Language Selection

புதிய ஜனநாயகம்

மத்திய அரசின் திட்டங்கள், ஒப்பந்தங்கள், வருவாய், செலவினம் போன்றவற்றை ஆண்டுதோறும் தணிக்கை செய்து நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதுதான் இந்திய பொதுத் தணிக்கை அதிகாரியின் பணியாகும். இந்தத் தணிக்கைகளில்தான் 2ஜி அலைக்கற்றை ஊழல் அம்பலமானது. இந்த வரிசையில், இவ்வாண்டின் அறிக்கை வெளிக்கொண்டு வந்திருப்பதோ தில்லி விமான நிலைய ஊழல்.

டெல்லி ராம்லீலா மைதானத்தில் பாபா ராம் தேவின் ஊழல் எதிர்ப்பு சர்க்கஸ் தொடங்குவதற்கு ஒருநாள் முன்னதாக, அதாவது ஜூன் 3ஆம் தேதியன்று, பீகாரின் ஆராரியா மாவட்டத்தின் பர்பஸ்கன்ஜ் வட்டத்திலுள்ள ராம்பூர் மற்றும் பஜன்பூர் ஆகிய கிராமங்களில் போலீசு நடத்திய காட்டுமிராண்டித்தனமான துப்பாக்கிச் சூட்டில் ஒரு கர்ப்பிணிப் பெண்ணும் ஆறுமாதக் கைக்குழந்தையும் உள்ளிட்டு 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ராம்தேவையும் அவரது பரிவாரங்களையும் போலீசு விரட்டியடித்ததை மிகக் கொடிய வன்முறைத் தாக்குதலாகச் சித்தரித்த முதலாளித்துவ ஊடகங்கள், ஏழை முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய போலீசு கொலைவெறியாட்டத்தைப் பற்றி எந்த முக்கியத்துவமும் அளிக்கவில்லை.

மும்பையிலிருந்து வெளிவரும் மாலை நாளேடான "மிட்டே' வின் மூத்த புலனாய்வு செய்தியாளரான ஜோதிர்மாய் டே, கடந்த ஜூன் 11ஆம் தேதியன்று பட்டப்பகலில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த அவரை, இரகசிய உலக குற்றக் கும்பல்கள் நடுவீதியில் சரமாரியாகச் சுட்டுக் கொன்ற இக்கொடுஞ் செயல், நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மனித உரிமை ஆர்வலரும், போலீசு அட்டூழியங்களுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வருபவரும், சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞருமான சங்கரசுப்புவின் மகன் சதீஷ்குமார் போலீசு வெறியர்களால் கோரமாகக் கொல்லப்பட்டுள்ள சம்பவம், தமிழகத்தையே பதைபதைக்கச் செய்துள்ளது.

2ஜி அலைக்கற்றை ஏல விற்பனையில் நடந்துள்ள கார்ப்பரேட் பகற்கொள்ளையைப் போல, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு வயல்களை ஏல விற்பனை செய்திருப்பதிலும் கார்ப்பரேட் பகற்கொள்ளை நடந்திருப்பது தற்பொழுது அம்பலமாகியிருக்கிறது. இலைமறை காயாக அதிகாரத் தாழ்வாரங்களில் கிசுகிசுக்கப் பட்டுவந்த இந்த ஊழலைப் பற்றிய இந்திய அரசின் தலைமை தணிக்கை அதிகாரியின் அறிக்கையைப் பத்திரிகைகள் வெளியிட்டதன் மூலம் இந்த கார்ப்பரேட் பகற்கொள்ளை அம்பலத்திற்கு வந்துவிட்டது.