தேர்தலை ஆதரிக்கும் இனியொரு, அதை மாவோவின் பெயரில் திரித்துக் காட்ட முனைகின்றது
இன்று எதிர்ப்புரட்சி அரசியல் என்பது, படிப்படியாக மார்க்சியத்தை திரித்துக்காட்டுவதில் தொடங்குகின்றது. புரட்சிகர நடைமுறையின்றி, புரட்சிகர அமைப்பு இன்றி, அதற்கான அரசியல் வேலைத்திட்டம் இன்றி, சில தனிநபர்கள் முதல் புதிய ஜனநாயகக்கட்சி வரை இந்த தேர்தலில் பங்கு கொள்கின்றது அல்லது ஆதரிக்கின்றனர். இதை நியாயப்படுத்த ஆளுக்காள் நியாயம் கற்பிக்கின்றனர். இந்த வகையில் மாவோவையும் இனியொரு தமக்கு ஆதரவாக களத்தில் இறக்கியுள்ளது.