Language Selection

பி.இரயாகரன் -2009

கடமைகளுள்ள உரிமைகளையோ, உரிமைகளுள்ள கடமைகளையோ தமிழ் மக்கள் கொண்டிருக்கவில்லை. அதாவது கடமைகளில்லாத உரிமைகளையோ, உரிமைகளில்லாத கடமைகளையோ மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டர்கள். இப்படி இதிலிருந்து மக்கள் பலாத்காரமாக அன்னியமாக்கப்பட்டனர். மக்கள் மந்தைகளாக, ஆடு மாடுகள் போல் எந்த உரிமையுமற்ற நடைப்பிணமாக வாழ்வதைத்தான், தமிழ்மக்களின் உரிமைகள் கடமைகள் என்றனர். 

இவை ஈழத்தமிழர்கள் அனுபவிக்கின்ற, பல்வேறு அவலங்களை பிரதிபலிக்கும் நூல் தொகுப்புகள். ஈழத்தமிழர் பற்றி பிழைப்புவாத அரசியல் பேசுகின்ற ஒருபக்க (புலி சார்பு) செய்திகளுக்கும் தரவுகளுக்கும் மாறாக, ஈழத்தமிழர்கள் அனுபவிக்கின்ற பல்வேறு கொடுமைகளை உண்மைத்தன்மைகளை, வெளிக்கொண்டுவரும் நூல்கள் இவை.

மக்களுக்கு வெளியில் இயற்கை மட்டும்தான் உண்டு. இதற்கு வெளியில் வேறு எதுவும் கிடையாது. ஏன் எந்த புனிதமும், எந்த அவதார புருஷர்களும் கூடக் கிடையாது. மக்கள் தான், தம் வரலாற்றையும் தனக்கு எதிரான சக மனிதன் கொடுமைகளையும் எதிர்கொண்டாக வேண்டும். இதற்குள்ளேயே தான் மனித வரலாறுகள் போராட்டங்கள் என அனைத்தும்.

இன்று இதையே அனைத்து தமிழ் ஊடகவியலும் செய்கின்றது. மறுபக்கத்தில் இதை நாம் தமிழ் மக்களிடம் எடுத்துச் செல்வதையே தவறு என்கின்றனர். நிர்வாணக் காட்சியை மூடிமறைக்கும் புனிதத்தின் பெயரில், இந்த கொடுமையை மறைப்பதன் மூலம் இதற்கு துணை போகின்றவர்கள், எம்மையும் இதைச் செய்யக் கோருகின்றனர். பேரினவாதம் காலாகாலமாக எம் பெண்களுக்கு செய்துவந்த பாலியல் கொடுமைகளை, பத்தோடு பதினொன்றாக்க முனைகின்றனர்.

பேரினவாதம் கட்டவிழ்த்துவிட்டுள்ள பயங்கரவாத ஒழிப்பிலான மகிந்த சிந்தனையோ, பெண்கள் என்றால் நிர்வாணப்படுத்தி குதறுவதையும் அடிப்படையாக கொண்டது. தமிழ் இனத்தை அழிக்கும் மகிந்த சிந்தனைக்கு, இப்படியும் பல அர்த்தங்கள் உண்டு. இவை எல்லாம் சேர்ந்து தான், பயங்கரவாத ஒழிப்பாகின்றது.

இது தான் தமிழினத்தின் தலைவிதியா!? இதற்காகத்தான் இவ்வளவு தியாகங்கள் போராட்டங்கள். கிளிநொச்சியை கைப்பற்றியதைத் தொடர்ந்து ஏற்படும் பொதுவான அதிர்வு, இதை அவசரமாக எம்மை எழுதத் தூண்டியுள்ளது.

சிறிலங்கா பேரினவாத அரசின் ஆணாதிக்க படைகள், தாம் யுத்த முனையில் கைப்பற்றிய பெண் புலி உறுப்பினர்களின் உடலை நிர்வாணப்படுத்தி, அதை தம் பாலியல் வக்கிரத்துடன் கொத்தித் தின்ற ஒரு வீடியோ ஆவணத்தை நாம் வெளியிட்டிருந்தோம். இந்த நிகழ்வுக்கு எதிரான கண்டனங்கள், போராட்டங்கள் அரசியல் உள்நோக்குடன், குறுகிய தம் அரசியல் வக்கிரத்துடன் பொதுவாக தவிர்க்கப்பட்டு வருகின்றது.

பேரினவாத இராணுவம் அண்மையில் விடுதலைப்புலிகள் உறுப்பினர் என கருதப்படும், குறைந்தது இரு பெண்களை இழிவுபடுத்தி அலங்கோலப்படுத்திய ஒளி (வீடியோ) ஆவணத்தை நாம் வெளியிட்டு இருந்தோம். நாம் வெளியிட்டதை விட