Language Selection

புதிய ஜனநாயகம் 2011

கடந்த ஜனவரியில் இந்தியக் கடல் எல்லைக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர் ஜெயக்குமார் சிங்களக் கடற்படையினரால் கொடூரமாகக் கொல்லப்பட்டார். அதற்கு முன், எல்லை தாண்டி வந்த சிங்களக் கடற்படை ஜெகதாப்பட்டினம் மீனவர் வீரபாண்டியனைச் சுட்டுக் கொன்றது. சிங்களக் கடற்படையால் இதுவரை 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவற்றுக்கு முதல் தகவல் அறிக்கைகள் பதிவாகியுள்ளன. கொலை (இபிகோ 302), கொலை முயற்சி (இபிகோ 307) உள்ளிட்ட பல்வேறு குற்றப்பிரிவுகளின் கீழ் சிங்களக் கடற்படைக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்த போதிலும், ஒரு வழக்கில்கூடத் தமிழக போலீசு இதுவரை மேல்விசாரணை நடத்தவில்லை.

ஆடையின்றி வெற்று உடம்போடு நிற்கும் சிறுவனின் மார்பிலே மூவர்ணக் கொடி குத்தியிருக்கும் காட்சி அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிடக் கூடியதல்ல. அது சுதந்திரத்துக்கும் வறுமைக்கும் இடையே நிலவும் முரண்நிலையை மட்டும் சொல்லவில்லை. பெற்ற குழந்தைக்கு உணவளிக்கவும் இயலாமல் போன மக்கள் ஒருவேளை உணவுக்காக, அங்கன்வாடிகள் அல்லது சத்துணவுக் கூடங்களுக்கு அனுப்பினால் அங்கும் கூடத் தேசிய அடையாளங்கள் திணிக்கப்படுவதையும் குறிக்கிறது.   பால்குடி மறந்தவுடன்  நம் பிள்ளை களுக்குப் போதிக்கப்படும் கருத்து, தேசம், தேசபக்தி அல்லது தேசப்பற்று, தேசிய உணர்வு, தேசியப் பாதுகாப்பு, தேசிய ஒருமைப்பாடு  இவை போன்றவை.

ஸ்பெக்ட்ரம் ஊழலில் டாடாவும், அம்பானியும் அடித்த இமாலயக் கொள்ளை அம்பலமாகி, இன்னும் அதன் முதல்நிலை விசாரணைகூட முடியவில்லை, அதற்குள் ஸ்பெக்ட்ரம் ஊழலையே விஞ்சிடும் எஸ்பேண்ட் ஊழல் அம்பலமாகியிருக்கிறது.

இந்தியத் தரகுமுதலாளி வர்க்கத்தின் பிரதிநிதியும், அமெரிக்காவின் வளர்ப்புப் பிராணியுமான திருவாளர் மன்மோகன் சிங், தான் ஒரு கைதேர்ந்த கிரிமினல் என்பதையும், கழுத்தை அறுத்தாலும் உண்மையைக் கசியவிடாத கல்லுளிமங்கன் என்பதையும் அண்மையில் தொலைக்காட்சி சேனல்களின் ஆசிரியர்களுக்கு அளித்தபேட்டியின் மூலம் மீண்டும் நிரூபித்துள்ளார். தனியார்மய  தாராளமயக் கொள்கையை ஆதரித்து நிற்கும் தொலைக்காட்சி சேனல்களின் ஆசிரியர்கள் தங்களால் இயன்ற அளவுக்கு மொன்னையான கேள்விகளைக் கேட்க, "2ஜி அலைக்கற்றை ஊழல் விவகாரத்தில் தனக்கு எவ்விதத் தொடர்புமில்லை 'என்று கூசாமல் புளுகியிருக்கிறார், மன்மோகன் சிங்.

"ஸ்பெக்ட்ரம் என்பது வெறும் ஊழல் மட்டுமில்லை, இது கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளை! தனியார்மயமே இதன் ஆணிவேர், இதனைத் தகர்க்க நக்சல்பாரியாய் ஒன்றுசேர்! கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிராகக் கிளர்ந்தெழுவோம்! ஊழல் சொத்துக்களைப் பறித்தெடுத்து மக்களுக்குப் பங்கிடுவோம்!' என்ற முழக்கத்துடன் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ம.க.இ.க் வி.வி.மு; பு.மா.இ.மு; பு.ஜ.தொ.மு, பெ.வி.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள்  கடந்த ஜனவரியிலிருந்து கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிராகச் சூறாவளிப்பிரச்சார இயக்கத்தை நடத்தி வருகின்றன.