ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்ட முன்னோடிகள்
“ஆண்ட பரம்பரை மீண்டுமொருமுறை ஆள நினைப்பதில் என்ன குறை” இக்கோசம் 70-ம். ஆண்டு தேர்தல் காலத்திலும், வட்டுக்கோட்டை மாநாட்டிலும் “தமிழ் ஈழத்திற்காக” ஓங்கி ஒலித்தது. தமிழர் கூட்டணியின் அன்றைய பிரச்சார மேடைகளின்” ஆஸ்தான கவிஞர் காசியண்ணா அவர்களால் இளைஞர்களை உசுப்பேத்துவதற்கும் பாடிய வரிகளாகும்.
இலங்கையில் தமிழ்-சிங்கள மன்னர்கள் தொடர்ச்சியாக பரம்பரை பரம்பரையாக ஆண்ட வரலாறு என்ற ஒன்றில்லை. அப்படியானால் இந்ந ஆண்டபரம்பரைகள், பரம்பரை பரம்பரையாக யாரைத்தான் ஆண்டுள்ளது? சாதியரீதியான ஒடுக்கப்பட்ட மக்களைத் தவிர வேறு யாரையுமல்ல என்பதே நிதர்சனமாகும்.