துனிசியா: சர்வாதிகார ஆட்சியை வீழ்த்திய உழைக்கும் மக்களின் பேரெழுச்சி!
கடந்த ஜனவரியில் நடந்த துனிசிய உழைக்கும் மக்களின் பேரெழுச்சியைக் கண்டு அஞ்சி, அந்நாட்டின் சர்வாதிகார அதிபரான பென் அலி, குடும்பத்தோடு நாட்டை விட்டே தப்பியோடி சவூதி அரேபியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். அடக்குமுறையும் கைதுகளும் துப்பாக்கிகளும் கவச வண்டிகளும் மக்கள் சக்தியின் முன் மண்டியிடும் என்பதை இப்பேரெழுச்சி நிரூபித்துக் காட்டியுள்ளது.