புதிய ஜனநாயகம்

தற்பொழுது நடைபெற்றுவரும் குளிர்கால நாடாளுமன்றக் கூட்டத் தொடரின்பொழுது, இரண்டு முக்கியமான துறைகளை அந்நிய மூலதனத்திற்குத் திறந்துவிட எத்தணித்தது, காங்கிரசு கூட்டணி அரசு.  அதிலொன்று, நாடெங்கும் பரவலான எதிர்ப்பைச் சந்தித்த சில்லறை வணிகத் துறை; மற்றொன்று, அரசு, பொதுத்துறை மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள்  தொழிலாளர்களின் ஓய்வூதிய நிதியைக் கையாளுவதில் அந்நிய நிறுவனங்களை அனுமதிப்பது.  காங்கிரசு கூட்டணி அரசு தனது இந்த இரண்டு முடிவுகளையும் நடைமுறைப்படுத்துவதைச் சற்று தள்ளி வைத்திருக்கிறது.  இவை போன்ற சீர்திருத்தங்களைக்  கால தாமதமின்றி நடைமுறைப் படுத்துவதற்கு இந்திய ஜனநாயகம் தடையாக இருப்பதாக நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி புலம்பியிருக்கிறார். தனியார்மயம் பெயரளவிலான ஜனநாயகத்தைக்கூடச் சகித்துக் கொள்வதில்லை என்பதற்கான ஒப்புதல் வாக்கு மூலமாக பிரணாப் முகர்ஜியின் புலம்பலை எடுத்துக் கொள்ளலாம்.

மேலும் படிக்க …

சிங்கள இனவெறி பிடித்த இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு வரும் தமிழக மீனவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கக் கோரி, ஸ்டாலின் என்ற வழக்குரைஞர் மதுரை உயர்நீதி மன்றக் கிளையில் தொடுத்த வழக்கில், "தமிழக மீனவர்கள் இந்தியக் கடல் பரப்பிலும், அதைத் தாண்டிய சர்வதேசக் கடல் பரப்பிலும் அச்சமின்றி பாதுகாப்புடன் மீன் பிடிப்பதற்குக் கடலோரக் காவல் படையினர் உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.  அதை இந்தியக் கடற்படை கண்காணிக்க வேண்டும்.  இந்த உத்தரவைப் பத்து நாட்களுக்குள் அமல்படுத்த வேண்டும்.' என அந்நீதிமன்றம் அக்டோபர் 14 அன்று இடைக்காலத் தீர்ப்பளித்தது.  இந்தத் தீர்ப்பு வெளிவந்த அடுத்த இரண்டு வாரங்களுக்குள் தமிழக மீனவர்கள் மீது 13  தாக்குதல் சம்பவங்கள் நடந்தன.  இதனால், நீதிமன்றத் தீர்ப்பின் படி உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிய கடலோரக் காவல்படை மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்குரைஞர் ஸ்டாலின் மனு தாக்கல் செய்தார்.

மேலும் படிக்க …

இந்திய தேசியம் என்ற பொய்மைத் தோற்றம் உருப்பெறத் தொடங்கிய காலத்தில்தான் முல்லைப் பெரியாறு அணையும் கட்டப்பட்டது. பலவீனமடைந்துவிட்டதாகவும், உடையப்போகிறதென்றும் பொய்ப்பிரச்சாரமும் பீதியும் கிளப்பப்பட்ட போதிலும் அணை அசையாமல் நிற்கிறது; இந்திய தேசியமோ ஆடிக் கொண்டிருக்கிறது. முல்லைப் பெரியாறு அணையைத் தகர்ப்பதற்கு முன்நிற்கிறார்கள் இந்திய தேசியவாதிகள்.

மேலும் படிக்க …

கடந்த டிசம்பர் 19 ஆம் தேதியன்று தனது நெருங்கிய தோழியும் அ.தி.மு.க.வின் தலைமைச் செயற்குழு உறுப்பினருமான சசிகலா மற்றும் அவரது உறவினர்களைக் கட்சியிலிருந்து நீக்கியுள்ளதாகவும், இவர்களுடன் கட்சிக்காரர்கள் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் அறிவித்துள்ள தமிழக முதல்வரும் அ.தி.மு.க. தலைவியுமான ஜெயலலிதா, சசிகலாவை போயஸ் தோட்டத்திலிருந்தும் வெளியேற்றியுள்ளார். மன்னார்குடி மாஃபியா என்று அழைக்கப்பட்ட சசிகலா கும்பலின் விசுவாச அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க …

முல்லைப் பெரியாறு நீரின் நியாயவுரிமைக்காக தமிழக மக்கள் தன்னெழுச்சியாகப் போராடிவரும் நிலையில், இப்போராட்டங்களுக்கு வலுசேர்த்து புரட்சிகர அரசியல் திசை வழியைக் காட்டி, தமிழகமெங்கும் தாங்கள் செயல்படும் பகுதிகளில் ம.க.இ.க, வி.வி.மு, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, பெ.வி.மு, ம.உ.பா.மையம்ஆகிய புரட்சிகர அமைப்புகள் தமது தோழமை அமைப்புகளுடன் இணைந்து, "முல்லைப் பெரியாறு அணையை இடித்து, சட்டவிரோதமாக புதிய அணையைக் கட்டத் துடிக்கும்கேரள அரசின் சதியை முறியடிப்போம்! உழைக்கும் மக்களே, கேரள அரசின் அடாவடித்தனத்துக்குத் துணை நிற்கும் மத்திய அரசை எதிர்த்துப் போராடுவோம்! இரட்டை வேடம் போடும் தேசியக் கட்சிகளைத் தோலுரிப்போம்! தமிழகத்தின் நியா யவுரிமையை நிலைநாட்ட ஓர ணியில் திரள்வோம்!' என்ற முழக்கத்துடன் விரிவான பிரச்சாரத்தையும் ஆர்ப்பாட்டங்களையும் மறியல் போராட்டங்களையும் நடத்தி வருகின்றன.

மேலும் படிக்க …

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகிலுள்ள விக்கிரம சிங்கபுரத்தைச் சேர்ந்த பு.ஜ.தொ.மு.வின் மூத்த தோழரும், மதுரா கோட்ஸ் ஆலையின் முன்னாள் தொழிலாளியும், புதிய ஜனநாயகம் இதழின் நீண்டகால முகவருமான தோழர் ஏ.எஸ். முத்து, திடீர் உடல்நலக் குறைவால் கடந்த நவம்பர் 15ஆம் தேதியன்று மரணமடைந்துவிட்டார்.

தோழர் ஏ.எஸ். முத்துவின் தந்தையாரான திரு. ஆண்டி அவர்கள், சி.பி.எம். கட்சியின் முன்னணி ஊழியராகச் செயல்பட்டவர். தந்தையின் வழியில் தோழர் முத்துவும் சி.பி.எம். கட்சியில் ஊக்கமாகச் செயல்பட்டு வந்தார். பின்னர் 1985இல் நக்சல்பாரி புரட்சிகர அரசியலால் ஈர்க்கப்பட்டு சி.பி.எம். கட்சியிலிருந்து வெளியேறிய அவர், புரட்சிகர இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு உற்சாகமாகச் செயல்பட்டார். அவரது தந்தையார் சி.பி.எம். கட்சிக்காக ஓட்டுக் கேட்டு பிரச்சாரம் செய்தபோது, தோழர் முத்து தேர்தல் புறக்கணிப்புப் பிரச்சாரத்தை வீச்சாக நடத்தினார். இதனால்முரண்பாடு முற்றி, அவரது தந்தையார் அவரை வீட்டைவிட்டு வெளியேற்றிய போதிலும், பல்வேறு இழப்புகளும் இடர்ப்பாடுகளும் ஏற்பட்ட போதிலும், இரத்தப் பாசத்தை விட மார்க்சியலெனினிய புரட்சிகர இலட்சியத்தின் மீதான பற்றும் பாசமும்தான் உயர்வானது என்று தனது இறுதிக்காலம்வரை புரட்சிகர இயக்கத்தில் உணர்வோடும் பற்றுறுதியோடும் அவர் செயல்பட்டார்.

கடந்த 25 ஆண்டுகளாக புதிய ஜனநாயகம் இதழின் முன்னுதாரணமிக்க முகவராகச் செயல்பட்ட தோழரது மரணம் புதிய ஜனநாயகம் இதழுக்கும் புரட்சிகர அமைப்புகளுக்கும் பேரிழப்பாகும்.

தோழர் முத்துவின் நினைவை நெஞ்சில் ஏந்துவோம்! அவரது இலட்சியக் கனவுகளை நிறைவேற்ற உறுதியேற்போம்!

பு.ஜ. ஆசிரியர் குழு

இந்தியாவின் புதுப் பணக்கார கும்பல் உ.பி.யின் நொய்டாவில் நடந்த எஃப்  1 கார் பந்தயப் போட்டியை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்த அதே நேரத்தில், முதலாளித்துவப் பத்திரிக்கைகள் அப்பந்தயத்தை இந்தியாவின் பொருளாதார வல்லமையின் அறிகுறியாகப் பறைசாற்றிக் கொண்டிருந்த அதே நேரத்தில், கிழக்கு உ.பி. பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஏழைக் குழந்தைகளும் சிறுவர்களும் மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர்.  இந்த மழைக்காலம் முடிவதற்குள் கிழக்கு உ.பி. பகுதியில் வாழ்ந்துவரும் ஏழை விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொரு குழந்தையும்   இந்த வாழ்வா, சாவா போராட்டத்தைச் சந்தித்துத்தான் தீர வேண்டும்.

மேலும் படிக்க …

இந்தியாவில் ஏற்கெனவே இயங்கிவரும் மற்றும் புதிதாக நிறுவப்படும் அணு உலைகளின் பாதுகாப்புத் தன்மையைக் கண்காணிக்கவும் உறுதி செய்யவும் புதிய சட்டத்தையும், அச்சட்டத்தின் கீழ் செயல்படத்தக்க புதிய ஆணையம் ஒன்றையும் உருவாக்கும் நோக்கத்தோடு அணு பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணைய மசோதாவைத் தயாரித்து, அதனை நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக முன்வைத்திருக்கிறது, காங்கிரசு கூட்டணி அரசு. இது நாள்வரை இந்தியாவிலுள்ள அணு உலைகளின் பாதுகாப்புத் தன்மையைக் கண்காணித்துவந்த அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்தைவிட, புதிதாக உருவாக்கப்படும் ஆணையம் எந்தவொரு அமைச்சகத்துக்கும் கட்டுப்படாமல் சுதந்திரமாகச் செயல்படும் என்றும்; அணுஉலைகளை இயக்குவதற்கு அனுமதி வழங்கவும், கொடுக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யவும்; அணு உலைகள் எந்த அளவிற்கு கதிர்வீச்சை வெளியிடலாம் எனத் தீர்மானிக்கவும்; அணு உலைகளை ஆய்வு செய்யவும், அணு உலைகளை இயக்கும் நிர்வாகத்திற்கு வழிகாட்டவும் உள்ளிட்டு இவ்வாணையத்திற்குப் பலவிதமான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் மைய அரசு தெரிவித்திருக்கிறது.

மேலும் படிக்க …

சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடம் மாற்றுவது மற்றும் 13,500 மக்கள் நலப் பணியாளர்களைத் தடாலடியாக வேலை நீக்கம் செய்தது என்ற அ.தி.மு.க. அரசின் சமீபத்திய இரண்டு முடிவுகளும் ஜெயாவின் பார்ப்பன பாசிச வக்கிரபுத்தியை மீண்டும் எடுத்துக் காட்டியுள்ளன.  "அவர் திருந்திவிட்டார்; அவரிடம் நிறைய மாற்றங்கள் தென்படுகின்றன' எனப் பார்ப்பன பத்திரிக்கைகளும் அவரின் துதிபாடிகளும் கூறி வந்ததெல்லாம், தமிழக மக்களை ஏய்ப்பதற்காகச் செய்யப்பட்ட மோசடிப் பிரச்சாரம் என்பதையும் இவ்விரு நடவடிக்கைகளும் அம்பலப்படுத்திவிட்டன.

மேலும் படிக்க …

மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மதுரைக் கிளையின்  எட்டா ம்  ஆண்டு தெ hடக்  க வி ழ hவை முன்னிட்டு, 4.11.2011 அன்று மதுரையில் "செயலுக்கான கருத்தரங்கம்' நடைபெற்றது. கிளைச் செயலாளர் லயனல் அந்தோணிராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில், மதுரைக்கிளை துணைச்செயலரும் உயர்நீதிமன்ற வழக்குரைஞருமான வாஞ்சிநாதன், பரமக்குடி துப்பாக்கிச் சூடு பற்றிய மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் உண்மையறியும் குழுவின் அறிக்கையை நூல்வடிவில் வெளியிட்டு, இந்நூலை அறிமுகம் செய்து உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில், பரமக்குடி துப்பாக்கிச் சூட்டின்போது போலீசு தாக்கியதில் படுகாயமடைந்த ஓய்வு பெற்ற தலைமையாசிரியரான திரு.வெள்ளைச்சாமியின் நேருரை, நேரில் பார்த்த  பரமக்குடி வழக்குரைஞர் திரு.பசுமலை அளித்த சாட்சியம் ஆகியன ம.உ.பா.மையத்தின் உண்மையறியும் குழுவின் அறிக்கையை மெய்ப்பிப்பதாக இருந்தது. "பரமக்குடி துப்பாக்கிச் சூடு படுகொலைகள்: பார்ப்பனிய சாதிவெறி அரசு பயங்கரவாத கூட்டுச் சதி' என்ற தலைப்பில் ம.உ.பா .மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர்  வழக்குரைஞர் ராஜு, துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய போலீசு அதிகாரிகளுக்குத் தண்டனை பெற்றுத்தரும்  வரை ம.உ.பா.மையத்தின் போராட்டம் ஓயாது என்று சூளுரைத்தார்.

"முருகன், சாந்தன், பேரறிவாளன் மற்றும் அப்சல் குரு ஆகியோரின் தூக்கு தண்டனை: அரசியல் அநீதி' என்ற தலைப்பில் உரையாற்றிய பெங்களூரு உயர்நீதிமன்ற வழக்குரைஞர்

தோழர் பாலன், இவ்வழக்கின் சட்டப் பின்னணியை விரிவாக விளக்கியதோடு, அரசியல் சார்ந்த பல்வேறு வழக்குகளில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புகளின் அடிப்படையில் நிரபராதிகளான இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதை உணர்த்தினார்.

இக்கருத்தரங்க நிகழ்ச்சிக்குச் சுவரொட்டி அச்சிடக்கூடாது என்று அச்சகங்களை மிரட்டிய போலீசு, விளம்பரப்படுத்தி கட்டப்பட்டிருந்த பேனரையும் கழட்டிச் சென்றது. இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நடந்த எழுச்சிகரமான இக்கருத்தரங்கில், பரமக்குடி துப்பாக்கிச் சூடு கொடூரத்தை நேரடியாகப் பதிவு செய்துள்ள வீடியோ பார்வையாளர்களுக்கு ஒளிபரப்பப்பட்டது. அரசு பயங்கரவாத அட்டூழியங்கள் பெருகிவரும் இன்றைய சூழ லில்,   மனித உரிமை  ஆர்வலர்களையும் உழைக்கும் மக்களையும் செயலுக்கு  அறைகூவியழைப்பதாக இக்கருத்தரங்கம் அமைந்தது.

பு.ஜ. செய்தியாளர், மதுரை

லிபியாவில் நடந்துள்ள ஆட்சிக்கவிழ்ப்பானது,  ஆப்பிரிக்க கண்டத்தில் ஏகாதிபத்தியவாதிகள் புதிய உத்தியுடன் தமது காலனியாதிக்க ஆக்கிரமிப்பைத் தொடர்வதை நிரூபித்துக் காட்டுகிறது. 2001இல் ஆப்கானில் நடந்த ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புப் போருக்கும்  2011இல் லிபியாவில் நடந்துள்ள ஆக்கிரமிப்புப் போருக்கும் உத்திகளிலும் வடிங்களிலும் பெருத்த வேறுபாடு உள்ளது.

மேலும் படிக்க …

மற்ற கட்டுரைகள் …

Load More