கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்

எமது தற்பாதுகாப்புக்கு ஆயுதம் வழங்கிய சிறீ சபாரத்தினம்

இந்திய அரசின் அழுத்தம் காரணமாகவும், இந்திய மத்தியத்துவத்துடனும் இலங்கை அரசுக்கும் ஈழவிடுதலை போராட்ட இயக்கங்களுக்குமிடையில் பூட்டான் தலைநகர் திம்புவில் பேச்சுவார்த்தை ஆரம்பமாவதற்கு முன்னராக இலங்கை அரசு போர்நிறுத்தத்தை அறிவித்திருந்தது. ஜே.ஆர் ஜெயவர்த்தனா தலைமையிலான இலங்கை அரசினால் தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் மீதான பிரகடனப்படுத்தப்படாத ஒரு யுத்தத்தை முகம் கொடுத்து வந்த வடக்கு கிழக்கு மக்கள், அரசின் யுத்தநிறுத்தமும் இந்திய மத்தியத்துடனான திம்புப் பேச்சுவார்த்தையும் இனப்பிரச்சினைக்கொரு நிரந்தரத் தீர்வையும் சமாதானத்தையும் கொண்டுவரும் என எதிர்பார்த்தவர்களாகக் காணப்பட்டனர். 1983ம் ஆண்டு ஜூலை இனக்கலவரங்களுக்குப் பின்னான இந்திய அரசின் இலங்கையின் இனப்பிரச்சனை குறித்த "அக்கறை"யும் "ஆதரவும்", இந்தியாவில் ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களுக்கு வழங்கப்பட்ட இராணுவப் பயிற்சியுடன் ஆயுதங்கள் வழங்கியமையும், ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களுக்கு தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் பகிரங்கமாகவே ஆதரவு வழங்கியமையும் தமிழ்மக்கள் மத்தியில் இந்திய மத்தியத்துவதுடனான பேச்சுவார்த்தை மீது நம்பிக்கை கொள்வதற்கு காரணமாய் அமைந்திருந்தது.

மேலும் படிக்க …

எமக்காய் எழுந்த தோள்கள்
லலித் குகன் என்ன ஆயினர்
மகிந்தம் தின்ற மானிடர் வரிசையில்
இவர்களும் போயினர்
மௌனமான தமிழ்தேசியம் இன்னம்
இந்தியக் கனவில் நந்திக்கடலை நோக்கி நடக்கிறது

மேலும் படிக்க …

உமாமகேஸ்வரனைக் கொலை செய்வதற்கான திட்டம்

"புதியதோர் உலகம்" நாவல் மட்டுமல்லாமல் "தீப்பொறி" பத்திரிகையும் கூட புளொட் உறுப்பினர்களையும் மக்களையும் சென்றடையத் தொடங்கியிருந்தது. உமாமகேஸ்வரனால் புளொட்டுக்குள் கட்டவிழ்த்து விடப்பட்ட அராஜகத்தையும் பயிற்சிமுகாம் சித்திரவதைகளையும் படுகொலைகளையும் பெரும்பாலான புளொட் உறுப்பினர்களும் மக்களும் தகவல்களாகவே அறிந்திருந்தனர். ஆனால் இப்பொழுது "தீப்பொறி" பத்திரிகை மூலம் பல சம்பவங்கள் பகிரங்கப்படுத்தப்பட்டிருந்தன.

மேலும் படிக்க …

அராஜகங்களை அம்பலப்படுத்திய "தீப்பொறி" பத்திரிகை

இந்தியாவில் சந்ததியார் தலைமையில் புளொட்டிலிருந்து வெளியேறியவர்கள் அனைவரும் தளம் வந்ததும் எமது தொடர்ச்சியான செயற்பாடுகளை மேற்கொள்ளலாம் எனக் காத்திருக்காமல் கண்ணாடிச்சந்திரன் இந்தியாவிலிருந்து கொண்டு வந்திருந்த "புதியதோர் உலகம்" நாவலுடன் உமாமகேஸ்வரனினதும் அவரால் தலைமை தாங்கப்படும் புளொட்டினதும் மக்கள் விரோத அரசியலை அம்பலப்படுத்தும் செயற்பாட்டில் இறங்கினோம்.

மேலும் படிக்க …

பெண்கள் படையணி
எங்கள் மண்ணில் நிமிர்ந்தது
வெந்த உணர்வுகள் வீறுடன் நிமிர்ந்தது
எங்கள் இனத்துப்பெண்
சொந்த நிலத்திற்காய் போராட எழுந்தனள்
கையில் ஏந்திய எறிகணை
காலில் பூட்டிய விலங்கை உடைத்ததோ 
போரிட்ட யுவதிகள்
வீரிட்டு அழும் அவலமாய்
சிங்கத்துக் கூரியவாள் நெஞ்சில் பாய்கிறது
யாரொடு மோதுவோம்

மேலும் படிக்க …

'புரட்சி' பற்றிப் பேச அருகதையற்றுப் போன புளொட்டின் தலைமை

பயிற்சி முகாம்களில் அரசியல் வகுப்புக்கள் மேற்கொள்ளும் செயற்பாடுகளுக்கு உமாமகேஸ்வரன் தடைவிதித்தது மட்டுமல்லாமல் தனது அராஜகத்தை பயிற்சி முகாம்களில் கட்டவிழ்த்துவிட்டிருந்ததுடன், புளொட்டின் வளர்ச்சிக்காக நீண்டகாலமாக முன்னின்றுழைத்து புளொட்டை வளர்த்தெடுத்தவர்களையும் புளொட்டுடன் இணைந்து பயிற்சி பெறுவதற்கென முகாம்களில் தங்கியிருந்தவர்களையும் தனது கொலைக்கரம் கொண்டு அவர்களது குரல்வளையை நெரித்து வந்தார்.

மேலும் படிக்க …

மகிந்தவின் கையில் இருப்பது
அவலத்தின் அடையாளமா?
கொன்று புதைக்கப்பட்டவர்கள்
அலறியது
வெடியோசை இடியில் அமுக்கப்பட்டுள்ளதா?

மேலும் படிக்க …

பின்லேடன் கொலை!

சர்வதேச நாடுகள் எங்கிலும் சல்லடைபோட்டுத் தேடப்பட்டு வந்த ஒருவர் பில்லேடன். அமெரிக்காவின் பயங்கரவாதிகள் பட்டியலில் முதல் நபராக இவர் இடம்பெற்றும் இருந்தார். இவரை அண்மையில் அமெரிக்க சிறப்புப்படையினர் சுட்டுக் கொன்று விட்டதாகச் செய்திகள் வெளிவந்திருந்தன. எப்படி இலங்கையில் பிரபாகரன் சுட்டுக்கொல்லப்பட்ட செய்திகள் வெளிவந்தபோது, அவரது ஆதரவாளர்களால் நம்பமுடியாமல் திகைத்துப்போய் இருந்தனரோ, அதேமாதிரி பில்லேடனின் ஆதரவாளர்கள் மத்தியிலும் இது காணப்பட்டது. பின்லேடன் உலகநாடுகளை எல்லாம் மிரட்டிக்கொண்டிருந்தாரோ இல்லையோ, அமெரிக்காவின் கண்களில் தன் விரலைவிட்டு ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தார் என்பது மிகையாகாது.

மேலும் படிக்க …

இரத்தக்களரியில்
அழிவுகாவியம் படைத்த எழுதுகோல்கள்
ஈழப் போர் எழுமென முரசறைகின்றன
காசியண்ணரின் உணர்ச்சிப்பெருக்கு
ஈழமண் எரிய எரிய
தீப் பிளம்பாய் தீட்டிய வரிகள்
நாற்பதாயிரம்
இளையதலைமுறையை கருக்கிப்போட்டது

மேலும் படிக்க …

தொடர்ந்து கொண்டிருந்த அராஜகமும் மௌனம் காத்த மத்திய குழுவும்

விச்சுவேஸ்வரன் பயிற்சிமுகாமில் பலத்த பாதுபாப்புடன் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை, பட்டுக்கோட்டையில் பண்ணையார் சுட்டுக்கொலை, பண்ணையார் வீட்டில் கைது செய்யப்பட்ட மதன் சித்திரவதைகளின் பின் சுட்டுக்கொலை செய்யப்பட்டமை அனைத்தும் நடந்து முடிந்திருந்தது. ஆனால் இந்தியாவில் தங்கியிருந்த மத்தியகுழு உறுப்பினர்களோ அல்லது கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர்களோ இது குறித்து பேசவோ, கேள்வியெழுப்பவோ தவறியிருந்ததுடன் மௌனம் சாதிக்கவும் தொடங்கியிருந்தனர். இலங்கை அரசபடைகளால் ஒரு அப்பாவிப் பொதுமகன் கொல்லப்பட்டால் அல்லது ஈழவிடுதலைப் போராளி கொல்லப்பட்டால் இலங்கை அரசை அம்பலப்படுத்த நாம் எப்போதும் பின் நின்றது கிடையாது. ஆனால் இந்தியாவில் ஒரு அப்பாவி இந்தியக் குடிமகன் எமது அமைப்பால் கொலை செய்யப்பட்ட போது, ஈழவிடுதலைப் போராட்டத்தில் புளொட்டுடன் இணைந்து இந்தியா சென்ற ஒருவன் எமது அமைப்பினால் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டபோது மத்தியகுழு உறுப்பினர்களும் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர்களும் "ஈழவிடுதலைப் போராட்டத்தில் தவிர்க்க முடியாத" ஒரு செயலாகக் கருதி தமது கண்களை இறுக மூடி மௌனம் காத்துக் கொண்டிருந்தனர்.

மேலும் படிக்க …

பிரபாகரனின் "பாதச்சுவடு" களை பின்பற்றிய உமாமகேஸ்வரன்

புளொட்டுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்குமிடையிலான முரண்பாடுகள் துப்பாக்கி வழிமுறை மூலம் தீர்வுகாணப்பட்டுக்கொண்டிருந்தவேளையில், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்கும் புளொட்டுக்குமிடையிலான முரண்பாடுகள் "சுவரொட்டிப் போராட்டமாகவும்" சில சந்தர்ப்பங்களில் வன்முறைவடிவம் கொண்டதாகவும் கூட மாறிவிட்டிருந்தது. ஈழ விடுதலைப் போராட்ட நலன்களை, மக்களின் நலன்களை முதன்மைப்படுத்துவது என்பதற்கு மாறாக, இயக்க நலன்கள், இயக்கத்தலைமையின் நலன்கள் முதன்மைப்பட்டிருந்தன.

மேலும் படிக்க …

அருள் நிறைந்த அம்மா வாழ்க

டெல்லி சர்க்காரும் சர்வலோகமும்

உம்முடனே இருக்கக் கடவதாக

பெண்களுக்குள் தமிழ்நாட்டில்

ஆசீர்வதிக்கப்பட்டவள் ஆனீர்

மேலும் படிக்க …

பெயரிடாத நட்சத்திரங்கள் கவிதைத் தொகுப்பு தமிழீழ விடுதலைப் புலிகளில் இணைந்து அல்லது இணைக்கப்பட்டு ஆயுதப்போராட்ட களத்தில் இயங்கிய பெண்களின் குரலாக வந்த கவிதைகளை உள்ளடக்கியுள்ளது. எனவே இந்தக் கவிஞைகளிலும் புலி அடையாளத்தை மட்டும் வைத்து நோக்கும் எளிமையான போக்கு மறைமுகமான எதிர்ப்பாகவும், கள்ள மௌனமாகவும் பேணப்படுகிறதா என்ற சந்தேகம் எழவே செய்கிறது. இந்த 'மறுப்புக்கான' சமூக நியாயத்தை வைக்க முற்படுதல் என்ற நேர்மையான வழியில் இதை உரையாட முன்வருவதே சரியாக இருக்கும். புலி ஆதரவு, புலி எதிர்ப்பு என்ற இருமைகளில் சிக்குண்டு இருப்பது இவ்வகை தேக்கத்தை கடக்க முடியாத நிலையில் பலரை விட்டுள்ளது ஒருவகை அவலம்தான்.

மேலும் படிக்க …

புளொட்டினால் உரிமை கோரப்படாத இறைகுமாரன் உமைகுமாரன் படுகொலைகள்

ஈழவிடுதலைப் போராட்டத்தில் இயக்கங்களுக்கிடையே கொலைக் கலாச்சாரம் அரங்கேறத் தொடங்கிவிட்டிருந்த அதேவேளை புளொட்டின் செயலதிபர் உமாமகேஸ்வரனும், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும் சென்னை பாண்டிபஜார் துப்பாக்கிச் சூட்டுச்சம்பவம் தொடர்பாக இந்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

யாழ்ப்பாணம் சித்திரா அச்சகத்தில் சுந்தரத்தைச் சுட்டுக் கொன்றிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் "துரோகத்திற்குப் பரிசு" என்ற துண்டுப்பிரசுரம் மூலம் சுந்தரத்தின் கொலையை உரிமை கோரியிருந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளினால் வெளியிடப்பட்ட பிரசுரத்துக்கு பதிலளிக்கு முகமாக "சுந்தரம் படுகொலை துரோகத்தின் முத்திரையா?" என்ற தலைப்பில் புளொட்டினால் துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டிருந்தது.

மேலும் படிக்க …

புலிகளின் முடிவுரை எழுதப்பட்டதும்
புரட்சிநூல் வியாபாரிகள்
இடது வேடமிட்ட முகத்திரை விலக்கப்பட்டு
தூதரகத்து தீபாவளிப் படையலை
வெற்றிக்களிப்பில்  ருசிக்கிறார்கள்.

மேலும் படிக்க …

ஈழ விடுதலைப் போராட்ட இயக்கங்களுக்கிடையே அரங்கேறிய கொலைக் கலாச்சாரம்

புளொட்டின் முதலாவது மத்தியகுழுவிலிருந்து ஜயர், சாந்தன் ஆகியோர் விலகிக் கொண்டபின் சுந்தரம்(சதாசிவம் சிவசண்முகமூர்த்தி-சுழிபுரம்), உமாமகேஸ்வரன்(கதிர்காமப்பிள்ளை நல்லைநாதன்-தெல்லிப்பளை), வசந்தன்(தம்பிப்பிள்ளை சந்ததியார்-சுழிபுரம்), ராஜன்(ஞானப்பிரகாசம் ஞானசேகரன்-பரந்தன்), காத்தான்(கிருஷ்ணகுமார்-மானிப்பாய்), பார்த்தன்(இராஜதுரை ஜெயச்சந்திரன்-திருகோணமலை, கண்ணன்(ஜோதீஸ்வரன்-வடலியடைப்பு), இராமலிங்கம் வாசுதேவா (மட்டக்களப்பு), பாபுஜி(மாதகல்), நிரஞ்சன்(சிவனேஸ்வரன்-உடுவில்), மாணிக்கம்தாசன்(நாகலிங்கம் மாணிக்கம்தாசன்-யாழ்ப்பாணம்), பெரியமெண்டிஸ்(பாலமோட்டை சிவம்) உட்பட பலர் இணைந்து புளொட்டை வளர்ப்பதை நோக்கி செயற்படத் தொடங்கியிருந்தனர்.

மேலும் படிக்க …

மீசை வைச்ச ஜனாதிபதி ஜயா அவங்களே
வணக்கமுங்க
எங்கட வீட்டச் சுத்திக் குலைச்சுக் கொண்டிருந்த
நாயைக் காணலேங்கோ கண்டியளோ

மேலும் படிக்க …

அது இரு போர்களை இணைக்கும்
ஒரு அமைதியென்ற காலம்..!

அந்த அமைதி நிலவும் மண்ணிலிருந்து
என்னுடைய அடிவேர் பிடுங்கி
ஊரையும் உறவுகளையும் மறுதலித்து
என்னை நான்
வடதுருவப் பனிநோக்கி
புலம்பெயர்த்திய காலமது நீண்டதாச்சு.

மேலும் படிக்க …

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

Load More