புதிய ஜனநாயகம்

நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, பாசிச பார்ப்பன ஜெயா கும்பலின் ஆணவத்துக்கு ஆப்பு வைத்து தமிழகத்தில் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்துமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வெற்றி அவ்வளவு எளிதில் கிடைத்துவிடவில்லை. உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் வழக்குரைஞர்களின் வாதத் திறமையால் மட்டுமின்றி, புரட்சிகர அமைப்புகளின் தலைமையிலான  மாணவர்கள் மற்றும் உழைக்கும் மக்களின் போராட்ட அலையின் காரணமாகவே உச்சநீதிமன்றம் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது.

மேலும் படிக்க …

ஒரிசாவில் போஸ்கோ நிறுவனத்திற்கு எதிராக நடந்துவரும் போராட்டத்தில் சிறுவர்கள் முன்னணியில் நிற்பதை ஒரிசா மாநில அரசு மட்டுமின்றி, பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் அறிவுஜீவிகளும் கண்டித்து வருகின்றனர். அம்மாநிலத்தில் மதிய உணவுத்  திட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் கிடப்பில் போட்டுள்ள நவீன் பட்நாயக் அரசு, போராடும் சிறுவர்களின் படிப்பு பாழாவதாகப் புலம்புவது நகைப்புக்குரிய முரண்.

மேலும் படிக்க …

ஓசூர் சிப்காட்2இல் எலக்ட்ரானிக் சர்க்கியூட் போர்டுகளை உற்பத்தி செய்யும் ஆனந்த் எலக்ட்ரானிக்ஸ் எனும் தனியார் நிறுவனத்தில், அற்பக் கூலியையும் காமவெறி பிடித்த உற்பத்திப் பிரிவு மேலாளர் பெரியசாமியின் இழி சொற்களையும் சகித்துக் கொண்டு வேலை செய்யும் பெண் தொழிலாளர்களில் ஒருவர்தான், தேவி. பணிநிரந்தர ஆணை தரப்படாமல், மேலும் பயிற்சிக்காலம் நீட்டிக்கப்பட்டதால், கடந்த 572011 அன்று அதை ஏற்க மறுத்து தேவி வாதிட்டபோது, அவரையும் அவரது கணவரையும் இழிவாகவும் ஆபாசமாகவும் பேசி அவமானப்படுத்தியுள்ளான், பெரியசாமி. தனக்குரிய சேமநலநிதி முதலானவற்றை ஒப்படைத்துவிடுமாறும் வேலையிலிருந்து விலகிக் கொள்வதாகவும் தெரிவித்து, மறுநாள் ஆலைக்குச் சென்ற தேவியிடம் மேலும் ஆபாசமாக அவன் பேசத் தொடங்கியதும், பெரியசாமியின் வாயிலும் மூக்கிலும் மிளகாய்ப் பொடியை வீசிய தேவி, செருப்பைக் கழற்றி விளாசித் தள்ளினார். பின்னர், தனக்கு நேர்ந்த அநீதியை விளக்கி பெரியசாமியின் மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீசுக்கு புகார் கடிதம் கொடுத்தார். ஆனால் போலீசோ தேவியைக் கைது செய்ததோடு, அவரது புகாரை வாங்க மறுத்தது.

இத்தகவல் அறிந்ததும், இப்பகுதியில் இயங்கும் பு.ஜ.தொ.மு.வினர் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்களைத் திரட்டி, தோழர் பரசுராமன் தலைமையில் ஓசூர் வட்டத் தொழிலாளர் அலுவலகம் முன்பு, "காமவெறியனுக்கு செருப்படி கொடுத்த வீரப் பெண்மணி தேவி வாழ்க! முதலாளித்துவ பயங்கரவாதம் ஒழிக! வீரப்பெண்மணி தேவியை விடுதலை செய்! காமவெறியன் பெரியசாமியைக் கைது செய்!' என்று விண்ணதிரும் முழக்கங்களுடன் எழுச்சிகரமாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். தோழர் பரசுராமன் மற்றும் 20 பேர் அனுமதியின்றி சாலையை மறித்ததாகப் பொய் வழக்கு பதிவு செய்த போலீசு, தோழர் பரசுராமனைக் கைது செய்து சிறையில் அடைத்தது. "ஆனந்த் எலக்ட்ரானிக் பெண் தொழிலாளி மீது பாலியல் துன்புறுத்தல்! காமவெறிபிடித்த அதிகாரி பெரியசாமிக்கு செருப்படி கொடுத்தார் பெண் தொழிலாளி!' என்ற முழக்கங்களுடன் ஓசூர் நகரெங்கும் ஒட்டப்பட்ட பு.ஜ.தொ.மு.வின் சுவரொட்டிகள் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் ஆரவாரத்தையும் போராட்ட உணர்வையும் ஏற்படுத்தியுள்ளன. தோழர் பரசுராமன் பிணையில் விடுவிக்கப்பட்ட போதிலும், வீராங்கனை தேவியை விடுதலை செய்யவும் காமவெறியன் பெரியசாமியைத் தண்டிக்கவும் அடுத்தகட்டப் போராட்டத்துக்கு ஓசூர் தொழிலாளர்கள் தயாராகி வருகின்றனர்.

தகவல்: பு.ஜ.தொ.மு; ஓசூர்.

தேனி மாவட்டம், போடியில் இயங்கிவரும் விவசாயிகள் விடுதலை முன்னணியின் மூத்த தோழர்களில் ஒருவரும், கடந்த 20 ஆண்டுகளாக வி.வி.மு.வின் அடையாளமாகத் திகழ்ந்தவரும், புதிய ஜனநாயம் இதழின் தொடக்க கால முகவருமான தோழர் மாசானம், இதய நோயினால் பாதிக்கப்பட்டு கடந்த 27.7.2011 அன்று  தனது  51வது வயதில் மரண மடைந்து விட்டார்.

மேலும் படிக்க …

அமெரிக்கா, தனது மேலாதிக்க நோக்கங்களுக்குக் கட்டுப்பட்டு, தனக்கு விசுவாசமாக நடந்து கொள்ளும் சர்வாதிகாரிகளை ஜனநாயகவாதிகளாகச் சித்தரித்துப் பாதுகாக்கும் என்பதற்கு இன்னுமொரு உதாரணமாகத் திகழுகிறது, மத்திய கினியா.

மேலும் படிக்க …

அரியானா மாநிலத்தில் இயங்கிவரும் நூற்றுக்கணக்கான பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்குத் தொழிற்சங்க உரிமைகள் கிடையாது. அத்தொழிற்சாலைகளில் அற்ப அளவுக்கு நிரந்தரத் தொழிலாளர்களை மட்டும் வைத்துக் கொண்டு, பெரும்பாலும் ஒப்பந்தத் தொழிலாளர்களை நியமிப்பதுதான் நடக்கின்றது; தொழிற்சங்கம் என்பதைப் பற்றிப் பேசுவதே குற்றமாகக் கருதப்படுகிறது. தொழிற்சங்கங்களுக்குப் பதிலாக நிர்வாகமே வேலை கமிட்டிகள் எனும் எடுபிடி சங்கங்களை உருவாக்கி நடத்தி வருகின்றன. இந்நிலையில் அரியானாவில் அமைந்துள்ள மாருதி சுசுகி தொழிற்சாலையில் தொழிற்சங்க உரிமைக்காக அண்மையில் நடந்துள்ள வேலைநிறுத்தப் போராட்டம், தொழிலாளர்கள் மத்தியில் புதிய நம்பிக்கையையும், முதலாளிகளிடம் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க …

சேலத்தில் காந்தி விளையாட்டரங்கம் அருகிலுள்ள நீச்சல்குளத்தில், பயிற்சிக்கு வரும் பள்ளி மாணவிகளிடம் நீச்சல் பயிற்சியாளர் ஞானசேகரன் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும், இதனால் இரண்டு மாணவிகள் கர்ப்பமடைந்துவிட்டதாகவும் கோவை மேற்கு மண்டல மேலாளர் மோகன்,சேலம் மாவட்ட விளையாட்டுத் துறை அதிகாரி பிரதாப் உள்ளிட்ட அதிகாரிகள் பயிற்சியாளர் ஞானசேகரன் மீதான தனிப்பட்ட விரோதத்தால் அவதூறு பரப்பி, பெண் குழந்தைகளை அவமானப்படுத்தியுள்ளனர்.

மேலும் படிக்க …

"குஜராத்தைப் பார்! மோடி ஆட்சியின் சாதனையைப் பார்!' என்று மோடி ஆட்சியை உச்சந்தலையில் வைத்துக் கொண்டாடுகிறது, இந்தியா டுடே. "இந்தியாவின் ஆண்டுச் சராசரி விவசாய வளர்ச்சி 2.9 சதவீதம் மட்டுமே; ஆனால், குஜராத்தின் வளர்ச்சியோ 9 சதம்! மத்திய அரசு மோடியைப் பார்த்து பாடம் கற்றுக் கொள்ளவேண்டும்' என்கின்றன, செய்தி ஊடகங்கள். உணவு விவசாயக் கழகத்தின் துணை நிறுவனமான பன்னாட்டு உணவுக் கொள்கை ஆராய்ச்சி மையம் குஜராத்தைப் பின்பற்றுமாறு இந்தியாவின் இதர மாநிலங்களை வலியுறுத்தி வருகிறது. தமிழகத்தில் ஆட்சிக்கு வந்துள்ள பாசிச ஜெயா கும்பலோ, குஜராத்தை முன்மாதிரியாகக் கொண்டு தமிழகத்தின் விவசாயத்தில் மாற்றத்தைக் கொண்டுவர ஒரு நிபுணர் குழுவை குஜராத்துக்கு அனுப்பத் தீர்மானித்துள்ளது.

மேலும் படிக்க …

"சிறப்புப் போலீசு அதிகாரிகள் (ளுPழு)' என்று சட்டிஸ்கர் மாநில அரசாங்கத்தால் அழைக்கப்படும் சல்வா ஜூடும் அமைப்பை கலைத்து விடும்படியும் நிராயுதபாணியாக்கிவிடும்படியும் இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இது  அரிதிலும் அரிதான வழக்கு என்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு என்றும் மனித உரிமை மற்றும் ஜனநாயகப் போராளிகளால் போற்றப்படுகிறது.

மேலும் படிக்க …

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் வட்டாரத்தில் விவசாயிகள் நெல், கரும்பு, மணிலா, பயறு வகைகளைப் பயிரிட்டு வந்த போதிலும், முறையான ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் இல்லாததால், அரகண்ட நல்லூருக்கும் விழுப்புரத்துக்கும் உளுந்தூர்பேட்டைக்கும் டிராக்டரில் உற்பத்திப் பொருட்களை எடுத்துக் கொண்டு அலைவது, அல்லது தரகர்களிடம் சிக்கி அற்ப விலைக்கு விற்பது என்கிற அவலம் நீண்ட காலமாக நீடித்து வருகிறது. திருவெண்ணெய் நல்லூரில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் என்ற பெயரில் ஒரு மாட்டுத் தொழுவத்தை வைத்துக் கொண்டு அதிகாரிகள் ஒப்பேத்துகின்றனர். 30 கிராம விவசாயிகள் இப்பகுதியில் முறையான கொள்முதல் நிலையம் வேண்டுமென கோரிய போதிலும், அரசு தொடர்ந்து அலட்சியப்படுத்தியே வருகிறது.

மேலும் படிக்க …

தொழில் வளர்ச்சி என்ற பெயரில் தமது நிலங்கள் அபகரிக்கப்படுவதற்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகளும், பழங்குடியின மக்களும் போராடிவரும் வேளையில், 1894ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்போவதாக அறிவித்திருக்கிறது, மைய அரசு. இச்சட்டத்தில் திருத்தங்கள் செய்வதோடு,  நிலத்தை இழக்கும் விவசாயிகளை மீளக் குடியமர்த்தவும், அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கான சட்டத்தையும் இம்மழைக்கால கூட்டத் தொடரிலேயே நாடாளுமன்றத்தில் கொண்டுவரப் போவதாகவும் மைய அரசு கூறியிருக்கிறது.

மேலும் படிக்க …

மற்ற கட்டுரைகள் …

Load More