பி.இரயாகரன் - சமர்

மாநில அமைப்புக் கமிட்டியில் நடப்பது, கீழ் இருந்து மேலாக, மேல் இருந்து கீழான விவாதமல்ல. மாறாக மேல் இருந்து கீழாக முடிவுகளை முன்நகர்த்தும் நபர்களுக்கு இடையிலான - அதிகாரத்துக்கான முரண்பாடுகளே.

மறுபக்கம் தலைமை மட்டத்தில் நடந்த ஊழல்கள் அம்பலமாகி இருக்கின்றது. முரண்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட கட்சி அணிகள், அரசியலற்ற வன்மங்களை எதிர்தரப்பின் மீது கொட்டுவதுடன் - தனிநபர்களின் பிறப்பிலான சாதியை முன்னிறுத்தி வசைபாடுவதே அரசியலாக அரங்கேறுகின்றது.

மேலும் படிக்க: ம.க.இ.க - மாநில அமைப்பு கமிட்டியின் பிளவும் - அரசியலும்

தமிழக அம்பேத்கரிய, பெரியாரிய, மார்க்சிய இயக்கங்களே!, இக்கருத்துகளை முன்னிறுத்தும் தனிநபர்களே!!

நீங்கள் புலிகளையும், இனவாத வெள்ளாளிய தமிழ் தேசியத்தையும் ஆதரிக்கின்ற, கொண்டாடுகின்ற அரசியலின் சாரம் என்ன?

மேலும் படிக்க: அம்பேத்கரிய, பெரியாரிய, மார்க்சியவாதிகளே பதில் சொல்லுங்கள்

வரலாற்றைப் புரட்டிப் போட்டால் வன்முறையும் – வெள்ளாளியத் தமிழ் தேசியத்தின் பெயரில் ஒடுக்கிய வக்கிரமுமே, வரலாறாக இருப்பதைக் காணமுடியும். அமைதிவழி, ஜனநாயகவழி போராட்டமெல்லாம் - வன்முறை அடிப்படைகள் மீதுதான் நடந்தேறுகின்றது.

மேலும் படிக்க: ஹர்த்தால்களும் - ஒன்றுபட முனையும் வெள்ளாளியத் தமிழ் தேசியமும்

ஜனநாயகம் இன்று நாட்டில் உள்ள பிரச்சனைகளுக்கு காரணம், தனிநபர் சர்வாதிகாரம் மூலம் தீர்வைக்; காணமுடியும் என்கின்றனர். மனித வரலாற்றையும், அதில் மனித அவலத்தையும் கற்றுக் கொள்ள மறுக்கின்றனர்.

மேலும் படிக்க: 20 வது திருத்தச்சட்டமும் - சர்வாதிகாரமும்

முன்னாள் வடமாகாண ஆளுநரும் இந்நாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேன் ராகவன், தொடர்ச்சியாக இலங்கையின் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை உருவாக்குவது குறித்து பேசி வருகின்றார். அரசு அவரை பாராளுமன்ற உறுப்பினராக தேசியப்பட்டியல் ஊடாக கொண்டு வந்த நோக்கம் எது

மேலும் படிக்க: சுரேன் ராகவனின் தர்க்க ரீதியான அரசியல் - இன-மத முரண்பாட்டை தீர்க்குமா!?

எழுதப்பட்ட, எழுதப்படும் வரலாறுகளில் அரசியலை நீக்கம் செய்துவிட்டு, திரிக்கப்பட்ட வரலாற்றைக் கட்டமைக்கின்றனர். ஒடுக்குவோர் ஒடுக்கப்பட்டோர் சமூக அமைப்பில், ஒடுக்கப்பட்டோர் கண்ணோட்டத்தில் வரலாற்றை காண்பதுமில்லை, கூறுவதுமில்லை.

மேலும் படிக்க: யார் இந்தத் திலீபன்?

மாடு "புனிதமானது" என்பது பகுத்தறிவின்றி மூளை முடங்கிவிட்டவர்களின் நம்பிக்கையே. இந்த நம்பிக்கையை முழு மக்களினதும்; புனிதமாக கட்டமைக்கின்ற – காட்டுகின்றதன் மூலம், மத அடிப்படைவாதமானது மேலேழுகின்றது. இதன் மூலம் நாளைய ஒடுக்குமுறைகளுக்கும் - மத வன்முறைகளுக்குமான விதைகள் இடப்படுகின்றது.

தனிமனிதன் மாட்டு இறைச்சியை உண்பதும் உண்ணாமல் விடுவதும் அவரவர் தேர்வு. அதை நீயும் உண்ணக் கூடாது என்பது, மற்றவர் உணவுச் சுதந்திரத்தில் தலையிடுவது. இந்த தலையீடு ஒடுக்குமுறையாக மாறுகின்றது. மனித உணவிலும் மனிதர்களின் ஜனநாயகத்தை மறுக்கின்ற செயற்பாடானது, ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்கின்ற அரசியல் செயற்பாட்டின் ஒரு தொடர்ச்சியே. இது இலங்கையின் இன-மத ஒடுக்குமுறையின் நீட்சியாகவே மேலெழுகின்றது.

மேலும் படிக்க: மாடு "புனிதமானது" என்பது மூளை வளர்ச்சி குன்றிய மனிதர்களின் நம்பிக்கை

"இலங்கையின் சுதேச குடிமக்களின் முதல் மொழி தமிழாக" இருக்கும் போது, அதே சுதேச குடிமக்களின் முதல் மதம் பவுத்தமே. 2000 வருடங்களுக்கு முந்தைய வரலாற்றுக் குறிப்புகள் இதைத் தான் கூறுகின்றது. தமிழ் மொழியை குறிப்பிடும் விக்கினேஸ்வரன், பவுத்தத்தை குறிப்பிடத் தவறியதன் மூலம், இனவாதத்தைத் தூண்டி தனது அடிப்படைவாத மதவாதத்தையே முன்னிலைப்படுத்தி உள்ளார். வரலாற்றைக் குறுக்கியும் - திரித்தும் பொய் பேசுவதே – மதவாதிகளினதும் இனவாதிகளினதும் அடிப்படைக் குணம்.

விக்கினேஸ்வரன் போட்டுத் திரியும் பட்டை நாமம், இலங்கை மண்ணின் சுதேச குடிகளின் வரலாற்றுக்;கே சொந்தமல்ல. மாறாக பார்ப்பனிய வழிவந்த வெள்ளாளிய ஆறுமுகநாவலர், வெள்ளாளருக்கு புகுத்திய சாதிய அடையாளங்கள். இன்று அது வெள்ளாளியமாக சமூகத்தில் வக்கிரமடைந்து - இந்துத்துவம் என்ற இந்திய பார்ப்பனிய வெள்ளாளியமாக புளுக்கத் தொடங்கி இருக்கின்றது.

மேலும் படிக்க: தமிழ் ஆதி மொழியாக இருந்த போது, அவர்களின் மதம் பவுத்தமே

"புத்திஜீவிகள்" "முற்போக்காளர்கள்" என்று தங்களைக் கூறிக் கொள்ளும் - காட்டிக் கொள்ளும் தமிழர்களின் சிந்தனை முறை, வெள்ளாளியமாக இருக்கின்றது. வெள்ளாளியச் சமூக வாழ்க்கை முறையில் வாழும் மக்களிலிருந்து இந்த "புத்திஜீவிகள்" வெள்ளாளியத்துக்கு எதிரான நடைமுறைகள் மூலம் வாழ்வதற்கும் – அதற்காகப் போராடுவற்கும் தயாரில்லை. முன்னுதாரணமான நடைமுறையைக் காணவும், காட்டவும் முடியாது உள்ளனர். இதை மூடிமறைக்க

1.எங்கள் பிறப்பு எங்கள் குற்றமா என்று கேட்டு, பிறப்பைக் கொண்டு வெள்ளாளியத்தை, ஆணாதிக்கத்தை.. எல்லாம் குறுக்கி விளக்க முற்படுகின்றனர்.

2.தங்கள் மனிதாபிமான செயலைக் கொண்டு, தம்மை முன்னிறுத்துவது. உதாரணமாக பெண்கள், ஒடுக்கப்பட்ட மக்களுடனான உதவி மற்றும் நடத்தையைக் கொண்டு தன்னை வெள்ளாளியத்துக்கும், ஆணாதிக்கத்துக்கும்.. எதிரானவனாக நிறுவ முனைவது.

3.தங்கள் முரண்பட்ட கருத்துக்கள் - எழுத்துக்களைக் கொண்டு தங்களை வெள்ளாளியத்துக்கு, ஆணாதிக்கத்துக்கு எதிரானவராக முன்னிறுத்துவது

தண்ணி அடிக்க ஊறுகாய் தேவைப்படுவது போல், அரசியல் - இலக்கியம் பேசும் அக வெள்ளாளியத் தனத்துக்கு ஒடுக்கப்பட்ட மக்கள் பயன்படுத்தப்படுகின்றனர். தமிழ் அரசியல் இலக்கிய உலகில் இந்த வெள்ளாளிய நரித்தனமே, பகல் வேசம் போட்டு நிற்கின்றது.

இந்தப் பின்னணியில் தமிழ் அரசியல், இலக்கிய சிந்தனை முறைகள் அனைத்துமே வெள்ளாளியமாக இருப்பதுடன், அதையே "முற்போக்கு" என்றும் "புத்திஜீவித்தனம்" என்றும் பீற்றுகின்ற – நம்புகின்ற மனநிலையும் காணப்படுகின்றது. கடந்தகால போராட்டம் மட்டுமல்ல போராட்டம் குறித்த விமர்சன அரசியலும் வெள்ளாளியக் கண்ணோட்டத்தைக் கொண்டு காணப்படுகின்றது.

2009 வரையான யுத்தகாலத்தில் புலிகளின் வெள்ளாளியச் சிந்தனையிலான சமூக வாழ்வியல் முறை மட்டும் எம்மை அழிக்கவில்லை, புலிக்கு வெளியில் செயற்பட்ட புலம்பெயர் அரசியல் இலக்கியமும் முரண்பட்ட அக வெள்ளாளியத்தையே மாற்றாக முன்வைத்தது. இதுதான் அன்றைய அழிவுக்கும், இன்றைய சமூக பின்னடைவுக்கும் அடிப்படைக் காரணமாகும்.

இந்த வகையில் கடந்தகாலம் குறித்த விமர்சன அரசியல் முதல் இலக்கியம் வரை, வெள்ளாளிய சமூக உள்ளடக்கத்தை காய்வெட்டித்தான் முன்வைக்கப்பட்டு வருகின்றது. நிகழ்கால அறிவியல் இதற்குள் புளுக்கின்றது.

தோற்றுப்போன போராட்டங்கள் தொடங்கி இன்றைய சமூக ஓடுக்குமுறைகள் வரை, இந்த வெள்ளாளியச் சிந்தனையிலான வாழ்க்கை முறைக்குள் குறுகிக் கிடக்கின்றது. இதனால் தமிழ் சமூகம் முன்னுதாரணமிக்க சமூகமாக முன்னிறுத்த முடியாத சிந்தனை முறையில் சிக்கி, பாதாளத்தில் வீழ்ந்து கிடக்கின்றது.

மேலும் படிக்க: தமிழ் "புத்திஜீவிகளின்" வெள்ளாளியச் சிந்தனை முறை

கிழக்கு பிரிவினைவாதமானது, தமிழ் தேசிய பிரிவினைவாதத்துக்கு நிகரான வெள்ளாளியமே. மக்களை ஒடுக்கும் தரப்புடன் ஒன்றிணைந்த மேலாதிக்கம். யாழ் மேலாதிக்கத்துக்குப் பதில் கிழக்கு மேலாதிக்கமானது, மூடிமறைக்கப்பட்ட வெள்ளாளியத்தின் இரு முகங்கள்.

தமிழ் பேசும் மக்களை ஒடுக்குகின்ற பேரினவாத ஒடுக்குமுறையாளர்கள் தொடங்கி தமிழ் மக்களைப் பிளக்கின்ற பிரிவினைவாதிகள் வரை, யாழ் மேலாதிக்கம் குறித்து பேசுவது ஒடுக்கும் தேர்தல் அரசியலில் நடந்தேறுகின்றது. தமிழ்தேசியம் மட்டுமல்ல அதற்கு எதிரான கிழக்கு பிரிவினைவாத அரசியல் கூட, மக்களை பிளக்கின்ற - பிரிக்கின்ற அரசியல் தான். தங்கள் கிழக்கு ஒடுக்குமுறைக்காக யாழ் மேலாதிக்கத்தை கையில் எடுக்கின்றனர். இது எந்த வகையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சார்பானது?

மேலும் படிக்க: யாழ் மேலாதிக்கம் என்பது மூடிமறைக்கப்பட்ட வெள்ளாளியமே

இலங்கைப் பாராளுமன்றத்தில் "தேசம்" குறித்தும் - "சுயநிர்ணயம்" குறித்தும், யாழ் வெள்ளாளியப் பன்னாடைகள் தங்கள் அரசியல் பித்தலாட்டத்தை அரங்கேற்றி இருக்கின்றனர். காலாகாலமாக "தமிழனை" ஏமாற்றும் இந்த அரசியல் மோசடிகள் - புது வேசம் போட்டுக் கொண்டு பொம்மலாட்டமாக மேடை ஏறியிருகின்றது. மூச்சுக்கு மூச்சு தமிழ் இனவாதம் பேசும் கூட்டம், அதற்கு ஒளிவட்டம் போட்டு - கும்மி அடிக்கின்றது.

இன – தேச ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுவது என்பது நடைமுறை சார்ந்தது. அதிலும் தேசம், சுயநிர்ணயம் என்று அரசியல் ரீதியான உள்ளடக்கத்துடன் போராடுவது என்பது, வர்க்க அடிப்படையிலானது.

இந்த வகையில் சுயநிர்ணயத்துக்கு உரிய தேசமானது, அடிப்படையில் அக ஒடுக்குமுறைகளை எதிர்த்து போராடுகின்ற – வர்க்க அரசியல் இயக்கமாகவே இருக்க முடியும். இதை விடுத்து வெற்றுக் கோசங்களைப் போடுவது என்பது அரசியல்ரீதியாக போலியானதும், புரட்டுத்தனமானதுமாகும்.

மேலும் படிக்க: இரு தேசங்கள் தொடங்கி சுயநிர்ணயம் வரை

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

Load More