கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்

“கைலாசபதி சாதி பார்த்தவரல்ல. ஆனால் நாவலர் பற்றிய ஆய்வின் பெரும்பகுதியை நாவலரின் சாதனை பற்றியதோடு சென்றும், பாதகமான விமர்சனங்களில் மென்மைப் போக்கோடும் செல்கின்றார். இப்படியான விமர்சனங்களை குறைத்து மதிப்பிடமுடியுமா?.  ஒவ்வோரினதும் எழுத்தின் பின்னால் அவர்களின் சமூக முத்திரை பதிந்திருக்கும்தானே?”

மேலும் படிக்க …

சம காலத்தின் மிகப் பெரிய பயங்கரவாதியான அல்- காயிதாவின் தலைவன் என கருதப்படும் ஒசாமா பின்லாடன், அமெரிக்க ராணுவத்தின் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இன்று அமெரிக்க சனாதிபதி அறிவித்துள்ளார். ஊடகங்களும் இதை மிக பிரபல்லியமாக விளம்பரப்படுத்துகின்றது. இதையிட்டு நம்முள் எழும் கேள்வி யாதனில் இன்றோடு மத பயங்கரவாதத்துக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டு விட்டதா?

 

மேலும் படிக்க …

என்னிடம் கல்வி கற்ற மாணவர்களில் பெரும்பாலானோர் தம் கல்விச் செயற்பாட்டை சமுதாய முன்னேற்றம்-சமூக சேவையின் பாற்பட்டு செயலாற்றினர். ஆனால் கைலாசபதி தன் கல்விச்செயற்பாட்டை சமுதாயமாற்றம்-அடக்கி ஒடுக்கபபட்ட மக்களின் பாற்பட்டு செயலாற்றினார். நான் கல்லூரியில் கைலாசபதிக்கு கல்விப் பயிற்சிப் பட்டறை நடாத்தவில்லை. ஆர்வமான சிலவற்றை நெறிப்படுத்தினேன். அவ்வளவுதான்.  ஆனால் அவன், என்னை விட பலவற்றில் பல தடங்களை பதித்துள்ளான்.  அதன் ஓர் அங்கம் தான் யாழ்-பல்கலைக்கழகத்திற்கான உபவேந்தர் பதவி”. கைலாசபதிக்கு  இப்பதவி கிடைத்த போது, ஆசிரியர் கார்த்திகேசன் அவர்கள் கைலாசபதி தன் மாணவன் என்ற ஆதங்கத்திலருந்து கூறிய வார்த்தைகள் இது.

மேலும் படிக்க …

இன ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டம் : ஆயுதப் போராட்டத்தை நோக்கி

70 களில் தமிழரசுக் கட்சியினதும் அதன் தொடர்ச்சியாக தமிழர் விடுதலைக் கூட்டணியினதும் " உணர்ச்சி பொங்கும் " மேடைப் பேச்சுக்களிலும் "தமிழீழம்" என்ற கனவிலும் மூழ்கியிருந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களில் நானுமொருவன் என்ற போதிலும், பின்னாட்களில் - 80 களில்- பாஸ்கரன், திலக் ஆகியோருடைய தொடர்புகளுக்கூடாக GUES (ஈழ மாணவர் பொது மன்றம்) இல் இணைந்து செயற்பட்டு வந்தேன்.

சந்திப்புகள், அரசியல் கருத்தரங்குகள், கண்டனக் கூட்டங்கள் என்பனவற்றோடு மாணவர் போராட்டங்களிலும் சாதீயத்திற்கெதிரான போராட்டங்களிலும் வெகுஜனமட்டத்தில் அவர்கள் செயற்பட்டுக் கொணடிருந்தனர். மாணவர்களை அணிதிரட்டுதல், மக்களை அணிதிரட்டுதல், அதனூடாக பரந்துபட்ட மக்கள் போராட்டத்தை முன்னெடுத்தல் என்பதாகவே GUES (ஈழ மாணவர் பொது மன்றம்) இன் கொள்கை இருந்தது. இவர்கள் இடதுசாரிக் கொள்கைகளால் கவரப்பட்டவர்களாக, மார்க்சியத்தின் பால் ஈர்க்கப்பட்டவர்களாக காணப்பட்டனர். இடதுசாரித் தத்துவத்தின் மீதான அறிமுகம், அதன் மீதான ஆர்வம் எல்லாமே நான் GUES (ஈழ மாணவர் பொது மன்றம்) இல் இணைந்திருந்தபோது ஏற்பட்டவையே. இச்சூழல் 1981, 82 ம் ஆண்டுகளில் 1983 இனக்கலவரம் ஏற்படுத்திய உந்திய கொதிநிலைக்கு முற்பட்ட காலமாகும்.

 

மேலும் படிக்க …

குறுந் தமிழ் தேசியப் போராட்டம் தோல்வி பெற்றுள்ள நிலையில், அதற்கான காரணம் என்ன என்பதை வரலாற்றிலிருந்து தெரிந்து கொள்வது அவசியம். நேசனின் கடந்தகால அனுபவம், எதிர்மறையான புதைந்துபோன உண்மைகளையும், படிப்பினைகளையும் கொண்டதாக இன்றைய வரலாற்றுச் சூழலுடன் வெளிவருவது வரலாற்றுக்கு அவசியமானதாக உள்ளது. இந்தப் போராட்டம் தன்னைத்தானே தோல்விக்கு இழுத்துச் சென்று தனக்குத்தானே புதைகுழி தோண்டி தானே தன்னைப் புதைகுழியில் புதைக்க முன், தான் தவிர்ந்த மற்றைய எதனையும் முதலில் அழித்துப் புதைத்தது.

மேலும் படிக்க …

நூலினை ஆசிரியர் இவ்வாறு தொடங்குகின்றார்..................

 

கண்ணீரைத் துடைத்திட வேண்டாமா?

 

யாரைச் சொல்லி அழ..

யாரை நொந்து அழ..

யாருக்காக அழ..

யாரைக் கேட்டு அழ

இலகுவில் ஆற்றமுடியாத மனக்காயங்களின் கொடூரம் காரணமாக கசிந்து கண்ணீர் மல்கும் இந்த இளம் தாயின் பெயர் அபர்ணா. வயது முப்பத்தொன்று மட்டுமே ஆன இந்தத் தாயின் நெஞ்சை உருக்கும் கதைக்குக் கொஞ்சம் செவி சாயுங்கள். இவளது அன்புக் கணவனது பெயர் லவன். குடும்ப வாழ்க்கை தந்த முதற்பரிசாக இரண்டரை வயதேயான கோதையழகு என்னும் அழகான பெண் குழந்தை. போரவலம் மக்களைத் தரையோடு தரையாக நசுக்கிய முள்ளிவாய்க்காலில் 25.03.2009 இல் இரண்டாவது குழந்தையாக பொற்சுடர் பிறந்தாள். சுகப் பிரசவம், தாயும் சேயும் நலம் என்றார்கள். எனினும் அந்தப் பச்சிளம் பாலகனை போர் முனையின் வெம்மையிலிருந்து காப்பாற்றவென 28-04-2009 அன்று கப்பல் மூலமாக அபர்ணாவும் கோதையழகும் திருமலைக்கு புறப்பட்டார்கள். வயதுக் கட்டுப்பாடு காரணமாக வடிவேலு அவர்களுடன் செல்ல முடியாமல் தடுக்கப்படுகிறான். அவர்கள் படகு மூலம் கப்பலை நோக்கிச் செல்கையில் ஆண்மையும், மனமுதிர்ச்சியும் தந்த சகிப்புத் தன்மையையும் மீறிக் கரையில் நின்று கதறும் லவனை நோக்கிக் கையசைத்துக் கண்ணீருடன் விடை பெறுகின்றனர் கோதையழகும் அபர்ணாவும். திருமலையிலிருந்து புல்மோட்டை இடைத்தங்கல் முகாமுக்கு வந்து சேர்கின்றனர். அபர்ணாவுக்கு 25-05-2009 அன்று பொக்கிளிப்பான் நோய் ஏற்படுகிறது. தாயின் அணைப்பிலேயே எந்நேரமும் துயிலும் பொற்சுடருக்கும் அது தொற்றுகின்றது. கோதையழகை தெரிந்தவர்கள் சிலரிடம் ஒப்படைத்துவிட்டு பொற்சுடரை பதவியா வைத்தியசாலைக்கும் பின்னர் அங்கிருந்து அனுராதபுரம் வைத்தியசாலைக்கும் அபர்ணா சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டாள்.

 

மேலும் படிக்க …

வேதாளம் மீண்டும் முருங்கையில் ஏறியதாம் என்பது தான் ஞாபகத்திற்கு வருகின்றது இனியொரு இனையத் தளத்தைப் பார்க்கும் போது. மீண்டும் கள்வர் கூட்டம், மீண்டும் சதிகளின் ஆரம்பம், மீண்டும் மக்களை மந்தைகளாக நினைக்கும் கூட்டம். சுயநலவாதிகளின் கூட்டம். மீண்டும் இரத்தம் குடிக்கும் காட்டேரிகளின் கூட்டம். எல்லாம் ஒன்று சேர்கின்றன. இதை விளம்பரப்படுத்தும் இணையம் தான் இனியொரு. இனியொரு பற்றி இங்கு கவனத்தை செலுத்திவதிலும் விட இதில் வெளியாகிய நூறு கருத்துக்கள் முட்டி மோதட்டும் நூறு பூக்கள் மலரட்டும் என்ற தலைப்பில் வந்த கட்டுரையைப் பற்றி பார்ப்பதே இங்கு பிரதான நோக்கமாகும்.

 

மேலும் படிக்க …

மனிதன் இன்று உயர்வான வசதிகளைப் பெற்ற சிறந்த சமூக விலங்காக இருக்கிறான். பல்வேறு கண்டுபிடிப்புகள், சிந்தனைகளால் தன் வாழ்வையும் சூழலையும் மேம்படுத்தியிருக்கிறான். தன் ஆளுமையால் மண்ணையும் விண்ணையும் சாடி வியத்தகு சாதனைகள்களை செய்திருக்கிறான். சில லட்சம் ஆண்டுகளாக பூமியில் உலவும் மனிதன் எப்படி தோன்றினான் என்பதில் அறிவியலாளர்களின் கருத்தும் மதவாதிகளின் கருத்தும் ஒருபோதும் ஒன்றாக இருந்ததில்லை. ஏனென்றால் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்து தான் மனித வரலாறு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மதவாதிகளின் கருத்துகள் பரிசீலனைக்கோ, ஆய்வுக்கோ உட்பட்டதல்ல, அது நம்பிக்கையை மட்டுமே ஆதாரமாக கொண்டது என்பதால் அறிவியலாளர்கள் அதை ஏற்பதில்லை. தங்கள் நம்பிக்கைக்கு விரோதமாக இருக்கிறது என்பதால் அறிவியலாளர்களின் கருத்துகளை மதவாதிகள் ஏற்பதில்லை. ஆனால் உண்மை என்ன?

மேலும் படிக்க …

உலகத் தமிழர் பேரவை,  நாடு கடந்த தமிழீழம், பிரித்தானிய தமிழர் பேரவை, புதிய திசைகள் என்பன இணைந்து கூட்டமொன்றினை நடத்தப் போகின்றார்கள் என்ற செய்தியைப் படித்தார் வாழ்விழந்தோர் சங்கத் தலைவர் கந்தையா கார்த்திகேசு மயிலேறும் பெருமாள். ஆகா! தமிழனைக் காப்பாற்ற இவ்வளவு அமைப்புக்கள் இருக்கின்றதா! என்று பிரமிச்சுப் போன காத்திகேசு,  தனது மனிசியிடம் கூட்டத்திற்கு போவதற்கு கெஞ்சிக் கொண்டு நின்றார். அவரின்ரை மனிசி எல்லாத்திற்கும் சாத்திரம் பார்க்கிற பொம்பிளை. இரண்டிலை ஒன்றைத் தொடுங்கோ என்று மனிசி சொல்ல,  கார்த்திகேசு சந்தோசமாக சிரிச்சுக் கொண்டு மேலே தொட்டார். விரலை தொடச் சொன்னால் எதைத் தொடுகிறீர்கள் எண்டு எரிஞ்சு விழுந்த மனிசியை பரிதாபமாகப் பார்த்த கார்த்திகேசர், ஒன்றையும் விளக்கமாக சொல்லமாட்டாள் என்று சலித்துக் கொண்டார்.

மேலும் படிக்க …

விழித்துப்பார் புலத்தெம் சனமே
கண் முன்னே ஊரைச் சுருட்டிய கும்பல்
ஈழவிடுதலை பேசிய படியே மீள வருகிறது
இந்திய அரசை கெஞ்சிப் பார்ப்போமென
புலி எதிர்ப்பு புத்திமான்களும் புலிப்பினாமிகளும்
டெல்லி நோக்கிய நடையும் பறப்புமாய்
அடுத்த சதிக்கும் கூட்டு அமைக்கப்படுகிறது

மேலும் படிக்க …

நான் எந்த அதிகார வர்க்கத்திலிருந்தும்

ஊற்றுப் பெற்றவன் அல்ல நண்பரே

அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு ஓதுக்கப்பட்ட

சமூகத்திலிருந்து போராடிப் பெற்ற

அனுபவக் கல்வியின் ஆழத்திலிருந்து

கொதித்தெழுந்து வந்தவன்.

மேலும் படிக்க …

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில், கடந்த சுமார் ஆறு மாதங்களாக தமிழ் நாட்டில் உணர்வுகளைத் தூண்டும் விஷயமாக பேசப்பட்டுவந்த, தமிழக மீனவர் இலங்கைக் கடற்பரப்புக்குள் மீன்பிடிக்கச் செல்லும்போது எதிர்கொள்ளும் பிரச்சினைகள் இத்தேர்தலில் ஒரு பேசுபொருளாக இருக்கிறது.

தமிழ்நாடு நீண்ட கடற்கரையைப் பெற்றிருந்தாலும், மீனவர்கள், தேர்தல்களின் முடிவைத் தீர்மானிக்கும் சக்தியாக ஒரு சில மாவட்டங்களிலேயே விளங்குகிறார்கள். கன்யாகுமரி, தூத்துக்குடி போன்ற ஒரு சில மாவட்டங்களிலும், சென்னையின் ராயபுரம் போன்ற ஒரு சில பகுதிகளிலும் மட்டுமே மீனவர்கள் ஒரு அரசியல் ரீதியான சக்தியாக இருக்கிறார்கள் என்று கருதப்படுகிறது.

மேலும் படிக்க …

“தேர்தல் பாதை திருடர் பாதை” -

என்றவுடன்,
அப்படியானால் ஓட்டுப்போடும் நானுமா?
என உள்ளர்த்தம் புரிந்து கொண்டு
கோபப்படும் நண்பா,

மேலும் படிக்க …

எம்மன்னவரே

அழகான சின்னவரே
நீ சிரிச்சா ரோசா பூ பூக்கும்
நீ  நடந்தா நதியெல்லாம்
துள்ளி வெளையாடும்
நீ கண் மூடிப்படுக்கையிலே
விண்மீண்களெல்லாம் தாலாட்டும்

மேலும் படிக்க …

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

Load More