இலங்கையை விட்டோடும் இலங்கையர்
தங்களது தாய் நாட்டை விட்டு மக்கள் வேறு நாடுகளுக்கு ஓடுகின்றார்கள் என்றால் அதற்குப் பல காரணங்கள் உண்டு. போர், பாசிச சர்வாதிகாரிகளின் அடக்குமுறை, பஞ்சம், பட்டினி, உயர் வருமானம் ஈட்டல் என்ற பல காரணங்கள் உண்டு. இவ்வாறு பெருந்தொகையான மக்கள் தமது சொந்தநாட்டைக் கைவிட்டு வெளியேறும் முதல் 10 நாடுகளில் இலங்கையும் ஒன்றென்பது விசனத்துக்குரியதாகும். முன்னொருபோது இந்து சமுத்திரத்தின் முத்தெனவும், இலங்கைச் சீமை எனவும் வர்ணிக்கப்பட்ட நாட்டை விட்டு சுகாதாரமான இந்தச் சூழலை விட்டு, சந்தோசமான சீதோஷ்ண நிலையை இழந்து மெல்லெனத் தவழும் இளந் தென்றலை மறந்து அந்நிய நாடுகளில் பனிக்குளிரின் மத்தியில் ஒரு அடைத்த வாழ்வுக்கு மூன்றாந்தர பிரசைகளாக அடிமைகளாக வாழ நிர்பந்திக்கப்பட்டுள்ளார்கள் என்றால் மிகையாகாது.