Language Selection

பி.இரயாகரன் -2009

காலச்சுவடு கட்டுரை எழுதியவர் தொடர்பாக, பெட்டையின் பின்னோட்டம் மற்றும்  ஒரு பொதுவான உள்சுற்றில் ஒருவிவாதம் தொடர்கின்றமையால் மேலும் சில விளக்கங்கள் அவசியமாகின்றது.

வன்னி மக்கள் பெயரில் வியாபாரமும்;, அரசியல் விபச்சாரமும், இந்தியாவின் பிழைப்புவாத இலக்கிய உலகு ஊடாகவும் கூட நுழைகின்றது. "வன்னியில் என்ன நடந்தது? களத்திலிருந்து ஓர் அனுபவப் பதிவு" என்ற தலைப்பில் காலச்சுவடு ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது. சந்தர்ப்பவாத ஈழத்து புத்திஜீவிகள் சிலர் தங்கள் பிழைப்புவாத அரசியல் இருப்பு சார்ந்து புனைவு ஒன்றுடன், காலச்சுவட்டின் கைவண்ணத்தில் வெளியிட்டுள்ளனர்.

ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையை மறுப்பவர்கள், சமூகத்தின் சமூகக் கூறுகளை பிரித்து அதை மோதவிட்டே கையாள்வார்கள். இங்கு யமுனா புலி அரசியலை தேசிய விடுதலைக்குரிய வழிகாட்டும் தத்துவமாக காட்ட, "கரையார்" தலைமை பற்றி கூறி, வெள்ளாளர் தலைமையை வேர் அறுத்தது பற்றியும் கதை விடுகின்றார். வேறு எப்படித்தான் வரலாற்றை இவரால் திரிக்க முடியும்.

புலி இல்லாது நடந்து முடிந்த தேர்தல் மூலம், தமிழ்மக்கள் ஒரு செய்தியை முகத்தில் அறைந்து கூறியுள்ளனர். எல்லாம் புலியினால் வந்த வினை, புலிகள் அழிந்தால் எல்லாம் சரி என்று கூறி வந்த, எல்லா புலியெதிர்ப்பு பன்னாடைகளுக்கும் மக்கள் தெளிவாக பதிலளித்துள்ளனர்.

தமிழ்மக்களை எப்படி, எந்த நிலையில் பேரினவாதம் சிறை வைத்துள்ளது என்பதை, தம்மைத் தவிர யாரும் அறியக் கூடாது என்பதுதான் இலங்கையில் "ஜனநாயகம்". அப்பாவி மக்களை எப்படிப்பட்ட ஒரு நாசிய முகாமில் வைத்து வதைக்கின்றனர் என்பதை, வெளியில் உள்ளவர்களுக்கு வெளிப்படுத்த முடியாது. மீறி வெளிப்படுத்தினால், அவர்கள்  இலங்கையில் உயிர் வாழவே முடியாது.

இப்படி தனக்கேற்ற ஒரு "மார்க்சிய" கோட்பாட்டை யமுனா உருவாக்கி, அதைக்கொண்டு புலியைச் சாதி பார்க்காத ஒரு இயக்கமாக காட்டிவிட முனைகின்றார். சமூகத்தின் நலனை முதன்மைப்படுத்தி எழுதாது, பணத்துக்கு எழுதுபவர்கள் இவர்கள். சமூகத்தில் இருந்து அன்னியமான தனிமனிதனையோ குழுவையோ, சமூகத்தில் இருந்து வேறுபடுத்தி பார்க்க முடிவதில்லை.  

புலி தனக்குள் சாதியைக் கடைபிடிக்கவில்லை என்றால், அது "முற்போக்கு" இயக்கமாம். பொது விடுதிகளில் அல்லது பொது இடங்களில் சாதி பார்க்காமல் பழகினால், அவர்கள் முற்போக்கானவர்கள். பிரதமராக இருந்த வாஜ்பேயும், ஜனாதிபதியாக இருந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கே.ஆர்.நாராயணனும்; ஒன்றாக கூடி இந்துத்துவ சாதிய ஆட்சியை தாழ்த்தப்பட்ட மக்கள் மேல் ஏவிய போது கூட, அவர்கள் தமக்குள் என்றும் சாதி பார்க்கவில்லை.

புலிகள் தமக்குள் சாதி பார்க்கவில்லை, ஆணாதிக்கத்தை கையாள்வதில்லை, முதலாளித்துவ உறவைப் பேணுவதில்லை, பிரதேச வேறுபாட்டை கடைப்பிடிப்பதில்லை, எனவே அதை அவர்கள் மேல் குற்றம்சாட்ட முடியாது. "யாழ் மேட்டுக்குடி வெள்ளாளரின் செயல்களுக்கு விடுதலைப் புலிகளைக் குற்றம் சுமத்த முடியாது." இதுதான் யமுனாவின் "மார்க்சிய" ஆய்வு.

யமுனா ராஜேந்திரன் என்ன கூறுகின்றார். புலி தனக்குள் சாதி பார்க்கவில்லை என்றால், அது சாதிய சமூகத்தை பாதுகாத்த இயக்கமல்ல என்கின்றார். புலி தனக்குள் பிரதேச வேறுபாட்டை கடைப்பிடிக்கவில்லை என்றால், அது பிரதேசவாதத்தை பாதுகாத்த இயக்கமல்ல என்கின்றார்.  புலிகள் தனக்குள் ஆணாதிக்கத்தை கடைப்பிடிக்கவில்லை என்றால், ஆணாதிக்க சமூகத்தை பாதுகாத்த இயக்கமல்ல என்கின்றார்.

பேரினவாத அரசு புலியைக்காட்டி, அவர்களிடமிருந்து தமிழரை விடுவித்ததாக கூறியது. புலியிடமிருந்து தமிழரை விடுவித்த போதும், தன்சொந்த இனவாதத்தில் இருந்து மக்களை விடுவிக்கவில்லை. இதைத்தான் இன்று மக்கள் இந்த தேர்தல் மூலம், மீளவும் தெளிவுபடுத்தியுள்ளனர்.

இக் கைது புலித் தலைமையின் அழிப்பின் பின் உருவான மற்றொரு அதிர்ச்சி தான். பெரும்பான்மை தமிழர்கள் வைக்கும் நம்பி;க்கைகள் மீதான, மற்றொரு அரசியல் அடிதான். பேரினவாதம் தமிழினம் மீதான ஒடுக்குமுறையை கையாள்வதில், மேலும் ஒருபடி இதன் மூலம் முன்னேறுகின்றது.

புலிகள் தம் உயிரைக் பாதுகாக்க, வன்னியில் மக்களைப் பணயமாக்கி அவர்களைப் பலியிட்டனர். வெளிப்படையாக புலிகள் மக்கள் மேல் துப்பாக்கியை நீட்டினர். தம் பலியிட்டுக்கு அடங்க மறுத்தவர்களையும், தப்பியோடியவர்களையும் அடித்தார்கள் சுட்டார்கள் கொன்றார்கள். இதற்கென்று ஒரு லும்பன் கும்பலை, புலித்தலைமை பயன்படுத்தியது.

புலத்து மாபியாப் புலிகள், பினாமிச் சொத்துகளை பொதுநிதியமாக்க முனையவில்லை. அதை தமக்குள் பங்கு போட்டு தின்னவே முனைகின்றது. இதற்கு பற்பல வேஷங்கள். இதில் தம்மால் ஏமாற்றி காட்டிக்கொடுத்து படுகொலை செய்யப்பட்ட பிரபாகரனுக்கும், அஞ்சலி நடத்த முனைகின்றனர். 

வன்னி திறந்தவெளிச் சிறைமுகாம், அகதிகள், தமிழ்மக்கள் நலன் என்று, புலிப்பினாமிகளின் உளறல்கள் ஒருபுறம். மறுபக்கத்தில் இந்தப் பினாமிகள் தங்களிடம் குவித்து வைத்துள்ள  பொதுச்சொத்தை, தங்களுடையதாக்க தமிழ்மக்களைச் சொல்லி நாய்ச் சண்டையில் ஈடுபடுகின்றனர். தமிழ்மக்கள் பற்றிய அக்கறை எதுவும் இதில் இருப்பதில்லை.

கடந்து போன எம் வரலாற்று இருட்டுக்கு எதிராக நடைமுறையில் தொடர்ந்து போராட முடியாது அரசியல் ரீதியாக வக்கற்றுப் போனவர்கள், புதிய வரலாற்றுக்கு எப்படித்தான் அரசியல் ரீதியாக ஒளிகொடுக்க முடியும்!? மக்களின் விடுதலையை வழிகாட்டும் பாட்டாளி வர்க்க அரசியலை முன்வைத்து, அதற்காக எந்த ஒரு பாசிச சூழலையும் எதிர்கொண்டு எதிர்வினையாற்றுவது தான் நடைமுறை. இதை கடந்த எம் வரலாற்றில் யார் தான் செய்தார்கள்!?

சமகால நிகழ்வுகள் மீது, உடனுக்குடன் வழிகாட்டி எதிர்வினையாற்றுவது தான் நடைமுறை. இதைச் செய்யாத, செய்ய முனையாத அனைவரும் சந்தர்ப்பவாதிகள். சமூகத்துடன் சேர்ந்து  எதிர்வினையாற்றாதவர்கள், நிலவும் சூழலுக்குள் விலாங்கு மீன் போல், வழுக்கி தப்பித்து நெளிபவர்கள். எந்தச் சூழ்நிலையிலும் மக்களை வழிகாட்ட முடியாதவர்கள்.

மக்களுக்கும் பாசிசத்துக்கும் இடையிலுள்ள வேறுபாட்டை புரிந்து கொள்வதற்கு, சமூகத்தின் சராசரி அரசியல் மட்டம் என்பது வளர்ச்சி பெற்று இருக்க வேண்டும். இதற்கமைய இடதுசாரிய சமூகக் கூறு, அரசியல் தலையீட்டை உருவாக்கியிருக்க வேண்டும். இந்த நிலைமையை அடைய முடியாத வண்ணம், சமூகத்தின் உயிர்த்துடிப்பான சமூகக் கூறுகள் அழிக்கப்பட்ட நிலையில், மீண்டும் பாசிசம் மக்கள் வேஷம் போடுகின்றது.

 

மகிந்த குடும்பம், தன்னைச் சுற்றி ஒரு கூலிக்குழுவை உருவாக்கி வருகின்றது. இதை அடிப்படையாகக் கொண்டு, நாட்டை தனக்கு கீழ் மென்மேலும் அடிமைப்படுத்த முனைகின்றது. இந்த வகையில் இராணுவத்திற்குள் நடக்கும் குழிபறிப்புகள், கைதுகள், பதவி இறக்கங்கள், இட மாற்றங்கள் எல்லாம், தம் குடும்ப பாசிச அதிகாரத்தை தக்க வைக்கவும், அதை பலப்படுத்தவும் செய்கின்ற தில்லுமுல்லுகள் தான்.

போராட்டத்தின் பெயரில் மந்தையாக வளர்க்கப்பட்ட அடிமையினத்தின் மேல், மற்றொரு வெட்கக்கேடான அரசியல் திணிப்பு. தமிழ்மக்களை தொடர்ந்து மாபியாக்கள் வழிநடத்த முடியும் என்று நம்பும் அடி முட்டாள்தனத்தின் மேல், துரோகிகள் தமக்குத்தாமே  செங்கம்பளம் விரிக்க முனைகின்றனர். 

மக்களின் தேவைக்காக வழங்கப்பட்ட இரண்டு குளிரூட்டப்பட்ட வாகனத்தை, கருணா என்ற எடுபிடி பாசிசக் கும்பல் எப்படி அபகரித்தது என்ற செய்தியை அண்மையில் அதிரடி இணையமும், இலங்கைநெற்றும் வெளியிட்டது. இது தான், இந்த உடனடியான பாசிச  மிரட்டலுக்கான காரணம். தமக்கு மட்டும் "ஜனநாயகம்" பேசியவர்கள், புலிப்பாசிசம் மட்டும் பேசியவர்கள், இந்த நிகழ்வையிட்டு அலட்டிக் கொள்ளவில்லை.  

லங்கா நியூஸ் வெப் இணையம் தங்கள் ஊடகவியல் தில்லுமுல்லுகளை ஒத்துக்கொள்ள மறுக்கும் போது, அதன் பின்னணியும் அதன் நோக்கமும் என்ன என்ற கேள்வி எழுகின்றது.

இது என் மீதான அரசியல் அழுத்தங்களாகின்றது. இதன் மீதான எதிர்வினை,  இறுதியான 20 வருடத்தில், தனித்து நிற்கும் அரசியல் சூழல் எனக்கு எற்படுத்தியது. மக்கள் அரசியல், மக்களின் விடுதலை, இதை முன்னிறுத்தி இதற்கு எதிரான அனைத்துப் போக்குகளையும் நான் தனித்து எதிர்கொண்டது என்பது இயல்பில் என்னை தனிமைப்படுத்தியது.

புகலி இணையத்தளம் (www.puhali.com ) மீது நடத்தப்பட்ட தாக்குதல் மூலம், அவ்விணையத்தை பாசிட்டுகள் படுகொலை செய்துள்ளனர். ஆளைப் போடு அல்லது கருத்தை முடக்கு என்பது, பாசிச சிந்தாந்தத்தின் அரசியல் மொழியாகும். "ஜனநாயகம், சுதந்திரம்" பேசுகின்றவர்கள், மக்களுக்கு உண்மைகளை எடுத்து சொல்வதை விரும்புவதில்லை.

பல விடையங்களை பேசியாக வேண்டும். தோழமையுடனான அரசியல், முட்டி மோதாத அரசியல், இந்தப் போக்குகளுடன் நேரடியாக விவாதிக்க முடியாத தடைகள் இயல்பாக  எம்மை பற்றிய எதிர்மறைக் கூறுகளுடன் பயணிக்கின்றது. இன்று இது எமக்கும், எமது அரசியலுக்கும் எதிராக படிப்படியாக மாறுகின்றது.

கடந்த 30 ஆண்டுகளில் தமிழ் பாசிச சிந்தனை முறை தன்வழியில் பேரினவாதத்தை ஒழித்துகட்டுவதாக கூறி அந்த பேரினவாதத்துக்கே அது இரையானது. அதேநேரம் அது தமிழ் பாசிசமல்லாத அனைத்து சமூக அரசியல் அடித்தளங்களையும் அழித்தது. இதன் மூலம் இன்று பேரினவாதம் தமிழினத்தின் வாழ்வுசார் கூறுகள் அனைத்தையும் சிதைத்தும் அழித்தும்  வருகின்றது.

இவர்கள் எந்த வேஷமும் போட முடியாது. மூடிமறைத்து, சமூக விரோத வேஷம் மட்டும்தான் போட முடியும். புலிகள் முதல் அரசு வரை மனித விரோதங்களை விதைத்தது. மனித அவலங்களையே தங்கள், அரசியல் விளைவாக்கியவர்கள்.

சமூக நோக்கமற்ற ஊடகங்களின் நோக்கம், மக்களை ஏய்த்துப் பிழைப்பதுதான். உண்மை என்பது, சமூக நோக்குடன் தொடர்புடையது. சமூக நோக்கமற்ற 'உண்மையை" பேசுவதாக கூறுவது மாபெரும் மோசடி. அதாவது தகவலை அடிப்படையாகக் கொண்டு ஒரு வியாபாரம்.

பெயரளவிலான பாராளுமன்ற ஜனநாயகம் தான் இலங்கையில் நிலவுகின்றது அது தன் சட்டம் நீதி என அனைத்தையும், பொதுமக்களுக்கு மறுதலிக்கின்றது. மகிந்தா தலைமையிலான ஒரு கொலைகாரக் கும்பலின் பாசிச படுகொலை ஆட்சியை, சமூகத்தின் ஒரு பொது ஒழுங்காக நாட்டில் நிறுவி வருகின்றது.

இதுவோ புலத்து புலிப்பினாமிகளின் சித்து விளையாட்டு. அரசியல் வறுமையின் வக்கிரம். பாதிக்கப்பட்ட மக்களை வைத்தே, தங்கள் குறுகிய சுயநலனை அடையமுனைகின்றனர்.

தலைவர் உயிருடனில்லை என்று கூறும் நாடு கடந்த தமிழீழக்காரரும், தலைவர் இன்னமும் உயிருடன் இருப்பதாக கூறுவோரும், எதற்காக தமக்குள் முரண்படுகின்றனர்? மக்களுக்காகவா! அல்லது தம் சுயநலனுக்காகவா? மக்களுக்காக எனின், எப்படி?

அரச பாசிசம், தன் வதைமுகாமில் உள்ள மருத்துவர்களைக் கொண்டு இப்படி அறிவிக்கின்றது. தன் போர்க்குற்றத்திலான உண்மைகளை எல்லாம், இப்படி தன் பாசிச வழயில் பொய்யாக்க முனைகின்றது. அறிவு நாணயம் எதுவுமற்ற வகையில், தங்கள் இரும்புப்பிடிகொண்ட உருட்டல் மிரட்டல்கள் மூலம், உலகத்தையே தலைகீழாக்கி காட்ட முனைகின்றனர் பாசிட்டுகள்.

புலத்து இலக்கியச்சந்திப்பு இம்முறை மகிந்தா அரசின் "ஜனநாயகத்" தூண்களின் துணையுடன், அதன் பாசிசப் பல்லவியுடன் தான் அரங்கேறியது. "ஜனநாயகத்தை" புலிப் பாசிசத்திடம் இருந்து மீட்டதாக கூறும் கூட்டத்தின் கும்மியடிப்புடன் தான், இம்முறை இலக்கியச் சந்திப்பு என்னும் "ஜனநாயகம்" புழுத்தது. மக்களின் ஜனநாயகத்தை மறுக்கும் "ஜனநாயக பேர்வழிகள்", ஜனநாயகத்தின் பெயரில் சந்தித்துக்கொண்டனர். இவர்கள் தமக்கு மட்டும் "ஜனநாயகத்தைக்" கோரி, அதன் மூலம் மக்கள் ஜனநாயகத்தையே மறுத்தவர்கள்.

இடதுசாரியம், முற்போக்கு, மார்க்சியம் பேசியபடி மானுட விரோதியாக உள்ள ஆதவன் தீட்சண்யாவுக்கும், தமிழ் தேசியத்தின் பெயரில் புலியிசம் பேசும் தமிழ்நதிக்கும் இடையில், பல மானிடம் சார்ந்த விடையங்கள் கொச்சைப்படுத்தப் படுகின்றது. இவை இந்திய எழுத்தாளர் தளத்தில், இவை மலினப்படுகின்றது.

வன்னி நிலம், வன்னி நீர், வன்னி மக்கள் என்று அனைத்தையும், பன்னாட்டு நிறுவனங்களுக்கு பேரினவாத அரசு விற்று வருகின்றது. வன்னியின் "அபிவிருத்தி", "வடக்கின் வசந்தம்" என்ற பெயரில, இவை அரங்கேறுகின்றது. மக்களின் சுதந்திரமான வாழ்வு, சுதந்திரமான உழைப்பு, சுதந்திரமான நடமாட்டம் என அனைத்தும், இனவாதிகளுடன் சேர்ந்து மண்ணை ஆக்கிரமிக்கும் பன்நாட்டு நிறுவனங்களால் "அபிவிருத்தி" என்ற பெயரில் பறிக்கும் கூட்டுச்சதி இங்கு அரங்கேறுகின்றது.

எத்தனையோ மக்களை அனாதையாகக் கொன்றவர்கள் புலிகள். ஆனால் தன் தலைவரை அதே மாதிரி கொன்று போட்டுள்ள போது எதுவும் நடவாத மாதிரி நடிக்கின்றனர். பிரபாகரனின் உடலை தங்கள் தலைவரின் உடலல்ல என்று கூறி, மீண்டும் அவரை அனாதையாகவே தூக்கியெறிந்தனர். இப்படி அனாதையாக மடிந்த பிரபாகரனுக்கு, இன்று யாரும் அஞ்சலி கூட செலுத்த முன்வரவில்லை. 

உடல் அசைவை, உடலின் மொழியாக்கியவன் மைக்கேல் ஜாக்சன். இந்த திறமையை கடைவிரித்து, நுகர்வாக விற்றது அமெரிக்கா ஏகாதிபத்தியம். அவனின் வேகமான அசைவை, மாறி வந்த உலக ஒழுங்குக்கு ஏற்ப அமெரிக்கா வடித்தெடுத்தது. இப்படி மைக்கேல் ஜாக்சன் அமெரிக்காவின் கதாநாயகனானான். இதனால் பணத்தில் மிதக்கத் தொடங்கியவன், அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் துணையுடன் உலகப் புகழ் பெற்றான்.

சிங்கள இராணுவ இயந்திரம் மூலமான பௌத்த ஆக்கிரமிப்பையும், சிங்களக் குடியேற்றத்தையும் நியாயப்படுத்துகின்றனர், தனக்கு மட்டும் "ஜனநாயகம்" கோரிய மரமண்டைகள்.

ஜனநாயகவேஷம் போட்டு குலைக்கும் கூட்டம், இனக்களையெடுப்பை புலிக் களையெடுப்பாக சித்தரிக்கின்றது. நாட்டில் அமைதி மற்றும் யுத்தமற்ற சூழல் நிலவ, இந்தக் களையெடுப்பு அவசியம் என்கின்றது. இப்படி மகிந்தாவின் பாசிசத்துக்கு முன்னால், விளக்கு பிடித்துச் செல்லுகின்றனர். கேட்பாட்டு ரீதியாக, நடைமுறை ரீதியாக, இதை அவர்கள் செய்யத் தயாராகவே உள்ளனர். இவர்கள் வேறு யாருமில்லை, தமக்கு மட்டும் "ஜனநாயகம்" பேசும், "ஜனநாயக" மூதேவிகள்.  

மகிந்தாவின் பாசிசம் மக்களுக்கானதே என்று வைக்கின்ற வாதங்கள் அனைத்தும், தவிர்க்க முடியாதவை என்கின்றனர். இதற்கு வலுச்சேர்க்கும் வண்ணம், புலியின் கடந்த இதற்கு ஒப்பிட்டு நியாயம் செய்கின்றனர். நாங்கள் விரும்பியோ விரும்பாவிட்டாலோ, இதை ஏற்றேயாக வேண்டும் என்கின்றனர்.

மக்களின் விடுதலைக்காக ஒரு அரசியலை முன் வைத்து, அவர்களுக்காக போராட முடியாதவர்கள்  யார்? இதைச் செய்யாத அனைத்தும், மக்களுக்கு எதிரானது. இதுவே, வெளிப்படையான உண்மை.

மகிந்தாவை நம்பு, மக்களை நம்பாதே. மகிந்தா அரசியலை வை, மக்கள் அரசியலை வையாதே. மகிந்தாவை நம்புவதா? என்ற இந்தக் கேள்வியின் பின்னுள்ள அரசியல் நோக்கம், மக்கள் அரசியலை மீண்டும் மறுப்பது தான். இதன் மூலம் மகிந்தாவின் பாசிச சிந்தனையை ஆதரிப்பதுதான்.

இன்று தமிழ்மக்கள் அறிந்திருக்கவும், அதில் நாம் பல விடையத்தை கற்றுக்கொள்ளவும், இரண்டு இணையங்கள் உள்ளது. இன்று தமிழ்மக்கள் தம்மைத்தாம் அறிந்து கொள்ள வேண்டிய காலம். சகல அறநெறிகளையும் இழந்து நிற்கின்றது எமது சமூகம். சமூகம் தன் சொந்த அறியாமையில் இருந்து மீள, கற்றல் மிக முதன்மையானது.

வன்னிமுகாமில் உள்ள இளம் பெண் ஒருவருடனான உரையாடலின் போது, அள்ளிக் கொட்டிய குமுறல் தான் "நாசமாகப் போவாங்கள், அறுவாங்கள்" என்று திட்ட வைத்தது. அடக்கி ஒடுங்கிக் கிடக்கும் கோபங்கள், போராட்டங்கள், இப்படித்தான் குமுறி வெடித்தெழுகின்றது. சமாதான காலத்தில் இதே பெண், தமிழீழம் மிக விரைவில் மலரும் என்றவர். அப்படியா என்ற போது, எம்மை எள்ளி நகையாடிக் கதைத்தவர்.

இது வன்னி நாசிய முகாமில் நடக்கும் புதிய வியாபாரம். சிங்கள பேரினவாத போர்க் குற்றவாளிகள், தாங்கள் நடத்திய போர்க் குற்றத்தை மறைக்க பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களையே சிறை வைத்துள்ளனர். அவர்களுடன் வெளியார் உரையாடத் தடைவிதித்துள்ளனர்.

தேசியத்தில் வர்க்கமில்லை என்று, தமிழ் தேசியத்தை அழித்தவர்கள், இப்படி சன்னி கண்டு புலம்புகின்றனர். வேடிக்கையான குதர்க்கம். தமிழ்மக்களை தமிழ்தேசியத்தின் பெயரில் அழித்தவர்கள், தமது புலித் தமிழ் தேசியத்தை வர்க்கக் கண்ணோட்டம் அழிக்கப் போவதாக குமுறுகின்றனர். வேல் தர்மா என்ற இணைய பதிவாளர் "ஈழப் பிரச்சனையும் வர்க்கக் கண்ணோட்டமும்" என்ற தலைப்பில், தமிழ்மக்களை அழித்த புலித்தேசியத்தைப் பாதுகாக்க பொங்கி எழுகின்றார்.

போராட்டத்துக்கு விரோதமான உனது செயல்கள் தான், தமிழருக்கு எதிரான ஒடுக்கப்பட்ட சிங்களமக்களின் எதிர்வினையாகியது. நீ அரசுக்கு எதிராக மட்டும் போராடி, சிங்களமக்களின் அவலங்களுக்கு நீ குரல் கொடுத்து இருந்தால், உன்னை அவர்கள் போற்றியிருப்பார்கள். உன்னை அவர்கள், தங்கள் எதிரியாக பார்த்திருக்கமாட்டார்கள்.

இறந்த ஒருவரை இறக்கவில்லை என்று கூறுவது, ஒரு சமூகம் தன் பகுத்தறிவைக் கூட  இழந்து நிற்கின்றது என்பதே அர்த்தமாகும். இப்படி இறக்கவில்லை என்பது ஆகப் பெரும்பான்மையிடம் உளவியல் சார்ந்த நோயாக இருப்பதைக் நாம் காணமுடியும். சிறுபான்மையிடம் இது பிழைப்பு சார்ந்தது. பினாமி சொத்துச் சார்ந்த அரசியல் மோசடி.

அவன் உன்னைப்பற்றி என்ன நினைக்கின்றான் என்பதற்கு முதல், நீ அவனைப்பற்றி என்ன நினைக்கின்றாய் என்பதுதான் முதன்மையானது. நீ சேர்ந்து வாழத் தயாரா!? அதற்காக முயன்றாயா!? எப்படி, எந்த வழியில்!?

மக்களுக்கு எதிரான கடந்தகால புலிப் பாசிசத்தை, சுயவிமர்சனம் விமர்சனம் செய்யாத பாசிசத்துக்கான புதுப் புலுடாப் பிரகடனம். தமிழினத்தை தொடர்ந்து தமக்குள் அடிமையாக வைத்திருக்க, வலது பாசிட்டுகள் புலுடாப் பிரகடனம்.  

இலங்கை வாழ் ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரும் ஒன்று சேர்வதன் மூலம் தான், அனைத்து பிரிவு மக்களும் தத்தம் உரிமைகளைப் பெறமுடியும். இது மட்டும்தான், மக்கள் தம் உரிமைகளைப் பெறவுள்ள ஒரேயொரு மாற்றுவழி. தனித்தனியாக பிரிந்து நின்றும், முரண்பட்டும் இதைப் பெறமுடியாது.

மூன்று பத்தாண்டுகளாக நிலவிய ஆயுதப் போராட்டம், இன்று ஒரு தீர்வுமின்றி முடிவுக்கு வந்துள்ளது. ஆனால் இதற்கு அரசியல் அடிப்படையாக இருந்த இன முரண்பாடு, அரசியல் ரீதியாக இன்னமும் முடிவுக்கு வந்துவிடவில்லை. மாறாக மிக மோசமான ஒரு இனவழிப்பு, பாசிச வடிவத்தை எட்டியுள்ளது. இதை இன்று எதிர்கொள்ளும் தமிழர் தரப்பின்றி, தமிழினம் அனாதையாகியுள்ளனர்.

மக்களுக்காக நிற்க முடியாதவர்கள், அனைத்தையும் புலி அல்லது அரசுக்கூடாக பார்த்தவர்கள், இன்று இதற்கூடாகவே சிந்தித்துக் காட்ட முனைகின்றனர். பாரிய குற்றங்களைக் கூட, எதிர்த்தரப்பின் செயலாக சித்தரிக்கின்ற திருகுதாளங்களும், அரசியல் பித்தலாட்ட முயற்சிகளும். இலங்கையில் நடந்தவற்றுக்கு எதிராக ஒரு சுயாதீனமாக விசாரணையைக் கூட கோர மறுக்கின்ற தர்க்கங்கள், புரட்டல்கள். கடந்தவை எவையும் போர் குற்றங்களல்ல என்று, காலம், நேரம், இடம், சூழலைக் காட்டி அரசியல் பித்தலாட்டங்கள். 

புலிகள் சிறுவர்களை தம் படையணியில் இணைத்ததற்கு எதிராக குரல் எழுப்பியவர்கள், 12 வயது அப்பாவி சிறுவனை அவனின் தந்தையின் முன் படுகொலை செய்ததையிட்டு அலட்டிக்கொள்ளவில்லை. இந்தப் படுகொலையை, மனிதவுரிமைக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க அறிக்கை, மீள உறுதி செய்துள்ளது.

இதற்கு மாறாக சுயவிமர்சனம் செய்ய மறுக்கின்ற, பொதுக்கொள்கையிலான வேலைத்திட்டத்தையே புலி கோருகின்றது. "சுற்றிச்சுற்றி சுப்பரின் கொல்லைக்குள்", கயிறு திரிக்கவே முனைகின்றனர்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆசிரியரான சேகர் குப்தாவிற்கு, என்.டி.ரி.வி.யின் “வோக் த ரோக்" நிகழ்ச்சியில் பேரினவாதியான மகிந்த ராஜபக்ஷ பேட்டியளித்தபோது தான், 100 உட்பட்ட பொதுமக்களே யுத்தத்தில் இறந்ததாக கூறுகின்றார். மக்களைக் கொன்று குவித்துவிட்டு,  பாசிட்டுகளுக்கே உரிய கொழுப்புடன் பதிலளிக்கின்றான்.

அரசுக்கு எதிராக தமிழ்மக்கள் தமக்காக போராடத் தடையாக இருந்தது, இருப்பது புலி. இந்தப் புலியை விமர்சிப்பதை, அரசுக்கு ஆதரவானது என்பது எப்படி? இவை புலிக்கண்ணாடிக்கு ஊடாக எவற்றையும் பார்ப்பதுதான். பகுத்தறிவற்ற தமிழினவெறிக்கு ஊடாக, அறிவிழந்து பார்ப்பதுதான். புலிகள் முதல் தமிழ்நாட்டு பிழைப்புவாத தமிழினக் கும்பல்களை விமர்சிக்காமல், தமிழ் மக்களுக்கு ஒரு துரும்பைக் கூட நேர்மையாக முன்வைக்க முடியாது.

இலங்கை அதிபயங்கரமான பாசிச சூழலுக்குள் நகர்கின்றது. அரசு எதை நினைக்கின்றதோ, அதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதை மீறுபவர்கள் அனைவரும், இந்த அரசின் பாசிசப் பயங்கரவாதத்தை நடைமுறையில் எதிர்கொள்ள வேண்டும்.

உழைத்து வாழும் தமிழனை, உழைத்து வாழும் ஐரோப்பியனுக்கு எதிராக தேர்தலில் வாக்களிக்கக் கோரும் புலத்துப் புலியிசம், தமிழ் மக்களுக்கே எதிரானது. ஐரோப்பிய மக்களுக்கு எதிரானது. உழைக்கும் மக்களை பிரித்தாளும் ஏகாதிபத்திய நலனுக்கு சார்பானது. இதுதான் புலத்து வலதுசாரிய புலியிசமாகும்.

இன்று பேரினவாத அரசு இலங்கை முழுக்க பேயாட்டமாடுகின்றது. புலிகள் மண்ணில் அழிக்கப்பட்ட நிலையில், அது தனித்து அனைத்து மக்கள் மீதும் பாசிசப் பயங்கரவாதத்தையும் மக்கள் மேல் ஏவிவிட்டுள்ளது. தமிழினம் புலிப்பாசிசத்தால் தன் ஆன்மாவை இழந்து, நடைப்பிணமாக கைகட்டி நிற்கின்றனர். 

புலிகள் தோல்விக்கு, இந்தியா, சீனா, பாக்கிஸ்தான், ருசியா போன்ற நாடுகளின் உதவிதான் காரணம் என்கின்றனர் புலிகள். வேறு சிலர் புலிகள் ஆரம்ப காலத்தில் விட்ட தவறுகள் காரணம் என்கின்றனர். இந்தியாவில் ராஜீவ் காந்தி கொலை காரணம் என்கின்றனர். இப்படி புலி, புலி ஆதரவாளர்கள் பல காரணத்தைக் கூறுகின்றனர்.

இன்று இனவழிப்பு மூலம் மக்கள் கொல்லப்படுவதை மறுக்கும் இந்தக் கொலைகாரன், அன்று மக்களை  கொல்லப்படுவதற்கு எதிரான ஒருவனாக இருப்பதைப் பாருங்கள். 1989-1990 இல் சிங்கள் இளைஞனைக் கொன்ற அதே பொலிஸ், அதே இராணுவம், இன்று தமிழனைக்  கொல்லுகின்றது.

இன்றுவரை மக்களுக்காகவே ஏதோ நடந்து வந்தது போல், புதிதாக இந்தக் கேள்வி. பலருக்கு நம்பிக்கையூட்டிய புலிகள், இன்று இல்லாத வெற்றிடம் தான் பலருக்கு. இதுவே கேள்வியாகி நிற்கின்றது. மக்கள் அன்றும் சரி இன்றும் சரி, தமக்கு இவர்களால் எந்த விடிவும் கிடையாது என்பதை, தம் வாழ்வு சார்ந்து புரிந்தே வைத்திருந்தனர்.

மேடைக்கு ஏற்ப ஆட்டம். ஆட்களுக்கு ஏற்ப அரசியல். போலிக் கம்யூனிசத்தின்  புதுவிசைக்கு ஏற்ப பேட்டி. அரசு – புலிக்கு எதிராக, அரசியல் நீக்கம் செய்த விமர்சனங்கள். ஏகாதிபத்திய நிலைக்கு ஏற்ப தாளம். இதுவே சுசீந்திரன் முதல் பலரின் இன்றைய அரசியல் கூட. மக்கள் அரசியலை முன்னிறுத்தி, அதற்காக எந்த முன்முயற்சியும் பொதுவில் கிடையாது. இதற்கு எதிராகத்தான் பயணிக்கின்றனர். 

எங்கும் பொம்மலாட்டம் ஆடிகாட்டும் சீரழிவுவாதியான சுசீந்திரன் 'இனஅழிப்பு நடக்கிறதாக கருதறாங்க. ஆனால் என் பார்வையில் அங்கு இன அழிப்பு நடைபெறவில்லை" என்கின்றான்.  சரி அங்கு நடந்தது என்ன? அரசு சொல்வது போல் புலி அழிப்பா!?

பெரும்பான்மையான தமிழ் மக்கள் தம் தலைவனாக நம்பிய ஒருவனின் உடலை அவமானப்படுத்துவது கூட, தமிழ் இனத்தையே அவமானப்படுத்துவது தான். இந்த நிலையில் அவனைக் கொன்று குதறிய விதம், தமிழினத்தின் மேலான ஒரு குற்றமாகும்.

புலித்தலைவர் வீர மரணம் அடைந்து விட்டார், இல்லையில்லை அவர் உயிருடன் உள்ளார் என்று கூறி, புலித் தலைவர்களை சரணடைய வைத்துக்கொன்ற தமது சொந்தத் துரோகத்தை மூடிமறைகின்றனர்.

புலித்தலைமை சரணடைந்த ஒரு நிலையில் தான் கொல்லப்பட்டுள்ளது. அதை இலங்கை அரசு செய்துள்ளது. இந்தப் பின்னணியில் இலங்கை அரசு மட்டும் சம்பந்தப்படவில்லை. மூன்றாம் தரப்புகள், வெளிநாட்டு புலித் தலைமையும் கூட சம்பந்தப்பட்டுள்ளது. இதை இவர்கள் மூடிமறைக்கின்றனர். ஏன் மூடிமறைக்கின்றனர் என்றால், இவர்கள் இந்தப் படுகொலை சதிக்கு உடந்தையாக இருந்;துள்ளனர் என்பதால் தான். இப்படி தமிழ் மக்களை ஏமாற்ற முனைகின்றனர்.

எம் மக்களின் பொது எதிரிக்கு எதிராக மரணித்துப் போன பல்வேறு வர்க்கங்களுக்கும், சமூகங்களுக்குமான இந்த அஞ்சலி அரசியல் ரீதியானவை. எம் மக்களின் பொது எதிரி, தன்னை தனிமைப்படுத்தி பலம்பெற்று நிற்கின்ற இன்றையநிலை. மக்களின் இரண்டாம் மூன்றாம் எதிரிகள் சிதைந்து சின்னாபின்னமாகி அழிந்து மரணிக்கும் இன்றைய நிலை. இந்த நிலையில் பிரதான எதிரிக்கு எதிராக மரணித்த அனைவருக்கும், நாம் அஞ்சலியை செலுத்தக் கோருகின்றோம்.

திட்டமிட்ட சதி மூலம் புலித்தலைமையும், அவர்கள் குடும்பமும் முற்றாக சரணடைய வைத்தே அழிக்கப்பட்டுள்ளது. அவர்களுடன் எஞ்சி இருந்ததாக நம்பப்படும் 2000 போராளிகளுக்கு கூட, இதுதான் கதி. இந்தச் சதி மூலமான சரணடைவின் பின், சித்திரவதைக் கூடங்களில் இன்னமும் சில தலைவர்கள் சிக்கி மரணிக்கின்றனர் என்பது வேதனையானது.

அனைத்தும், சர்வதேச சதியுடன் கூடிய ஒரு மோசடியின் பின்னணியில் அரங்கேறுகின்றது. துரோகம் மூலம் இவை மூடிமறைக்கப்படுகின்றது. பலருக்கு பல கேள்விகள், பல சந்தேகங்கள். இதை சுயவிசாரணை செய்ய யாரும் தயாராகவில்லை. என்னசெய்வது, ஏது செய்வது என்று தெரியாத, திரிசங்கு நிலை.

சரியான தலைமையால் அதை செய்திருக்க முடியும். தவறுகளை உடனுக்குடன் திருத்தக் கூடிய, தன் சுயவிமர்சனத்தைச் செய்யக் கூடிய எந்த தலைமையாலும் அதைச் செய்திருக்க முடியும். இது அரசியல் பண்பும், அரசியல் அடிப்படையும் இல்லாமையால் தான், புலிகள் தமது புதைகுழிக்குள் நின்று போரிட்டனர்.

அன்று 'மகாத்மா"காந்தி பகத்சிங்கை கொல்ல வெள்ளையனுக்கு நாள் நேரம் குறித்துக் கொடு;த்தான். இப்படித்தான் அவர்களை தூக்கில் ஏற்றுவித்தான் அந்தத் துரோகி காந்தி. அதே காந்தி வழிவந்த இந்தியா, இன்று நேரம் குறித்து கொடுக்க பேரினவாதப் பிசாசுகள் புலித்தலைவர்கள் மேலான படுகொலையை அரங்கேற்றியுள்ளது.

இன்று, இந்த மணி, இந்த நிமிடம், இந்தக் கணம், ஒரு பாரிய மனித அவலத்தின் மேல், ஒரு அழிப்பு யுத்தம் நடக்கின்றது. இது ஒரு இனத்தின் மேலாக நடக்கின்றது. ஆயிரம் ஆயிரம் மக்களை பலியிடுதல் இன்றி, இந்த அழித்தொழிப்பு நடக்கவில்லை. மக்கள் அனைவரும் வெளியேறி விட்டதாகக் கூறும் ஒரு பொய்ப்  பிரச்சாரம் மூலம் இந்த இனவழிப்பு உச்சத்தில் அரங்கேறுகின்றது.

புலிகளை அழிக்கவும், இதன் தலைமையை கைது செய்யவும் என்ற பெயரில், ஒரு இனவழிப்பே அரங்கேறியுள்ளது. வெடிகுண்டுகள் மாரியென பொழிய, அதற்குள் மக்கள் சிக்கி மரணிக்கின்றனர்.    

புலித்தலைமை முதல் புலிப்பினாமிய வலதுசாரி கும்பல் வரை, இதற்கான அரசியல் காரணத்தை தெரிந்து கொள்ள மறுக்கின்றது. தாமல்ல, பல காரணங்களைக் கற்பிக்க முனைகின்றது. தாங்கள் சரியாகவே இருந்ததாகவும், இருப்பதாகவும் இட்டுக்கட்ட முனைகின்றது. இப்படி அவர்கள் தாங்கள் கற்பிக்கும் காரணங்கள் ஊடாக, தமது தவறான வலதுசாரிய மக்கள் விரோத அரசியலை தொடர்ந்து நகர்த்த முனைகின்றனர். தாமல்லாத காரணம் தான், இந்த தோல்விக்கான காரணம் என்ற சொல்ல முனைகின்றனர். 

புலி அரசியல் செத்துப் போகவில்லை. தமிழனை ஏமாற்றிப் பிழைக்கும் புதுக்கதையும், புதுப் படமும் தயாராகின்றது. புலித் தலைமைக்கு என்ன நடந்தது என்பது, எந்த நேரமும் ஒரு அரச செய்தியாக வெளிவரலாம். அது கைது அல்லது மரணம் அல்லது அவர்கள் பற்றிய எந்தத் தகவலும் இல்லை என்பது, இதில் நிச்சயமான ஒன்று.

காலக்கெடு பல விதிக்கப்பட்டது. நாட்கள் பல குறிக்கப்பட்டது. சில மணி நேரங்கள் கூட அறிவிக்கப்பட்டது. இருந்தும் பேரினவாத இனவழிப்பு யுத்தம், இன்னமும் முடிவுக்கு வரவில்லை. காரணம் என்ன!? 

பாசிசம் தன்னை பாதுகாக்க உண்மைகளை சார்ந்திருப்பதில்லை. மாறாக இல்லாத ஒன்றை தனக்கு சார்பாக புனைகின்றது. தமிழ் மக்களை பேரினவாதம் வகைதொகையின்றி கொல்லுகின்றது. புலி கொல்லக் கொடுக்கின்றது. இதை வைத்து புலிப் பாசிசம் தாம் தப்பிப் பிழைக்க பிரச்சாரம் செய்கின்றது.

புலிகள் தமிழ் மக்களை பணயம் வைத்திருப்பதாகக் கூறிக்கொண்டு, அவர்களை குறிவைத்துக் கொல்லுகின்றது இந்த அரச 'ஜனநாயகம்". இந்த ஜனநாயகத்தின் மகிமையோ, இன்று தாம் குண்டு போட்டு காயப்படுத்திய மக்களை மருத்துவமனையில் வைத்து கொல்லுகின்றது. மருத்துவ மனைகளையே, குண்டு வீசி அழிக்கின்றது.

 

புலிகளின் அழிவு, புலிக்குள் இருந்த பலரை புலிக்கு எதிரான அரங்கிற்கு கொண்டு வருகின்றது. புதிதாக கருத்துத்தளத்தில் இது பிரதிபலிக்கின்றது. மறுபக்கத்தில் அரசு சார்பானவர்கள் அம்பலமாவதால், இதற்கு வெளியில் பலர் தெளிவடைகின்றனர். இது இன்றைய புதிய அரசியல் நிகழ்ச்சிப் போக்காக உள்ளது.

பேரினவாத பாசிட்டுகள் நடத்தும் இனவழிப்பு யுத்தத்தை, அப்பாவி பொதுமக்கள் மேல் தான் நடத்துகின்றனர். இந்த அரசியல் உண்மையைத்தான் புலிப் பாசிசம் தனக்கு சார்பாக கொண்டு, மக்களை தனது யுத்த கருவிகளாவே தன் பின்னால் குவித்து வைத்துள்ளது. இப்படி இந்த யுத்தத்தின் வெற்றி தோல்வியை, யுத்தத்தில் ஈடுபடுபவர்கள் மக்களை கொல்லும் தம் வடிவத்தின் மூலம் கட்டமைக்கின்றனர்.

 

பெண் உடல், பாலியல் உறுப்புகள் கூட, யுத்தத்தில் ஒரு கருவியாகின்றது. பெண்கள் சந்திக்கின்ற நெருக்கடிகள் பாரியது. எல்லையற்றது. ஆணாதிக்க சமூக அமைப்பில் யுத்தம், விதவைகளை உற்பத்தி செய்கின்றது. பெண்ணின் உடல், பால் சார்ந்த உறுப்புகளை யுத்தம் மேய்கின்றது.

வெளிவராத, கண்டுகொள்ளாத, மற்றொரு மனித அவலம். ஆயிரம் ஆயிரம் சிங்கள இளைஞர்களின் மரணம், மூடிமறைக்கப்படுகின்றது. சிங்கள் சமூகத்துக்கு இனவெறியூட்டி, அதை சிங்கள தேசியமாக புணர்ந்து காட்டி, ஆயிரம் ஆயிரம் இளைஞர்களை வெறும் கூலி இராணுவமாக்கி, அதையே தன் பாசிச அரச இயந்திரத்தின் அச்சாக கொண்டுள்ளது

அரசும் புலியும் எம்மைச் சுற்றி கட்டமைத்த பாசிச அரசியல் சூழலின், நாம் என்றும் வெறும்  பார்வையாளராகவோ, கருத்தற்றவர்களாகவோ இருந்ததில்லை. நாம் எம் சூழலின் எல்லைக்குள் போராடியிருக்கின்றோம், சிந்தித்து இருக்கின்றோம், செயல்பட முனைந்திருக்கின்றோம்.

இன்று கிழக்கில் எது நடக்கின்றதோ, அதுதான் நாளை வடக்கிற்கும். இதையே சிங்கள மேலாதிக்கத்துக்கு தலைமை தாங்கும் 'மாண்புமிகு" பேரினவாதியான ஜனாதிபதியும் கூறுகின்றார்.

அனைத்து ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாகவும், நாம் முன் செல்ல வேண்டும். அரசு மற்றும் புலியுடன் இருக்க கூடிய அனைத்து விதமான அரசியல் உறவுகளுக்கும், அதை பிரதிநிதித்துவம் செய்யும் நபர்களுடனான அரசியல் உறவுகளுக்கும் முதலில் முடிவு கட்டவேண்டும்.

இந்தியாவானது பேரினவாத இனவொடுக்குமுறையை பயன்படுத்தி, இலங்கையை தன் பிராந்திய மேலாதிக்க பிடிக்குள் வைத்திருக்க முனைந்தது. இதுவே தமிழினத்துக்கு எதிரான, கடந்த 30 வருட வரலாறாகும். இதன் பின்னணியில் இந்தியா தமிழீழக் குழுக்களுக்கு பயிற்சி மற்றும் பணத்தை வழங்கி, அவற்றை தமது பிராந்திய நலனுக்கு ஏற்ற கூலிக் குழுக்களாக உருவாக்கியது.

பிரபாகரனின் தமிழீழம் இன்று பாப்பாத்தி ஜெயலலிதாவின் தமிழீழமாக மலர்கின்றது. அப்படி நம்புகின்ற, நம்ப வைக்கின்ற ஈழத் தமிழ் முட்டாள்கள். பெரும்பான்மை தமிழன் அரோகரா என்று கூறியபடி, அதற்கு பின்னால் எங்கே ஒடுகின்றோம் என்று தெரியாது ஓடுகின்றனர்.  பலதரம் தடுக்கி வீழ்ந்த இவர்கள், மீண்டும் மீண்டும் குருட்டு நம்பிக்கையுடன் எழுந்து ஒடுகின்றனர்.

மீண்டும் மீண்டும் தொடரும் கடத்தல்கள், படுகொலைகள், பாலியல் வன்முறைகள். கிழக்கின் 'உதயம்" பெற்றெடுத்த 'விடிவெள்ளிகள்" மற்றொரு குழந்தை தினுஷிகாவின் படுகொலையாக அதை அரங்கேற்றி காட்டியுள்ளது.

வவுனியா வதைமுகாமில் அப்பாவித் தமிழ்மக்களை அடைத்து வைத்து இனச்சுத்திகரிப்பு செய்யும் அதேநேரம், தமிழினத்தையே நலமடிக்கின்றனர். அரசுடன் சேர்ந்து இயங்கும் தமிழ் துரோகக் குழுக்களின் கண்காணிப்பின் கீழ், இவற்றை பேரினவாத அரசு அரங்கேற்றுகின்றது.

புலிகள் தாமல்லாத அனைத்தையும் பாசிச முறையில் மறுத்த போது உருவான முரண்பாடு என்பது, வெறும் புலியெதிர்ப்பு அரசியல் வரை மாறியது. இப்படி சென்றவர்களின் பெரும்பகுதி, புலியை ஒழிக்க பேரினவாதத்தையும் இந்தியப் பேய் அரசையும் ஆதரித்தனர்.

நீ ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் மக்களை கொல்லலாம் என்றால், நான் ஏன் என் மக்களை கொல்;லக் கூடாது. நீ அதைக் கேட்கக் கூடாது. அதைக் கேட்கும் உரிமை உனக்கு இல்லை என்கின்றான், மாண்புமிகு கொலைகார ஜனாதிபதி. கொல்வது என்பது, ஜனாதிபதியின் உரிமை. இந்தக் கொல்லும் உரிமையை எப்படி செய்வது என்பதில், 'எமக்கு யாரும் பாடம் நடத்த வேண்டாம்" என்கின்றான்.

புலிகள் வன்னி மக்கள் அனைவருக்கும் பயிற்சியை வழங்கியவர்கள். அப்படியிருக்க ஏன் அந்த மக்களுக்கு புலிகள் துப்பாக்கிகளை வழங்கவில்லை? இந்தக் கேள்வி, பல விடைகளுக்கு பதில் தருகின்றது.

தமிழ் மக்கள் மீண்டும் ஒரு துயர வாழ்வுக்குள் வீழ்ந்துள்ளனர். தமிழ்மக்களின் சொந்த விடுதலைக்கு எதிராக புலிகளின் எதிர்ப்புரட்சி கடந்த 30 ஆண்டுகள் ஆற்றிய நடவடிக்கைகளால், இன்று இது தன் சொந்த அந்திமத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் இவ்விடத்தை நிரப்புவது, புலியை விட மோசமான மற்றொரு எதிர்ப்புரட்சி கும்பலாகும். தமிழ் மக்களின் எதிரியும், எதிரியுடன் 30 ஆண்டு காலம் பயணித்து வந்த கூலிக் குழுக்களின் எதிர்ப்புரட்சி அரங்கேறியுள்ளது.

நாலு தரப்பு முரண்பாடு, புலியை அழிப்பதன் பெயரால் தமிழரை எப்படி கொல்லுவது என்பதில்; ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் இலங்கையில் குடும்ப ஆட்சியை பாசிச சர்வாதிகாரமாக நிறுவ, பாசிட்டுகள் உலக 'நாகரிக" ஒழுங்கின் மூக்கணாம் கயிற்றை அறுத்துக்கொண்டு மூசுகின்றனர். பல தரப்பு முரண்பாட்டுக்கு ஊடாக தமிழரைக் கொன்று, அதை இலங்கைக்கான ஜனநாயகமாக காட்ட முனைகின்றது.

மக்களை கொலைவெறியுடன் கொன்றுகுவித்து அவர்களை எதுவுமற்ற பரதேசியாக்கிவர்கள், அதை காட்டி இன்று நிவாரணம் கோருகின்றனர். புலியெதிர்ப்பு பேசிய  அரச கைக்கூலிகள், இதை காட்டி தமிழ் மக்களுக்கு பாய் விரிக்கின்றனர். அரசு சார்ந்து நின்று மதம் பரம்பும் கும்பல்கள், இதை பயன்படுத்தி மதத்தை பரப்பி மக்களுக்கு உதவுவதாக    காட்ட முனைகின்றது.

தன் மீதான ஓடுக்குமுறையை எதிர்கொண்டு போராடுவதுதான் மனித வரலாறு. இதை ஒடுக்கி, மக்களை யாரும் வெல்ல முடியாது. இந்தவகையில் ஒரு இனத்தின் உரிமையை மறுக்கவே, புலிப் பாசிசத்தைக் காட்டுகின்றனர்.

இதை எவ்வளவு மகிழ்ச்சியுடன் கூறி இன்று கூத்தாடுகின்றனர் அரச கைக்கூலிகள். தமிழ் மக்கள் பற்றிய இவர்கள் கருசனை, இப்படித்தான் பாசிசமாக கொப்பளிக்கின்றது. தமிழ் மக்கள் தம் உரிமைக்காக போராடமாட்டார்கள் என்று கூறுகின்றவன் என்ன சொல்ல முனைகின்றான்,

ஒரு இனம் இப்படி வதைக்கப்படுகின்றது. எம் மக்களை குண்டு வீசிக்கொன்றவர்கள். அதற்கு அஞ்சி தப்பி ஓடிவந்தவர்களை 'மீட்பின்" பெயரால் வளைத்துப் பிடித்தனர், பிடிக்கின்றனர். பின் அவர்களை நாலு சிறைக்கம்பிக்குள் கொண்டுவந்து சிறைவந்துள்ளனர்.

புலியின் தோல்வி போல் தான், புலம்பெயர் போராட்டங்களும் தோற்கின்றது. இரண்டுக்கும், ஒரே அரசியல் காரணம்தான். இளம்தோழர் ஒருவர் எம்மிடம் இதையொட்டி சில கேள்விகளை எழுப்பியுள்ளார். அதில் அவர்

கடந்தகாலத்தில் கடுமையாகப் புலிகளை விமர்சித்து வந்த நாம், இன்று அதை அரசுக்கு எதிராக செய்யத் தொடங்கியுள்ளோம். இந்த அரசியல்  நிலைப்பாடு என்பது, உடனடியான அரசியல் இலக்கை இனம் கண்டு கையாளப்படுகின்றது. இந்த வகையில் எமது விமர்சன முறைக்கான அரசியல் அடிப்படை மிகவும் துல்லியமானதும், தெளிவானதுமாகும்.

மிக நெருக்கடியான சூழலில், தமிழினத்தின் உரிமைக்கான குரலை முன்வைப்பது, முன்னெப்போதும் இல்லாத வகையில் சிரமமாகி வருகின்றது. எம்மைச் சுற்றி பல முனைத் தாக்குதல்கள். எதிர்ப்புரட்சி அரசியல் வீறு கொண்டு நிற்கின்றது. பேரினவாதத்தின் பின் வா என்று, சுற்றி சுற்றி மூளைச் சலவை செய்யப்படுகின்றது.

பேரினவாதம் தன் இனவழிப்பை குண்டுகள் மட்டும் போட்டுச் செய்யவில்லை. மொழி மூலமும் அதைச் செய்கின்றது. தமிழினத்தை அழிக்கும் வண்ணம் நடத்துகின்ற யுத்தத்தை, ஏதோ மனித விரோத கும்பலுக்கு எதிராக தாம் நடத்துவதாக காட்டமுனைகின்றது. இதற்கூடாக தன்னை  நியாயப்படுத்திக் கொள்கின்றது. இதற்கு மொழியையும் அது தேர்ந்தெடுத்துள்ளது.

அரசியலை துறந்தோடிய எம் சமூகத்தில், புலி-புலியெதிர்ப்பு என்று மூளைச்சலவை செய்யப்பட்ட சிந்தனைக்குள் ஒரு இனவழிப்பு அழகாக நியாயப்படுத்தப்படுகின்றது. இதுவொரு இனவழிப்பல்ல, அரசு-புலி என்ற தரகுமுதலாளித்துவ வர்க்கத்தின் சொந்த அழிவு யுத்தம் என்று எம்மை அரசியல் ரீதியாக திருத்த முனைகின்றனர். வெட்கக்கேடானதும், மானம் கெட்ட அரசியலாகும்.

காலாகாலமாக ஒரு இனத்தை ஒடுக்கி, உரிமைகளை மறுத்த அரசு, இன்று ஒரு இனப்படுகொலையை நடத்துகின்றது. காலகாலமாக எந்தனையோ இனவழிப்புக்களை நடத்தியவர்கள், இன்று ஆயிரக்கணக்கில் மக்களை படுகொலை செய்கின்றனர்.

இல்லை புலிக்கு எதிரானதாக கருதுகின்றவர்கள் தான், அரசியல் ரீதியாக திசை விலகுகின்றனர். புலியுடனான எமது போராட்டம், எதிரிக்கு எதிரான எமது போராட்டத்தை நடத்தும் அரசியல் உரிமைக்கான ஒன்றுதான். அது வர்க்க அடிப்படையில், அரசியல் ரீதியானது. நாம் எமது சொந்த வர்க்க தேசிய போராட்டத்தை நடத்தவிடாமல், புலிகள் எமக்கு தடைகளை ஏற்படுத்தினர், ஏற்படுத்துகின்றனர்.

இலங்கையில் இன்று தமிழினம் எதையும் பேச முடியாது, எழுத முடியாது, எந்த உரிமையையும் கோரமுடியாது. புல்லுருவிகளும், எட்டப்பர்களும், பதவி வேட்டைக்காரர்களுக்கு மட்டும், பேசும் உரிமையும், கருத்துச் சொல்லும் உரிமையும் உண்டு.

வல்லவர்கள், நல்லவர்கள், நேர்மையானவர்கள், முன் கை எடுக்கும் திறமைசாலிகள் என்று, பேரினவாத பாசிச அரசு இயந்திரத்தை புகழ்ந்து தள்ளுகின்றனர் 'ஊடகவியலாளர்கள்" வேடம் போட்ட புலியெதிர்ப்பு புதுக் கும்பல். தமிழினத்தை இனப்படுகொலையாகவே அரங்கேற்றும் கொலைகார இராணுவ இயந்திரத்திற்கு, மனித முகம் கொடுக்க முனைகின்றனர் புலம்பெயர் மாமாக்கள்.

அரசு முதல் ஏகாதிபத்தியம் வரை இன்று எதை புலிகளிடம் கோருகின்றனரோ, அதே அரசியல் கோரிக்கையுடன் கூலிக் குழுக்களும், 'ஜனநாயகவாதிகளும்", 'நடுநிலைவாதிகளும்",  'இடதுசாரிகளும்" அனைவரும் இணைகின்றனர். புலியிடம் சரணடை, ஆயுதத்தை கீழே வைக்கி என்கின்றனர். இதற்கு மாற்றாக, இவர்கள் ஏதாவது கோரிக்கையை வைக்கின்றார்களா!?

துரோகம் செய்யாது புலிகள் போராடி மடிந்தால், புலிகள் மீளவும் புத்துயிர்ப்பு பெற முடியாது. துரோகம் செய்தால், அரசுடன் சேர்ந்த கூலிக்குழுவாக நீடிப்பார்கள். இதற்கு வெளியில் முன்புபோல் அவர்கள் இருக்க முடியாது. இங்கு புலிகள் போராடி மடிந்தாலும், புலிகள் உருவாக்கிய வர்க்கம் தொடர்ந்து இருக்கும்.  ஆனால் அதன் பிரதிநிதியாக புலிகள் இருக்க முடியாது.

புலிகள் துரோகிகள், இனியும் செய்ய துரோகம் என்று ஒன்று அதனிடமில்லை என்று கூறிக்கொண்டு சரணடையக் கோருகின்றனர். யாரிடம்! தமிழ் மக்களின் எதிரியிடம். தமிழ் மக்களின் முதல் எதிரியுடன் புலிகள் சேர்வதையிட்டு, எமக்கு (பாட்டாளி வர்க்கத்தின் பெயரில் கூறுகின்றனர்) அக்கறையில்லை என்கின்றனர்.

புலிகள் சந்திக்கின்ற அரசியல் நெருக்கடி என்பது, இன்று இரண்டு வழிகளில் மட்டும்தான் தீர்க்கப்பட முடியும்.

 

1. துரோகத்தை செய்யும் ஒரு சரணடைவு


2. இறுதிவரை போராடி மடிவது.

 

இதற்கு வெளியில் புலிகள் தம் சொந்த வழியில் மீள்வது என்பது, இன்றைய இராணுவ சுற்றிவளைப்பில் சாத்தியமற்ற ஓன்றாக மாறிவிட்டது. இதை அவர்களே கைவிட்டுவிட்டனர்.

முதல் பகுதியில் புலி தன் சொந்த வர்க்கத்திடம் இன்னமும் அம்பலமாகாது இருப்பதையும், அதனால் அது இன்னமும் தன் வர்க்கத்தின் துணையுடன் நீடிக்க முனைகின்றது என்பதைப் பார்த்தோம். புலிகள் இன்று மக்களின் எதிரியிடம் தோற்கக் காரணமாக இருப்பது, புலிக்கும் மக்களுக்கும் இடையிலான முரண்பாடுதான்.

தமிழினத்தைச் சுற்றிய அரசியல் நிகழ்வுகள், அரசியல் திரிபுகளாக நெருக்கடியாக மாறுகின்றது. தொடர் நிகழ்சிகள், அவை மாறுகின்ற வேகம், அதையொட்டிய கருத்துகள் எல்லாம், இன்று நெருக்கடிக்குள்ளாகின்றது. எதிர்காலம் பற்றிய கேள்விகள் பல, முரண்பாடாகின்றது.

எம் இன உறவுகள் ஒரு கூட்டமாக எந்த நேரமும், கொடூரமாகவும் கோரமாகவும் கொல்லப்படுவார்கள் என்ற நிலை. யார் கொல்வார் என்பது தான், எமக்குத் தெரியாத புதிராகவுள்ளது. ஆனால் மக்களை கொல்லும் திட்டம் என்னவோ தயாராகவே உள்ளது.

சுத்திசுத்தி கடைசியில் புலியெதிர்ப்பு, தன் இலக்கு அரசை ஆதரிப்பதுதான் என்பதை வெளிப்படையாக சொல்லத்தொடங்கியுள்ளனர். புலிக்கு மட்டும் இன்று சேடமிழுக்கவில்லை, புலியெதிர்ப்புக்கும் வேறு போக்கிடம் எதுவும் கிடையாது. அரசின் பின்னால் அம்மணமாகவே பவனிவரத் தொடங்கியுள்ளனர்.

இந்த அரசியல் கேள்வி, எமக்கு புலி முத்திரை குத்தி விலகிச் செல்லும் அரசியலாக வெளிப்படுகின்றது. இது இயங்கியலை புரிந்துகொள்ள முடியாத, அற்பத்தனமான இருப்புக்கான அரசியலாக மாறுகின்றது. எமக்கு புலி முத்திரை குத்துவது, உணர்ச்சிவசப்பட்ட ஒன்றாக இதை திரித்து புரட்டி அனைத்தும், இதை அரசியல் காழ்ப்புடன் அணுகுவதாகும்.

அரசுடன் ஒட்டுண்ணியாக இருந்து பிழைக்கும் பிழைப்புவாத துரோகிகளை விட, புலிகள் மேலானவர்கள்;. தமிழ்மக்களை கூட்டம் கூட்டமாக கொல்லும் பேரினவாத அரசை நக்கும் ஓட்டுண்ணிகளை விட, தமிழ்மக்களைக் கொன்றபடி மரணிக்கும் புலிகள் மேலானவர்கள். ஒப்பீட்டில் மட்டுமல்ல, தமிழ்மக்களுக்கு புதிய துரோகியாக மாறாது, தாம் கட்டியமைத்த ஒரு இலட்சியத்துக்காக மரணிப்பதும் மேலானது.

புலிகளின் இறுதி யாத்திரை தொடங்கியுள்ளது. புலியெதிர்ப்பு கும்பலோ தன் துரோகத்துக்கு கிடைத்த வெற்றியாக இதை பறைசாற்றி, கொட்டு மேளமடித்தபடி கூத்தாடிக் கொக்கரிக்கின்றது. 

1987ம் ஆண்டு பங்குனி மாதம் 28ம் திகதி மலை 6.30 மணியளவில் தான் தீபன் எனக்கு அறிமுகமானான். என் காதுக்குள் திடீரென துப்பாக்கியை வைத்தவன், என்னை ஒரு காருக்குள் திணித்து கடத்த உதவினான்.

அரசு-புலி என்று இரு தளத்திலும், இதுவே இன்று அரசியல். இதில் ஒன்றைச் சார்ந்துதான்,  புலி-புலியெதிர்ப்புக் கருத்துகள். இப்படி தேசிய வெறியர்களும், தேசிய எதிர்ப்பு வெறியர்களும் மக்கள் விரோத உணர்வுடன் நடத்தும், பாசிச நாடகம். மக்களிள் விருப்பத்துக்கு மாறாக, பலாத்காரமான முடிவுகளை திணிக்கின்றனர். தம் அற்பத்தனமான சுரண்டும் வர்க்க விருப்பையே, மக்களின் பிணத்தின் மேலாக அடைய முனைகின்றனர்.  

 

புலியல்லாத அரசியல் தளம் இப்படித்தான் உள்ளது. புலியெதிர்ப்பு 'ஜனநாயகம்" பேசும் அனைவரும் பேரினவாத அரசின் வேலைத்திட்டத்தைக் கொண்டு தம் 'ஜனநாயகத்தை" நக்குகின்றனர்.

புலம்பெயர் புல்லுருவிகள் 28-29.03.2009 அன்று பேரினவாதத்துடன் கூடிக் குலாவிய போது, தாம் யுத்தத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்க வேண்டுமென்ற வேண்டுகோள் விட்டார்களாம். அரசாங்கமும் அதற்கு ஓத்துக்கொண்டதாம். இப்படியெல்லாம் பிபிசிக்கு தமிழ் சேவைக்கு பேட்டி கொடுக்கிறார்கள்.

தமிழ் தேசியம் இந்தளவுக்கு முன்னேறியுள்ளது. உயிர்வாழ முனைந்தால் தண்டனை. பேரினவாத குண்டடியில் நீயாக தப்ப முனைந்தால், நீ தேசத் துரோகி. இந்த குண்டடியில் இருந்து தப்பிப் பிழைக்கும் 10, 12 வயது குழந்தைகளைக் கூட, யுத்தம் செய்யவென்று தம் யுத்தமுனைக்கு கடந்திச் செல்லுகின்றனர் தேசிய மீட்பாளர்கள்.

எம்மினத்தை கொன்று குவித்து வரும் சிங்கள இராணுவம். கடந்த 30 வருடத்தில் பல பத்தாயிரம் உயிர்களின் இரத்தத்தைக் குடித்த இராணுவம்.  இது உனக்கு தெரிந்தும், இந்த இராணுவத்திடம் திட்டமிட்ட வகையில் மக்களையே கூட்டம் கூட்டமாக பலியிட்டு கொல்கின்றாயே, ஏன்? இந்த கொலைவெறிக்கு உடந்தையாக நிற்கும் மாபியா அரசியலை ஆதரிக்கிறாயே, ஏன்? நீ எல்லாம் ஆறறிவுள்ள மனிதனா!? இதை வைத்து பிரச்சாரம் செய்யும் அரசியல், நாசமாகப் போகட்டும்.

புலிகளின் துணையுடன் தான், இன்றும் ஏன் நாளையும் கூட வன்னியில் மக்கள் இறப்பார்கள். இன்று தமிழ் மக்களின் எமன் புலி. புலியிருக்கும் வரை தமிழ் மக்களின் இறப்பு மட்டும்தான், புலி தன்னை பாதுகாத்துக் கொள்ளும் அரசியலாக புலியிடம் எஞ்சியுள்ளது.

அதிரடியாக ஏற்படும் சமகால யதார்த்தம் மீதான புரிதல்கள், இலக்கற்ற பயணங்களும், எம்மை நோக்கிய கேள்விகளும், எம்மை பின்தொடருகின்றது. இந்த வகையில் எழுப்பப்பட்டுள்ள விவாதங்கள் மீது, அரசியல் ரீதியான தொடர் அணுகுமுறை அவசியமாகின்றது. இது பல தெளிவுகளை உருவாக்கும்.

எதையும் நாம் இன்று மூடி மறைக்க முடியாது. எல்லா மக்கள் விரோத எதிர்ப்புரட்சி கும்பலையும், நாம் அம்பலப்படுத்த வேண்டும். இந்த வகையில் நாம் அம்பலம் செய்த 'இரகசிய ஆவணம் : சிங்கப்பூரில் புலம்பெயர் 'ஜனநாயகத்" துரோகிகளும்இ பேரினவாத அரசும் நடத்தும் இரகசிய சதிக்கூட்ட ஆவணம்" மீது எனக்கு நன்கு தெரிந்த புலியெதிர்ப்பு அரச சார்பு 'ஜனநாயகவாதி" தன் நெற்றிக் கண்ணையே திறந்துள்ளது. இந்த வகையில் அரசுக்கு ஆதரவாக புலியெதிர்ப்பு 'ஜனநாயக" பேசும் அணியைச் சேர்ந்த பாலசூரியன் எமக்கு அனுப்பிய மின்னஞ்சலும், அதற்கான எமது பகிரங்கப் பதிலும்.  

ஒருபுறம் தமிழ்மக்கள் கூட்டம் கூட்டமாக பேரினவாதத்தால் ஏன் எதற்கு என்று கேள்வியின்றி கொல்லப்படுகின்றனர். மறுபக்கத்தில் புலிகளால் மக்கள் பணயம் வைக்கப்பட்ட நிலையில், அதில் இருந்து தப்பி வரும் மக்களையே புலி சுட்டுக் கொல்லுகின்றது. இப்படி இரு பாசிசங்கள், மக்களுக்கு எதிராக கையாளும் பயங்கரவாதங்கள் எம் மண்ணில் கோலோச்சி நிற்கின்றது.

 

எதிரியின் இன அழிப்பு அரசியல், எம்மிடம் இன அழிவு அரசியலாகியது. இப்படி எம்மினத்தை நாமும் சேர்ந்து அழித்த பெருமையே, எம் வீர வரலாறாகும். ஆயிரம் ஆயிரம் தியாகிகளின் இளம் இரத்தத்தைக் கொண்டு, தமிழினத்தை சுடுகாட்டில் நிறுத்திய பெருமை எம்மைச் சேரும். எம் விடிவையே, மறுத்தவர்கள் நாம்.

எம்மினத்தின் பெயரில் உருவான 'தேசியம்", 'ஜனநாயகம்" கொண்டிருந்த அரசியல் என்ன? அதன் நடைமுறைகள்தான் என்ன? இதுதான் சிறுமி வர்ஷாவின் படுகொலையை வழிகாட்டுகின்றது. இது தொடக்கமுமல்ல முடிவுமல்ல, மாறாகத் தொடரும்.

மகிந்தாவை ஜனாதிபதி பதவியில் அமர்த்தியதே புலிதான். அமைதியும் சமாதானமும் வந்து தம்மை கருவறுத்துவிடும் என்று அஞ்சிய புலிகள், யுத்தத்தை விரும்பியதால் மகிந்தாவை தேர்ந்தெடுத்தனர். தமிழ்மக்கள் விரும்பியதோ, சமாதானத்தையும் அமைதியையும். புலிகள் விரும்பியதோ யுத்தத்தை.

புலி அழியவில்லை, மற்றொன்றாகவே பிரதியிடப்படுகின்றது. இலங்கை எங்கும் கட்டவிழ்த்து விடப்படும் பாசிசமே, புலி அழிப்பின் ஊடாக மேலெழுந்து வருகின்றது. சாதாரணமான பத்திரிகைச் சுதந்திரம் முதல் போலித் தேர்தல்கள் வரை பாசிசக் கும்பலின் அதிகாரத்தின் எல்லைக்குள் அதை முடக்கி வருகின்றது. அனைத்தும் பாசிசக் கும்பல்களின் அதிகாரத்துக்கானதும் இருப்புக்கானதுமாகி, அதுவே நாட்டின் ஜனநாயகமாகின்றது.

மூன்றாவது அணியும், புரட்சிகர சக்திகளும் எம்மத்தியில் உள்ளனரா? அப்படி யாரும் அரசியல் ரீதியாக எம் மத்தியில் கிடையாது. மூன்றாவது அணியும், புரட்சிகர சக்திகளும் என்பது, மக்களுக்காக வைக்கப்படும் புரட்சிகர கருத்துகளின் அடிப்படையில் தான், அரசியல் ரீதியாக அதை வரையறுக்க முடியும்;. அரசியல் அல்லாத தளத்தில், இது வெறும் நபர்கள் அல்ல.  

 

எதிர்ப்புரட்சி அரசியல், வெளிப்படையான அரசியல் தளத்தில் மட்டும் இன்று நிகழவில்லை. மாறாக திட்டமிட்ட வகையில், கூலி எழுத்தாளர்களால் முன்தள்ளப்படுகின்றது. இந்திய, இலங்கை அரசுகளின் மிகவும் திட்டமிட்ட ஒரு அரசியல் நடவடிக்கையின் ஒரு அம்சமாக, இதை இன்று அவர்கள் கையாளுகின்றனர். புலிக்கு எதிரான அரசியல் பிரச்சாரத்தை நடத்தும் அதேதளத்தில், மக்கள் அரசியல் மீதான ஒரு எதிர் பிரச்சாரம் முடுக்கிவிடப்பட்;டுள்ளது.

 

தமிழ்மக்கள் சந்தித்த துயரங்களும் துன்பங்களும் முடிவற்றுத் தொடர்கின்றது. இப்படி எம்மைச் சுற்றி எதிர்ப்புரட்சி வரலாறு என்பது, மக்களுக்கானதும், அவர்களின் சொந்த விடுதலைக்குமான குரல்கள் அடக்கப்பட்டு அழிக்கப்பட்டதுதான். இப்படிப்பட்ட எம்மைச் சுற்றி நிகழ்ந்த இந்த அழிவு வரலாற்றின் போக்கில், எம் மக்களுக்காக நடந்த புரட்சிகர போராட்டங்களை மறுப்பவர்கள் பிற்போக்குவாதிகள்தான். இவர்களில் யாரும், மக்களுக்காக உண்மையாகவும் நேர்மையாகவும் ஒருக்காலும் இருக்க முடியாது.

 

மக்களுக்காக போராட மறுப்பதுதான், இன்று 'மாற்று" அரசியல். அரசுக்கு பின்னால் அல்லது புலிக்கு பின்னால் நிற்பதற்காக, இது தன்னைத்தான் மூடிமறைக்கின்றது. அரசுக்கு பின்னால் நிற்க 'ஜனநாயகத்தையும்", புலிக்கு பின்னால் நிற்க 'சுயநிர்ணயத்தையும்" பயன்படுத்துகின்றது.

 

இதை எப்படி நான் என் வாயால் சொல்வேன். இரண்டு கொலைகாரர்களின் அரசியல் சூதையும், சதியையும் சொல்வதா! தமிழ் மக்களுக்கு குழிபறித்த கைக் கூலித்தனத்தைச் சொல்வதா! கிழக்கு மக்கள் மத்தியில், வடக்கு மக்களுக்கு எதிரான நஞ்;சை ஊட்டிய கதையைச் சொல்வதா! இதையெல்லாம் எதற்காகத் தான், இவர்கள் செய்தார்கள்! மக்களுக்காகவா!?

 

தமிழ்மக்களின் போராட்டத்தை குழிபறிப்பதற்கே ஜனநாயகம் என்கின்றனர், அரசும் அரசு சார்ந்த புலியெதிர்ப்பு புல்லுருவிகளும். இதை புலியின் பெயரால் நியாயப்படுத்துகின்றனர். இப்படி  புலிகள் மறுத்த ஜனநாயகமும், மக்கள் விரோதிகள் வழங்கும் 'ஜனநாயகமும்" மக்களுக்கு விரோதமாகியுள்ளது. மக்களின் உரிமையை மறுப்பதற்கே, இன்று 'ஜனநாயகமும்"  உச்சரிக்கப்படுகின்றது.

 

தமிழ்மக்களின் பெயரில், தமிழ் மக்களிள் உரிமைப்போரை கொச்சைப்படுத்தி நடத்திய சுயவிளம்பரப் போராட்டம். ஏதோ வன்முறையாம்! அதுவும் இலங்கையில்! சரி உங்களில் யாருக்காவது தெரியுமா! இப்படி தெரியாத சிலதுகள், சுயவிளம்பரத்துக்காக நடத்திய போராட்டம்; தான் பாரிஸ் போராட்டம். தடிக்கும்  நோகாது, பாம்பை அடிக்கும் சுயவிளம்பரக் கோசங்கள்.  

'சிறுத்தைத் தன் புள்ளிகளை மாற்றிக் கொண்டாலும், பார்பபானின் பிறவிக் குணம் மாறவே மாறாது! சொல்வது பெரியார்!" என்று ஆழக்கரையிலிருந்த என்ற தளத்தில் 'மதிமாறனுக்கு ஏனிந்த செம்மயக்கம்?" என்ற கட்டுரையில் குறிப்பிடுகின்றார். பெரியரின் பெயரில் அடிக்கும் புலிக் கூத்துகள் இவை. பெரியார் எங்கே ஏன் எதற்கு சொன்னார் என்பது எமக்கு தெரியாது.

அரசுசார்பு புலியெதிர்ப்பு பேசும் கும்பல், தமிழ் மக்களை அரசு கொல்வதன் மூலம் தான், தாம் விரும்பும் 'ஜனநாயகத்தை" மீட்கமுடியும் என்கின்றனர். இதை நாம் தேனீ இணையம் முதல் டக்கிளஸ்சின் வெள்ளை வேட்டி அரசியலின் பின்னும் காணமுடியும்;. இதற்கு மாற்றாக இவர்கள் விரும்பும் 'ஜனநாயகத்தை" மீட்கவும், புலியை ஒழிக்கவும், வேறு எந்த மாற்று அரசியல் வடிவமும் இவர்களிடம் கிடையாது.

 

தமிழ்மக்களைக கொன்று குவிப்பதை ஊக்குவிக்கும் கொலைகாரர்களின் நடிப்புத்தான், புலியெதிர்ப்பு  'ஜனநாயகம்".  தமிழ் மக்களை கொன்று குவிக்கும் அரசுக்கு எதிராக போராடாது, புலிகள் தமிழ் மக்களை பணயமாக வைத்திருப்பதை கண்டிக்கவும் தூற்றவும் முடியாது. ஆனால் இதைத்தான் அரசு சார்பு புலியெதிர்ப்பு 'ஜனநாயகம்" செய்கின்றது.

1983 க்கு பின்பாக தமிழக அரசியல் தளத்திலான பிழைப்புவாதம், ஈழத்தமிழர் விவகாரம் ஊடாகவே நடந்தேறி வந்துள்ளது. தமிழன், தமிழினவுணர்வு என்ற முகமூடியை தரித்துக்கொண்டு, ஈழ ஆதரவு போராட்டங்கள் ஊடாக பிழைத்துக்கொள்ளவும் தமக்கேற்ப கூலிக் குழுக்களை உருவாக்கினர்.

 

பிரான்சில் 'சமூகப் பாதுகாப்பு அமைப்பு" என்ற பெயரில் மார்ச் 7ம் திகதி, நடைபெறவுள்ளதாக அறிவித்துள்ள போராட்டம், அதில் தமிழ்ப்பிரதிநிதிகளின் கோசம் தமிழ் மக்களை ஏமாற்றும் மற்றொரு கபடமுயற்சியாகும். ஆங்கிலம் பிரஞ்சில் ஒன்றையும், தமிழில் வேறு ஒன்றையும் முன்வைத்து, இதில் கலந்து கொள்ளும் பிரஞ்சு மக்களை ஏமாற்றும் சதி முயற்சியுடன் இது ஆரம்பமாகின்றது.  

 

ஒரு இனத்தின் அவலம், உலகின் கண்ணைத் திறக்கவில்லை. மனித அவலத்தை விதைத்தவர்கள், அறுவடை செய்தவர்களிடையே யார் இதற்கு உரிமையாளர்கள் என்ற எல்லைக்குள் உலகம் கண்ணை இறுக்க மூடிக்கொண்டது.

தோழர்களே!  நண்பர்களே!  சமூக அக்கறையுள்ளோரே!


எம்மினம், எம்நாட்டு மக்கள், உலக மக்கள் சந்திக்கின்ற பல்வேறு ஒடுக்குமுறைகளும், அடிமைத்தனங்களுமே மனித வாழ்வாகி வருகின்றது. இதன் பாலான அக்கறையற்ற சமுதாய கண்ணோட்டங்கள், பொய்யான போலியான பிரச்சாரங்கள் எம்முன் எங்கும் மலிந்து கிடக்கின்றது. இதை எதிர்கொண்டு, சழுதாயத்தை வழிநடாத்த வேண்டிய பொறுப்பு எங்கள் அனைவருக்கும் உண்டு.

தமிழினம் என்றுமில்லாத வகையில் ஒடுக்கப்படுகின்றது. ஒரு இனவழிப்பை நடத்துகின்றது. பேரினவாதம் தன் இருப்புச் சப்பாத்துகள் மூலம், எம்மினத்தின் மேல் காறி உமிழ்ந்தபடி நடைபோடுகின்றது. அதன் யுத்த இயந்திரமோ, தமிழ் இனத்தை உழுகின்றது. தமிழ் கைக்கூலிகளைத் தவிர, தமிழனாக யாரும் சுயமாக இருக்கமுடியாத பொது அடக்குமுறை. யுத்த பூமியில் மட்டுமல்ல, வந்த அகதிக்குள் மட்டுமல்ல, எங்கும் அடக்குமுறை. புலியல்லாத தமிழ் சிந்தனை முறை மீது அடக்குமுறை. சிங்கள இனவாதமோ, பாசிச வடிவமெடுத்து ஆடுகின்றது.

தம் சொந்த கைக்கூலித்தனத்தை நியாயப்படுத்த, புலியின் பெயரால் தர்க்கம். புலியின் பாசிச வன்முறையைச் சார்ந்து, தமது சொந்த பாசிச வன்முறை மூலம் கொழுத்த திமிர்த்தனமான அரசியல் நடத்தைகள். இதுவே ஈ.பி.டி.பியின் அரசியல் அடித்தளம்.இதன் மூலம் சிங்கள பேரினவாத அரசுடன் கூடிச் செய்யும் ஈ.பி.டி.பியின் மாமா அரசியலை நியாயப்படுத்த, உடனே புலியை துணைக்கு கூட்டிக்கொண்டு வந்துவிடுகின்றனர். இதன் மூலம் எமக்கு எதிராக, தமக்கு தாமே 'ஜனநாயக" வேஷம் போட்டுக்கொண்டு மோதுகின்றனர் பேடிகள்.

புலிகள் நிபந்தனையுடன் ஆயுதங்களைக் கையளித்த சமாதானம்! எம்மை நோக்கி எழுப்பிய கேள்விகளின் அடிப்படையில் இதை ஆராய முனைகின்றோம்.   இடைவிடாத அரசியல் கொந்தளிப்புகள், நிலைமைகளில் ஏற்படும் அதிரடி மாற்றங்கள், எம்மையும் எம்மைச் சுற்றியுள்ள நிகழ்வுகளையும் குழப்புகின்றன. எமது மாறாத கண்ணோட்டத்தையும், பார்வையையும் அதிரடியாகவே திகைப்பூட்டி திணற வைக்கின்ன்றது. ஒரு புரட்சி அல்லது அழிவில், இவை அதிரடியாக நிகழக் கூடியதுதான்.

 

நாம் புலியெதிர்ப்பு என்ற சொல்லை முதன் முதலாக அறிமுகம் செய்து பயன்படுத்திய போது, அதற்கென்று ஒரு அரசியல் அர்த்தம் இருந்தது. இதை பலரும் எம்மிடமிருந்து பெற்று,  பயன்படுத்தத் தொடங்கிய போது, நாம் பயன்படுத்திய அரசியல் அர்த்தத்தில் இருந்தும் அது திரிந்து போனது.

இப்படி ஒரு திடீர் அறிக்கையை புலிகள் விடும் அபாயம், இன்று காணப்படுகின்றது. ஓரு துரோகத்தை நோக்கிய புலிகளின் நகர்வுகள், இரகசிய பேரங்களாக திரைமறைவில் நடைபெறுகின்றது.

 

எம் மக்கள் போராட்டம் தவறான போராட்டமாகி, பாரிய மக்கள் அழிவை ஏற்படுத்தும் போராட்டமாகி, குறுகிய வட்டத்துக்குள் குறுகிய நலன்களுடன் நடந்த புலிப் போராட்டம் இன்று சிதைகின்றது. இது தன் மீட்சிக்கான எந்த வழியுமின்றி, ஏகாதிபத்தியம் வரை இரந்து வேண்டுகின்றது. தன்னைக் காப்பாற்றிக்கொள்ள, அது எதையும் செய்யத் தயாரான நிலையில் உள்ளது. வேறுவழியின்றி தவிக்கின்றது. தவித்த முயலை அடித்துண்ண இந்தியா முதல் ஏகாதிபத்தியம் வரை வலை வீசுகின்றது. அதில் சிக்கி விடுவார்களா என்ற கேள்வி, எம்முன் எழுகின்றது.

மனிதஅவலத்தை பற்றி பேசுவது சடங்காகி சம்பிரதாயமாகிவிட்டது. இதற்குள் அரசியல் சூழ்ச்சிகள். இதற்கு அமைய அவலம் அரசியலாக்கப்பட்டு, அவையே அவர்களின் அரசியலாகின்றது. இதற்கு பின் பிழைப்புத்தனம், நக்குண்ணித்தனம் என்ற விதம்விதமான கயவர் கூட்டத்தின் பிழைப்புகள்.

யாரும் தனக்குத் தானே புதைகுழியை வெட்டுவார்களா! ஆம் வெட்டுவார்கள். புலிகள் அதையே இன்று செய்துள்ளனர். அதையும் பல கோணத்தில் வெட்டுகின்றனர். 'மனிதாபிமான மீட்பு" என்ற பெயரில், புலிக்கு எதிரான ஒரு சர்வதேச தலையீடு. இதைக் கோரியே எமது போராட்டங்கள் நடந்தது என்பதுதான், எமது மக்களின் சொந்த அவலம். புலியைக் கொல்ல, புலிகள் போராடியுள்ளனர். இலங்கை அரசு மட்டுமல்ல, அமெரிக்கா தலைமையில் இணைத்தலைமை நாடுகளும் சேர்ந்து புலியை கொல்லக் கோரும் போராட்டமாக நடத்தியிருக்கின்றனர் புலிகள்.

இல்லை. மாறாக அது மகிந்த சிந்தனையிலான நவீன பாசிசம். புலியின் பாசிசத்தைச் சொல்லி, மகிந்தாவின் வாலாக ஈ.பி.டி.பியின் பாசிசம் ஆட்டம் போடுகின்றது. இதுவோ மற்றொரு புலியிசம் தான். புலி அரசியலில் இருந்து, எந்த வேறுபாடும் இதற்கு கிடையாது. இதற்கு அப்பால் புலி எப்படி தன் பாசிசத்தை நிறுவியதோ, அதையே தான் சிங்கள பேரினவாத துணையுடன் ஈ.பி.டி.பியும் செய்கின்றது.

புலியெதிர்ப்பும், புலியிசமும் பேசும் உண்மைக்குள் உள்ள பொய்மைகள் அனைத்தும்,  மக்களுக்கு எதிரானது. மக்களின் விடுதலையின் பாலான எந்த அக்கறையுமற்றதும், குறுகிய நோக்கத்துக்குட்பட்டதுமாகும். மனிதம் சந்திக்கின்ற அவலங்கள் உண்மையானது, எதார்த்தமானது. அதை கண்டு கொள்ளாத கூத்துகள் கோமாளித்தனமானது. இதற்குள் றீல்விட்டு எழுதும் புத்திஜீவிகள். உண்மையை ஒருபக்கம் அடமானம் வைத்துவிட்டு, நடிக்கும் நேர்மையீனம். 

புலிகளிடமிருந்து தப்பி வரும் மக்களை, மீண்டும் சிறை வைத்துள்ள பேரினவாத அரசு. அங்கு தெருநாயைப்போல் கல்லெறி வாங்கி ஒடியவர்கள், இங்கு மிருகக்காட்சி சாலையில் போல் நேரத்துக்கு பேரினவாத மணியடித்தால் உணவு. மற்றும்படி எங்கும் ஒரே சிறை தான். சுதந்திரமான நடமாட்டம் முதல் சுதந்திரமாக வாய் திறந்து கதைக்க கூட முடியாத மனித அவலநிலை.

உங்கள் அழிவை நோக்கி, உங்கள் வழியில் நீங்கள் நகர்கின்றீர்கள். உங்கள் வழிகள், இதை தடுத்து நிறுத்தாது. தற்கொலைக்குள் நீங்கள் மட்டுமல்ல, மக்களையும் சேர்த்து அழைத்துச் செல்லுகின்றீர்கள். தயவு செய்து இதை நிறுத்துங்கள். 

10 வருடத்துக்கு முன் மக்களின் விடுதலையை முன்னிறுத்திய கனடா தேடகம், இன்று புலிக்கு பின்னால் ஓடுகின்றது. அன்று புலிகள் பல்வேறு நெருக்கடிக்களை சந்தித்து வந்த தேடகம், இன்று அவர்களின் லேபல் அமைப்பாக மாறி அறிக்கை வெளியிடுகின்றது.

தமிழ் மக்களின் எதிரியை முறியடிக்க முடியாத புலிகளின் நடைமுறைகளுடன், நாம் எப்படி ஒன்றுபட்ட நிற்கமுடியும். பேச்சுவார்த்தையாக இருக்கலாம் அல்லது இராணுவ வடிவங்களாக இருக்கலாம், எதிலும் அரசியல் ரீதியாக புலிகள் தோற்கின்றனர். கிணற்றுத் தவளைகளாக மாறி கத்துவதால், உலகம் மாறிவிடாது. 

ஒன்றா இரண்டா! இல்லை! தமிழ் மக்கள் அனுபவிக்கின்ற வாழ்வியலில், பல எதிரிகளை அவர்களுக்கு அடையாளம் காட்டி வருகின்றது. ஏகாதிபத்தியங்கள், இந்தியா, சிங்கள பேரினவாத அரசு, இலங்கை இந்திய அரசுடன் உள்ள கூலிக் குழுக்கள், புலிகள் என்று, இன்று இவர்கள் வெளிப்படையாகவே தமிழ் மக்களுக்கு எதிராக  இயங்குகின்றனர்.

இன்று சிங்கள பேரினவாதம் தமிழ் மக்களை கொத்துகொத்தாக கொல்லுகின்றது. தமிழ் மக்களை பாதுகாக்கவே தாம் போராடுவதாக கூறிய புலிகள், தமிழ் மக்களை பாதுகாப்பதற்கு பதில், அவர்களைப் பலியிட வைக்கின்றது. பின் அதை தம் சொந்த சுயநலத்துக்காக பிரச்சாரம் செய்கின்றனர்.

ஒரு சமூகத்தின் அவலம், எதையும் சுயமாக சீர்தூக்கி பார்க்க முடியாது இருத்தல் தான். பகுத்தறியும் மனித உணர்வை இழந்து, மலடாகி வாழ்தல் தான். மற்றவர்களின் சுய தேவைக்கு ஏற்ப, என்னை நான் அறியாது இழத்தல் தான். என் உழைப்பு மற்றவனால் சுரண்டப்படுவது தெரியாது நாம் எப்படி இருக்கின்றோமோ, அப்படித்தான் இதுவும்.

மிகவும் நெருக்கடிமிக்க வரலாற்று காலத்தில் நாம் வாழ்கின்றோம்;. அதிரடியான அரசியல் நிகழ்வுகள் கூடிய ஒரு காலம். நாளை நாம் திட்டமிட்டபடி, வாழமுடியாது. இந்தியாவினால் அனைத்தும் இன்று தீர்மானிக்கப்படுகின்றது. அந்த வகையில் இந்தியா  உருவாக்கிய புலி மற்றும் புலி அரசியல் ஊடாகவும், இலங்கை அரசின் ஊடான இந்திய அழித்தொழிப்புக்கு ஊடாகவும், எம் வாழ்வில் இந்தியா தலையிடுகின்றது.

தற்கொலைத் தாக்குதல், தன்னைத்தான் கொல்லும் தற்கொலை என்ற எல்லைக்குள்ளுமாய் வாழ்தலை மறுத்தலே, போராட்டமாக மாறிவிட்டது. மறுபக்கத்தில் துரோகம் தியாகம் என்று மனிதரை கொல்லுதல் நியாயப்படுத்தப்படுகின்றது.

சிங்கள பேரினவாதம் தன் சுதந்திரமாக பிரிட்டிஸ்சார் கொடுத்த சுதந்திரத்தையே கருதியது முதல், தமிழினத்தை ஓடுக்குவதன் மூலம் தான் சிங்கள மக்களை ஏமாற்றி வந்தது. தமிழ் தலைமைகள் இதனுடன் ஓத்துழைத்தும், விலகி வந்த நிலையில், சிங்கள பேரினவாத ஓடுக்குமுறையை எதிர்கொண்டு போராடும் ஆயுதப் போராட்டமாக அது மாறியது. இப்படி கடந்த 30 வருடமாக பண்புமாற்றம் பெற்ற இந்த போராட்டத்தை பயன்படுத்தி, ஒரு இன அழிப்பாகவே பேரினவாதம் நடத்திவருகின்றது.

பொய்யையும், புனைவையும் பாசிசம் 'வோட்டர் மார்க்"காக அடிக்கின்றது. இதை நாம் சொல்லவில்லை. புலிகளே சொல்லுகின்றனர், செய்கின்றனர். மனித அவலத்தை உருவாக்கி, அதை 'வோட்டர் மார்க்" அடித்து, தமிழனின் உணர்ச்சியை தட்டியெழுப்புகின்றனராம். உலகத்திலேயே ஆக படித்த முட்டாள்களைக்; கொண்ட சமூகத்தின், தமிழன் என்ற உயிர் துடிப்பு இப்படி 'வோட்டர் மார்க்" வழியாகத்தான் புலிகள் உருவாக்குகின்றனர். 

காயடிக்கப்பட்ட தமிழனை, புலிகள் கூறுவது போல் 'வோட்டர் மார்க்" மூளைகளையே பாசிசம் உற்பத்தி செய்கின்றது. மனிதனின் பகுத்தறியும் அறிவையே மறுப்பதும், உருட்டல் மிரட்டலை மனித உணர்வாக வளர்ப்பது, நேர்மையற்ற சமூக நடத்தையை மனிதப்பண்பாக கொள்ள வைப்பதுமே பாசிசத்தின் தேர்வு.

தவறை புரிந்துள்ளதாக தம்மைக் காட்டிக்கொண்டு நியாயவாதம் செய்பவர்கள், ஓரு நாணயத்தின் இரண்டு பக்கமாகவும் இருக்க முனைகின்றனர். ஓரு பக்கம் தவறு உண்டு என்பதும், மறுபக்கம் தவறை தொடர்வதுமாக உள்ளனர். இவர்கள்தான் ஆபத்தான நயவஞ்சகப் பேர்வழிகள். தமிழினம் அழிக்கப்படும் இன்றைய நிலையிலும், அதில் குளிர்காய்கின்ற குள்ளநரிக் கூட்டங்கள்.

போலி மார்க்சியம் பேசி இந்தியாவின் வர்க்கத் போராட்டத்தை மறுதலித்துவிட்ட போலிகள், இன்று இலங்கை தமிழ் மக்களின் சுயநிர்ணயத்துக்கான போராட்டத்தை மறுக்கின்றது. இதன் மூலம் இலங்கை பேரினவாதத்துக்கு கொம்பு சீவி உதவும்

இந்தத் தெரிவில் முக்கிய பங்கு புலிக்கு உண்டு. சமாதானம் மேல் நம்பிக்கை கொண்ட தமிழ் மக்கள், யூ.என்.பி யை ஆதரித்து அவர்களை வெல்லவைத்து தம்மை தோற்கடித்த விடுவார்கள் என்று புலிகள் பயந்தனர். சமாதானம் மூலம் தம் எதிர்காலம் சிக்கலுக்குள்ளாவதை தடுக்கவும், யுத்தம் மூலம் தம் நிலையை இலகுவாக்க முடியும் என்று புலிகள் நம்பினர்.

யாரெல்லாம் இன்றைய யுத்தத்தை ஆதரிக்கின்றரோ, அவர்கள் தமிழினத்தின் காவலராக நண்பராக மகுடம் சூட்டப்படும் சதி இன்று அரங்கேறி வருகின்றது. இது எப்படி சாத்தியம்?  உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம், ஆனால் இரகசிய நிகழ்ச்சிநிரல்கள் இதை மறுக்கவில்லை.

புலியொழிப்பு ஊடாக, இலங்கை பாசிசத்தையே வெளிப்படையாக தெரிவுசெய்கின்றது. அந்த பாசிசம் தமிழின அழிப்பாக மகுடம் சூட்டுகின்றது.  கோத்தபாய வார்த்தையில் சொன்னால், தாம் அல்லாத அனைத்தும் புலி. அதாவது இரண்டு விடையம் தான் இருக்கமுடியும்; என்றான்.

எம்மின மக்களை பணயம் வைத்து, அவர்களை கொன்று குவித்து புலிகள் நடத்துவதோ சதி அரசியல். இதன் மூலமான அரசியல் பேரங்கள், இதை அடிப்படையாக கொண்ட போராட்டங்கள் எல்லாம், விழலுக்கு இறைத்த நீராகின்றது.

'ம.க.இ.க. வினவின் இனவாத பொய்கள்!" என்ற தலைப்பில் 'ஈழம்: உலக மக்களே இந்தியாவைக் கண்டியுங்கள்!" என்ற வினவின் கட்டுரையை தன் போலி கம்ய+னிச நிலைப்பாட்டில் இருந்து விமர்சிக்க முனைகின்றது.

இலங்கையில் யுத்த பிரதேசமல்லாத இடங்களில் வாழும் இருபது லட்சம் தமிழர்களும், மிக அமைதியாகவே தாமும் தம்பாடுமாக வாழ்கின்றனர்.  இதற்குள் யுத்த பூமியில் சிக்கியுள்ள தம் உறவினர்களுக்காக ஏங்கும் ஒரு பிரிவினரும், இனம் காணப்பட்டவர்கள் காணாமல் போதலைச் சுற்றியும் எழும் பதற்றமும் பரபரப்பும் ஆங்காங்கே வெளிப்படுகின்றது. மற்றும்படி தம் இனம் அழிவதையிட்டு, அக்கறையற்ற வாழ்தலையே, எம் மண்ணில் வாழும் தமிழ் சமூகம் தன் வாழ்வாக தேர்தெடுத்துள்ளனர்.

பல பத்தாயிரம் தமிழ் மக்கள் திரண்டு வீதிகளில் இறங்குகின்றனர். இதை மேற்கு ஊடகங்கள் முதல் மேற்குமக்கள் வரை கண்டுகொள்வதில்லை. போராட்டத்தை நடத்தியவர்கள், அதில் ஈடுபட்டவர்கள் கூட இதைச் சொல்லிப் புலம்புகின்றனர். ஏன் இந்த நிலைமை. உலகின் வேறு எந்த போராட்டத்துக்கும் நடக்காத ஒரு அவலம். 

எமது உற்றார், உறவினர், சுற்றத்தார், எம் இன மக்கள், மக்கள் எல்லாம் எம் கண் முன்னால் கணம் கணம் கொல்லப்படுகின்றனர். இதை நாம் தடுக்க வக்கற்று நிற்கின்றோம். இதைச் செய்பவர்களுக்கு எதிராக, சுதந்திரமாக எம் சொந்தக் உணர்வுடன் போராடமுடியாது தடுக்கப்படுகின்றோம்.

புலிப் போராட்டங்களோ எப்போதும் எதிர்நிலைத்தன்மை வாய்ந்தவை. மக்களின் விடிவிற்கு பதில், துயரத்தை துன்பத்தையும் விதைக்கின்றது.  இன்று மக்களின் அவலமும், அவர்கள் படுகொலை செய்யப்படுகின்ற பரிதாபமும்; ஒருபுறம். புலிகள் தாம் தப்பிப்பிழைக்க இதை மக்கள் மேல் திணிக்கின்றனர்.

மூன்று சகாப்த காலமாக நிலவிய உங்கள் அரசியல் முடிவுக்கு வரும் இந்த தருணத்தில், மக்களுக்காக ஒரு கணம் சிந்தியுங்கள். உங்கள் தவறுகளை நிவர்த்தி செய்யுங்கள். இதன் மூலம் எதிர்கால தலைமுறை தனக்காக போராடவும், இந்த தலைமுறை தான் இழைத்த வரலாற்றுத் தவறுகளை உணர்ந்து கொள்ளவும் உதவுங்கள். 

வன்னி மக்களின் அவலம், அவர்கள் எதிர் கொள்கின்ற உணர்வுகளில் ஒரு சிறு துளியை பகிர்ந்து கொள்ளும் உணர்வுகளுடன், பல்வேறு போராட்டங்களில் பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர். புலிகள் தாம் ஏற்படுத்திய மனித அவலத்தை, தம் பாசிச வலையமைப்பு ஊடாகவே, மக்களுக்கு இந்த உணர்வுகளை கொடுத்துள்ளனர். ஆனால் அது அவர்களுக்கு எதிராக மாறிவருகின்றது.

ஈழத் தமிழ் மக்களின் அவலம் இலங்கை இந்திய தமிழர்கள் மத்தியில், கொந்தளிப்பையும் உணர்ச்சியையும் உருவாக்கியுள்ளது. தொடரும் இன அழிப்பும், அதற்குள் மக்கள் பலியிடப்படல் என்ற எல்லைக்குள் அரசியல் செய்யப்படுகின்றது.

வெளியேற்றத்தை புலி மறுக்கின்றது. யுத்தநிறுத்ததை அரசு மறுக்கின்றது. மக்கள் என்ன செய்வது? புலியும், அரசும் தத்தம் தரப்பு நியாயத்தையும், காரணத்தையும் சொல்லி மக்களை பலியிடுகின்றது. மக்கள் தரப்பு நியாயத்தை கேட்பார் யாரும் கிடையாது. அதற்காக குரல் கொடுப்போர் கிடையாது.

தமிழினத்துகாக உணர்வுபூர்வமாக குரல்கொடுப்போர் கிடையாது. புலிக்காக தமிழினத்ததை உச்சரிக்கின்றவர்கள், தமிழினத்தின் மேல் அழிவுகளை ஏற்படுத்தி அதைக் காட்டியே அரசியல் செய்கின்றனர். இந்த புலியின் ஈனச் செயலைக்காட்டியே, பேரினவாதம் தமிழ் மக்களை மீட்கப்போவதாக கூறி குண்டுகளை தமிழ் மக்கள் மேல் சரமாரியாக பொழிகின்றது.

இவை இரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். ஒன்று திட்டமிட்ட வகையில்  ஒழுங்குபடுத்தப்பட்டது. இரண்டாவது உணர்வுகளின் அடிப்படையில் தற்செயலானது. இவை இரண்டும், அரசியல் ரீதியாகவே தற்கொலைதான். 

மக்கள் விரோத யுத்தத்தை நடத்திய புலிகளின் பிடியில் சிக்கியுள்ள ஒவ்வொருவரும் பலியாடுகள்தான். அவர்கள் தம் சுயநலத்துடன் மக்களைப் பலியிட்டு, அதையே தம் அரசியலாக பிரச்சாரம் செய்கின்றனர். இதைவிட புலியிடம் மாற்று அரசியல் கிடையாது. தம்  மீதான அழிவில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள, இராணுவ அரசியல் வழியேதும் மாற்றாக கிடையாது.

குமுதம் சஞ்சிகைக்கு விடுதலைப்புலிகளின் அரசியல் பொறுப்பாளர் நடேசன் வழங்கிய பேட்டி, தமிழ் மக்களையே கேனப்பயலாக்குகின்றது. விடுதலைப்புலிகள் தவறுகளை எல்லாம் உணர்ந்து திருந்தி விட்டதாக கூறுகின்ற, பிழைப்புத்தனத்தை அம்மணமாக்கிவிட்டது. பலர் புலிகள் திருந்திவிட்டதாக கூறி, தமிழ் மக்களாகிய நாம் எல்லோரும், முஸ்லீம் மக்கள் உள்ளிட புலியின் பின் அணிதிரள்வதுதான் பாக்கி என்கின்றனர். 

பலருக்கும் புரியாத புதிர். அங்கு ஏதாவது அற்புதம் நடக்கும் என்று நம்பும் எல்லையில் கனவுகள்;. ஆயுதங்கள் முதல் விமானம் வரை கொண்டுள்ள புலிகள், மூச்சு விடமுடியாத பாசிச நிர்வாகத்தை அச்சாகக் கொண்டுள்ள புலிகள், இன்று என்ன செய்கின்றனர் எனத் தெரியாது பலர் புலம்புகின்றனர். இந்த எல்லையில் ஆய்வுகள், அறிக்கைகள் வேறு. 

இலங்கை கொந்தளிப்பான யுத்த சூழலுக்குள் சிக்கி பாசிசமாக சிதைகின்ற போதும், உலகமயமாதல் அதனூடாகத்தான் அமுலுக்கு வருகின்றது. பயங்கரவாதம் என்ற போர்வையில், ஏகாதிபத்திய அனுசரணையுடன் இலங்கையில் யுத்தம் திணிக்கப்படுகின்றது.  இதை பேரினவாதம் புலி ஒழிப்புக் கோசத்தின் கீழ், தமிழின அழிப்பாக நடத்துகின்றது. இதன் மூலம் இலங்கை தழுவிய பாசிசத்தை நிறுவிவருகின்றது.

தமிழ்பேசும் மக்களின் இனப்பிரச்சனை தீர்க்கப்படாமலேயே, தமிழீழம் என்ற கோரிக்கை மரணித்துப் போனது. உண்மையில் இந்தக் கோரிக்கை இன்று மண்ணில் வாழ்கின்ற மக்கள் மனங்களில், வெறுப்புக்குரிய ஒன்றாக, மனித அவலத்தை தந்த ஒன்றாக மாறிவிட்டது. இது மக்களை அரவணைத்துச் செல்லவில்லை. நன்மைக்குப் பதில் தீமையையே விதைத்தது.

இந்தியாதான் இன்று இலங்கையில் யுத்தம் செய்கின்றது. புலிகளை அழிக்கின்றது. இதனால்தான் புலிகள் தோற்கின்றனர். இப்படி இன்று நிலைமையை சிலர் ஆராய்கின்றனர். இந்த அடிப்படையில் போராட்டங்கள், கோசங்கள் முதல், தம் சொந்த தவறுகளை மூடிமறைக்கும் கைங்கரியங்கள்.

இது ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். சுரண்டி தின்னும் வர்க்கமும், அதையண்டிப் பிழைக்கும் ஊடகவியலுக்கும் இடையில் மோதல். பாசிசம் மூலம் நாட்டை சுரண்ட முடியும் என்ற மகிந்தாவின் சிந்தனைக்கும், இதில்லாமலே சுரண்ட முடியும் என்ற எதிர்க்கட்சி ஊடகவியலுக்கும் மோதல்.

1985 இல் இத் துண்டுப்பிரசுரத்தை சில மாணவர்கள் சார்பாக நான் வெளியிட்டேன். அப்போது ராங்கிங் செய்தவர்களோ, 'மனநோயாளி ஒருவர் யாழ் பல்கலைக்கழத்தில்" என்று பதில் துண்டுப் பிரசுரம் வெளியிட்டனர். நான் ராக்கிங்குக்கு எதிரான தொடர்ச்சியான போராட்டத்தை நடத்தினேன். இதைத் தொடர்ந்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், நான் வெளியிட்ட இந்தத் துண்டுப்பிரசுரத்தை ஆதரித்து ஊடகங்களுக்கு ஒரு அறிக்கை வெளியிட்டது.

மானம், நேர்மை, தர்மம், உண்மை என்று எதிவுமற்றது என்றால், அது தமிழ் ஊடகவியல்தான். ஊடக தர்மம், சுதந்திரம் என்று எந்த அடிப்படையான தகுதியுமற்றதும், நக்கிதின்னும் பச்சோந்திகளால் நிறைந்தது தான் தமிழ் ஊடகவியல்;. தமிழ் இனத்தின் சாவில், தான் பிழைக்கின்ற பிழைப்பையே 'சுதந்திர" ஊடகவியலாகி அதை திண்டு  செரிக்கிறவர்கள் இவர்கள்.

பேரினவாத பாசிசமோ புலிப் பாசிசத்தை உச்சிக் காட்டுகின்றது. தனது இனவெறி பாசிச குற்றங்களை எல்லாம் புலியின் மேல் போட்டுத் தப்பிக்க முனைகின்றது. புலிப் பாசிசம் இழைக்க கூடிய குற்றங்களை எல்லாம், தனக்கு சாதகமாக கொண்டு பேரினவாத பாசிசம் இயங்குகின்றது. தனது குற்றங்களை மூடிமறைத்தும், தமது குற்றங்களை புலியின் செயலாக திரித்தும் அல்லது ஒப்பீட்டளவில் தமது குற்றம் குற்றத்தன்மை குறைந்ததாக காட்டவும் முனைகின்றது.

கடமைகளுள்ள உரிமைகளையோ, உரிமைகளுள்ள கடமைகளையோ தமிழ் மக்கள் கொண்டிருக்கவில்லை. அதாவது கடமைகளில்லாத உரிமைகளையோ, உரிமைகளில்லாத கடமைகளையோ மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டர்கள். இப்படி இதிலிருந்து மக்கள் பலாத்காரமாக அன்னியமாக்கப்பட்டனர். மக்கள் மந்தைகளாக, ஆடு மாடுகள் போல் எந்த உரிமையுமற்ற நடைப்பிணமாக வாழ்வதைத்தான், தமிழ்மக்களின் உரிமைகள் கடமைகள் என்றனர். 

இவை ஈழத்தமிழர்கள் அனுபவிக்கின்ற, பல்வேறு அவலங்களை பிரதிபலிக்கும் நூல் தொகுப்புகள். ஈழத்தமிழர் பற்றி பிழைப்புவாத அரசியல் பேசுகின்ற ஒருபக்க (புலி சார்பு) செய்திகளுக்கும் தரவுகளுக்கும் மாறாக, ஈழத்தமிழர்கள் அனுபவிக்கின்ற பல்வேறு கொடுமைகளை உண்மைத்தன்மைகளை, வெளிக்கொண்டுவரும் நூல்கள் இவை.

மக்களுக்கு வெளியில் இயற்கை மட்டும்தான் உண்டு. இதற்கு வெளியில் வேறு எதுவும் கிடையாது. ஏன் எந்த புனிதமும், எந்த அவதார புருஷர்களும் கூடக் கிடையாது. மக்கள் தான், தம் வரலாற்றையும் தனக்கு எதிரான சக மனிதன் கொடுமைகளையும் எதிர்கொண்டாக வேண்டும். இதற்குள்ளேயே தான் மனித வரலாறுகள் போராட்டங்கள் என அனைத்தும்.

இன்று இதையே அனைத்து தமிழ் ஊடகவியலும் செய்கின்றது. மறுபக்கத்தில் இதை நாம் தமிழ் மக்களிடம் எடுத்துச் செல்வதையே தவறு என்கின்றனர். நிர்வாணக் காட்சியை மூடிமறைக்கும் புனிதத்தின் பெயரில், இந்த கொடுமையை மறைப்பதன் மூலம் இதற்கு துணை போகின்றவர்கள், எம்மையும் இதைச் செய்யக் கோருகின்றனர். பேரினவாதம் காலாகாலமாக எம் பெண்களுக்கு செய்துவந்த பாலியல் கொடுமைகளை, பத்தோடு பதினொன்றாக்க முனைகின்றனர்.

பேரினவாதம் கட்டவிழ்த்துவிட்டுள்ள பயங்கரவாத ஒழிப்பிலான மகிந்த சிந்தனையோ, பெண்கள் என்றால் நிர்வாணப்படுத்தி குதறுவதையும் அடிப்படையாக கொண்டது. தமிழ் இனத்தை அழிக்கும் மகிந்த சிந்தனைக்கு, இப்படியும் பல அர்த்தங்கள் உண்டு. இவை எல்லாம் சேர்ந்து தான், பயங்கரவாத ஒழிப்பாகின்றது.

இது தான் தமிழினத்தின் தலைவிதியா!? இதற்காகத்தான் இவ்வளவு தியாகங்கள் போராட்டங்கள். கிளிநொச்சியை கைப்பற்றியதைத் தொடர்ந்து ஏற்படும் பொதுவான அதிர்வு, இதை அவசரமாக எம்மை எழுதத் தூண்டியுள்ளது.

சிறிலங்கா பேரினவாத அரசின் ஆணாதிக்க படைகள், தாம் யுத்த முனையில் கைப்பற்றிய பெண் புலி உறுப்பினர்களின் உடலை நிர்வாணப்படுத்தி, அதை தம் பாலியல் வக்கிரத்துடன் கொத்தித் தின்ற ஒரு வீடியோ ஆவணத்தை நாம் வெளியிட்டிருந்தோம். இந்த நிகழ்வுக்கு எதிரான கண்டனங்கள், போராட்டங்கள் அரசியல் உள்நோக்குடன், குறுகிய தம் அரசியல் வக்கிரத்துடன் பொதுவாக தவிர்க்கப்பட்டு வருகின்றது.

பேரினவாத இராணுவம் அண்மையில் விடுதலைப்புலிகள் உறுப்பினர் என கருதப்படும், குறைந்தது இரு பெண்களை இழிவுபடுத்தி அலங்கோலப்படுத்திய ஒளி (வீடியோ) ஆவணத்தை நாம் வெளியிட்டு இருந்தோம். நாம் வெளியிட்டதை விட