Language Selection

சமர் - 11 : 06/06 -1994

தங்களது தாய் நாட்டை விட்டு மக்கள் வேறு நாடுகளுக்கு ஓடுகின்றார்கள் என்றால் அதற்குப் பல காரணங்கள் உண்டு. போர், பாசிச சர்வாதிகாரிகளின் அடக்குமுறை, பஞ்சம், பட்டினி, உயர் வருமானம் ஈட்டல் என்ற பல காரணங்கள் உண்டு. இவ்வாறு பெருந்தொகையான மக்கள் தமது சொந்தநாட்டைக் கைவிட்டு வெளியேறும் முதல் 10 நாடுகளில் இலங்கையும் ஒன்றென்பது விசனத்துக்குரியதாகும். முன்னொருபோது இந்து சமுத்திரத்தின் முத்தெனவும், இலங்கைச் சீமை எனவும் வர்ணிக்கப்பட்ட நாட்டை விட்டு சுகாதாரமான இந்தச் சூழலை விட்டு, சந்தோசமான சீதோஷ்ண நிலையை இழந்து மெல்லெனத் தவழும் இளந் தென்றலை மறந்து அந்நிய நாடுகளில் பனிக்குளிரின் மத்தியில் ஒரு அடைத்த வாழ்வுக்கு மூன்றாந்தர பிரசைகளாக அடிமைகளாக வாழ நிர்பந்திக்கப்பட்டுள்ளார்கள் என்றால் மிகையாகாது.

நான்காவது அகிலத்தின் அனைத்துலக குழுவின் ஒரு அங்கமான புரட்சிக் கம்யூனிஸ்ட கழகம் மார்க்சிய முன்நோக்கு இதழ் 2 ஊடாக சமர் வைத்த மூன்றாவது பாதைக்கான திட்டத்தை விமர்சிக்க முற்பட்டுள்ளனர். சர்வதேச தொழிலாள வர்க்கத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ரொக்சிய சஞ்சிகை என பெருமையாக அறிவிக்கும் இவர்கள் தாமாகவே ஒத்துக்கொள்கின்றனர் மார்க்சியத்திலிருந்து வேறுபட்டதே ரொக்சியம் என்பதை.

1970களில் பலரால் வரவேற்ப்பட்ட வடகிழக்கத்தைய தேசிய இனங்களின் சுயநிர்ணய, சுயாட்சி உரிமைக்கான போராட்டங்கள் இன்று புரட்சிகர அரசியல் தலைமை இல்லாமல் சீரழிந்து குட்டிபூர்சுவா தலைமையிலான குறுந்தேசிய இனவெறிக்குள் மூழ்கி விட்டது. அன்று மணிப்பூர், நாகலாந்து, மீசோராம், அசாம், திரிபுரா என்று கொழுந்து விட்டெரிந்த தேசிய விடுதலைப்போராட்டங்கள் இன்று இனவெறி வன்முறையாளர்களாக சீரழிந்து போயுள்ளன. 

ஆசியாவில் பல தசாப்தங்களாக பல தேசவிடுதலைப் போராட்டங்கள் தொடர்கின்றன. இன்று தென் கிழக்கு ஆசியாவே தேசவிடுதலைப் போராட்டங்களின்  முக்கிய களமாக திகழ்கிறது. உண்மையில் இப் போராட்டங்கள் அனைத்தும் ஏகாதிபத்திய, தரகு முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பை நேரடியாகவோ,  முறைமுகமாகவோ கொண்டவையே. ஆனாலும் கூட இம் மக்கள் போராட்டங்களை தலைமை தாங்குபவை யாவும் புரட்சிகர சக்திகள் அல்ல என்பது தான் மிகவும் கவலைக்குரிய விடயம். பரந்துபட்ட மக்களின் தியாகங்களை அர்ப்பணிப்புக்களை, ஒரு சிறுபகுதி அற்ப சலுகைக்காக காட்டிக்கொடுப்பதைக் காணமுடியும்.

இரத்தினபுரி மாவட்டத்தில் எம்பிலியபிட்டிய பிரதேசத்தில் உள்ள சூரியகந்த எனும் இடத்தில் புதைகுழி எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இப்புதைகுழி பற்றி வரைபடத்துடன் பத்திரிகைக்கும், சுதந்திரகட்சிக்கும் கிடைத்ததை தொடர்ந்து அவ்விடம் தோண்டப்பட்டது. இவ் எலும்புக்கூடுகள் 1988,1989,1990 களில் ஜே.வி.பியின் தீவிர வளர்ச்சிக் காலத்தில் கொல்லப்பட்டவர்களினதாகும்.

1930 களில் அமெரிக்கா ஒரு ஏகாதிபத்திய பொருளாதார வல்லரசாக வளர்ந்து விட்டது. அது பிற காலனிய ஏகாதிபத்தியங்களிடமிருந்து உலகச் சந்தையை பகிர்ந்து கொள்ள விரும்பியது. அதற்காக உலக மேம்பாட்டிற்கும் சமாதானத்துக்கும் சுதந்திரமான உலகச் சந்தை அவசியம் என்ற கருத்தை முன் வைத்தது. அவ்வடிப்படையில் 1948 இல் 23 ஏகாதிபத்திய தொழில்வளமிக்க நாடுகளிடையே சிக்கலற்ற சீரான உலக வணிகத்திற்காக ஒரு பொதுஒப்பந்தம் ஹவானாவில் ஏற்பட்டது. உலக நாடுகளிடையே ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் மற்றும் சுங்கத்தீர்வை ஆகிய பிரச்சனைகளை ஒழுங்குபடுத்துவதற்கும் மேற்பார்வையிடுவதற்கும் ஏற்பட்ட இந்த பொது ஒப்பந்த அமைப்பு தான் காட்.

அராஜகத்துக்கு மூளையே இல்லை என்பது அடிக்கடி நிரூபிக்கப்பட்டு வருகிறது. அண்மைக்காலங்களில் புலம்பெயர்ந்த நாடுகளிலும் அரசியல் வன்முறையின் தீவிரம் பரவிவருவதை கண்டுவருகிறோம். பாரிஸ் ஈழநாடு பத்திரிகைக் காரியாலயம் தீவைப்பு,  திரு சபாலிங்கம் படுகொலை, தேடகம் நூல் நிலையம் எரிப்பு என சம்பவங்கள் தொடர்கின்றன.

சிங்கள இனவாதத்தை கக்கிவந்த ஜாதிக சிந்தனை இயக்கத்தினை சில இராணுவ அதிகாரிகள் கூட்டாக அம்பலப்படுத்தியுள்ளனர்.  பல் வைத்தியரான குணதாச அமரசேகரவின் இனவாத பேச்சுக்களையும் அதனால் தொடரும் யுத்தத்தையும் எதிர்கொள்ளும் இராணுவ அதிகாரிகள் சினம் கொண்டு ஒரு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அண்மையில் பிரித்தானியாவில் வெளிவந்த சில தகவல்கள் 2 ம் உலகயுத்தத்தில் பிரித்தானிய பிரதமர் யூத மக்களை கொல்ல துணைபோனது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 1942 இல் ஒஸ்விச் நகரில் 8354 யூத மக்கள் ஒரே மாதத்தில் கொல்லப்பட்ட தகவல் பிரிட்டிஸ் பிரதமருக்கு தெரிந்திருந்தும் அதை அம்பலப்படுத்தாதது மட்டுமின்றி அதற்கு எதிராக சர்வதேசரீதியாக எதையும் செய்யாது யூதமக்கள் கொல்லப்படுவதற்க்கு பச்சைக் கொடி காட்டினார்.  பிரிட்டனும், அமெரிக்காவும் 2ம் உலகயுத்தக் காலத்தில் ஜேர்மனி சோவியத்தை தாக்கி அழிக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்தனர்.  அந்தவகையில் ஜேர்மனிக்கு எதிராக சோவியத் ஜக்கிய முன்னணியைக் கோரியபோது பிரான்ஸ், அமெரிக்கா என்பன நிராகரித்து ஜேர்மனிக்கு பக்கபலமாக செயற்பட்டனர். யூத இனவாதத்தை கொண்டு இவ்வரசுகள் கூட யூதமக்கள் கொல்லப்பட்டபோது கண்மூடியபடி பால் குடித்தனர். 

எமது போராட்டம் பாசிசத்தால் மூழ்கடிக்கப்பட்ட இன்றைய நிலையில் அதை எதிர் கொள்ள பலதரப்பினரும் குரல் கொடுக்க முனைந்தனர். இந்த வகையில் சஞ்சிகைகள், பத்திரிகைகள் என பல தோன்றி வருகின்றன. சில நின்றும் போய்விடுகின்றன.  எம் போராட்டத்தில் எழுந்த சஞ்சிகைள் பத்திரிகைள் வளர்ச்சிப்போக்கில் தத்தம் நோக்கங்களைக் கூட இனறு மாற்றி வருகின்றன. சில பத்திரிகைகள் தமது சுயதிருப்திக்காக என்ற நிலைக்கு பரிணாமம் அடைந்துள்ளது. சில பத்திரிகைகள் பிழைப்புவாத பிரமுகர்களை காப்பாற்றும் நோக்கில் சீரிழிந்துள்ளது.

 ஒரு கோடிக் கவிதைகளால்

உலகம் போற்றும் கவிஞன் நானே

என நாமம் பெற்றாய்

ஒரு சொட்டு இரத்தத்தை உரிமைப் போரில்

தருபவனின் புகழ் முன்னே

தூசு தூசு!

 

---------சுபத்திரன்------------

நடைபெற்ற தென்மாகாண சபை தேர்தலில் ஜ.தே.கட்சி தோற்கடிக்கப்பட்டது. ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அதிகாரத்தினை கைப்பற்றியது மக்களுக்கு கிடைத்த வெற்றியா? அண்மைக்காலங்களில் வடக்கு கிழக்கு யுத்தத்தில் அரசிற்கு கிடைத்த பின்னடைவுகளும் வடபகுதி மேலான பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்க இருக்கும் நேரத்தில் தென்மாகாண மக்கள் ஆளும் கட்சியை நிராகரித்தது  விசனத்துக்குரிய விடயமுமாகும். அதிகாரத்தில் உள்ள ஜனாதிபதியும் பிரதமரும் இனப்பிரச்சனை பற்றி சிங்கள மக்களை வெறியூட்டக்கூடிய கருத்துக்களை வெளியிட்டும் தேர்தலில் தோல்வி அடைந்தனர். ஜ.தே.கட்சி அம்பலப்படுத்தப்பட்டதை இது வெளிப்படுத்துகிறது.

அண்மையில் லெனின் கிராட்டில் (தற்போது பீட்டர்ஸ்பாக் என பெயர் மாற்றப்பட்டுள்ளது.) மாநகர சபைத் தேர்தல்கள் நடத்தப்பட்டன. 50 பிரிவிகளைக் கொண்ட அவையில் இரண்டில் மூன்று பங்குகள் 25 வீதத்துக்கு மேல் வாக்குப்பதிவு நடந்தால் மட்டுமே தேர்தல் செல்லுபடியாகும். 

350வருட பல வீரம் செறிந்த கறுப்பின மக்களின் போராட்டத்தை இன்று முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர். வெள்ளை நிறவெறியர்களின் அடக்குமுறைக்கு உள்ளான தென்னாபிரிக்க மக்கள் நீண்ட பல வீரம் செறிந்த போராட்டத்தை நடத்தினர். நிறப்பாகுபாட்டுக்கு ஊடாக தமது சொந்த மண்ணை இழந்த கறுப்பின மக்கள் இன்று பெயரளவில் ஒரு  சுதந்திரத்தை கறுப்பு தலைவர் ஊடாக பெற்று உள்ளனர். இலங்கை, இந்தியாவில் 1948இல் வெள்ளை ஆட்சியாளருக்கு பதில் கறுப்பு ஆட்சியாளர்கள் நிரப்பப்பட்டனர். ஆனால் வெள்ளையன் இருந்தபோதும், கறுப்பன் இருந்தபோதும் மக்கள் பெற்றது என்னவோ ஒன்று தான். அதே பொலிஸ் அதே அடக்குமுறை அதே சுரண்டல் எல்லாம் அப்படியே இருந்தது. ஒன்று மட்டும் மாறியிருந்தது.

வியட்நாம் படைகளை வெளியேற்றவும் அமைதியைக் கொண்டு வரவும் என உறுதி கூறி ஜக்கிய நாட்டுப்படை கம்பூச்சியாவில் தனது ஆதிக்கத்தை நிறுவ கால் ஊன்றிக் கொண்டனர். அங்கு வியட்நாமுக்கு எதிராக போராடி வந்த முக்கிய மூன்று குழுக்கள் இருந்தன. அதில் ஒன்று கம்யூனிஸ்ட் கட்சி. ஜக்கிய நாட்டுப் படையோ கம்யூனிஸ்ட் படையை அழிக்க தன்னால் இயன்றளவும் முயன்று மற்றவர்களிடம் ஆட்சியை ஒப்படைத்தனர். ஜக்கிய நாட்டுப் படையில் முக்கியமாக ஜப்பான் உள்ளது. இரண்டாம் உலக யுத்தத்துக்குப் பின்னர் வெளிநாட்டுக்குப் படையை அனுப்பியது இதுதான் முதல் தடவை. கம்பூச்சிய சுய பூர்த்தியை கொண்ட ஒரு நாடாகும். இங்கு உள்ள சுயபூர்த்தியான விவசாயத்தை அழிக்க ஜப்பான் பெரும் அளவில் தனது சந்தைக்கு தேவையான உற்பத்தியை முடுக்கி விட்டுள்ளது.

யூக்கோஸ்லாவியாவின் இனமுரண்பாடுகள் இரண்டு வருடத்துக்கு மேலாக தொடர்ந்த வண்ணம் உள்ளது. முதலாவது உலக யுத்தம் தொடங்க காரணமாக இருந்த யூக்கோஸ்லாவியாவில் உள்நாட்டு இனகலவரங்களுடன் இரண்டாம் உலக யுத்தகாலத்;தில் சில இனங்கள் ஜெர்மன் நாசிகளுடன் ஜக்கியப்பட்டனர். இரண்டாம் உலக யுத்தத்தில் நாசிகளுக்கு எதிராக போராடிய கம்யூனிஸ்ட் கட்சி யூக்கோஸ்லாவியாவை ஜக்கியப்படுத்தி தேசிய சுயநிர்ணய உரிமையை வழங்கி ஜக்கியப்பட்ட நாடாக மாற்றியது. 1950 களில் தனது சோசலிச கொள்கைகளை கைவிட்டு திரிபுப்பாதைக்கு சென்றபோது பெயரளவில் கம்யூனிஸ்ட் கட்சியைக் கொண்ட ஒரு சீரழிந்த முதலாளித்துவ ஆட்சியை நிறுவிக்கொண்டனர்.

தன்சான்னியா பிராந்தியப் பேச்சுவார்த்தை ஒன்றில் கலந்து கொண்டு விட்டு ஒரே விமானத்தில் பயணம் செய்த ருவாண்டா நாட்டு ஜனாதிபதியும் புருன்டி ஜனாதிபதியும் ராக்கெட் தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து ருவாண்டா அரசாங்க ஆதரவுடன் சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இன்று உத்தியோக புள்ளிவிபரப்படி இரண்டு லட்சம் டுட்ஸ் இனத்தவர் கொல்லப்பட்டு உள்ளனர். ஆனால் இத்தொகை அதிகமாகும். 85 வீதம் ஹிடு இனத்தவரும் வாழும் ருவாண்டா நாட்டில் சிறுபான்மை இன அடக்குமுறைக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடுகின்றனர்.

தொண்டமான், விஜேதுங்க ஊடல் அண்மையில் கூடல் ஊடாக சிறுபான்மை தேசிய இனம் மீண்டும் ஒரு முறை விற்பனையாகியுள்ளது. அண்மைக்காலமாக கௌரவ அவமதிப்புக்குள்ளாகிய தொண்டைமான் தேசிய சிறுபான்மை மீதான டிங்கிரியின் தாக்குதலுடன் மலையக மக்களின் கதாநாயகன் வேடத்தை தாங்கினார். இதனால் யூ.என்.பி தொண்டா உறவு கேள்விக்குள்ளாகியும் இருந்தது. இந்நிலையில் செல்லச்சாமியை விலைக்கு வாங்கிய பலர், எட்டு மாகாண சபை உறுப்பினர்களையும் சேர்த்து விலை பேசிக்கொண்டனர். ஆனால் அண்மையில் தென்மாகாண சபை தேர்தலின் தோல்வியைத் தொடர்ந்து தொண்டா யூ.என்.பி உறவை புதிப்பிக்க நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் யூ-என்-பியின் எந்த வேட்பாளருக்கு எதிராகவும் சந்திரிகா போட்டியிடின் நான்கு இலட்சம் வாக்குகள் அதிகம் பெறுவார் என என்-ஜ-பி அறிவித்துள்ளது. இக்கணிப்பீடு வடக்கு தவிர்ந்த ஒரு புள்ளிவிபரமே. 144 பொலிஸ் அதிகாரிகளைக் கொண்டு எடுக்கப்பட்ட இக் கணக்கெடுப்பு தொண்டமான் யூ.என்.பியுடன் இணைந்திருப்பின் என்ற அடிப்படையில் வைத்தே எடுக்கப்பட்டது. யூ.என்.பி தனது வெற்றியை உறுதி செய்து கொள்ள அனைத்து வழிகளையும் கையாளுகிறது.

திடீர் என சந்திரசேகர் விடுதலை செய்யப்பட்டது உண்மையை அறியாதவர்களுக்கு ஆச்சரியமாகவே இருக்கும். கூட்டுப்படை தலைமையக குண்டுவெடிப்பில் சந்தேக நபரான வரதனுக்கு பாதுகாப்பு கொடுத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் மலையக மக்கள் முன்னணியைச் சேர்ந்த சந்திரசேகரம், தருமலிங்கம், காதர் ஆகிய மூவரையும் கைது செய்தனர். மலையகத்தில் தொண்டமானின் தலைமைக்கு மாற்றுத் தலைமையாக வளர்ந்து வந்த மலையக மக்கள் முன்னணி உறுப்பினர்களின் கைது தொண்டைமானின் விருப்புடன் நிகழ்த்தப்பட்டது.

 

மக்களின் விருப்பு இன்றி சட்டவிரோத முறையில் இந்தியா தயவில் 1989 களில் பாராளுமன்றக் கதிரைகளை பெற்று சுகம் கண்டவர்கள் மீண்டும் அதைப் பெற புதிய தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றனர். இந்தவகையில் கூட்டணி 1977க்கு பின் மீண்டும் தேர்தலில் தனியாக நிற்கவும் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடவும் தங்களை தயார்ப்படுத்தி வருகின்றனர்.

கிழக்கை வடக்குடன் இணைப்பதை ஒரு வாக்கெடுப்பு மூலம் தீர்மானிக்க முனையும் இனவாதிகள் அதன் ஒத்திகையாக கிழக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்தினர். வடக்குடன் கிழக்கை இணைப்பதா என்பதை கிழக்கு மாகாண மக்களிடம் மட்டும் வாக்கெடுப்பை நடத்த முயல்வதன் ஊடாக வடக்கை இணைக்க யாரும் கோரவில்லை . ஏன் வடக்கிலும் வாக்கெடுப்பை கோரலாமே. வடக்கு அரசியல் ஆதிக்கம் கொண்டது என்று விடயங்கள் உள்ளனவே.

நாசகார காட் ஒப்பந்தந்தத்துக்கு எதிராக இலட்சக்கணக்கான இந்திய மக்கள் ஆர்ப்பாட்டம் ஏப்ரல்-6 இந்தியாவை வல்லாதிக்க அரசுகளினதும் பன்னாட்டு பகாசுரக் கம்பனிகளினதும் காலனியாக மாற்ற வழி வகுக்கும் காட் மற்றும் டங்கல் ஒப்பந்தங்களில் நரசிம்மராவ் அரசு கையெழுத்திட வேண்டாமென இவ் ஒப்பந்தங்களுக்கெதிராக இடதுசாரி கட்சிகள் எதிர்ப்பு ஊர்வலத்தை ஒழுங்கு செய்திருந்தன.

இலங்கை அரசாங்கம் இந்த வருடத்தை தேர்தல் ஆண்டாக அறிவித்ததுடன் எல்லாக் கட்சிகளும் கதிரைகளைக் கைப்பற்ற ஆலாய்ப் பறக்கின்றனர். இவ்வருடத்தில் கிழக்கு தேர்தலையும் தென்மாகாண சபை தேர்தலையும் நடத்தி முடித்துள்ள அரசு பாராளுமன்ற தேர்தலையும் நடத்தி முடிக்கவுள்ளனர். கிழக்கு தேர்தலில் யூ.என்.பி அரசு சகல தில்லுமுல்லுகளையும் நடத்தி கட்டாயப்படுத்திய வேட்ப்பாளர்களையும் நிறுத்தியும்,பொலிஸ்,இராணுவம் மூலம் கள்ள வோட்டுக்களை போட்டும் வெற்றிய பெற்று விடமுடியவில்லை.

உலகின் முதலாவது உயிர் மூலக்கூறு பொறியியல் முறைப்படி தக்காளிப்பழம் தை மாத இறுதியில் அமெரிக்க சந்தையில் விற்பனைக்கு வரவுள்ளது. சற்றே இனிப்பு சுவை கூடுதலாக உள்ள இந்தத் தக்காளி பன்னாட்டு நிறுவனத்தின் காப்புரிமை பெற்றதாகும். விரைவில் இதன் விதைகள் டங்கல் ஒப்பந்தப்படி மற்ற ஏழைநாடுகளுக்கும் இறக்குமதியாகும்.

01-05-1994 மேதினத்தன்று முன்னால் இளைஞர் பேரவை உறுப்பினரும், தமிழ் மாணவர் போரவை ஸ்தாபகரும், நாலாம் மாடியிலிருந்து தப்பியவருமான சபாலிங்கம் படுகொலை செய்யப்பட்டார்.