கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்

“ஆயிரமாய் கவிதை சொன்னேன்
அழகழகாய் பொய் சொன்னேன்
பெற்றவளே உன் பெருமை
ஒத்தை வரி சொல்லவில்லையே”

பம்பைமடு இராணுவ தடுப்புமுகாமில் சிறை வைக்கப்பட்டிருந்த ஒரு பெண் போராளி சுவரில் வரைந்த வரிகள் இவை. தமிழின விடுதலைக்காக தன் தாய், தந்தையை, உடன்பிறப்புக்களை விட்டு வெளியே வந்து போராடிய ஒருபெண் முள்ளிவாய்க்கால் முடிவின் பின் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு சித்திரவதைகளையும், பாலியல் கொடுமைகளையும் அனுபவித்த போது தன் தாயை நினைத்து, பெற்ற மடி தேடி மூடிய சிறைச்சுவர்களில் இரத்தத்தால் எழுதிய வரிகள் இவை.

மேலும் படிக்க …

புளொட்டின் சதிவலைக்குள் சிக்கிய ரீட்டா

மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் போல் நண்பர் தாசன் அவர்களின் வீட்டுக்குள் எமது தலைமறைவு வாழ்க்கையை ஆரம்பித்தோம். ஆனால் எமக்கு மரணதண்டனைக்கான திகதியோ, நேரமோ அன்றி இடமோ நிச்சயிக்கப்படவில்லை. எந்த நேரத்திலும் தலைமையின் - உமாமகேஸ்வரனின் - உத்தரவின் பேரில் நாம் கொல்லப்படலாம் என்ற நிலையே இருந்தது. நாம் ஒவ்வொருவரும் எமக்கு வரவிருக்கும் கொடிய ஆபத்தை நன்கு உணர்ந்து கொண்டவர்களாக இருந்தோம். இந்த ஆபத்தானது இப்பொழுது இலங்கை அரசபடைகளிடமிருந்தல்ல, ஈழ விடுதலைப் போராட்டத்தை புரட்சிகரமான பாதையில் முன்னெடுக்கும் ஒரே தலைமை என்று கூறி நாமே வளர்த்துவிட்டிருந்த தலைமையால் வரப்போகும் கொடிய ஆபத்தாக இருந்தது. நாம் ஒருவரை ஒருவர் அனுதாபத்துடனும், வரவிருக்கும் எதிர்காலம் எவ்வளவு கொடியதாக இருக்குமோ என்ற ஒருவித கலக்கத்துடனும், அனைத்துமே எம்மிடமிருந்து அந்நியமாகிக் கொண்டிருக்கின்றன என்ற நம்பிக்கையீனத்துடனும் ஒருவரை ஒருவர் உற்று நோக்கினோம்.

 

மேலும் படிக்க …

 

மரணத்தின் பின்னான மகிழ்ச்சி ஆரவாரங்கள்

துப்பாக்கி ரவைகளாகவே

வானை நோக்கி தீர்க்கப்படுகின்றன

எண்ணையை நோக்கியவர்கள்

குண்டுகட்கான பெறுமதியை வென்றுவிட்டார்கள்

மேலும் படிக்க …

புளொட்டில் இருந்து வெளியேறி தலைமறைவானோம்

புளொட்டில் இருந்து வெளியேறி இந்தியா செல்வதற்கு உதவி செய்யுமாறு கிட்டுவையும் திலீபனையும் நாம் கேட்டதற்கு என்ன பதிலளிப்பது என்று தடுமாற்றமுற்றவர்களாகக் காணப்பட்ட கிட்டுவும் திலீபனும் ஒருகணம் ஒருவரை ஒருவர் உற்று நோக்கினர். சிறிது நேர மௌனத்தின் பின் விபுலையும் என்னையும் ஒருவகை அனுதாபத்துடனும், அதேவேளை சிறிது ஐயத்துடனும் பார்த்தவாறு கிட்டுவும் திலீபனும் பேசத்தொடங்கினர். இந்தியா செல்வதற்கு உதவி செய்வது குறித்த முடிவை தம்மால் எடுக்க முடியாது எனவும், இது குறித்து தமது தலைவருடன்(வேலுப்பிள்ளை பிரபாகரன்) அன்றிரவு புத்தூர் பகுதியில் இருந்த அவர்களின் தொலைதொடர்பு மையமூடாக பேசிய பின்பே மறுநாள் முடிவு சொல்ல முடியும் எனவும் கூறினர்.

 

தலைவரின் (வேலுப்பிள்ளை பிரபாகரன்) முடிவுடன் மறுநாள் காலை எம்மைச் சந்தித்த அதே இடத்திற்கு தாம் வருவதாகவும், எம்மை தமக்காக எதிர்பார்த்து நிற்குமாறும் கூறிவிட்டு சென்றுவிட்டனர்.

 

மேலும் படிக்க …

சுழிபுரத்தில் சுவரொட்டி ஒட்டச் சென்று காணாமல் போன ஆறு விடுதலைப் புலிகள்

யாழ்ப்பாண மாவட்ட அமைப்புக்குழுவுடனான உமாமகேஸ்வரனின் நீண்ட நேர சந்திப்பும், மாவட்ட அமைப்பாளர்களினால் முன்வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கும் கேள்விகளுக்கும் உமாமகேஸ்வரனால் அளிக்கப்பட்ட பதில்கள், பெரும்பான்மையானவர்களுக்கு முழுமையாகத் திருப்தியளிக்காதபோதிலும் கூட யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர்கள் தமது அமைப்பு சம்பந்தமான செயற்பாடுகளை தொடர்ந்து செய்தவண்ணமிருந்தனர். உமாமகேஸ்வரன் மகளிர், மாணவ, தொழிற்சங்க அமைப்பிலுள்ளவர்களுடனும் சந்திப்புக்களை நிகழ்த்திக் கொண்டிருந்தார். படைத்துறைச் செயலர் கண்ணன் தனது பங்குக்கு சந்திப்புக்களை நிகழ்த்திக் கொண்டிருந்தார். டொமினிக்கின் மீதும், என் மீதுமான தள இராணுவ பொறுப்பாளர் ரமணனின் விசாரணையின் பின் எனக்குள் தொடர்ச்சியாக பல கேள்விகள் எழுந்தவண்ணமிருந்தன. செயலதிபர் உமாமகேஸ்வரன் பற்றியும் படைத்துறைச் செயலர் கண்ணன் பற்றியும் பல கேள்விகள் எழுந்தன. உமாமகேஸ்வரனும் கண்ணனும் தளத்தில் நிற்கும் போது இத்தகையதொரு நிலைமை என்றால் இதில் இவர்கள் இருவரினதும் பங்கென்ன? சுந்தரம் படைப்பிரிவினர் என்று செயற்பட்டவர்களின் அனைத்து ஸ்தாபன விரோத, தெருச்சண்டித்தனப் போக்குகளுக்கெதிராகவும் புளொட் என்ற எமது அமைப்புக்காகவும் அதன் கொள்கைக்கு விசுவாசமாகவும் செயற்பட்டது தவறா?

 

மேலும் படிக்க …

அவரது வழிமுறைகள் காந்தியமாக இருக்கலாம், ஆனால் அவரது கோரிக்கைகளில் கண்டிப்பாக காந்தியம் இல்லவே இல்லை..

தொலைக்காட்சியில் எதைப் பார்க்கிறோமோ, அவைகள்தான் உண்மையில் புரட்சிகரமானதென கருதினால், அதுதான் சமீபத்தில் நடந்ததில் மிகவும் தர்மசங்கடமானதாகவும் புத்திசாலிதனமற்றதாகவும் இருந்திருக்கும்.. இப்போது ஜன் லோக்பால் மசோதா பற்றி, நீங்கள் என்ன கேள்வி யாரிடம் கேட்டிருந்தாலும், அந்த கேள்வி கீழ்கண்ட கட்டங்களில் ஏதாவது ஒரு பதிலைதான் சரியென அவர் 'டிக்' செய்திருப்பார்கள் (அ) வந்தே மாதரம்! (ஆ) பாரத அன்னைக்கு ஜே! (இ) இந்தியா என்றால் அன்னா, அன்னா என்றால் இந்தியா! (ஈ) இந்தியாவுக்கு ஜே!

 

மேலும் படிக்க …

சென்னையிலிருந்த செயலதிபர் சுழிபுரத்துக்கு வருகை

தள இராணுவப் பொறுப்பாளர் ரமணன், யாழ் மாவட்ட இராணுவப் பொறுப்பாளர் சின்னமென்டிஸ் ஆகியோர் தளநிர்வாகத்துடனும் மக்கள் அமைப்பினருடனும் முரண்பாடுகளைக்கொண்டவர்களாக செயற்பட்டுக் கொண்டிருந்த அதேவேளை ,எஸ்.ஆர் என்று அழைக்கப்பட்ட புவிராஜகீர்த்தி சிவராம் தனது கவர்ச்சிகரமான சிலவேளைகளில் நகைப்புக்கிடமான பேச்சுக்களால் தன்னைச்சுற்றி ஒரு கூட்டத்தை உருவாக்கி அவர்களை தவறான பாதையில் இட்டுச்செல்வதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தான். தளத்தில் தங்கியிருந்த படைத்துறைச் செயலர் கண்ணன் யாழ் மாவட்டத்திலுள்ள அனைத்துப் பிரதேசங்களையும் சேர்ந்த அமைப்பாளர்களையும், மகளிர் அமைப்பு, மாணவர் அமைப்பு, தொழிற்சங்க அமைப்பு போன்றவற்றில் செயற்படுபவர்களுடனும் சந்திப்புக்களை நிகழ்த்தி ஈழவிடுதலைப் போராட்டத்தில் புளொட்டின் தலைமைப் பாத்திரம் குறித்தும் ஈழவிடுதலைப் போராட்டத்தில் புளொட் மட்டும் தான் சரியான கொள்கை, நடைமுறை மற்றும் வேலைத்திட்டங்களுடன் செயற்படுவதாகக் குறிப்பிட்டு அமைப்பில் உள்ளவர்களுக்கு நம்பிக்கையூட்டிக் கொண்டிருந்தார்.

 

மேலும் படிக்க …

ஈக்கள் மொய்க்கும் சின்னஞ் சிறுசுகளின்
வறண்டு வெடித்துப்போன உதடுகள்
தொலைக்காட்சி செய்திகட்காய் படமாக்கப்படுகிறது
மொய்க்கும் ஈக்களை எப்பொழுதாவது
இந்தக் குழந்தைகள் பசியில் விழுங்குமாவென
ஒளிப்பட பதிவாளர்கள்
விருது பெறுவதற்காய் காத்துக் கிடக்கிறார்கள்

மேலும் படிக்க …

முதன்முதலாக புளொட்டுக்குள் ஸ்தாபன கோட்பாடு அறிமுகம்:

ஸ்தாபன கட்டுப்பாடுகள் மூலம் இயக்க நடவடிக்கைகளை ஒழுங்குக்குள் கொண்டுவர டொமினிக் நடவடிக்கை!!

புளொட்டின் தள இராணுவப் பொறுப்பாளர் ரமணனும் யாழ் மாவட்ட இராணுவப் பொறுப்பாளர் சின்னமெண்டிஸும் தளநிர்வாகத்துடனும் மக்கள் அமைப்பினருடனும் முரண்பட்டு நின்றதால் சின்னமென்டிஸை யாழ் மாவட்ட அமைப்புக்குழு கூட்டங்களில் கலந்து கொள்ளுமாறு தளநிர்வாகப் பொறுப்பாளர் டொமினிக்கால் கேட்டுக்கொள்ளப்பட்டு யாழ்மாவட்ட அமைப்புக்குழுக் கூட்டங்களில் சின்னமெண்டிஸ் கலந்துகொண்டிருந்தபோதும் கூட அவர்களது செயற்பாடுகளில் எந்தவித முன்னேற்றமும் காணப்படவில்லை. யாழ்மாவட்ட அமைப்புக்குழு கூட்டங்களில் தனது கருத்துக்களையோ அல்லது அபிப்பிராயங்களையோ தெரிவிக்காமலே ஒரு பார்வையாளர் போல் கலந்துகொள்ளும் சின்னமெண்டிஸ் வழமைபோல் தளநிர்வாகத்துடனும் மக்களமைப்புடனும் முரண்பாடான போக்கைக் கொண்டவராகவே காணப்பட்டார்.

 

மேலும் படிக்க …

புளொட்டுடன் இணைந்த சுப்பையா என்ற கௌரிகாந்தன்

டொமினிக் (கேசவன்) அரசியல் வகுப்புகளையும் அரசியல் பாசறைகளையும் நடத்திக் கொண்டிருந்த அதேவேளை, தள நிர்வாகத்தையும் கவனித்துக் கொண்டிருந்தார். தளம் வந்திருந்த படைத்துறைச் செயலர் கண்ணன் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச பிரிவுகளையும் சேர்ந்த அமைப்பாளர்களையும் மற்றும் மகளீர் அமைப்பு, மாணவர் அமைப்பு, தொழிற்சங்க அமைப்பு போன்றவற்றில் செயற்படுபவர்களையும் சந்தித்து பேச விரும்புவதாக தெரிவித்தார். இதன் அடிப்படையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பிரதேச பிரிவுகளிலும் செயற்படுபவர்களையும் தனித்தனியே சந்திப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டது. மகளீர் அமைப்பு, மாணவர் அமைப்பு, தொழிற்சங்க அமைப்புக்களும் தனித்தனியேயான சந்திப்புக்களை ஏற்பாடு செய்திருந்தனர். கண்ணனுடனான சந்திப்புக்களில் பெரும்பாலும் புளொட்டின் நடைமுறை சம்பந்தமான விடயங்களே கலந்துரையாடப்பட்டன. அரசியல்ரீதியான கேள்விகளுக்கு பதிலளிக்க கூடியளவுக்கு கண்ணனிடம் அரசியல் அறிவு இருந்திருக்கவில்லை. இருந்தபோதிலும் புளொட்டின் படைத்துறை செயலரை சந்தித்ததில் பெரும்பாலானவர்கள் திருப்தி கொண்டவர்களாக காணப்பட்டனர்.

 

மேலும் படிக்க …

தொடரும்…சீனா மீது ஜெயமோகன் வைத்திருக்கும் விமர்சனம் எதையும் மறுப்பதற்கில்லை. அது சமூக ஏகாதிபத்திய வல்லாதிக்க நாடுதான். ஆனால் இந்திய அரசின் சார்பில் அந்த விமர்சனந்த்தை வைக்க முடியுமா? அளவு வித்தியாசத்தைத்தவிர இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இதில் வேறுபாடு ஒன்றுமில்லை. சீனாவை விலக்கிவிட்டு இந்தப் பிரச்சனைகளை விவாதிப்பது அயோக்கியத்தனம் என்றால், இந்திய ஆளும்வர்க்கத்தின் சார்பில் இந்த விமர்சனங்களை வைப்பதும் அயோக்கியத்தனமானது தான். சாமான்ய புத்தியுடன் சிந்திப்பவர்களுக்கு கூட இந்திய சீன அரசியலை பின்புலமாக வைத்துத்தான் இதை யோசிக்க முடியும் என்று கூறிக்கொண்டே இந்தக் கட்டுரையின் இந்திய அரசியல் குறித்த விமர்சனம் எதையும் முன்வைக்காத அவரின் ஆளுமைக்கு கிடைத்த ஊதியமென்ன?

மேலும் படிக்க …

ஒரு இருபத்தாறு வருசத்துக்குப் பின்னர் இன்று தான் என்ரை பெரியப்பாவைச் சந்திக்கப் போகிறேன். ஜரோப்பிய நாடொன்றில் தம்பியிடம் ஒரு சில மாதங்கள் வந்து தங்கி விட்டுப் போவதாக வந்திருக்கிறார்.

பெரியப்பா என்றதும் என் நினைவலைகள் பொங்கி நுரைத்து வழியத் தொடங்கியது சரியாக எனக்கு ஞாபகம் இல்லை. அப்போ பதினாறோ அல்லது பதினேழோ வயதிருக்கலாம். ஆனந்தவிகடன் குமுதம் போன்ற புத்தகங்களில் வரும் பெண்களையும் விளம்பரப் படங்களையும் வெட்டிச் சேகரித்து அந்த பெண்களையும் அந்தப் புகைப்படங்களையும் ரசித்து ஏங்கிக் கொண்டிருந்த ஒரு கனாக் காலம்…

மேலும் படிக்க …

கொட்டுகின்ற

ஒவ்வோர் குண்டும்

அத்தனை குழந்தைகளினதும் பசியாற்றும்

சோமாலியப் பாலைவனத்தில்

இன்னோர்

முள்ளிவாய்க்கால் பிணத்தில் குவிகிறது

மேலும் படிக்க …

புதிய ஆயுதங்களுடன் படைத்துறைச் செயலர் சென்னையிலிருந்து திடீர் வருகை !

உமாமகேஸ்வரன் மடலில் கேட்டுக்கொண்டதற்கிணங்க டொமினிக் (கேசவன்) தளத்துக்கான அரசியல் பொறுப்பாளராக பொறுப்பேற்றபின் கண்ணாடிச்சந்திரன் டொமினிக்கை(கேசவன்) ஏனைய மாவட்டங்களுக்கு அழைத்துச் செல்லும் வேலையில் இறங்கினார்.

இதன் முதற்கட்டமாக டொமினிக்(கேசவன்) முல்லைத்தீவுக்கு கண்ணாடிச் சந்திரனால் அழைத்துச் செல்லப்பட்டார். முல்லைத்தீவு அமைப்பாளராகச் செயற்பட்ட வரதன் உட்பட முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி அமைப்பில் செயற்பட்டவர்களுடன் சந்திப்புக்களை ஏற்படுத்தியதுடன் அரசியல்பாசறை நடத்துவதற்கான ஒழுங்குகளையும் டொமினிக்(கேசவன்) மேற்கொண்டார். டொமினிக்(கேசவன்) இப்பொழுது தீவிரமாகவும் கடுமையாகவும் உழைக்க வேண்டிய நிலைக்குள்ளானார். யாழ் மாவட்டத்திலிருந்து ஏனைய மாவட்டங்களுக்குச் சென்று சந்திப்புக்களை நிகழ்த்துவது, அரசியல் வகுப்புக்கள், பாசறைகள் நிகழ்த்துவது, அமைப்பின் அனைத்து நிர்வாக வேலைகள் என டொமினிக்கின்(கேசவன்) செயற்பாடுகள் அமைந்தன.

 

மேலும் படிக்க …

நாற்றெழுந்து

கதிர் தள்ளி

சோற்றுப் பருக்கை தரும் நெற்கதிரும்

காற்றில் சுளகெடுத்து தூற்றிய நெல்மணியும்

வயிறாற்றிய கஞ்சியும் அறியார்

சேற்று நிலம் அறியார்

ஏர் உழுத மண்வாசம் ஏதும் அறியார்

 

மேலும் படிக்க …

"பற்றுறுதியுள்ள ஒரு மனிதன் வெறும் ஆர்வத்தை மட்டுமே கொண்டுள்ள இலட்சக்கணக்கானவர்களுக்கு சமமானவன்."

இனவெறி நிறவெறி மதவெறி யாவற்றையும் ஒருங்கே கொண்ட ஒரு மனிதன் ஆவேசமாய் தன்னுடைய இனத்தின் முகத்தில் அறைந்து உலகுக்கு பறைசாற்றிய செய்தி என்ன?. தான் காப்பாற்றத் துடிக்கிற தன் சொந்த இன மக்களை கதறக்கதற துப்பாக்கியால் துளைத்து உயிர்ப்பலி எடுத்த கொடூரச் செயலுக்குப் பின்னாலும் தன்னிடத்தில் நியாயம் உண்டு என்கின்றான். இக் கொலைகள் குரூரமானமானவையாயினும் அத்தியாவசியமானவை என அவன் தன்மீதான குற்றவிசாரணைகளில் அறைந்து அழுத்தம் திருத்தமாக அறிவிக்கின்றான். மேலுள்ளது அவன் தனது முகப்புத்தகத்தில் பதிந்த வரிகள்.

 

மேலும் படிக்க …

உலகத்தின் சமாதானப் புறா இன்று சமாதானத்தினை தொலைத்து கண்ணீரோடு நிற்கிறது. ஒஸ்லோ என்ற அழகிய நகரம் அழகினைத் தொலைத்து விட்டு சோகமாக காட்சியளிக்கிறது. கணப்பொழுதில் தங்கள் வாழ்க்கையினைத் தொலைத்து விட்ட அப்பாவி உயிர்களின் இரத்தம் உறவுகளையும், உலக மனிதத்தினையும் உறைய வைத்துவிட்டது. உலகில் எந்த உயிர்களுக்கும் உத்தரவாதம் இல்லை என்று ஆகிவிட்டது.

ஒரு தனிமனிதனின் சிந்தனை எத்தனை உயிர்களைப் பலி கொண்டுவிட்டது. அன்று ஜேர்மன் மண்ணில் ஆரம்பித்து இன்று நோர்வே மண்ணிலே வந்து நிற்கின்றது. நாளை இது எந்த மண்ணில் யார் உயிரை எடுக்குமோ என்ற கேள்விகள் அதிகாரவர்க்கம் தொட்டு அப்பாவி மக்கள் வரை மனதில் நினைவாக நிழலாடுகிறது. உண்மையில் இது இன்னும் தொடருமா.., இல்லை நோர்வேயோடு நின்று விடுமா..?

 

 

மேலும் படிக்க …

உமாமகேஸ்வரனால் யாழ்ப்பாணம் அனுப்பிவைக்கப்பட்ட கொக்குவில் ரவிமூர்த்தி

உமாமகேஸ்வரனால் கொக்குவிலைச் சேர்ந்த ரவிமூர்த்தி இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தார். ரவிமூர்த்திக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்குமாறு கண்ணாடிச் சந்திரனுக்கு உமாமகேஸ்வரன் மடல் ஒன்றை அனுப்பி வைத்திருந்தார். கண்ணாடிச் சந்திரனைச் சந்தித்துப் பேசிய ரவிமூர்த்தி என்னைச் சந்தித்துப் பேசவிரும்புவதாக தெரிவித்திருந்தார்.

மேலும் படிக்க …

தொடக்கக் குறிப்புகள்

இன்றைய சூழலில் தமிழ்த் தேசியவாத அரசியல் வேறுபட்ட இரு திசைவழிகளிற் பயணிக்கிறது. ஒன்று மகிந்த ராஐபக்ச தலைமையிலான இலங்கை அரசாங்கத்தைப் போர்க் குற்றவாளியாக்கிச் சர்வதேச நீதிமன்றில் தண்டனை வாங்கிக் கொடுப்பது. மற்றது இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிமைகளைப் பெற்றுக்கொள்வது. முன்னது புலம்பெயர்ந்த தமிழர்களாலும் பின்னது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாலும் முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால் போரால் பாதிக்கப்பட்ட அப்பாவித் தமிழ் மக்கள் தங்களது அன்றாடத் தேவைகளையே நிறைவேற்ற முடியாமல் அல்லற் படுகிறார்கள். இன்று தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினை தேசிய இனமொன்றின் மீதான தேசிய இன ஒடுக்கலாகவும், அதற்கெதிராக போராட்டம் சுயநிர்ணய அடிப்படையிலான ஒரு தீர்வுக்கான போராட்டமாகவும் கருதப்படுவதற்கு மாறாக ஒரு மனித உரிமைப் பிரச்சினையாகவே பேசப்படுகிற ஒரு சூழ்நிலை உருவாக்கப் பட்டிருக்கிறது. இவை குறுகியகால நோக்கிலும் நீண்டகால நோக்கிலும் தமிழ்த் தேசிய இனத்தின் இருப்பிற்கே சிக்கல்களை உருவாக்கவல்லவை.

மேலும் படிக்க …

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

Load More