Language Selection

புதிய ஜனநாயகம் 2011

கடந்த ஜனவரியில் நடந்த துனிசிய உழைக்கும் மக்களின் பேரெழுச்சியைக் கண்டு அஞ்சி, அந்நாட்டின் சர்வாதிகார அதிபரான பென் அலி, குடும்பத்தோடு நாட்டை விட்டே தப்பியோடி சவூதி அரேபியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். அடக்குமுறையும் கைதுகளும் துப்பாக்கிகளும் கவச வண்டிகளும் மக்கள் சக்தியின் முன் மண்டியிடும் என்பதை இப்பேரெழுச்சி நிரூபித்துக் காட்டியுள்ளது.

மின்சாரம்:

2003ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வந்த புதிய மின்சாரச் சட்டத்தின்படி மாநிலங்களின் கட்டுப்பாட்டிலிருந்த மின்சார வாரியங்கள் கலைக்கப்பட்டு, உற்பத்தி, பகிர்மாணம், விநியோகம் என மூன்று தனித்தனி நிறுவனங்களாகப் பிரிக்கப்பட்டன. ஆகஸ்ட் 2003 இல் தில்லியின் மின் விநியோகம் தனியார்மயமாக்கப்பட்டு டாடா, ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிறுவனங்கள், அரசிடமிருந்து யூனிட் ஒன்றுக்கு ரூ1.32 வீதம் மின்சாரத்தை வாங்கி அரசு நிறுவனமான குடிநீர் வாரியத்துக்கு

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்த, கால்நடை மருத்துவப் பட்டம் பெற்ற 26 வயதான இளம் தோழர் சதாசிவம், கடந்த டிசம்பர் 6ஆம் தேதியன்று எதிர்பாராத விபத்தில் சிக்கி அகால மரணமடைந்து விட்டார்.

 

கல்லூரிப் பருவத்தில் மார்க்சியலெனினிய அரசியலால் ஈர்க்கப்பட்டு மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் ஆதரவாளராகச் செயல்பட்ட அவர், வேலை கிடைக்காமல் தவித்த போதிலும் புரட்சிகர உணர்வு குன்றாமல் ஊக்கமுடன் செயல்பட்டார்.

 

புதிய ஜனநாயகப் புரட்சியைச் சாதிக்க வேண்டுமென்ற அவரது புரட்சிகர உணர்வை நெஞ்சிலேந்தி, அவரது புரட்சிகர கனவை நனவாக்கத் தொடர்ந்து போராட உறுதியேற்போம். மனித உரிமை பாதுகாப்பு மையம், நாமக்கல்.

ஸ்பெக்ட்ரம் கொள்ளையில் விற்கப்பட்ட பொருள் என்ன, வாங்கப்பட்ட பொருள் என்ன என்பது குறித்துப் புரிந்து கொள்வது பெரும்பான்மை மக்களின் சக்திக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. ஆயிரம் ரூபாய்க் காகிதத்தைக் கண்ணால் பார்த்திராத மக்களைக் கொண்ட நாட்டில், கோடிக்கு எத்தனை பூச்சியங்கள் என்பதைக்கூட நிச்சயமாகச் சொல்லத் தெரியாத மக்களைக் கொண்ட நாட்டில், கொள்ளையடிக்கப்படும் தொகை எத்தனை கோடியாக இருந்தால்தான் என்ன? ஒரு விதத்தில் பார்த்தால், கொள்ளையின் அளவு அதிகரிக்க அதிகரிக்க, அதுவே திருடர்களுக்கு ஒரு பாதுகாப்புக் கவசமாகி விடுகிறது.

தமிழகத்திலுள்ள என்.டி.சி. எனப்படும் தேசியப் பஞ்சாலைக் கழகத்துக்குச் சொந்தமான 7 மில்களிலும் (கோவை5, கமுதி1, காளையார்கோவில்1) டிசம்பர் 18 ஆம் தேதியன்று தொழிற்சங்க அங்கீகாரத்துக்காக நடைபெற்ற தேர்தலில், கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம் (புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியுடன் இணைந்தது) பெருவெற்றி பெற்றிருக்கிறது.