இத் தொடர் குறிப்பாக மட்டுமே அசோக்கை நோக்கியது, மற்றும்படி பொதுவானது (எதிர்ப்புரட்சி அரசியல் - இறுதிப் பகுதி 22)
கடந்த 30 வருடத்தில் எம்மைச் சுற்றி நடந்தவைகளை தெரிந்து கொள்ளாத எவனும், எதிர்காலத்தை மக்களுக்காக வழிநடத்த முடியாது. இல்லையென்று சொல்பவன், மக்களை ஏய்க்கும் மாபெரும் மோசடிக்காரன். கடந்ததை விமர்சனம் சுயவிமர்சனம் செய்யாதவன், தொடர்ந்தும் மக்களை ஏய்க்கின்றான். இங்கு இதுவே, இதிலுள்ள மாபெரும் அரசியல் உண்மையாகும்.