Language Selection

புதிய ஜனநாயகம் 2011

தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்கு எதிராகத் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்துள்ள மனித உரிமைப் பாதுகாப்பு மையம் மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்துடன் இணைந்து கடந்த 24.5.2011 அன்று விருத்தாசலத்தில் "இலவசக் கல்வி உரிமை மாநாடு' நடத்தியது.

அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்தையும் மறுகாலனியாக்கத்தையும் முறியடிக்கவும், அரசு சொத்துக்களை கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளையடிக்க வழிவகுக்கும் தனியார்மயம் தாராளமயம் உலகமயத்தை வீழ்த்தவும், கார்ப்பரேட் கொள்ளையர்களையும் ஊழல் அரசியல் வாதிகள் அதிகாரிகளைத் தண்டித்து அவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்யவும், நக்சல்பாரி புரட்சியாளர்கள் தலைமையில் புதிய ஜனநாயகப் புரட்சிப் பாதையில் அணிதிரள அறைகூவி ம.க.இ.க் வி.வி.மு, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, பெ.வி.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள் கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிரான அரசியல் ஆர்ப்பாட்ட நாளாக மே நாளைக் கடைபிடித்தன.

தமிழகத்தின் பதினான்காவது சட்டப் பேரவைக்கான பொதுத்தேர்தல்களில், கருணாநிதியின் தி.மு.க.வைத் தோற்கடித்து நிராகரிப்பதற்கு எந்த அளவு தகுதியான காரணங்கள் இருந்தனவோ, அதுபோல ஜெயலலிதாவின் அ.இ.அ.தி.மு.க.வைத் தேர்ந்தெடுத்து ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்கக் கூடாது என்பதற்கும் காரணங்கள் இருந்தன.

ஈராண்டுகளுக்கு முன்பு நடந்த இறுதிக்கட்ட ஈழப் போரில், 2009, மே 18ஆம் நாளில்  பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழ் மக்களைக் கொன்றொழித்ததோடு, இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை இன்னமும் முட்கம்பியிடப்பட்ட  தடுப் பு  முக õம்களில் அடைத்து வதைத்து வரும் இன அழிப்புப் போர்க்குற்றவாளி ராஜபக்சேவைத் தண்டிக்குமாறும், இனப்படுகொலைப் போரை வழிகாட்டி இயக்கிய இந்திய மேலாதிக்க அரசையும் சோனியா  மன்மோகன் கும்பலையும் திரைகிழித்தும், ஈழ மக்களது சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவாகவும் மே 18 முள்ளிவாய்க்கால் படுகொலை நாளில் தமிழகமெங்கும் ம.க.இ.க் வி.வி.மு; பு.மா.இ.மு; பு.ஜ.தொ.மு; பெ.வி.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள் ஆர்ப்பாட்டங்களை நடத்தின.

ஜார்கண்ட் மாநிலம்  ஹஸாரிபாக் மாவட்டத்தில் தற்பொழுது வசித்து வரும் ஜாவிர் குமார் என்ற 14 வயது சிறுவனின் வாழ்க்கைக் கதை நம்மை அதிர்ச்சியில் மட்டுமல்ல, பீதியிலும் உறைய வைத்துவிடும்.  10 ஒ 10 சுற்றளவு கொண்ட, 400 அடி ஆழத்திற்குப் பூமிக்குள் இறங்கிச் செல்லும் சுரங்கத்திற்குள் சென்று, நிலக்கரியை வெட்டியெடுத்து வரும் குழந்தைத் தொழிலாளி ஜாவிர் குமார். எலி வளையைப் போலப் பூமிக்குள் செல்லும் இச்சுரங்கத்தை மரணக் குழி என்றுதான் சொல்ல முடியும்.  அதற்குள் சென்று நிலக்கரியை வெட்டியெடுத்து வருவது உடலை வருத்தக்கூடியது மட்டுமல்ல, உயிருக்கே உலை வைத்துவிடும் அபாயம் நிறைந்ததாகும்.  சுரங்கத்திற்குள் பரவிக் கிடக்கும் இருளை விரட்டுவதற்கு ஒரு மண்ணெண்ணெய் விளக்கையும், நிலக்கரியை வெட்டியெடுப்பதற்கு ஒரு இரும்புக் கம்பியையும், வெட்டிய நிலக்கரியை வெளியே எடுத்துவருவதற்கு ஒரு கூடையையும் எடுத்துக் கொண்டு அதிகாலை ஐந்து மணிக்கு சுரங்கத்திற்குள் இறங்கும் ஜாவிர்குமார், தனது வேலையை முடித்துக்கொண்டு சுரங்கத்தை விட்டு வெளியே வரும்பொழுது, பொழுது சாய்ந்து இருட்டிவிடும்.  ஒருஇரும்புக் கம்பி, ஒரு கூடை, ஒரு விளக்கு ஆகியவற்றைத் தவிர, வேறெந்த பாதுகாப்புச் சாதனமும் இன்றிச் சுரங்கத்திற்குள் இறங்கும் ஜாவிர் குமார், "சுரங்கத்திற்குள் மண் சரிவு ஏற்பட்டால், உயிரோடு புதைந்து இறந்து போவோம்' எனத் தெரிந்தேதான் இந்த வேலையைச் செய்து வருகிறான்.