கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்

இரண்டு வருடங்களுக்கு முன் தமது வலுவை இழந்து தமிழ் மக்களை அடிமைகளாக்கி விட்டு யுத்தத்தில் அழிந்து போய்விட்ட புலிகள் பற்றிய விமர்சனங்கள் வரும் போது, புலிகளை விமர்சிப்பது தற்காலத்தில் அவசியம் அற்றது என்னும் போக்கு, தங்களை கடந்த காலங்களில் ஜனநாயகவாதிகளாக இனம் காட்டி புலியின் பக்கமோ அன்றி அரசின் பக்கமோ வெளிப்படையாக சாராதிருந்த பலரிடம் இன்று காணப்படுகின்றது. இதற்கு இவர்கள் கூறும் காரணங்கள் பல:

மேலும் படிக்க …

புளொட்டின் அராஜகங்களுக்கெதிராக கிளர்ந்தெழுந்த மக்கள்

திருநெல்வேலியில் விபுல், பாண்டி, சுரேன், இடிஅமீன்(ஞானம்) ஆகியோர் தங்கியிருந்த மறைவிடம் மகளிர் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் புளொட் இராணுவப் பிரிவினரால் சுற்றிவளைக்கப்பட்டபோது தப்பிய பாண்டிக்கு அவரது நண்பரும் தமிழீழ விடுதலை இயக்க(TELO) அமைப்பில் அங்கம் வகித்தவருமான யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் ஜே.பீ பாதுகாப்பளிக்க முன்வந்ததுடன் தனது அமைப்பின் தலைமையுடன் பேசி கைதடியில் தலைமறைவாக இருக்கும் ஏனையோருக்கும் பாதுகாப்பளிக்க முடியும் எனக் கூறியிருந்தார்.

புளொட் இராணுவப் பிரிவினரால் திருநெல்வேலியில் கைது செய்யப்பட்டிருந்த விபுல், சுரேன், இடிஅமீன்(ஞானம்) போன்றோரை கொடூரத்தனமாகத் தாக்கியதுடன் மூவரையும் அவர்கள் கண்களும் கைகளும் கட்டப்பட்டு சண்டிலிப்பாய் புளொட் முகாமுக்கு கொண்டு சென்றனர். சண்டிலிப்பாயில் அமைந்திருந்த புளொட் இராணுவ முகாமுக்கு மூவரையும் கொண்டு சென்ற புளொட் இராணுவப்பிரிவின் ஒரு பகுதியினர் "கள்வர்கள்" எனக் கூறிய அவர்களது கைகள் கட்டப்பட்ட நிலையில் மூவரையும் மோசமாக தாக்கியதன் மூலம் தமது வெறியைத் தீர்த்துக் கொண்டதுடன் இலங்கை இராணுவத்திலிருந்து தாம் எந்தவகையிலும் மாறுபட்டவர்கள் அல்ல என்பதையும், தமது அமைப்பைச் சேர்ந்தவர்களையே கொடூரத்தனமாக சித்திரவதை செய்வதில் எப்படிக் கைதேர்ந்தவர்கள் என்பதையும் தளத்தில் உள்ள அனைவருக்கும் எடுத்துக் காட்டியிருந்தனர். புளொட் இராணுவப் பிரிவினர் தமது உளவுப்படையின் உதவியுடன் கைதடியில் நாம் அனைவரும் தலைமறைவாக தங்கியிருக்கின்றோம் என்ற தகவலை அறிந்துகொண்டனர்.

மேலும் படிக்க …

பயங்கரவாதத்தை அழித்ததாய்

மார்தட்டிய மன்னவர்

மடிக்குள் வளர்ந்தவை முட்டிக்கொள்கிறது

கட்சிக்குள்ளேயே வெடிக்கும்

ராஜபக்ச ரவைகள்

கொன்றுபோடுவதும் மனித உயிர்தான்

 

மேலும் படிக்க …

‘மனிதர்” என்ற உயிர்களுக்கான ஜனநாயக உரிமை பற்றிச் சிந்திக்கவே தெரியாது, அடக்குமுறை அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் பாசிச அரசின் இரத்த வடுக்கள், எம்மீது என்றுமே அழியாத வரலாறாகிப் பதிகின்றது. இதில் ‘தமிழ் அரசியல் தரப்புகளின் இராஜ தந்திரிகள் – தூதர்” (Tamils Diplomat) என்போர், எமது மக்களின் அடிப்படை வாழ்வையே பறித்த வரலாறுகள் மீண்டுமோர் பார்வைக்காக மேலெழுந்து வருகின்றது.

ஓர் தேசத்தின் பல்லின மக்களுக்குள் உடைப்புகள் – பிரிப்புகள் செய்து, இலங்கைப் பாசிச அரசின் ‘இன அழிப்புத் திட்டத்தை” இவர்களே ஆரம்பித்தார்கள். தற்போதும் அதற்கான வழிகளையே தேடிச் செல்கின்றார்கள். ஓர் பல்லின மக்கள் வாழும் நாட்டில், அனைத்து இன மக்களையும் சிதறடித்துச் சின்னாபின்னம் ஆக்கியுள்ளார்கள். அந்த மக்களின் அனைத்துப் பலங்களையும் – வளங்களையும் சதிகளால் இழக்கவைத்து, தனித்தனிக் கூறாக்கியுள்ளார்கள். அத்தனை தேசிய இனங்கள் மீதும், இந்த ‘தமிழ்க் குறுந் தேசியத் தந்திரிகள்” அன்றுமுதல் இன்றுவரை ‘தொலை நோக்கு அரசியல்” அற்ற, இலங்கையின் பெரும்பான்மை அரசியல் – பாசிசக் கட்சிகளுடன் எதிரணி கட்டி, அவர்களை ‘பாசிச தேசிய மணிமுடி அரசு” என்ற வரையில் வளர்த்துள்ளார்கள். இந்த வகையில், இதன் பன்முகப் பரிமாணமே, இலங்கைத் தமிழ்த் தேசிய மக்களின் உயிர்களை, ‘சிறிலங்காவின் சிங்கவாள் கொடிக்கு அமைய” பகுதி பகுதியாய் அறுத்து, கணக்கற்று அழித்துப் புதைத்த, யுத்ததிலும் துரோகத்தனம் உச்சமடைந்த இடமான ‘முள்ளிவாய்க்கால்” என்ற வன்னி நிலப்பகுதி, உலகினில் இன்று சர்வதேசப் பெயராகியுள்ளது.

 

மேலும் படிக்க …

அரைவாசி வண்டில் நிறைந்து விட்டாலும் இன்னும் ஒரு சில பொருட்கள் எடுக்க வேண்டியிருக்கிறது. தான் வாங்க வந்ததை.., பிள்ளைகள் சொல்லிவிட்டது.., எல்லாம் எடுத்தாச்சு. ஆனால், மனுசி சொல்லி விட்டதைத் தான் இன்னும் எடுக்கவில்லை.

அதை எந்த மூலைக்குள் கொண்டுபோய் வைச்சிருக்கிறாங்களோ..?

நேரம் பன்னிரண்டு மணி ஆகப்போகிறது. ஒரு மணிக்கு வேலைக்கு வேறை இறங்க வேணும். ஆனா, மனுசி சொன்னதை வாங்காமல் போகமுடியாது. வாங்காது விட்டால், வெள்ளிக்கிழமை அதோ கதியாகிவிடும்.

 

மேலும் படிக்க …

சந்ததியார் தலைமையில் மத்தியகுழு உறுப்பினர்களின் வெளியேற்றம்

தமிழ்மக்கள் ஜனநாயக முன்னணியின்(NLFT) ஸ்தாபகரும், அதன் மத்தியகுழு உறுப்பினருமான விசுவானந்ததேவனுக்கூடாக கண்ணாடிச்சந்திரன் விபுலுக்கு அனுப்பியிருந்த கடிதத்தைப் படித்துப் பார்த்தேன்.

(தமிழ்மக்கள் ஜனநாயக முன்னணியின்(NLFT) ஸ்தாபகரும் அதன் மத்தியகுழு உறுப்பினருமான விசுவானந்ததேவன்)

 

மேலும் படிக்க …

இன்னுமொரு விசயமென எழுத வந்து இதுகளைப் பற்றி எத்தனையோ பல உண்மைகளை உங்களுக்குத் தெரியப்படுத்த வேண்டிய இருக்கிறது. எப்போதும் போலவே இதுகளின்ரை கொட்டமடிப்புகள் வேறுவேறு ரூபங்களிலை தற்போதும் வெளிக்கிடுது. இப்ப இந்த தேன்குழல்ச் சாமியோடை சேர்ந்து கூத்தடிக்கின்ற, புத்தகப் பூச்சிகளான டாக்டரும் – வழக்குரைஞர் – கணக்காளாரெண்டு ஒரு சிலதுகள், ஜிலேபிச்சாமி அன்ட் கொம்பனி மக்களை ஏமாற்றுகின்ற திருகுதாளங்களை இதில் மேலும் காணலாம்.

மேலும் படிக்க …

வதைமுகாம்களாக மாறிய பயிற்சி முகாம்கள்

ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களுக்கு இந்தியாவால் வழங்கப்பட்ட ஆயுதங்கள், ஈழவிடுதலைப் போராட்டத்திலும் இலங்கை அரசியலிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தத் தொடங்கியிருந்தது. இந்தியாவில் பயிற்சி பெற்ற ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களின் போராளிகள் பெருமளவில் தளம் திரும்பிக் கொண்டிருந்ததுடன் அரச படைகளுக்கெதிரான இராணுவத் தாக்குதல்களையும் மேற்கொள்ளத் தொடங்கியிருந்தனர். ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களின் இந்தியாவுக்கும் தளத்துக்குமிடையிலான கடல்போக்குவரத்தால் பாக்குநீரிணையில் முன்னெப்பொழுதும் இல்லாதவாறு ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களின் பிரசன்னம் அதிகரிக்கத் தொடங்கியிருந்தது. இதனால் இலங்கைக் கடற்படையினர் ஈழவிடுதலை போராளிகளை இலங்கைக் கடற்பரப்பில் குறிவைத்து செயற்பட ஆரம்பித்திருந்தனர்.

மேலும் படிக்க …

சுழிபுரம் இளைஞர்கள் படுகொலை ஒரு திட்டமிட்ட சதி

டொமினிக் மத்தியகுழுக் கூட்டத்துக்கு இந்தியா செல்லும்போது தற்காலிக தளநிர்வாகக் குழுவே தளத்தில் அனைத்து செயற்பாடுகள் குறித்த முடிவுகளையும் மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டிருந்தார். டொமினிக் முடிவுகள் எனக் குறிப்பிட்டிருந்தவை நடைமுறை சம்பந்தமான முடிவுகளாகத்தான் இருந்தன. ஏனெனில் அமைப்பு சம்பந்தமான எந்தப் பிரச்சனைகளுக்குமான தீர்வுகளோ அல்லது முடிவுகளோ தற்காலிக தளநிர்வாகக் குழுவினது கைகளில் இருந்திருக்கவில்லை. படைத்துறைச் செயலர் கண்ணன் தளத்தில் நின்றபோது அவரால் தீர்த்து வைக்கமுடியாமல் இருந்த அல்லது அவர் தீர்த்துவைக்க விரும்பாத பிரச்சனைகளையும், எந்தவித அதிகாரமுமற்ற நிலையில் தளப்பொறுப்பாளராக செயற்பட்ட டொமினிக் தீர்த்து வைக்க விரும்பிய, ஆனால் அவரால் தீர்த்துவைக்க முடியாமல் இருந்த பிரச்சனைகளையும், தற்காலிக தளநிர்வாகக் குழு முகம் கொடுத்த வண்ணம் இருந்தது.

மேலும் படிக்க …

முடிவில்லாத முரண்பாடுகளுக்கும் குழப்பங்களுக்கும் மத்தியில் மத்தியகுழுக் கூட்டத்தில் கலந்துகொள்ள இந்தியா சென்ற டொமினிக்

புளொட்டின் தள நிர்வாகப் பொறுப்பாளர் டொமினிக்- புதியதோர் உலகம் ஆசிரியர் கேசவன்

தமிழீழ விடுதலை இராணுவ இயக்கத்தை அழித்ததுடன் அதன் முன்னணி உறுப்பினர்களான கூச்(மாரிமுத்து சிற்சபேசன் - அராலி), சேகர் (சுத்தானந்தா - குப்பிளான்) உட்பட தமிழீழ விடுதலை இராணுவத்தினரை கோரத்தனமாகப் படுகொலை செய்தமை தவறான செயலென எமது அமைப்புக்குள் எதிர்ப்புக்குரல்கள், விமர்சனங்கள் எழுந்தன. இத்தகைய செயல் எமது அமைப்பினுடைய கொள்கைக்கு முரணானது மட்டுமல்லாது ஈழவிடுதலைப் போராட்ட நலன்களுக்கும் எதிரானது என்பதும், இத்தகையதொரு செயலை எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது என்பதும்தான் எமது நிலைப்பாடாக இருந்தது. ஆனால் இந்த விடயம் குறித்து யாருடன் பேசுவதென்பது இப்பொழுது பெரும் கேள்விக்குரியதொன்றாக மாறியிருந்தது.

 

மேலும் படிக்க …

தமிழ் மக்கள் தங்களின் விடுதலைக்காக கடந்த பல சகாப்தங்களாக போராடிய போதெல்லாம் எந்த விதமான நேரடியான அக்கறையும் அற்று இருந்த அமெரிக்காவும் மேற்குலகமும்; இன்று விசேட அக்கறையுடன் தமிழ் மக்களின் பிரச்சினையினை தமது கைகளில் எடுத்து மகிந்த அரசு போர்க்குற்றம் புரிந்துள்ளதாகவும் நீதி விசாரணை நடத்தி குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் எனவும் பல அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றன.

 

மேலும் படிக்க …

கடந்த (11/09/2011) ஞாயிறன்று பரமக்குடியில் நடந்ததை கலவரம் என்கிறார்கள் சிலர்.  சாதிக்கலவரம் என்கிறார்கள் வெகுசிலர்.  காவலர்களைத் தாக்கியதால் துப்பாக்கிச்சூடு என்கிறார்கள்.  பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்து வன்முறை என்கிறார்கள்.  அனைவரும் சிந்திக்க மறுப்பவர்களா? அல்லது உண்மையைப் பேசுவதில்லை என சத்தியம் செய்தவர்களா?

செய்தி ஊடகங்கள் அனைத்தும், காட்சி ஊடகங்களானாலும், அச்சு ஊடகங்களானாலும் கலவரத்தில் துப்பாக்கிச்சூடு ஏழுபேர் மரணம் என்று தான் தம் வாசகர்களிடம் பூசுகின்றன. காட்சி ஊடகங்கள் இன்னும் சற்று மேலே போய் பேருந்துக்காக காத்திருப்பவர்களை, தாங்கள் நெடுந்தொலைவிலிருந்து வந்து செய்வதறியாது பதைத்து நிற்கிறோம் என்று கூறவைத்து, கலவரத்தின் பாதிப்பாக காட்சிப்படுத்துகிறார்கள்.

 

 

மேலும் படிக்க …

இந்தியாவில் இராணுவப் பயிற்சி பெற்று தளம் திரும்பிய முதற் பெண் போராளி - ஜென்னி

சுழிபுரம் ஆறு இளைஞர்கள் படுகொலை எம் முன்னால் கொழுந்துவிட்டெரியும் பிரச்சனையாக மாறிவிட்டிருந்த வேளையில், அத்தகைய கொடும்பாதகச் செயல்களைச் செய்தவர்கள் யாரென்பது இன்னமும் கேள்விக்குறியாகவே இருந்த வேளையில், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் எமது அமைப்புக்குமிடையேயான பகைமை நிலை அரும்புவிடத் தொடங்கிய வேளையில், தள இராணுவப் பொறுப்பாளர்களுக்கும் தளநிர்வாகத்துக்குமிடையிலான முரண்பாடுகள் தீர்வில்லாமல் வளர்ந்துகொண்டிருந்த வேளையில், ஜென்னி அல்லது கருணா என்று அழைக்கப்பட்ட ரஜனி இந்தியாவிலே தனது இராணுவப்பயிற்சியையும், தொலைத்தொடர்பு பயிற்சியையும் முடித்த பின்பு உமாமகேஸ்வரனின் உத்தரவின் பேரில் ரகுமான்ஜானால் (காந்தன்) தளத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தார்.

 

மேலும் படிக்க …

வெறுகுடிலில் தனிமையில்

அருகணைத்துக் கிடக்கும் குழந்தைகளால்

எரியும் உணர்வுகள் பொறியடங்கிக் கிடக்கிறது

கொடும் அரக்கர்

நந்திக் கடலில் குடித்த இரத்தமும்

வெறிகொண்டு ஆடிய பேய்களும்

உயிர் குடிக்க அலைகிறது

பேயரசு ஆட்சியில் —வேறெது உலாவும்

 

மேலும் படிக்க …

லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு முன்பாக 30.08.2011 அன்று இந்திய முன்னாள் பிரதமர் ரஜீவ் கொலையில் சம்பந்தப்பட்டதாக பொய்க் குற்றம் சாட்டி தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரை விடுதலை செய்யுமாறு ஆர்ப்பாட்டம் ஒன்று நிகழ்த்தப்பட்டது.

மேலும் படிக்க …

சுழிபுரத்தில் காணமல் போன ஆறு இளைஞர்களின் படுகொலை செய்யப்பட உடல்கள் புதைகுழிகளிலிருந்து மீட்பு

படைத்துறைச் செயலர் கண்ணன் சுழிபுரம் சென்று விசாரணை நடாத்தியதில் சுவரொட்டி ஒட்டச் சென்று காணாமல் போன ஆறு தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களின் சம்பவத்துக்கும் எமது அமைப்புக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்ததால், இது குறித்து துண்டுப்பிரசுரம் ஒன்றை வெளியிட்டு எமது அமைப்பில் உள்ளவர்களுக்கும், மக்களுக்கும் உண்மை நிலையை தெளிவுபடுத்த வேண்டும் என்று எம்மால் கருத்து முன்வைக்கப்பட்டது. ஏனெனில் நாளுக்கு நாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆறுபேர் காணாமல் போன விவகாரம் எமது செயற்பாடுகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் ஒன்றாகவும், நாம் அமைப்பு வேலைகளுக்குச் செல்லும் இடமெல்லாம் முகம் கொடுக்கும் முதன்மையான பிரச்சனையாகவும், எமது அமைப்புக்குள்ளேயே உணர்வலைகளை கிளப்பியிருந்த விவகாரமாகவும் மாறியிருந்தது. இந்தக் காலப்பகுதியில் மாணவர் அமைப்புப் பொறுப்பாளர் அசோக்கும் (யோகன் கண்ணமுத்து) நீர்வேலிப் பகுதியில் எம்முடன் தங்கியிருந்ததால் அவரும் துண்டுப்பிரசுரவெளியீடு பற்றிய கலந்துரையாடலில் எம்முடன் பங்குபற்றியிருந்தார். டொமினிக்கும் கண்ணனும் கூட துண்டுப்பிரசுரம் ஒன்றை வெளிக்கொணருவதன் அவசியத்தை உணர்ந்திருந்ததால் நிலைமைகளை தெளிவுபடுத்தி துண்டுப்பிரசுரம் வெளியிடுவது என முடிவானது.

 

மேலும் படிக்க …

இயந்திரத்துப்பாக்கியுடன் கொலைவெறியில் தெருத்தெருவாக அலைந்துதிரிந்த எஸ்.ஆர். சிவராம்

புளொட்டினால் எம்மீது திட்டமிட்டுச் சுமத்தப்பட்ட விசமத்தனமான பிரச்சாரங்களை முறியடிப்பதை நோக்கமாகக் கொண்டு, எமக்கு மிகவும் நம்பிக்கையானவர்களுடன் பேசுவதற்கு முதல்நபராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் (சீன சார்பு) யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் இக்பால் என்பவராகும். இக்பாலை சந்திப்பதற்கு ஜீவனும் பாலாவும் செல்வதென்றும், எம்மால் தயாரிக்கப்பட்ட சுவரொட்டிகளை யாழ்நகரில் ஒட்டுவதற்கு விஜயன், தர்மலிங்கம், ரஞ்சன் ஆகியோருடன் நானும் செல்வதென்றும் முடிவு செய்தோம். அதேவேளை நாம் இந்தியா சென்று அங்கு சந்ததியார் தலைமையில் புளொட்டிலிருந்து வெளியேறியவர்களை சந்தித்துப் பேசுவது என்ற நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கத்தொடங்கியதோடு தளத்தில் நின்றே புளொட்டின் அராஜகங்களுக்கெதிராகப் போராடுவது என்ற கருத்துநிலைக்குச் சென்றோம்.

எஸ்.ஆர். சிவராம்

மேலும் படிக்க …

பிணக்காடாக்கிய பேரழிவு

இனம் மீட்சிகொள்வதற்கான படிப்பினைகளை

மட்டுமே விட்டுச்சென்றதாயில்லை

மீள்பொறிக்கான சதியாளரிடம் கையளித்துள்ளது

ஏகாதிபத்தியங்களின் முட்டி மோதலிற்குள்

மூழ்கி முத்தெடுப்பதாய்

சாணக்கிய சவடால் மீளெழுந்துள்ளது

மேலும் படிக்க …

‘மனிதர்” என்ற உயிர்களுக்கான ஜனநாயக உரிமை பற்றிச் சிந்திக்கவே தெரியாது, அடக்குமுறை அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் பாசிச அரசின் இரத்த வடுக்கள், எம்மீது என்றுமே அழியாத வரலாறாகிப் பதிகின்றது. இதில் ‘தமிழ் அரசியல் தரப்புகளின் இராஜ தந்திரிகள் – தூதர்” (Tamils Diplomat) என்போர், எமது மக்களின் அடிப்படை வாழ்வையே பறித்த வரலாறுகள் மீண்டுமோர் பார்வைக்காக மேலெழுந்து வருகின்றது.

மேலும் படிக்க …

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

Load More