Language Selection

புதிய ஜனநாயகம்

09_2005.jpgதண்ணீர் தனியார்மயமாக்கப்படுவதை எதிர்த்து நாடெங்கும் போராட்டங்கள் வீறுகொண்டு ஏழத் தொடங்கிவிட்டன

நாடு முழுவதும் ஏன், உலகெங்கும் தண்ணீர் தனியார்மயமாவதையும் வியாபாரமாவதையும் எதிர்த்து போராட்டங்கள் பெருகி வருகின்றன. உயிருக்கே ஆதாரமான தண்ணீரைத் தனது கொள்ளை லாப வெறிக்காக சரக்காக்கிற "ஷைலக்'குகளான பன்னாட்டு பகாசுர நிறுவனங்களை ஒழித்துக் கட்டாத வரை இப்போராட்டங்கள் ஓயப் போவதுமில்லை.

09_2005.jpg"எங்கள் பகுதியில் பு.ஜ. இதழைப் பிரச்சாரம் செய்து நாங்கள் விற்பனை செய்து கொண்டிருந்த போது, ஒரு பாமர விவசாயி, பு.ஜ. இதழின் அட்டைப்படத்தைப் பார்த்து பக்தியோடு கும்பிட்டு, இந்த அனுமார் சாமி புத்தகத்தை எனக்கும் கொடுங்கள் என்று கேட்டார். இது சாமி இல்லை; கொத்தடிமை ஆசாமி என்று நாங்கள் அவரிடம் விவரமாக விளக்கிக் கொண்டிருந்ததைக் கேட்டு, அங்கு 1020 பேர் கூடிவிட, அதுவே ஒரு தெருமுனைக் கூட்டம் போல அமைந்து மக்களிடம் பிரச்சாரம் செய்ய உதவியது. அமெரிக்க அடிமை "அணு' மன்மோகன் சிங்கை அம்பலப்படுத்திய அட்டைப்படம் வெகுசிறப்பு.
இராணி, போச்சம்பள்ளி.

09_2005.jpgஒரிசா மாநிலம் தாது வளமும் கனிம வளமும் நிறைந்த பூமி. நாட்டின் மூலவளத்தில் இரும்புத்தாது 32.9 சதவீகிதம், பாக்சைட் 49.95மூ, செறிவான குரோமியம் 98.4சதவீகிதம், நிலக்கரி 24.8 சதவீகிதம ; சுண்ணாம்புக் கல் 28 சதவீகிதம், அலுமினியத் தாது 52 சதவீகிதம் என தாது வளமும் கனிம வளமும் செறிந்த பூமி. இம்மூலவளங்களைத் தனியார் முதலாளிகள் சூறையாடுவதற்காகவே, அம்மாநில அரசு இதுநாள்வரையில் தனது மூலவளத்தை முறைப்படுத்தும் கொள்கையோ சுரங்கத் தொழில் கொள்கையோ வகுக்கவில்லை. இம்மூலவளங்களைச் சூறையாடும்

09_2005.jpgஇதர மாநிலங்களின் முதல்வர்கள் ஏதேனும் ஒரு தொழிற்துறையை அந்நிய நிறுவனங்களின் கொள்ளைக்காக தாரை வார்த்துக் கொடுக்கிறார்கள் என்றால், ஒரிசா மாநிலத்தையே தென்கொரிய நிறுவனமான ""போஸ்கோ'' வுக்குத் தாரை வார்த்துக் கொடுத்து புதிய "சாதனை' படைத்துள்ளார், அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக். கடந்த ஜூன் 22ஆம் தேதியன்று தென்கொரியாவின் தேசங்கடந்த தொழிற்கழகமான போகாங் ஸ்டீல் கம்பெனி எனப்படும் ""போஸ்கோ'' (கழுகுஇழு) நிறுவனத்துடன் ஒரிசா மாநில அரசு செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தின் மூலம் கனிம வளமும் தாதுவளமும் நிறைந்த ஒரிசா மாநிலம் கேள்விமுறையின்றிச் சூறையாடப்படுவதற்கான எல்லா ஏற்பாடுகளும் முழுமையடைந்து விட்டன.

10_2005.jpgஉலக வர்த்தகக் கழகத்தின் கட்டளையின்படி, சிறுநடுத்தர வியாபாரிகள் மீது மதிப்புக் கூடுதல் வரி என்ற தாக்குதலைத் தொடுத்துள்ள மைய அரசு, இப்பொழுது, சில்லறை வியாபாரத்தில் அந்நிய பன்னாட்டு நிறுவனங்கள் நேரடியாக நுழைவதற்கு அனுமதியளிக்கத் திட்டம் போட்டு வருகிறது. ""சூப்பர் மார்க்கெட்'' கடைகளைத் திறந்து நடத்தி வரும் டாடா போன்ற தரகு முதலாளிகள், இதற்கான அனுமதியை உடனே அளிக்குமாறு அரசை நிர்பந்தித்து வருகிறார்கள். அமெரிக்கா, கனடா, சீனா உள்ளிட்டு உலகின் 12 நாடுகளில் 4,806 ""சூப்பர் மார்க்கெட்''