Language Selection

புதிய ஜனநாயகம்

05_2005.jpg"ஏப்ரல் 14 முதல் தமிழகமெங்கும் மும்பை எக்ஸ்பிரஸ்'' திரையிடப்படும் என்ற விளம்பரத்தை ராமதாசின் முதுகில் மட்டும்தான் கமலஹாசன் ஒட்டவில்லை. தமிழகம் முழுக்க, எல்லா இடங்களிலும் விளம்பரங்கள் பளிச்சிட்டன.

 

அதற்கு முன்னரே, தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் என்ற பெயரில் கருணாநிதி குடும்ப நிறுவனங்கள் உள்பட வானொளி, வானொலி மற்றும் தினசரிகள், சந்தை ஏடுகள் அனைத்தும் சினிமா நடிகைகள், நடிகர்கள் பின்னால் ரசிகர்களாக ஓடின.

05_2005.jpgமீண்டும் வருகின்றது என்ரான் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் விவசாயிகள் தற்கொலை வெய்து கொள்ளும் நாட்டில், மக்களின் வரிப் பணத்தில் இருந்து என்ரானின் அந்தியக் கடனை அடைக்கத் துடிக்கம் காங்கிரசு ஆட்சி

 

""என்ரான்'' என்ற பெயரை இந்திய மக்கள் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. தாராளமயத்தால் இந்தியாவிற்குக் கிடைக்கப் போகும் நன்மைகளின் குறியீடாக, என்ரான் இந்திய மக்களிடம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், என்ரானின் கதையோ, ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் உருப்படாது என்பார்களே, அந்தப் பழமொழிக்கேற்ப அவலமாக முடிந்து போனது.

05_2005.jpgஎஸ்.பி. பட்டடினத்தில் பொது நிலத்தை ஆக்கிரமிக்க சதி செய்யும் ஆர்.எஸ்.எல்.ஐ எதிர்த்து நிற்கும் புரட்சிகர அமைப்புகள் மீது மதக் கலவரத்தைத் துண்டியதாகப் பொய் வழக்கு.

 

இராமநாதபுரம் மாவட்டத்தின் கடற்கரை நகரான தொண்டியை அடுத்து அமைந்துள்ள சிற்×ர்தான் எஸ்.பி.பட்டினம். தாழ்த்தப்பட்டோர், முசுலீம்கள், கிறித்தவர்கள், மேல்சாதி இந்துக்கள் எனப் பல்வேறு சமூக மக்களும் கலந்து வாழும் பகுதி அது.

05_2005.jpg"மெட்ரிக்குலேசன் பள்ளியை இழுத்து மூடு'' என்று போராட்டம் நடத்திய "கொள்கை ஏறுகள்' மெட்ரிகுலேசன் தொட்டியிலேயே கழுநீர் குடிக்கலாமா?'' என்ற கேள்விக்கு யோக்கியமாகப் பதில் சொல்ல முடியாததால், "அறிவார்ந்த' எதிர்க்கேள்வி ஒன்றை எழுப்பியிருக்கிறது, தமிழர் கண்ணோட்டம்.

 

""விநோதகன் மருத்துவமனையைக் கைப்பற்றும் போராட்டம் நடத்திய ம.க.இ.க.வினர், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த தோழர் பீட்டரை அதே மருத்துவமனையில் சேர்த்தது எப்படி?'' என்பது தமிழர் கண்ணோட்டத்தின் கேள்வி.

05_2005.jpgஏகாதிபத்திய நிறுவனங்களின் பகற்கொள்ளைக்கும் சூறையாடலுக்கும் கதவை அகலத் திறந்துவிட்டுள்ள ஆட்சியாளர்கள், இதுவும் போதாதென்று கிராமப்புற நுண்கடன் திட்டங்கள் மூலம் கோடிகோடியாய்க் கொள்ளையடிக்க புதிய ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். 1997இல் ஐ.நா மன்றத்தின் முன்னிலையில் நடந்த நுண்கடன் கருத்தரங்கில் 2005ஆம் ஆண்டை நுண்கடன் ஆண்டாக அறிவித்துக் கொண்டாட முடிவு செய்யப்பட்டது. இதன்படி, ஐ.நாவின் மேற்பார்வை மற்றும் நிதியுதவியோடு பல ஏழை நாடுகளில் தேசிய அளவில் பல கருத்தரங்குகளும் ஆய்வரங்குகளும் நடந்த வண்ணம் உள்ளன. பல ஏழை நாடுகளின் அரசுகள், பல்வேறு நுண்கடன் திட்டங்களை அறிவித்தும் நுண்கடனை ஊக்குவிப்பதாகவும் உறுதியளித்துள்ளன. இந்தியாவில், நிதியமைச்சர் சிதம்பரம்