தமிழக மீனவர் படுகொலை: எல்லை தாண்டுவதுதான் பிரச்சினையா?
கடந்த ஜனவரியில் இந்தியக் கடல் எல்லைக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர் ஜெயக்குமார் சிங்களக் கடற்படையினரால் கொடூரமாகக் கொல்லப்பட்டார். அதற்கு முன், எல்லை தாண்டி வந்த சிங்களக் கடற்படை ஜெகதாப்பட்டினம் மீனவர் வீரபாண்டியனைச் சுட்டுக் கொன்றது. சிங்களக் கடற்படையால் இதுவரை 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவற்றுக்கு முதல் தகவல் அறிக்கைகள் பதிவாகியுள்ளன. கொலை (இபிகோ 302), கொலை முயற்சி (இபிகோ 307) உள்ளிட்ட பல்வேறு குற்றப்பிரிவுகளின் கீழ் சிங்களக் கடற்படைக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்த போதிலும், ஒரு வழக்கில்கூடத் தமிழக போலீசு இதுவரை மேல்விசாரணை நடத்தவில்லை.