Language Selection

புதிய ஜனநாயகம்

கடந்த ஜூன் 24ஆம் தேதி நள்ளிரவிலிருந்து சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 50 ரூபாய், டீசல் விலை லிட்டருக்கு 3 ரூபாயஇ, மண்ணெண்ணெய் லிட்டருக்கு 2ரூபாய்  என விலையேற்றத்தை அறிவித்து நாட்டு மக்களின் மீது மீண்டும் பொருளாதாரச் சுமையைத் திணித்துள்ளது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பு, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சந்தை விலைக்குக் குறைவாக பெட்ரோலியப் பொருட்களை விற்பதால் ஏற்படும் நட்டம், சமையல் எரிவாயு முதலான வற்றுக்கு அரசு அளிக்கும் மானியத்தால் ஏற்படும் நிதிப்பற்றாக்குறை  என்ற வழக்கமான பொய்களைக் கூறி விலையேற்றத்தை நியாயப்படுத்தி வருகிறது.

பார்ப்பன  பாசிச ஜெயா கும்பல் சமச்சீர் கல்வித் திட்டத்தை ஒரேயடியாகக் குழிதோண்டிப் புதைத்துவிடும் நோக்கில், அத்திட்டத்தை அமலாக்குவதைக் காலவரையற்று ஒத்திவைக்கும் மசோதாவை கடந்த ஜூன் 7 அன்று சட்டசபையில் நிறைவேற்றியது. சென்னை உயர் நீதிமன்றம் இம்மசோதாவிற்கு இடைக்காலத் தடை விதித்ததோடு, ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு கடந்த கல்வியாண்டில் சமச்சீர் கல்வித்திட்டத்தின் கீழ் அமலாக்கப்பட்ட பொது பாடத்திட்டம் தொடர வேண்டும் என்றும், சமச்சீர் கல்விச் சட்டத்தில் கூறப்பட்டபடி, இரண்டு முதல் ஐந்தாம் வகுப்பு மற்றும் ஏழாம் முதல் பத்தாம் வகுப்புகளுக்குப் பொது பாடத்திட்டம் இந்தக் கல்வியாண்டு முதல் அமலாக்கப்பட வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது. அதேசமயம் அத்தீர்ப்பிலேயே, "சமச்சீர் கல்வியையும் அதற்கான பாடப்புத்தகங்களை ஆய்வு செய்வதற்குத் தமிழக அரசிற்கு இத்தீர்ப்பு தடையாக இருக்காது; சமச்சீர் பாடப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள அரசியல் கட்சி, தனிநபர் புகழ் போன்ற சிலவற்றை நீக்கவோ, திருத்தவோ, மாற்றவோ அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது' என்றும் தெளிவுபடுத்தியிருந்தது.

கடந்த ஜூன் 7ஆம் தேதியன்று சென்னையிலிருந்து பொள்ளாச்சிக்குச் சென்று கொண்டிருந்த கே.பி.என். சொகுசுப் பேருந்து, காவேரிப்பாக்கம் அருகில் சரக்கு வாகனத்தை மின்னல் வேகத்தில் முந்திச் செல்ல முயன்றபோது நிலைதடுமாறி கவிழ்ந்து தீப்பிடித்ததில், 22 பயணிகள் தீயில் கருகிப் பரிதாபமாக மாண்டுபோனார்கள்.

ஈராண்டுகளுக்கு முன்னர் முள்ளிவாய்க்காலில் சிங்கள இனவெறி பாசிச அரசு நடத்திய தமிழின அழிப்புப் போரின் கொடூரங்களை ஆவணப் படமாக வெளியிட்டிருக்கிறது, இங்கிலாந்தின் சானல்4 தொலைக்காட்சி. கல்மனம் கொண்டோரையும் கதறச் செய்யும் இக்கொடூரக் காட்சிகளைக் கண்டு வேதனையும் துயரமும் கொள்ளாதோர் இருக்கவே முடியாது. இலங்கை அரசின் இரக்கமற்ற இந்தப் போரை இந்திய அரசுதான் உற்ற துணைவனாகவும் வழிகாட்டியாகவும் இருந்து இயக்கியது.

கல்விக் கொள்ளையர்களுக்கு தமிழகத்தை மொத்தமாகத் திறந்துவிட ஏதுவாக சமச்சீர் கல்வித் திட்டத்தை ரத்து செய்துள்ள பாசிச ஜெயா கும்பலுக்கு எதிராகவும், தனியார்மயத்தினால் கல்வி வியாபாரம் ஆக்கப்பட்டுள்ளதற்கு எதிராகவும் தமிழகமெங்கும்   மனித உரிமை பாதுகாப்பு மையமும், புரட்சிகர மாணவர்இளைஞர் முன்னணியும்  தோழமை அமைப்புகளுடன் இணைந்து பிரச்சாரத்தையும் ஆர்ப்பாட்டங்களையும் போர்க்குணத்தோடு நடத்தி வருகின்றன.