பிரபாகரனை கொன்ற கொலைகாரர்கள் புலிக்குள் …
பிரபாகரன் உயிர் வாழ்ந்திருக்க முடியாதா? முடியும் என்றால்! என்னதான் செய்திருக்கவேண்டும். இது பற்றிய உங்கள் அபிப்பிராயங்கள், குறைந்தபட்சம் சில உண்மைகளைத் தன்னும் அடிப்படையாகக் கொண்டிருந்தது. இதை இன்றுவரை மறுப்பவர்கள் தான், பிரபாகரனை கொன்ற உண்மையான கொலைகாரர்கள். இதுதானே உண்மை. சரி அவர்கள் யார்? நீ யாரை நம்பி, ஏன் எதற்கு என்று எந்தக் கேள்வியுமின்றி யார் பின்னால் சென்றாயோ, அவர்கள்தான்; பிரபாகரனைக் கொன்றனர். இது ஒரு உண்மையில்லையா? இதற்கு மாறாக உன்வழியில் சென்று இருந்தால், அவர்கள் உயிர்வாழ்ந்திருக்க முடியுமல்லவா? இதை நீ உணர்ந்தால், யார் அந்தக் கொலைகாரர்கள் என்பதை தெளிவாக இனம் காண்பாய்.