Language Selection

பி.இரயாகரன் -2010

இன்று எதிர்ப்புரட்சி அரசியல் என்பது, படிப்படியாக மார்க்சியத்தை திரித்துக்காட்டுவதில் தொடங்குகின்றது. புரட்சிகர நடைமுறையின்றி, புரட்சிகர அமைப்பு இன்றி, அதற்கான அரசியல் வேலைத்திட்டம் இன்றி, சில தனிநபர்கள் முதல் புதிய ஜனநாயகக்கட்சி வரை இந்த தேர்தலில் பங்கு கொள்கின்றது அல்லது ஆதரிக்கின்றனர். இதை நியாயப்படுத்த  ஆளுக்காள் நியாயம் கற்பிக்கின்றனர். இந்த வகையில் மாவோவையும் இனியொரு தமக்கு ஆதரவாக களத்தில் இறக்கியுள்ளது.

இந்த புலி வதைக்கு முந்திய பிந்தைய காலகட்டத்தில், நேரடியாக நான் அறிந்த, என் மீதான படுகொலை முயற்சி பற்றிய விரிவான குறிப்புக்கு பதில், சிறு குறிப்புகளை இதில் தர முனைகின்றேன்.

அரசு மற்றும் ஜனநாயகம் பற்றிய அரிவரிப்பாடத்தை திரித்தல் மூலம் தான், பாராளுமன்றத்தை ஜனநாயகத்தின் ஒரு வடிவமாக காட்டுகின்றனர். மே 18 முதல் புதிய திசைகளின் அரசியல் வழிமுறைகள் இதற்குள் தான் உள்ளது. தேர்தல் பற்றிய இவர்களின் அரசியல் நிலை என்பது, வியக்கத்தக்க வகையில் இதுதான் ஜனநாயகம் என்று மோசடி செய்து காட்டுவதுதான்.

சினிமா சொல்லும் பாலியல் கவர்ச்சியும், ஆபாசமும், உடல்சார் வக்கிரத்தை முதன்மைப்படுத்தி தூண்டுகின்றது. இதன் மூலம், மனித உணர்வை அதற்குள்ளாக வக்கிரப்படுத்துகின்றனர். தனிமனித வன்முறை, வன்முறை மீதான சட்டம் என்ற எல்லைக்குள் கதை சொல்கின்ற ஒரு சினிமா, மக்களின் வாழ்வியல் சார்ந்த உணர்வை நலமடிக்கின்றது.

யூகோஸ்லாவியா முதலாளித்துவத்தை நோக்கி தன்னை வளப்படுத்திய போது, சர்வதேச கம்யூனிச இயக்கமே அதற்கு எதிராக போராடியது. குறிப்பாக ஸ்டாலின் இந்த முதலாளித்துவ பாதைக்கு எதிராக கடுமையான அரசியல் போராட்டத்தை நடத்தினார். ஆனால் டிராட்ஸ்கிகள் யூகோஸ்லாவியாவின் முதலாளித்துவ மீட்பை ஆதரித்ததுடன், அதையே மார்க்சியமாகவே பிரகடனம் செய்தனர். இதன் போது டிராட்ஸ்கிகள் ஸ்ராலின் அவதூற்றிலும், ஸ்ராலின் எதிர்ப்பிலும் தம்மைத் தாம் புடம் போட்டவராக இருந்தாலும், தமக்கிடையில் ஒத்த அரசியல் நிலைப்பாடுகள் இருந்ததால், உலகளவில் இந்த பிரச்சனை மீது மார்க்சியத்தை எதிர்த்து டிட்டோ மற்றும் குருச்சேவுடன் ஜக்கியப்பட்டு நின்றனர்.

"கோழைகள் தயாரிக்கின்ற சட்டங்களில் இரக்கமற்ற தன்மை ஒரு முக்கியமான கூறாக இருக்கின்றது, ஏனென்றால் இரக்கமில்லாமல் நடந்து கொள்வதன் மூலமாக மட்டுமே கோழைத்தனம் சுறுசுறுப்பாக இருக்க முடியும்." மக்களுக்கு பயந்து நடுங்கும் கோழைகளின் பாசிச சட்டங்களை, மார்க்ஸ் மிக அழகாகவே இங்கு எள்ளி நகையாடுகின்றார். மனித வரலாறுகளில் அஞ்சி நடுங்கக் கூடிய பாசிட்டுகள் அனைவரும் எந்த விதிவிலக்குமின்றி, தமது கோழைத்தனமான ஆட்சி

தனிமனித நுகர்ச்சி வெறிசார்ந்த கழிசடைத்தனம் எப்படியோ, அப்படித்தான் இன்றைய தொலைக்காட்சி நாடகங்கள். அது சமூக உறுப்பை ஒன்றுக்கு ஒன்று எதிரியாக்குகின்றது. தனிமனித குறுகிய நலனை முதன்மைப்படுத்தியதே சின்னத்திரை நாடகங்கள். இந்த அடிப்படையில் குடும்பத்தை சிதை என்பதே, அதன் சாரம். இந்த வகையில் குடும்பம் என்ற சமூக அலகை தகர்க்கின்ற அற்ப உணர்வையே, நாடகம் தன்னூடாக விதைக்கின்றது. குடும்;பத்தில் நிலவும் தியாகம், விட்டுக்கொடுப்பு, சேர்ந்து வாழ்தல் போன்ற சமூக உணர்வைத் தகர்த்து, தனிமனித நலன் சார்ந்த நுகர்வையே நாடகங்கள் சமூகத்தில் திணிக்கின்றது.

இதைக் கோராமல் எவரும் நேர்மையாக இருக்கவோ, செயற்படவோ முடியாது. இதை செய்யாத எவரும், தமிழ் மக்களுக்கு உண்மையாகவோ நேர்மையாகவோ இருக்க முடியாது. இது தானே உண்மை. இது தானே அரசியல் நேர்மை. புலித் தலைமை அழிந்த பின், அதைப் பயன்படுத்தி புலிப் பணத்தை (மக்கள் பணத்தை) அபகரிப்பதை எந்த வகையில் நாம் அங்கீகரிக்க முடியும். எம்மைச் சுற்றி நடப்பதோ, திருட்டும், மோசடியும் தான்.

 

அடிமைகளின் வரலாறு தான், இந்தியாவின் வரலாறு. யாரும் இப்படி இதை அணுகியது கிடையாது. சாதியம் என்பது, நிலவும் அடிமைகளின் மொத்த வரலாறு தான். இந்த அடிமைத்தனம், சாதியப் படிநிலையில் கட்டமைக்கப்பட்டு உள்ளது.

பரஸ்பரம் மனித உறவுகள் சார்ந்தது இந்த விடையம். உணர்வுகளும், உணர்ச்சிகளும்; சார்ந்த விடையம். மதிப்பும் மரியாதையும் சார்ந்த சமூக விழுமியம் சார்ந்த விடையம். குடும்ப பொறுப்புணர்வு சார்ந்த ஒரு விடையம். குடும்பம் மற்றும் சமூக சார்ந்த கடமைகளை, வாழ்வியல் ஒழுங்குகளையும் அடிப்படையாக கொண்ட ஒரு விடையம்.

புலிகள் என்னை உரிமை கோராது 28.04.1987 அன்று படுகொலை செய்யவென கடத்திச் சென்றனர். என்னை அழித்து விட, இரகசியமாக நடுவீதி ஒன்றில் வைத்து கடத்தியவர்கள், என்னிடமுள்ள தகவல்களைப் பெற தொடர்ச்சியாக சித்திரவதைகளைச் செய்தனர். தங்கள் சொந்த இரகசிய வதைமுகாமில் வைத்து, தொடர்ச்சியாக சித்திரவதைகளை என் மீது ஏவினர். இதன் மூலம் அவர்கள் மக்களின் அடிப்படையான ஜனநாயக உரிமைகளையும், போராட்ட வெற்றிகள் அனைத்தையும் காட்டிக் கொடுக்கக் கோரினர். இதற்காக யார் யார் எல்லாம் போராடுகின்றனர் என்ற விபரத்தைக் கக்கக்கோரினர்.

இன்றைய பொதுப்புத்தி இப்படித்தான் கருதுகின்றது. மூலதனத்தின் மந்தைக் கூட்டமாக, மனிதன் இருக்கும் வரை, ரசனை மட்டகரமானதாக மாறிவிடுகின்றது. மனிதனை மூலதனத்தின் அடிமையாக இருக்க, மட்டகரமான ரசனை உற்பத்தி செய்யப்படுகின்றது.

ருசியா ஆய்வு மையம் 2003ம் ஆண்டு லெனின் பற்றிய ஆய்வு ஒன்றைச் செய்தது. அதன் போது, 65 சதவீதமான மக்கள் லெனினின் அடிப்படை நோக்கத்தை அங்கீகரித்ததுடன், அவை சரியானவை என்று ஏற்றுக் கொண்டதை 17.4.2003 பாரிஸ் லிபரேசன் பத்திரிகை தன் செய்தியாக வெளியிட்டு இருந்தது. 5.3.2003 லிபரேசன் பத்திரிகை ருசியாவில் 42 சதவீதமானோர் ஸ்ராலினை ஏற்று ஆதரிக்கின்றனர் என்ற செய்தியை வெளியிட்டது. மீதமுள்ளவர்களில் 36 சதவீதம் பேர் ஸ்ராலின் நன்மையே கூடுதலாக செய்தார் என்பதை அங்கீகரித்து ஆதரவாக இருப்பதை வெளியிட்டபடியே தான், அவரைத் தூற்றியது. அதே பத்திரிகை 1937-1938 இல் 40 ஆயிரம் பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக புதிய புள்ளிவிபரத்தையும் வெளியிட்டது.

தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுத் துயரம், முதலில் அவர்கள் தங்களை அறியாது இருத்தல் தான். சுய ஆற்றல் அற்றவராக இருத்தல் தான். சுய முனைப்புடன் எதையும், தெரிந்து கொள்ளாது இருத்தல் தான். தம்மை புரிந்து கொள்ள முடியாத இருட்டில் வாழ்தல் தான், அவர்களின் சமூக அறிவு அழிவாகிவிட்டது. அனைத்தையும் மற்றவன் சொல்ல நம்புவதும், கேட்பதும் தான் வாழ்வாகிவிட்டது. தனக்கு நடந்ததையும், தன்னைச் சுற்றி நடந்ததையும் கூட, சுயவிசாரணை செய்வது கிடையாது. இன்று அதை செய்ய எந்த வரலாற்று ஆவணமும் கிடையாது.

அரசு காட்டியது பிரபாகரனையல்ல. அது போலியான சிங்களப் பிரபாகரன். முகமூடி போட்ட பிரபாகரன். பிரபாகரனோ நலமாக உள்ளார் உயிருடன் உள்ளார் என்று கூறி கட்டமைக்கும் பொய்கள், புனைவுகள், பித்தலாட்டங்கள் மூலம், தமிழினத்தை காயடிக்கின்றனர். எம்மைச் சுற்றி மானசீகமான நம்பிக்கையாக, பிரமையாக இது மாறி, மனநோயாகிவிடுகின்றது.

வர்க்கப் போராட்டம் என்பது நிகழ்ச்சி நிரலாக இருக்க, அதுவல்லாத ஒன்றை முன்வைத்து பித்தலாட்டம் செய்கின்றனர். "சுயநிர்ணயம் - பேரினவாதஅரசு : புதிய ஜனநாயகக்கட்சி நிலைப்பாடு" என்ற அறிக்கை விடும் அளவுக்கு, தங்கள் அரசியல் மோசடிகளை நியாயப்படுத்துகின்றனர். வேடிக்கை என்னவென்றால் "சுயநிர்ணயம் - பேரினவாதஅரசு" பற்றி புலிக்கும் ஒரு தெளிவான நிலைப்பாடு இருந்தது என்பது தான். அவர்கள் அதை எப்படி தவறாக கையாண்டார்கள் என்பது எம்கண் முன் இருக்கின்றது. புதிய ஜனநாயகக்கட்சி இதை தேர்தல் வழிமுறைக்குள் வைத்து, மக்களுக்கு மொம்மலாட்டம் காட்டுகின்றனர்.

 

பொருளாதார சந்தையில் ஏற்படும் மாற்றத்தின் விளைவு, சினிமாவில் நிகழும் மாற்றங்களாகின்றது. நுகர்வு எப்படி மாறுகின்றதோ, அதையே சினிமா வக்கிரமாக்கி பிரதிபலிக்கின்றது. இந்த வகையில் பெண்ணைக் கூட இந்த நுகர்வு எல்லையில் வக்கிரமாக காட்டியே, அதை நுகரக் கோருகின்றது. பெண் பற்றிய பார்வையைக் கூட மிகத் தீவிரமாக மாற்றுகின்றது. பெண் இந்த உலகில் எதற்காக ஏன் எப்படி வாழ்தல் என்பதை, சினிமா மிக வேகமாக அடிக்கடி மாற்றிவிடுகின்றது. அதாவது உலகமயமாதல் நுகர்வுச் சந்தைக்கு ஏற்ப அதை மாற்றிவிடுகின்றது.

தூற்றுவதாலோ, திரிப்பதாலோ, திருத்துவதாலோ வர்க்கப் போராட்டங்கள் நின்று விடுவதில்லை

வரலாற்றின் உண்மைகளைக் கண்டுகொள்ள மறுப்பது, அதைத் திரிப்பதும், மார்க்;சியத்தை மறுப்பதில் போய் முடிகின்றது. மனிதகுலம் அடிமைப்படுத்தப்பட்டு, தன் விடுதலைக்கான குரல்களையே இழந்து நிற்கின்றது. இதைத்தான் இன்று ஜனநாயகம் என்கின்றனர். மனிதனை அடிமைப்படுத்துவதையும், அவர்கள் அடிமையாக இருத்தலும் தான், மனிதன் ஜனநாயக உரிமையாக காட்டப்படுகிறது.

பெண்ணின் ஊடாக பெண்ணின் சதையைக்காட்டி, மனித உழைப்பை திருடுவது தான் உலகமயமாதல் என்னும் சந்தைக் கலாச்சாரம். இங்கு பெண்ணின் உடுப்பு, அதற்கேற்ப வடிவமைக்கப்படுகின்றது. 

 

1987ம் ஆண்டு 28.04.1987 திகதி இரகசியமாக என்னைக் கடத்திச் சென்றனர். அந்தக் கதை. முதல் நடவடிக்கையாக முழுமையாக நிர்வாணமாக்கப்பட்டேன். 17.07.1987 நான் அங்கிருந்து தப்பும் வரையான அனுபவத்தை அடிப்படையாக கொண்டது. பின் தலைமறைவாக 21.08.1987 வாழ்ந்த காலத்தை உள்ளடக்கியது. நான் தப்பிய அடுத்த நாளே, நான் சொல்ல விமலேஸ்வரன் (இவன் பின் புலிகளால்  கொல்லப்பட்டான்) எழுதிய 269 குறிப்புகளைக் கொண்டு, 2001ம் ஆண்டு வரையாக தொகுக்கப்பட்டது.  பிரசுரிக்கின்ற இன்றைய நிலையில் முழுமையாக செழுமைப்படுத்தி வெளிவருகின்றது.  

மனிதன் தனக்குள் கொண்டுள்ள சமூக உறவுகளின் சிதைவுகள் தான், உலகமயமாதலின் ஊக்க மருந்துகளாகும். மறுபக்கத்திலோ சமூகமாக வாழத் துடிக்கின்ற இயற்கை சார்ந்த பரிணாமச் சூழல்.

ஆபாசமும்! கவர்ச்சியுமா! அதன் வக்கிரமுமா! மனித கலாச்சாரம்? இதுவல்ல என்று பலமாக நம்பும் நாம், இப்படித் தான், இதற்குள் தான், நாம் எம்மையறியாமல் இதை நியாயப்படுத்தியும் வாழ்கின்றோம். இந்த உண்மையை நாம் தெரிந்து கொள்வது அவசியம். எம்மிடம் எஞ்சியிருந்த மனித கலாச்சாரங்களை எல்லாம், நாம் இழந்து வருகின்றோம். சமூகத் தன்மை கொண்ட, மனித நலன் கொண்ட, இயற்கையாகவே எம்முடன் இருந்த மனித கலாச்சாரம் அனைத்தும், எம்மிடமிருந்து படிப்படியாகவே அகற்றப்படுகின்றது.

மார்ச் 8 பெண்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிரான சர்வதேச நாள். 100 ஆண்டுகளுக்கு முன் சர்வதேச கம்யூனிச இயக்கமும், அந்த இயக்கத்தில் இருந்த பெண்களும், இந்த நாளை பெண்கள் மேலான ஒடுக்குமுறைக்கு எதிரான சர்வதேச தினமாக பிரகடனம் செய்தனர்.

 

தோழர்களே! நண்பர்களே! வாசகர்களே! எதிரிகளே!

 

உங்களுக்கு நான் என்னை அறிமுகப்படுத்துவது தொடர்ந்து போராடுவதற்காகத்தான். எனது சுயஅறிமுகம் என்பது, என்னைச் சுற்றி நிகழ்ந்த அரசியல் வாழ்வுதான். அதுவும் பல தோழர்கள் உள்ளடங்கிய ஒரு கூட்டு வாழ்வுமுறைதான்.

15.03.2010 முதல் 21.03.2010 வரை எமது நட்சத்திர வாரம். இது எமது கிடைத்த மற்றொரு புதிய வாய்ப்பு. இதற்காக தமிழ்மணத்துக்கு நன்றி தெரிவிப்பதுடன், அவர்களின் நோக்கத்துக்கு ஏற்ப இதைச் சிறப்பாக நாம் பயன்படுத்த முனைகின்றோம்.  

 

இதற்கு அமைய, பாலியல் அம்சத்தில் சமூக சீராழிவிலான தனிமனித ஒழுக்கக்கேடு கிடையாது என்ற கோணத்தில், சிறிரங்கன் மார்க்சையும் காதலையும் காட்டுகின்றார். பாலியல் என்பது சமூகம் சார்ந்தல்ல, தனிமனிதனின் பாலியல் சார்ந்து சுதந்திரமானது, தூய்மையானது, அன்பாலானது என்ற காட்டமுனையும் போக்கு அபத்தமானது. சமூகத்ததை கடந்து, அராஜாகவாத கோட்பாட்டை இது முன்தள்ளுகின்றது.

ஜனநாயகப் புரட்சி தான், பாராளுமன்றத்துக்கு ஜனநாயகத்தை வழங்குகின்றது. ஜனநாயகப் புரட்சி நடைபெறாத நாட்டில், பாராளுமன்றத்தை ஜனநாயக வழியாக காட்டுவது ஜனநாயகம் பற்றிய திரிபாகும்;. ஜனநாயகத்தை மீட்க மகிந்தாவை ஆதரித்த புலியெதிர்ப்பு போன்றது. ஏகாதிபத்தியத்தை எதிர்க்க மகிந்தாவை ஆதரிக்கும் புலியெதிர்ப்பு "மார்க்சியம்" போன்றது.

புனிதம், பக்தி, ஆன்மீகம், அறம், உண்மை என்று தங்களைப் பற்றி ஒரு பிரமைகளை ஏற்படுத்திக் கொண்ட, ஒட்டுண்ணிகளாக வாழமுடிகின்ற சமூகம் இது. இங்கு ஓட்டுண்ணிகள் மனித அறம் பற்றிய போதனைகள் செய்ய முடிகின்றனர். இதன் மூலம் மக்களிடம் பணத்தை பெற்று, கொழுக்கின்றது. சமூகத்தின் முன் நடித்துக்கொண்டும், மக்களை ஏமாற்றிகொண்டும், அவர்களின் உழைப்பில் வாழ்ந்து கொண்டும், மக்களுக்கே அறிவுரை கூறும் ஒரு கூட்டமாகவும் மாறிவிடுகின்றது.

பாராளுமன்றத்தை நோக்கி செல்லும் ஒவ்வொரு புதுக்கட்சியும், இதுவரை பாராளுமன்றம் செல்ல முடியாதவனும், கூறுவது என்ன? தங்கள் தங்கள் இறுதி இலட்சியத்தை அடையத்தான், பாராளுமன்ற வழியை பயன்படுத்துகின்றோம் என்கின்றனர். நாங்கள் நேர்மையானவர்கள், சமூக அக்கறை உள்ளவர்கள், படித்தவர்கள் என்று இவர்கள் அனைவருமே கூறுகின்றனர்.

நாவலன் பாணியில் தான் ரகுமான் ஜான் கூறுகின்றார், தன் இலட்சியம் பாராளுமன்றமல்ல என்கின்றார். பாரிஸ் தலித் முன்னணி மகிந்தாவின் ஆலோசனையுடன், யாழப்;பாண தேர்தல் களத்தில சுயேட்சையாக களமிறக்கிய "சிறுபான்மைத் தமிழர் மகாசபை"யும், தங்கள் இலட்சியம் பாராளுமன்றமல்ல என்று தான் கூறுகின்றது. எல்லோரும் தங்கள் இறுதி இலட்சியம் பற்றி ஏதோதோ உளறுகின்றனர், கூறுகின்றனர். ஏன் மகிந்தா கூட! சரத் பொன்சேகா கூட! நாவலன் கூடத்தான்! ரகுமான் ஜான் கூடத்தான்! தங்கள் இறுதி இலட்சியத்துக்கு பாராளுமன்றம் உதவும் என்பதுதான், இவர்கள் அனைவரும் சொல்லும் மந்திரம்.

மீளவும் இவர்கள் திடீர் அரசியலுக்கு வந்தவர்கள், மூடிமறைத்த சந்தர்ப்பவாதிகளாகிவிட்டனர். இவர்கள் இன்று மார்க்சியம் கலந்து பேசுவது, மூடிமறைத்த தங்கள் சந்தர்ப்பவாத அரசியலை மேலும் மூடிமறைப்பதற்கே. இவர்கள் தேர்தலில் பங்குபற்றவும், வாக்களிக்கவும் கோருகின்றனர். சரி யாரை?

இனியொரு இணையத்தின் அரசியல் யோக்கியதை என்பது, தங்கள் கடந்தகாலத்தை முற்றாக மூடிமறைத்தல்தான். திடீர் திடீரென மக்கள் நலனை உயர்த்திக் காட்டி நடிப்பதே, இவர்கள் அரசியல் கலை. கடந்து போன தாங்கள் நடத்திய போராட்டத்தின் தோல்விகள் முதல் அங்கே நடந்த மனிதப் படுகொலை வரை பேசாத ஒரு புள்ளியில், முற்போக்கை உருவாக்குவது பற்றி வம்பளக்கின்றனர்.

 

தமிழ் தேசியம், இன்று தேர்தல் சாக்கடையில் நாறுகின்றது. நாதியற்றப் போன மக்கள், கதியற்று நிற்கின்றனர். எந்த சமூக உணர்வுமின்றி, ஏனோ தானோ என்று மக்கள் நடைப்பிணமாக வாழ்கின்றனர். இதுவே வடக்கின் வசந்தமாகவும், கிழக்கில் உதயமாகவும், மொத்தத்தில் இனத்தின் அவலமாகிக் கிடக்கின்றது. இதைக் கண்டுகொள்ளாத சமூக போக்கில், பிழைப்புவாதிகள் ஏய்த்துப் பிழைக்கின்றனர்.    

இவர்கள் ஒரு மாதத்துக்கு முன்னம் தேர்தல் பகிஸ்கரிப்பை கோரியவர்கள். எப்படி வாக்குச் சீட்டை செல்லுபடியற்றதாக்குவது என்று உபதேசித்தவர்கள். இன்று வாக்குக் கேட்டு வருகின்றனர். வாக்கை தமக்கு போடுமாறு உபதேசிக்கின்றனர். இப்படி ஒரு மாதத்தில் மாறுபட்ட கொள்கைகள் கோட்பாடுகள்.

புலிக்கு பின் பல "முற்போக்கு" முகமூடி அரசியல் எல்லாம், வேஷம் கலைந்து பம்முகின்றது.   மகிந்தா முன்தள்ளும் பாசிசத்துக்கு ஏற்ப, அரசியல் விவாதங்கள், விளக்கங்கள். தேனீ முதல் தேசம்நெற் வரை இதற்கு விதிவிலக்கே கிடையாது.

 

இரண்டு கண்ணீரும் பாசிசத்துக்கு எதிராக விட்ட கண்ணீர். ஒன்று ஒடுக்கப்பட்ட இன மக்கள் விட்ட கண்ணீர். மற்றது ஆளும் வர்க்கத்தில் இருந்த ஒருவரின் மனைவி விட்ட கண்ணீர். இரண்டும் போலியானதல்;ல. பாசிசத்தை எதிர்கொண்டு விடும் கண்ணீர். இதை ஒன்றுக்கு எதிராக மற்றதை நிறுத்தி அணுகுவதல்ல மக்கள் அரசியல்.

மகிந்த குடும்பமும், சட்டவிரோதமான கொலைகார கும்பல் ஒன்றும் நடத்திய யுத்த குற்றங்களை, ஒரு விசாரணையில் வெளிப்படுத்த தயார் என்ற அறிவித்தார் சரத் பொன்சேகா. யாரையும் காப்பாற்ற முடியாது என்றார். மறுகணம் சரத் பொன்சேகாவை கைது செய்யுமளவுக்கு, மகிந்த குடும்பத்தின் போர்க் குற்றம் மிகப் பாரியது.

வரிச் சலுகை தடை என்பது, அரசியல் ரீதியானவை. அரசியல் பொருளாதார நலன் சார்ந்ததும், உள்நோக்கம் கொண்டதுமாகும். உலக மயமாக்கலுக்கு உட்பட்டவை. சர்வதேச நாடுகளின் முரண்பாடுகளுக்கு உட்பட்டவை.

மார்க்சியத்தை உருத்திராட்சைக் கொட்டையாக்கினால், பாசிச நடத்தைகளையும் அது சார்ந்த  வக்கிரங்களையும் தொழத் தொடங்கிவிடுகின்றனர். பாசிசத்தைக் கண்டும் காணாமல் கண்ணை மூடிக்கொண்டு, மார்க்சிய சொற்களைக் கொண்டு உளறத் தொடங்குகின்றது. புதிய ஜனநாயகக் கட்சி நடந்து முடிந்த தேர்தல் பற்றி வெளியிட்ட அறிக்கையோ கேவலமானதும், கேலிக்குரியதுமாகும்.

தான் அல்லாத எதிர்தரப்பையும், தனக்கு எதிரான ஊடகத்தையும் ஓடுக்குவதே, இந்த அரசின் முதன்மையான இன்றைய அரசியலாக உள்ளது. பாரிய குற்றங்களை செய்வதன் மூலமே, தன் அதிகாரத்தை தக்கவைத்துள்ளது. பாரிய போர்க்குற்றத்தை செய்தும், பல ஆயிரம் மக்களைக் கொன்றும், பல பத்தாயிரம் கோடி பணத்தை சுருட்டியபடியும், பாசிச  ஆட்டம் போடுகின்றது.

எது செயல்? எது கருத்து? சமகாலத்தில் நிலைமைகள் மேல் கருத்தும், அதன் மேலான செயலும் தான், மக்களை வழிகாட்டும் அரசியல் நடைமுறை. இவை எதுவுமின்றி, காலம்கடந்த பின், மற்றவர் கருத்தை திருடியும், அவர்களை மறுத்தும், உருக்கொண்டு திடீர் பிரசங்கங்கள் மூலம் தம்மை நிலைநிறுத்துவதல்ல செயல். அரசியலில் அற்புதங்கள் நடப்பதில்லை.

முறைகேடாகவே ஒரு தேர்தலை நடத்தி, தாமே அதில் வென்றவர்களாக இந்த அரசு தம்மைத்தாம் அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையாளரின் "மனச்சாட்சிக்கு விரோதமாக" மோசடியை தமது வெற்றியாக தமது பாசிசம் மூலம் அறிவிக்க வைத்துள்ளது.

தேர்தலில் மகிந்தா வென்று விட்டார் என்பதும், தேர்தல் அமைதியாக நடந்து முடிந்ததாக கூறுவதும், தேர்தல் என்றால் பலதும் பத்தும் இருக்கும் தான் என்று கூறி அதை நியாயப்படுத்துவதுமான போக்கு இன்று அதிகரிக்கின்றது. வென்றவர்களை ஆதரித்தும், அதைச் சார்ந்தும் நிற்கின்ற போக்கு, மக்களுக்கு எதிரான பாசிச மயமாக்கலை ஆதரிக்கின்ற ஒரு புதிய போக்கு தமிழ் சமூகத்தில் உருவாகி வருகின்றது.

புலம்பெயர் நாட்டில் புலி – புலியெதிர்ப்பு அரசியலாக, அது சரத் - மகிந்தாவுக்கு பின் செல்லும் அரசியலாக, ஆய்வாக, சிந்தனையாக மாறுகின்றது. மகிந்தா வெற்றி பெற்ற நிலையில், அதுவே சரணடைவு அரசியலாக மாறுகின்றது. இதற்கு வெளியில் சிந்திக்க செயலாற்ற, எந்த மாற்று சிந்தனையும், அரசியலும் கிடையாது. மாறாக மக்களின் எதார்த்தத்தை நிராகரிக்கின்றதும், தங்கள் குறுக்கிய குதர்க்க விளக்கங்களுடன் அரசியல் பச்சோந்தித்தனத்தையே விதைக்கின்றது.

இலங்கை மக்கள் அனுபவிக்கும் சுபிட்சமான வாழ்வா!? இல்லை. வேறு தெரிவு எதுவும் இல்லை என்பதாலா!? இல்லை. அப்படியாயின் எது? இலங்கையில் நிலவும் உச்சக்கட்ட சிங்கள இனவாதம்தான், மீண்டும் மகிந்தாவை வெல்ல வைத்துள்ளது. சிறுபான்மை இனங்கள் வாழும் பிரதேசங்கள் எங்கும் சிங்கள இனவாதம் தோற்கடிக்கப்பட, சிறுபான்மை இனங்கள் அதிகமாக வாழும் சிங்களப் பகுதிகளில் விளிம்பில் வெற்றி பெற்று, முழு சிங்களப் பகுதிகளில் பெரும்பான்மை பெற்று ஜனாதிபதியாகியுள்ளார் மகிந்தா.

 

புரட்சி என்பது "ஆயுதப் போராட்டமல்ல". ஆயுதப் போராட்டம் என்பது போராட்ட வடிவங்களில் ஒன்று. மக்கள் தம்மைத்தாம் புரட்சிகர கருத்துகள் மூலம் திரட்டிக் கொள்வதுதான், புரட்சியின் உள்ளடக்கம்.

புதிய ஜனநாயகக் கட்சியின் மதியுரைஞரும் தத்துவ வழிகாட்டியுமான சிவசேகரம், ஒரு பச்சோந்திக் கவிதை மூலம் பாராளுமன்ற பன்றித் தொழுவத்துக்கு உங்களை வழிகாட்டுகின்றார். தேர்தலை நிராகரி!, புரட்சி செய்! என்று கோசத்தின் கீழ், இவர்கள் மக்களை வழிகாட்டுவது கிடையாது. அதற்காக இவர்கள் கவிதை எழுதுவதும் கிடையாது. "சீட்டைச் செல்லுபடியற்றதாக்கு" எப்படி என்ற கவலையுடன், அதை வழிகாட்டி கவிதை எழுதுகின்றார். 

இன்னும் இரண்டு வருடங்கள் மகிந்தா குடும்பம் கொள்ளையிடவும், ஒட்டுமொத்த இலங்கை மக்களை ஒடுக்கவும், தமிழ் மக்களை இனவழிப்பு செய்யவும், சட்டப்படியான ஒரு கால அவகாசம் இருந்தது. இருந்தும் இன்று அவசரமாக தேர்தலை நடத்தக் காரணம் என்ன?

புலித் தலைவர் முள்ளிவாய்க்காலில் சரணடைந்ததன் மூலம், தன் கொள்கைக்கே துரோகம் செய்தார். அவரின் துப்பாக்கிக்கு கீழ் வாழ்ந்த புலித்தேசியம், பிரபாகரனின்  துரோகத்தைப் போல் போட்டிபோட்டு புளுக்கின்றது. மகிந்தா, சரத்பொன்சேகா முதல் ஏகாதிபத்தியம் வரை ஆளுக்காள் தங்கள் தலைவரின் புலித்தேசியம் இதுதான் என்ற விளக்கத்துடன், தங்கள் நக்குண்ணித்தனமான துரோகத்தை தேசியமாகக் கூறிப் பிரகடனம் செய்கின்றனர்.

இன முரண்பாட்டை அடிப்படையாக கொண்டு இலங்கையில் நிலவிய இரண்டு பாசிசப்போக்குகளும் தம் சொந்த இருப்பு சார்ந்து, அது நடத்திய யுத்தமும் களையெடுப்பும் சமூகத்தை இயல்பான சமூக ஓட்டத்தில் இருந்து அன்னியமாக்கியது. ஒரு பாசிசம் அழிந்ததன் மூலம், யுத்தம் முடிவுக்கு வந்தது. ஆனால் சமூக முரண்பாடுகள் தீர்க்கப்படவில்லை. அவை பல முனையில், பலவாக தீவிரமாகின்றது.

நாடு செல்லும் புலம்பெயர் தமிழன் ஒவ்வொருவரும் சொல்வது இதைத்தான். 20 வருடத்துக்கு முந்தைய யாழ் சமூகமல்ல இன்றைய யாழ் சமூகம் என்று சொல்வதன் மூலம், அதில் இருந்து அன்னியமாகின்றனர். புலம்பெயர் தமிழர் தாங்கள் அப்படியே இருக்கின்ற ஒரு மனநிலையில் இருந்து, தம்மில் இருந்த அன்னியமாகிவிட்ட யாழ் சமூகத்தைப் பார்க்கின்றனர்.

மே 18 வரை எதையும் மக்களுக்காக முன்வைத்து போராடதவர்கள் இவர்கள்.  தமிழீழக்கட்சியின் அரசியலுடன் புலிப்பினாமிக் கும்பலாக மாறி, காட்டிக்கொடுத்தபடி படுத்துக் கிடந்தவர்கள் தான் இந்த திடீர் "மே 18" இயக்கக்கரார்கள். மே 18க்கு பின், திடீரென தம்மை "முன்னினேறிய பிரிவு" என்று கூறிக்கொண்டு திடீரென அரசியல் "வியூகம்" போடுகின்றனர்.

யுத்தத்தை நடத்த தீர்வு பொதியைக் காட்டுவது, பேரினவாதத்தின் இனவழிப்பு தந்திரம் என்பதை அனைவரும் அறிவர். இது போல் தேர்தலை வெல்ல, தேர்தல் வாக்குறுதிகள்.  இதே போல் தமிழினத்தை அமைதியாக அழிக்க, அதிரடியான தேர்தல் நாடகங்கள்.   இந்தவகையில் முன்வைக்கும் அதிரடித் தீர்வுகள், அந்த மக்களின் இருப்பையே சிதறடித்து வருகின்றது.

"இது முடிவல்ல, புதிய தொடக்கம்" என்று கூறி, பன்றித் தொழுவத்துக்கு வழிகாட்டுகின்றனர்.  மக்கள் தேர்தலை பகிஸ்கரித்தால், கள்ள வாக்கு போடுவார்களாம்! தேர்தல் மோசடிகளுக்கும் வழிவகுக்குமாம்! ஆகவே மக்களே தேர்தலை பகிஸ்கரிக்காதீர்கள். மக்களே வாக்கு போட்டு எங்கள் பெட்டியை நிரப்புங்கள்! என்கின்றனர்.

புலிகள் கொண்டிருந்த "தன்னியல்புவாதம்" தான், படுகொலை அரசியலே ஒழிய. அவர்களின் சுரண்டும் வர்க்க அரசியல்ல என்கின்றனர். தேசியத்தை வர்க்கம் மூலம் அணுகுவதே தவறானது, அதன் தோல்வியை "தன்னியல்புவாதம்" மூலமே அணுக வேண்டும் என்கின்றனர். இதைத்தான் இன்று "மே18" காரர் திட்டமிட்டு "வியூகம்" போட்டுச் சொல்லுகின்றனர். புலி மண்ணைக் கவ்விய நாளை, தங்கள் இயக்கத்தின் பெயராக கொண்டு, தாங்கள் "தன்னியல்புவாதம்" அல்லாத வர்க்கமற்ற வகையில் தொடர்ந்து தேசியத்தை முன்னெடுப்பதன் மூலம், வெற்றிகரமாக தமிழ் தேசியத்தை வழிநடத்த முடியும் என்கின்றனர்.

 

பிரபாகரனில் இருந்து தமிழ் தேசியத்தைத் தொடரவே, அதற்கொரு கோட்பாட்டை மே18 இயக்கம் வியூகம் மூலம் முன்தள்ளுகின்றது. இவர்கள் வேறுயாருமல்ல. தீப்பொறி முன்வைத்த   அரசியலை கேசவனுக்கு பின் மறுதலித்தவர்கள். தீப்பொறியை கைவிட்டு, உயிர்ப்பு சஞ்சிகை மூலம் அரசியலை புலிக் கோட்பாடாக்கியவர்கள்.

"மே 18" இயக்கம் வெளியிட்ட வியூகம் இதழ் தனது முன்னுரையூடாக, கடந்த தமிழ் தேசியத்தின் தோல்விக்கு "தன்னியல்புவாதம்" தான் காரணம் என்கின்றது. இதே காரணத்தையே 1992 களில் "உயிர்ப்பு" சஞ்சிகை ஊடாக கூட இவர்கள் முன்வைத்தனர். இப்படி முன்வைத்ததன் ஊடாக, அது அன்று புலியின் ஆள்காட்டி அமைப்பாக, புலியின் உளவு அமைப்பாக மாறியதே கடந்த வரலாறாகியது.

செத்த பிணத்தில் இருந்து உண்ணி விலகிச் செல்வது போல், தமிழ் தேசிய அரசியல் இன்று புதிய உடலைத் தேடுகின்றது. பிரபாகரனின் மரணம் மூலம் புலி மடிந்தபோது, அதை அண்டிப் பிழைத்து வாழ்ந்த தமிழ் தேசிய உண்ணிக் கூட்டம் தன் வக்கிரமான சொந்த பிழைப்புவாதக் குணத்தைக் காட்டுகின்றது. அது தொடர்ந்து தமிழன் இரத்தத்தைக் குடிக்க, புதிய உடல்களைத் தேடியோடுகின்றது.

1984-1985 யில் புளாட் இயக்கம் அரசியல் ரீதியாக சிதைந்து, உட்படுகொலைகள் மூலம் அது உளுத்து வந்தது. அசோக் போன்றவர்கள் உமாமகேஸ்வரன் என்ற கொலைகாரக் கும்பலுடன் சேர்ந்து முதுகில் குத்த, தீப்பொறி குழு உயிர் தப்பியோடியது. அவர்களைக் கொல்ல அசோக் உள்ளிட்ட மத்திய குழு, நாயாக அலைந்தது.

கடந்த 60 வருடமாகவும், அதே நேரம் ஆயுதமேந்தி 30 வருடமாகவும், தமிழ் தேசியத்தின் பெயரில் அவர்கள் வழிகாட்டியது என்ன என்பதை, வரலாறு காட்டி நிற்கின்றது. ஒரு இனத்தையே தேசியத்தின் பெயரில் பலியிட்டதற்;கு அப்பால், இவர்கள் எதையும் வழிகாட்டவில்லை. மக்களுக்காக போராட முனைந்தவர்களை  தங்கள் குறுகிய நலனுக்கு பலியிட்டதுடன், தாம் அல்லாத அனைவரையும் கொன்று குவித்தனர். இதுவே எம் கடந்தகால தமிழ் தேசிய வரலாறு. 

சிவசேகரம் போன்றோரின் இன்றைய திடீர் அரசியல், கடந்தகாலத்திய தங்கள் எதிர்ப்புரட்சி அரசியலை மூடிமறைப்பதாகும். அதே நேரம் கடந்தகால புரட்சிகர அரசியல் செயல்பாட்டை மறுத்தலாகும்;. இதுவே இன்று இவர்களின் திடீர் அரசியலாக, கடந்தகாலத்தில் மக்களுடன் நிற்காத அனைவரும் கூடி, எமக்கு எதிராக குழையடிக்கும் அரசியலை முன் தள்ளுகின்றனர்.

மனிதனை மனிதன் ஒடுக்கி அவனை அடிமை கொண்டு இயங்குகின்றது உலகம். மனிதர்களை அடக்கியும், அவர்கள் அடங்கியும் வாழும் இந்த உலகில், மனித குலம் தான் சந்திக்கும் நெருக்கடிக்களுக்கு தனித்தனியாக தீர்வைத் தரும் என்ற சுய நம்பிக்கையுடன் தான் புத்தாண்டைக் கொண்டாடுகின்றனர். அன்றாவது நாம் மகிழ்சியாகவும், திருப்தியாகவும் இருப்பதன் மூலம், அந்த வருடம் முழுக்க வாழ்ந்துவிட முடியும் என்ற நம்பிக்கையுடன் தான், மனிதன் புத்தாண்டை கொண்டாடுகின்றான்.