எது காவாலித்தனம்? லீனாவின் பேச்சாளராக திடீரென மாறிவிட்டார் சோபாசக்தி. புலிகளின் பேச்சாளர் தமிழ்ச்செல்வன் மாதிரி உளறுகின்றார். உன்னை மிஞ்சிய காவாலித்தனமா, ம.க.இ.க.வின் அணுகுமுறை. அன்று பாரிசில் நீ ஒட்டிய துண்டுப்பிரசுரத்தை தன் கடையில் இருந்து அகற்றியதுடன், அருகில் இருந்தவற்றையும் அகற்றிய போது, நீ செய்த காவாலித்தனத்தைப் போல் ம.க.இ.க. செய்யவில்லை. அன்று துண்டுப்பிரசுரத்தை ஓட்ட இருந்த உன் உரிமையைப் போல், அதைக் கிழிக்கும் உரிமை அவர்களுக்கு இருந்தது. உன் ஜனநாயகம் போல். இந்தளவுக்கும் அவர்கள், உனக்கு நன்கு தெரிந்தவர்கள். அது நடந்த சில நாட்களின் பின், நீ என்ன செய்தாய்? ஏன் கிழித்தாய் என்று, நியாயம் கேட்கச் சென்றாய், அவர்கள் தங்கள் பக்க நியாயத்தைச் சொன்னார்கள். சில மணிநேரம் கழித்து, அந்தக் கடையின் கண்ணாடியை அடித்து உடைத்தாயே, இதுதான் காவாலித்தனம்;. அதன் பின் அதை தவறு என்று, இன்றுவரை சொன்னது கிடையாது. அந்த கண்ணாடிக்கான பணத்தையோ, அதை மாற்றிய கூலியையே நீ கொடுத்;தது கிடையாது. அவர்கள் நண்பனாக பழகிய நீ, இப்படி செய்துவிட்டாயே என்று சொல்லி பொலிசுக்கும் கூட செல்லவில்லை.