"வெவ்வேறு தத்துவார்த்தப் பின்புலத்தைப் பெண்ணிய அமைப்புகள் கொண்டிருப்பினும் ஒரு புள்ளியில் அவர்கள் இணைகின்றனர். தனது பாலியல் உறவை தேர்ந்தெடுக்கும் உரிமை, யாருடன் பாலியல் உறவை எப்போது வைத்து கொள்ளலாம் என்ற உரிமை, தனது உடல் சம்பந்தமாக முடிவெடுக்கும் உரிமை ஆகியவை பெண்ணின் அடிப்படை உரிமைகள் என்கின்றனர் பெண்ணியவாதிகள். இது மேற்கு நாட்டு பெண்களுக்கு மட்டுமே உரித்தானதல்ல. தமிழ் பெண்களுக்கு உரித்தான உரிமையும் கூட. குடும்பம், பாலுறவு ஆகியவை பெண்ணடக்குமுறையின் கருவிகளாக இருப்பது மேற்கு நாட்டில் மட்டுமல்ல அனைத்து சமூகங்களுக்கும், தமிழ் சமூகத்திற்கும் பொருந்தும். அவர்கள் என்ன சாதி, என்ன மதம், என்ன நிறம், எந்த வர்க்கம் என்பதற்கு மேலாக இது எல்லா பெண்களுக்கும் பொதுவான அம்சம்."
இப்பிடி எங்க ஊரு நாயொண்டு பெண்ணியம் என்று சொல்லிக்கொண்டு குண்டு, குழி, தண்டு, தாவரம், லைட்போஸ்ட் என்று எதைக் கண்டாலும் காலைக்கிளப்பும் நிலையை இன்று புலம் பெயர் நாடுகளிலும், தமிழ் நாட்டிலுமுள்ள விசிலடிச்சான் குஞ்சுகள் கைதட்டி ஆரவாரம் செய்கிறார்கள்.
இதற்கு காரணம் செக்கென்றும் பாராமல் சிவலிங்கமென்றும் பாராமல் காலைத் தூக்கும் அந்த நாய்க்கு ஆதரவாக ஆரவாரம் செய்யும் பிரமுகத்தனம் கொண்ட குட்டிபூர்சுவாக்களுக்கு உண்மையிலேயே, உண்மையான பெண்விடுதலையைப் பற்றி எந்த வித கரிசனையும் கிடையாது.