Language Selection

புதிய ஜனநாயகம் 2011

விக்கிலீக்ஸ் வெளியிட்ட அமெரிக்க இராணுவச் செய்திக் குறிப்புகள், அமெரிக்க இராணுவம் செய்து வரும் அட்டூழியங்களையும், மனித உரிமை மீறல்களையும் அம்பலப்படுத்திக் காட்டியுள்ளது. இவற்றை விக்கிலீக்ஸ{க்குச் சேகரித்துக் கொடுத்த பிராட்லே மேனிங் என்ற அமெரிக்கர், அமெரிக்க அரசால் சிறை வைக்கப்பட்டுள்ளார். இவர் மீது ஏற்கனவே சுமத்தப்பட்டுள்ள பல்வேறு குற்றச்சாட்டுகளுடன், கடந்த மார்ச் மாதம் புதிதாக 22 குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளது, அமெரிக்க இராணுவம். அவற்றில் ஒன்று, எதிரிக்கு உதவி செய்வது  என்ற பிரிவின் கீழ் வரும் குற்றச்சாட்டு. இதன்படி, அமெரிக்க இராணுவ இரகசியங்களை  தகவல்களை அமெரிக்காவின் எதிரிக்குக் கொடுத்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார் மேனிங். எதிரி யாரென்று குற்றச்சாட்டில் குறிப்பிடப்படவில்லை.

இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் மேனிங்கிற்கு மரண தண்டனை கொடுக்கப்படும் என்பதால், இத்தகைய குற்றச்சாட்டின் ஆபத்து குறித்து அமெரிக்க ஊடகங்கள் விவாதிக்கத் தொடங்கியுள்ளன. மேனிங் தண்டனைக்குரியவர் எனில், விக்கிலீக்ஸ் எதிரி எனில், இவற்றை பிரசுரித்த அமெரிக்க ஊடகங்களும்கூட எதிரிகளாகி விடுவர். அரசின் அயோக்கியத்தனங்களை விக்கி லீக்ஸ் வெளிப்படுத்தினால் மரணதண்டனை என்று சொல்வதன் மூலம், மக்கள் நலன் கருதி ஊடகங்களில் இவற்றை வெளியிடுவதும் மரண தண்டனைக்குரியவைதான் என்று அமெரிக்க இராணுவம் இதன் மூலம் மிரட்டுகிறது. இதுதான் பீற்றிக் கொள்ளப்படும் முதலாளித்துவ ஜனநாயகத்தின் யோக்கியதை!

போபாலில், அமெரிக்க யூனியன் கார்பைடு நிறுவனத்தின் நச்சு வாயுத் தாக்குதலால் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டு, ஆயிரக்கணக்கதனோர் இன்றும் நடைபிணமாக வாழ்கிறார்கள். நீர், நிலம் அனைத்தும் நச்சுவாயுக் கழிவால் நஞ்சாக்கப்பட்டு பலரைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்று வருகிறது. 2001இல் யூனியன் கார்பைடை விலைக்கு வாங்கிய டௌகமிக்கல்ஸ் எனும் அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனம், போபால் ஆலையில் 26 ஆண்டுகளாகக் குவிந்து கிடக்கும் நச்சு இரசாயனக்கழிவுகளை அகற்றுவதற்கும், நச்சு வாயுவால் நடைபிணமாகிவிட்ட மக்களுக்குச் சிகிச்சை அளிக்கும் போபால் மருத்துவமனையை நடத்துவதற்கான செலவுகளுக்குப் பொறுப்பேற்பதற்கும் மறுத்து வருகிறது. நட்டஈடு கேட்டும், நச்சுக் கழிவுகளை அகற்றக் கோரியும் பல வழிகளில் போராடி வரும் போபால் மக்களை  போலீசின் லத்தி கம்புகளும், சிறைக் கொட்டடிகளுமே எதிர்கொள்கின்றன.

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் கடும் நடவடிக்கைகளால் சுதந்திரமான  நியாயமான தேர்தல் நடந்துள்ளதாகவும், அதனாலேயே தமிழகத்தில் இதுவரை கண்டிராத அளவுக்கு பெருமளவில் வாக்குப்பதிவு நடந்துள்ளதாகவும் பார்ப்பன ஊடகங்களும் எதிர்க்கட்சிகளும் சித்தரிக்கின்றன.

 

நடந்து முடிந்த தமிழக மற்றும் புதுவை சட்டப்பேரவைகளுக்கான தேர்தல்கள் போலி கம்யூனிசக் கட்சிகள்,   தமிழ்த் தேசிய இனவாதக் குழுக்கள் ஃ கட்சிகள், சாதிய - சமூக நீதிக் குழுக்கள் ஃ கட்சிகள், மற்றும் தலித் குழுக்கள் ஃ கட்சிகள் ஆகியவற்றின் ஓட்டாண்டித்தனத்தையும் பெதருத்தப்பாடின்மையையும் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கின்றன.

 

இத்தேர்தல்களில் நேரடியாகப் பங்கேற்றவை மட்டுமல்ல் இவற்றில் பங்கேற்காத, ஓரங்கட்டப்பட்டு, ஒதுக்கப்பட்டு, தேர்தல்களைப் புறக்கணிக்கும்படி தள்ளப்பட்ட மேற்படி வகைக் குழுக்கள் ஃ கட்சிகள்கூடத் தமது சுயத்தையும் சுயமரியாதையையும் பறிகொடுத்து மக்கள் முன்பு அம்மணமாக நின்றதைக் கண்டோம்.

அரசியல் என்றாலே முதலாளிய ஓட்டுச்சீட்டு அரசியல் என்ற வரம்புக்குள் தங்களைச் சிறைப்படுத்திக் கொண்டுள்ள இந்தக் குழுக்கள் ஃ கட்சிகள் தங்கள் நீண்டகால அல்லது குறுகியகால அரசியல் நடைமுறையில் செக்குமாடுகளைப் போலகிவிட்டன. அதனதல், இவை சுயசிந்தனை, சுயபரிசீலனையற்றவைகளாகி, மாற்று அரசியல் பாதை பற்றிய எண்ணமே இல்லாத மலடுகளாகிப் போயுள்ளன.

கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி நாடாளுமன்றத்தில் எதிர்பாராதவிதமாகத் திடீர்க் கூட்டணியொன்று உருவானது. அன்று, ஓய்வூதிய நிதி ஒழுங்கு மற்றும் வளர்ச்சி ஆணைய மசோதாவை நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலைப் பெறுவதற்காக அவையின் முன் வைத்தது, காங்கிரசு கூட்டணி அரசு. இம்மசோதா தொழிலாளர்களின் ஓய்வூதிய நிதியைப் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதையும் அதனை நிர்வகிக்கும் பொறுப்பைத் தனியார்மயமாக்குவதையும் நோக்கமாகக் கொண்டது.