்களைப் பிரித்தெடுத்து நோக்குவதும் அதனடிப்படையில் விளக்கவதும் மார்க்சியமல்ல|| என்று கூறியே, அவதூறுகளை தொகுத்து வெளியிடுகின்றனர். இந்தத் தொகுப்பு என்பது அரசியலற்ற வெற்றுவேட்டுகளில், எதிர்ப்புரட்சியில் கொல்லப்பட்டவர் பட்டியலைக் கொண்டு தூற்றப்படுகின்றது.

இதை வலது இடது என்று, பல முரணான அரசியல்தளத்தில் இன்று அடிக்கடி கேட்கின்றோம். நீண்டகாலமாக நிலவிய வலது இனவாத அரசியல் செல்வாக்கு, தொடர்ந்து இடது அரசியலை மேல் செல்வாக்கு வகிக்கின்றது. இதை இரண்டையும் இணைக்கும் வண்ணம், இடையில் நிறம்மாறும் ஓணான்கள் உள்ளனர்.

ஒன்று இதன் மூலம் இயங்குகின்றது. மற்றது இதை மறுப்பதன் மூலம் இயங்குகின்றது. ஒன்று வலதுசாரிய கோட்பாட்டுத் தளத்தில் இதை வெளிப்படையாக முன்தள்ளி இயங்குகின்றது. மற்றது இடதுசாரி கோட்பாட்டு தளத்தில் மூடிமறைத்து இயங்குகின்றது.

நேர்மையாக தாம் சொன்னவற்றுக்காக சமூகத்திற்காக இயங்குபவர்களும், விமர்சனத்தை சுயவிமர்சனத்தையும் செய்பவர்கள், இது தம்மீதான "தனிநபர் தாக்குதல்" என்று சொல்ல எதுவும் இருக்காது. அவர்களுக்கு இரண்டுவிதமான முகம் இருக்காது. சொல்லும் அரசியலுக்கும், தனிநபர் வாழ்க்கை சார்ந்தும், இரு வேறுபட்ட முகமும் நடைமுறையும் இருக்காது. சமூகம் மீதான தங்கள் நேர்மையான செயல்பாட்டில், அரசியலும், தனிநபர் வாழ்க்கையும் ஒன்றில் இருந்து ஒன்று பிரிக்கப்பட்டதாக இருக்காது. அவர்களுக்கு இரண்டும் ஒன்றுதான்.

கல்வியை இடைநிறுத்தியவர்கள் மூவரின் கருத்துகளை, 07.02.2010 வீரகேசரியில் வெளியிட்டிருந்தனர். "டசாலையை விட்டு இடை விலகிய மாணவர்களின் கருத்துகள் " என்ற தலைப்பில் குறிஞ்சி குணா என்பவர் எழுதியிருந்தார்.

கடந்தகால யுத்தம் தொடர்பாக அனைத்தையும் மூடிமறைத்து வடிகட்டித்தான், அரசு யுத்தக் காட்சிகளை வெளியிட்டது. இருந்தபோதும் அவர்கள் கடந்தகாலத்தில் வெளியிட்ட காட்சிகள் பலவற்றை, முழுமையாகவே இன்று அகற்றிவிட்டனர். குறிப்பாக எங்கள் தேசம் என்ற ஈ.பி.டி.பி பினாமி இணையம், போர் தொடர்பான வீடியோக் காட்சிகளை, அரசின் துணையுடன் அன்று அன்றாடம் வெளிக்கொண்டு வந்தது.

பலர் இவர்களையே, பார்ப்பனர் என்கின்றனர்!? அப்படியாயின் ஏன் இவர்கள் ஆரியராக நீடிக்க முடியவில்லை!? என் பார்ப்பனரானார்கள்!? வரலாற்றில் அப்படி என்ன தான் நடந்தது?

உனக்கும், எனக்கும் மட்டுமல்ல எம்மைச் சுற்றி நடந்ததை மூடிமறைப்பதே எங்கும் அரங்கேறுகின்றது. ஒருபுறம் அரசு என்றால், மறுபுறம் புலிகளும் இதில் போட்டி போடுகின்றனர். இந்த எல்லைக்குள் தான் எதிர்க்கட்சிகள் முதல் சர்வதேச நாடுகள் வரை கைகோர்க்கின்றனர்.

 

வலதுசாரிய அரசியல், கடந்தகாலத்தில் தான் அல்லாத அனைத்தையும் அழித்து எம்சமூகத்தை சிதைத்து சின்னாபின்னமாக்கிவிட்டது. வலதுசாரி சித்தாந்தம் தான், எங்கும் எதிலும் இன்றும் ஆளுமை செலுத்;துகின்றது. இதற்கெதிரான போராட்டமும், கடமைகளும் செய்வாரின்றி எம்முன் குவிந்து கிடக்கின்றது.

ஒருபுறம் அரசும் புலியும் மக்களை ஆட்டுகின்றனர், ஆட்டுவிக்கின்றனர். நாங்கள் இதை மாற்ற வேண்டும் என்றால், நாங்கள் மாற வேண்டும்;. இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? இதுவே எம்முன் உள்ள உடனடிக் கேள்வியாகும்.

எம்மை நோக்கி  கேள்விகளாகவும், குற்றச்சாட்டுகளாகவும் இது முன்வைக்கப்படுகின்றது. நீங்கள் அவர்களை விட்டுவிட்டு, தனியாக அரசியலை செய்யுங்கள் என்கின்றனர். அவர்களை விமர்சிப்பதை கைவிடுங்கள்; என்கின்றனர். விமர்சனம் செய்யாதீர்கள் என்கின்றனர். விமர்சிப்பதால் அவதியுறுவோரும், இப்படி இப்படி செய்வதால் என்ன இலாபம் என்று கேட்போரும் அடங்குவர்.

மே 18 ஜச் சுற்றி, வரலாற்று திரிபு புனையப்படுகின்றது. மே 16 இல் அரங்கேறிய துரோகத்தை மூடிமறைக்க, மே 18 துரோகிகளால் கொண்டாடப்படுகின்றது. புலிகளின் கதை மே 18 இல் தான் முடிந்ததாக, புனையப்படுகின்றது. ஒரு துரோகத்தின் மூலம் மே 16 இல் சரணடைய வைத்தவர்கள், மே 18 இல் வீரமரணமடைந்ததாக இட்டுக் கட்டுகின்றனர்.

தன் வெற்றி பற்றி பீற்றிக்கொள்ளும் பேரினவாதம், தன் சொந்த இனவாத அரசியல் பலத்தின் மூலம் வெற்றி கொள்ளவில்லை. மாபியாவாக சீரழிந்துவிட்ட புலிகள் மூலம் தான், தமிழ் மக்களை பேரினவாதம் வென்றது. பேரினவாத இனவெறியர்கள் தமிழ் மக்களை தோற்கடித்தது என்பது, புலிகள் செய்த துரோகத்தின் அரசியல் விளைவாகும். அதுதான் இறுதியில்  அவர்களையே அழித்துவிட்டது. ஆனால் புலிகளோ இல்லையென்கின்றனர்.

 

பேரினவாத அரசு எப்படி பிரபாகரனைக் கொல்ல முடிந்தது? இப்படி ஒரு அவல நிலைக்கு யார் வழிகாட்டினர்? யாருமில்லையா? பிரபாகரன் தன்னம் தனியாகத்தானா, தன் வாழ்வின் முடிவுக்குரிய இந்த வழியை தேர்ந்தெடுத்தான்? சொல்லுங்கள். நிச்சயமாக இல்லை. புலத்துப் புலிமாபியாக்கள் தங்கள் திட்டத்தின் அடிப்படையில் மக்களைப் போட்டுத்தள்ள வழி காட்டியவர்கள், பிரபாகரனையும் போட வைத்தனர்.  

பொய், பித்தலாட்டம், முடிச்சுமாறித்தனம் இன்றி, புலிகள் அன்றும் இன்றும் உயிர் வாழ்வது கிடையாது. இப்படி மக்களை ஏய்த்து வாழ்ந்த இந்தக் கூட்டத்தின் அரசியல் என்பது, என்றும் நேர்மையற்றதாகவே இருந்து வந்ததுள்ளது. இன்று ஒரு கூட்டம் உயிருடன் இல்லாத  தலைவரையே, இருப்பதாக கூறும் மோசடியை தொடர்ந்து செய்கின்றது.

மே 16 வரை ஆயுதமேந்திய இரண்டு பாசிசத்துக்கு நடுவில் மக்கள் சிக்கித்தவித்தனர். இதன் மூலம் மக்கள் சந்தித்த அவலங்களைத் தான், அவர்கள் விடுதலை என்றனர். ஒருபுறம் புலிகள் மறுபுறம் அரசு.

பிரபாகரன் உயிர் வாழ்ந்திருக்க முடியாதா? முடியும் என்றால்! என்னதான் செய்திருக்கவேண்டும். இது பற்றிய உங்கள் அபிப்பிராயங்கள், குறைந்தபட்சம் சில உண்மைகளைத் தன்னும்   அடிப்படையாகக் கொண்டிருந்தது. இதை இன்றுவரை மறுப்பவர்கள் தான், பிரபாகரனை கொன்ற உண்மையான கொலைகாரர்கள். இதுதானே உண்மை. சரி அவர்கள் யார்? நீ யாரை நம்பி, ஏன் எதற்கு என்று எந்தக் கேள்வியுமின்றி யார் பின்னால் சென்றாயோ, அவர்கள்தான்; பிரபாகரனைக் கொன்றனர். இது ஒரு உண்மையில்லையா? இதற்கு மாறாக உன்வழியில் சென்று இருந்தால், அவர்கள் உயிர்வாழ்ந்திருக்க முடியுமல்லவா? இதை நீ உணர்ந்தால், யார் அந்தக் கொலைகாரர்கள் என்பதை தெளிவாக இனம் காண்பாய்.

 

மக்களுக்கு தெரியாமல் தான், புலிகள் முன்கூட்டியே தாங்கள் தப்பிச்செல்லும் சதிக்குள் சரணடைந்திருந்தனர். இந்தச் சதி அவர்களின் இறுதி முடிவானவுடன், "வேறு தெரிவு எங்களுக்கு இல்லை" என்று கூறி, இந்தச் சரணடைவை வெளிக்கொண்டுவந்தனர். இதை புலிகளின் அன்றைய சர்வதேச பொறுப்பாளராக இருந்த கேபி என்னும் பத்மநாதன் அறிவித்தார். அன்று சரணடைந்தவர்கள், இதை உலகறிய சொல்லிவிட்டு செய்திருந்தால்,

Soosai.jpg

 

 அவர்கள் இன்று உயிர் வாழ்ந்திருப்பார்கள். இதை மீறிக் கொல்லப்பட்டிருந்தால் என்ன நடந்தது என்ற தெளிவு, மக்களுக்கு இருந்திருக்கும். இதன் பின் இருந்த துரோகிகள் யார் என்ற விபரம் தெரிந்திருக்கும். இப்படியிருக்க அன்று இதை உலகறிய ஏன் சொல்லவில்லை? செய்யவில்லை?

மே 16 மாலை எல்லாம் முடிந்து விட்டது. மே 17 அதிகாலைக்கு முன்னமே சரணடைந்த புலிகளில் ஒருபகுதி கொல்லப்பட்டு விட்டனர். இதை கேபி என்ற பத்மநாதன் தெரிந்து கொண்டவுடன், யுத்தம் தொடர்வதாக புலத்து தமிழ்மக்களின் காதுகளில் 18ம் திகதி வரை பூ வைத்தனர். 16ம் திகதி சரணடையும் துரோக ஏற்பாட்டைச் செய்து சரணடைய வைத்தவர்கள், அன்று அவர்கள் பாதுகாப்பாக வெளியேறவும், தொடர்பு கொள்ளவுமில்லை என்ற உண்மையைத் தெரிந்து கொண்டனர். அத்துடன் 17ம் திகதி காலையே நடேசனின் உடலை அரசு தன் செய்திகளில் வெளியிட்டு இருந்தது.

தமிழ்மக்கள் பலி அரசியலில் இருந்து, பலி எடுத்தவர்களிடமிருந்து தப்பிய நாளை, எப்படி தமிழ் மக்களின் துக்கதினமாக அறிவிக்க முடியும். அன்று யாருக்குத் துக்கம்? மக்களுக்கா, புலிக்கா? தங்கள் வலதுசாரி புலித் தோழர்களுக்காக, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மக்களின் பெயரால் மூக்கால் சிந்துகின்றது. மே 17, இல் என்ன நடந்தது? தமிழ்மக்களை தம் பங்குக்கு கொன்று வந்து புலிகள் சரணடைந்து இருந்த நிலையில், அவர்கள் கொல்லப்பட்ட நாள். தமிழ்மக்கள் சுதந்திரமாக வெளியேறிய நாள். இது தமிழ்மக்களின் துக்க நாளல்ல, புலியின் துக்க நாள்.

இனப் பிரச்சனையைத் தீர்த்தால் என்ன நடக்கும்? வடக்கு கிழக்கில் இராணுவ முகாம் அவசியமற்றதாகிவிடும். நாடுகடந்த தமிழீழம் என்ற புல்லுருவிக் கூட்டமும் உருவாகாது. பேரினவாதம் இனப்பிரச்சனையை தீர்க்க மறுப்பதுதான், இவ்விரண்டும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாக தொடருகின்றது. இவ் இரண்டுமே மக்களுக்கு எதிரானது. 

தன் தலைவரையே காட்டிக் கொடுத்த எட்டப்பர் கூட்டம் இது. சர்வதேச தலையீட்டைக் காட்டி, அவரையே சரணடைய வைத்த கூட்டம். இறுதியில் அவரைப் போட்டுத்தள்ளிய கூட்டம். இன்று வரை இதற்கு எந்த சுயவிளக்கமும் கூட கிடையாது. ஆனால் தலைவர் உயிருடன் இருப்பதாக கூறி, ஓட்டுமொத்த சமூகத்தையும் முட்டாளாக்குகின்ற மாபியாக் கூட்டம்.

இந்து மதத்தை வைத்துக்கொண்டு, சாதியத்தை மட்டும் ஒழித்துவிட முடியும் என்று சிலர் கருதுவது போல், சுரண்டல் அமைப்பை வைத்துக்கொண்டு பார்ப்பனியத்தை (இந்துவத்தை)  ஒழித்துவிட முடியும் என்று பலர் கருதுகின்றனர். இதனால் சமூகம் பார்ப்பனிய மயமாக்கலுக்குள் தொடர்ந்தும் வாழ்கின்றது.

2006ம் புலிகள் யுத்தத்தைத் மணலாறில் வலிந்து தொடங்கி அதில் தோற்ற போது, இது தான் அவர்களின் கடைசி யுத்தம் என்று சொன்னவர்கள் நாங்கள். தொடர்ச்சியாக இதை சொன்னதுடன், அதை விளக்கியும் வந்தோம். இதை எப்படி எம்மால் இவ்வளவு தெளிவாக துல்லியமாக சொல்ல முடிந்தது! ஏன் உங்களால் அதை பார்க்கவும், இதை ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் போனது! இந்த கேள்விகளுக்கு இவை பதிலளிக்கும்.

யூகோஸ்லாவியாவில் உள்நாட்டு பொருளாதார உற்பத்தியில், முதலாளித்துவ மீட்சி பொருளாதார ரீதியாக எப்படி நிறைவேற்றப்பட்டது எனப் பார்ப்போம். 1951 இல் யூகோஸ்லாவியா கம்யூனிஸ்ட் கட்சியின் பெயரை, வெறும் கம்யூனிச கழகமாக மாற்றி அனைத்து மக்கள் கட்சியாக இது சிதைக்கப்பட்டது. அதற்கு முன்பே கட்சியின் அரைவாசி உறுப்பினர்களை கட்சியில் இருந்து வெளியேற்றியதுடன், சிறையிலும் தள்ளியது. பாட்டாளி வர்க்கத்தின் வர்க்க கட்சி என்பது மறுக்கப்பட்டது.

தமிழினத்தின் பொது வெட்முகம் இது. இலங்கை மக்கள் தொகையில், குறைந்தபட்சம் 5 லட்சம் ஆண்கள் காணமல் போய்யுள்ளார்கள். கிழக்கிலோ 49 ஆயிரம் விதவைகள். இதில் அரைவாசி பேர் 25 வயதுக்கு உட்பட்டவர்கள். இதில் 12 ஆயிரம் பேர் 3 குழந்தைகளின் தாய்.

முதலாளிகளால் வாழ்வை இழந்த கிரேக்க மக்கள், வீதியில் இறங்கிப் போராடுகின்றனர். எங்கள் உழைப்பு எங்கே? அது யாரால்? எப்படி? திருடப்பட்டது என்ற கேள்விகளுடன், கிரேக்க மக்கள் போராடத் தொடங்கியுள்ளனர். திருட்டுச் சொத்தை பறிமுதல் செய்யக் கோருகின்றனர். தங்கள் சொத்தைத் திருடியவர்களையும், திருட உதவியர்களையும் சட்டத்தின் மூலம் தண்டிக்கக் கோருகின்றனர்.

ஒருவரும் அப்படி செய்யவில்லை என்பதே, அரசும் அதன் கூலிக்குழுக்களும் சொல்லும் செய்தி. அவை பிடிபடுகின்ற போது, அவர்கள் தங்கள் உறுப்பினரல்ல என்று, அரச கூலிக் குழுத் தலைவர்களின் அன்றாட செய்தி அறிக்கையாகி விடுகின்றது. தம் மீதான எதிரணியின் அவதூறு என்கின்றனர். புலிகள் இருந்தவரை, புலியின் இது போன்ற நடத்தைகளின் பின் தங்கள் இந்தச் செயல்களை பதுக்கி வைத்துக் கொண்டனர்.

எமது மண் கறைபடிந்த ஒரு வரலாறூடாகவே, நாம் புதையுண்ட படி நகர்ந்து கொண்டு இருக்கின்றது. நாளாந்த படுகொலைகள் எமது விடியலை அதிரவைத்திக்கின்றது. அரசியல் அதிகாரம், அரசியல் படுகொலைகளால் தான் தன்னைத்தான் அலங்கரித்தது.

 

இலங்கை தொழிலாளர் வர்க்கத்தின் பணி, தொழிலாளர்களின் வர்க்கக் கட்சியைக் கட்ட போராடுதல் தான். இதுவே இன்றைய உடனடியான அரசியல் பணி. இதுவின்றி இலங்கை தொழிலாளர் வர்க்கம் என்றும் விடுதலை பெற முடியாது. இலங்கையில் ஓடுக்கப்பட்ட மக்கள், தங்கள் தொழிலாளர் வர்க்கத் தலைமை பெறாமல், தங்கள் ஒடுக்குமுறைக்கு எதிராக போராட முடியாது. ஏன் பேரினவாதத்தைக் கூட, அது எதிர்கொள்ள முடியாது. ஒடுக்கப்பட்ட தமிழ் தேசியம் கூட, தன் விடுதலையைப் பெறமுடியாது.

 

பொறுக்கிகளையும், புறம்போக்குகளையும், முடிச்சுமாறிகளையும் அடிப்படையாகக் கொண்டது, இந்தக் கூட்டம். தமிழ்மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிப்பதையே, தொடர்ந்து தன் இலட்சியமாக கொண்டது. இதற்கு தமிழீழம் என்ற கோசம் உதவும் என்பதால் தான், இந்த மாபியாக்கள் "நாடுகடந்த தமிழீழம்" என்கின்றனர். இ;ந்த மாபியாக்கள் தங்கள் மோசடிக்கு, மக்கள் தாங்களாகவே உடன்படுகின்றனர் என்று காட்ட, மக்களை மந்தைகளாக மேய்த்து வந்து வோட்டுப்போட வைக்கின்றனர்.

இவர்கள் வேறு யாருமல்ல. புலித்தலைமையை சரணடைய வைத்துக் கொன்றவர்கள். சரணடைவதற்கு ஏற்ப யுத்தத்தை வழிகாட்டி நடத்தியவர்கள். வேறு யுத்தமுனைகளை  உருவாக்குவதை தடுத்து, தங்கள் தலைமை தப்பி செல்வதைத் தடுத்து, இறுதியில் அவர்களை சரணடைய வைத்துக் கொன்றவர்கள். தலைமையின் சொந்த முட்டாள்தனத்தை, இவர்கள் பயன்படுத்திய விதமோ மிக நுட்பமானது.

 

கூலி கேட்டதற்காக நான் அடிக்கவில்லை. கசெற்றை பெறத்தான், தொலைபேசி எண்ணைப் பெறத்தான் அடித்தேன். இங்கு எந்த கூலிப் பிரச்சனையும் கிடையாது. இப்படி சோபாசக்தி விளக்கம் கொடுக்கின்றார். சரி, நீ சொல்வது தான் உண்மை என்று எடுத்து, இது தான் உண்மையா நியாயமா என்று பார்ப்போம். 

 

இந்தப் பெண்ணியம் எந்த வர்க்கம் சார்ந்தது? எந்த அரசியல் உள்ளடக்கத்தில்  ஆணாதிக்கத்தை மறுத்துப் போராட, மக்களை அது வழிகாட்டுகின்றது. இதற்கு பதில் அளிக்க, யாரும் முன்வருவதில்லை. ஏன் இப்படி பார்ப்பதும் கூட இன்று மறுக்கப்படுகின்றது. லும்பன்தனமான அடையாள அரசியல் மூலம் தான், அனைத்தையும் அளக்க முனைகின்றனர்.

இந்த ரேஞ்சிலே இன்று கட்டுடைப்பு அரசியல் செய்கின்றனர். பெண்ணியம், தலித்தியம், தமிழ்தேசியம்… என்று, பலர் தங்கள் அடையாளத்தை முன்னிறுத்தி அடையாள அரசியல் செய்கின்றனர். சிலர் பன்முக வாசிப்பு மூலம் இதற்கு விளக்கம் கொடுக்கின்றனர். இதன் மூலம் ஓட்டு மொத்த பிரச்சனையையும் உள்ளடக்கிய, வர்க்க அரசியலை மறுக்கின்றனர்.  இதற்கு பதில் அடையாள அரசியலை முன்வைக்கின்றனர். சோபாசக்தி தான் கம்ய+னிஸ்ட் என்று சொல்லும் அளவுக்கு இது புளுத்து கிடக்கின்றது.

எது காவாலித்தனம்? லீனாவின் பேச்சாளராக திடீரென மாறிவிட்டார் சோபாசக்தி. புலிகளின் பேச்சாளர் தமிழ்ச்செல்வன் மாதிரி உளறுகின்றார். உன்னை மிஞ்சிய காவாலித்தனமா, ம.க.இ.க.வின் அணுகுமுறை. அன்று பாரிசில் நீ ஒட்டிய துண்டுப்பிரசுரத்தை தன் கடையில் இருந்து அகற்றியதுடன், அருகில் இருந்தவற்றையும் அகற்றிய போது, நீ செய்த காவாலித்தனத்தைப் போல் ம.க.இ.க. செய்யவில்லை. அன்று துண்டுப்பிரசுரத்தை ஓட்ட இருந்த உன் உரிமையைப் போல், அதைக் கிழிக்கும் உரிமை அவர்களுக்கு இருந்தது. உன் ஜனநாயகம் போல். இந்தளவுக்கும் அவர்கள், உனக்கு நன்கு தெரிந்தவர்கள். அது நடந்த சில நாட்களின் பின், நீ என்ன செய்தாய்? ஏன் கிழித்தாய் என்று, நியாயம் கேட்கச் சென்றாய், அவர்கள் தங்கள் பக்க நியாயத்தைச் சொன்னார்கள். சில மணிநேரம் கழித்து, அந்தக் கடையின் கண்ணாடியை அடித்து உடைத்தாயே, இதுதான் காவாலித்தனம்;. அதன் பின் அதை தவறு என்று, இன்றுவரை சொன்னது கிடையாது. அந்த கண்ணாடிக்கான பணத்தையோ, அதை மாற்றிய கூலியையே நீ கொடுத்;தது கிடையாது. அவர்கள் நண்பனாக பழகிய நீ, இப்படி செய்துவிட்டாயே என்று சொல்லி பொலிசுக்கும் கூட செல்லவில்லை.

சோபாசக்தி லீனா கூட்டத்தின் தொழிலாளர் விரோதம் எப்படி வன்முறையாக, அதை  எப்படி நியாயப்படுத்தினர் என்பதை பார்க்க இருந்தேன். இருந்த போதும் தியாகு என்பர் அவர்களின் ஏகப் பிரதிநிதியாக மாறி, தர்க்கிக்கும் தர்க்கத்தையும் அதன் அரசியலையும் முதலில் பார்க்க வேண்டியுள்ளது. இவர்கள் அரங்கேற்றிய தொழிலாளர் விரோத வன்முறையையும், அதை எப்படி இன்றுவரை நியாயப்படுத்தி நின்கின்றனர் என்பதையும் பின்னால் பார்ப்போம்.

தொழிலாளர் விரோத உணர்வுகள் தான் சோபாசக்தி, லீனா, அ.மார்க்ஸ் முதல் போலிக் கம்யூனிஸ்ட்டுகள் வரை ஒன்றிணைகின்றது. தொழிலாளர் விரோத உணர்வுள்ள பலரும், இங்கு கூடி கும்மியடிக்கின்றனர். கூலி கேட்டவனுக்கு கூலியை கொடுக்க மறுத்து அவர்கள் மேல் லீனா-சோபாசக்தி கும்பல் நடத்திய வன்முறையும், அந்தத் தொழிலாளர்களுக்காக போராடிய மார்க்சிய தலைவர்களையும் தன்சொந்த பாலியல் அனுபவத்தில் புணர்ந்து எள்ளி நகையாடியதுடன், தொழிலாளர் வர்க்கத்தின் தத்துவமான மார்க்சியத்தை கேவலப்படுத்தியது இந்த கூட்டம்.   தொழிலாளி வர்க்கத்தின் எதிர்ப்பு தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்தது. இந்த வகையில்தான் வினவு (www.vinavu.com) தோழர்களின் எதிர்ப்பு எழுந்தது.

கடந்த 30 வருடத்தில் எம்மைச் சுற்றி நடந்தவைகளை தெரிந்து கொள்ளாத எவனும், எதிர்காலத்தை மக்களுக்காக வழிநடத்த முடியாது. இல்லையென்று சொல்பவன், மக்களை ஏய்க்கும் மாபெரும் மோசடிக்காரன். கடந்ததை விமர்சனம் சுயவிமர்சனம் செய்யாதவன், தொடர்ந்தும் மக்களை ஏய்க்கின்றான். இங்கு இதுவே, இதிலுள்ள மாபெரும் அரசியல் உண்மையாகும்.

இலங்கையில் இனவாதம் என்பது காலனித்துவ வரலாற்றுடன், வரலாற்றுத் தொடாச்சியுடையது. பிரிட்டிஸ் காலனித்துவவாதிகள் இலங்கையை தமது ஆக்கிரமிப்பின் ஊடாக அடிமைப்படுத்தியிருந்தனர். செல்வத்தையும் உழைப்பையும் சூறையாடிய வரலாற்று வளர்ச்சியிலேயே, இந்த இனவாத நாற்று பிரித்தாளும் தந்திரம் மூலம் ஊன்றப்பட்டது. தேசிய வளங்களைச் சார்ந்து வாழ்ந்த மக்களின் வாழ்வை பறித்தவர்கள், மக்களின் கோபத்துக்கு முகம் கொடுக்க நேர்ந்தது. கோபம் போராட்டமாக வளர்ச்சி பெற்றபோது, அதற்கு தலைமை தாங்கிய பிரிவுகள் பிரிட்டிஸ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து மக்களுடன் நின்று போராடுவதற்கு தயாராகவிருக்கவில்லை. அவர்கள் போராட்டத்தை நடத்துவதாக காட்டியபடி, பிரிட்டிஸ் அரசுடன் கூடிக்குலாவியபடி நக்கித் திரிந்தனர்.

குற்றச்சாட்டு 18.4

 

"இலக்கியச் சந்திப்பில் கலந்து கொண்ட பெண்களைப் பாலியல் பாவனைக்கு உட்படுத்தினார்கள் என எழுதுகிறார்."

 

இப்படி கொச்சையான உள்ளடகத்தில் நான் குறிப்பிடவில்லை. இங்கு இதையும் கூட அசோக் தான், இப்படி கொச்சைப்படுத்திக் காட்டுகின்றார். இங்கு இதன் மூலம் உண்மையில் யாரைப் பாதுக்காக்கின்றார் என்றால், ஆணாதிக்க நடத்தையில் ஈடுபட்ட ஆண்களைத்தான் பாதுகாக்கின்றார். அங்கு எதுவும் நடக்கவில்லை என்று கூறுவதே, இங்கு இவர்களின் ஆணாதிக்க அரசியல் உள்ளடக்கமாகும்.

கொடுமையிலும் கொடுமை. போராடச் சென்றவர்களுக்கு நடந்த கதைகள் இவை. மானிடத்தை நேசித்தவர்களுக்கு சிறையும் சித்திரவதையும் மரணமும் பரிசாகக் கிடைத்தது. இதை மூடிமறைத்து விட்டதே எம்மை சுற்றிய கடந்த "முற்போக்கு" வரலாறு. மரணித்தவர்களின் நிழல்கள் கூட மானிடம் தெரிந்து கொள்ள முடியாத வண்ணம் அதை அமுக்கிவிட்டு, மீள புரட்சி மார்க்சியம் பேசும் முன்னாள் புளாட் தலைவர்கள். யாரோ ஒருவன் இந்த கொலைகாரக் கும்பலின் வக்கிரத்ததை, சமூக நோக்குடன் எழுதி வெளியிட்ட ஆவணம் தான் இது.

குற்றச்சாட்டு 18.3 தொடர்ச்சி

 

3. புலியிடம் அந்த அமைப்பால் காட்டிக்கொடுக்கப்பட்டு தீப்பொறியால் அரசியல் அனாதையாக்கப்பட்டு மரணித்த தீப்பொறி கேசவன், இந்த விடையத்தை புதியதோர் உலகம் நாவலில் எப்படி அம்பலப்படுத்துகின்றார் என்று பார்ப்போம்.

 

"நான் இந்த நெருக்கடிக் கட்டத்தில் என் (உமாமகேஸ்வரன்) திருமணத்தைப் பற்றியே யோசிக்கவில்லை. ஆனால் கலாதரன் (சந்ததியார்) வேண்டுமென்று தமிழீழத்தில் இருந்த என் காதலியை இங்கு வரவழைத்து எனக்குக் கட்டிவைத்தார். என் புகழை குறைக்க வேண்டும் என்று இப்படி திட்டமிட்டுச் செய்திருக்கிறார்"

 

குற்றச்சாட்டுகள் 18….

"புளொட் அமைப்பின் அரசியல் ஆளுமை கொண்டிருந்த பெண்களை கொச்சைப்படுத்தும் இராயாகரனின் கீழ்த்தரமான மனோ நிலையை அவதானிக்கும்போது அருவருப்பாக இருக்கிறது. எந்தவித ஆதாரமும் அற்று புளொட் அமைப்பைச் சேர்ந்த பெண்கள் பாலியல் ரீதியில் அணுகப்பட்டார்கள் என்ற இராயாகரனின் அயோக்கித்தனமான தன் ஆதிக்க பாலியல் வக்கிரக மன நிலை கொண்ட கேவல அரசியலை இராயாகரன் தொடர்ச்சியாக செய்துவருகிறார்."
 

பாசிசம் நாடு தழுவிய அளவில் எப்படி வீங்கிப் போய் உள்ளது என்பதையே, இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றது. தேர்தலுக்கு முன்னும், தேர்தல் அன்றும் ஆளும் கட்சியின் அட்டகாசம் நிரம்பிய தேர்தல் அத்துமீறல்கள் ஒருபுறம் எல்லையற்று வெளிப்பட்டது. மறுபுறம் அரச அதிகாரத்தையும், வன்முறையையும், காடைத்தனத்தையும் பயன்படுத்தி, தங்கள் தேர்தல் வெற்றியை தீர்மானகரமான ஒன்றாக்கியுள்ளனர்.

 குற்றச்சாட்டு 15

"சுமார் ஏழு வருடங்களுக்கு முன் என் நண்பர் பிரான்ஸ் நாட்டு குடியுரிமை பெற்றார். உங்களுக்கு வந்ததே கோபம். ஈழப் போராட்டம் பற்றி கதைக்கும் ஒருவர் எப்படி ஏகாதிபத்திய பிரான்ஸ் நாட்டு உரிமை பெறமுடியும்? இவனெல்லாம் ஏகாதிபத்திய கைக்கூலி. இவனுக்கெல்லாம் தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தைப் பற்றி பேச என்ன அருகதை உண்டு என்று நீங்கள் உங்களது வழமையான வசைமொழி வாந்தியை நண்பர் மீது எடுத்து நண்பரை நாறடித்துவிட்டீர்கள்.

சுற்றிச் சுற்றி கலாச்சாரம் என்ற பெயரால், மொழி என்ற பெயரால், நாம் பாதுகாக்க முனைவது எதை? உண்மையில் எமது மனிதத்தன்மையற்ற பண்பைத்தான். மனிதத் தன்மை என்பது என்ன? மனிதத் தன்மையற்ற அனைத்தையும் எதிர்ப்பது தான், மனிதத் தன்மை. மனிதாபிமானம் என்பது, மனிதத்தன்மையற்ற சமூகத்தின் இருப்பினால் உருவாகின்றது. இதை நாம் புரிந்து உள்வாங்குவது கிடையாது. மேலெழுந்தவாரியான, மனஉணர்வுகளாகவே, அவை எமக்குள் குறுகி, மிகக் குறுகிய உணர்வாக பிரதிபலிக்கின்றது.

ஜனநாயகத்தை மறுக்கத் தெரிந்த ஒவ்வொருவரும், அதை கண்டுகொள்ளாது அரசியல் பிழைப்பை நடத்தக் கூடிய ஒவ்வொருவரும், ஜனநாயக மறுப்பை முன்வைத்தே தேர்தலில் நிற்கின்றனர். இந்தவகையில் மகிந்த குடும்ப பாசிசம் முதல் புரட்சி பேசும் புதியஜனநாயகக்கட்சி வரை எந்த விதிவிலக்கும் கிடையாது. பாராளுமன்ற சாக்கடையில் இறங்கி நின்று, இதுதான் "ஜனநாயகம்" என்று மக்களை ஏமாற்றுகின்றனர். ஆனால் இங்கு மக்கள் யாரையும் சுதந்திரமாக தெரிவு செய்வதில்லை. தெரிவு செய்ய வைக்கப்படுகின்றனர்.

வடக்கு தமிழ் வர்த்தகர்களும், சர்வதேச மாபியா புலிகளும், யாழ் குடாவில் வர்த்தகம் செய்யும் சிங்கள வியாபாரிகளை பேரினவாதத்தின் அடையாளமாக காட்டுகின்ற வண்ணம் கருத்துகளை பரப்பிவருகின்றனர்.

தாமல்லாத அனைத்தையும், இல்லாதொழிப்பதே மகிந்த சிந்தனை. இது இன்று இலங்கை பௌத்த பேரினவாத பாசிசக் கட்டமைப்பின் அரசியல் அடித்தளமாகும். அது தன்னைத்தான் மூடிமறைத்துக் கொள்ள, குறுகிய சமூகப் பிளவுகளை முன்தள்ளுகின்றது. பௌத்தம் முதல் சிறுபான்மை இனங்களை முன்னிலைப்படுத்துகின்றது. இதைப் பிரதான பொருளாக்கி, இதற்குள்  கைதுகள் முதல் தடை செய்தல் வரையான ஒரு சட்டவரம்பைக் காட்டுகின்றது. மறுதளத்தில் சட்டத்துக்கு புறம்பாக கடத்தல், காணாமல் போகப்பண்ணுதல், இனம்தெரியாத படுகொலை, மிரட்டல், விலைக்கு வாங்குதல், அதிகாரத்தை பயன்படுத்தல் மூலம், நாட்டில் பொதுவான அச்சத்தையும் பீதியையும் விதைத்து எதிர்ப்பை அடிபணிய வைக்கின்றது. இதுதான் மகிந்த சிந்தனை. இந்த வகையில் தான் புலிகள், தங்கள் பாசிச அதிகாரத்தைக் கட்டமைத்தனர். இலங்கை மகிந்த அரசு, அதையே நடைமுறைப்படுத்தி வருகின்றது.

குற்றச்சாட்டு 12

"இராயாகரன் அவர்களுக்கு என் அன்பான வேண்டுகோள் அவர் முதலில் மக்ச்சியத்தின் அடிப்படையை கற்கவேண்டும். அதன் பின் ஈழப்போராட்டதின் வரலாற்றை தெரிந்துகொள்ளவேண்டும்."

யாழ் தெல்லிப்பழையில் வைத்து 28.4.1987 மாலை 6.30 மணியளவில் புலிகளால் நான் உரிமை கோரப்படாத ஒரு நிலையில் கடத்தப்பட்டேன். வெளி உலகின் முன்போ, நான் காணாமல் போனேன். இப்படி இனம் தெரியாத நபர்களால், இரகசியமாக, மம்மல் இருட்டில் வைத்து கடத்தப்பட்டேன். பின்புறம் கைகள் கட்டப்பட்டு, கண்கட்டப்பட்ட நிலையில், நிர்வாணமாக்கப்பட்டேன். இதன் பின் இருண்ட அழுக்கடைந்த புலி வதைமுகாமில் இருந்து, 16.7.1987  மாலை 6.30 மணியளவில் நான் தப்பிச் சென்றேன். இதன் பின்பாக 14 ஆண்டுகள் கடந்த ஒரு நிலையில் தான், 1.5.2001 இல் இதை எழுதத் தொடங்கினேன். இதை வரைவாகத் தொகுக்க பல்வேறு தொடர் எழுத்து வேலைகள் ஊடாக இரண்டு வருடம் சென்றது.

 

குற்றச்சாட்டு 9

 

"இராயாகரனைப் பொறுத்தவரை பிரான்சில் எவர் நடத்தும் எச் சந்திப்புக்களுக்கும் கலந்துரையாடல்களுக்கும் கூட்டங்களுக்கும் இராயாகரனை யாரும் அழைப்பதில்லை. இராயாகரனின் மொட்டைத்தனமான வதந்தி பரப்பும் சேறடிக்கும் தனிநபர் தாக்குதல்களே இதற்குக் காரணம்." என்கின்றார் அசோக்.

பதிலாக தமிழினவாதிகளுக்கு வாக்கு போடுவதா!? அப்படியல்லாத ஓருவருக்கு வாக்கு போடுவதா!? அப்படி இல்லையென்றால், என்னதான் செய்வது!?

 

ஒரளவுக்கு அரசியல் ரீதியாக முன்னேறிய பிரிவினரிடம், அதன் ஊசாட்ட பிரிவினரிடம் இருந்து இந்தக் கேள்வி எழுகின்றது.

அது தனக்கு முரணான அனைத்தையும் ஒடுக்கின்றது. தான் அல்லாத அனைத்தையும் அழிக்கின்றது. தன்னைத் தொழுவதைத் தவிர, மாற்று வழி எதையும் அது விட்டுவைக்கவில்லை. இங்கு ஜனநாயகம் என்பது, மகிந்தா குடும்பம் கட்மைத்துள்ள பாசிசத்ததை தொழுவது தான்.

குற்றச்சாட்டு 7

"காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் வேலை செய்த அறிமுகத்திற்கூடாக தோழர் விசுவானந்ததேவனை உங்களுக்கு தெரிந்திருந்தது. இதனால் என்.எல்.எப்.ரியில் உறுப்பினராகி இருந்தீர்கள். யாழ்ப்பாண கற்றன் நசனல் வங்கி என்.எல்.எப்.ரியினால் கொள்ளை இடப்பட்டபோது அதிலிருந்து பெறப்பட்ட நகைகள், பணம் என்பவற்றின் ஒரு பகுதியை மறைத்துவைப்பதற்கு தோழர் விசுவானந்ததேவன் உங்களை பயன்படுத்திக் கொண்டார். இது ஒன்றே ஈழப்போராட்ட வரலாற்றின் உங்களுடைய மாபெரும் பங்களிப்பு."

இது எங்கும் நிலவுகின்றது. எதிலும் பிரதிபலிக்கின்றது. மனித முரண்கள், இதற்குள் மிகத் தீவிரமான பங்காற்றுகின்றது. சமூக ரீதியாக இதை எதிர்கொள்ளும் மனித அறிவும் ஆற்றலும் அருகும் போது, இதன் பக்கவிளைவு மிகக் கடுமையானது. முரண்பாடுகள் அற்பத்தனமானதாக, மேலெழுந்தவாரியாக, சின்னச்சின்ன விடையங்களில் பிரதிபலிக்கின்றது. இதன் ஆழம் தெரியாத இந்த சமூக முரண்பாடு, மனிதனுக்குள்ளான பாரிய தனிமனித முரண்பாடாக மாறுகின்றது.

குற்றச்சாட்டு 4

 

"பிரான்சில் சோபாசக்தி, சுகன், ஞானம் போன்றவர்கள் பின்நவீனத்துவத்தை தோலில் சுமந்து திரிந்தகாலம் அது. அ.மார்க்ஸ் இன்றுபோல் அன்றும் இவர்களை ஞானத் தந்தையாக வழிநடத்திக் கொண்டிருந்தார். இவர்களின் அரசியலுக்கு எதிராக துண்டுப்பிரசுரம் ஒன்றை வெளியிட எண்ணி கலந்தாலோசித்து உங்கள் பெயரோடும் என் பெயரோடும் உங்களால் எழுதப்பட்டு வெளியிடப்பட்டது. வெளிவந்த பிற்பாடு அந்த துண்டுப்பிரசுரம் நாம் கலந்தாலோசித்த விடயங்களுக்கு மாறாக சோபாசக்தி சுகன் அ.மாக்ஸ் மீதான அரசியல் அற்ற வெறும் காழ்ப்புணர்ச்சி கொண்ட வசைவுகளாகவே இருந்தது. இதுவே எமது முரண்பாட்டின் தொடக்கப்புள்ளியாயிற்று. எனினும் உங்களின் உறவை பேணினேன்."

 

இப்படி அசோக் குற்றம் சாட்டுகின்றார். ஆச்சரியம்தான்.

யூகோஸ்லாவியாவின் முதலாளித்துவ மீட்சி சோசலிசமாகவும், முதலாளித்துவமல்லாத புரட்சியாகவும் காட்டப்பட்டது. இதனடிப்படையில் ஸ்ராலின் தூற்றப்பட்டார். ஸ்ராலினால் முன்னெடுக்கப்பட்டு உருவாக்கப்பட்ட  சோசலிச சமூக கட்டுமானங்கள் அனைத்தும் சிதைக்கப்பட்டு நொருக்கப்பட்டன. இந்த முதலாளித்துவ மீட்சியை சர்வதேசிய டிராட்ஸ்கிகள் ஆதரித்து நின்றனர். குருச்சேவ் பதவிக்கு வந்தவுடன் ஸ்ராலின் மறுக்கப்பட்ட நிலையில், சோவியத்யூனியனும், உலக கம்யூனிஸ்ச இயக்கமும்; படிப்படியாக யூகோஸ்லாவிய நிலைக்கு தம்மை மாற்றிக் கொண்டது.

இனியொரு அசோக் தனிப்பட்ட சில குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றார். அரசியல் ரீதியாக எனக்கு பதிலளிக்க முடியாத நிலையில், தனிப்புட்ட சில குற்றச்சாட்டுகளை வைப்பதைவிட அவர்களுக்கு வேறு வழியில்லை. இதுவே அவர்களின் அரசியலாகிப் போன நிலையில், இந்த தனிநபர் குற்றச்சாட்டுக்கு பதிலளிப்பது அவசியமாகி விடுகின்றது. இதை சொல்லித்தான், அவர்கள் இன்று எமக்கு எதிராக பிரச்சாரம் செய்கின்றனர்.

இன்று எதிர்ப்புரட்சி அரசியல் என்பது, படிப்படியாக மார்க்சியத்தை திரித்துக்காட்டுவதில் தொடங்குகின்றது. புரட்சிகர நடைமுறையின்றி, புரட்சிகர அமைப்பு இன்றி, அதற்கான அரசியல் வேலைத்திட்டம் இன்றி, சில தனிநபர்கள் முதல் புதிய ஜனநாயகக்கட்சி வரை இந்த தேர்தலில் பங்கு கொள்கின்றது அல்லது ஆதரிக்கின்றனர். இதை நியாயப்படுத்த  ஆளுக்காள் நியாயம் கற்பிக்கின்றனர். இந்த வகையில் மாவோவையும் இனியொரு தமக்கு ஆதரவாக களத்தில் இறக்கியுள்ளது.

இந்த புலி வதைக்கு முந்திய பிந்தைய காலகட்டத்தில், நேரடியாக நான் அறிந்த, என் மீதான படுகொலை முயற்சி பற்றிய விரிவான குறிப்புக்கு பதில், சிறு குறிப்புகளை இதில் தர முனைகின்றேன்.

அரசு மற்றும் ஜனநாயகம் பற்றிய அரிவரிப்பாடத்தை திரித்தல் மூலம் தான், பாராளுமன்றத்தை ஜனநாயகத்தின் ஒரு வடிவமாக காட்டுகின்றனர். மே 18 முதல் புதிய திசைகளின் அரசியல் வழிமுறைகள் இதற்குள் தான் உள்ளது. தேர்தல் பற்றிய இவர்களின் அரசியல் நிலை என்பது, வியக்கத்தக்க வகையில் இதுதான் ஜனநாயகம் என்று மோசடி செய்து காட்டுவதுதான்.

சினிமா சொல்லும் பாலியல் கவர்ச்சியும், ஆபாசமும், உடல்சார் வக்கிரத்தை முதன்மைப்படுத்தி தூண்டுகின்றது. இதன் மூலம், மனித உணர்வை அதற்குள்ளாக வக்கிரப்படுத்துகின்றனர். தனிமனித வன்முறை, வன்முறை மீதான சட்டம் என்ற எல்லைக்குள் கதை சொல்கின்ற ஒரு சினிமா, மக்களின் வாழ்வியல் சார்ந்த உணர்வை நலமடிக்கின்றது.

யூகோஸ்லாவியா முதலாளித்துவத்தை நோக்கி தன்னை வளப்படுத்திய போது, சர்வதேச கம்யூனிச இயக்கமே அதற்கு எதிராக போராடியது. குறிப்பாக ஸ்டாலின் இந்த முதலாளித்துவ பாதைக்கு எதிராக கடுமையான அரசியல் போராட்டத்தை நடத்தினார். ஆனால் டிராட்ஸ்கிகள் யூகோஸ்லாவியாவின் முதலாளித்துவ மீட்பை ஆதரித்ததுடன், அதையே மார்க்சியமாகவே பிரகடனம் செய்தனர். இதன் போது டிராட்ஸ்கிகள் ஸ்ராலின் அவதூற்றிலும், ஸ்ராலின் எதிர்ப்பிலும் தம்மைத் தாம் புடம் போட்டவராக இருந்தாலும், தமக்கிடையில் ஒத்த அரசியல் நிலைப்பாடுகள் இருந்ததால், உலகளவில் இந்த பிரச்சனை மீது மார்க்சியத்தை எதிர்த்து டிட்டோ மற்றும் குருச்சேவுடன் ஜக்கியப்பட்டு நின்றனர்.

"கோழைகள் தயாரிக்கின்ற சட்டங்களில் இரக்கமற்ற தன்மை ஒரு முக்கியமான கூறாக இருக்கின்றது, ஏனென்றால் இரக்கமில்லாமல் நடந்து கொள்வதன் மூலமாக மட்டுமே கோழைத்தனம் சுறுசுறுப்பாக இருக்க முடியும்." மக்களுக்கு பயந்து நடுங்கும் கோழைகளின் பாசிச சட்டங்களை, மார்க்ஸ் மிக அழகாகவே இங்கு எள்ளி நகையாடுகின்றார். மனித வரலாறுகளில் அஞ்சி நடுங்கக் கூடிய பாசிட்டுகள் அனைவரும் எந்த விதிவிலக்குமின்றி, தமது கோழைத்தனமான ஆட்சி

தனிமனித நுகர்ச்சி வெறிசார்ந்த கழிசடைத்தனம் எப்படியோ, அப்படித்தான் இன்றைய தொலைக்காட்சி நாடகங்கள். அது சமூக உறுப்பை ஒன்றுக்கு ஒன்று எதிரியாக்குகின்றது. தனிமனித குறுகிய நலனை முதன்மைப்படுத்தியதே சின்னத்திரை நாடகங்கள். இந்த அடிப்படையில் குடும்பத்தை சிதை என்பதே, அதன் சாரம். இந்த வகையில் குடும்பம் என்ற சமூக அலகை தகர்க்கின்ற அற்ப உணர்வையே, நாடகம் தன்னூடாக விதைக்கின்றது. குடும்;பத்தில் நிலவும் தியாகம், விட்டுக்கொடுப்பு, சேர்ந்து வாழ்தல் போன்ற சமூக உணர்வைத் தகர்த்து, தனிமனித நலன் சார்ந்த நுகர்வையே நாடகங்கள் சமூகத்தில் திணிக்கின்றது.

இதைக் கோராமல் எவரும் நேர்மையாக இருக்கவோ, செயற்படவோ முடியாது. இதை செய்யாத எவரும், தமிழ் மக்களுக்கு உண்மையாகவோ நேர்மையாகவோ இருக்க முடியாது. இது தானே உண்மை. இது தானே அரசியல் நேர்மை. புலித் தலைமை அழிந்த பின், அதைப் பயன்படுத்தி புலிப் பணத்தை (மக்கள் பணத்தை) அபகரிப்பதை எந்த வகையில் நாம் அங்கீகரிக்க முடியும். எம்மைச் சுற்றி நடப்பதோ, திருட்டும், மோசடியும் தான்.

 

அடிமைகளின் வரலாறு தான், இந்தியாவின் வரலாறு. யாரும் இப்படி இதை அணுகியது கிடையாது. சாதியம் என்பது, நிலவும் அடிமைகளின் மொத்த வரலாறு தான். இந்த அடிமைத்தனம், சாதியப் படிநிலையில் கட்டமைக்கப்பட்டு உள்ளது.

பரஸ்பரம் மனித உறவுகள் சார்ந்தது இந்த விடையம். உணர்வுகளும், உணர்ச்சிகளும்; சார்ந்த விடையம். மதிப்பும் மரியாதையும் சார்ந்த சமூக விழுமியம் சார்ந்த விடையம். குடும்ப பொறுப்புணர்வு சார்ந்த ஒரு விடையம். குடும்பம் மற்றும் சமூக சார்ந்த கடமைகளை, வாழ்வியல் ஒழுங்குகளையும் அடிப்படையாக கொண்ட ஒரு விடையம்.

புலிகள் என்னை உரிமை கோராது 28.04.1987 அன்று படுகொலை செய்யவென கடத்திச் சென்றனர். என்னை அழித்து விட, இரகசியமாக நடுவீதி ஒன்றில் வைத்து கடத்தியவர்கள், என்னிடமுள்ள தகவல்களைப் பெற தொடர்ச்சியாக சித்திரவதைகளைச் செய்தனர். தங்கள் சொந்த இரகசிய வதைமுகாமில் வைத்து, தொடர்ச்சியாக சித்திரவதைகளை என் மீது ஏவினர். இதன் மூலம் அவர்கள் மக்களின் அடிப்படையான ஜனநாயக உரிமைகளையும், போராட்ட வெற்றிகள் அனைத்தையும் காட்டிக் கொடுக்கக் கோரினர். இதற்காக யார் யார் எல்லாம் போராடுகின்றனர் என்ற விபரத்தைக் கக்கக்கோரினர்.

இன்றைய பொதுப்புத்தி இப்படித்தான் கருதுகின்றது. மூலதனத்தின் மந்தைக் கூட்டமாக, மனிதன் இருக்கும் வரை, ரசனை மட்டகரமானதாக மாறிவிடுகின்றது. மனிதனை மூலதனத்தின் அடிமையாக இருக்க, மட்டகரமான ரசனை உற்பத்தி செய்யப்படுகின்றது.

ருசியா ஆய்வு மையம் 2003ம் ஆண்டு லெனின் பற்றிய ஆய்வு ஒன்றைச் செய்தது. அதன் போது, 65 சதவீதமான மக்கள் லெனினின் அடிப்படை நோக்கத்தை அங்கீகரித்ததுடன், அவை சரியானவை என்று ஏற்றுக் கொண்டதை 17.4.2003 பாரிஸ் லிபரேசன் பத்திரிகை தன் செய்தியாக வெளியிட்டு இருந்தது. 5.3.2003 லிபரேசன் பத்திரிகை ருசியாவில் 42 சதவீதமானோர் ஸ்ராலினை ஏற்று ஆதரிக்கின்றனர் என்ற செய்தியை வெளியிட்டது. மீதமுள்ளவர்களில் 36 சதவீதம் பேர் ஸ்ராலின் நன்மையே கூடுதலாக செய்தார் என்பதை அங்கீகரித்து ஆதரவாக இருப்பதை வெளியிட்டபடியே தான், அவரைத் தூற்றியது. அதே பத்திரிகை 1937-1938 இல் 40 ஆயிரம் பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக புதிய புள்ளிவிபரத்தையும் வெளியிட்டது.

தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுத் துயரம், முதலில் அவர்கள் தங்களை அறியாது இருத்தல் தான். சுய ஆற்றல் அற்றவராக இருத்தல் தான். சுய முனைப்புடன் எதையும், தெரிந்து கொள்ளாது இருத்தல் தான். தம்மை புரிந்து கொள்ள முடியாத இருட்டில் வாழ்தல் தான், அவர்களின் சமூக அறிவு அழிவாகிவிட்டது. அனைத்தையும் மற்றவன் சொல்ல நம்புவதும், கேட்பதும் தான் வாழ்வாகிவிட்டது. தனக்கு நடந்ததையும், தன்னைச் சுற்றி நடந்ததையும் கூட, சுயவிசாரணை செய்வது கிடையாது. இன்று அதை செய்ய எந்த வரலாற்று ஆவணமும் கிடையாது.

அரசு காட்டியது பிரபாகரனையல்ல. அது போலியான சிங்களப் பிரபாகரன். முகமூடி போட்ட பிரபாகரன். பிரபாகரனோ நலமாக உள்ளார் உயிருடன் உள்ளார் என்று கூறி கட்டமைக்கும் பொய்கள், புனைவுகள், பித்தலாட்டங்கள் மூலம், தமிழினத்தை காயடிக்கின்றனர். எம்மைச் சுற்றி மானசீகமான நம்பிக்கையாக, பிரமையாக இது மாறி, மனநோயாகிவிடுகின்றது.

வர்க்கப் போராட்டம் என்பது நிகழ்ச்சி நிரலாக இருக்க, அதுவல்லாத ஒன்றை முன்வைத்து பித்தலாட்டம் செய்கின்றனர். "சுயநிர்ணயம் - பேரினவாதஅரசு : புதிய ஜனநாயகக்கட்சி நிலைப்பாடு" என்ற அறிக்கை விடும் அளவுக்கு, தங்கள் அரசியல் மோசடிகளை நியாயப்படுத்துகின்றனர். வேடிக்கை என்னவென்றால் "சுயநிர்ணயம் - பேரினவாதஅரசு" பற்றி புலிக்கும் ஒரு தெளிவான நிலைப்பாடு இருந்தது என்பது தான். அவர்கள் அதை எப்படி தவறாக கையாண்டார்கள் என்பது எம்கண் முன் இருக்கின்றது. புதிய ஜனநாயகக்கட்சி இதை தேர்தல் வழிமுறைக்குள் வைத்து, மக்களுக்கு மொம்மலாட்டம் காட்டுகின்றனர்.

 

பொருளாதார சந்தையில் ஏற்படும் மாற்றத்தின் விளைவு, சினிமாவில் நிகழும் மாற்றங்களாகின்றது. நுகர்வு எப்படி மாறுகின்றதோ, அதையே சினிமா வக்கிரமாக்கி பிரதிபலிக்கின்றது. இந்த வகையில் பெண்ணைக் கூட இந்த நுகர்வு எல்லையில் வக்கிரமாக காட்டியே, அதை நுகரக் கோருகின்றது. பெண் பற்றிய பார்வையைக் கூட மிகத் தீவிரமாக மாற்றுகின்றது. பெண் இந்த உலகில் எதற்காக ஏன் எப்படி வாழ்தல் என்பதை, சினிமா மிக வேகமாக அடிக்கடி மாற்றிவிடுகின்றது. அதாவது உலகமயமாதல் நுகர்வுச் சந்தைக்கு ஏற்ப அதை மாற்றிவிடுகின்றது.

தூற்றுவதாலோ, திரிப்பதாலோ, திருத்துவதாலோ வர்க்கப் போராட்டங்கள் நின்று விடுவதில்லை

வரலாற்றின் உண்மைகளைக் கண்டுகொள்ள மறுப்பது, அதைத் திரிப்பதும், மார்க்;சியத்தை மறுப்பதில் போய் முடிகின்றது. மனிதகுலம் அடிமைப்படுத்தப்பட்டு, தன் விடுதலைக்கான குரல்களையே இழந்து நிற்கின்றது. இதைத்தான் இன்று ஜனநாயகம் என்கின்றனர். மனிதனை அடிமைப்படுத்துவதையும், அவர்கள் அடிமையாக இருத்தலும் தான், மனிதன் ஜனநாயக உரிமையாக காட்டப்படுகிறது.

பெண்ணின் ஊடாக பெண்ணின் சதையைக்காட்டி, மனித உழைப்பை திருடுவது தான் உலகமயமாதல் என்னும் சந்தைக் கலாச்சாரம். இங்கு பெண்ணின் உடுப்பு, அதற்கேற்ப வடிவமைக்கப்படுகின்றது. 

 

1987ம் ஆண்டு 28.04.1987 திகதி இரகசியமாக என்னைக் கடத்திச் சென்றனர். அந்தக் கதை. முதல் நடவடிக்கையாக முழுமையாக நிர்வாணமாக்கப்பட்டேன். 17.07.1987 நான் அங்கிருந்து தப்பும் வரையான அனுபவத்தை அடிப்படையாக கொண்டது. பின் தலைமறைவாக 21.08.1987 வாழ்ந்த காலத்தை உள்ளடக்கியது. நான் தப்பிய அடுத்த நாளே, நான் சொல்ல விமலேஸ்வரன் (இவன் பின் புலிகளால்  கொல்லப்பட்டான்) எழுதிய 269 குறிப்புகளைக் கொண்டு, 2001ம் ஆண்டு வரையாக தொகுக்கப்பட்டது.  பிரசுரிக்கின்ற இன்றைய நிலையில் முழுமையாக செழுமைப்படுத்தி வெளிவருகின்றது.  

மனிதன் தனக்குள் கொண்டுள்ள சமூக உறவுகளின் சிதைவுகள் தான், உலகமயமாதலின் ஊக்க மருந்துகளாகும். மறுபக்கத்திலோ சமூகமாக வாழத் துடிக்கின்ற இயற்கை சார்ந்த பரிணாமச் சூழல்.

ஆபாசமும்! கவர்ச்சியுமா! அதன் வக்கிரமுமா! மனித கலாச்சாரம்? இதுவல்ல என்று பலமாக நம்பும் நாம், இப்படித் தான், இதற்குள் தான், நாம் எம்மையறியாமல் இதை நியாயப்படுத்தியும் வாழ்கின்றோம். இந்த உண்மையை நாம் தெரிந்து கொள்வது அவசியம். எம்மிடம் எஞ்சியிருந்த மனித கலாச்சாரங்களை எல்லாம், நாம் இழந்து வருகின்றோம். சமூகத் தன்மை கொண்ட, மனித நலன் கொண்ட, இயற்கையாகவே எம்முடன் இருந்த மனித கலாச்சாரம் அனைத்தும், எம்மிடமிருந்து படிப்படியாகவே அகற்றப்படுகின்றது.

மார்ச் 8 பெண்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிரான சர்வதேச நாள். 100 ஆண்டுகளுக்கு முன் சர்வதேச கம்யூனிச இயக்கமும், அந்த இயக்கத்தில் இருந்த பெண்களும், இந்த நாளை பெண்கள் மேலான ஒடுக்குமுறைக்கு எதிரான சர்வதேச தினமாக பிரகடனம் செய்தனர்.

 

தோழர்களே! நண்பர்களே! வாசகர்களே! எதிரிகளே!

 

உங்களுக்கு நான் என்னை அறிமுகப்படுத்துவது தொடர்ந்து போராடுவதற்காகத்தான். எனது சுயஅறிமுகம் என்பது, என்னைச் சுற்றி நிகழ்ந்த அரசியல் வாழ்வுதான். அதுவும் பல தோழர்கள் உள்ளடங்கிய ஒரு கூட்டு வாழ்வுமுறைதான்.

15.03.2010 முதல் 21.03.2010 வரை எமது நட்சத்திர வாரம். இது எமது கிடைத்த மற்றொரு புதிய வாய்ப்பு. இதற்காக தமிழ்மணத்துக்கு நன்றி தெரிவிப்பதுடன், அவர்களின் நோக்கத்துக்கு ஏற்ப இதைச் சிறப்பாக நாம் பயன்படுத்த முனைகின்றோம்.  

 

இதற்கு அமைய, பாலியல் அம்சத்தில் சமூக சீராழிவிலான தனிமனித ஒழுக்கக்கேடு கிடையாது என்ற கோணத்தில், சிறிரங்கன் மார்க்சையும் காதலையும் காட்டுகின்றார். பாலியல் என்பது சமூகம் சார்ந்தல்ல, தனிமனிதனின் பாலியல் சார்ந்து சுதந்திரமானது, தூய்மையானது, அன்பாலானது என்ற காட்டமுனையும் போக்கு அபத்தமானது. சமூகத்ததை கடந்து, அராஜாகவாத கோட்பாட்டை இது முன்தள்ளுகின்றது.

ஜனநாயகப் புரட்சி தான், பாராளுமன்றத்துக்கு ஜனநாயகத்தை வழங்குகின்றது. ஜனநாயகப் புரட்சி நடைபெறாத நாட்டில், பாராளுமன்றத்தை ஜனநாயக வழியாக காட்டுவது ஜனநாயகம் பற்றிய திரிபாகும்;. ஜனநாயகத்தை மீட்க மகிந்தாவை ஆதரித்த புலியெதிர்ப்பு போன்றது. ஏகாதிபத்தியத்தை எதிர்க்க மகிந்தாவை ஆதரிக்கும் புலியெதிர்ப்பு "மார்க்சியம்" போன்றது.

புனிதம், பக்தி, ஆன்மீகம், அறம், உண்மை என்று தங்களைப் பற்றி ஒரு பிரமைகளை ஏற்படுத்திக் கொண்ட, ஒட்டுண்ணிகளாக வாழமுடிகின்ற சமூகம் இது. இங்கு ஓட்டுண்ணிகள் மனித அறம் பற்றிய போதனைகள் செய்ய முடிகின்றனர். இதன் மூலம் மக்களிடம் பணத்தை பெற்று, கொழுக்கின்றது. சமூகத்தின் முன் நடித்துக்கொண்டும், மக்களை ஏமாற்றிகொண்டும், அவர்களின் உழைப்பில் வாழ்ந்து கொண்டும், மக்களுக்கே அறிவுரை கூறும் ஒரு கூட்டமாகவும் மாறிவிடுகின்றது.

பாராளுமன்றத்தை நோக்கி செல்லும் ஒவ்வொரு புதுக்கட்சியும், இதுவரை பாராளுமன்றம் செல்ல முடியாதவனும், கூறுவது என்ன? தங்கள் தங்கள் இறுதி இலட்சியத்தை அடையத்தான், பாராளுமன்ற வழியை பயன்படுத்துகின்றோம் என்கின்றனர். நாங்கள் நேர்மையானவர்கள், சமூக அக்கறை உள்ளவர்கள், படித்தவர்கள் என்று இவர்கள் அனைவருமே கூறுகின்றனர்.

நாவலன் பாணியில் தான் ரகுமான் ஜான் கூறுகின்றார், தன் இலட்சியம் பாராளுமன்றமல்ல என்கின்றார். பாரிஸ் தலித் முன்னணி மகிந்தாவின் ஆலோசனையுடன், யாழப்;பாண தேர்தல் களத்தில சுயேட்சையாக களமிறக்கிய "சிறுபான்மைத் தமிழர் மகாசபை"யும், தங்கள் இலட்சியம் பாராளுமன்றமல்ல என்று தான் கூறுகின்றது. எல்லோரும் தங்கள் இறுதி இலட்சியம் பற்றி ஏதோதோ உளறுகின்றனர், கூறுகின்றனர். ஏன் மகிந்தா கூட! சரத் பொன்சேகா கூட! நாவலன் கூடத்தான்! ரகுமான் ஜான் கூடத்தான்! தங்கள் இறுதி இலட்சியத்துக்கு பாராளுமன்றம் உதவும் என்பதுதான், இவர்கள் அனைவரும் சொல்லும் மந்திரம்.

மீளவும் இவர்கள் திடீர் அரசியலுக்கு வந்தவர்கள், மூடிமறைத்த சந்தர்ப்பவாதிகளாகிவிட்டனர். இவர்கள் இன்று மார்க்சியம் கலந்து பேசுவது, மூடிமறைத்த தங்கள் சந்தர்ப்பவாத அரசியலை மேலும் மூடிமறைப்பதற்கே. இவர்கள் தேர்தலில் பங்குபற்றவும், வாக்களிக்கவும் கோருகின்றனர். சரி யாரை?

இனியொரு இணையத்தின் அரசியல் யோக்கியதை என்பது, தங்கள் கடந்தகாலத்தை முற்றாக மூடிமறைத்தல்தான். திடீர் திடீரென மக்கள் நலனை உயர்த்திக் காட்டி நடிப்பதே, இவர்கள் அரசியல் கலை. கடந்து போன தாங்கள் நடத்திய போராட்டத்தின் தோல்விகள் முதல் அங்கே நடந்த மனிதப் படுகொலை வரை பேசாத ஒரு புள்ளியில், முற்போக்கை உருவாக்குவது பற்றி வம்பளக்கின்றனர்.

 

தமிழ் தேசியம், இன்று தேர்தல் சாக்கடையில் நாறுகின்றது. நாதியற்றப் போன மக்கள், கதியற்று நிற்கின்றனர். எந்த சமூக உணர்வுமின்றி, ஏனோ தானோ என்று மக்கள் நடைப்பிணமாக வாழ்கின்றனர். இதுவே வடக்கின் வசந்தமாகவும், கிழக்கில் உதயமாகவும், மொத்தத்தில் இனத்தின் அவலமாகிக் கிடக்கின்றது. இதைக் கண்டுகொள்ளாத சமூக போக்கில், பிழைப்புவாதிகள் ஏய்த்துப் பிழைக்கின்றனர்.    

இவர்கள் ஒரு மாதத்துக்கு முன்னம் தேர்தல் பகிஸ்கரிப்பை கோரியவர்கள். எப்படி வாக்குச் சீட்டை செல்லுபடியற்றதாக்குவது என்று உபதேசித்தவர்கள். இன்று வாக்குக் கேட்டு வருகின்றனர். வாக்கை தமக்கு போடுமாறு உபதேசிக்கின்றனர். இப்படி ஒரு மாதத்தில் மாறுபட்ட கொள்கைகள் கோட்பாடுகள்.

புலிக்கு பின் பல "முற்போக்கு" முகமூடி அரசியல் எல்லாம், வேஷம் கலைந்து பம்முகின்றது.   மகிந்தா முன்தள்ளும் பாசிசத்துக்கு ஏற்ப, அரசியல் விவாதங்கள், விளக்கங்கள். தேனீ முதல் தேசம்நெற் வரை இதற்கு விதிவிலக்கே கிடையாது.

 

இரண்டு கண்ணீரும் பாசிசத்துக்கு எதிராக விட்ட கண்ணீர். ஒன்று ஒடுக்கப்பட்ட இன மக்கள் விட்ட கண்ணீர். மற்றது ஆளும் வர்க்கத்தில் இருந்த ஒருவரின் மனைவி விட்ட கண்ணீர். இரண்டும் போலியானதல்;ல. பாசிசத்தை எதிர்கொண்டு விடும் கண்ணீர். இதை ஒன்றுக்கு எதிராக மற்றதை நிறுத்தி அணுகுவதல்ல மக்கள் அரசியல்.

மகிந்த குடும்பமும், சட்டவிரோதமான கொலைகார கும்பல் ஒன்றும் நடத்திய யுத்த குற்றங்களை, ஒரு விசாரணையில் வெளிப்படுத்த தயார் என்ற அறிவித்தார் சரத் பொன்சேகா. யாரையும் காப்பாற்ற முடியாது என்றார். மறுகணம் சரத் பொன்சேகாவை கைது செய்யுமளவுக்கு, மகிந்த குடும்பத்தின் போர்க் குற்றம் மிகப் பாரியது.

வரிச் சலுகை தடை என்பது, அரசியல் ரீதியானவை. அரசியல் பொருளாதார நலன் சார்ந்ததும், உள்நோக்கம் கொண்டதுமாகும். உலக மயமாக்கலுக்கு உட்பட்டவை. சர்வதேச நாடுகளின் முரண்பாடுகளுக்கு உட்பட்டவை.

மார்க்சியத்தை உருத்திராட்சைக் கொட்டையாக்கினால், பாசிச நடத்தைகளையும் அது சார்ந்த  வக்கிரங்களையும் தொழத் தொடங்கிவிடுகின்றனர். பாசிசத்தைக் கண்டும் காணாமல் கண்ணை மூடிக்கொண்டு, மார்க்சிய சொற்களைக் கொண்டு உளறத் தொடங்குகின்றது. புதிய ஜனநாயகக் கட்சி நடந்து முடிந்த தேர்தல் பற்றி வெளியிட்ட அறிக்கையோ கேவலமானதும், கேலிக்குரியதுமாகும்.

தான் அல்லாத எதிர்தரப்பையும், தனக்கு எதிரான ஊடகத்தையும் ஓடுக்குவதே, இந்த அரசின் முதன்மையான இன்றைய அரசியலாக உள்ளது. பாரிய குற்றங்களை செய்வதன் மூலமே, தன் அதிகாரத்தை தக்கவைத்துள்ளது. பாரிய போர்க்குற்றத்தை செய்தும், பல ஆயிரம் மக்களைக் கொன்றும், பல பத்தாயிரம் கோடி பணத்தை சுருட்டியபடியும், பாசிச  ஆட்டம் போடுகின்றது.

எது செயல்? எது கருத்து? சமகாலத்தில் நிலைமைகள் மேல் கருத்தும், அதன் மேலான செயலும் தான், மக்களை வழிகாட்டும் அரசியல் நடைமுறை. இவை எதுவுமின்றி, காலம்கடந்த பின், மற்றவர் கருத்தை திருடியும், அவர்களை மறுத்தும், உருக்கொண்டு திடீர் பிரசங்கங்கள் மூலம் தம்மை நிலைநிறுத்துவதல்ல செயல். அரசியலில் அற்புதங்கள் நடப்பதில்லை.

முறைகேடாகவே ஒரு தேர்தலை நடத்தி, தாமே அதில் வென்றவர்களாக இந்த அரசு தம்மைத்தாம் அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையாளரின் "மனச்சாட்சிக்கு விரோதமாக" மோசடியை தமது வெற்றியாக தமது பாசிசம் மூலம் அறிவிக்க வைத்துள்ளது.

தேர்தலில் மகிந்தா வென்று விட்டார் என்பதும், தேர்தல் அமைதியாக நடந்து முடிந்ததாக கூறுவதும், தேர்தல் என்றால் பலதும் பத்தும் இருக்கும் தான் என்று கூறி அதை நியாயப்படுத்துவதுமான போக்கு இன்று அதிகரிக்கின்றது. வென்றவர்களை ஆதரித்தும், அதைச் சார்ந்தும் நிற்கின்ற போக்கு, மக்களுக்கு எதிரான பாசிச மயமாக்கலை ஆதரிக்கின்ற ஒரு புதிய போக்கு தமிழ் சமூகத்தில் உருவாகி வருகின்றது.

புலம்பெயர் நாட்டில் புலி – புலியெதிர்ப்பு அரசியலாக, அது சரத் - மகிந்தாவுக்கு பின் செல்லும் அரசியலாக, ஆய்வாக, சிந்தனையாக மாறுகின்றது. மகிந்தா வெற்றி பெற்ற நிலையில், அதுவே சரணடைவு அரசியலாக மாறுகின்றது. இதற்கு வெளியில் சிந்திக்க செயலாற்ற, எந்த மாற்று சிந்தனையும், அரசியலும் கிடையாது. மாறாக மக்களின் எதார்த்தத்தை நிராகரிக்கின்றதும், தங்கள் குறுக்கிய குதர்க்க விளக்கங்களுடன் அரசியல் பச்சோந்தித்தனத்தையே விதைக்கின்றது.

இலங்கை மக்கள் அனுபவிக்கும் சுபிட்சமான வாழ்வா!? இல்லை. வேறு தெரிவு எதுவும் இல்லை என்பதாலா!? இல்லை. அப்படியாயின் எது? இலங்கையில் நிலவும் உச்சக்கட்ட சிங்கள இனவாதம்தான், மீண்டும் மகிந்தாவை வெல்ல வைத்துள்ளது. சிறுபான்மை இனங்கள் வாழும் பிரதேசங்கள் எங்கும் சிங்கள இனவாதம் தோற்கடிக்கப்பட, சிறுபான்மை இனங்கள் அதிகமாக வாழும் சிங்களப் பகுதிகளில் விளிம்பில் வெற்றி பெற்று, முழு சிங்களப் பகுதிகளில் பெரும்பான்மை பெற்று ஜனாதிபதியாகியுள்ளார் மகிந்தா.

 

புரட்சி என்பது "ஆயுதப் போராட்டமல்ல". ஆயுதப் போராட்டம் என்பது போராட்ட வடிவங்களில் ஒன்று. மக்கள் தம்மைத்தாம் புரட்சிகர கருத்துகள் மூலம் திரட்டிக் கொள்வதுதான், புரட்சியின் உள்ளடக்கம்.

புதிய ஜனநாயகக் கட்சியின் மதியுரைஞரும் தத்துவ வழிகாட்டியுமான சிவசேகரம், ஒரு பச்சோந்திக் கவிதை மூலம் பாராளுமன்ற பன்றித் தொழுவத்துக்கு உங்களை வழிகாட்டுகின்றார். தேர்தலை நிராகரி!, புரட்சி செய்! என்று கோசத்தின் கீழ், இவர்கள் மக்களை வழிகாட்டுவது கிடையாது. அதற்காக இவர்கள் கவிதை எழுதுவதும் கிடையாது. "சீட்டைச் செல்லுபடியற்றதாக்கு" எப்படி என்ற கவலையுடன், அதை வழிகாட்டி கவிதை எழுதுகின்றார். 

இன்னும் இரண்டு வருடங்கள் மகிந்தா குடும்பம் கொள்ளையிடவும், ஒட்டுமொத்த இலங்கை மக்களை ஒடுக்கவும், தமிழ் மக்களை இனவழிப்பு செய்யவும், சட்டப்படியான ஒரு கால அவகாசம் இருந்தது. இருந்தும் இன்று அவசரமாக தேர்தலை நடத்தக் காரணம் என்ன?

புலித் தலைவர் முள்ளிவாய்க்காலில் சரணடைந்ததன் மூலம், தன் கொள்கைக்கே துரோகம் செய்தார். அவரின் துப்பாக்கிக்கு கீழ் வாழ்ந்த புலித்தேசியம், பிரபாகரனின்  துரோகத்தைப் போல் போட்டிபோட்டு புளுக்கின்றது. மகிந்தா, சரத்பொன்சேகா முதல் ஏகாதிபத்தியம் வரை ஆளுக்காள் தங்கள் தலைவரின் புலித்தேசியம் இதுதான் என்ற விளக்கத்துடன், தங்கள் நக்குண்ணித்தனமான துரோகத்தை தேசியமாகக் கூறிப் பிரகடனம் செய்கின்றனர்.

இன முரண்பாட்டை அடிப்படையாக கொண்டு இலங்கையில் நிலவிய இரண்டு பாசிசப்போக்குகளும் தம் சொந்த இருப்பு சார்ந்து, அது நடத்திய யுத்தமும் களையெடுப்பும் சமூகத்தை இயல்பான சமூக ஓட்டத்தில் இருந்து அன்னியமாக்கியது. ஒரு பாசிசம் அழிந்ததன் மூலம், யுத்தம் முடிவுக்கு வந்தது. ஆனால் சமூக முரண்பாடுகள் தீர்க்கப்படவில்லை. அவை பல முனையில், பலவாக தீவிரமாகின்றது.

நாடு செல்லும் புலம்பெயர் தமிழன் ஒவ்வொருவரும் சொல்வது இதைத்தான். 20 வருடத்துக்கு முந்தைய யாழ் சமூகமல்ல இன்றைய யாழ் சமூகம் என்று சொல்வதன் மூலம், அதில் இருந்து அன்னியமாகின்றனர். புலம்பெயர் தமிழர் தாங்கள் அப்படியே இருக்கின்ற ஒரு மனநிலையில் இருந்து, தம்மில் இருந்த அன்னியமாகிவிட்ட யாழ் சமூகத்தைப் பார்க்கின்றனர்.

மே 18 வரை எதையும் மக்களுக்காக முன்வைத்து போராடதவர்கள் இவர்கள்.  தமிழீழக்கட்சியின் அரசியலுடன் புலிப்பினாமிக் கும்பலாக மாறி, காட்டிக்கொடுத்தபடி படுத்துக் கிடந்தவர்கள் தான் இந்த திடீர் "மே 18" இயக்கக்கரார்கள். மே 18க்கு பின், திடீரென தம்மை "முன்னினேறிய பிரிவு" என்று கூறிக்கொண்டு திடீரென அரசியல் "வியூகம்" போடுகின்றனர்.

யுத்தத்தை நடத்த தீர்வு பொதியைக் காட்டுவது, பேரினவாதத்தின் இனவழிப்பு தந்திரம் என்பதை அனைவரும் அறிவர். இது போல் தேர்தலை வெல்ல, தேர்தல் வாக்குறுதிகள்.  இதே போல் தமிழினத்தை அமைதியாக அழிக்க, அதிரடியான தேர்தல் நாடகங்கள்.   இந்தவகையில் முன்வைக்கும் அதிரடித் தீர்வுகள், அந்த மக்களின் இருப்பையே சிதறடித்து வருகின்றது.

"இது முடிவல்ல, புதிய தொடக்கம்" என்று கூறி, பன்றித் தொழுவத்துக்கு வழிகாட்டுகின்றனர்.  மக்கள் தேர்தலை பகிஸ்கரித்தால், கள்ள வாக்கு போடுவார்களாம்! தேர்தல் மோசடிகளுக்கும் வழிவகுக்குமாம்! ஆகவே மக்களே தேர்தலை பகிஸ்கரிக்காதீர்கள். மக்களே வாக்கு போட்டு எங்கள் பெட்டியை நிரப்புங்கள்! என்கின்றனர்.

புலிகள் கொண்டிருந்த "தன்னியல்புவாதம்" தான், படுகொலை அரசியலே ஒழிய. அவர்களின் சுரண்டும் வர்க்க அரசியல்ல என்கின்றனர். தேசியத்தை வர்க்கம் மூலம் அணுகுவதே தவறானது, அதன் தோல்வியை "தன்னியல்புவாதம்" மூலமே அணுக வேண்டும் என்கின்றனர். இதைத்தான் இன்று "மே18" காரர் திட்டமிட்டு "வியூகம்" போட்டுச் சொல்லுகின்றனர். புலி மண்ணைக் கவ்விய நாளை, தங்கள் இயக்கத்தின் பெயராக கொண்டு, தாங்கள் "தன்னியல்புவாதம்" அல்லாத வர்க்கமற்ற வகையில் தொடர்ந்து தேசியத்தை முன்னெடுப்பதன் மூலம், வெற்றிகரமாக தமிழ் தேசியத்தை வழிநடத்த முடியும் என்கின்றனர்.

 

பிரபாகரனில் இருந்து தமிழ் தேசியத்தைத் தொடரவே, அதற்கொரு கோட்பாட்டை மே18 இயக்கம் வியூகம் மூலம் முன்தள்ளுகின்றது. இவர்கள் வேறுயாருமல்ல. தீப்பொறி முன்வைத்த   அரசியலை கேசவனுக்கு பின் மறுதலித்தவர்கள். தீப்பொறியை கைவிட்டு, உயிர்ப்பு சஞ்சிகை மூலம் அரசியலை புலிக் கோட்பாடாக்கியவர்கள்.

"மே 18" இயக்கம் வெளியிட்ட வியூகம் இதழ் தனது முன்னுரையூடாக, கடந்த தமிழ் தேசியத்தின் தோல்விக்கு "தன்னியல்புவாதம்" தான் காரணம் என்கின்றது. இதே காரணத்தையே 1992 களில் "உயிர்ப்பு" சஞ்சிகை ஊடாக கூட இவர்கள் முன்வைத்தனர். இப்படி முன்வைத்ததன் ஊடாக, அது அன்று புலியின் ஆள்காட்டி அமைப்பாக, புலியின் உளவு அமைப்பாக மாறியதே கடந்த வரலாறாகியது.

செத்த பிணத்தில் இருந்து உண்ணி விலகிச் செல்வது போல், தமிழ் தேசிய அரசியல் இன்று புதிய உடலைத் தேடுகின்றது. பிரபாகரனின் மரணம் மூலம் புலி மடிந்தபோது, அதை அண்டிப் பிழைத்து வாழ்ந்த தமிழ் தேசிய உண்ணிக் கூட்டம் தன் வக்கிரமான சொந்த பிழைப்புவாதக் குணத்தைக் காட்டுகின்றது. அது தொடர்ந்து தமிழன் இரத்தத்தைக் குடிக்க, புதிய உடல்களைத் தேடியோடுகின்றது.

1984-1985 யில் புளாட் இயக்கம் அரசியல் ரீதியாக சிதைந்து, உட்படுகொலைகள் மூலம் அது உளுத்து வந்தது. அசோக் போன்றவர்கள் உமாமகேஸ்வரன் என்ற கொலைகாரக் கும்பலுடன் சேர்ந்து முதுகில் குத்த, தீப்பொறி குழு உயிர் தப்பியோடியது. அவர்களைக் கொல்ல அசோக் உள்ளிட்ட மத்திய குழு, நாயாக அலைந்தது.

கடந்த 60 வருடமாகவும், அதே நேரம் ஆயுதமேந்தி 30 வருடமாகவும், தமிழ் தேசியத்தின் பெயரில் அவர்கள் வழிகாட்டியது என்ன என்பதை, வரலாறு காட்டி நிற்கின்றது. ஒரு இனத்தையே தேசியத்தின் பெயரில் பலியிட்டதற்;கு அப்பால், இவர்கள் எதையும் வழிகாட்டவில்லை. மக்களுக்காக போராட முனைந்தவர்களை  தங்கள் குறுகிய நலனுக்கு பலியிட்டதுடன், தாம் அல்லாத அனைவரையும் கொன்று குவித்தனர். இதுவே எம் கடந்தகால தமிழ் தேசிய வரலாறு. 

சிவசேகரம் போன்றோரின் இன்றைய திடீர் அரசியல், கடந்தகாலத்திய தங்கள் எதிர்ப்புரட்சி அரசியலை மூடிமறைப்பதாகும். அதே நேரம் கடந்தகால புரட்சிகர அரசியல் செயல்பாட்டை மறுத்தலாகும்;. இதுவே இன்று இவர்களின் திடீர் அரசியலாக, கடந்தகாலத்தில் மக்களுடன் நிற்காத அனைவரும் கூடி, எமக்கு எதிராக குழையடிக்கும் அரசியலை முன் தள்ளுகின்றனர்.

மனிதனை மனிதன் ஒடுக்கி அவனை அடிமை கொண்டு இயங்குகின்றது உலகம். மனிதர்களை அடக்கியும், அவர்கள் அடங்கியும் வாழும் இந்த உலகில், மனித குலம் தான் சந்திக்கும் நெருக்கடிக்களுக்கு தனித்தனியாக தீர்வைத் தரும் என்ற சுய நம்பிக்கையுடன் தான் புத்தாண்டைக் கொண்டாடுகின்றனர். அன்றாவது நாம் மகிழ்சியாகவும், திருப்தியாகவும் இருப்பதன் மூலம், அந்த வருடம் முழுக்க வாழ்ந்துவிட முடியும் என்ற நம்பிக்கையுடன் தான், மனிதன் புத்தாண்டை கொண்டாடுகின்றான்.