கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்

மனித மரணம் தவிர்க்கமுடியாதது. அதையிட்டு கவலை கொள்ளவில்லை. ஆனால் நான் முடிக்க வேண்டிய பல வேலைகளை முடிக்காமல் செல்லப் போகின்றேன்” அதுவே எனக்குள்ள பெரும் கவலை. இது கைலாசபதி அவர்கள், கொழும்பு மருத்துவ மனையில் இரத்தப் புற்றுநோயுடன் மரணப் போர் நடாத்திக் கொண்டிருந்த வேளை, (82-டிசம்பரில் இயற்கை எய்வதற்கு இரு நாட்களுக்கு முன்)  தன்னைப் பார்வையிட வந்த அரசியல்-கலை-இலக்கிய நண்பர்களுக்கு கூறிய வார்த்தைகள்.

மேலும் படிக்க …

இஸ்லாத்தின் அற்புதங்களின் வரிசையில் ஸம் ஸம் நீரூற்றுக்கு சிறப்பான இடம் உண்டு. அற்புதங்களில் மட்டுமின்றி இஸ்லாமிய வரலாற்றிலும் அந்த நீரூற்றுக்கு தனியாசனம் உண்டு. இஸ்லாத்தின் இறுதிக் கடமையான ஹஜ்ஜை முடித்துச் செல்பவர்கள் தங்கள் கடவச் சீட்டைவிட பத்திரமாக எடுத்துச் செல்லும் ஒரு பொருள் உண்டென்றால் அது ஸ்ம்ஸம் நீராகத்தான் இருக்கும். சற்றேறக் குறைய 4000 ஆண்டுகளாக நீர் தந்துகொண்டிருக்கும் நீரூற்று, வற்றாத நீரூற்று, எவ்வளவு நீர் எடுத்தாலும் அளவு குறையாத நீரூற்று, நோய் தீர்க்கும் தன்மையுடைய நீரைத் தரும் நீரூற்று, இன்னும் பலவாறாக முஸ்லீம்களால் விதந்து போற்றப்படும் இந்த நீரூற்று மக்கா பள்ளியின் வளாகத்தினுள் காஅபா ஆலயத்தின் வெகு அருகில் இருக்கிறது.

மேலும் படிக்க …

இன்று ஈழத்தில் என்ன நடக்கிறது? பல துரோகக் கும்பல்கள் புதிய முகங்களோடு மக்கள் முன் தோன்றியுள்ளார்கள். வன்னியை புனரமைக்க ஒருவர், யாழ்பாணத்தை வசந்தமாக்க ஒருவர், கிழக்கு மக்களை தூக்கி நிறுத்த சிலர் என்று திடீர் அரசியற் பிறப்பெடுத்துள்ளார்கள். கோடிக் கணக்கில் மக்கள் பணத்தினை சுருட்டி தங்கள் கணக்கில் பதுக்கி வைத்திருக்கும் பண முதலைகள் தான் இவர்கள். இவர்கள் தான் இன்று மீட்பாளர்களாக அவதாரம் எடுத்துள்ளார்கள்.

மேலும் படிக்க …

மாவோயிசம் பற்றி பேசுவதற்கு முன்னால் அதுகுறித்தான எங்கள் நிலைப்பாடு என்ன என அறிந்து கொள்வது தேவையானதாகவும், சரியான புரிதலுக்கு உதவுவ‌தாகவும் இருக்கும். மாவோயிஸ்டுகள் பற்றிய இந்த வெளியீட்டை படித்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், மாவோயிஸ்டுகளின் நிலைப்பாடு, அவர்களின் செயல் திட்டம், உத்திகள் குறித்த எங்களின் நிலைக்கும், மாவோயிஸ்டுகள் குறித்த ஜெயமோகனின் புரிதலுக்கும் இடையில் பாரிய வித்தியாசம் ஒன்றுமில்லை. மாறாக அவரின் நோக்கம், மாவோயிஸ்டுகளின் மீதான அவரது விமர்சனம் எந்த தளத்திலிருந்து வைக்கப்படுகிறது, எதனுடன் பொருத்தப்படுகிறது, என்னவிதமான வினையாள்கிறது என்பதில் தான் இருக்கிறது.

மேலும் படிக்க …

நாய் வாலை நிமிர்த்த முடியுமா” என்றொரு பழமொழியை தமிழன் வைத்திருக்கிறான். வளைத்தால் என்ன? எழுப்பினால் என்ன? (வாலை) தமிழனிற்கு என்ன நட்டம் வந்தது என்று நாய்கள் நினைக்கக் கூடும். மிருகங்கள் தேவையில்லாமல் எந்தவொரு அசைவையும் செய்வதில்லை. மனிதர்கள், குறிப்பாக தமிழர் தலைவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களிற்கு எல்லாமே வளைந்து சுருங்கிப் போய் இருக்கின்றது. இலண்டன் வந்த சோனியாவை உலகத் தமிழர் ஒன்றியம் என்ற அமைப்பு சந்தித்து இலங்கைத்  தமிழ் மக்களை காப்பாற்றுமாறு முறையிட்டதாம். இந்த ஒன்றியம் எதனது வால் என்று எழுதத் தேவையில்லை. இவர்களது அரசியலே அதை தெளிவாக காட்டி நிற்கின்றது.

மேலும் படிக்க …

அண்மையில் நண்பர் வெள்ளை, பினாயக் சென் பற்றிய கட்டுரையில் ஜெயமோகன் தன்னுடைய தளத்தில் மாவோயிசம் பற்றிய கட்டுரை எழுதியிருப்பதாகவும், அதை மறுக்க முடியுமா? என்றும் வினா எழுப்பியிருந்தார். பொதுவாக நான் ஜெயமோகன் தளத்தை தொடராக பார்க்கும் பழக்கமுள்ளவன் அல்ல. தனிப்பட்ட காரணம் என்று வேறொன்றுமில்லை, கதைகள் புதினங்கள் என படிக்கும் பழக்கமில்லையாதலால் தான். மாவோயிச வன்முறை என்ற தலைப்பில் நான்கு பகுதியாக அவர் எழுதியிருக்கும் நீள் கட்டுரைக்கான மறுப்பாகவே இப்பதிவு எழுதப்படுகிறது. தேவை ஏற்படின் அவரின் வேறு சில கட்டுரைகளையும் உள்ளடக்கி இது சில இடுகைகளாக நீளும். நண்பர் வெள்ளை அவர்களுக்கு நன்றி.

மேலும் படிக்க …

தமிழகத்தில் தலித் முரசு என்று ஒரு பத்திரிகை, அதற்கு புனிதப்பாண்டியன் என்று ஒரு ஆசிரியர், அவர்களுக்கென்று ஒரு அரசியல், வேலைத்திட்டம் அனைத்தும் தேவனால் வழங்கப்பட்டிருக்கின்றன ! குறிப்பாக மார்க்சியத்தை சாதி என்கிற பாதுகாப்பு வளையத்திற்குள் நின்று கொண்டு தாக்கி தலித் மக்கள் மத்தியில் மதிப்பிழக்கச்செய்வதும், மார்க்சியத்தின் மீது அவநம்பிக்கை கொள்ளச்செய்வதும் தான் இவர்களுக்கு இடப்பட்ட திருப்பணி. தலித் முரசின் கட்டுரைகளையும், புனிதப்பாண்டியனின் கருத்துக்களையும் இந்த நோக்கிலிருந்து தான் பார்க்க வேண்டும். தலித் முரசின் செயல்பாட்டை தொடர்ச்சியாக கவனித்தால் அவர்கள் கம்யூனிச எதிர்ப்பையும் வெறுப்பையும் விதைத்துக்கொண்டிருப்பதை அறியலாம்.

மேலும் படிக்க …

23/03/1931- பகத்சிங், சுகதேவ், ராஜகுரு தோழர்கள் தூக்கிலிடப்பட்ட நாள் அவர்களின் நினைவாக!

முதலிலிருந்தே ஜெயதேவ் என்னைக் காட்டிலும் உடல் வலிமை பெற்றவர். ஆபத்துகளை எதிர்கொள்வதென்பது அவருக்கு மிகச் சாதாரண விஷயம்! அடிதடிச் சண்டைக்கு அவர் எப்போதுமே முன்னே நிற்பார். ஜெயதேவின் இச்சிறப்புக்களைக் கண்டே பகத்சிங், பிஸ்மில்லை விடுவிக்கும் ‘ஆக்சனுக்கு’(Action) ஜெயதேவை அழைத்துச் செல்ல வேண்டுமென்று முடிவு செய்தார்.

மேலும் படிக்க …

அன்று நீங்கள்

கொல்லப்பட்டிருக்கலாம்
மகாத்மாக்களின் ஆசியோடு….

உங்கள் குரல் வளைகளை
யுடைத்த அதே அன்னியச் சுருக்குகள்
எம் விடுதலையை யுடைக்க
காத்திருக்கிறது….

மேலும் படிக்க …

அண்மையில், Tamilnet இணையத் தளம் வெளியிட்டு, பின்னர் சில தமிழ் தளங்களாலும் அளவுக்கு அதிகமாக “மெருகூட்டப்பட்ட” ஒரு செய்தி தொடர்பாக மறுஆய்வு தனது கருத்தைப் பதிவு செய்ய விரும்புகின்றது.

‘அமெரிக்கப் படை வந்துஇறங்கி  எல்லோரையும் மீட்டுச் செல்லும் என்ற ஒரு நம்பிக்கையை நடேசனுக்கு முன்னாள் புலி ஒருவர் அமெரிக்காவிலிருந்து கொடுத்தார்’ என்பதுவே TamilNet-இன்அந்தச் செய்தியாகும்.

மேலும் படிக்க …

நந்திக் கடலில் பேரம் நடந்தது
எம் மக்கள்
நீந்தவும் முடியாது நிர்க்கதியாய்
கை அசைத்து கடல் நடுவே தத்தளித்து தவித்தனர்
இப்ப மீளவும்
ஈராக்கின் பின்பாய் லிபியாவில் சொல்லப்படுகிறது
இந்தியாவையும் மீறி ஈழம் எடுக்கலாம்
எண்ணையைத் தோண்டிக்கண்டுபிடி தமிழா

மேலும் படிக்க …

”தமிழக மீனவர் படுகொலை: எல்லை தாண்டுவதுதான் பிரச்சினையா?” என்ற தலைப்புடன் ”புதிய ஜனநாயகம்” கட்டுரையொன்று வெளியிட்டுள்ளது. அதேவேளை ம.க.இ.க.வின் ஆதரவு இணையத் தளமான ”வினவு” ,  "நாகபட்டின மீனவர் வாழ்க்கை! சிறப்பு ரிப்போர்ட் " என்ற தென்னிந்திய மீன்பிடிச்சமூகம் சார்ந்த கட்டுரையையும் வெளியிட்டுள்ளது. இந்த கட்டுரைகளின் உள்ளடக்கம் மீனவர் கொலையின் பின்னணியில் உள்ள பல பிரச்சனைகளை, முழுப்பூசணிக்காயை சோற்றில் புதைப்பது போல புதைத்து விட்டு, சந்தர்ப்பவாதத்தளத்தில் நின்று பிரச்சனையைக் கையாளுகிறது.

மேலும் படிக்க …

கடலால் தான் இந்த உலகமே கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த உலகமே இன்று ஏகாதிபத்திய உலகமயமாகியும் உள்ளது. இதுவே இக்கடலையும் ஆக்கிரமிக்கத் தொடங்கியுமுள்ளது. இவ் ஆக்கிரமிப்பு, கடல்வளங்களை வரலாறு காணாத வேகத்தில் சுரண்டத் தொடங்கிவிட்டது. சமுத்திரச் சட்டங்களாகவும், அதற்கான கடலோரத் திட்டங்களாகவும் இன்று இவை கடல்வளத்தை அபகரிக்கிறது. இதற்காகவே மீனவர்கள் கடலிலே தொடராகப் படுகொலை செய்யப்படுகிறார்கள். யாருக்கும் தெரியாமலே பலர் கடலிலே தொலைந்தும் போகிறார்கள். தமது சொல்வழியைக் கேளாமல் நடப்பதால் தான்; இவைகள் நிகழ்ந்து விடுவதாக இவ்விரு அரசுகளும் (இந்-இல) ஆளுக்காள் கைகளையும் விரித்தும் விடுகிறது. 'ரோக்கின்" வேண்டி கடலிலே இறக்கும் ரோலர்காரன் வீட்டிலே சுகமாக இருந்துவிடுகிறான். பாவப்பட்ட வயிற்றுப் பிழைப்புக்குப் போகும் கூலி மீனவன் படுகொலை செய்யப்படுகிறான்! 'ரோக்கின்" வேண்டும் முதலாளியோ இருப்பிலுள்ள சட்டதிட்டங்களை தொழிலாளிக்குக் கூறுவதில்லை. இந்த அரசியல் சட்ட திட்டங்கள் பாழாய்போன வயிற்றுப் பட்டினிக்குத் தெரிவதுமில்லை. ரோலர்காரனான இவன் அரசியல்வாதியாகவும் இருப்பதால் பாமரக் கூலி ஏமாந்தும் விடுகிறான். ஏன் இந்த ரோலர்காரன் தனது பெரும் மூலதன, அதி நவீனத் தொழிலில்: இந்த அற்ப கூலிக்குத் தொழில் பார்க்கும் தொழிலாளிக்கு ஆயுட்காப்புறுதிகளைச் கூடச் செய்வதுமில்லை.

 

மேலும் படிக்க …

அன்று சதிகாரர்கள், கொலைகாரர்கள் பற்றிய உண்மைகளை எல்லாம் உலகறிய வெளிக்கொணர்ந்த தீப்பொறியினர் மீது அடங்கா கொலைவெறியுடன், அவர்களை அழித்தொழிப்பதற்கு என புளட் அலைந்தனர். புலி எவ்வாறு ரெலொவினை அழித்தொழித்ததோ அதே குரூர பாணியில், தீப்பொறியினரைக் கொன்றதன் பின்னால் மக்களிடம் என்ன காரணங்கள் எடுபடுமோ அவற்றையெல்லாம் துண்டுப்பிரசுரம் மூலம் அள்ளிவீச சதிப்பாணியில் திட்டமிட்டவாறே தேடியலைந்தனர். தெருவில் பல்கலைக்கழகத்தில் கண்ட இடங்களிலெல்லாம் அவர்களை கூட்டாகச் சுட்டுப் பொசுக்குவதற்கு தேடியலைந்தனர். எந்தக் கொடூரமான செயல்களையும் தீப்பொறியின் பெயரில் செய்துவிட்டால், அந்தக் கொடூரமான காரியங்களை தீப்பொறியின் தலையில் தூக்கி போட்டுவிடலாம். தீப்பொறி தான் இவற்றைச் செய்தது என மக்கள் நம்பும் வகையில் சூழ்ச்சிகள் சதிகள் மூலம் ஆதாரப்படுத்தி விட்டால், அவர்களுக்கு அன்றிருந்த சூழலில் ஒரு கல்லில் இரு மாங்காய் கிடைத்த மாதிரி. ஒன்று புளட்டின் மேல் தீப்பொறியினர் வைத்த உட்படுகொலைக் குற்றச்சாட்டுக்கள் மீதான மக்களது நம்பிக்கையை தகர்ப்பது. "அட இத்தனை கொடூர காரியத்தைச் செய்த தீப்பொறி, எப்படி புளட் பற்றிச் சொன்னவைகள் உண்மையாகும்" என்ற சந்தேக நிலைமை மக்கள் மத்தியில் விதைக்கப்பட்டால் தாங்கள் இழந்த (ஜென்னியில் வார்த்தைகளிலேயே சொல்வதானால் "கழகத்தின் சரிவுநிலை பாதாளத்தை நோக்கி" செல்லும் நிலை, கொலைகாரத் தலைமை சரிந்து விழும் நிலை) முகத்தை மீண்டும் தூக்கி நிமிர்த்தி மெல்லத் மெல்லத் தலையெடுக்கலாம் என்பது. இன்னொன்று, தீப்பொறியை அழித்தொழித்ததற்கான காரணமானது மக்களின் மனதில் எடுபடவேண்டும். மக்கள் தீப்பொறியினரை சமூக விரோதிகளாக கருதவேண்டும். மக்களிடம் கொந்தளிக்கக்கூடிய எதிர்ப்புணர்வுகளைத் தூண்டக்கூடியவாறு இருத்தல் வேண்டும். ஏற்றுக்கொள்ளமுடியாத பாதகச் செயல்களை அவர்கள் புரிந்தார்கள், எனவே புளட்டினர் தீப்பொறியினரை வேட்டையாடியதில் தவறென்ன என்ற அங்கீகாரம் புளட்டுக்கு தானாகவே சேரும். இப்படிச் சதித்தனத்துக்கு பெயர்போன சதிகாரர்கள் அவர்கள் முகங்களை மக்கள் மத்தியில் காப்பாற்ற எண்ணியவர்கள், தீப்பொறியினர் மீது பழிபோடுவதற்காக எந்தக் குற்றச்செயலையும் படுபாதகங்களையும் செய்யத் துணிய மாட்டார்கள் என்று நம்பவே முடியாது.

மேலும் படிக்க …

உங்களிடமுள்ள சுடுகலங்கள்
ஆக்கிரமிப்பாளர்களால் திணிக்கப்பட்டதாயினும்
ஏந்தும் கரமும் இதயமும்
ஏழையின் உறவென்பது சேர்த்தே சிதைக்கப்பட முடியாதது

மேலும் படிக்க …

இலங்கைக் கடலானது, பல கண்டமேடைகளையும் குடாக்கடல் பொட்டலங்களையும் கொண்ட, அரும் பெரும் பொக்கிசக் கடலாகும். கிழக்குக் கடல் தவிர்ந்த ஏனைய இலங்கை சூழ் கடலானது, கண்டமேடைகளால் நிறைந்தவை. இதில் பாதியளவு வடமாகாணத்தில் உள்ளது. பாக்குத் தொடுவாய் ஆழம் குறைந்த கடற்பகுதியாக இருந்தும் வருவதால், இக்கண்ட மேடை வடமாகாணத்தில் அகலமாகவும், அதிகமாவும் காணப்படுகிறது.

கடற்கரையில் இருந்து 200 மீற்றர் வரையான ஆழமான கடற்பகுதியே இந்தக் கண்டமேடைகளாக அமைகிறது. இதன் படி இலங்கையில், 2, 620,000 எக்டர் பரப்பளவுள்ள கண்டமேடைகள் காணப்படுகிறது. இதில் 1,502,240 எக்டர் பரப்பளவு வடமாகாணத்தில் இருக்கிறது.

மேலும் படிக்க …

பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் !

போராடும் மாணவர்களுக்கு தோள் கொடுப்போம்!

கருணாநிதி போலீசின் அராஜகத்தை முறியடிப்போம்!!

” அவனுங்க எல்லாம் பொறுக்கிப்பசங்க, பஸ்ஸ¤ல பாட்டு பாடறது, புட் போர்ட் அடிக்குறது, வம்பு பண்றது இதுதான் வேலை, பஸ் டே வேணுமாம் இவனுங்களுக்கு? போலீஸ் அதான் உள்ள பூந்துட்டானுங்க, ரவுடிப்பசங்க போலீசையே அனுபிச்சுட்டான் பாரு “

மேலும் படிக்க …

"வெவ்வேறு தத்துவார்த்தப் பின்புலத்தைப் பெண்ணிய அமைப்புகள் கொண்டிருப்பினும் ஒரு புள்ளியில் அவர்கள் இணைகின்றனர். தனது பாலியல் உறவை தேர்ந்தெடுக்கும் உரிமை, யாருடன் பாலியல் உறவை எப்போது வைத்து கொள்ளலாம் என்ற உரிமை, தனது உடல் சம்பந்தமாக முடிவெடுக்கும் உரிமை ஆகியவை பெண்ணின் அடிப்படை உரிமைகள் என்கின்றனர் பெண்ணியவாதிகள். இது மேற்கு நாட்டு பெண்களுக்கு மட்டுமே உரித்தானதல்ல. தமிழ் பெண்களுக்கு உரித்தான உரிமையும் கூட. குடும்பம், பாலுறவு ஆகியவை பெண்ணடக்குமுறையின் கருவிகளாக இருப்பது மேற்கு நாட்டில் மட்டுமல்ல அனைத்து சமூகங்களுக்கும், தமிழ் சமூகத்திற்கும் பொருந்தும். அவர்கள் என்ன சாதி, என்ன மதம், என்ன நிறம், எந்த வர்க்கம் என்பதற்கு மேலாக இது எல்லா பெண்களுக்கும் பொதுவான அம்சம்."

இப்பிடி எங்க ஊரு நாயொண்டு பெண்ணியம் என்று சொல்லிக்கொண்டு குண்டு, குழி, தண்டு, தாவரம், லைட்போஸ்ட் என்று எதைக் கண்டாலும் காலைக்கிளப்பும் நிலையை இன்று புலம் பெயர் நாடுகளிலும், தமிழ் நாட்டிலுமுள்ள விசிலடிச்சான் குஞ்சுகள் கைதட்டி ஆரவாரம் செய்கிறார்கள்.

இதற்கு காரணம் செக்கென்றும் பாராமல் சிவலிங்கமென்றும் பாராமல் காலைத் தூக்கும் அந்த நாய்க்கு ஆதரவாக ஆரவாரம் செய்யும் பிரமுகத்தனம் கொண்ட குட்டிபூர்சுவாக்களுக்கு உண்மையிலேயே, உண்மையான பெண்விடுதலையைப் பற்றி எந்த வித கரிசனையும் கிடையாது.

மேலும் படிக்க …

"பொறிமகன்" என்றும் "ராம்" என்றும் தேசம்நெற்றில் புனைகதைகளை எழுதி "புகழ்" பெற்ற ரகுமான்ஜான் தனது "அயோக்கியத்தனங்களும்" "ரௌடியிசமும்" "போக்கிரித்தனங்களும்" (இவை அனைத்தும் ரகுமான்ஜான் தேசம்நெற்றில் பயன்படுத்திய அதே சொற்கள்தான்) அனைவருக்கும் தெரியவந்ததுடன் தனது சொந்தப் பெயரிலேயே வந்து மீண்டும் அதே கைங்கரியத்தை செய்துள்ளார். எது எப்படி இருப்பினும் ரகுமான்ஜான் சொந்தமுகத்துடன் இந்த தடவை வந்துள்ளது வரவேற்கத்தக்க விடயம்.

ஆனால் பொறுப்புடனும் ஆரோக்கியமாகவும் விடயங்களை முன் வைத்திருக்க வேண்டும். அதை ரகுமான்ஜான் செய்யத் தவறியுள்ளார். மீண்டும் புதிய மொந்தையில் பழைய கள்ளுத்தான்!

இணையத்தள ஜனநாயகமும் அயோக்கியத்தனங்களும் என்ற இந்தக் கட்டுரையை (இதை கட்டுரை என்று குறிப்பிடலாமெனில்) வரைந்ததன் மூலம் இரண்டு பணிகளை ரகுமான்ஜான் செய்து முடித்துள்ளார்.

முதலாவதாக "மத்திய கிழக்கில் .....மிகவும் உற்சாகமூட்டதக்கதாகும்" என தொடங்கிய ரகுமான்ஜான் தன்னை பற்றிய நியாயப்படுத்தல்கள் ஊடாக தனது "அயோக்கியத்தனங்கள்" பற்றிய ஒரு சுய விமர்சனத்தை தந்துள்ளார்.

இரண்டாவதாக கண்ணாடிச் சந்திரன், நேசன், இரயாகரன் ஆகியோருக்கெதிராக ரகுமான்ஜான் "வியூகம்" அமைத்துள்ளார். இதைத்தான் இன்றைய சமுதாயத்தின் கவலைக்குரிய விவகாரமாகவும் ரகுமான்ஜான் கருதுகிறார்.

ரகுமான்ஜான் தனது கட்டுரையில் அடிக்கடி " சொந்தப் பாதுகாப்பு கருதி" "பாதுகாப்புப்பற்றி" என தொடர்ச்சியாக பேசி வருகிறார். ஆனாலும் ரகுமான்ஜானுக்கு இருக்கும் "பாதுகாப்பு" பிரச்சனை ரகுமான்ஜானுக்கு மட்டும் தான் வெளிச்சம்.

 

மேலும் படிக்க …

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

Load More